Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

தயா, நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுதுகிறீங்க. நீங்கள் யாழ்கள ஆதரவு பற்றி பேசுகிறீங்கள் போலும். அதுபற்றிக்கூட நீங்க எல்லோருக்குமாக பேசமுடியாதே. . நீங்கள் நான் எழுதுகிறவற்றை புரிந்துகொள்ள முனையவில்லை. எரிக்சொல்கைமில் இருந்து கக்கீம் வரைக்கும் சிங்கள கலைஞர்களில் இருந்து தமிழக கலைஞர்கள் வரைக்கும் எனக்காக குரல்கொடுத்தவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நான்  நினைக்கவில்லை.

 

உங்களை திருப்திப் படுத்துவது என் நோக்கமல்ல. நான் நஎன்னை சந்திதவர்கள் என் தோழ தோழியர்கள் பாதுகாப்பு பற்றி உறுதிப் படுத்திய பின்னர்தான் மேலதிக விபரங்களை எழுதமுடியும். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான யாழ்கள வாசககள் இதனைப் புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

கவிஞர் முற்காலத்தில் மனதில் தோன்றுவதைப் பேசும் அல்லது செய்யும் கலகக்காரனாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று ...

தன்னைச் சந்தித்த தோழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தினால் தனது கோபத்தை அடக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டுவிட்டார். தன்னைக் கைது செய்த காட்டுமிராண்டித் தலைவர்களை சுட்டிக் காட்டாமல் மௌனம் காக்கிறார். எல்லாம் தோழர்களின் நன்மைக்காக.. இதுதான் ராசதந்திரம் என்பது. ராசதந்திரக்காரர்கள் தேவையின் நிமிர்த்தமாக மட்டுமே கலகம் செய்வார்கள். எழும் கோபங்களை அடக்கக்கூடியவர்கள்.. :rolleyes:

Link to comment
Share on other sites

தயா, நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுதுகிறீங்க. நீங்கள் யாழ்கள ஆதரவு பற்றி பேசுகிறீங்கள் போலும். அதுபற்றிக்கூட நீங்க எல்லோருக்குமாக பேசமுடியாதே. . நீங்கள் நான் எழுதுகிறவற்றை புரிந்துகொள்ள முனையவில்லை. எரிக்சொல்கைமில் இருந்து கக்கீம் வரைக்கும் சிங்கள கலைஞர்களில் இருந்து தமிழக கலைஞர்கள் வரைக்கும் எனக்காக குரல்கொடுத்தவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நான்  நினைக்கவில்லை.

 

உங்களை திருப்திப் படுத்துவது என் நோக்கமல்ல. நான் நஎன்னை சந்திதவர்கள் என் தோழ தோழியர்கள் பாதுகாப்பு பற்றி உறுதிப் படுத்திய பின்னர்தான் மேலதிக விபரங்களை எழுதமுடியும். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான யாழ்கள வாசககள் இதனைப் புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.

தோழர் ஜெயபாலன் நீங்கள் மீண்டு வந்ததில் மிக்க மகிழச்சி.உங்களுக்கு இருந்த ஊடக வெளிச்சம் தான் நீங்கள் மீண்டு வர காரணமாயிருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.தமிழ் சிங்கள ஒற்றுமை பற்றி பேசிய லலித் குகன் ஆகியோர் இன்னமும் காணாமல்தான் போயிருக்கிறார்கள்.அதே போல விடுதலைப்புலிகளுக்கு உதவியது அவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க மறுத்தது முதலான இன்னோரன்ன காரணங்களுக்கான நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுயை கணனியில் கார்த்திகை பூ வைத்திருந்ததற்காக வடமராட்சி கிழக்கிலே ஒரு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இன்றைக்கு ஆயிரக்க்கான போராளிகள் காணாமல் போயிருக்கிறார்கள்.ஒரு அரசம் அதன் சகலவிதமான படைகளும் அடக்குமுறை கருவிகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் சிறீலங்காவின் பௌத்த சிங்கள பேரினவாத அரசபடைகள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் செய்த கொடூரமான படைகள் எனபதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஒரு அடக்கு முறை அரசுக்கும் அதன் படைகளுக்கும் எதிரான போராட்டங்கள் தான் அவற்றால் பாதிக்கப்பட்ட முரண்பட்ட சக்திகளை ஒன்றுபட வைக்கும்.
அது வரை பல்வேறு முரண்பட்ட சமூகங்களின் ஒற்றுமை என்பது பிழைப்பு வாதிகளின் வெற்றுக் கோசமாகவே இருக்கும்

