Jump to content

வணக்கம் யாழ் உறுப்பினர்களே நான் தான் வழிகாட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தின் நிரந்தரவிடுதலை இனி மிக அறிவுக்கு வேலை கொடுத்து காய்நகர்த்த வேண்டும்....

வழி 1

வெளினாடுகளை(அரசு, எதிர்கட்சிகள்) எமது பலவிதமான அணுகுமுறை மூலம், சிறந்த புரிந்துணர்வுகளை எற்படுத்துதல்.

வணக்கம்.. வாங்கோ வழிகாட்டி

சூழ்ந்திடும் இருளில் மூழ்கின்றோம், எம் சுடர் ஒளியே வழி காட்டு

இங்கிலாந்து தமிழ் பழமைவாத கட்சி உறுப்பினர்கள் இருவர் நேற்றைய தினேஷின் தொலைக்காட்சி பேட்டியின் போது, இதையே சொன்னார்கள்.

கட்சிகள் பல் வேறு விதமான கொள்கைகளை உடையவை, அவைகளூடாக நாம் நமது குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

வழி 4

தமிழ்கலாச்சார நிகழ்ச்சிகளை அடிக்கடி நிகழ்த்துங்கள்
அழைப்பு விடுக்கப்பட வேண்டியவர்கள் அந்த நாட்டுமீடியாக்கள் எனப்படும்
பத்திரிகைகள்,தொலைகாட்சி நிருவனங்கள் ,
அரசியல் மற்றும்  உயர்பதவிகளில் இருக்கும் நகர
மேயர்கள்,நாடாளுமன்றஉறுப்பினர்கள்......
... எம்மக்களில் இனப்பற்றுள்ள விடுதலை
வரலாறு ஆழ்ந்த அறிவுள்ள   நீங்கள் வாழும்
நாடுகளின் மொழியறிவுள்ளவர்கள் மூலம்

வழி 3 இன்  வழியில் முழுத்தகவல்களும் கொடுக்கப்படல் வேண்டும்.

நிகழ்ச்சிகள் முடிவடைந்து, தேனீர் விருந்து
அல்லது எமது தமிழ்கலாசார விருந்தோம்பலின்
பின் கலாச்சார உரையாடல் நிகழ்சியாக நல்ல தொடர்பாடல்களை ஏற்படுத்துங்கள்... அன்பை வளர்ப்பதன் மூலம்..
கலாச்சாரமான இனத்தின் நிர்கதியை...

Link to comment
Share on other sites

வழி 5

நீங்கள் வாழும் நாடுகளில் அதிகமாக பார்க்கபடும் ஊடங்கங்களில் உங்கள் நாடுகளில் நடக்கும் இலங்கை சம்பந்தமான ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களின் செய்திகள் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்...
முன்பாக ஒவ்வொரு ஊடங்களுக்கும் விளக்கமான அறிவித்தல் கடிதங்களை இலத்திறன்(ஈ-மெயில்)
மூலமாக இலகுவாக,அல்லது தபால் மூலம் அனுப்பி பின்னர் தொலைபேசி மூலம் உரையாடி
 அவர்களின் வருகைகளை உறுதிப்படுத்துங்கள்.
வரும் செய்தி நிருபர்களுக்கும் நல்ல விளக்கங்கள்
கொடுக்கப்படல் வேண்டும்.. இதனை முக்கியமாக
கவனிக்கப்பட வேண்டும்..

இவற்றை செய்து பாருங்கள் நாளடைவில் அந்த நாடுகளின் எல்லாமக்களுக்கும், அரசு,எல்லா அரசியற்கட்சிகளுக்கும் இலகுவில் செய்திகள்
சென்றடையும்...
 ஊர்வலங்கள் நடக்கும் போது
எதற்காக இது  என்பது துண்டுப்பிரசுரங்கள் மூலம்
தெரியப்படுத்தல் வேண்டும் அல்லது முயற்சிகள்
வீண்விரையமாகும்..

 

Link to comment
Share on other sites

வாங்கோ வழிகாட்டி.... வழிகாட்டிக்கே வழிகாட்ட வேண்டும்போல் இருக்கிறதே...!? :rolleyes::D

எல்லாருமாச் சேர்ந்து... என்ன வழி?  என்று யோசிப்பம்..! :D

 

உங்கள் வழிகாட்டல் குறிப்புக்களும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும்... :)

Link to comment
Share on other sites

வணக்கம் வழிகாட்டி

Link to comment
Share on other sites

வழி 6
நீங்கள் இதுவரையில் வழி1இல் வழி5 வரை செயல்பட்டுக்கொண்டு இருந்தால் நன்றி.. இல்லை எனில்
உங்களுக்கு இடையூறாக இருக்கும் காரணிகளை
ஆராயுங்கள்..

