Jump to content

நெரிசலில் ஓர் மோகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெரிசலில் ஓர் மோகம்

மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து மணி தாண்டிவிட்டதால் எல்லா ரயில், பஸ் நிலையங்களும் எள்ளுப் போட்டால்கூட கீழே விழமுடியாதபடி வேலைமுடிந்து வரும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துவிடும் என்பது நினைவுக்குவர அசதியுடன் எரிச்சலும் சேர்ந்துகொண்டது.

படிக்கும் காலங்களில் இப்படியான நெரிசல் மிக்க காலைகளிலும் மாலைகளிலும் இலண்டனின் புறநகர் பகுதியில் இருந்து மத்திய இலண்டன் பகுதிக்கு பல வருடங்கள் பயணித்து அனுபவம் இருந்ததால் நான் மத்திய இலண்டன் பகுதிக்கு நெரிசல் நேரங்களில் வருவதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதற்காகவே படித்து முடித்து தொழில்வாய்ப்புக்களைத் தேடும்போது கூட கவனமாக மத்திய இலண்டன் பகுதி வேலைகளைப் புறக்கணித்திருந்தேன். ஆனாலும் இன்று தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாய சூழல் இருந்ததால் தவிர்க்கமுடியவில்லை.

புறநகரப் பகுதிகளில் இருந்து ரியூப் பயணத்தை ஆரம்பித்தாலும் நெரிசல் மிக்க காலை மாலை வேளைகளில் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டே இருப்பதால், ஒரு போதும் ஆசனங்களில் இருந்து பயணங்களை மேற்கொள்ள முடிந்ததில்லை. நெரிசல்கள் நிறைந்த பிரயாணங்களில் இருந்து தப்பிக்கவேண்டும் என்பதாலும், எஸ்கலேற்றர்களின் வலது பக்கத்தில் நின்று பயணிப்பதை வயது போனவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்று மனம் கணித்து வைத்திருந்ததாலும், பரபரப்பான இலண்டன் வாழ்வில் இயைபாக்கம் அடைந்துள்ளதாக என்னையே நான் நம்பச் செய்யவேண்டியிருந்ததாலும், வேகமாக ரஜினிகாந்த் போன்று படிகளைப் பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டு தடதடவென ஓடுவது காலைவேளை உடற்பயிற்சியின் ஒரு கூறு என்று நினைத்திருந்ததாலும் குறுகலான நகரும் படிகளில் பாரமான தோள் பையுடன் ஓடுவது எனக்கு வழமையான ஒரு பொழுதுபோக்கு.

சில நிமிடங்களுக்கு ஒன்றென இலண்டனின் சகல திசைகளிலிருந்தும் குறுக்கும் நெடுக்குமாக பல சுரங்கத் தடங்களில் ரியூப் ரயில்கள் அகிளான்கள்போல் நிலத்திற்குக் கீழ் பெருந்தொகையான மக்களைச் சுமந்து ஓடிக்கொண்டிருந்தாலும், சிலவேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ரியூப்பில் ஏற முடியாமல் போகும் என்பதால், அவற்றின் வருகைக்காக பிளாற்ஃபோமில் கதவுகள் திறக்கப்படும்போது முதலாவதாக ஏறிக் கொள்ளவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக நிற்கவேண்டிய இடத்தை தெரிவு செய்து, கதவு திறக்க்கப்பட்டதும் உள்ளிருந்து இறங்கும் பயணிகளுக்கு ஒன்றிரண்டு செக்கன்கள் வழிவிட்டு, இறுதியாக இறங்கும் பயணியும் நானும் ஏறும் தருணத்தை ஒன்றாக ஒழுங்குபடுத்திக் கொள்வதும் ஒரு சுவாரசியமான விடயம்.

என்னதான் முண்டியடித்து ரியூப்பின் உள்ளே நுழைந்தாலும், சக பயணிகளுடன் முட்டுப்படாமல் நிற்பதற்குக் கூட இடம் இருக்காது. அப்படியிருந்தும் ஒருவருக்கு ஒருவர் நூலிழை இடைவெளியில் பயணிப்பது மிகவும் சவாலானதுதான். சுரங்கத்தினூடான பயணம் என்பதால் வெளியே வேடிக்கை பார்க்க எதுவுமில்லை என்பதாலும், பிறருடன் பேசாமல், பார்க்காமல் பயணிக்கவேண்டிய நியதியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதாலும், இந்த நெரிசலுக்குள்ளும் கிடைக்கும் சிறு வெளிகளுக்குள்ளும் பத்திரிகைகளை அல்லது புத்தகங்களைப் படிப்பது பலருடைய வழக்கம். இப்போதெல்லாம் ஸ்மார்ட்ஃபோனிலும், ஈ-ரீடர்களிலும் எதையாவது படிப்பது/பார்ப்பது அல்லது அங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவழிப்பதுதான் அதிகம். ஆயினும் நின்றுகொண்டே பயணிக்கும்போது படிப்பது அல்லது கட்ஜற்றை நோண்டுவது எனக்குப் பழக்கமில்லையாதலால், உலகத்தின் பெருநகர்களில் ஒன்றாக விளங்கும் இலண்டனில் பல்வேறு வகை மனிதர்கள், விதவிதமான கலாச்சார, நடையுடை பாவனைகளில் பயணிப்பதை வேடிக்கை பார்ப்பதில் எனது பயண நேரத்தைச் செலவழிப்பேன்.

