Jump to content

ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம்.


Recommended Posts

ஒருலட்சரூபா முதலீட்டிற்கு மாதம் 5000முதல் 7500ரூபா இலாபத்தைத் தருவோம்.

 

எமது கைவினைப்படைப்பாளிகள்(HMC) நிறுவனமானது பெரிய வியாபாரா நிறுவனங்களின் விநியோக முகவராக இணைந்து தொழில் புரியக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

 

இத்தொழிலில் முதலீடு செய்ய விரும்புவோரையும் வரவேற்கிறோம். உங்கள் முதலீடு மூலம் வேலைவாய்ப்பை வழங்குவதோடு உங்கள் முதலீட்டுக்கான இலாபமும் வழங்கப்படும்.

விநியோக முகவர்

மாவட்டம்
மட்டக்களப்பு

 

வங்கி உத்தரவாதம்
1000000.00 (பத்துலட்சரூபா)

 

இப்பணம் குறித்த நிறுவனத்திற்கு வழங்கத் தேவையில்லை. எங்களது வங்கியில் வைப்பிலிட்டுக் காட்ட வேண்டும். சுழற்சி முறையில் வியாபார நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்களுக்கு ஏற்ப தேவைகளுக்கு நாங்களே பணத்தைக் கையாள்வோம்.

 

மொத்த வியாபாரா நிறுவனமொன்றின் விநியோக முகவராகவே நாங்கள் இணைகிறோம். இத்தோடு எமது உணவு உற்பத்திப் பொருள்களையும் விற்பனை செய்யவுள்ளோம்.

 

ஆளணிவளங்கல்:-

1)    20′ ஓ 20′ களஞ்சிய வசதி.
2)    களஞ்சிய அறை காப்பாளர்.
3)    கணக்காளர்.
4)    விற்பனை பிரதிநிதி.
5)    வாகன ஓட்டுனர்.
6)    பாதுகாவலர்.
7)    ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்.

 

நிறுவனத்தின் விற்பனையில் 12% வழங்கப்படும்.

 

வேலையாட்களுக்கான சம்பளம் கொடுப்பனவு வாகனச் செலவுகள் தவிர மாதம் 50000.00ரூபா (ஐம்பதாயிரம் ரூபா) தொடக்கம் 75000.00ரூபா (எழுபத்தையாயிரம்) வரையில் இலாபம் கிடைக்கும். அதிகமான விநியோகம் இதர மாவட்டங்களுக்கும் செய்தால் இலாபத்தையும் அதிகரிக்க முடியும். அதேவேளை வேலை வாய்ப்பினையும் அதிகளவில் வழங்க முடியும். உங்கள் ஆதரவினை வேண்டுகிறோம்.

 

Shanthy :-Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

rameshsanthi@gmail.com
Skype – Shanthyramesh

 

முகவரி:
Shanthy
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

http://hmclk.com/p133.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்துக்கு நான் ஒரு லட்சம் கடனாக தாறன்.இதில் எனக்கு வரும் வருமான பங்கை நேசக்கரத்தின் சமுக சேவைக்கு பயன் படுத்தவும்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்துக்கு நான் ஒரு லட்சம் கடனாக தாறன்.இதில் எனக்கு வரும் வருமான பங்கை நேசக்கரத்தின் சமுக சேவைக்கு பயன் படுத்தவும்.

 

மிக்க நன்றிகள் சுவைப்பிரியன்.உங்கள் உதவியோடு 5லட்சம் தயார். இன்னும் 5லட்சம் தேவை. கள உறவுகள் யாராவது இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உதவியை நீங்கள் கடனாக தருகிற போது அதன் மூலம் பலருக்கான உதவியும் கிடைக்கிறது.

 

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தில் நானும் இணைந்து கொள்ளுகின்றேன் .என்னுடைய தாய் தந்தை நினைவாக திருகோணமலையில் இயங்கும் நிறுவனத்தில் ஞாபகார்த்த நிதி ஆரம்பித்து வசதியற்ற மாணவர்களுக்கு உதவ்விரும்புகின்றேன் .இதன் முலம் வரும் வருமானத்தை அங்கு அனுப்பிவையுங்கள்.