அமைப்பாக செயல்படும்போது
தலைமையாக செயல்படுவர்கள் ஊக்கமின்றி
 பெயருக்கு செயல்படுவராக இருந்தால் அவரை மாற்ற முயற்சி செய்யவும் இல்லை என்றால்
 பதவியால் அகற்றவும்.

ஏற்கனவே முயற்சி செய்த்தால் பாராட்டி
ஊக்கிவிக்கவும்..
இது காலத்தின் கடமை....
பங்குனி முன் பல பணிகள் ...

Link to comment
Share on other sites

இனிய தமிழ் உறவுகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..
இந்த புதிய ஆண்டில் நாங்கள் எங்கள் இனவிமோசனத்திற்கு உங்களுக்கு முடியுமானவரை

வெவ்வேறுவழிகளில் உதவுங்கள் விரைவாக

அல்லது கொடிய அரக்கன் எம்மினத்தை விரைவில்
விழுங்கி விடுவான்.. நிலம் உட்பட
கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடவேண்டாம்
இது சினிமா வாழ்க்கை அல்ல நிஜம்...


இதுவரை கருத்து எழுதிய வாசித்து ஊக்கம்  தந்த
ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்..


முக்கியமாக ஒரு செய்தி சொல்கிறேன்
குக்கூ என 2008-2009 காலப்பகுதியில் எழுதியவரும்
தற்போது வழிகாட்டியாகவும் எழுதுவதும்
அடியேனே...
மன்னிக்கவும் சிலகாலம் சிலகாரணங்களால் எழுத
 முடியவில்லை.
பின்னர் வந்த போது நுழைவு இரகசிய எண்
மறந்துவிட்டேன்..
மீண்டும் சந்திப்போம்...

Link to comment
Share on other sites

வாழ்க தமிழ்!

வளர்க தமிழர் வீரம்!

 

இனி வரும் காலம் எமது கையில் தான்

இவ்வாண்டாவது எமது உறவுகளின் கண்ணீர் குறைய  செயல்படவேண்டும்

இதற்கு இலங்கையில் உயிர் ஆபத்து இருக்கிறது. ஆனால்!

புலம் பெயர் உறவுகளுக்கு என்ன பயம், எம் இனத்தைக் காப்பதில் என்ன தயக்கம்

புத்திசாலி பிள்ளைகளை கொல்கிறார்கள்,

தமிழ் பெண்களை கொல்கிறார்கள்

புத்தர் கூட கொலையாளியா, பௌத்த குருமாரே,

சமாதானம் போசாது சண்டிதனம் பேசுகிறார்கள்.

வாருங்கள் வெளிநாடு நாமும் சண்டித்தனம் செய்து காட்டுகின்றோம்,  

 

பொறுத்தது போதும், இந்த ஆண்டு தான் நாம் கிறிக்கட்

விளையாடப் போகின்றோம் இலங்கை அரசுடன்,

பொறுமைக்கு பெயர் பயம் அல்ல,

ஆயுதத்தை வைத்து கொண்டு மக்களை பயப்பிடுத்துவது,  நல்ல ஆட்சியல்ல

எமது மக்களை, பெண்களை, சிறுமியரை, ஏழைகளை காக்க நாம்

ஒவ்வொருவரும் இவ்வாண்டு கைகோற்போம்,

அடம்பன் கொடிபோல், ஜந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தை, சிறிலங்கா அரசுக்கு  காட்டுவோம்,

நாம் அடிமைகள் அல்ல என்பதை காட்ட நாம் புறப்படவேண்டும்.

புலம் பெயர் மக்கள் இவ்வாண்டை பயன்படுத்தி,

2014ம் ஆண்டு தமிழன் ஆண்டு என் காட்டுவோம்.

 

வாழ்க தமிழ்!

வளர்க தமிழர் வீரம்!

 

வெற்றி எப்போதும் வீரனுக்கு தான்,

கோளைகளுக்கு அல்ல,

காலம் பதில் சொல்லும், அந்தக் கயவர்களுக்கு,

அந்தக்காலம், இந்த ஆண்டு தான்.

 

அருள் தெய்வேந்திரன்

 

Link to comment
Share on other sites

வழி 7

 

 

நீங்கள் வாழும் இடஙகளில் நல்ல மதிப்பு பெறுவது முக்கியமானது.