 

Link to comment
Share on other sites

நவம், நான் இலங்கைக்கு சென்று அங்கேயே அடக்குமுறைக்கு எதிராக பேசியவன் என்பதைமட்டும் ஏனோ மறந்துவிடுகிறீர்கள்.  எனக்கு 

Link to comment
Share on other sites

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

 

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவின் பணி, பற்றிப் புகழ்ந்து 200,300 பக்கங்கள் இத்தலைப்பு போக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன்

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

 

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

 

ஆமாம். இவர்கள் உலகத்துக்குத் தானே எல்லாவற்றையும் தாரை வார்த்தவர்கள்... எல்லாவற்றையும் என்றால்....... எல்லாவற்றையும் தான்

Link to comment
Share on other sites

அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை.

பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.

சிந்திக்கும்வேழையில் சிலசமயம் பக்கதில் நடப்பதே புலனாவதில்லை.

சந்தித்தவேழையில் உங்களை அடையாளம்காண மறந்திருந்தால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

பொயட் விடுதலையானது சந்தோஷமான செய்தி! 

 

(இத் திரி 11 பக்கங்களுக்கு வந்து விட்டது. இதில் 99% பக்கங்கள் இன்னும் வாசிக்கேலை . அதோடு எனக்கு பொயற்றைப் பற்றி கருத்தெழுமளவுக்குத் தெரியாது. ஆகவே ஒன்றும் எழுதமுடியவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக புகழ்பெற்ற ஊடகவியலாளர் callum macrae ற்கே அங்கு பாதுகாப்பில்லை. உள்ளூர் புகழ்பெற்ற உங்களிற்கு இருக்கும் என்று எப்படி ஜயா நம்பினீர்கள்? 

 

உங்களுடைய அம்மாவிற்கு நீங்கள் வணக்கம் செலுத்த வேண்டி சென்றது எதிர்மாறான விளைவுகளை உருவாக்கிவிட்டது என்றே நினைக்கின்றேன். இந்த முறை உங்கள் அம்மாவின் சமாதி இருந்த இடத்தை ஒரு குத்துமதிப்பாக தான் கண்டுகொண்டீர்கள். அடுத்த முறை உங்கள் பண்ணை வீடே குத்துமதிப்பாக கண்டுபிடிக்கும் அளவிற்கு சிங்களவன் ஆக்கிவிடுவான் என்றே நினைக்கின்றேன். 

 

தமிழனும் முஸ்லீமும் சேர்ந்தாலும் அவர்கள் வாழ்வதற்கு ஒரு நாடு வேண்டும். அது சிறீலங்காவில் சாத்தியமில்லை.  

Link to comment
Share on other sites

செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன்.

நான் எவ்வழியிலாவது விரைவில் மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன். அம்மாவின் சமாதிக்கும் மலர் அஞ்சலி செய்வேன்..

என்னை வராதே என்று சொல்ல ராஜப்கச்ச யார்?

என் அம்மா இறந்தபோது நான் எழுதிய கவிதை.

 

 

வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன் 
திரு உடலில் முத்தமிட....

சிங்கமும் நரிகளும் பதுங்கும்
நீர்ச்சுனையின் வழியில் 
உயிர்வற்றும் மானாக 
அஞ்சினேன் அம்மா
அரக்கர்களின் மண்மிதிக்க
சென்னைச் சுவர்ப் பாலையிலே 
துடிக்கும் பல்லி வாலானேன்

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங்கனிகளைத் தின்றதே
ஈழத்தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக்கரை ஒன்றில் 
அதன் பீயாய் விழுந்தேனே 
என் கனிகளைச் சுமந்தபடி

இறால் பண்ணை நஞ்சில் 
நெய்தல் சிதைந்தழியும் 
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை

கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக் 
காலத்தில் எழுதுகிறேன்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன்.