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தில் நானும் இணைந்து கொள்ளுகின்றேன் .என்னுடைய தாய் தந்தை நினைவாக திருகோணமலையில் இயங்கும் நிறுவனத்தில் ஞாபகார்த்த நிதி ஆரம்பித்து வசதியற்ற மாணவர்களுக்கு உதவ்விரும்புகின்றேன் .இதன் முலம் வரும் வருமானத்தை அங்கு அனுப்பிவையுங்கள்.

 

உங்கள் உதவி கிடைத்தது.

மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
சுவைப்பிரியன்
உங்கள் உதவி ஒருலட்சரூபா நேற்று கிடைத்தது. மிக்க நன்றிகள். பெப்ரவரி 2014 தொடக்கம் முதலீட்டாளர்களுக்கான இலாபம் வழங்கப்படும். இம்மாதம் 15ம் திகதி வியாபாரத்தை ஆரம்பித்துள்ளோம். 
Link to comment
Share on other sites

  • 1 month later...

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு உங்கள் உதவியே எங்களின் வெற்றி

 

 

எமது கைவினைப்படைப்பாளிகள் (HMC) நிறுவனமானது விநியோக முகவர் வியாபாரத்தினை 15.12.2013 அன்று ஆரம்பித்திருந்தோம். எமக்கு உதவுவதாக வாக்குறுதி தந்தவர்களில் சிலர் குறித்தபடி உதவியை தரவில்லை.

 

எனினும் தொடங்கிய பணியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஆரம்பித்தோம். பொருட்கள் விநியோகிப்பதற்கான வாகனம் ஒன்று தேவைப்பட்டிருந்தது. தினவாடகைக்கு ஆரம்பத்தில் வாகனத்தை ஒழுங்கு செய்தோம். தினவாடகை மாதம் 60ஆயிரம் ரூபா தேவைப்பட்டிருந்தது.

 

தொடர்ந்த வேலைகளைச் செய்வதற்கும் வியாபார விநியோகத்திற்குமாக எமக்காக தனியாக வாகனமொன்றை மாதாந்த அடிப்படையில் செலுத்தும் வகையில் கொள்வனவு செய்துள்ளோம்.

 

வாகனத்தின் மொத்த பெறுமதி 1400000.00ரூபா (பதின்நான்குலட்சரூபா) பெறுமதியான வாகனத்தை 350000.00(மூன்றரைலட்சரூபா) முற்பணம் கட்டி கொள்வனவு செய்துள்ளோம். 48மாதங்களுக்கு 29500ரூபா விகிதம் மாதாந்த கட்டுப்பணம் கட்ட வேண்டும். கட்டுப்பணம் கட்டி முடிகிறபோது வாகனம் எமக்கு சொந்தமாகும்.

 

ஒவ்வொரு தேவைக்கும் தின வாடகைக்கே வாகனத்தை பெற்றுக் கொள்வோம். இதனால் அதிகளவிலான பணம் தினவாடகையில் வீணாகிறது இவற்றையும் கருத்திற் கொண்டே வாகனத்தை கொள்வனவு செய்யும் முடிவினை எடுத்தோம்.

 

மீதிப்பணத்தினை கடன் பெற்றே வியாபாரத்தை ஆரம்பித்துள்ளோம். யாராவது இதில் முதலீடு செய்ய முன்வந்தால் ஆதரவாக அமையும். இன்னும் இரண்டு லட்சரூபா தேவைப்படுகிறது. பங்கெடுக்க விரும்புவோர் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.

 

முதலீடு செய்தோர் விபரம் :-

 

