Jump to content

திருமணம் செய்வதாகக் கூறி, ஏமாற்றி விட்டார். நடிகை ராதா புகார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23-1385177982-actress-radha-filed-compla

 

திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார்.

 

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு இப்போது வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா.

 

மேலும் ரூ.50 லட்சம் நகை-பணத்தை சுருட்டிச்சென்று விட்டார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

 

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

 

சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

 

பின்னர் அவர், நிருபர்களைச் சந்தித்து கூறியதாவது:

 

எனது பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர். ஆனால், சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். பிளஸ்-2 வரை படித்திருக்கிறேன். சினிமாவில் பிரபலமாகி நன்றாக பணம் சம்பாதித்துள்ளேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டேன்.

 

ஓரளவு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே, திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று வாழ ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை பெரும் புயலில் சிக்க வைத்து, எனது வாழ்க்கையை இப்போது நாசமாக்கிவிட்டது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு, இப்போது வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா.

SN_110826153111000000.jpg

தப்பு செய்து விட்டீர்களே... ராதா.

ஒரு மஞ்சள் கயிறையாவது கட்டி விட்டு, உறவு கொள்ள அனுமதித்திருக்கலாம்....

 

Link to comment
Share on other sites

ராதாவுக்கு பல கணவர்களாம் - தொழிலதிபரின் பதிலடி! 
[sunday, 2013-11-24 14:46:14]
 
ராதா ஒரு பெண் என்பதால் அவர் மீது புகார் தராமல் அவரது தொல்லைகளை இதுவரை சகித்து வந்தேன் (அடுத்த பெண்ணிய விருது இவருக்குதான்). அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன். ராதாவுக்கு எத்தனை கணவர் என்பதை சென்னை வந்ததும் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறார். ராதாவின் பாஸ்போர்ட்டில் கணவர் என்று ஒரு பெயரும், அவரின் பான் கார்டில் கணவர் என்று வேறு பெயரும் உள்ளதாக பைசூல் தெரிவித்துள்ளார். மேலும் ராதாவின் எஸ்எம்எஸ் தகவல்களிலும் தனக்கு சாதகமான ஆதாரங்கள் இருப்பதாகவும் பைசல் தெரிவித்துள்ளார்.
பைசல் கமிஷனரை சந்தித்து தனது தரப்பு நியாயத்தையும், அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பிப்பார் என தெரிகிறது. தமிழகத்தை புரட்டிப் போடப் போகும் இந்த வழக்கை தெரிந்து கொள்ள இன்று நமது மீடியாக்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
 
 
 
Link to comment
Share on other sites

அண்ணே இது தொடர்பா அரசல் புரசலான வீடியோ வந்திருக்காம் இருந்தா லிங்க் கொடுங்கப்பா காணொளி ஊடாக கண்கள் வழியாக எங்கள் கலையுலக தாகத்தை தீர்க்கலாம்

Link to comment
Share on other sites

மிகவும் கவலை அளிக்கிறது. :(

Link to comment
Share on other sites

அண்ணே இது தொடர்பா அரசல் புரசலான வீடியோ வந்திருக்காம் இருந்தா லிங்க் கொடுங்கப்பா காணொளி ஊடாக கண்கள் வழியாக எங்கள் கலையுலக தாகத்தை தீர்க்கலாம்

 

சுண்டல் கதையா முக்கியம் படத்தை பாரடா அவ் :D :D

Link to comment
Share on other sites

அண்ணே இது தொடர்பா அரசல் புரசலான வீடியோ வந்திருக்காம் இருந்தா லிங்க் கொடுங்கப்பா காணொளி ஊடாக கண்கள் வழியாக எங்கள் கலையுலக தாகத்தை தீர்க்கலாம்

 

அப்ப ஸ்ருதீன்ரை வரேல்லையோ?!  :o

Link to comment
Share on other sites

திருமணம் செய்வதாகக் கூறி செக்ஸ் அனுபவித்தார்- தொழிலதிபர் மீது நடிகை ராதா புகார்
 

23-1385177973-actress-radha-filed-complaசென்னை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, செக்ஸ் அனுபவித்துவிட்டு இப்போது வைப்பாட்டியாக மட்டும் வைத்துக் கொள்வேன் என்று ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை ராதா.

மேலும் ரூ.50 லட்சம் நகை-பணத்தை சுருட்டிச்சென்று விட்டார் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, மானஸ்தன், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராதா. தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம், லோகய்யா தெருவில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர், நிருபர்களைச் சந்தித்து கூறியதாவது:

எனது பூர்வீகம் ஆந்திர மாநிலம் நெல்லூர். ஆனால், சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். பிளஸ்-2 வரை படித்திருக்கிறேன். சினிமாவில் பிரபலமாகி நன்றாக பணம் சம்பாதித்துள்ளேன். எனது பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டேன்.