 

இந்த நல் மதிப்பை பெறுவதற்கு நீங்கள் ஒரு தமிழ் அமைப்பாக சமூக சேவைகள் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போது நகரசபைகள், தொண்டர்கள் நிருவனங்கள் ஊடாக சேவைகள் செய்து பாராட்டுக்களை பெறுதல்..

 

பொருள், பணவுதவிகள், சரிர என உதவிகள் செய்து நல்ல மதிப்பு,

 

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வரும் இச்செய்திகளால் நீங்கள் சமூகங்களில் உள்வாங்கப்பட்டு யார் இவர்கள் என்னும் கேள்விகள் எல்லா மட்டங்களிலும் பிரபலமாகி உங்களின் பிரச்சாரங்கள் சனல் 4 போன்று பரவும்..

 

எல்லோரும் விரும்புவர்களாக மாறுவீர்கள்.. புரிகிறதா? இல்லை எனில் கேளுங்கள் பதில் கொடுக்கப்படும்..

Link to comment
Share on other sites

வழி 8 வழி 7 இன் படி சமூகசேவைகளில் நீங்கள் ஈடுபடும் போது ஏற்படும் அனுபவங்கள் தொடர்புகளால் ஏற்படும் தன்னம்பிக்கை உஙகளை உள்ளூர் அரசியல் கட்சிகளில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.(எந்தக்கட்சி என்பதை நீஙகளே தெரிவுசெய்யுங்கள்.ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி) எல்லோரும் ஒரு கட்சியில் சேராமல் மாற்றுக்கட்சிகள் ஆட்சி வரும் போதும் எமக்கு ஆதரவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.. எப்போதும் தூரப்பார்வையாகவும் எமது இன நலனில் கொள்கையாகவும் எமது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காய்கள் நகர்த்துங்கள்.. உங்களால் முடியும் என நினையுங்கள் எல்லாம் முடியும்.. தொடரும்...

Link to comment
Share on other sites

வழி 8

 

வழி 7  இன் படி சமூகசேவைகளில் நீங்கள் ஈடுபடும் போது ஏற்படும் அனுபவங்கள் தொடர்புகளால் ஏற்படும் தன்னம்பிக்கை உஙகளை உள்ளூர் அரசியல் கட்சிகளில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.(எந்தக்கட்சி என்பதை நீஙகளே தெரிவுசெய்யுங்கள்.ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி)

 

எல்லோரும் ஒரு கட்சியில் சேராமல் மாற்றுக்கட்சிகள் ஆட்சி வரும் போதும் எமக்கு ஆதரவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்..

 

எப்போதும் தூரப்பார்வையாகவும் எமது இன நலனில் கொள்கையாகவும் எமது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காய்கள் நகர்த்துங்கள்.. உங்களால் முடியும் என நினையுங்கள் எல்லாம் முடியும்.. தொடரும்...

Link to comment
Share on other sites

வழி 9

 

உங்கள் வெளி நாட்டு மக்கள் பிரச்சாரங்களில் மேல் வரும் 15 விதமான தமிழர்களின் மீதான தற்போதைய இலங்கையரசின் அடக்கும் பொறிமுறைகளை ஆதரங்களுடன் புரியபடுத்துங்கள். ஸ்ரீலங்கா இனவெறி அரசு தமிழின அழிப்பை நிறைவேற்றக் கையாளும் கட்டமைக்கப்பட்ட செயல்முறைகள்:-

 

1.   தமிழரை மதரீதியாக, பிரதேச வாரியாகப் பிரித்தாளும் தந்திரம்.தமிழருக்குள் பிரிவினைகளைத் தூண்டி பிரித்துத் துண்டாடி மோதவிடுதல்.

 

2.    சலுகைகளையும் அரசஉதவிகளையும் காட்டி அல்லது மிரட்டி முடிந்தளவு தமிழரை தம்பக்கம் இழுத்தல்.

 

3.  அபிவிருத்திக்கென்றும் படையினர் தேவைக்கென்றும் மத்திய அரசின் தொழிற் சாலைகளுக் கென்றும் இராணுவக் குடியிருப்புக் கென்றும் பாரிய அளவில் தமிழர் நிலங்களைக் கொள்ளை அடித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி அவர்களுக்கே அபிவிருத்தி அனைத்தையும் செய்து கொடுத்தல். நிலத்தை அபகரித்து அங்கு சிங்களவரைக் குடியேற்றுவதன் மூலம் தமிழருக் கென்று தாயகபூமி இருப்பதை இல்லாமற் செய்தல்.

