Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

நீங்கள் இப்போது எந்தப் பக்கம் நிற்கின்றீர்கள். எங்களின் பக்கமா? அவர்கள் பக்கமா? அதை வைத்துத் தான் ஏதும் சொல்ல முடியும்...

 

அவர் எப்போதும் அவர்கள் பக்கம்தான்.  அதில் எந்த மாற்றமும் இல்லை.  அவரது அறிக்கையிலேயே அது தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.  அவரை நான் ஒரு சகதமிழனாக மட்டுமே பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

ஒரு உண்மை மட்டும் விளங்குது ஐயா நீங்கள் மீடியா பலம் உள்ள ஆள் என்பதாலும் பிரபலம் என்பதாலும் தப்பி வந்திட்டியள் இதே ஒரு அப்பாவியா எவரும் அறியாதவர் என்றால் அவரின் நிலைமை எப்படி என்று யோசிச்சு பார்க்கிறேன் .

 

உங்களுக்காக இவ்வளவு பேர் தொடர்பில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் கண் முன் கைது செய்யபட்ட பலபேர் இன்று இருக்கினமா இல்லையா என்றுகூட இல்லை.

 

இப்ப வரை நீங்கள் இலங்கை அரசை காப்பற்றும் சொல்லாடல்தான் பாவித்தவண்ணம் உள்ளீர்கள் என்பதுதான் கவலை .

 

 

Link to comment
Share on other sites

கவிஞர் ஐயாவை இந்தியாவின் ஒரு அலகாக இலங்கை பார்க்கிறதோ என்கிற சந்தேகம் உள்ளது. இதை கவிஞர்தான் விளக்க வேண்டும்.

ஆடுகளம் திரைப்படத்திற்கு தேசிய விருதை அவர்கள் கொடுத்தபோது நாங்கள் எல்லோரும் திடுக்கிட்டு என்று திரும்பிப் பார்த்தோம். :unsure::D

Link to comment
Share on other sites

விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது 

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

 

அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன்.  நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை. 

 

24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற  74792 இலக்க  பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர்  என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன்.  நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள்.  குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

 

குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

 

சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

 

http://www.youtube.com/watch?v=4dOgJclq0Bk&feature=youtu.be

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பகுதி நோக்கிய கருத்துக்கள் வரவேற்க்க தக்கவை. புதியதொரு பார்வை. இதுவரை எந்த ஒரு ஊடகமும் வெளிக்கொண்டு வராத விடயங்கள். நன்றி ஆனாலும் சுய விளம்பரத்துக்காக இலங்கை இராணுவம் நல்லவர்கள் என்று காண்பிக்கும் போக்கு தவறு. அதுவும் குற்ற புலனாய்வு பிரிவு என்பது இலங்கயிலேயே கொடுமையானது...அவர்களை கண்ணியமானவர்கள் என்னும் தொனி தவறு...

இன்னுமா உலகம் நம்புது..... இலங்கையில பிடிச்சால் கத்தி சண்டை போடலாம் எண்டு இப்பதான் தெரியும்.... முடியல...... ஆடுகளம் படத்தில பார்த்தப்பவே புரிஞ்சிடுத்து நடிப்பு

Link to comment
Share on other sites

சரி அவ்வளவு தானே. வந்ததில் சந்தோசம். இதில் எனிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கின்றேன். தலைப்பினை நிர்வாகம் மூடிவிடலாம்..

Link to comment
Share on other sites

நான் யாழ்குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். அதற்க்கான உரிமை என்க்கு உள்ளது. தூயவன் சொல்வதுபோல

தலைப்பை மூடிவிடவேண்டாம்.

Link to comment
Share on other sites

தோழரை கண்டது சந்தோஷம்.... விரிவாக எழுதுவோம் வங்கோ 2 கிழமை கழித்து. நல்லிணக்கம் பேசி நலிவுற்று உள்ளீர்கள் ஓய்வு எடுத்து வாங்கோ உங்களின் அண்மைய நல்லிணக்கம் பற்றிய அறிக்கை பற்றி விவாதிக்கனும். ஆனால் இங்க கத்தியெல்லாம் கதைக்க கூடாது.

 

 

ஒன்றை மட்டும் கவனியுங்கோ அடிபட்டும் கவிஞர் திருந்தலை அதுதான் எனக்கு கவலையாக் கிடக்குது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எதிர்பார்த்ததில்  ஒருசத வீதம் கூட  உங்கள் அறிக்கையில் இல்லை .எல்லாம் அந்தப்பக்க வழிந்தோடலாகவே இருக்கு :(  :icon_idea:  

Link to comment
Share on other sites

கவிஞர் நினைத்தது நடந்ததுவிட்டது .

இது எல்லோராலும் முடியாது .

Link to comment
Share on other sites

சக கள உறவாக ஐயாவை.. மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

நான் எழுத வேன்டிய பலவற்றை எழுத நாளாகும். என்னை சந்தித்த எனக்காக பாடுபட்ட பலரின் பாதுகாப்பு பற்றி முதலில் உறுதி செய்யவேன்டியுள்ளது. அதற்க்கு எனக்கு 2 வாரமாவது வேன்டும். அதன்பின்னர் என்னுடைய 2ம் அறிக்கையை எழுதுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jeyabalan%20vasuki_CI.jpg

Link to comment
Share on other sites

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,

 

மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.

 

எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும்.

 

ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும்  உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும்  கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது.

 

உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது.  அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும்,  அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட  அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும்.

 

ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய  சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள்  என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது.

 

உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது.

 

உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன்.

 

என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன்.

 

அது வரைக்கும்  நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது,  என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன்.

 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன். நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை.

24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர் என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன். நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள். குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

.

பொதுவாக ஒரு கதை சொல்லும்போது (புத்தகம் திரைப்படம்) ஒரு முறை இருக்கிறது.

அறிமுகம் ..