நான் எவ்வழியிலாவது மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன்.

 

ஜயா உங்கள் அம்மாவின் சமாதியை பார்த்தாகிவிட்டது. பின்னர் எதற்கு இன்னுமொரு முறை அங்கே செல்ல விரும்புகிறீர்கள்? 

 

உங்களைப்போன்றவர்களே சிறீலங்காவை புறக்கணிக்கணிப்பு என்பதை அலட்சியப்படுத்தினால் ஒரு சராசரி தமிழன் என்ன செய்வான்? Amnesty International போன்ற அமைப்புக்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையை புறக்கணிக்கும் இந்த நேரத்தில் நீங்கள் செய்வது பொறுப்புள்ள காரியமா? 

 

சற்று சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் அங்கே சென்று வருகின்ற ஒவ்வொரு முறையும் அங்கிருந்து அகதியாக வருபவர்களிற்கு திருப்பி அனுப்பும் சந்தர்ப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். உங்கள் அம்மாவின் சமாதிக்கு நீங்கள் செல்ல நினைத்ததை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் நீங்கள் மீண்டும் அங்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

 

நீங்கள் அங்கே சென்று மீண்டும் இப்படியொரு நிலை வந்தால் மறுபடியும் உங்களிற்கு உதவ முன்வரும் உங்களின் தோழர்களிற்கு தான் ஆபத்து அதிகம். அதை பற்றியும் சிந்தியுங்கள். இம்முறை உங்களிற்கு உதவியவர்களின் பெயர்களை வெளியிடவே தயங்குகின்றீர்கள். உங்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட சிங்களத்திற்கு அது யார் என்பது தெரிந்திருக்கும் தானே. அவர்களை எப்படியும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிபார்கள் என நினைக்கின்றேன். அவர்களை நீங்கள் இன்னொரு முறை இதே பிரச்சனைக்குள் மாட்டிவிடாமல் இருப்பதற்கு நீங்கள் சிறீலங்காவை புறக்கணிப்பதே சிறந்தது. 

 

இனி உங்களின் விருப்பம் ஜயா...

Link to comment
Share on other sites

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

 

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

 

 

புலிகள் ஒரு போதும் விமர்சனத்துக்கு பயப்படவில்லை. தன்னந்தனியே அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் இருந்து ஒட்டுக்குழுக்களின் வசைபாடல், மேற்கு நாடுகளின் பயங்காவாதம் வரை துணிந்தே முகம் கொடுத்தார்கள். உங்களை போன்றோர் புலிகளை விமர்சிப்பதை குடிசை கைதொழிலாக :icon_mrgreen: நடாத்திக்கொண்டு இருப்பதை யாவரும் அறிவர்.புலிகள் பிழை விடவில்லை என்று யாரும் சொல்லவில்லை.அவர்களே பல தடவை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
 
புலிகளினால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என உங்களை போல் நடித்த பலரை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.புலிகளீன் பிரசன்னம் இல்லாமல் போய் 5 வருடங்கள் ஆகிறது.இன்னும் புலிகளை விமர்சிப்பதை தவிர  தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாகை செய்தீர்கள் என்றால் அது சுழியம் தான், ஆகவே வளரப் பாருங்கள்.  :icon_mrgreen:  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் விடுதலையானது சந்தோஷமான செய்தி! 

 

(இத் திரி 11 பக்கங்களுக்கு வந்து விட்டது. இதில் 99% பக்கங்கள் இன்னும் வாசிக்கேலை . அதோடு எனக்கு பொயற்றைப் பற்றி கருத்தெழுமளவுக்குத் தெரியாது. ஆகவே ஒன்றும் எழுதமுடியவில்லை)

 

தப்பு செய்தீட்டீங்களே... அலை.

முதலாம் பக்கத்திலை... இருந்து, வாசியுங்க நல்ல தமாசாய்... இருக்கும்.

