Jump to content

தமிழகத்தின் ஈழஅகதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் ஈழஅகதிகள்

தொ. பத்திநாதன்

இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஏராளமான அகதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர்.

ஜூன் 20ஆம் திகதி அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவுகூரப்பட்டது. பின்னர் 2000ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி ‘உலக அகதிகள் தின’மாக அறிவிக்கப்பட்டது. தம் நாட்டில் பல்வேறு மோதல்களில் சிக்கி வாழமுடியாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்த, பல்வேறு இன்னல்களுடன் வாழும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அகதிகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

அகதி என்பது இனம், சமயம், தேசிய இனம் ஆகிய குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவரும் அவருடைய நாட்டிற்கும் சொந்த இடத்திற்கும் வெளியில் இருப்பவரும் அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாது, அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடானது பெரும்போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கெண்டது.

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும் அவர்களது உரிமைகளையும் புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புக்களையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் இந்தியா இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஏராளமான அகதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளை செய்வது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) ஆகும். இந்நிறுவனமானது 2006இல் மொத்த உலக அகதிகள் 8.4 மில்லியன் எனக் கூறுகிறது.

‘ஐக்கிய அமெரிக்கா அகதிகள் மற்றும் குடிவரு வோருக்கான குழு’ உலகின் மொத்த அகதிகள் தொகை 1,20,19,700 என்கிறது.

2009ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பி.பி.சி உலக சேவை மோதல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் அகதிகள் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பதற்கான அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் தெரிவிக்கிறது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம், அகதிகளைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் அரசின் அமைப்பிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அமைப்பினால் அகதிகளை மீள் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதை கருப்பொருளாகக் கொண்டதாகும். டிசம்பர் 14, 1950இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது 1954 மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் சமாதானத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பானது சர்வதேச அமைப்புகளுடன் சேர்ந்து அகதிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் அகதிகளைப் பாதுகாத்தும் வருகிறது.

Boat-full-of-Tamil-refugees-from-Sri-Lan

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையமானது அகதிகளுக்கான அளித்துள்ள நிரந்தரத் தீர்வுகள்:

1. அகதிகள் தாமாகவே சொந்த நாட்டிற்குத் திரும்புதல்.

2. குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல்.

3. மூன்றாம் நாடு ஒன்றில் குடியேறுதல்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஆணையம் அகதிகளுக்காக வழங்கியுள்ள நிரந்தரத்தீர்வு என்ற முதலாவது கூற்றுப்படி 2009இல் இலங்கையில் போர் முடிந்தபின்பு கிட்டத்தட்ட இன்று வரை ஐந்தாயிரம் பேர் மட்டுமே தாமாகவே தாயகம் திரும்பியுள்ளார்கள்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர்அதிகமாகக் கொண்ட நாடு சூடான். ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் அகதிகள் சட்டங்கள் உள்ள சூழலில், இலங்கையில் அகதிகள் பிரச்சினை முக்கியமானது. போரின் காரணமாக இலங்கையில் உள்நாட்டில் எவ்வளவு பேர் அகதிகளாக உள்ளார்கள் என சரியான புள்ளிவிவரம் தெரியவில்லை. ஆனால் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாமல் அகதிகள் உள்ளார்கள்.

2007இல் ‘அகதிகள்தின’த்தை ஒட்டி அகதிகள் குறித்த அறிக்கை ஒன்றை விடுதலைப் புலிகள் வெளியிட்டார்கள். அதில் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை மூன்று லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் ஆணையம் தெரிவித்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி ஆழிப்பேரலையின் போது 3,50,000 பேர் இடம் பெயர்ந்திருந்தனர்.

கடந்த முப்பது ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடம் பெயர்ந்துள்ளனர். 1983ஆம் ஆண்டு முதல் போரினால் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.

1983ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை நடந்த கடும் யுத்தத்தின் காரணமாக 1,34,053 பேர் அகதிகளாக தமிழகத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாம் மூலமாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மண்டபம் அகதிகள் முகாமிற்கு நீண்ட இருண்ட வரலாறு உண்டு. பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இலங்கை சென்றவர்களும் சுதந்திரமாக வாழ்ந்ததில்லை. மண்டபம் முகாமில் கால்தடம் பதித்த அகதிகளாக தமிழகம் வந்தவர்களும் சுதந்திரமாக வாழ்ந்ததில்லை. பல மர்மங்களுக்கு மௌனசாட்சியாக அந்த மரங்களும் மணல் மேடுகளும் உள்ளன.

