Jump to content

தமிழ்நாடு, புதுடெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில்: இலங்கைக்கு எதிராக திரும்புமா இந்தியா?


Recommended Posts

sithamparam%2012.jpg

இலங்கைக்கு எதிராக திரும்புமா இந்தியா?

  • இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான நட்புறவை, தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இந்தியா கருதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயம், அந்த நெருக்கத்துக்கு சவாலாக உள்ளது.  அதிகாரப் பகிர்வு இருதரப்பு இடைவெளியை இன்னமும் குறைக்க விடாமல், அமுக்கி வருகிறது. அதைவிட உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும், இந்தியாவை ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்கவே செய்கின்றன.என்கின்றார் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா அவர்கள்........."

அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியாக வலிய வந்து ஒட்டிக் கொள்ளும், இந்தியாவின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை. இந்த பாதுகாப்பு உறவுகளை தமிழ்நாட்டின் எந்த அரசியல் அழுத்தங்களாலும் உடைக்க முடியாது,ஒருவேளை, வரும் மே மாதத்துக்குப் பின்னர், புதுடெல்லியில் பாஜக ஆட்சி பீடமேறினாலும் கூட, இந்த வியூகத்தில் இருந்து வெளிவர முடியாது.  ஒருபக்கத்தில், இலங்கை அரசுக்கு தலைவலி கொடுப்பதாக காட்டிக் கொண்டாலும், இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த இரட்டை அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், இந்தியாவின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பி விடலாம் என்று தமிழ்நாடோ அன்றி, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளோ எத்தகைய கணக்கைப் போட்டாலும் அது பலிக்கப் போவதில்லை.   தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புதுடெல்லியின் இந்த இரட்டை அணுகுமுறையைப் புரிந்து கொள்ளாமல், திரும்பத் திரும்ப அதற்குள் மூக்கை நுழைத்து, முட்டிக் கொள்கின்றனர்.  என குறிப்பிடும் சுபத்ரா,  

தனது விரிவான ஆய்வில், 

  • கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்த பின்னர், இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒருவித மந்த நிலை இருந்து வருகிறது. இருநாடுகளுமே தமக்கிடையிலான உறவுகளில் எந்தக் கசப்புணர்வோ, இடைவெளிகளோ கிடையாது என்று அவ்வப்போது கூறிக் கொண்டாலும், ஒரு வெளித்தெரியா இடைவெளி நீடித்து வருகிறது. ஜெனிவா தீர்மானத்தின் போது தொடங்கிய இந்த இறுக்கநிலை, கொமன்வெல்த் மாநாட்டின் பின்னர் இன்னமும் தீவிரமடைந்துள்ளதே தவிர, குறைந்துள்ளதாகத் தெரியவில்லை. சர்வதேச இராஜதந்திர அரங்கில், இலங்கையைக் காப்பாற்றுவதில் இந்தியா தனது முழுப்பங்களிப்பை செய்யவில்லை. அல்லது முழுமனதோடு செய்யக் கூடிய நிலை இருக்கவில்லை. 

    இதுதான், இராஜதந்திர முனையில், இலங்கை – இந்திய உறவுகளில் தோன்றியுள்ள முக்கியமான இடைவெளிக்கான காரணம். 

    இராஜதந்திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளி, இப்போதைக்கு குறைவடைவதற்கான சாத்தியங்களோ, அறிகுறிகளோ தென்படவில்லை. 

    இந்த இடைவெளியைக் குறைக்க கொழும்பும், புதுடெல்லியும் விரும்பினாலும் கூட, சில அக,புறக் காரணிகள் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. 

    இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான நட்புறவை, தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இந்தியா கருதும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயம், அந்த நெருக்கத்துக்கு சவாலாக உள்ளது.  அதிகாரப் பகிர்வு இருதரப்பு இடைவெளியை இன்னமும் குறைக்க விடாமல், அமுக்கி வருகிறது. அதைவிட உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும், இந்தியாவை ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கையுடன் நெருக்கம் கொள்ள விடாமல் தடுக்கவே செய்கின்றன. 

    இது இராஜதந்திர அரங்கில் உள்ள முக்கியமான இருதரப்புச் சிக்கல். 