இது, எப்ப‌டியும்... நூறு ப‌க்க‌த்தை தாண்டி ஓடும். விட்டுட்டால்... எல்லாத்தையும் வாசிக்க க‌ஸ்ர‌மாயிருக்கும். :D

 

புலிகள் ஒரு போதும் விமர்சனத்துக்கு பயப்படவில்லை. தன்னந்தனியே அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் இருந்து ஒட்டுக்குழுக்களின் வசைபாடல், மேற்கு நாடுகளின் பயங்காவாதம் வரை துணிந்தே முகம் கொடுத்தார்கள். உங்களை போன்றோர் புலிகளை விமர்சிப்பதை குடிசை கைதொழிலாக :icon_mrgreen: நடாத்திக்கொண்டு இருப்பதை யாவரும் அறிவர்.புலிகள் பிழை விடவில்லை என்று யாரும் சொல்லவில்லை.அவர்களே பல தடவை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
 
புலிகளினால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என உங்களை போல் நடித்த பலரை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.புலிகளீன் பிரசன்னம் இல்லாமல் போய் 5 வருடங்கள் ஆகிறது.இன்னும் புலிகளை விமர்சிப்பதை தவிர  தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாகை செய்தீர்கள் என்றால் அது சுழியம் தான், ஆகவே வளரப் பாருங்கள்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

 

ஆகா... நல்லதொரு தமிழ் வார்த்தையை...நுணாவிலானிடமிருந்து கற்றுக் கொண்டேன். :D  :D  :lol:  :icon_idea:   

Link to comment
Share on other sites

செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். 

 

கவிஞரே பின்வந்த கேள்விகளுக்கு பதிலளித்த நீங்கள்

நிழலி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறந்ததேனோ .?

 

நிழலியின் பாதுகாப்பு பிரச்சனையோ ..?

அல்லது உங்களின் இரண்டாம் அறிக்கைக்கான தயார்ப்படுத்தலோ ..?

 

அம்மாவின் சமாதி என்ற ஒற்றை வசனத்தை வைத்து

கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்கள் ஐய்யா உங்கள் கலக அரசியலில். 

 

மறுபடியும் இலங்கை செல்லும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் ஐய்யா..

யாழ்களத்தை ஒரு மூன்று நாள் மூடிவைக்க ..

Link to comment
Share on other sites

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

 

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

அதெண்ணால் உண்மைதான்... !!! பாட்டிகளுக்கு போய் தண்ணியை போட்டு விட்டு உளறுவதுதானே இப்ப எல்லாம் விமர்சனம்... !

இலங்கையிலை தனக்கு சுதந்திரம் இருக்காது எண்டு போக முன்னம் தெரிந்திருக்காத கவிஞர் நீங்களும் தான் முற்றும் தெரிந்தவர்கள் எண்டு சொன்னால் நம்பவா முடியும்...???

Link to comment
Share on other sites

கள உறவு 'Poet' ஐ மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

 

தக்கன பிழைக்கும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தின் கோட்டைக்குள் சென்று உறுமி விட்டு வந்த இரும்புமனிதன் வாழ்க! ஜெயவே வா...

Link to comment
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு நன்றி. நான் என் அனுபவங்களையும் வடகிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் நிலைபற்றி ஆராய்ந்த விடயங்களையும் புத்தகமாக எழுத வேண்டியுள்ளது அதனால் இனி  அடிக்கடி யாழ்க்களம் வாய்ப்பிருக்காது.  

நான் நிலமையை தெரிந்துகொண்டே இலங்கை சென்றேன். புறப்படுவதற்க்கு 16 மணித்தியாலயங்களுக்குமுன்னம் மனைவிக்கு சொன்னபோது வாய்த் தர்க்கம் ஏற்ப்பட்டது.இதற்க்குமுன் பதினாறு பதினேழுதடவை கொலைமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது யாரும்வரவில்லை நான்தான் தப்பி வந்தேன் எனக்கு புத்தி சொல்லாதே என மனைவியைக் கடிந்துகொண்டேன். என் மனைவி சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவள். எனக்கு மரண ஆபத்துள்ள காலம் என நண்பன் ஆய்வறிஞன் ரகுபதி வேறு கூறியிருந்தான். என் மனைவியின் துயரத்தை நான் புரிந்துகொண்டேன்.