 

4.  தமிழர் பகுதியில் உள்ள வளங்களை, வளமான நிலங்களை தமிழர் அனுபவிக்க விடாமல் அவற்றை பறித்து சிங்களவருக்கு கொடுத்தல்,

 

5.  பவுத்தமதத் திணிப்பு சிங்கள மொழி கலாச்சாரத் திணிப்பு மேலும் அவற்றுக்கான பெரும் ஊக்குவிப்பு மூலம் தமிழரின் மதம் தனித்துவமானமொழி பண்பாடு கலாச் சாரங்களை அழித்து அல்லது கலப்புச் செய்து சிதைத்து அப்படி ஒரு தனித்துவமான இனம் இல்லை என்று காட்டுதல்.

 

6. தமிழர் சுய பொருளாதார அபிவிருத்தி அடைய விடாமல் தடுத்து அவர்களை சிங்கள ஆட்சியின் தயவில் தங்கி வாழும் இனமாக வைத்திருத்தல், தமிழர் பிரதேச அபிவிருத்திகளை வேண்டுமென்றே புறக்கணித்தல்

 

7. படுகொலை செய்தல், வெளிநாடுகளுக்குத் துரத்தல், கருத்தடை செய்தல் பசி நோயால் இறந்துபோக அனுமதித்தல் போன்றவற்றால் தமிழர் தொகையை மேலும் குறைத்தல்.

 

8. தாம் தமிழருக்குச் செய்யும் அநீதிகளுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சி செய்ய முடியாதவாறு பிரகடனப் படுத்தாத இராணுவ ஆட்சியைத் தொடருதல்.

 

9. தமிழருக்கு எந்த அரசியல் உரிமைகளையும் கொடுக்காமல் அடிமைப்படுத்தி வைத்திருத்தல்.

 

10. பேச்சுச்சுதந்திரம் ஊடகசுதந்திரம் மற்றும் மனிதசுதந்திரம் போன்ற அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குதல்.

11. சர்வதேச ஆதரவு தமிழருக்குக் கிடைக்காமல் தமக்குச் சார்பாக இருப்பதற்கான சகல தந்திரங்களையும் கையாளுதல்.

12.  ஈழத்தமிழருக்கு ஆதரவான தமிழ்நாட்டு எதிர்ப்பலைகளையும் புலம்பெயர் தமிழரின் போராட்டங்களையும் நிர்மூலமாக்கல்.

13. மதுபானங்களையும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையும் நீலஆபாசப் படங்களையும் தமிழர் பகுதிகளில் மிகத் தாராளமாக வழங்கி மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பாழடிப்பதோடு தமிழினத்தை ஒரு குற்றச்செயல் மலிந்த தீவிரவாதத் தன்மைகொண்ட கல்வியில் பின்தங்கிய காட்டுமிராண்டி இனமாகக் காட்டுதல்.

 

14. முழு இலங்கையுமே சர்வதேசக் கடனில் மூழ்குவதையோ வல்லரசுகளின் பிடியில் சிக்குவதையோ கூடக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு உதவும் சுயநல நாடுகளோடு கைகோர்த்து தமிழின அழிப்பை நிறைவேற்றல்.

 

15.  தாமே ஒருசில புல்லுரிவிகளை வைத்து உருவாக்கும் குழுவை, புலிப்படை என்று காட்டி அவர்கள் மூலம் தாம் விரும்பாத தமிழ் அரசியல் தலைவர்களை கொலை செய்தல்.

Link to comment
Share on other sites

வழி 9 உங்கள் வெளி நாட்டு மக்கள் பிரச்சாரங்களில் மேல் வரும் 15 விதமான தமிழர்களின் மீதான தற்போதைய இலங்கையரசின் அடக்கும் பொறிமுறைகளை ஆதரங்களுடன் புரியபடுத்துங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,
நானும் ஒரு புதியவனே ..
 

Link to comment
Share on other sites

வணக்கம்,

நானும் ஒரு புதியவனே ..

 

 

 

வணக்கம் வாங்கோ!

 

நீங்கள் புதுத் திரி திறந்து எழுதுங்கோ.

 

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=new_post&f=27

Link to comment
Share on other sites

வழி 10 உங்கள் வருங்காலச்சந்ததிகள் மீடியாக்கள் எனும் தகவல் துறைகளில் கல்வியில் படிப்புகளை மேற்கொள்ள ஊக்கிவியுங்கள்...