காரக்டரின் திறமை அல்லது குணாம்சம்...

எதிர் கொள்ளும் பிரச்சனையின் அறிமுகம்...

அதன் குணாம்சம்....

சஸ்பென்ஸ் சொன் (suspense zone)

(ஆ ,,, ஊ ... அடுத்து என்ன ? என்ற விறுவிறுப்பை இதுதான் வாசகர் ரசிகர் இடையே உருவாக்கும் என்பாதால் திரைகதையில் இது முக்கிய பகுதி)

முடிவு.

ஒரு திரைப்படம் பார்பதுபோல் இருக்கிறது.

(விளம்பரம் உட்பட)

உண்மை தன்மை ஏதும் இல்லை. இது என்னுடைய தனிபட்ட கருத்து.

இது தற்செயல் சம்பவம் என்று கூட என்னால் இப்போது எண்ண முடியவில்லை. எல்லாம் ஒரு தாய் செயல் போல் இருக்கிறது.

இந்த கதையில் இவளுவு நாளும் இல்லாத சஸ்பென்ஸ் சொன். இவர் சிங்கள அரசை புகழ்கிறார் என்று பலர் கருத்து வைத்த பின்பு மட்டும் வருகிறது.

ஒரு கதையில் முக்கிய பங்கு....

சென்ஸ் (sense) = தொடுதல் மணத்தல் போன்ற உணர்வுகள்

போலிஸ் காரரின் அடியாள நம்பர் அப்படியானதொன்று.

(அவள் பஸ்ஸில் இருந்து இறங்குகிறாள்.......... அவளுடைய கூந்தலின் நறுமணம் தென்றலில் கலந்து என் மூக்கை அடைகிறது. நான் இதுவரை அறியாத ஒரு வாசனைக்கு அறிமுகம் ஆகிறேன்)

இது வாசகரை நேரே அழைத்து செல்வது அல்லது .....

கதையை கதைபோல் இல்லாது ஒரு உண்மை தன்மை ஆக்குவது என்பதற்கு மிகவும் முக்கியம்.

யோசித்து பார்கிறேன் .........

போட் ஐயாவின் விடுதலை கதையில் போலீஸ்காரரின் அடையாள இலக்கம் கட்டாயம் தேவையா??

அது முக்கிய பதிவாக பதிவாகிறது எனும்போது ............ எனக்கு ஒரு கதை வாசிக்கும் எண்ணம் மட்டுமே வருகிறது.

இந்த கதையில் வரும் சஸ்பென்ஸ் சொனும் எனக்கு பிடித்திருக்கிறது.

விடைபெறுமுன்னம் இறுதிவார்த்தை.

விசாரணையில் என்னிடம் நெடுநேரம் துருவித் துருவிக் கேட்க்கப்பட்டது

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து வடகிழக்கின் சுதந்திரத்துக்காக போராடும் கருத்தை பிரச்சாரம் செய்திருக்கிறீர் என்பதுதான். அதற்கான வல்லமை உள்ள ஒரே நபர் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. அதுவே அவர்கள் அச்சத்துக்கு காரணமாக இருந்தது...

தோழர் சோல்கைமின் அறிக்கை வந்தபின்னர் நான் மேலும் இறுக்கமாகிவிட்டேன்.என்னைவிசாரித்தவர்களின் நிலை இறுக்கம் குறைந்திருந்தது.

அனந்தி என் ஊடக கருத்தரங்குக்கு வந்தது பற்றி கேட்டார்கள்..அநந்தியை நேரில் சந்திக்கவில்லை என்று சொன்னேன். நான் புலிகளுக்கு உதவியது பற்றிக் கேட்டார்கள். நான் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் நிகழ்தவைகள் பற்றி பேச மறுத்துவிட்டேன். அனந்தியுடன் தனிப்பட்ட முறையில் பேசவில்லை என்றேன். ஐங்கரநேசனை சந்தித்த தகவல் அவர்களிடம் இருந்தது. மற்றப்படி என்னைச் சந்தித்த நண்பர்கள் யாரின் பெயரையும் வெளியிடவில்லை.

24 பகல் களுபோவில ஆஸ்பத்திரியில் பொலிசாரின் சதி இடம்பெற்றது..குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் என்னை அச்சுறுத்தியபடி இருந்தார். அவர் என் தொலைபேசியை சார்ச் பண்ணவிடவில்லை. தொலைபேசியை தாங்கள் சார்ச் பண்ணித் தருவதாக தொலைபேசியை கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக எச்சரிக்கையானேன். நோயாளிகள் சிலரை தூண்டிவிட்டார்கள். குடிவரவுத் துறை வந்திராவிட்டால் அந்த இரவு கொல்லப்பட்டுக்கூட இருக்கலாம். குடிவரவுத் துறையினருடனும் அவர் முறுகினார். இதனால் அவருக்கு பலமான பின்னணி இருப்பது தெளிவானது.

குடிவரவுதுறை இங்ஸ்பெக்டர் அமித் பெரரா நிலமையை புரிந்துகொண்டு உடனே என்னை அங்கிருந்து அகற்றியதால் ஆபத்தில் இருந்து தப்பினேன். நான் வெளியேறும்வரை அந்த சம்பவம்பற்றி முறையிடவேண்டாமென்று கேட்டுக்கொண்டேன்.

சிங்கள தோழர்களின் ஆதரவு பிரச்சாரம் மேலோங்கியபோது தியவினவும் ஏனைய சிங்கள ஊடகங்களும் எனக்கெதிராக வகுப்புவாதத்தைக் கக்க ஆரம்பித்தன. இதனால் இறுதி நாட்க்களில் நான் நாட்டை விட்டு உடன் வெளியேறும் அவசியத்தை உணர்ந்து கோபத்தை விட்டுவிட்டு இராசதந்திரத்தோடு செயல்பட்டேன்..

.

எனக்கு மிகவும் பிடித்த பகுதி..........

திரைகதையில் ஒரு சில இயக்குனர்களே இதை பாவிக்கிறார்கள்.

