Jump to content

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்


Recommended Posts

எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் .

 

கேட்ட பகிடி .!

ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் .

 

அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் .

 

அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று கையை காட்ட நம்மளுக்கு யோசனை நண்பன் தப்ப போறான் எப்படி மாட்டி விடுறது மொழி வேற தெரியாது  எதோ தெரிஞ்ச மொழியில சொல்லுவம் என்று உடலை பல கோணத்தில் அசைத்து சொன்னார் பாருங்கோ ஆளு .

 

குப்பன் குப்பற சிலிப்பிக் .(பிரஞ்சு ...தமிழ் ..ஆங்கிலம்)

 

தமிழன் :icon_idea:

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 199
  • Created
  • Last Reply

சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர் தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...

1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்.

2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்....

3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்..

இப்படி 3 வேண்டுகோள்களையும் விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான்.

1) எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

2) இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும்அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் கூட வராது.

3) மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும் செத்த பின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும்....

படித்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் .

 

கேட்ட பகிடி .!

ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் .

 

அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் .

 

அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று கையை காட்ட நம்மளுக்கு யோசனை நண்பன் தப்ப போறான் எப்படி மாட்டி விடுறது மொழி வேற தெரியாது  எதோ தெரிஞ்ச மொழியில சொல்லுவம் என்று உடலை பல கோணத்தில் அசைத்து சொன்னார் பாருங்கோ ஆளு .

 

குப்பன் குப்பற சிலிப்பிக் .(பிரஞ்சு ...தமிழ் ..ஆங்கிலம்)

 

தமிழன் :icon_idea:

 

நானும் இன்னும் இரண்டு புண்ணியவான்களும் டென்மார்க் போடர் பாயேக்கை உதேமாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது.......உள்ளதை சொல்ல வெளிக்கிட்டால் இண்டுமுழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம்........எண்டாலும் விடாமுயற்சியாய் லண்டனுக்கு வேலிபாய்ஞ்சு போய் இரண்டு பெற்றோல் செற்றுக்கு  மூனாவாய் இருக்கிற புண்ணியவானை என்ரை வாழ்க்கையிலை மறக்கேலாது...மற்றவன் கனடாவிலை.......தான் இஞ்சினியர் எண்டுறான்.....உள்ள பொய்பிரட்டுக்கள் இனி ஆருக்குத்தெரியும்..... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இன்னும் இரண்டு புண்ணியவான்களும் டென்மார்க் போடர் பாயேக்கை உதேமாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது.......உள்ளதை சொல்ல வெளிக்கிட்டால் இண்டுமுழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம்........எண்டாலும் விடாமுயற்சியாய் லண்டனுக்கு வேலிபாய்ஞ்சு போய் இரண்டு பெற்றோல் செற்றுக்கு மூனாவாய் இருக்கிற புண்ணியவானை என்ரை வாழ்க்கையிலை மறக்கேலாது...மற்றவன் கனடாவிலை.......தான் இஞ்சினியர் எண்டுறான்.....உள்ள பொய்பிரட்டுக்கள் இனி ஆருக்குத்தெரியும்..... :(

அண்ணை கவலைப்படாதீங்க நீங்களும் இப்ப டாக்குத்தர் தானே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கவலைப்படாதீங்க நீங்களும் இப்ப டாக்குத்தர் தானே

 

இந்த வைய்யாபுரியள் எங்கை இருந்தடாப்பா டக்கெண்டு வாறாங்கள்????

Link to comment
Share on other sites

இந்த வைய்யாபுரியள் எங்கை இருந்தடாப்பா டக்கெண்டு வாறாங்கள்????

 

இதே வேலையா அலைவாங்க போல அண்ணே :D

 