    ஆனால், பாதுகாப்பு உறவுகளில் இந்த உறவுச்சிக்கல் ஏதும் இருக்கவில்லை. 

    பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில், இலங்கையுடன் எந்த இடைவெளியும் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது, 

    தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புதுடெல்லியின் இந்த இரட்டை அணுகுமுறையைப் புரிந்து கொள்ளாமல், திரும்பத் திரும்ப அதற்குள் மூக்கை நுழைத்து, முட்டிக் கொள்கின்றனர். 

    இராஜதந்திர உறவுகளையும், பாதுகாப்பு உறவுகளையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளாத இரட்டை அணுகுமுறையை, இலங்கையுடன் முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு அமெரிக்கா தான். 

    இலங்கையில் போர் முடிவுக்கு வந்தவுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், என்று ஒரு வழியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய போது, அது இலங்கையுடனான நெருக்கத்தைக் குறைக்கும் என்று அமெரிக்கா உணர்ந்திருந்தது. ஆனால், இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் அமைவிடத்தின் முக்கியத்துவம் கருதி, இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்வதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இலங்கை விமானப்படைக்கு கடல்சார் கண்காணிப்புக்கான கருவிகளைக் கொடுத்தும், பசுபிக் கட்டளைப் பீடத்தின் மூலம் பயிற்சிகள், கூட்டுப் பயிற்சிகளை நடத்தியும், சில உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும், பாதுகாப்பு உறவுகளை கெட்டுப் போகாமல் பாதுகாத்துக் கொண்டது அமெரிக்கா. 

    இன்று வரை அது சுமுகமாகவே தொடர்கிறது. 

    அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும், கொழும்பும் கிட்டத்தட்ட கீரியும் பாம்பும் என்ற நிலை வரைக்கும் சென்றுள்ளன. 

    இதுபோலத் தான், இப்போது இந்தியாவும் இரட்டை அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. 

    தமிழ்நாடு, புதுடெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இலங்கையுடனான உறவுகளை சமநிலைப்படுத்திக் கொள்வதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு இந்திய அரசுக்கு அவசியமாக உள்ளது. அரசியல் இராஜதந்திர ரீதியாக தமிழ்நாட்டின் உள்ளார்ந்த விருப்ப ஈடுபாடுகளுக்காக நெகிழ்ந்து போக நேர்ந்தாலும், பாதுகாப்பு ரீதியாக அத்தகைய இழுப்புகளுக்கு விட்டுக் கொடுக்காத போக்கை புதுடெல்லி அண்மைக்காலமாக கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. 

    விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு, இந்தியா மறைமுகமாகவும், வெளிப்படையாகவும், போர்த்தளபாட உதவிகள் உள்ளிட்டவற்றை கொடுத்திருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையுடன் எத்தகைய பாதுகாப்பு உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தாலும், அவை எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படும் விவகாரம், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடும் விவகாரம், உள்ளிட்டவற்றில் தமிழகம் எந்தளவுக்கு முட்டி மோதியும் எதையுமே சாதிக்க முடியவில்லை. 

    இப்போதும் கூட, இருதரப்பு கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளில் நெருக்கம் அதிகரித்துள்ளது. 

    இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தேவேந்திரகுமார் ஜோஷி, இலங்கையில் 5 நாள் பயணம் மேற்கொண்டிருந்ததும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லிக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டிருந்ததும், இந்த உறவின் முக்கிய அடையாளங்களாகும். இந்திய கடற்படைத் தளபதி, காலி கலந்துரையாடலுக்காகவே வந்திருந்தாலும், மேலதிகமாக மூன்று நாட்கள் இங்கு தங்கியிருந்து, முக்கிய கடற்படைத் தளங்களுக்கு சென்றதுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரைச் சந்தித்து விட்டே போயிருக்கிறார். அத்துடன், இலங்கைக் கடற்படையைச் சேரந்த நால்வருக்கு தொழில்நுட்ப பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான, வசதியை அளிக்கவும் அவர் இணங்கியுள்ளார். அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச, புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் நோக்கம் குறித்து இன்னமும் எந்த தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை. 

