Jump to content

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்


Recommended Posts

  • Replies 199
  • Created
  • Last Reply

திருமணமான புதியதில் பெண்கள்

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்

அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.

இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து

=======================

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்

வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்

போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.

ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்

இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க

முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்

கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து

=====================

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.

இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்

பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

10352199_846786105342123_451599520092866

Link to comment
Share on other sites

போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். தாக்குதலைத் தீவிரப் படுத்த நினைத்தான் படைத் தளபதி. ஆனால் எதிரணியினரை விட இவரணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி.

அனைவரையும் அழைத்தான். ” நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்” என்றான்.

”தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்“ என்றான்.

அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத் தொடர்ந்தனர். வெற்றி வாகை சூடினார்கள்.

போர் முடிந்ததும் சொன்னான் தளபதியின் உதவியாளன் “தலை விதியை யாராலும் மாற்ற முடியாது. நாணயம் காட்டியது சரியாக இருக்கிறது”. தளபதியும் சிரித்துக் கொண்டே சொன்னான் “சரியாகச் சொன்னாய்” என்றவாறே, நாணயத்தை அவனிடம் காட்டினான். ”நாணயத்தின் இருபக்கங்களும் தலை”

ஜென் சிறு கதை : நம்பிக்கை தான் வெற்றியைத் தருகிறது.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கல்யாணம் பண்ணிப்பார்...