மண்டபம் முகாம் 1917இல் பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் இந்தியாவில் பரவத் தொடங்கிய தொற்று நோய்களான காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் இலங்கைக்குப் பரவாமல் தடுப்பதற்கு மண்டபம் முகாமில் தங்கவைத்துப் பரிசோதித்து அனுப்பப்பட்டனர்.

அப்போது நடைமுறையில் மண்டபம் முகாம் இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டது.

1. தோட்டத் தொழிலாளிகளுக்கான பகுதி. இதில் இருபத்தைந்து வார்டுகள் இருந்தது, 150 பேர் தங்கும் வசதியுடையது.

2. பயணிகள் தங்கும் பிரிவு. பதினெட்டு வார்டுகள் இருந்தன.

பிராமணர்கள் தங்குவதற்கு, முஸ்லிம்கள் தங்குவதற்கு, இந்துக்கள் தங்குவதற்கு, பணம் கட்டித் தங்குவதற்கு என தனித்தனி பிரிவுகள் இருந்தன.

இப்படி ஆரம்பிக்கப்பட்ட மண்டபம் முகாம் வழியாக 1925ஆம் ஆண்டில் 1,25,585 தோட்ட தொழிலாளர்கள் இலங்கை சென்றுள்ளனர். 1983 முதல் 1989ஆம் ஆண்டுவரை 1,34,053 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்

இலங்கைத் தீவுக்கு மிக அருகில் இருப்பதால் காலம் காலமாக நடந்து வரும் கடத்தல் என்பது இன்றுவரை தடுக்க முடியாத ஒன்றாகியுள்ளது. 1991க்கு பின்பு மண்டபம் முகாம் கூடுதல் கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் அதிகரிக்கச் செய்தாலும் அங்கு பணிபுரியும் அதிகாரிகளுக்கு சவாலாக பல சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. மற்ற இயக்கங்களைச் சேர்ந்த பலர் மண்டபம் முகாமின் மண்ணிற்குள் புதைந்து போனதாக தகவல். ஆதாரம் இல்லை.

மண்டபம் முகாமில் நடக்கக் கூடிய நிகழ்வுகளை மனதில் கொண்டே அதிகாரிகள் கூடுதல் கட்டுப்பாடுளை விதிக்கிறார்கள். அந்தக் கட்டுப்பாடுகள் மற்ற முகாம்களுக்கும் விதியாகிப் போவதுதான் அகதிகளின் தலைவிதியாக அமைகிறது.

00.jpg

கடற்கரைப் பகுதியில் வாழ்பவர்கட்கு, கடல் தொழில் செய்பவர்கட்கு கடல் என்பது சிறிய நீச்சல் குளம் மாதிரி. இப்படித்தான் ஒருதடவை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சம்மாட்டி என்று அழைக்கப்படும் கடல் தொழில் புரியும் பெரும் முதலாளியின் மகன்கள் மூவர் சேர்ந்து தமிழ்நாட்டுக்குப் படம் பார்க்கப் புறப்பட்டார்கள். வரும் வழியில் கடத்தல்காரனோ அகதியோ அகப்பட்டவர்களையும் ஏற்றி வந்தார்கள். மண்டபம் முகாம் பகுதிக்கு வந்து பிறகு எந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு படகைக் கடலில் விட்டுவிட்டு முகாமிற்கு வந்தார்கள். முகாம் நண்பர்கள் சிலர் உதவியுடன் எந்திரத்தைப் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு தமிழ்நாட்டில் ஒருவாரம் சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.