நெரிசல் மிகுந்த வேளைகளில் மிக இள வயதினர்களைவிட வேலைக்குச் செல்லும் வயதினரே அதிகம் பயணிப்பார்கள். ரியூப் ரெயினில் திரளாக பயணிகள் நிறைந்திருந்தாலும், தமது குடும்பத்தின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, கவலை ரேகைகள் தெரிய முகத்தை மலச்சிக்கல் உள்ளவர்கள் கடுமையாக வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்லுபவர்களில் அநேகர் zombie (நடைபிணங்கள்) களாகத் தோற்றம் அளிப்பார்கள். இந்த நிலை குத்திய வெறித்த பார்வையுடனான நடைபிணங்கள் ஒரு நாட்பொழுதைப் பாழாக்கிவிடுவார்கள் என்பதால் ஏறிக்கொள்ளும் பயணிகள் பெட்டியில் கவலைகள் அற்ற மலர்ந்த முகத்துடனான இளமை பொங்கும் சக பெண் பயணி யாராவது ஒருத்தியாவது இருக்கின்றாளா என்று கண்கள் வலைவீசித் தேடும். ஒவ்வொரு நாளும் மலரும் பூவைப் பார்த்து இரசிப்பதுபோல தினம் தினம் பயணிக்கும்போது ஒரு இளம் பெண்ணின் அழகான முகத்தை, பிளவுகள் சற்றே தெரியும் திரண்ட வெளிர் மார்புகளை, குட்டைச் சட்டையின் நீக்கல்களூடு தெரியும் வாளிப்பான தொடைகளை பார்த்துக் கொண்டு பயணிப்பது நெரிசலிலும் சந்தோஷத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும். இப்படியான தருணங்களில் பட்டினத்தாரின் “நித்தம் பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்” என்ற வரிகளின் தத்துவம் பரிபூரணமாக விளங்கும். ஒரு பெண்ணை விழுங்குவது போலத் தொடர்ந்து உற்று நோக்குவது மனதில் தீய எண்ணங்கள் உள்ளவன் என்ற தோற்றப்பாட்டைப் அவளுக்கும் பிறருக்கு உண்டாக்கலாம் என்பதால் இடையிடையே கண்கள் சுழன்று நடைபிணங்களாக இருப்பவர்களையும் அவதானிக்கும். ஆனாலும் சில நொடி ஆவர்த்தன இடைவெளிகளில் மீண்டும் பெண் மீது பார்வை படரும்.

மாலை நேரத்தில் பறவைகள் கூடுகளை நோக்கி பறப்பதுபோன்று வேலையை முடித்துக் கொண்ட மக்கள் கூட்டம் லண்டன் பிரிட்ஜ் ரியூப் ஸ்ரேசனை நோக்கி சிற்றெறும்புகள் சாரி சாரியாக தமது புற்றை நோக்கிப் போவதுபோன்று படையெடுத்துக் கொண்டிருந்தனர். ரியூப் ஸ்ரேசனை அண்மித்தபோது ஊசிகளாகக் குத்தும் பனிக்காற்று வீசும் சப்தத்தையும் மீறி கட்டட இடுக்குகளில் வசிக்கும் வெளிர்சாம்பல் வர்ணப் புறாக்களின் படபடப்போடு கூடிய குறுகும் சப்தம் கேட்டது. பாதசாரிகள் மற்றும் பயணிகள் திரளினுள் ஒரு எறும்பு போன்று நானும் சுரங்க வாயிலிலிருந்து கீழிறங்கும் அகல அகலமான படிகளில் வேகமாக இறங்கி, பயணச்சீட்டை ரிக்கற் மெசினில் அழுத்தி நான் போகவேண்டிய பிளாற்ஃபோம் இலக்கத்தை தொடர்ந்து நடந்துகொண்டே கண்களால் துழாவினேன். சரியான பிளாற்ஃபோமைக் அடையாளம் கண்டு அதற்குரிய எஸ்கலேற்றர் படிகளில் நின்றபடி பயணம் செய்யாமல், தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நெரிசலில் இருந்து விடுவிக்கும் என்று எண்ணியவாறே தட தடவென கீழே நோக்கி ஓடத் தொடங்கினேன். என்னைப் போலவே அதிகமானவர்களும் ஒவ்வொரு நொடியின் பெறுமதியை உணர்ந்தவர்களாக படிகளில் ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது.

பிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது.

--தொடரும்--

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி விட்டுவிடு ஒரேயடியாப் போவிடாமல் விரைவில் மிகுதியை எழுதுங்கள் பேராண்டி.

Link to comment
Share on other sites

கதைக்குள்  உங்கள் சிந்தனைகளையும் சேர்த்துக் கோத்திருப்பது சம்பவங்களை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவியுள்ளது . இந்த வித்தை தொடர் வாசிப்பின் முதிர்ச்சியினால் வருவதாகும் . தொடருங்கள் கிருபன் ஜி :) :) .

 

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு.. :rolleyes: ஆனாலும் என்னாத்த பண்ணியிருக்கப் போறீங்க.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெரிசலில் மோகம் எண்டால் எங்கடை தட்டிவான் , சிரிபி வசுவிலைதான் கிடைக்கும். :lol:


பிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது.

 

 

ஒரு வேளை என்ரை தங்கச்சியாய் இருக்குமோ???  :o  :rolleyes:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெரிசலில் மோகம் எண்டால் எங்கடை தட்டிவான் , சிரிபி வசுவிலைதான் கிடைக்கும். :lol:

அண்ணோய், புங்குடுதீவு மொரிஸ் மைனர் கார் மாதிரி வருமோ?

 

சூடான மடியென்ன? குளிரான கடல் காத்து என்ன? அந்த மயக்குகின்ற மாலைச் சூரியனின் மஞ்சள் வெளிச்சமென்ன?