    இரண்டு நாட்கள் புதுடெல்லியில் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தி விட்டு, அங்கிருந்து கொழும்பு திரும்பிய பின்னர் தான், அவர் வந்து சென்ற விவகாரமே புதுடெல்லி ஊடகங்களுக்குத் தெரியவந்தது. அவர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் குறிப்பாக, இந்தியக் கடற்படைத் தளபதிகளுடன் இரண்டு நாட்களும் பேச்சுக்களை நடத்தியதாகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்ததாகவும் மட்டுமே மொட்டையான தகவலகள் வெளியாகின. கொழும்பு திரும்ப முன்னர் அவர் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷத்தை சந்தித்தது கூட ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்படுகிறது. எனவே அவரது புதுடெல்லிப் பயணத்தின் அடிப்படை, அரசியல் இராஜதந்திர நோக்கிலானது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. 

    பாதுகாப்பு ரீதியாக இலங்கையுடன் இந்தியா நெருக்கத்தை கொண்டுள்ளதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் குறிப்பிடலாம். 

    முதலாவது,

    சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் இலங்கை கொண்டுள்ள உறவுகள் பலமடைந்து வரும் நிலையில், பாதுகாப்பு துறையிலும் அத்தகைய இடைவெளி ஒன்று ஏற்படுவதை, அதற்கு இடமளிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. இந்தியா எங்கிருந்தெல்லாம் பின்வாங்குகிதோ அங்கெல்லாம் மூக்கை நுழைப்பதற்கு சீன ஆர்வம் காட்டுவதால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடனான நெருக்கத்தை குறைத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை. 

    அடுத்தது,

    இந்தியாவுக்கு அதிகரித்து வரும் கடல்வழி பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. குறிப்பாக, கடற்கொள்ளையருக்கு எதிரான செயற்பாடு என்ற போர்வையில் செயற்படும் தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் தீவிரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்று இந்தியா அதிகளவில் அச்சம் கொண்டுள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள கடலில் 140 தனியார் ஆயுதக்கப்பல்கள் நடமாடுவதாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜோஷி கடந்தவாரம் கூறியுள்ளார். இந்தியப் பெருங்கடலில், முக்கியமான இடத்தில் அமைந்துள்ள, இலங்கையின் உதவியும் ஒத்துழைப்பும் இருந்தால் தான், இத்தகைய தீவிரவாத தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடியும். எனவே இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை குறிப்பாக கடற்படைகளுக்கு இடையிலான நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த நினைக்கிறது இந்தியா. 

    அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த இலங்கையுடன் அவுஸ்ரேலியா எவ்வாறு பாதுகாப்பு ஒத்தழைப்பை வலுப்படுத்தியுள்ளதோ, அதுபோலத் தான், தனக்கு எதிரான அச்சுறுத்தலகளை முறியடிக்க இலங்கையுடன் நட்புறவு கொள்வதை விட இந்தியாவுக்கு வேறு வழிஇல்லை.இந்தியாவின் இந்தப் பலவீனம் தான் இலங்கைக்கு சாதகமாக உள்ளது, 

    அரசியல் இராஜதந்திர முனையில் இந்தியா அழுத்தங்களை கொடுத்தாலும், பாதுகாப்பு ஒத்துழைப்பு ரீதியாக வலிய வந்து ஒட்டிக் கொள்ளும், இந்தியாவின் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது இலங்கை. இந்த பாதுகாப்பு உறவுகளை தமிழ்நாட்டின் எந்த அரசியல் அழுத்தங்களாலும் உடைக்க முடியாது, ஒருவேளை, வரும் மே மாதத்துக்குப் பின்னர், புதுடெல்லியில் பாஜக ஆட்சி பீடமேறினாலும் கூட, இந்த வியூகத்தில் இருந்து வெளிவர முடியாது. 

    ஒருபக்கத்தில், இலங்கை அரசுக்கு தலைவலி கொடுப்பதாக காட்டிக் கொண்டாலும், இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த இரட்டை அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், இந்தியாவின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பி விடலாம் என்று தமிழ்நாடோ அன்றி, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளோ எத்தகைய கணக்கைப் போட்டாலும் அது பலிக்கப் போவதில்லை.

 

நன்றி :இன்போ தமிழ் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.