நான் எடுத்த இடர்  risk நியாயமானதுதான். இப்போ வடகிழக்கு மாகாணம் பற்றிய என் சிந்தனைகளுக்கு மிக மிக அவசியமான தரவுகள் பல எனக்கு கிடைதுள்ளது.ஒரு ஆய்வாளனாக தரவுகள் இல்லாமல் உயிர் வாழ்ந்து என்னத்தை சாதித்துவிடப்போகிறேன்? சாத்தியப் படும்போது தரவுகளுக்காக மீண்டும் போகவே செய்வேன். 

பயணத்தின்முன் எனது முகநூலில் பின்வருமாறு எழுதினேன்.

'' இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.''

 

என்னுடனான கடைசி சந்திப்பை தமிழக நண்பன் Don Ashok   

பின்வருமாறு  பதிவு செய்திருக்கிறான்.

”திடீரென இலங்கை போகும் ஆசை ஏற்பட்டுள்ளது. என்ன விதியோ தெரியவில்லை”. 

''இதுதான் நண்பர் கவிஞர் Jaya Palan தன் தாயின் நினைவு நாளை முன்னிட்டு அவர் சமாதியில் அஞ்சலி செலுத்த இலங்கை செல்வதற்கு முன் என்னிடம் சொன்னது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களின் முடிவுகளை நண்பர்களோ, காவல் துறையோ, சிங்கள அரசோ மாற்றிவிட முடியாது. அவர் கவிதைகள் சொல்வதைப் போல அவர் எதற்கும் கட்டுப்படாத, எதற்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒருநாடோடிப் பறவை.''

 

அம்மாவின் சமாதி அமைந்துள்ள  எங்கள் பண்ணை நிலத்தை இலங்கை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேறு அரசியல் பிரபலங்கள் அபகரிக்க திட்டமுள்ளதும் இங்கு குறிப்பிடப் படவேண்டிய கிழைக் கதை.

 

எனது முகநூல் அடையாளக் குறி Jaya Palan.  என் தோழ தோழியர்களுக்காக அங்கு தகவல் புதிப்பிப்பேன்.

யாழ்க்களத்தில் என் நோவுக்கு ஒத்தட வார்த்தைகளை எழுதியவர்களுக்கு என் நன்றிகள். தாக்கியவர்கள்மீது கோபமில்லை.

நன்றி.  

Link to comment
Share on other sites

தாக்கியவர்கள்மீது கோபமில்லை.

நன்றி.  

 

 

 

தாக்கியவர்கள் அல்ல... கேள்வி கேட்டவர்கள் மீதுதான் கோவம்.

 

 

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,

 

மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.

 

எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும்.

 

ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும்  உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும்  கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது.

 

உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது.  அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும்,  அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட  அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும்.

 

ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய  சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள்  என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது.

 

உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது.

 

உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன்.

 

என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன்.

 

அது வரைக்கும்  நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது,  என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன்.

 

நன்றி

 

நான் இறுதியில் உங்களை பற்றி எழுதியது நூற்றுக்கு நூறு விகிதம் சரி என்பதை நிறுவி விட்டீர்கள்.

 

ஒரு நுட்பமான கவிஞன் அரசியல் வாதியாக மாறும் போது, அந்த நுட்பங்களை எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தி பிழைப்புவாதியாக மாறுவான் என்பதை உங்கள் வாழ்வு எங்களுக்கு காட்டுகின்றது.