வில்லன் கதாநாயகனை துப்பாக்கியால் சுட்டுவிடுவார் .......

துப்பாக்கியில் இருந்து ரவை சீறும் .............

இப்போ....

வேறு ஒரு கரக்டரை உள்ளே நுழைப்பது (குடிவரவு)

அதை வில்லனின் காட்சி பகுதியில் வைத்து காட்சிகளை நகர்த்துவது....

இப்போ வில்லன் சுட்ட தோட்ட கீரோவை சகடித்ததா ? இல்லையா?

கதாநயகன் இறந்துவிட்டாரா? இருக்கிறாரா?

என்ற துடிப்பு ரசிகரிடம் இருக்க வைத்துக்கொண்டே ....

3 . 4 நிமிடம் காட்சியை நகர்த்த வேண்டும்.

மிகவும் விறுவிறுப்பான பகுதி!

கவிஞரின் கதையில் 24 திகதி மிகவும் முக்கியம். காரணம் எல்ல்லருடனும் தொடர்பில் 23 இருக்கிறார் சொல்கெய்ம் ச சா பி பா எல்லோரும் அறிக்கை விடுகிறார்கள் ......

கவிஞர் இனி என்ன விடுதலை ஆகிவிடுவார் என்று ரசிகர்கள் சோர்ந்துவிடுவார்கள்........

கதை விறுவிறுப்பு குறைந்துவிடும்.

உண்மையிலேயே நன்றாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

 

இதில் நிறைய உண்மை இருக்கலாம்!
 
நீங்கள் விளக்கமாக எழுதும்போதுதான் அது தெரியப்படும்.
உலகம் முக்கோணம் என்று சும்மா இவளவு நாளிக்கு சொல்லிதிரிவீர்கள்?
உருண்டை என்றவன் விமானத்தில் ஏற்றி சென்று நேரில் காட்ட தொடங்கி பலகாலம் ஆகிய பின்பு ....??
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கட்டும், எதுக்கு இவளவு அவசரமாக எழுதினத அழிகிறாங்கள் என்றுதான் புரியவில்லை.
கவிஞரோடு எனக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லை. அவருடைய கவிதைகளில் முரண்பாட்டிருக்கின்றேன். அவருடைய தனிப்பட்ட...குறிப்பாக....பெ............சார்பாக எனக்கு 100 வீதம் முரண்பாடு. அதில் வெறுப்பும் கோபமும் அதிகம். அதை விடுவம்... தற்போது இவர் குறிப்பிட்ட இந்த பயணத்தின் மூலம் யாரை நல்லவர்கள் என்று வெளி உலகத்துக்கு குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு காட்ட விருப்புகின்றார்,

 


அவருடைய முக்கியத்துவம் எமக்கு தெரியும்...அதில் யாரும் வயிறு எரிச்சல் அடையவில்லை.  ஒரு வேளை வந்த குற்ற புலனாய்வு அதிகாரிகள் பெண்களோ ??????

 

Link to comment
Share on other sites

ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு  வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .

 

 

இப்படி ஒரு மலினமான விளம்பரமா...??  இருக்கும் இருக்கும்...  :unsure:

Link to comment
Share on other sites

இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்க தான் இவர தூக்கி உள்ள போட்டிட்டு விட்டு இருக்காங்க இவருடைய கைதில் ஆரம்பத்தில் இருந்தே எமக்கு நம்பிக்கை இல்லை....

Link to comment
Share on other sites

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,
 
நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.
 
ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழனை தான் நினைத்த மாத்திரத்தில் கைது செய்யவோ / கடத்தவோ முடியும் என்று, அதுவும்  வெளிநாட்டு  தலைவர்கள் வந்து சென்று சில நாட்களில்,  உலக ஊடகங்களே உற்று நோக்கும்போதே செய்ய முடியும் என்று சிங்களம் காட்டிய போது, அதை எங்கள் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்த தவறி விட்டனவே என்று நான் கவலையுடன் இருந்த போது உங்கள் விடுதலை இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.
 
இந்த வேளையில் உங்கள் விடுதலைக்கு உதவியவர்களுக்கு உங்கள் யாழ் கள உறவாக நானும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.
 
 வன்னி எங்கும் எத்தனையோ தமிழ் மக்களை பலிகொடுத்த போது உலகெங்கும் தொலைபேசி எடுத்து மக்கள் கதறி  அழுதபோது பேசாமல் இருந்த உங்கள் நண்பர் நோர்வே சுந்தரலிங்கம்,  வன்னிவிளாங்குளத்தில் உங்களுக்கு நேர்ந்த கொடுமையை இருபது வினாடிகளில்  நோர்வேயில் இருக்கும் உங்கள் நண்பர் சுந்தரலிங்கத்துக்கு  எடுத்து சொன்னபோது (கவனிக்க அந்த மக்களுக்கு உங்களின் நண்பரின் தொலைபேசி இலக்கம் கிடைத்த விதம் உங்களுக்கு தான் தெரியும், சில வேளைகளில் நீங்கள் தொலைபேசி எடுக்க சொல்லித்தான் கத்தினீங்களோ TID   இற்கு தான் வெளிச்சம்)  உங்கள் நண்பர் ஊடகங்களுக்கு அறிவித்தமைக்கு முதலில் நன்றி.  
 
மக்களை கதற கதற கொன்ற சிங்கள பயங்கரவாதிகளின் பயங்கரவாத தடுப்பு பிரிவு,  உங்களின் கத்தலை கேட்டு உங்கள் அம்மாவின் சமாதிக்கு அழைத்து சென்றமைக்காக அவர்களின் மனித நேயத்துக்காக நன்றிகள். (நீங்கள் உங்கள் அம்மாவின் சமாதிக்கு உண்மையிலேயே சென்றிருந்தால் உங்கள் அம்மாவின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்.)
 