ஓரளவு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே, திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று வாழ ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் என்னை பெரும் புயலில் சிக்க வைத்து, எனது வாழ்க்கையை இப்போது நாசமாக்கிவிட்டது.

ratha.jpgமலேசிய தொழிலதிபர்

கடந்த 2008-ம் ஆண்டு பிரபல படஅதிபர் ஒருவர் எனக்கு போன் செய்து, ‘மலேசியாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர், உன்னை நேரில் பார்த்து பேச ஆசைப்படுகிறார். அவர் உனது தீவிர ரசிகர்’ என்று சொன்னார். நான் அதற்கு சம்மதித்தேன்.

ஏவி.எம். ஸ்டூடியோவில் வைத்து, அந்த பட அதிபர் மூலம், மலேசிய தொழில் அதிபர் என்ற நாமத்துடன் பைசூல் என்ற ஷியாம் என்பவர் என்னை நேரில் சந்தித்தார். என்னை கதாநாயகியாக நடிக்க வைத்து ஒரு படம் தயாரிப்பதாக சொன்னார். ரூ.10 ஆயிரம் பணத்தை அட்வான்சாக கொடுத்தார்.

23-1385177965-actress-radha-filed-complaதிருமணமாகாமலேயே…

அதன்பிறகு பட தயாரிப்பு தொடர்பாக அவரும், நானும் அடிக்கடி சந்தித்து பேசினோம். அடுத்த 20 நாட்களில் பைசூல் என்னை நேசிப்பதாக சொன்னார். திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இல்லற வாழ்க்கையை விரும்பிய என்னை அவரது காதல் பொங்கிய அழைப்பு சிந்திக்க வைத்தது. அவரது காதலை ஏற்றுக்கொண்டேன். நாளடைவில் என்னை சட்டபூர்வமாக மணந்து கொள்ளாமலேயே, என்னோடு உல்லாசம் அனுபவித்தார். பைசூலும், நானும் கணவன்-மனைவி போலவே ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அவருக்கு நானே சமைத்துப் போட்டேன். சினிமாவில் நடிப்பதையும் விட்டுவிட்டேன்.

23-1385177957-actress-radha-filed-complaகர்ப்பம்

அவருடன் நடத்திய இல்லற வாழ்க்கையின் பலனாக, நான் கர்ப்பம் ஆனேன். ஆனால், அவர் சொன்னதால் கருவை கலைத்துவிட்டேன். கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் கணவன்-மனைவியாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்தோம்.

23-1385178077-actress-radha-.jpgஏற்க மறுப்பு

என்னை வெளிப்படையாக பைசூல் மனைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது தந்தை-தாய் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று முதலில் சொன்னார். இப்போது அவரது தாய்-தந்தை இறந்துவிட்டார்கள். அதற்கு பிறகும் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.

‘நடிகையை திருமணம் செய்ய முடியாது, வைப்பாட்டியாகத்தான் வைத்துக்கொள்ள முடியும்’ என்று என்னை இப்போது கிண்டலாக பேசுகிறார். அவரோடு இனி வாழ முடியாது என்று முடிவு செய்து, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். அவர் என்னை அனுபவித்துவிட்டு, தூக்கி எறிந்துவிட்டார். செக்ஸ் சுகத்துக்கும், பணத்துக்கும் மட்டும் என்னை பயன்படுத்தினார்.

23-1385177973-actress-radha-filed-complaரூ.50 லட்சம் சுருட்டினார்

பைசூல் வைர நகை செய்யும் தொழிலும் செய்வதாகச் சொன்னார். அந்த தொழிலுக்கு தேவைப்படுவதாக சொல்லி எனது நகைகளையும், ரொக்கப் பணமாக ரூ.50 லட்சம் வரையும் என்னிடம் இருந்து சுருட்டினார். அந்த பணத்தைத் திருப்பித் தரவும் மறுத்துவிட்டார். சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி சொந்த வீட்டில் வாழ்கிறார். அவரது சொந்த ஊர் சிவகங்கை அருகே உள்ள இளையான்குடி, புதூர் ஆகும். அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி இருப்பதாக அறிகிறேன்.

பணத்துக்கும், போகத்துக்கும் என்னைப்போல வேறு நடிகையையோ, வேறு பெண்ணையோ அவர் ஏமாற்றி விடக்கூடாது. அவரது வேடத்தை கலைத்து, சட்டப்படி அவருக்கு தண்டனை பெற்றுத்தருவதற்காகவே, இந்த புகார் மனுவை கொடுத்துள்ளேன்,” என்றார்.

அவரது புகார் மனு விசாரணைக்காக தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://nadunadapu.com/?p=29130#more-29130

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.