 

நன்றி வணக்கம்

 

Link to comment
Share on other sites

பேய்நிழல் அண்ணா,

ஜெயபாலன் ஐயாவை வைத்து கவிஞர்கள் அனைவரும் அவ்வாறே என முடிவுக்கு வந்து விடாதீர்கள். :D

Link to comment
Share on other sites

அன்புக்குரிய நிழலி, 

நீங்கள் தசாப்தங்களாக களநிலமைகளை அறிந்துகொள்ளாத நிலையில் களநிலைபற்றி நீங்கள் விரும்பியவற்றை மட்டுமே வாசிக்கிற நிலையில்  பேசும் அதிதீவிர தேசியவாதம்பற்றி சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

 

அதிதீவிரவாதிகளும் எதிரிகளும் எதிர் நிலையில் இருந்து ஒன்றையே சொல்வார்கள் எதிர் எதிர் திசையில் இருந்தாலும் வரலாற்றை ஒரே திசையில் தள்ளுவார்கள் என்து தத்துவம். என்னைப்பற்றி எதிரி சார்ப்பு சிங்களபத்திரீகை எதை எழுதுகிறதோ அதைத்தான் நீங்களும் எழுதுகிறீர்கள். அதிதீவிரவாதிகள் எதிரி விரும்புவதையே செய்து அழிவைத்தேடிக்கொள்வார்கள் என்பதை லெனின்  அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்திருக்கிறார்

 

"Left-Wing" Communism: An Infantile Disorder இடது (அதிதீவிர) பொதூடமைவாதம் ஒரு சிறுபிள்ளை நோய்  என்கிறகட்டுரையை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அதி  தீவிரவாத தமிழ்தேசிய வாதிகள் கட்டாயம் வாசிக்கவேண்டும். மக்களோடு தொடர்பில்லாத புரட்சிக்காரர்களும் தேசிய வாதிகளும் அதிதீவிர தேசியவாதம் என்கிற கற்பனைவாத சிறுபிள்ளை நோய்க்கு ஆளாகும் ஆபத்துள்ளது. மக்களோடு தொடர்புபடுகிறது தவிர்க்க முடியாத தருணங்களில் ஆபத்தை மேற்கொண்டும் மக்களை சந்திப்பது அவசியமானதுதான்லிதனையே நான் செய்தேன். மக்களோடு தொடர்பில்லாத புலம் பெயர் வாழ்வில் தரவுகள் கள ஆய்வுசாராத கொள்கைசார்ந்த கற்பனைகளாகிவிடுகின்றது. இதனை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்.

 

அதிதீவிரவாதியும் எதிரியும் எதிர் நிலையில்க் செயல்பட்டாலும் ஒன்றையே செய்வார்கள் என்கிற தத்துவத்துக்கு சரியான உதாரணம் சென்ற கடந்த திருமலை நாடாளுமன்றடத் தேர்தலாகும். தமிழரிடம் இருந்து திருமலையைப் பறிப்பதே எதிரியின் பிரதான குறிக்கோளாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆயிரம் திருமலைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சூழலில் இது எதிரிகளுக்குச் சாத்தியமான இலக்குத்தான். மக்களோடு தொடர்பில்லாத அதிதீவிரவாதிகளின் ஆதரவோடு திரு கஜேந்திரகுமார் திருகோணமலையில் சம்பந்தரை தோற்க்கடிக்க வேட்பாளரை நிறுத்தினார்கள். மகிந்த ராசபக்சவின் ஒரே கனவு சம்பந்தரை தோற்க்கடிப்பதும் திருகோணமலையை தமிழரிடமிருந்து கைப்பற்றுவதும்தான். அதிஸ்ட்டவசமாக சம்பந்தர் தப்பிப் பிழைத்துவிட்டார். அதனால் சர்வதேச நாடுகள் 1 தமிழர் பிரச்சினை வடமாகாணப் பிரச்சினை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆபத்தும் 2 போரினால் பாதிக்கப்பட்ட தமிழரை அணுகும் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. ஆனால் திருமலையினல் தமிழருக்கிருந்த  இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒன்றாக்கியதுதான் அதி தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் சிறுபிள்ளைக் கோளாறுள்ள அதிதீவிர வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தான் நம் முன்னோர் சிறுபிள்ளை வேளான்மை விழைந்தும் வீடுவந்து சேராது என்பார்கள். 