தமிழ் நாட்டைச் சுற்றிய பொடியன்கள் தகப்பனுக்கு தொலைபேசி அழைப்புவிட, வேறு ஒரு படகு மண்டபம் வந்தது. அந்தப் பொடியன்கள் திரும்பி அவர்கள் ஊருக்கு, பத்திரப்படுத்தி வைத்திருந்த எந்திரத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

வெறும் படகு மட்டும் னி பிரிவு பார்வையில் பட்டது அவர்கள் இன்று வரை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நான் என்ன எழுதினாலும் அதில் Q பிரிவு பற்றி எழுதாவிட்டால் எழுதியது நிறைவு பெறாது. அந்த வகையில் மண்டபம் முகாமில் ஒரு Q பிரிவு அதிகாரியிருந்தாராம். அவருக்கு யார் மேலாவது சந்தேகம் வந்தால் கூப்பிட்டுத் தோளில் கையைப் போட்டுப் பேசிக்கொண்டே நடப்பாராம் அவ்வாறு பேசிக்கொண்டே நடக்கும்போது தோளில் உள்ள கையை அப்படியே தோளிலிருந்து சற்று இறக்கி கை தசைநார்களை அமுக்கி அமுக்கிப் பார்ப்பாராம், ஆயுதப் பயிற்சி எடுத்திருந்தால் தசை நார்கள் இறுகியிருக்கும்.

அந்த அதிகாரி கடுமையாக நடந்துக்கொள்வதும் பொதுப்படையாகத் திட்டுவதும் போன்ற பல விடயங்கள் அந்த மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. ஒரு இயக்கப் பொடியனை அவர் படுத்திய பாடு அவனுக்கு உச்சகட்ட எரிச்சலை ஏற்படுத்தியது. அந்தப் பொடியன் கள்ளத்தோணி ஏறி இலங்கை புறப்பட்டு சிறிது கடலுக்குச் சென்றதும் அந்த அதிகாரிக்கு போன் போட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான். அவன் கோபம் அடங்கும் மட்டும் திட்டிவிட்டுக் கைபேசியைத் தூக்கி கடலில் வீசிவிட்டுச் சென்று விட்டான்.

இதுபோல பல சம்பவங்கள் இருட்டில் நடக்கின்றன. அத்துமீறி அதிகாரத் திமிறில் நடந்துகொள்ளும் னி பிரிவு அதிகாரிகளே மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 112 முகாம்களிலும் மிகவும் பிரச்சினையானது மண்டபம் அகதிகள் முகாம்தான். அதனால் அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தும் இங்கு முழுமையாக கடைப் பிடிக்கப்படுகின்றன.

அனுமதியில்லாமல் வேறு முகாம்வாசிகள் உறவினரைப் பார்க்க இங்கு வர முடியாது. இந்த முகாமில் உள்ளவர்கள் வெளியே போகவும் முடியாது.

வெளிநபர்கள் எவரும் உள்ளே வர அனுமதிக்கப் படுவதில்லை. சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பெரியகுளம் மக்கள் பிரதிநிதி லாசர் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் முகாமிற்குள் செல்ல முயற்சித்து முகப்பு வாயிலில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

இலங்கையில் உள்ள முள்வேலி முகாமிற்கும் இந்த முகாமிற்கும் எனக்குத் தெரிந்த வித்தியாசம், இலங்கையில் முள்வேலியைச் சுற்றிச் சுருள் கம்பி இருக்கும். இங்கு முள் கம்பியே வேலியாயிருக்கும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டிய வீடுகள் இன்னும் உள்ளன. அகதிகள் அதிகம் வரவே அவை போதுமானதாக இல்லாததால் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் இந்த முகாமிற்கு ஒரு விடிவு கிடைத்தது. புதிதாக வீடுகள் கட்டப்பட்டன. கழிவறைகள், சாலைகள் தெருவிளக்குகள் போன்றவை கூடுதலாக அமைக்கப்பட்டன. 260 கிணறுகள் இருப்பதாக ஒரு தகவல். தற்போது 650 குடும்பங்கள் இருக்கும் வீடுகள் தவிர்த்து மற்ற வீடுகள் இடிந்து பாழடைந்து முட்புதர் மண்டிப்போய் பராமரிப்பின்றிக் கிடக்கின்றன.

கடந்த கருணாநிதி ஆட்சியில் மண்டபம் முகாமிற்கு நிதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணத்தில் பிரதான தார்ச்சாலை மட்டும் போடப்பட்டது. வீடுகள் பராமரிப்புக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை பாதியில் நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்தாலே பராமரிப்பில்லாத கட்டிடங்களும் இடிந்த கட்டிடங்களும் எங்கு பார்த்தாலும் கண்ணில்படும். இவை முகாமிற்கு அவலட்சணமான தோற்றத்தைத் தருகின்றன.