எத்தனயோ பள்ளிவாசல்கள் உடைக்க பட்ட போதும், ஹலால் எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களின் கடைகள் எரிக்கபட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் கலவரங்கள் நடந்த போதும் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அமைச்சர் ஹக்கீம், உங்களுக்காக அமைச்சு பதவியில் இருந்துகொண்டே அரசை எதிர்த்து பேசியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்.
 
உங்களைப்போல எத்தனயோ தமிழ் கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், சிங்கள அரசால் கொல்லப்பட்டபோது, அவர்கள் நல்லவர்கள், பொய் பேசாதவர்கள் என்று ஒரு வார்த்தை கூட பேசாத பஷீர் சேகுதாவுத் அவர்கள், உங்களை புகழ்ந்தமைக்காக நன்றிகள்.
 
நடுநிலை வகிக்கவந்த தங்களை  கூட பொருட்படுத்தாமல், பச்சை குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் சிங்கள பேரினவாத அரசாங்கம் குண்டு வீசி அழிப்பதை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தும் கூட , ஒரு சொல்லுக்காக கூட வாய்திறக்காத தோழர் எரிக் சோல்கைம்,
கொட்டும் பனியிலும் தங்களின் உறவுகளுக்காக ஆயிரமாயிரம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் போராடிய போது மௌனமாக இருந்த தோழர் எரிக் சோல்கைம், ராஜதந்திர வழமைக்கு மாறாக  உங்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விட்டமைக்காக என உளப்பூர்வமான நன்றிகள்.
 
வெள்ளிக்கிழமை கைது செய்தால் இரண்டு நாட்கள் அடைத்து வைத்திருந்து திங்கட்கிழமை தான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த முடியும் என்று இலங்கை சட்டங்கள் தெரிந்த உங்களை பற்றி கூட கொஞ்சமும் அறியாமல், ஒரு தமிழன் கைது செய்யபட்டிருக்கிறான் மனித உரிமைகள் மதிக்கபடுவதில்லை என்பதற்கு பதிலாக, இந்திய தேசிய விருது நடிகர்,புகழ் பெற்ற கவிஞர் கைது என்று கொள்ளை எழுத்தில் வியாபாரம் செய்த ஊடக நண்பர்களுக்கும் புரட்சி வாதிகளுக்கும்  நன்றி.
 
முக்கியமாக மெழுகுதிரி வெளிச்சத்தில் என்னை ஆதவன் பத்திரிகைக்காக சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பேட்டி எடுக்க வந்த மஞ்சுள வெடிவர்த்தன, இன்று எத்தனையோ தமிழ் இளைஞர்கள் குற்றங்களே செய்யாமல் சிறையில் வாட, உங்களுக்காக விரைந்து செயற்பட்டமைக்காக நன்றிகள்.
 
இதைவிடவும், வெள்ளை கொடியுடன் வந்தவர்களை கதற கதற  சுட சொன்னவரும்,  தமிழ் ஆண்களின் இரத்தம் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று, சிங்கள படையினருக்கு கட்டளை இட்டு  எத்தனையோ இசைபிரியாக்களை  கத்த கத்த அழிப்புக்கு மூல காரணமான கோத்தபாய, நீங்கள் கத்த கத்த  உங்களின் இரத்தத்தை கடலுக்கு காணிக்கையாக்காமல் விட்டதுக்கு கோடான கோடி நன்றிகள். (சில வேளைகளில் அவனுக்கு தெரிந்திருக்குமோ நீங்கள் மற தமிழன் இல்லை என்று )
 
இறுதியாக நீங்கள் விடுதலையாகி வந்ததும், முதல் அறிக்கை என்ற பெயரில் எண்ணற்ற அறிக்கைகளை விடப்போறீங்கள் என்று உங்கள் முதாலவது அறிக்கையிலேயே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
 
இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால்  மன்னிக்கவும்.
 
இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில்  மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன். 
 
நன்றி.
 
அன்புடன்,
பகலவன்.
 
 
பிற்குறிப்பு  :
 
ஜெயபாலன் ஐயா,
 
உங்களை கருணாவிடம் இருந்து காப்பாற்றி உங்களை யார் என்று இப்போ உலகுக்கு காட்டியமைக்காக பொட்டம்மானுக்கும் நன்றி.
 
உங்களை வைத்தியசாலையில் வைத்து கொல்லாமல் விட்ட குமர என்கிற  74792 இலக்க  பொலிஸ்காரர் இற்கும் நன்றி.
 
இன்னும் இரண்டு ஒரு வாரங்களில் நான் இலங்கைக்கு சென்று தமிழ்-சிங்கள நல்லிணக்கம் பற்றி பேச விரும்புவதால், என்ன மாதிரியான முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும் என்று உங்கள் ஆலோசனை தேவை.
 
அத்துடன், எனக்கு தமிழ் அரசியல் படிக்க நிறைய நாள் ஆசை. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பகுதிநேரமாக படிக்க கேட்ட போது, அவர் தனது வயதையும், நேரமின்மையும் சொல்லி உங்களை கேட்டு பார்க்க சொன்னார்.
உங்களுக்கு நேரமிருப்பின் இந்த மடலுடன் சேர்த்து அதற்கும் பதில் தாருங்கள் ஐயா.
 
 
 
 
 
Link to comment
Share on other sites

நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

Link to comment
Share on other sites

இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால்  மன்னிக்கவும்.
 
இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில்  மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன்.