 

ம்ம்ம்......ம்ம்ம்...ம்ம்ம்.... :o

 

அதெல்லாம் ஒரு காலம்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க்கூம்.... உதெல்லாம் இ.போ.ச வின் பின் வாசலுக்குப் பின் இருக்கும்  இருக்கைக்கு ஈடாகாது. காலையிலும், மாலையிலும் பயணிப்பவர்களைக்  கேட்டால்  ஜொள்ளுவார்கள்!! :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட லண்டன் ரியூப் நெரிசல் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதினாலும் தட்டிவான் நெரிசல்தான் பலருக்கு இப்பவும் கிளுகிளுப்பாக இருக்கின்றது :icon_mrgreen: . நான் தட்டிவானைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஏறியதில்லை!
 

Link to comment
Share on other sites

தொடருங்கள் கிருபன்............   மூச்சுத் திணறுது...!!! :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

150 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட லண்டன் ரியூப் நெரிசல் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதினாலும் தட்டிவான் நெரிசல்தான் பலருக்கு இப்பவும் கிளுகிளுப்பாக இருக்கின்றது :icon_mrgreen: . நான் தட்டிவானைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஏறியதில்லை!

 

 

லண்டன் ட்யூப் 150 வருடாத்திற்கு முன் வந்திருக்கலாம்

 

ஆனால் எங்கள் பதின்ம வயதில் தட்டி வானிலும் , ரோசா வானிலும் தானே நெரிசல் பட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் கிருபன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க்கூம்.... உதெல்லாம் இ.போ.ச வின் பின் வாசலுக்குப் பின் இருக்கும்  இருக்கைக்கு ஈடாகாது. காலையிலும், மாலையிலும் பயணிப்பவர்களைக்  கேட்டால்  ஜொள்ளுவார்கள்!! :lol: :lol:

 

கிகி அப்ப நீங்களும் நானும் அந்த சீற்றுக்கு சன்டை பிடித்திருப்போம் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 2

இடுப்பினைத் தொட்டும் தொடாமலும் நிற்கும் கருஞ்சாந்து நிறமான குளிர்கால ஜக்கற், அதே நிறத்தில் கணுக்கால் வரை உயர்ந்து பாதங்கள் நோகாமல் இருக்க மென்மையான பஞ்சுகள் பதித்த பூட்ஸ், செக்கச் சிவந்த செந்நிற துணியால் வீணையின் இரு குடங்களை இறுக்கிக் கட்டியது போன்ற உருண்டு வளைந்த பின்புறத்தையும், இள வாழந்தண்டு போன்ற கால்களையும் சிக்கென இறுக்கிப் பிடித்த ஒட்டிய சிவப்பு வர்ண ஜீன்ஸ் அணிந்து அதீத இளமையுடன் அழகுப் பதுமை போன்று ஐந்தரையடி உயரமாய் நின்ற நவநாகரிக நங்கையான அவளின் பின்பக்கத்தோற்றத்தையே பார்க்கமுடிந்தது. முகத்தைப் பார்க்க முடியவில்லையாயினும் பார்வைக்குள் விழுந்த அவளது வெண்மையான கழுத்தும் கன்னக் கதுப்புக்களும் நல்ல நிறமான எடுப்பான தோற்றமுடைய பேரழகியாக இருப்பாள் என்று உள்ளுணர்வு கூறியது.

சில வினாடிகளில் சுரங்கப்பாதையில் அடைபட்டு இருந்த குளிர் காற்றை உந்தித் தள்ளியபடி பிளாற்ஃபோம் சுவர்களையே கிடுகிடுவென்று அதிரவைக்கும் இரைச்சலுடன் நிரம்பி வழியும் பயணிகளோடு ரயில் வந்து நிறுத்தப்பட்டபோது பிளாற்ஃபோமில் நின்றவர்கள் ஏறுவதற்குத் தயாராக வரிசைகட்டி முண்டியடித்துக் கொண்டு நெருங்கி நிற்க ஆரம்பித்தனர். அழகியும் என்னில் இருந்து ஒன்றிரண்டு அடிகள் முன்னால் சகபயணிகளால் மறைக்கப்பட்டு நின்றிருந்தாள். அவள் அந்த ரயிலில் ஏறிக்கொள்வதற்கும் நான் ஏறமுடியாமல் பின்தங்கி விடுவதற்கும் அதிக சாத்தியங்கள் இருப்பதாகவேபட்டது. அழகியின் முக தரிசனத்தைக் காணமுடியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் தொற்றிய அத்தருணத்தில் என்னையுமறியாமல் அவள் அந்த ரயிலில் ஏறக்கூடாது என்று எனக்குத் தெரிந்த எல்லாக் கடவுளரையும் வேண்டினேன். கடவுள் நம்பிக்கையற்றவன் என்று என்னை நானே நம்பிக்கொண்டும் மற்றவர்களை நம்பச் செய்வதும் எவ்வளவு போலியானது என்று ஒரு கணம் சிந்தித்தாலும் அழகியின் முகத்தைப் பார்க்கமுடியாமல் போகப் போகின்றதே என்ற தவிப்பு என்னை ஆட்கொண்டபோது நான் எனக்குள்ளேயே தர்க்கம் செய்ய இது நேரமல்ல, அழகியின் பார்வைக்குள் எப்படியாவது நுழைந்துவிடவேண்டும் என்று இன்னமும் அதிகமாகவே கடவுளரைப் பிரார்த்திக்கத் தொடங்கினேன். “நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகனுக்கும் கடவுள் உண்டு” என்று சும்மாவா கண்ணதாசன் பாடல் எழுதியிருக்கின்றார்! துன்பம் வராவிட்டாலும் இன்பம் பறிபோகப் போகின்றதே என்ற தவிப்பு இதயத்தின் துடிப்பை அதிகரித்தது. தரித்து நின்ற ரயிலின் கதவுகள் திறக்கப்பட்டபோது சனவெக்கை நெடியோடு பல பயணிகள் இறங்கினாலும் காத்திருந்தவர்களில் ஒரு வரிசையினர்தான் உள்ளே ஏற இடமிருந்தது. ரயிலில் ஏறமுடியும் என்று எத்தனித்துத் தோல்விகண்டவர்கள் தமது முயற்சிகளைக் கைவிட கதவுகள் மூடப்பட்டு ரயில் புறப்பட ஆயத்தமாகிவிட்டது.