முகாமிற்குள் சிறைச்சாலை மற்றும் காவல்நிலையம் இருக்கிறது. முகாமிற்கு முன் பக்கம் பிரதான இராமேஸ்வரம் சாலை. பின்பக்கம் கடல் பகுதி. முகாமைவிட்டு வெளியே போக உள்ளேவர இரகசிய வழிகளும் உண்டு. அங்கு வாழக்கூடிய அனைவரின் முகங்களும் வாயில் காவலில் இருக்கும் காவலர்களுக்கு நன்கு தெரியும்.

முகாமிற்குள் அனுமதியில்லாமல் போக வேண்டுமானால் பழைய கைலி, கசங்கிய சட்டை, காலில் ரப்பர் செருப்பு, சீவாத தலை இந்த சுய தோற்றத்துடன்

தைரியமாக விறுவிறு என்று நடந்து நுழைவாயில் வழியாகவே செல்ல முடியும். யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படி முகாமிற்குள் நீங்கள் சென்றுவிடலாம். ஆனால் அங்கும் காட்டிக் கொடுப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

01.jpg

மதுரையில் உச்சம்பட்டி முகாமில் 527 குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு 22 பேர் னி பிரிவுக்கு காட்டிக் கொடுப்பவர்களாகவும் நெருக்க மானவர்களாகவும் இருப்பதாக அறிய முடிகிறது.

மொத்தம் உள்ள 112 முகாம்களில். 19,733 குடும்பங்களைச் சேர்ந்த உள்ள 67,165 (ஜனவரி 2013) பேர்களில் எத்தனை பேர் காட்டிக்கொடுப்பவர்கள் இருப்பார்கள்? காட்டிக்கொடுக்கும் நபர்கள் முகாம் மட்டத்தில் பெரும் பாலும் சற்று வசதியானவர்களாக இருப்பார்கள். முக்கியமாக இவர்கள் முகாம் கட்டுப்பாட்டை மீறுபவர்களாகவும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் முகாமிற்குள் 20% முதல் 30% வரை வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள். அதிகாரிகளின் நெருக்கம் காண்பித்து வட்டி வசூல் செய்ய வசதியாக இருக்கும். இவர்கள் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பார்கள்.அசையும் அசையா சொத்து அகதிகள் வாங்கக் கூடாது என்பது விதி. இவர்களைப் போன்றவர்களுக்கு சலுகைகள் காண்பிப்பதின் மூலம் அதிகாரிகளின் வேலை சுலபமாகிப்போகிறது. இனஒற்றுமை என்பது போய், இன்று நீ என்னை காட்டிக்கொடுக்காதே, நான் உன்னை காட்டிக்கொடுக்க மாட்டேன். நாம் இருவரும் மற்றவனைக் காட்டிக் கொடுக்கலாம் என்ற நிலையுள்ளது.

உச்சிப்புளி, மண்டபம் போன்ற பகுதிகள், தற்போதைய காலங்களில் இந்திய ராணுவத்தின் பார்வையில் இருக்கிறது. இங்கு விமான ஓடுதளம், ராடார் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இப்படி ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அகதிகளாக ஏன் வாழ வேண்டும்? இந்த முகாம் மக்களை தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மாற்றலாமே!

மண்டபம் முகாம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றைப் பதிவு செய்யவேண்டும். 25.07.2012 தேதியிட்ட ‘ஜுனியர் விகட’னில் இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாகிருல்லா ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார். அதாவது “இவர்கள் சமையல் செய்வதற்காக இலவச கேஸ் சிலிண்டர்கள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அவைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன”. இது முற்றிலும் தவறான கூற்று. எந்த ஆட்சியிலும் எந்தக் காலத்திலும் இவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை.

