Jump to content

ஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

 

தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை >>

 

தமிழீழம்

26.11.2013

ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம்.

அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே!

 

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது…” என்ற தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகள் யாவும் பலப்படுத்தப்படவேண்டும் எனவும் தமிழீழ எல்லாளன் படையாகிய நாம் வேண்டுகின்றோம்.

வடதமிழீழத்தில் சிறிலங்கா அரசால் திணிக்கப்பட்ட தேர்தலில் தமிழ்மக்கள் சிறிலங்கா அரசு மீது தமக்கிருக்கும் எதிர்ப்பை ஒன்றுபட்டு சனநாயக வழியில் வெளிப்படுத்தியிருந்தனர். அதே போன்று தமிழகத்திலும் சிறிலங்கா அரசிற்கு எதிரான தீர்மானத்தை தமிழக அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக சட்டமன்றில் நிறைவேற்றியிருந்தனர். அத்துடன் புலம்பெயர் தேசங்களிலும் போராளிகளும் செயல்பாட்டாளர்களும் ஒற்றுமையாக சில நாடுகளில் செயல்பட ஆரம்பித்திருப்பாதாகவும் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.

 

தமிழீழவிடுதலை போராட்டத்தில் வித்தாகிப்போன எமது மாவீரச்செல்வங்களை போற்றிப்பூசிக்கும் புனித நாளை நெருங்குகின்றோம். தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை வெளிப்படையாக ஒழுங்கமைக்க முடியாத நிலமையுள்ள போதும் புலம்பெயர் தேசங்களில் வழமை போன்று மாவீரர்நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுவருகின்றது.

 

பல நாடுகளில் வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒற்றுமையாக ஒழுங்கமைப்பதற்கான முயற்சிகளில் போராளிகளும் செயல்பாட்டாளர்களும ஈடுபட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம். விடுதலைப் போராட்டத்திற்கு ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். மாவீரர் நாள் ஒழுங்கமைப்பில் போராளிகளின் ஆலோசனைகளையும் ஒத்துழைபையும் பெற்று ஒற்றுமையாக செயல்பாட்டாளர்கள் செயற்படுவது இன்றிமையானது.

 

புலம்பெயர் நாடுகள் பலவற்றில் இந்த ஒற்றுமைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் சில நாடுகளில்; போராளிகளின் ஒன்றுமைக்கான கரங்களை தட்டிக்களித்து தொடர்ந்தும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் சில செயல்பாட்டாளர்கள் செயற்படுவது கண்டிக்கப்படவேண்டியது.

போராளிகளையும் போராளிகளுக்கு உறுதுணையாக செயல்படுபவர்களையும் அவமதிப்பது, மாவீரர்நாள் நிகழ்வில் தாயகவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களில் சிலரை புறக்கணித்தமை மற்றும் அண்மையில் மூத்த பெண் மாவீரர் ஒருவர் பெண்கள் எழுச்சி நாளில் புறக்கணிக்கப்பட்டது போன்ற பல விடயங்கள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் செயல்பாட்டாளர்கள் மற்றும் கலைக்கூட பொறுப்பாளர்கள் தமது தவறுகளை திருத்தி ஒற்றுமைக்கான கரங்களை பலப்படுத்துமாறும் அல்லது ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுமாறும் கண்டிப்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

 

மாவீரர்களின் தியாகங்களில் நின்று விடுதலையை அழிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களை நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை ஏச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

தமிழீழ எல்லாளன் படையின் பெயரில் அனைத்துலக தொடர்பகத்தை சேர்ந்த சில நபர்கள் பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. எமது அமைப்பின் பெயரில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கின்றோம். தமிழீழ எல்லாளன் படையின் அறிக்கைகள் ellalanforceoftamileelam11@gmail.com என்ற மின்னஞ்சலில் இருந்தே ஊடகங்களுக்கு அனுப்பப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

!ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதே தவிர ஆயுத போராட்டம் முடிக்கப்படவில்லை.!

மீண்டும் விரைவில் வருவோம்.!

 

தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம்

 

த.மணியரசன்

நடவடிக்கைப் பொறுப்பாளர்.

தமிழீழ எல்லாளன் படை

தமிழீழம்

ellalan.jpg

 

http://nerudal.com/nerudal.60540.html

Link to comment
Share on other sites

இசைபிரியாவின் காணொளி வந்த போது எங்கே இருந்தீர்கள்...​??

 

காணாமல் போன உறவுகளை தேடி காமரூனிடம் மக்கள் அழுத போது கல்லுடைத்து கொண்டு இருந்தீர்களா ..??

 

இன்னுமே தங்களின் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் வலி வடக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது இடியப்பம் அவிச்சு கொண்டு இருந்தீர்களா ..??

 

வெளியே தெரியாமல் இன்னும் சித்திரவதை அனுபவிக்கும் முன்னாள் போராளிகள் துன்பபடும் வேளை, பகுதி நேர இரவு வேலைக்கு போய்விட்டீர்களா ..​​??

 

90 ஆயிரத்துக்கும் மேலான விதவைகள் பாலியல் தொல்லை வறுமையில் வாடும் போது வடை சுட்டு கொண்டிருந்தீர்களா..??

 

எங்கிருந்து வருகிறீர்கள்..??

 

மாவீரர் தினம் வரும்போது மட்டும் வருகிறீர்கள் யாரப்பா நீங்கள் ..??

Link to comment
Share on other sites

எப்ப வருவோம் எப்பிடி வருவோமென்று எங்களுக்கே தெரியாது... ஆனால் எப்பாவது வருவோம்... இல்லேனா எங்களை மறந்துடுவீங்கள்லே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசைபிரியாவின் காணொளி வந்த போது எங்கே இருந்தீர்கள்...​??

காணாமல் போன உறவுகளை தேடி காமரூனிடம் மக்கள் அழுத போது கல்லுடைத்து கொண்டு இருந்தீர்களா ..??

இன்னுமே தங்களின் சொந்த இடங்களில் குடியேற முடியாமல் வலி வடக்கு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது இடியப்பம் அவிச்சு கொண்டு இருந்தீர்களா ..??

வெளியே தெரியாமல் இன்னும் சித்திரவதை அனுபவிக்கும் முன்னாள் போராளிகள் துன்பபடும் வேளை, பகுதி நேர இரவு வேலைக்கு போய்விட்டீர்களா ..​​??

90 ஆயிரத்துக்கும் மேலான விதவைகள் பாலியல் தொல்லை

வறுமையில் வாடும் போது வடை சுட்டு கொண்டிருந்தீர்களா..??

எங்கிருந்து வருகிறீர்கள்..??

மாவீரர் தினம் வரும்போது மட்டும் வருகிறீர்கள் யாரப்பா நீங்கள் ..??

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தோம் ஜயனே ஜயனே...
Link to comment
Share on other sites

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தோம் ஜயனே ஜயனே...

பாஸ் முடியல .......... :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.