எனது வேண்டுதல்கள் பலித்தது போன்று அழகி, நான் உட்படப் பலர் அந்த ரயிலில் ஏறமுடியவில்லை. முகம் காட்டாத அழகியின் அருகாமையும், நம்பாத கடவுள் எனது வேண்டுதலை நிறைவேற்றி வைத்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சியை உருவாக்கி எனது முகத்தில் புன்முறுவலை வரவழைத்து என்னை ஆசுவாசப்படுத்தியது. அவளோடு அடுத்த ரயிலில் பயணிக்கப்போகின்றேன் என்ற இனிய நினைப்போடு இரு நிமிடங்களில் வரவுள்ள அடுத்த ரயிலின் வரவுக்காக அழகியின் அருகே பயணிகளூடாக நகர என்னைத் தயார்படுத்தினேன்.

ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அகன்றபோது கூட்டம் ஓரளவு குறையத் தொடங்கியது. அப்போதுதான் அழகியின் அருகே இடப்பக்கத்தில் அவளைவிட சற்றுக் குள்ளமான முள்ளம்பன்றியின் மயிர்கள் போன்ற "ஜெல்”லுக்கும் மசியாமல் குத்திட்டு நிற்கும் கறுப்புத் தலைமயிரடர்ந்த பையன் ஒருவன் நிற்பதை அவதானித்தேன். அழகியின் தம்பியாக இருக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை “ஜெல்”லைக் கொண்டே முள்ளுப் பன்றிச் சிகையலங்காரத்தை உருவாக்கியிருப்பானா என்றும் சந்தேகம் வந்தது. அடுத்த ரயிலின் வருகையை சுரங்கத்தினூடான வேகமான குளிர் காற்றும் தண்டவாளங்களில் இரும்புச் சில்லுகள் தேய்த்து உரசும் ஓசையும் தெரிவித்தன.

“இந்த ரெயினை விடக்கூடாது. எப்படியும் ஏறவேணும்” என்று பையன் தமிழில் அழகிக்குச் சொல்லியது அந்த இரைச்சலிலும் காதில் தெளிவாக விழுந்தபோது அவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதும், அதிலும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான் என்பதும் சொல்லப்பட்ட வார்த்தைகளில் இருந்து உடனேயே புரிந்தது. தமிழர்களுக்கும் மயக்க வைக்கும் மோகினி போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதும் வியப்புடன் கூடிய மனமகிழ்வைத் தந்தது. மாயக் காந்தம் போன்று சுண்டியிழுக்கும் அந்த அழகியின் முகத்தைத் தரிசிக்கவேண்டும், அவளது மிகவும் மெருதுவான உடலினைத் தீண்டி ஸ்பரிசிக்கவேண்டும் என்ற மோகத் தீயானது அந்த நிமிடத்தில் எனது இருதயத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மோகத் தீயின் நாக்குகள் எனது உடலை வளைத்து முறுக்க, வெம்மை வேகமாகப் பரவி வியர்வைத் துளிகள் நெற்றியில் அரும்புவதாகத் தோன்றியது.

ரயில் நிறுத்தப்பட்டதும் வழமைபோன்றே இறங்குபவர்களுக்கு வழிவிட்டு உள்ளே ஏற பயணிகள் எல்லோரும் ஆளையாள் அதிகம் தள்ளாமல் நெரிசலில் முண்டியடித்து முன்னேறினோம். என் முன்னே நின்ற அழகி ஏறிக்கொண்டதும் நானும் எப்படியாவது ஏறிக்கொள்ளவேண்டும் என்ற குறியுடன் வேகமாகக் கால்களை எடுத்து ரயிலின் கதவைத் தடுத்து பிற பயணிகளுடன் முட்டுப்பட்டவாறே ரயிலின் உள்ளே ஒருக்களித்து நுழைந்தேன். ரயில்பெட்டி முழுவதும் பயணிகள் நெருக்கியடித்து நிறைந்திருந்தார்கள். கை, கால், கழுத்தைக் கூட ஒரு இம்மியளவும் அசைக்கமுடியாத கூட்டம். எனக்கும் அழகிக்கும் அவள் கூட நின்ற பையனுக்கும் இடையில் டைட்டானிக் போன்ற பாரிய பின்புறத்துடனும் பருத்த சரீரமுடனும் ஒரு மத்தியவயதான ஆங்கிலமாது நந்தியாக நின்றிருந்ததால் அழகிக்கு மிக அருகில் நின்று பயணிக்கமுடியவில்லை. அவளைப் பார்க்கவும் முடியவில்லை. இருவரும் அருகருகே நின்றிருந்தும் ஒருபோதுமே சந்திக்கமுடியாமல் சமாந்தரமாக இயங்கும் இருவேறு பிரபஞ்சவெளியில் பயணிப்பதாகத் தோன்றியது.