உச்சந்தலையைச்
சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம்
புரியும்..
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன்
அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட
அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங்
மெசின், கிரைண்டர்,மிக்ச
ி கண்டுபிடித்தவன்
தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும்
பீதி கொள்ளும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்.. .
காத்திருந்தால். ...'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்....
'வந்திட்டியா செல்லம்
போலாமா' என்பாய்....
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்காது - ஆனால்
வீடே உன்
கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில்
மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று உருளக்காண்பாய்.
..
இந்த மானம், இந்த வெக்கம் , இந்த
சூடு, இந்த சொரணை, எல்லாம்
கட்டிய
நாளோடு கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்...
கல்யாணம் பண்ணிப்பார்...
இருதயம்
அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல்
ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும்
கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதிக்
கொதித்து எரிமலையாய்
வெடிக்கக்
காத்திருக்கும்... -
ஆனால் உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு.... "என்ன அங்க
சத்தம்..." என்கிற ஒத்த சவுண்டில்
சப்த
நாடியும் அடங்கிவிடும்...
கல்யாணம்
பண்ணிப்பார்...
சப்பை பிகர் கூட செட்டாக
விட்டாலும் , சாதி சனம் கூட
சட்டை செய்யா விட்டாலும்..
உறவுகள் கூட
உதவாக்கரை என்றாலும்....
செட்டான
ஒரு பிகரும் முதல் நாள்
நைட்டு லெட்டர்
எழுதிவைத்து ஓடிப்போனாலும்..
.
நீ நம்பிய
அவனோ அவளோ உன்னை நட்டாத்துல
விட்டுவிட்டு போனாலும
விழித்து பார்க்கையில் சரக்கடித்த
போதையில் தெருவில்
கிடந்தாலும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
மகாரௌரவம்,
கும்பிபாகம், காலசூத்திரம்,
அசிபத்ரவனம்,
அந்த கூபம், கிருமி போஜனம்
இதில்
ஏதேனும்
ஒன்று இங்கேயே நிச்சயம்
கல்யாணம் பண்ணிப்பார்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இயற்க்கை எங்கே
தென்னை ஓலை விசிறி எங்கே ?
பனையோலை விசிறி எங்கே ?
பல்லாங்குழி எங்கே ?
கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே ?
தெல்லு விளையாட்டு எங்கே ?
கோபி பிஸ் விளையாட்டு எங்கே ?
சாக்கு பந்தயம் எங்கே ?
கில்லி எங்கே ?
கும்மி எங்கே ?
கோலாட்டம் எங்கே ?
திருடன் போலீஸ் எங்கே ?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே ?
மரப்பாச்சி கல்யாணம் எங்கே ?
ஊனாங்கொடி ரெயில் எங்கே ?
கம்பர்கட் மிட்டாய் எங்கே ?
குச்சி மிட்டாய் எங்கே ?
குருவி ரொட்டி எங்கே ?
இஞ்சி மரப்பா எங்கே ?
கோலி குண்டு எங்கே ?
கோலி சோடா எங்கே ?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே ?
கரிப்பழம் எங்கே ?
கள்ளிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
எலந்தை பழம் எங்கே ?
சீம்பால் எங்கே ?
ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால்
எங்கே?
பனம் பழம் எங்கே ?
சூரிப்பழம் எங்கே ?
இளுவான் எங்கே ?
பழைய சோறு எங்கே ?
நுங்கு வண்டி எங்கே ?
பூவரசன் பீப்பி எங்கே ?
கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே ?
நடைபழக்கிய நடை வண்டி எங்கே ?
அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே ?
பண்பு எங்கே ?
பாசம் எங்கே ?
நேசம் எங்கே ?
மரியாதை எங்கே ?
மருதாணி எங்கே ?
சாஸ்திரம் எங்கே ?
சம்பரதாயம் எங்கே ?
விரதங்கள் எங்கே ?
மாட்டு வண்டி எங்கே ?
கூட்டு வண்டி எங்கே ?
ஆழ உழுத எருதுகள் எங்கே ?
செக்கிழுத்த காளைகள் எங்கே ?
எருமைமாடு எங்கே ?
பொதி சுமந்த கழுதைகள் எங்கே ?
பொன் வண்டு எங்கே ?
சிட்டுக்குருவி எங்கே ?
குயில் பாட்டுபாடும் குயில் எங்க?
குரங்கு பெடல் எங்கே ?
அரிக்கேன் விளக்கு எங்கே?
விவசாயம் எங்கே ?
விளை நிலம் எங்கே ?
ஏர்கலப்பை எங்கே ?
மண் வெட்டி எங்கே ?
மண்புழு எங்கே ?
வெட்டுமண் சுமந்த பின்னல்
கூடை எங்கே ?
பனை ஓலை குடிசை எங்கே ?
தூக்கனாகுருவி கூடு எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள்
எங்கே ?
அந்த குளங்களும் எங்கே ?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே ?
ஆட்டுக்கல் எங்கே ?
அம்மிக்கல் எங்கே ?
மோர் சிலுப்பி எங்கே ?
கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே ?
வெத்திலை பாக்கு பரிசங்கள்
எங்கே ?
தோழிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டும்
எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும்
எங்கே ?
தாய்பாலை தரமாய் கொடுத்த
தாய்மையும் எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள்
எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பையும்
எங்கே ?
தாவணி அணிந்த இளசுகள் எங்கே ?
சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ?
நஞ்சில்லாத காய்கறி எங்கே ?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே ?
எல்லாமையும் விட முன்னோர்கள்
வாழ்ந்த
முழு ஆயுள் நமக்கு எங்கே ?
இதற்க்கு பாமரனாலும்,
மெத்தபடித்தவனாலும்,
விஞ்ஞானியாலும்,
ஏன் கணினியாலும் கூட பதில்
சொல்ல முடியாது.
ஏனென்றால் இருக்கும்
நிம்மதியை இழந்து பணம்
எனும்
காகித்தை தேடி ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
அதுசரி
அடுத்த
தலைமுறையை பற்றி சிந்திக்க
நமக்கு எங்கே நேரம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயங்கள் நிறைய இருக்கே நான் இன்றுதான் மீண்டும் வந்தேன். தொடருங்கள் யோகு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயங்கள் நிறைய இருக்கே நான் இன்றுதான் மீண்டும் வந்தேன். தொடருங்கள் யோகு :D

 

யோகு என்றால் யார்??? இணையததளம் மாறி வந்து வீட்டீர்கள் என நினைக்கின்றேன்!!!!!  :lol:  :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நாகப்பாம்பும் வஞ்சனையும்...

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர். (மூதுரை-25)

நாகப்பாம்பு தன்னிடம் நஞ்சு இருப்பதை அறிந்து புற்றில் ஒளிந்து வாழும்.நஞ்சு இல்லாத நீர்ப் பாம்போ அஞ்சாமல் எங்கும் திரியும்.