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அன்பு உறவுகளே, பிரித்தானியாவின் பல பகுதிகள் இப்போ வெள்ளக்காடாகக் காட்சி தருவதை நாமறிவோம். நிதி நிலைமையும் வசதிகளும் என்னதான் உயர்வாக இருப்பினும் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்ளுவது இயலாததாகி விடுவதுண்டு. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நிச்சயம் உதவவேண்டும். அப்படி எனில் நாம் ஆங்கில இனத்தவர்களோடு, மிக நெருங்கிய தொடர்புகளையும் ஒரு பிணைப்பையும் ஏற்படுத்த முடியும். காலத்தின் தேவை கருதி சரியான நேரத்தில் செய்வதே உதவியாகும். எனவே லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் உடனடியாக தம்மாலான உதவிகளை வழங்குவது நல்லது. இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) தற்போது மேற்கொள்ளவுள்ளது. தமிழர்களே தற்போது உள்ள குளிர் சூழ் நிலையில், பிரித்தானியாவின் பல மாவட்டங்கள் மின்சாரம் துண்டிக்கபப்ட்ட நிலையில் உள்ளது. சென்ரல் கீட்டர் வேலைசெய்யவில்லை என்றால் வீடு எப்படி குளிரும் என்பதனை நாம் நன்கு அறிவோம். எனவே உதவிசெய்ய விரும்புவோர் எவ்வகையான உதவிகளையும் செய்யலாம். உதரணமாக உங்களிடம் உள்ள , குவில்ட் அல்லது குளிர் தாங்கக்கூடிய உடுப்புகளை, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பது நல்லது. அத்தோடு, உலர் உணவுகளையும் நீங்கள் கொடுத்து உதவலாம். பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில், தமிழர்களுக்கு இவை புரியாத விடையம் அல்ல. எனவே அனைத்து லண்டன் தமிழர்களும் உடனடியாக் இந்த உதவிகளை மேற்கொள்வது நல்லது. இதனை பிரித்தானிய ஒருங்கிணைப்புக் குழு(TCC) பிரித்தானிய எம்.பீக்களோடு இணைந்து செய்யவுள்ளார்கள். உதவி நல்கவிருப்பவர்கள் 020 3371 9313 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்க. விரைவிலே எமது பிராந்திய ரீதியிலான பொறுப்பாளர்கள் மூலமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடங்களும் தொலைபேசி எண்களும் உங்களுக்கு அறிவிக்கப்படும். அவ்விடங்களிலேயே 15–02–2014 சனியன்று உங்கள் உதவிகளை (தண்ணீர் , உலர் உணவுகள், உடுப்புகள்) நேரடியாகவே தரலாம். அனைத்துத் தொடர்புகளுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 020 3371 9313 (facebook) Edited by துளசி, Yesterday, 09:28 AM.

Link to comment
Share on other sites

பிரித்தானிய வாழ் தமிழ்மக்களுக்கு சமூகசேவைசெய்ய கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில் உங்கள் உதவிகளை செய்து எம்மினத்திற்கு பிரித்தானியாவில் மதிப்பை ஏற்படுத்துங்கள். வழி 7 நீங்கள் வாழும் இடஙகளில் நல்ல மதிப்பு பெறுவது முக்கியமானது. இந்த நல் மதிப்பை பெறுவதற்கு நீங்கள் ஒரு தமிழ் அமைப்பாக சமூக சேவைகள் குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் நிகழும் போது நகரசபைகள், தொண்டர்கள் நிருவனங்கள் ஊடாக சேவைகள் செய்து பாராட்டுக்களை பெறுதல்.. பொருள், பணவுதவிகள், சரிர என உதவிகள் செய்து நல்ல மதிப்பு, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வரும் இச்செய்திகளால் நீங்கள் சமூகங்களில் உள்வாங்கப்பட்டு யார் இவர்கள் என்னும் கேள்விகள் எல்லா மட்டங்களிலும் பிரபலமாகி உங்களின் பிரச்சாரங்கள் சனல் 4 போன்று பரவும்..

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் நிவாரண உதவிகள் செய்து தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்...இவ்வாறன உதவிகள் ஒவ்வொரு நாடுகளிலும் தொடர்ந்து எம்மக்கள் விடுதலைக்கு தகுதியான இனமாக உலகம் இனம் காணவைக்க வேண்டும்.. பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்த காலநிலை அனர்த்தத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கான நிவாரண உதவிகளை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வழங்கினர். http://www.sankathi2.../d,fullart.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.