அழகியின் முகத்தை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற விருப்பு எனக்குள்ளே தீயாக வளர்ந்ததால் ரயில் புறப்பட்டு வேகம் எடுத்து ஓட ஆரம்பிக்க எனது பலத்தையெல்லாம் திரட்டி ஆங்கில மாதுவை நெருக்கியபடி என்னை இருக்கைகளின் நடுவேயுள்ள இடைவெளியை நோக்கித் திணித்தேன். இப்போது பையனை முழுவதுமாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால் அழகி அவனுக்குப் பக்கவாட்டில் நின்றதால் அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பையன் நான் நினைத்தமாதிரி சிறுபையனாக இல்லை. அழகியைவிடச் சற்றுக் குள்ளமாக இருந்தாலும், அவன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தான் என்பதை அவனது கள்ளம் நிரம்பிய முகத்தில் இருந்து கண்டுகொண்டேன். சற்றே பெரிதான ஆனால் தட்டையான மூக்கு, மேலுதட்டைத் துருத்திக்கொண்டு உள்ளே ஒளிந்திருக்கும் பற்கள், ஆந்தை போன்று படபடப்புடன் சுழலும் கண்கள், மெல்லிய கோடாக முடியும் சற்று நீண்ட கிருதா, செதுக்கப்பட்ட மீசை, குறுந்தாடி, இடது காதில் ஒரு தோடு, கறுப்பு நிற ரீ-சேர்ட், அதற்குப் பொருத்தமான குளிர் ஜக்கற், பெரிய பெல்ற்றால் இறுக்கியிருந்தாலும் இடுப்பில் இருந்து நழுவியதுபோன்ற ஜீன்ஸ் என்று அமர்க்களமாக இருந்தான்.

அவன் அழகியின் தம்பியாக இருக்கமுடியாது; நண்பன் அல்லது காதலனாக இருக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்லியது. அழகியின் காதலனாக இருக்கலாம் என்ற நினைப்பு கசப்பு மிகுந்த கசாயத்தைக் குடித்த உணர்வுடன் எரிச்சலைத் தூண்ட நான் அவனது கண்களை மிகக் கடுப்புடன் ஊடுருவது போன்று பார்த்தேன். எனது எரிச்சலும், கடுப்பும், மிரட்டலும் கலந்த பார்வை அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் எனது பார்வையைத் தவிர்த்து அழகியின் பக்கம் பார்த்தவாறு என்னை ஓரக்கண்ணால் அவதானிக்க முயன்றதில் இருந்து புரிந்தது. எனது கண்களை நேரே சந்திக்கத் திராணியற்றதால் அவன் பிரச்சினைகளை நேரே எதிர்கொள்ள விரும்பாத ஒரு தைரியமற்றவனாகத்தான் இருக்கக்கூடும் என்று கணித்தேன். சடுதியாக ஒரு திட்டம் மூளைக்குள் உதித்தது.

--தொடரும்--

Link to comment
Share on other sites

நாட்டிலும் இப்பிடி அழகிமார் இருக்கினமா என்று ஆவலை தூண்டுது..  :D


எனக்கும் அழகிக்கும் அவள் கூட நின்ற பையனுக்கும் இடையில் டைட்டானிக் போன்ற பாரிய பின்புறத்துடனும் பருத்த சரீரமுடனும் ஒரு மத்தியவயதான ஆங்கிலமாது நந்தியாக நின்றிருந்ததால் அழகிக்கு மிக அருகில் நின்று பயணிக்கமுடியவில்லை.
  :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா சூடு பிடிக்குது , தொடருங்கோ  கிருபன் அண்ணா ... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிலும் இப்பிடி அழகிமார் இருக்கினமா என்று ஆவலை தூண்டுது..  :D

 

  :lol: 

இது ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை :wub: . தாய்க்குலங்களின் ஆதரவு துளியும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. :(  எனவே கதையின் திசையைத் திருப்பலாம் என்று யோசிக்கின்றேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை :wub: . தாய்க்குலங்களின் ஆதரவு துளியும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. :(  எனவே கதையின் திசையைத் திருப்பலாம் என்று யோசிக்கின்றேன். :icon_mrgreen:

 

கவலையே படவேண்டாம் கிருபன். நீங்கள் எழுதுவதில் கற்பனை கலந்திருப்பினும் உங்கள் எழுத்தாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. உங்கள்  கற்பனையும் பெண் பற்றிய வர்ணனையுமே மற்றப் பெண்களை இதில் கருத்தெழுத விடாது வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அதற்காக நீங்கள் எழுத எண்ணியதை விட்டு கருத்தெளுதாத பெண்களுக்காக கதையைத் திசை திருப்பினால் கதையின் அழகு சிதைந்துவிடும். :D கதையை இடையில் நிறுத்திக் கடுப்பேற்றுகிறீர்கள்  :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க போற ரெயின் எல்லாம் பெட்டி பெருத்ததா.. நெரிசலுக்கு வழி இல்லாமல் எல்லோ இருக்குது. அதுபோக.. உட்கார்ந்து செல்வதில் நாட்டமில்லை. நின்று செல்வதே விருப்பம். காரணம்.. ஒரு பிகரைப் பார்த்து அருகில போய் உட்கார்ந்தா.. அது எழும்பிப் போக.. அட்ட பிகரு வந்து உட்கார்ந்து.. மூக்கைச் சொறிய.. எழும்பி ஓடுறதிலும்.. நின்றே போனால்.. யன்னல் வழியாக.. நிறைய இயற்கைக் காட்சிகளாவது காணலாம். :lol::D

 