வஞ்சனை மிக்க உள்ளத்தினர் மறைத்துப் பேசுவர்.வஞ்சனையில்லா நெஞ்சத்தவரோ ஒளித்துப் பேசமாட்டார்.நீர்ப்பாம்புக்கு விஷமில்லாத தால்அது எங்கும் பயமின்றித் திரியும்.விஷமுள்ள நாகப்பாம்பு புற்றில் வசிக்கும். அதேபோல,உள்ளத்திலே கள்ளம் இல்லாதவர் வெளிப்படையாகப் பேசுவார். வஞ்சகர் ஒளித்துப் பேசுவார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்களைப் பதிவிடுகின்றீர்கள் .... தொடருங்கள் !  :)

Link to comment
Share on other sites

தெள்ளிய ஆலின் சிறு பழத்தோர் விதை

செம்மீன் சினையினும் நுண்ணிதே ஆயினும்

அண்ணல் யானை ஆட்பெரும்படையுடன்

மன்னருக்கிருக்க நிழலாகும்மே!!

தேம்படு பனையின் திரள் பழுத்தோர் விதை

வானுற ஓங்கி வளமுற வளரினும்

ஒருவருக்கிருக்க நிழலாகும்மா?

- வெற்றி வேற்கை

 

ஆலம் பழத்தின் விதை உருவத்தில் மீனின் சினை முட்டையை விட மிகமிக சிறியதாக இருந்தாலும்கூட அந்தவிதை மண்ணில் ஊன்றி பின்னர் வளமுற வளர்ந்துவிடின் மன்னரது காலாட்படை, குதிரைப் படை,யானைப்படை,போன்ற எண்ணற்ற நபர்களுக்கு நிழல் தந்து இளைப்பாற இடம் தரும் அளவிற்கு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து உதவிசெய்கிறது.

அதே நேரம் பனைமரத்தின் விதை உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட பனைமரமாக வளர்ந்துவிடும்போது அதன் நிழலில் ஒருவர்கூட இளைப்பாற முடியாத நிலைதான் ஏற்படுகிறது.

 

Link to comment
Share on other sites

இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகள்........

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

 

Link to comment
Share on other sites

நவீன தொழில்நுட்ப காதல்..!

பெண் அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே.. எப்படி?

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள் ஆனோம் ...

WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங் கூட போய் இருக்கோம் ......

WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்... நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல, அப்புறம் VIBER மூலமா கணவன் மனைவியா வாழறோம் ...

அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...

ONLINEல ஜாலியா இருங்க...

E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...

G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...

எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ, அப்போ குழந்தைகளை OLX மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : ???????????

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

கன்னியாகுமரி கடற்கரையில் நின்று கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு துறவி....

கரையில் இருந்து சற்று தொலைவில் கடலுக்குள் ஒரு பாறை இருந்தது. அலைகள் மோதும் அந்த பாறையில் அமர்ந்து தியானம் செய்ய அந்த துறவியின் மனம் துள்ளியது...

அருகிலிருந்த மீனவர்களிடம் படகில் கொண்டுவந்து அந்த பாறையில் விடுமாறு உதவி கேட்டார் அந்த துறவி...

மீனவர்கள் ஒரு ரூபாய் கொடுங்கள் அங்கு கொண்டுவந்து விடுகிறோம் என்றனர்.

துறவியிடம் ஒரு ரூபாய் கூட இல்லை...
உடனே கடலில் குதித்து நீந்திச் சென்று அந்த பாறையை அடைந்து தியானத்தில் மூழ்கினார்...

அந்த துறவி வேறு யாருமல்ல...
39 வயதே வாழ்ந்திருந்தாலும் இவ்வையகம் உள்ளவரை தன்னை இவ்வுலகம் மறக்கமுடியாதபடி தன் பெயரை சரித்திரத்தின் அழியாத கல்வெட்டுகளில் பொன் எழுத்துக்களால் பொறித்துவிட்டுச் சென்ற மகா யோகி விவேகானந்தர் தான்....
முதன்முதலில் இந்தியாவின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உலக அரங்கிற்கு எடுத்துச்சென்று பெருமை அவரையே சேரும்.

# அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்ப்பது தவறு அல்ல...
ஆனால் அந்த உதவி கிடைக்காத போதும் தான் நினைத்ததை சாதிப்பவர்கள் தான் வரலாறாய் வாழ முடியும்.

 

Link to comment
Share on other sites

கம்பரும் சோழ மன்னனும்...

சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் மனவேறுபாடு இருந்தது என்பதைப் பல்வேறு கதைகள் சுட்டுகின்றன. எடுத்துக்காட்டாக,

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 

உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை 

விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ 

குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு

மேலே சுட்டி உள்ள பாடல் சோழ மன்னனை வெறுத்துக் கம்பர் அந்த நாட்டை விட்டு நீங்கும்போது பாடியதாகத் தெரிகிறது. சோழ மன்னனுக்கும் கம்பருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. உடனே கம்பர், “மன்னவன் நீ ஒருவன் தானா? நீ ஆதரிப்பாய் என்று எண்ணியா நான் தமிழைக் கற்றேன்? என்னை ஆதரிக்காத மன்னர் உலகில் உண்டோ? குரங்கை ஏற்றுக்கொள்ளாத கிளையைப் பார்த்தது உண்டா? அதுபோல என்னை ஆதரிக்காதவர்களைப் பார்த்தது உண்டா?” என்று கூறி நீங்கினார்.

 

Link to comment
Share on other sites

யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

Link to comment
Share on other sites

படித்ததில் பிடித்தது: பிறந்த நாளை விவரிக்கவும் என மேதகு.அப்துல்கலாம் அவர்களிடம் BBC யில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம்...
நம் வாழ்கையில் அன்று ஒரு நாள் தான், நாம் அழும் பொது நம் அன்னை சிரித்தாள்...

Link to comment
Share on other sites

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப்பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த் தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது. 

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: 

“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழு ந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.” நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான் கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான் இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார் ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என நினைத்து தனது சொந்த பணத்திலிருந்து 30 டாலர் பணத்தை மட்டும் அந்த சிறுவனின் முகவரிக்கு அனுப்பினார் அதில் அனுப்புநர் முகவரியாக ஒபாமா வெள்ளை மாளிகை அமெரிக்கா ன்னு எழுதி அனுப்பினார் இரண்டு நாட்களில் அதே சிறுவனிடமிருந்து கடவுள் முகவரிக்கு பதில் கடிதம் வந்தது எனது கஷ்டத்திக்கு பணம் குடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி ஆனால் இனிமேல் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக எனது முகவரிக்கு அனுப்பவும் ஏன் என்றால் நீங்கள் ஒபாமா மூலமாக அனுப்பினால் அவர் பாதி பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறார் அதனால் தான் சொல்கிறேன் என்று எழுதியிருந்தது.....

என்னம்மா ஒபாமா .... இப்படி பண்றீங்களேமா ???

 

Link to comment
Share on other sites

படித்ததில் பிடித்தது: பிறந்த நாளை விவரிக்கவும் என மேதகு.அப்துல்கலாம் அவர்களிடம் BBC யில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம்...

நம் வாழ்கையில் அன்று ஒரு நாள் தான், நாம் அழும் பொது நம் அன்னை சிரித்தாள்...

 

அருமை!

Link to comment
Share on other sites

இந்த ஐந்தையும் முடிஞ்சா டிரை பண்ணுங்க

1.உங்களுக்கு உண்மையா இருங்கள்

2.எந்த ஏக்கத்தையும் மிச்சம் வைக்காதீங்க

3.அன்பின் வடிவமெடுங்கள்

4.இந்த நொடி இந்த நிமிடம் வாழுங்கள்

5.பெறுவதை காட்டிலும் அதிகமா கொடுங்கள்

Link to comment
Share on other sites

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து...

“பந்திக்கு முந்து படைக்குப் பிந்து“ என்பது பழமொழியா? விடுகதையா? என்று முடிவு செய்ய முடியவில்லை. ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என்று போர்க்களத்திற்கு அனுப்பிய தாயைப் புறநானூறு பாடுகிறது. இந்த மண்ணில் "பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்பது பழமொழியாக வந்திருக்க முடியுமா? இது "பழமொழி இல்லை விடுகதை' என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். வலது கை, சாப்பாடு என்றால் முன்னே வரும்; சண்டை என்றால் அம்பை நாணில் வைத்து வில்லை வளைத்து இழுத்துவிட பின்பக்கமாகப் போகும் என்று விடுகதைக்குப் பதில் சொல்கிறார்கள்.

சாப்பாடு, சண்டை கிடக்கட்டும். அன்றாட வாழ்க்கையில் முந்துகிறவர்களைக் கவனித்துப் பாருங்கள். சாலைகளில் முந்துகிறார்கள்; வரிசையில் முந்துகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறுவதாய் நினைத்து வரிசையிலும் சாலைகளிலும் முந்துகிறார்கள்.