மண்டபம் அகதிகள் முகாமில் நடந்தது என்ன வென்றால், முகாமிற்குள் திருட்டுத்தனமாகக் கூடுதல் விலைக்குச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்கியுள்ளார்கள். முறையான சமையல் எரிவாயு பதிவில்லாமல், சமையல் எரிவாயு முகவர் கூடுதல் லாபம் என்பதால் முகாமிற்குள் அதிகமாக விற்பனையும் செய்துள்ளார். இதன் விளைவு முகாமிற்கு வெளியே முறையாகப் பதிவு செய்தவர்களுக்கு எரிவாயு சரியாக விநியோகிக்கப்படவில்லை. அந்த உயர்வு மேல் அதிகாரிகளுக்கு முறையிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியில்லாமல் விற்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டார்கள். பின்பு அகதிகள் எங்களுக்கும் சமையல் எரிவாயு வேண்டும் என்று முறையிட்டனர். எனவே தற்போது முறையாகக் காசு கொடுத்து பதிவு செய்தவர்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.

மண்டபம் அகதிகள் முகாம் போன்று, கடற்கரை பகுதியில் அமைந்துள்ள முகாம்கள் மற்ற மாநில எல்லை ஓரங்களில் அமைந்துள்ள முகாம்களைவிட மிகுந்த கட்டுப்பாடு உடையனவாகவே நடைமுறையில் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் ஒரு முகாம் அமைந்துள்ளது. இங்கு 118 குடும்பங்கள் தற்போது வசிக்கிறார்கள். முதலில் இவர்களை உணவு தானியச் சேமிப்புக் கிடங்கில் தங்க வைத்திருந்தனர். பின்பு அவர்களுக்கு அரசால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. சிமிண்ட் சாலையும் போடப்பட்டுள்ளது. சமையலுக்காக மண்ணெண்ணை மற்ற முகாம்களைக் காட்டிலும அதிகம் வழங்கப்படுகிறது. வீட்டு வாசலுக்கு குடிநீர் வருகிறது. அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பாக அரசு அனைத்தையும் செய்கிறது. ஆனால் மண்டபம் முகாமில் உள்ளதுபோல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. காரணம் கேரள மாநில எல்லையோரம் இம்முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் பதினொன்று ஈழத்து அகதிகள் தமிழ்நாட்டுத் தமிழர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். இதில் நான்கு பெண்கள் ஏழு ஆண்கள் அடங்கும். பெரும்பாலும் ஆண்களே அதிகமாகத் திருமணம் செய்துள்ளார்கள், இதுபோன்ற திருமணங்கள் பரவலாக அனைத்து முகாம்களிலும் நடைபெற்றுள்ளன. முகாம் ஆண்கள் தமிழ்நாட்டுப் பெண்களை வேலைக்குச் செல்லும் இடங்களில் காதலித்துத் திருமணம் செய்துகொள்கின்றனர். இதற்கு தமிழ்நாட்டுப் பெண்களின் பெற்றோர்களும் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை, காரணம் இவர்கள் வரதட்சணைக்காகப் பெண்களைச் சித்திரவதைப் பண்ணுவதில்லை. ஆனால் இலங்கைப் பெண்ணை தமிழ்நாட்டு ஆண்மகன் திருமணம் செய்திருந்தால் அதில் 90சதவீதம் அந்தப் பெண் இரண்டாம் தாரமாகவே அமைகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டு ஆண்மகன் சிறிது காலம் அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டுப் பெண்ணை விட்டுவிட்டு ஓடி விடுகிறான். இப்படி நடக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணாலோ அல்லது அந்தப் பெண் வீட்டாராலோ இந்த முகாம் கட்டுப்பாடுகளை மீறி அந்த ஆண்மகனை கண்டுப் பிடிக்க முடிவதில்லை.

முகாமிற்கு வெளியிலிருந்து திருமணம் முடித்து முகாமிற்குள் வரும் நபர்களுக்கு தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி முகாம் பதிவோ உதவித்தொகையோ வழங்கப்படுவதில்லை. இது குறித்து முகாம்களுக்குள் பணிசெய்யும் ஒரு தொண்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அவர் தனது பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டார். இவ்வாறு முகாமிற்கு வெளியே திருமணம் என்பது 99 சதவீதம் காதல் திருமணங்களாகவே இருக்கின்றன. இவ்வாறு காதல் திருமணம் செய்யும் இளைஞர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும். ஈழத்தில் இன்று தொண்ணூறு ஆயிரம் இளம் விதவைகள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் தனித்துவம் அடையாளம் இவ்வாறு அழிந்துகொண்டு போவது வருத்தம் அளிக்கிறது என்கிறார்.