லண்டன் பெண்களைப் பற்றிய உங்கள் வர்ணனை நிஜம். அதுவும் பிளவு தெரியும் மேற்சட்டை.. இங்கு பஷன். குறிப்பாக மேற்தட்டு தொழிலிடப் பெண்களிடம். ஒரு தடவை நேரவே ஒரு நண்பியிடம் கேட்டோம். ஏன் இந்த விளம்பரம் என்று. அதுக்கு அவா சொன்னா.. இருக்கிற இயற்கை அழகை காட்டிறதில என்ன தப்புன்னு. இல்லாதவங்க மூடி மறைக்கிறாங்க.. என்றா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையே படவேண்டாம் கிருபன். நீங்கள் எழுதுவதில் கற்பனை கலந்திருப்பினும் உங்கள் எழுத்தாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. உங்கள்  கற்பனையும் பெண் பற்றிய வர்ணனையுமே மற்றப் பெண்களை இதில் கருத்தெழுத விடாது வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அதற்காக நீங்கள் எழுத எண்ணியதை விட்டு கருத்தெளுதாத பெண்களுக்காக கதையைத் திசை திருப்பினால் கதையின் அழகு சிதைந்துவிடும். :D கதையை இடையில் நிறுத்திக் கடுப்பேற்றுகிறீர்கள்  :lol:

கதையை விரைவாக எழுத நேரம் கிடைப்பதில்லை. அத்தோடு அவசரப்பட்டு எழுதினால் அழகு குறைந்துவிடுமல்லவா! <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதை இப்படித்தான் இருக்கப் போகிறது என என் மனதுள் ஒரு வரைபடம் வந்துவிட்டது. கதை முடிந்தால்த்தான் அது எப்படி என்று தெரியும்.

Link to comment
Share on other sites

தொடருங்கள் கிருபன்ஜீ  . வர வரக் கதை  மொறுமொறுப்பாகவும் விறு விறுப்பாகவும் கதை நகருகின்றது  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலே கில்லாடிம்மா..

 

ஆமா நாலு பக்கம் துன்பம் சூழ்ந்தால்தானே நாத்திகனும் கடவுளை வேண்டுவான்......... (என்னுடைய மனதிற்குள் திட்டிக் கொள்கிறேன் நாதாரி இவனுக்கு அப்படி என்ன துன்பம் நேர்ந்ததாம்?) :lol:  சும்மா சொல்லக்கூடாது கதை அந்த மாதிரி தொடர்ந்து எழுதுங்க.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் - 3

அடுத்த தரிப்பு அண்மிக்கின்றது என்ற அறிவிப்பு காதில் விழுந்தபோது இத்தனை நெரிசல்களுக்குள்ளும் எப்படியாவது அழகியை நேரே பார்க்கக் கூடியமாதிரி நிலையெடுக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. உடனடியாகவே அடுத்த தரிப்பில் இறங்கப்போவது போன்ற பாவனையைக் காட்டி பரபரக்க, பருத்த ஆங்கிலமாது சற்று நகர்ந்துகொண்டாள். கிடைத்த சிறிய இடைவெளிக்குள் அவளது மலை போன்ற தசைக்கோளங்களை நெருக்கித் தள்ளிக்கொண்டு அழகியை நோக்கி என்னை முன் தள்ளினேன். பயணிகள் கூட்டத்தினுள் ஒருவாறு என்னைச் சமநிலைப்படுத்தி நிமிர்ந்து அழகியைப் பார்த்தபோது என் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி அடுத்த கணமே சிலிர்த்து உயிர்த்தெழுந்தது. உள்ளத்தில் நிர்மாணிக்கப்பட்ட இன்ப ஊற்றில் இருந்து உயிர்ப்பு நிறைந்த சூடான இரத்தம் அதிவேகத்துடன் பிரவாகித்து அடியாழங்களைத் தேடி ஓடுவது போன்று நாடி நாளங்களூடாக உடலெங்கும் சடுதியாகப் பரவியது. கண்களை விலக்கிக் கொள்ள முடியாதபடிக்கு சகல லட்சணமும் பொருந்தி அவள் பேரழகியாகத் தெரிந்தாள். எனக்கு நா குளிர்ந்து உலர்ந்தது போன்றும் வியர்க்காத உதடுகளில் வியர்வைத் துளிகள் அரும்புவது போன்றும் ஓர் பரவசநிலை உருவாகி உடலில் மெலிதாய் நடுக்கம் பரவ ஆரம்பித்தது. மெல்ல சுதாகரித்து இயல்பு நிலையை அடைந்தாலும் உடலெங்கும் காமம் நிறைந்து வழிந்தது.

வில் போன்ற வளைந்த செதுக்கிய புருவம், கேள்வி தொடுப்பதுபோல் அகன்று விரிந்து வசியம் செய்யும் கரிய கண்கள், இலேசான மேக்கப், நெற்றியில் சிறியதாய் அரிசி வடிவில் ஒரு கறுப்புப் பொட்டு, கூர்மையான ஒல்லியான மூக்கு, அளவான உதட்டுச் சாயம் தீட்டிய செக்கச் சிவந்த உதடுகள், அலைபாயும் கருங்கூந்தல் அதில் ஒரு கற்றை நெற்றியிலும் இடது கன்னத்திலும் மிதந்து நின்றது. வெள்ளை வெளேரென்ற கழுத்திலிருந்து ஒரு மெல்லிய சில்வர் சங்கிலி அவளது மிகவும் நளினமாக அதி மிருதுவான தேகத்தில் ஒட்டி உறவாடி கார்வண்ண மேலாடையூடாக மதமதர்த்து நின்ற தளிர் மார்புப் பகுதிக்குள் சென்று மறைந்தது. தோளில் நீண்டபட்டியுடன் கூடிய சற்றே பெரிய விலையுயர்ந்த பளபளப்பான கருமை வர்ணத்தில் கைப்பை தொங்கியது. அவளது படிகம் போன்ற கைகளில் வெளிர் நிற ஐஃபோன் ஒன்று பளபளத்து இருந்தது. அவளது இரு காதுகளிலும் பாடல்களைக் கேட்பதற்காக மாட்டியிருந்த ஹெட்ஃபோனின் வயர்கள் நீண்டு வளைந்து அழகிய சங்கிலி போன்று ஐஃபோனுடன் பிணைக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவள் ஓரு நவநாகரிக அழகுப் பதுமையாக இருந்தாள்.