:lol: :lol:

 

பகலவன் அண்ணாவின் சுவாரஸ்யமான நகைச்சுவையான எழுத்து முறைக்கே பச்சைகளை அள்ளி வழங்கலாம். :)

பச்சை முடிந்து விட்டது பகலவன் அண்ணா. நாளைக்கு போடுகிறேன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சினத்தை குளிர்விப்பதற்காய் பெருநடை ஒன்றை பற்றிப்பிடித்திருந்தேன் செவிகளை உரசி உரசி சீண்டியபடி நகர்ந்தது காற்று நாசியறைந்தபடி மிதந்து திரிந்தது வெம்மை விழிகளில் நீந்தியபடி விளையாடித்திரிந்தது சினம் விரைந்து விரைந்து வேர்வைக்குளியலோடு வீசியகைகளில் வேகத்தை விதைத்தபடி நடை பயணத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன் காலம் பலவற்றை நினைவூட்டி செல்கிறது எத்தனை வலிகள் எத்தனை குதறல்கள் எத்தனை  குமுறல்கள் அத்தனையும் காலம் பதிந்துகொண்டே நகர்கிறது புரிந்தும் புரியாதவர்களாய் புதர் மறைவில் புதையும் வெளிச்சரேகைகளாய் பலர் இன்றும் வாழ்வதாய் நினைத்தபடி வரைந்த கோடுகளில் மீள மீள வாழ்வை வரைந்தபடி நகர்கிறார்கள் காலம் அவர்களயும் பதிய மறுக்கவில்லை என்.பரணீதரன் ( கரவை பரணீ) நோர்வே   99ம் ஆண்டு பாலைவன மண்ணில் இருந்து தமிூழ தேடித்திரிந்தபோது விழிகளிற்குள் அகப்பட்டது யாழ் இணையம். அன்று இணைந்ததுதான் காலச்சழற்சியில் இடையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இன்று 25வது அகவையோடு இணைகின்றேன்.    என்னை எனக்கும் எல்லாரிற்கும் அறிமுகம் ஆக்கிய யாழ் இணையத்திற்கு வாழ்த்துகள்.  
    • உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்!   மனிதர்களின் புத்திக்கூர்மையை மூன்று வகையாகப் பிரித்துச் சொல்கின்றன பண்டைய ஞான நூல்கள்: சிலைப் புத்தி, தாரு புத்தி, மூங்கில் புத்தி. கல்லை உளியால் கொத்தி, செதுக்கிக் கடும் உழைப்பில் சிலையை உருவாக்கவேண்டும். அதேபோல் மிகுந்த அக்கறையுடன் பலமுறை எடுத்துச் சொன்னபிறகு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோரை சிலைப்புத்தி வகையில் சேர்க்கலாம். கல்லைக் காட்டிலும் மரத்தில் சுத்தமாகவும் சுலபமாகவும் ஒரு வடிவத்தைச் செதுக்கிவிட முடியும். அதேபோன்று ஒருமுறை கூறினாலே, சட்டென்று உள்வாங்கிக்கொள்வோரை தாரு புத்திக்காரர்கள் எனலாம். தாரு என்றால் மரம். மூங்கிலை உளியால் ஒரு பக்கம் பிளக்கும்போதே மறுபக்கம் தானே பிளந்துகொள்ளும். அதேபோல் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கும்போதே, முழு விவரங்களையும் இன்னதென அறிந்து கொள்ளும் சூட்சும புத்திக்கு வேணு புத்தி என்று பெயர். வேணு என்றால் மூங்கில். இதையே வாழைமட்டை, கரித்துண்டு, கற்பூரம் ஆகியவற்றை உதாரணம் காட்டியும் விளக்குவார்கள். ஆக, மூங்கில் அல்லது கற்பூர வகை சூட்சுமபுத்தி அமைவது பெரும்பாக்கியம். இத்தகைய புத்திக்காரர்கள் வெளியில் மட்டுமல்ல உள்ளுக்குள்ளும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். கங்கைக்கரையில் ஞானி ஒருவர் ஆசிரமம் அமைத்திருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் பயின்று வந்தனர். அந்நாட்டு இளவரசனும் அங்கே சீடனாகத் தங்கியிருந்து பயின்றதுடன், அந்த ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தான். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி. இளவரசன் அதிர்ந்தான். ‘`என்ன இது… ஏன் அடித்தீர்கள்?’’ எனக் கேட்டான். ‘`உனது விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்’’ என்றார் ஞானி. இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில் பலமுறை அடிவாங்கினான். போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடமிருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ‘`பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்குவேன். எச்சரிக்கையாக இரு’’ என்றார். இதிலும் ஆரம்பக்கட்டத்தில் பலமுறை அடி வாங்கிய இளவரசன், ஒரு நிலையில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், அவன் தூங்கும் வேளையில் அவனைத் தாக்குவதற்காகத் தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ‘`இனி மூன்றாம் கட்டப் பயிற்சி. தடிக்குப் பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய்விடும்!’’ என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். ‘விழிப்புணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே… ஒரு முறை, இவர் தூங்கும்போது நாம் தாக்கினால் என்ன?’ என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ‘`என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா, என்ன துணிச்சல்?’’ என்று அவன்மீது பாய்ந்தார். ஆமாம்… மற்றவர் மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்புணர்வு மிகுந்தவராக இருந்தார் அந்த ஞானி. இளவரசன் வியந்தான். தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி! நாமும் அந்த ஞானியைப் போன்று, இளவரசனைப் போன்று உள்ளே விழிப்பு நிலையை அடைந்துவிட்டால் போதும்; எதிலும் தோற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், அதற்குச் சில பக்குவ நிலைகள் தேவைப்படுகின்றன. உங்களின் உண்மை இயல்பை அறிந்துகொள்ளுங்கள்! மனிதனைப் பார்த்து, ‘நீயே பேரின்ப வடிவம்’ என்கின்றன சாஸ்திரங்கள். இதைப் படித்ததும் உங்களில் பலரும் எண்ணலாம்… தினம் ஒரு பிரச்னையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாங்களா பேரின்ப வடிவம் என்று ஏளனம்கூட செய்யலாம். ஆனால், அதுதான் உண்மை. நீங்கள் பேரின்ப வடிவம்தான். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை ஒப்புக்கொள்ள மறுத்தீர்கள் என்றால் அதற்குக் காரணம், உங்கள் உண்மை இயல்பு பற்றிய அறியாமையே! சுவாமி விவேகானந்தரிடம், ‘மாயை என்றால் என்ன?’ என்று சிலர் கேட்டபோது அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘`அறியாமை, அறியாமை, அறியாமையே’’ என்றார் அவர். ஒருவன் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்தில் கனவு. பெரிய சிங்கம் ஒன்று அவனைத் துரத்தியது. பதறி விழித்தான். தான் கண்டது கனவு என்பதை அறிந்ததும் அவனுக்கு எவ்வளவு நிம்மதி?! நீங்களும் உங்களின் நிஜ இயல்பை அறிந்துகொண்டால் இப்படியான நிம்மதியையும் ஆனந்தத்தையும் அடைவீர்கள். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாக இருந்தபோது அவரிடம், ‘`நீ எதிர்காலத்தில் வாஷிங்டனைப் போல் வருவாயா?’’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘`இல்லை. நான் எப்போதும் எடிசனாகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றாராம். அவரவர் நிஜ இயல்பை அறிவதும், காப்பாற்றிக்கொள்வதும் மிகவும் சிறப்பாகும். போர்க்களத்தில் அர்ஜுனனிடம், ‘`உன் தனித்தன்மையை எப்போதும் தக்கவைத்துக் கொள். உன் பிரதான இருப்பை நிலைப்படுத்து’’ என்றே வலியுறுத்துகிறார் பகவான் கிருஷ்ணன். ஒரு நாள் சீடர்களோடு காட்டு வழியில் பயணித்துக்கொண்டிருந்தார் புத்தபிரான். ஓரிடத்தில் குனிந்து கைப்பிடியளவு தழைகளைப் பறித்தார். “சீடர்களே, என் கையில் உள்ள இலைகள் அதிகமா? இந்தக் காட்டில் உள்ள இலைகள் அதிகமா?’’ என்று கேட்டார். ‘`இதில் என்ன சந்தேகம். காட்டில் உள்ள இலைகளே அதிகம்’’ என்றனர் சீடர்கள். உடனே புத்தர் புன்னகையோடு கூறினார்… ‘`இந்தக் காட்டில் உள்ள இலைகளைவிட நானறிந்த உண்மைகள் அதிகம். என் கையிலுள்ள இலைகளின் அளவு உண்மைகளை அறிந்தாலே போதும், துன்பங்களில் இருந்து நீங்கள் விடுபட முடியும். எனவே, பாசாங்கு இன்றிப் பழகுங்கள். இருக்கிறபடி இயல்பாக இருங்கள். எப்போதும் எளிமையாக இருங்கள்’’ என்றார் கௌதமர். திருப்தியோடு இருங்கள்… ‘ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது மனத்திருப்தி’ என்கிறது மகாபாரதம். பெரும் தலைவனாக இருந்தாலும் அறிஞனாக இருந்தாலும் நிறைவை அடையாதவன் நிலை தாழ்ந்துவிடுகிறான்’ என்கிறது மத் பாகவதம். மகாபாரதம் என்ன சொல்கிறது தெரியுமா? `வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், மகிழ்ச்சி-துயரம் ஆகியவை எவனுக்குச் சமமாகத் தோன்றுகிறதோ அவனுக்குப் பிரச்னை இல்லை…’ என்கிறது மகாபாரதத்தின் சாந்தி பருவம். ஆகவே, சகலத்தையும் சமமாக பாவித்து மனநிறைவோடு வாழும் மனிதர்கள் பாக்கியவான்கள். இவர்கள், வீண் ஆசைகளை அண்டவிடுவதில்லை. பற்றற்று இருங்கள்.! பற்றுகொண்டவன் தன்னையும் அறியாமல், பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு, தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து, தானும் சுதந்திரமாக இருக்கிறான். உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்! பகவான் கண்ணன் நினைத்திருந்தால் `போர் புரிந்தே ஆக வேண்டும்’ என்று பார்த்தனுக்குக் கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. உற்றார் உறவுகள்மீது கொண்ட பற்றானது உள்ளத்தைப் பலவீனப்படுத்திவிட, தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனுக்கு, அவனை அவன் அறிந்துகொள்ளும் விதம் கீதை எனும் அமிர்தத்தைப் புகட்டினார். அதன்பிறகும் “நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். இனி, நீ உன் விருப்பம்போல் செயல்படு’’ என்று அவனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். விளைவு நாமறிந்ததே! பூந்தோட்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றில் சில பூக்கள் மட்டுமே இறைவனுக்கு ஆரமாகும். மீதம் உள்ளவை எவ்வித எதிர்பார்ப்புமின்றி மலர்ந்து சிரிக்கவே செய்கின்றன. நாமும் மனதால் மலராக வேண்டும். https://thinakkural.lk/article/246653
    • வேரோடு களைதல் காலத்தின் தேவை! -நஜீப் பின் கபூர்- நாட்டு நடப்புகளைப் பார்க்கின்ற போது ஆரோக்கியமான வாழ்வுக்கான அறிகுறிகள் ஏதுவுமே நமது கண்ணுக்கெட்டிய தூரத்தில் கண்டு கொள்ள முடியவில்லை. எனவே நெருக்கடிகள், மோதல்கள், வன்முறைகள், வறுமை துயரங்கள் என்பன கடலலைபோல தொடர்ந்து ஓயாது அடித்துக் கொண்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தில் இருப்போரின் அட்டகாசங்கள், அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்கள், இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால் தெருவுக்குக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்ற பொது மக்கள், உள்நாட்டில் வாழ்வு சூனியமான நிலையில் தமது குடும்பங்களை காப்பாற்ற வெளி நாடுகளுக்கு ஓடுகின்ற உழைப்பாளிகள் படை, வல்லுநர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தொந்தரவுகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு மேற்கு நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள். நாம் மேற் சொன்னவைகள் அனைத்தும் நாட்டில் மிகப் பெரிய அழிவுகளின் அறிகுறி என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். இதுவரை அரசியல் வேறு ஆட்சியாளர்கள் வேறு என்று வாழ்ந்து வந்த மக்கள் இன்று நாம் அனுபவிக்கின்ற இந்த துயரங்கள் எப்படி எங்கிருந்து வந்தது.