Link to comment
Share on other sites

உலகத்தில உள்ளவன் மூளை எல்லாம் விற்ப்பனைக்கு வந்தது ஒரு பொதுவான சந்தையில் பெரிய வல்லரசுகள் என்று சொல்லும் நாடுகள் எல்லாம் நல்ல மூளை வாங்க போட்டி போட்டு கொண்டு வந்து பார்த்தவர்களுக்கு ஒரு இனத்தின் மூளை மட்டும் அப்படியே நல்ல பள பளவென இருந்தது ஆச்சரியப்பட்டு போட்டி போட்டு வாங்கும் நிலைக்கு வந்து கடைசியா ஏலம் விடும் அளவுக்கு போயிட்டு அதை பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம் என்னடா இது இவர்களின் மூளைக்கு இவ்வளவு கிராக்கி என்று என்னதான் அப்படி விஷேசம் இருக்கு என்று அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தனர் அமெரிக்கன் சொன்னான் ஒரு வார்த்தையில் 'எதை பற்றியும் சிந்திக்காத மூளை ' அதுதான் இவ்வளவு அழகா மொழுகா இருக்கு மற்றவன் கண்டுபிடித்தா அதுக்கு அழகா தமிழில் பெயர் மட்டும் வைப்பம் நாங்களா எதுவும் செய்ய மாட்டம் அப்படி ஒருவன் முயற்சி செய்தா அவனை நக்கல் ..கிண்டல் ..கேலிபண்ணி இல்லாமல் ஆக்குவம் அதுதான் தமிழரின் மூளை அப்படியே இருக்கு வாடாமல் .

 

ஆதங்கப்பட்டு நண்பன் சொன்ன கதை ..!

Link to comment
Share on other sites

காதல் .!

 

Link to comment
Share on other sites

ஐரோப்பா .

நேற்று ஒரு உரையாடல் இருவருக்கு இடையில் .
உங்க மகளின் போக்கு சரியில்லை
உங்க மகன் வேற சீக்கிரட் எல்லாம் பிடிக்கிறான் ...
உங்க வீட்டுக்காரர் குடிச்சுட்டு ரோட்டில் நிண்டாரு..
உங்க சின்ன பொடியன் எப்பபாரு பந்தோட திரியுது ..

இவ்வளவத்தையும் கேட்டுட்டு அந்தம்மா சொல்லிச்சு ஒரு பதில் ஐரோப்பில இது எல்லாம் 'நோமல் '

இந்த 'நோமலை 'கண்டுபிடிச்சவன் மட்டும் எங்க கையில கிடைச்சான் சங்குதான் .

Link to comment
Share on other sites

கலியாணத்துக்கு முன் :அண்ணன் .தம்பி ..மாமன் ..மச்சான் என்று உறவா இருக்குறாங்க .

கலியாணத்துக்கு பின் :மனுஷியின் அண்ணன் ..தம்பி ..மாமன் ..மச்சான் ..சகலன் என்று மாறி போயிடுறாங்க.

நம்ம உறவுகளையே புரிஞ்சிக்க முடில . :(
:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணத்துக்கு முன் :அண்ணன் .தம்பி ..மாமன் ..மச்சான் என்று உறவா இருக்குறாங்க .

கலியாணத்துக்கு பின் :மனுஷியின் அண்ணன் ..தம்பி ..மாமன் ..மச்சான் ..சகலன் என்று மாறி போயிடுறாங்க.

நம்ம உறவுகளையே புரிஞ்சிக்க முடில . :( :(

 

நீங்களுமா ?????????

 

Link to comment
Share on other sites

நீங்களுமா ?????????

 

 

ஏன் அக்கா ஏன் :D :D

Link to comment
Share on other sites

 படித்தது .

பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?...

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள்
ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங்
கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்...
நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல,
அப்புறும் VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER
மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...
G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : !!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2025  இப்படித்தான் இருக்கும்!!  :lol:

Link to comment
Share on other sites

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு..!

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.
...
* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு..!

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

...

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா..!

 

அரபுவசந்தம் எண்டு சொல்லி இப்ப எல்லாத்தையும் சாம்பாராக்கிப்போட்டு இருக்கிறாங்கள்.

Link to comment
Share on other sites

அரபுவசந்தம் எண்டு சொல்லி இப்ப எல்லாத்தையும் சாம்பாராக்கிப்போட்டு இருக்கிறாங்கள்.

 

உண்மை அண்ணே சேர்த்து காட்டி கொடுத்தவை இப்ப அழுகினாம் சோற்றுக்கு இல்லாமல் உப்பு இல்லாட்டிதான் தெரியும் அதன் அருமை .

Link to comment
Share on other sites

மிருகங்கள் பாடல் படித்தது .

 

ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

 
குயில் : பாட்டும் நானே.. ... பாவமும்... ... நானே... .
 
கங்காரு : தாயில்லாமல் நானில்லை....தானே எவரும் பிறந்ததில்லை...
 
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா.....
 
நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .
 
கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.... ...
 
மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...
 
முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா... ...
 
புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....
 
மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு... .....
 
யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா.. . குண்டு கத்திரிக்கா.... ..
 
காகம் : கா....கா ...கா. ...
 
காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...
 
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..
 
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்கமாட்ட... ...... .
 
மான் : புலி உருமுது உருமுது...... .....
 
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு : "வரான் பாரு வேட்டைகாரன்.
Link to comment
Share on other sites

அஞ்சரன் குறள் 1

 

எவ் புக்கில் இருந்தாறக்கும் ஊய்வுண்டாம் ஊய்வில்லை
பேஸ்புக்கில் இருந்த மற்கு.!

Link to comment
Share on other sites

காதலிக்கும் போது :ஹாய் ,ஸுவிட் எப்டி சுகம்

கலியாணத்துக்கு பின் :ஹல்லோ எங்க வாய் பார்த்து கொண்டு நிக்கிறிங்க போன் அடிப்பது தெரியாமல் .

வரும்போது பிள்ளைக்கு பாலும் ..
நாளைக்கு சமையலுக்கு கறியும் ..
வெங்காயம் பார்த்து எடுங்க ..
மல்லி ,சீரகம் ,கடுகு ,மிளகு ..
மறக்காமல் லெமன் பைப் பிஸ்கட் ..
ஓகே வேளைக்கு வாங்கோ என்ன ...

 

இம்புட்டுதான் வாழ்க்கை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் போது :ஹாய் ,ஸுவிட் எப்டி சுகம்

கலியாணத்துக்கு பின் :ஹல்லோ எங்க வாய் பார்த்து கொண்டு நிக்கிறிங்க போன் அடிப்பது தெரியாமல் .

வரும்போது பிள்ளைக்கு பாலும் ..

நாளைக்கு சமையலுக்கு கறியும் ..

வெங்காயம் பார்த்து எடுங்க ..

மல்லி ,சீரகம் ,கடுகு ,மிளகு ..

மறக்காமல் லெமன் பைப் பிஸ்கட் ..

ஓகே வேளைக்கு வாங்கோ என்ன ...

 

இம்புட்டுதான் வாழ்க்கை .

அதிலயும் ஒன்று ரெண்டை மறந்திட்டுப்போய் அல்லது மாறி வாங்கிட்டுப்போய் முழிக்கிற முழி இருக்கே  சொல்லிவேலையில்லை  :o  :(

Link to comment
Share on other sites

படித்ததில் பிடித்து .!

 

ஹலோ சூரியன் எஃப்.எம்

 

ஒழுங்கா சொல்லுங்க.ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

 

சூரியன் எஃப்.எம் தாங்க.

 

அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

 

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

 

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

 

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

 

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

 

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

 

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

 

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

 

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

 

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

 

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

 

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

 

புறாக் கூடு போல முப்பது ரூமு..

 

ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

 

நான் தாங்க பாடினேன்.ஏன். நல்லாயில்லையா?

 

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

 

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

 

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

 

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

 

அப்படியில்ல சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

 

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

 

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

 

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

 

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

 

நான் ரெடி.

 

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

 

மந்திரா

 

மந்திரா பேடியா?

 

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க.பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது

 

சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல யார புடிக்கும்?

 

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

 

சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

 

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

 

ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?

 

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

 

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

 

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

 

யாரு சார் அது பக்கத்துல?

 

ஆறு.

 

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

 

அதான் ஆறு.

 

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

 

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.

 

அடுத்த ரவுண்ட் ஜி.கே

 

B.K தெரியும். அது என்ன G.K.?

 

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

 

அப்படி ஒரு சரக்கா?

 

டொக்.

 

ஏழுவின் நிலையை லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்

Link to comment
Share on other sites

படித்தது .

 

எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க…

 

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்த படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

 

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்..

 

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

 

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

 

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

 

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

 

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

 

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

 

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

 

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

 

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

 

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

 

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

 

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

 

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

தூத்துக்குடி பக்கம். நீங்க?…………”

Link to comment
Share on other sites

படித்தது .

 

ரொம்ப நல்லவனாக இருக்க. நினைக்காதே...

உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்...

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே...

அடிமையாக்கி விடுவார்கள்..

அதிகப் பொறுமையுடன் நடக்காதே..
...
பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்...

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே....

பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்...

எல்லோரையும் நம்பி விடாதே..
ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்...

கோபப்படாமலேயே இருந்து விடாதே...
கோமாளியாக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜஸ்டின் மொட் என்பவரால் தாய்லாந்தின் தலாங் மாகாணத்தில் பிடிக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பல விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

1524964_10153697198555019_1322404815_n.j

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.