ஜெயமோகன் கதை ஒன்றில் பெண்ணழகின் உச்சத்தைப் பற்றி விபரித்திருந்தார். " எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான்". அவள் அழகின் உச்சத்தை எட்டிய தருணத்தின் அந்தக் கணத்தில் என்முன் நின்றாள்.

அடுத்த தரிப்பில் ரயிலிலிருந்து தடம் மாறுவதற்காகச் சிலர் இறங்கினார்கள். இறங்கியவர்களால் குறைவடைந்த நெரிசல் கூடுவதற்கு முன்னரே நான் அழகியை ஒரு நேர்கோட்டில் முழுவதுமாகப் பார்க்கக்கூடியவாறு எனது நிலையை மாற்றினேன். சில வினாடிகளில் வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் அவசரத்தில் உள்ளே நெருக்கியடித்து ஏறிய பயணிகளால் ரயில்பெட்டி நிறைந்துவிட்டது. பயணிகள் திரளாக எங்களைச் சுற்றி நின்றாலும் எவருமே என் கண்களில் படவில்லை. அவர்கள் என்னைக் கவனிக்கின்றார்களா என்று கூட என்னால் சிந்திக்கமுடியவில்லை. என் புலன்கள் எல்லாம் எனது விழிகளில் ஒடுங்கி பார்வையால் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தேன். அழகியைப் பார்வையால் பருகிக் கொண்டு நின்ற கணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவளை அப்படியே அள்ளிப் தூக்கி அவளது உடலின் திண்மை, திரட்சி, மென்மை எல்லாவற்றையும் ஆராயவேண்டும் என்று மனமும் கைகளும் துறுதுறுத்தன. அவள் மெலிதாக உதடுகளைப் பிரித்து இளைஞனைப் பார்த்து முறுவலித்தபோது பளிங்குக் கற்கள் போன்ற முத்தான பற்களில் இருந்து தெறிந்த ஒளி என் விழிகளைக் கூசச் செய்தது. எனது பார்வை சற்றுக் கீழே தாழ்ந்தபோது சூரியக் கற்றைகள் தொட்டுக்கூடப் பார்க்காத கூட்டுக்குள் வளரும் வெண்ணிற இள முயல் குட்டிகளைப் போன்று திமிறிக் கொண்டிருந்த அழகியின் இள மார்புகள் மீது கண்கள் தேனில் விழுந்த ஈயைப் போல ஒட்டிக்கொண்டன. அந்த நொடியில் எனது வாழ்வில் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நான் பார்வையாலே அவள் மீது படர்ந்து அளவாக உருண்டு திரண்ட மார்புகளின் வட்டத்தையும் விட்டத்தையும் கணக்கெடுத்துக்கொண்டிருந்தது அவள் பக்கத்தில் நின்ற இளைஞனுக்கு சினத்தை ஊட்டியது. நான் அழகியைத் தொடர்ந்தும் பார்வையாலே உறிஞ்சுவதைத் தடுக்கும் நோக்கில் அவன் அழகியை நெருங்கி "நீ கேட்கின்ற பாட்டைக் நானும் கேட்கவேண்டும்" என்றவாறே அவளது ஹெட்ஃபோனில் ஒன்றை உரிமையோடு எடுத்துத் தனது காதில் மாட்டிக்கொண்டு என்னை நோக்கி வெற்றிப் பெருமிதமான பார்வையைச் செலுத்தினான். அவனது செய்கையும் அவன் நின்ற தோரணையும் அழகி அவனுக்கே உரித்தானவள்; நான் அவர்களுக்குள் நுழையமுடியாது என்று எனக்கு சவால் விடுவதாகப்பட்டது. எனது பக்கம் அழகியின் கவனம் வராமல் இருக்க ஏதோ இப்போதுதான் புதிதாகச் சந்தித்தவர்கள் போலவும், இனி வருங் காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்கள் போலவும் அவளோடு உரசிக் கொண்டு மெல்லிய குரலில் கிசுகிசுத்தான். அழகியும் தன் ஜக்கற் பைகளுக்குள் கைகளை வைத்தபடி பதிலுக்கு எதையோ முணுமுணுத்துக் "களுக்"கென்று சிரித்தாள். அவர்களது கிசுகிசுப்பான பேச்சு சங்கிலி போல ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி வார்த்தைகள் ரயிலோடும் ஓசையில் மறைந்துகொண்டிருந்தன.

அழகி இன்னமும் என்னைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதும் இறுதித் தரிப்பை அடைய அதிகபட்சம் 30 நிமிடங்களே எடுக்கலாம் என்பதும், அவர்கள் இடையில் எந்த நேரமும் இறங்கலாம் என்பதும் எனக்கு மனதுக்குள் கலவரத்தை உண்டுபண்ணியது. அழகியோடு பயணிக்கும் சொற்ப நேரத்தில் அவள் என் மீது கவனத்தை உண்டுபண்ண என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கிச் சிந்தித்தேன். இளைஞன் அவளது காதலன் என்பது உறுதியாகிவிட்டதால், அவளை என்பக்கம் இழுப்பது அவ்வளவு இலகுவாக இருக்காது என்பதும் உறைத்தது.

ஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். தன் பரம்பரையைத் தோற்றுவிப்பதன் வழியாகத் தன் இனத்தை வலுவாகத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உந்துதல் காரணமாக அதற்குத் தோதாக இருக்கும் சூல் கொண்ட இளமை பொங்கும் பெண்களைப் பார்த்த மாத்திரத்திலேயே விரும்புவது ஆண்களின் இயல்பு. இது ஆபத்துக்கள் சூழ்ந்த ஆதி காலத்தில் இருந்து சந்ததி சந்தியாகக் கடத்தப்பட்ட உயிரியல் பண்புகளாலான உணர்வு. இதைத்தான் காதல் என்று புனிதப் போர்வை உடுத்துகின்றார்கள் சிலர். ஆனால் காதலின் அடிப்படையே மோகத்தால் உருவாகி காமத்தீ வளர்த்து அம்மணமாகக் கலவி கொண்டு சந்ததியை விருத்தி செய்யும் நோக்கம்தான்.

ஆனால் ஒரு பெண் ஆண் மீது ஈர்ப்புக்கொள்ள பல நிபந்தனைகளை சரிபார்ப்பதுண்டு. முதலில் சந்ததியை உண்டாக்கக்கூடிய ஆண்மையும் ஆபத்துக்களில் இருந்து காக்கக் கூடிய வலிமையும், அவளையும் அவள் குழந்தைகளையும் நீண்ட காலம் பாதுகாத்து பராமரிக்கக் கூடிய பொறுப்புணர்வும் பொருளாதார பலமும் அன்பான உணர்வுகளும் உள்ளவனா பார்ப்பாள். பெண்ணின் சுதந்திர உணர்வுகளை மதித்து அவளோடு ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வானா என்றும் பார்ப்பாள். அதேவேளை தன்னுடன் கூடும் ஆண் மரத்துக்கு மரம் தாவும் பறவை போன்று பிற பெண்களுடன் சேர்வதையும் துளியும் விரும்பமாட்டாள். தன்னைவிட அழகில் குறைந்த பெண்ணுடன்கூட தனது துணையானவன் பழகினால்கூட பிடிக்காது பலபெண்களுக்கு.

ஆதிகாலத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்தபோதும் ஒரு பெண்ணைக் கவர ஆண் தனது வலிமையையும், அன்பான உணர்வுகளையும் காண்பிக்க பலப் பரீட்சைகளில் இறங்குவதும் சிறந்த நடனக்காரன் என்று நிரூபிப்பதும் நிகழ்ந்தன. இராமாயணத்தில் இராமன் வில்லை ஒடித்து சீதையை அடைந்ததும் அப்படித்தானே. இவைதான் தொடர்ச்சியாகி இப்போது மிடுக்கான நாகரிகத் தோற்றமும், அதிக பணம் புரளும் நிரந்தரமான வேலையும், வசதியான வீடும், காரும், ஆடம்பரமான விடுமுறைகளும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களும் பெற்றுத் தரக்கூடிய ஆண்களை பெண்கள் விரும்புவதற்குக் காரணமாகவுள்ளது. அதுமட்டுமல்ல. பெண்ணுக்கு அவளது மாதச் சுற்றின் நேரத்திற்கு ஏற்ப உணர்வுகள் மாறும்போது விருப்பங்களும் மாறுகின்றன. சிலவேளைகளில் சாந்தகுணத்தையும் இன்னொரு வேளையில் மூர்க்ககுணத்தையும் விரும்புவாள். அதற்கேற்ப ஆண் பலவேடங்களைப் பூண்டால்தான் வாழ்வு தொடர்ந்தும் இனிமையாகப் போகும். இப்படி பெண்ணுக்கே பெண்ணைப் புரியாமல் இருக்கும்போது அவளின் மனதைப் புரிய முயலும் ஆண்கள் தமது நேரத்தை விரையம் செய்து, காரியத்தைச் சாதிக்கமுடியாத முட்டாள்களாக ஆகிவிடுகின்றனர்.

இப்படியான சிந்தனைகள் மனதில் ஓட அழகியின் கவனத்தை என்மீது திருப்பி அவளைக் கவரவேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னதான் ஒரு காதலன் இருந்தாலும் ஒரு கணநேர சலனத்தை அவள் மனதில் உருவாக்கி அதை ஒரு தீப்பொறியாக்கி பெருநெருப்பை உருவாக்கினால் அது அவள் காதலைச் சுட்டெரித்துவிடும். இது அதிகம் ரிஸ்கான அணுகலாக இருந்தாலும் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பெறுமதியானது என்பதால் தைரியமாக முயன்று பார்ப்பதுதான் ஒரேவழியாகத் தெரிந்தது.

-- தொடரும் --

Link to comment
Share on other sites

ஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். ////  இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மை லோர்ட்  :lol:  :lol:  .  நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல கதை வாசிக்கின்றேன் , தொடருங்கள் ஜீ :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். ////  இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மை லோர்ட்  :lol:  :lol:  .  நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல கதை வாசிக்கின்றேன் , தொடருங்கள் ஜீ :) :) .

ஹி.ஹி..

கதையின் போக்கு பலருக்குப் பிடிக்கவில்லைப் போலிருக்கு!

உள்ளத்தில் உள்ள உண்மையைச் சுட்டிக் காட்டினாலும் பிரச்சினைதான் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.