முந்துவது வேறு; முன்னேறுவது வேறு. பல நாடுகளில் சாலைகளில் வாகனங்களில் செல்வோர் முன்னே செல்லும் வாகனத்தைக் குறிப்பிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் மீறி மேற்செல்லக்கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

எதிரே வருகிறவர்கள் நம்மைக் கடந்து நமக்குப் பின்னே செல்கிறார்கள்; நம் பின்னே வருகிறவர்கள் நம்மைத் தாண்டி நமக்கு முன்னே போகிறார்கள். நம்மைத் தாண்டி நமக்கு முன்னே போகிறவர்கள் நம்மைத் தாண்டிக் குதித்துச் செல்வதில்லை. நாம் போகிற திசையிலேயே நம்மை விட விரைவாகப் போகிறார்கள். நமது வழிக்குப் பக்கத்தில் நுழைந்து நமது வழியில் குறுக்கீடு செய்தும் போகிறார்கள்.

தனிமனிதர் என்று மட்டுமில்லை, நாடுகளும் அப்படித்தான் இன்னொரு நாட்டை ஓவர்டேக் செய்கின்றன.

- இரசித்தது..முந்துவது வேறு; முன்னேறுவது வேறு..

 

Link to comment
Share on other sites

அம்மா  மடியில் உறங்கும் குழந்தைக்கு  மட்டுமே ஆயிரம்  அடுக்கு  பாதுகாப்பு .

 

 

Link to comment
Share on other sites

ஒரு தம்பதி நல்ல ஜாலியான மூடுல பேசிக்கிறாங்க

மனைவி : நீங்க என்ன செய்வீங்க நான் இறந்துட்டா? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?

கணவன்: சே சே மாட்டேன்

மனைவி: ஏன், மாட்டேன்! கல்யாண வாழ்கையை விரும்பமாட்டீங்களா?

கணவன்: ம்ம்ம்... விரும்புவேன்

மனைவி: பின்ன ஏன், இன்னும் ஒரு கல்யாணம் செய்ய கூடாது?

கணவன்: சரி சரி, செஞ்சுகிறேன்.

மனைவி: செஞ்சுப்பீங்களா? (கோவப்பார்வை)

மனைவி: நீங்க நம்ம வீட்டுல தங்குவீங்களா?

கணவன்: கண்டிப்பா, இது ரெம்ப நல்ல வீடு இல்லயா...!

மனைவி: ம்ம்ம்... நீங்க அவளோட இந்த பெட்ரூம்மை யூஸ் பன்னுவீங்களா?

கணவன்: அப்ப, நாங்க போய் எங்கே தூங்குறது?

மனைவி: என்னோட படத்தை எடுத்துட்டு அவ படத்தை மாட்டி விடுவீங்களா?

கணவன்: அது செஞ்சுதானே ஆகனும்

மனைவி: என்னோட நகைகள் எல்லாம் அவகிட்ட கொடுப்பீங்களா?

கணவன்: சே சே, அவளோடதுதான் விரும்புவா.

மனைவி: ஓ, என்னோட காரை அவள ஓட்ட அலவ் பன்னூவீங்களா?

கணவன்: ஆமா ஆமா, அது புதுசுதானே...

மனைவி: எனக்கு டிரைவிங் கத்துகொடுத்தது போல, அவளுக்கும் கத்து கொடுப்பீங்களா?

கணவன்: இல்ல இல்ல, அவளுக்கு கார் ஓட்ட தெரியும்.

மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்...என்ன்னாதூஊஊஉ

கணவன்: அய்யய்யோ தெறியாம வாய விட்டுட்டனோ?

அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூசிக்... அடிதான்!

 

Link to comment
Share on other sites

ஒரு நாள் ISIS தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறைத்தனர்.

ISIS தீவிரவாதி - நீ எந்த மதம்?

அந்த மனிதர் - நாங்கள் முஸ்லிம் (அவர்கள் உண்மையில் கிருஸ்டின்)

ISIS தீவிரவாதி - அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்களாம்.

(காரில் இருந்தவரின் மனைவி நடுங்கிவிட்டாள்)

ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி பைபிளில் இருந்து சில வரிகளை கூறினார்.

ISIS தீவிரவாதி - சரியாக கூறினாய் நீ செல்லலாம்.

கார் சிறிது தூரம் நகர்ந்ததும் அவரின் மனைவி "எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள்,

ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"

அவர் - அவர்களுக்கு குரான் தெரியாது.

மனைவி - அது எப்படி உங்களுக்கு தெரியும்.

அவர் சிரித்துக்கொண்டே "அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்"

எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.

தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.