அகதிகளைப் பொறுத்தவரை அகதிகளின் பராமரிப்பு முழுவதும் அகதிகளுக்கான மறுவாழ்வுத் துறையினைச் சார்ந்தது. இந்திய குடியுரிமை பெற்ற பர்மா, வியட்நாம்,

இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக உருவாக்கப்பட்டது மறுவாழ்வுத் துறை. 1983ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாகத் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடையத் துவங்கினார்கள். மறுவாழ்வுத் துறையானது 1984ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழ் அகதிகளுக்காகவே முழுமையாகச் செயல்படுகிறது. 2007க்கு முன்பு வரை அகதிகள் முகாமில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அவர்களின் பணி என்ன என்பது தெரியாமல் இருந்தது. அகதிகள் தொடர்புடைய அரசியல் நிர்வாகம் சீர்கெட்டிருந்தது என்றால் மிகையில்லை. இதனை திறம்படச் செயல்படுத்தியவர் இரா. கற்பூரசுந்தரப்பாண்டியன் மிகிஷி. இவர் 2007இல் ஒரு கையேடு தயார் செய்து அகதிகள் தொடர்புடைய அத்தனை அதிகாரிகளுக்கும் அனுப்பினார். அதில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை உட்பட கீழ்நிலை அதிகாரிகள் வரை அவர்களுக்கான பணி என்ன என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அவருடைய தொலைபேசி எண் முகாம் மக்கள் அனைவரிடமும் இருந்தது. சாமானிய அகதி மக்களும் அவர்களின் குறைகளை நேரடியாக தெரிவித்துத் தீர்வுகாண முடிந்தது.

முகாம்களில் பதிவு வெட்டுப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிமக்கள் உடனடியாகப் பதிவு பெற ஏற்பாடுகள் செய்தார். அவருடைய பதவிக்காலம் “அகதி மக்களின் பொற்காலம்” என்று குறிப்பிட்டால் மிகையில்லை. தற்போது அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதேபோல் அகதிமக்கள்மீது அன்பும் பரிவும் கொண்ட மற்றொரு அதிகாரி திரு. சகாயம் மிகிஷி. இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மதுரை மாவட்ட அகதிமக்களுக்குப் பொற்காலமாக அமைந்தது. 21 வருடங்களுக்குப் பின்பு இவர்தான் மதுரை மாவட்ட அகதிகள் முகாம்களில் தண்ணீர் தொட்டி, சமூதாயக் கூடம் இவற்றை அரசு செலவில் கட்டிக்கொடுத்தார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து மாற்றப்பட்டது அகதிமக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தினை ஏற்படுத்தியது. அகதிமக்கள் அவர்மீது கொண்ட பற்று காரணமாக ஆர்ப்பாட்டம்கூட செய்ய முனைந்தனர்.

இந்தியாவில் (23 மே 2013) மொத்தமாக 2,84,746 நபர்கள் அகதிகளாக உள்ளனர். இவர்களில் 1,05,634 நபர்கள் எந்த நாட்டையும் சாராதவர்கள். வங்க தேசத்தில்

இருந்து 83,484 நபர்களும் இலங்கையில் இருந்து 69,544 நபர்களும் ஆப்கானில் இருந்து 19,115 நபர்களும் அடைக்கலம் புகுந்துள்ளனர். இவர்களைத் தவிர மியான்மரில் இருந்து 6,887 நபர்களும் அமெரிக்காவில் இருந்து 12 நபர்களும் பிரிட்டனில் இருந்து 6 நபர்களும் ஈரானில் இருந்து 25 நபர்களும் சீனாவில் இருந்து 8 நபர்களும் தென்கொரியாவில் இருந்து 6 நபர்களும் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜீதேந்திர சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மற்ற நாட்டு அகதிகளுக்குச் சமமாக ஈழத்தமிழ் அகதிகள் வாழ்கிறார்களா என்பது ஆய்வுக்குரியது.

http://www.kalachuvadu.com/issue-167/page32.asp

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.