அவற்றை நமது தலைகளில் கொட்டி விட்டவர்கள் யார் என்று ஆராய முற்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் 75 வருடங்களின் சாபம் என்று ஒரு வார்த்தை நமது அரசியலில் இன்று பரவலாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக அடிக்கடி உச்சரிப்பது போல ஆகாயத்தில் இருந்து சோறு, குடி மக்களுக்கு சிங்கப்பூர் வாழ்வு, ஆசியாவின் ஆச்சர்யம், சௌபாக்கிய என்ற அனைத்தும் இதுவரை வாக்குக் கொள்ளைக்காக மக்களை ஏமாற்ற பாவித்த மந்திரங்கள் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.   இதனால்தான் இன்று மக்கள் மத்தியில் மாபெரும் கருத்தியல் மாற்றங்கள் ஏற்பட்டு அரசியல் போக்கிலும் அது பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அதிகாரத்தில் இருப்போர் மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றங்களை தட்டில் வைத்து கொடுக்க மாட்டார்கள். ஆட்சியாளர்கள் தமது பிடியை மேலும் மேலும் இறுக்கிக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அரசியல் யாப்பை கூடக் கண்டு கொள்ளாமல் தான்தோறித்தனமான தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். சட்டம் இது பற்றிக் கேள்வி எழுப்புகின்ற போது நீதிபதிகளின் கழுத்தையே ஆட்சியாளர்கள் நசுக்குகின்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது. சர்வதேசம் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. பிரதான பௌத்த பீடாதிபதிகள் கூட மக்களின் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரச தலைவர்களிடத்தில் கோரிக்கை விடுத்தாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான சட்ட விரோத நடவடிக்கைகளில்தான் இப்போது ஆர்மாக இருந்து வருகின்றார்கள். இதுவரை நாட்டில் பேசு பொருளாக இருந்து வந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற கதை நூலறுந்த பட்டம் போல தொலைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இது விடயத்தில் இந்தியா ஈழத் தமிழர்களை ஏமாற்றி விட்டது. இதன் பின்னரும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதுதான் நமது கருத்து.   ஒட்டு மொத்தமாக பார்க்கின்ற போது தமிழர்கள் மட்டுமல்ல பேரினத்தவர்களும் வஞ்சக அரசியல்வாதிகளினால் இனி இல்லை என்ற அளவுக்கு ஏமாற்றப்பட்டு விட்டனர். ஆனால் இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், கடந்த 75 வருடங்கள் நாம் செய்த தவறுகள்தான் இன்றைய அவலங்களுக்கு  காரணம் என்று ஜனாதிபதி ரணிலே சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். அப்படியாக இருந்தால் அப்போது ஆட்சியல் இருந்தவர்களைத்தான் இவர் குற்றம் சாட்டுகின்றார். ஆனால் கடந்த கால ஆட்சிகளில் அவரும் அவரது கட்சியினரும் கணிசமான காலத்தில் அதிகாரத்தில் இருந்திருக்கின்றார்கள். இதனை மறந்து ஏதோ இன்று பிறந்த பாலகன் போல அவரது கதைகள் இருக்கின்றது. இதை நாம் வழக்கம் போல நகைச்சுவைப் பட்டியலில் தான் சேர்த்து விடுவோம். ஆனாலும் இது அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி குறுக்கு வழியில் இன்று அதிகாரமிக்க பதவியில் அமர்ந்திருக்கின்றது. அந்தக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் இன்று இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வஜிர அபேவர்தனதான் இன்று ஆளும் தரப்பு சார்பாக பெரும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கடந்த 75 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள்தான் நாட்டை பிழையான வழியில் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் சொல்லும் போது வஜிர அபேவர்தன இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் அதிகாரத்தில் இருக்க வேண்டும் அப்போதுதான் நாட்டை  மீட்டெடுக்க முடியும் என்று புதுக் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதனை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள்?   தற்போதைய ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியினரும் அரசியல் யாப்பையோ சட்டம் நீதி என்பவற்றையோ மதிக்கத் தயாராக இல்லை. தாம் நினைத்ததுதான் சட்டம், நீதி என்ற நிலையில்தான் இப்போது அவர்கள் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அவர்களுக்கு இப்போது அதிகாரத்தில் இருப்பதற்கு பாதுகாப்பு படைத்தரப்பின் உதவிதான் தேவைப்படுகின்றது. ஆனால் படைத்தரப்பில் கூட அவர்களுக்கு விசுவாசமில்லா ஒரு நிலை தற்போது தோன்றி இருப்பதால் ஆட்சியாளர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிகின்றது. இது தொடர்பான அந்தரங்க  குறிப்பொன்றை நாம் மற்றுமொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம். தமது அரசியல் இருப்புக்காக ஆட்சியாளர்கள் அரசியல் யாப்பை மதிக்கத் தயாராக இல்லை. நீதித்துறையிடம் இது பற்றி நியாயம் கேட்கப் போனால் நீதிபதிகளையே அதிகாரத்தில் இருப்போர் விசாரணைக்கு அழைத்து குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு காலத்தில் இதே ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்தபோது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆரின் ஆட்கள் தமக்கு எதிராக  நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொன்ன நீதிபதிகளுக்கு தொந்தரவு செய்து வந்தனர். அவர்கள் வீடுகளுக்குக் கூட குண்டர்களை வைத்து கல்லெறிந்த சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் இன்று அதனையும் விஞ்சிய அட்டகாசம்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதன் நாட்டில் அதிகாரம் மிக்க கதிரையில் அமர்கின்றார் என்றால் இந்த நாட்டு அரசியல் யாப்பில் எந்தளவுக்கு பலயீனம் இருந்து வந்திருக்கின்றது என்பது புரிகின்றது.