 

நான் தப்பியதற்க்கு முகீய காரனங்கள். 1.என் கைது சம்பவம் இடம்பெற்ற பொழுதே வன்னிவிழான்குளத்தில் இருந்து சுந்தரலிங்கம் கனபதிப்பிள்ளைக்கு (நோர்வே) தகவல்பெகிடைத்ததும் அவர் குளோபல் தமிழ் இணைய நடராசா குருபரனுக்கு உடன் தகவல்தந்ததும், குருபரன் இதயசந்திரன் போன்றவர்கள் அதே கணமே என்கைதை உலகளாவிய செய்தியாக்கியதும். 2. முஸ்லிம் மக்களின் உறுதியான ஆதரவு. தோழர்கள் ரவ் கக்கீமும் பசீர் சேகுதாவித்தும்  அரசுக்கு கொடுத்த அழுத்தம். 3.தோழன் எரிக் சோல்கைம் இலங்கை அரசை மிரட்டும் தோரணையில் என் விடயத்த்யைக் கையாண்டதும் நோர்வீஜிய ஐரோப்பிய அரசுகளை செயல்பட வைத்ததும்.

  

எனக்காக குரல்கொடுத்த தமிழக புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.

 

நான் சிறைப் படுத்தப்படுவதை எதிர்பார்த்திருந்து அது நடக்காமல் நான் நாடுகடத்தப் படுவது உறுதியானபின் என் விடுதலைக்காக சிலர் குரல்கொடுத்தார்கள். தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார்.  நிழலிபோன்றவர்கள் கோபபடுவதைத் தவிர்த்து மகிந்த ஆதரவுச் சிங்களப் பத்திரிகைகள் எழுதுவதுபோல எழுதுவதைத் தவிர்த்து  சிந்திக்கவேண்டும் என பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய முகம் உள்ளவர் தேனியில் இருப்பதாகச் சொல்வதே பெரிய சுத்துமாத்து. தேனி யாருடைய ஊடகம் என்று தெரியாமல் கதைக்கின்றீர்களா? அல்லது அதற்கு வெள்ளையடிக்க முயல்கின்றீர்களா? சிங்களத்தை அண்டிப்பிளைப்பவர்களைத் தமிழ்த்தேசியவாதிகள் என சுத்த வேண்டாம் ஐயா

Link to comment
Share on other sites

தூயவனுக்கு என்னாயிற்று?

 

நான் எழுதியது இதுதான் '''தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார்.''. முகம் காட்டும் என்கிற சொல்லுக்கு  முகமுள்ளவர் என்கிற கருத்தில்லை.

 

துளசி, நான் என்னைத் தேடிவந்த அரசியல் பதவிகளை எல்லாம் வாழ்நாள் முழுக்க தூக்கி எறிந்தவன்.உயிருடன் திரும்பி வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையென தெரிகிறது. 

 

நான் கொல்லப்பட்டிருந்தால் சிலர் ஒரு பெக் விஸ்க்கி அடித்துவிட்டு என்னை தியாகி ஆக்கி இருப்பார்கள். இப்ப திட்டுகிறார்கள்.  என்ன செய்வது? குளோபல் தமிழ் செய்தியும்  முஸ்லிம் மக்களும் எரிக் சொல்கைமும் இப்படி எனது விடுதலைக்கு உழைப்பார்கள் என்று எனக்கே தெரியாது. நான் சாகாமல் திரும்பிவந்தமைக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

ஜெ.. திவயினவில் முழுப் பக்கத்தில் உங்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தது. புலம்பெயர்ந்தவர்களும் தமிழகமும் அனுப்பிய புலி என்கிற மாதிரித் தலைப்பு இருந்தது - தீபசெல்வன்

 

இது எப்படி இருக்கு நிழலி ? இது எப்படி இருக்கு துளசி?, இது எப்படி இருக்கு தூயவன்? தியவினவை பாராட்டுங்கள். ஏனெனில் நீங்களும் தியவின காரனும் எதிர் எதிர் நிலையில் நின்றுகொண்டு என்னையே குறிவைக்கிறீங்க. நான் கொல்லப்படவில்லை என்பதுதான் இருசாராருக்கும் கவலையாய் இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.