1) பெயர் குறிப்பிடாத உறவு – 75000.00ரூபா
2) சபேசன் யேர்மனி – 100000.00ரூபா (கடந்த வருடம் தையல் நிறுவனத்திற்காக சபேசன் ஒரு லட்சரூபாவை முதலீடு செய்திருந்தார். உதவி கோரிய இளைஞர்கள் 3பேருக்கு தையல் நிறுவனத்தை போரால் கையளித்துள்ளோம். தையல் நிறுவனத்திற்காக சபேசன் முதலிட்ட தொகையினை சபேசனின் ஒப்புதலுடன் இவ்வியாபாரத்தில் முதலீடாக சேர்த்துள்ளோம்)
3) சிறி கனடா – 100000.00ரூபா
4) சுவைப்பிரியன் சுவிஸ் – 100000.00ரூபா
5) திருமாவளவன் – 40000.00ரூபா (கடனுதவியாக வழங்கப்பட்ட உதவியிலிருந்து மீளச்செலுத்தப்பட்ட பணம் இங்கு முதலிட்டுள்ளோம்)
6) பெயர்குறிப்பிட விரும்பாத உறவு நோர்வே – 60000.00ரூபா (இந்த உறவு ஏற்கனவே 2011இல் கடனுதவியாக 3பேருக்கு வழங்கிய உதவியிலிருந்து ஒருவர் மீளச்செலுத்தியதை இங்கு முதலிட்டுள்ளோம்)
7) சாந்தி – 525000.00ரூபா.

 

மொத்த தொகை – 1000000.00ரூபா (பத்து லட்சம் ரூபா)

 

பயன்பாட்டு விபரம் :-

 

வாகனம் , பதிவு , காப்புறுதி – 350000.00ரூபா

வங்கி உத்தரவாதம் – 500000.00ரூபா

களஞ்சிய அறை முற்பணம் – 75000.00ரூபா

முதல் கொள்வனவு – 750000.00ரூபா.

 

வங்கி உத்தரவாதம் 10லட்சம் காட்ட வேண்டும். மேலதிகமாக தேவைப்பட்ட 5லட்சரூபாவினை கடன் பெற்று வங்கி உத்தரவாதத்தை கொடுத்துள்ளோம்.

 

தற்போது தேவைப்படும் உதவி கிடைக்கப்பெற்றால் சில மாதங்களில் எமது வியாபாரம் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். முதலீடு செய்ய விரும்புவோர் உங்கள் ஆதரவினைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

 

Shanthy :-Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

rameshsanthi@gmail.com

Skype – Shanthyramesh

 

முகவரி:

Shanthy
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

http://hmclk.com/p153.html

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இத்திட்டத்திற்கான தேவையான மீதி 2லட்சரூபாவினையும் கனடாவிலிருந்து ரவி, சுரேஷ் நண்பர்கள் செய்துள்ளார்கள். தங்கள் உதவி மூலம் கிழக்கில் பாதிப்புற்ற மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்துமாறு இவ்வுதவியை வழங்கியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பெப்ரவரி மாதத்துக்கான வியாபார இலாபம் விபரங்கள் இன்னும் சில நாளில் பதிவிடுவேன். அதிக வேலைப்பழுவினால் தாமதமாகிறது முதலீட்டாளர்கள் பொறுத்திடுங்கள்.

Link to comment
Share on other sites

பெப்ரவரி முகவர் வியாபாரத்தின் இலாபவிபரம்.

டிசம்பர் மாதம் 15ம் திகதி வியாபார முகவர் வியாபாரத்தினை ஆரம்பித்திருந்தோம். டிசம்பர் , ஜனவரி மாதங்கள் பொருட்கள் விநியோகம் மட்டுமே அதிகம் நடைபெற்றது.விநியோகிக்கப்பட்ட பொருட்களுக்கான பணம் முழுமையாக சேகரித்து முடியவில்லை. ஆகையால் பெப்ரவரி மாதத்திற்கான இலாபத்தை மட்டுமே தற்போது முதலீட்டாளர்களுக்கு அறியத் தருகிறோம்.ஆரம்பம் குறைந்தளவு இலாபம் தான் வரும். மார்ச்மாதம் தொடக்கம் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல 5ஆயிரம் முதல் இலாபத்தை அடைய முடியும்.

முதலீட்டாளர்கள் தங்கள் இலாபத்தை எப்படி பயன்படுத்த விரும்புகிறார்களோ அதன்படி எம்மால் வழங்க முடியும். உங்கள் விருப்பங்களை அறியத்தாருங்கள்.

முதலீட்டாளர்கள் இலாபத்திலிருந்து நேசக்கரம் சமூகசேவைக்கான 15வீதம் கழித்து மீதி இலாப விபரம் :-

feb1.jpgfeb01.jpg

http://hmclk.com/p166.html#more-166

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.