இவ்வாறான சம்பவங்கள் உலக அரசியலில் எங்கும் நாம் இதுவரை பார்த்ததில்லை. எனவே புதியதோர் அரசாங்கம் இலங்கையில் அதிகாரத்துக்கு வருமாக இருந்தால் யாப்பு மாற்றமொன்று காலத்தின் உடனடித் தேவை என்று இன்று உணரப்பட்டிருக்கின்றது. நாம் மேற்சொன்ன வஜிர அபேவர்தன கதைப்படி இன்னும் பத்து வருடங்களுக்கு ரணில் ஆட்சி என்றால் இந்த நாட்டில் தேர்தலுக்கே வாய்ப்புக் கிடையாது. அரசியல் யாப்போ நீதியோ முக்கியமானதல்ல. நாடுதான் முக்கியம் என்ற ரணிலின் வார்த்தை கூட இதற்குக் களம் அமைப்பதாகத்தான் இருக்கின்றது.   இனிவரும் காலங்களில் ஆட்சியாளர்கள் படைத்தரப்பினரின் உதவியுடன்தான் தமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். இன்றுகூட நாட்டில் அந்த நிலைதான் காணப்படுகின்றது. படைத்தரப்பு நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது கீழ்மட்ட படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் அரசின் இந்தப் போக்கை ஆதரிப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் படைத்தரப்புக்கு கொடுக்கப்படும் தகவல்களை அவர்கள் உடனுக்குடன் வெளியில் கசிய விடுகின்றார்கள். ஆனால் ஆளும் தரப்புக்கு விசுவாசமாக சிறு தொகை அதிகாரிகள் மட்டுமே செயலாற்றிக் கொண்டிருப்பதாக தெரிகின்றது. இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தன்னைச் சந்தித்த ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அகசா குபோடாவுடன் நடந்த சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார். பொதுவாக நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளை பற்றித்தான் ஐ.நா கவனம் செலுத்தும். இப்போது நமது நாட்டு உள்நாட்டுப் பிரச்சினையிலும் ஐ.நா தலையிட வேண்டிய அளவுக்கு நிலமை கட்டுமீறிச் சென்றிருக்கின்றது. எனவே சிறுபான்மை மக்கள் பிரச்சினைகளின் போது பேரினத்து அரசு எப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணமாக அமைந்திருக்கும். ஆட்சியாளர்களைப் பொறுத்துவரை இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் போது  இனம் தெரியாத படைவீரர்கள் தடிகளை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் இந்த தடிகள் மின்னேரியக் காட்டில் வெட்டப்பட்டு இனமனுவ என்ற படை முகாமில் வைத்து லொறிக்கு ஏற்றப்பட்டு அது கொழும்பிலுள்ள ஒரு படை முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட அனைத்து தகவல்களும் சமூக ஊடகங்களில் வெளி வந்தது. ஆனால் அன்றைய தினம் இந்த தடிகளை வைத்திருந்த இராணுவவீரர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்ட போது அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளினால் இன்று பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகின்றன. ஆளும் தரப்பு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அண்மையில் நடந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் படுதோல்வி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் எதிரணியினரும் நடுநிலை ஊடகங்கள் அதற்கு முற்றிலும் முரணாக செய்திகளில் இது பெரு வெற்றி என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே மக்கள் எந்தச் செய்திகளைப் பார்க்கின்றார்களோ அந்த வகையில்தன் இது பற்றிய தீர்மானங்களுக்கு வருவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றது என்பதனை மக்கள் தமது தேவைகளுக்காக அந்த இடங்களுக்குப் போகும் போது புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும். அப்போது யார் சொல்வது யதார்த்தம் என்பது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும். கடந்த 15ம் திகதி நடந்த வேலை நிறுத்தம் காரணமாக 4600 கோடி ரூபாய்கள் இழப்பு என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறி இருக்கின்றார். அப்படியாக இருந்தால் வேலை நிறுத்தம் எப்படி தோற்றுப் போனது என்று கேட்கத் தோன்றுகின்றது. இன்று நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு அப்பால் அடிப்படை உரிமைகளுக்கு குறிப்பாக மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சுதந்திரப் போராட்டம் தேவை என்ற நிலையில்தான் ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் இன்று மக்களைக் கொண்டு போய்விட்டிருக்கின்றது. https://thinakkural.lk/article/245688
    • ஓம் ஆனால் இவ்வளவு காலமும் இருந்தது. இப்போதும் ஏலவே பென்சன் வயதுக்கு வந்தவர்கள் எடுக்கிறார்கள். ஆகவே NI கட்டாதவர், போதியளவு கட்டாதவருக்கும் - basic state pension கிடைத்தது. கிடைக்கிறது. அதே போல் - வேலை இல்லா கொடுப்பனவு 16 வயதில் எடுக்க தொடங்குபவர் ஒரு பங்களிப்பும் (பிறிமியம்) இல்லாமல் காசு எடுப்பார். அதைப்போலவே வாழ்நாள் மாற்றுத்திறனாளியும் அவர்களுக்கு உரிய பங்கை எப்போதும் செலுத்தாமலே பலனை வாழ் நாள் பூராகவும் எடுப்பார். இவர்கள்+ பென்சன் காரர் கொடுப்பனவுகளை fund பண்ணுவது (முழுவதுமாக அல்ல) ஏனையோரின் NI contributions. ஆகவே இதை காப்புறுதி என எப்படி சொல்லமுடியும்? இயலுமானர்கள்/இருப்பவர்களிடம் எடுத்து, எல்லோருக்கும் சேவையை வழங்குவது - வரி, taxation. காப்புறுதி அல்ல. இல்லை. இது ஒரு காப்புறுதி என பெயரிடப்பட்ட வரி. NI வரமுதலும் இந்த பாதுகாப்புகள் இருந்தன. ஆனால் தொடர்ந்தும் அதை செய்ய வழி தெரியாத போது,  தந்திரமாக உள்ளே வந்த வரிதான் NI.
    • பார்த்தேன் சிரித்தேன்...
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.