Jump to content

நாஸி லிமா(க்) (nasi limak)


Recommended Posts

 
IMG_0240.JPG

 

 
 
              நாஸி லிமா(க்) (nasi limak)
 
தேவையான பொருட்கள்
 
பாஸ்மதி அரிசி    - 3கப்
 
தேங்காய் பால்    - 4 ½ கப்
 
பூண்டு              - 4 பல்
 
டவுண்பாண்டா இலை(அ)
பிரிஞ்சி இலை     - 1
 
பட்டை              - 1 இன்ச் அளவு
 
வேர்கடலை        - அரை கப்
 
நெத்திலி கருவாடு   - அரை கப்
 
கெட்டியான புளி தண்ணீர்  - 2 (அ) 3 ஸ்பூன்
 
முட்டை     - 5
 
நெய்        - 3 ஸ்பூன்
 
வெள்ளரிக்காய்  - இரண்டு
 
சீனீ                - ஒரு ஸ்பூன்
 
அரைத்துக்கொள்ள:-)
 
சின்ன வெங்காயம்    - அரை கப்
 
பூண்டு     - 3 பல்
 
இஞ்சி      - ஒரு இன்ச் அளவு
 
காய்ந்த மிளகாய்   - அரை கப்
 
நெத்திலி கருவாடு   - 8
 
செய்முறை :-
IMG_0236.JPG
 
 
அரைக்க கொடுத்த பொருட்களை ஒரு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடம் 
 
வதக்கி ஆர வைத்தும் அரைக்கலாம்.இல்லையென்றால் சும்மாவே மிக்ஸியில் நைசாக 
 
அரைத்து வைத்து கொள்ளவும்.
 
முட்டையையும் வேக வைத்துக்கொள்ளவும்.
 
IMG_0235.JPG
 
இப்போது சாதம் செய்வதற்க்கு எலெக்ட்ரிக் குக்கரிலையோ அல்லது சாதா 
 
பாத்திரத்திலையோ மிகவும் அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்  கலந்த தேங்காய் 
 
பாலை(இங்கே பாக்கெட் தேங்காய்பாலையே தண்ணீர் கலந்து ஊற்றுகிறார்கள் நன்றாகதான் 
 
இருகின்றது)கொடுத்திருக்கும் அளவில் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு 
 
போட்டு,பூண்டையும் நசுக்கி அதையும்,பட்டை,டவுண்பாண்டா இலை,நெய் இவற்றையும் 
 
போட்டு கொதி வந்ததும் சுத்தம் செய்து கால் மணிநேரம் ஊற வைத்திருக்கும் 
 
அரிசியையும்,தேவையான அளவு உப்பும் போட்டு நன்கு கிளறி நன்கு கொதித்ததும் தம் 
 
போடவும்.
IMG_0237.JPG
 
 
அது தம் ஆவதற்க்குள் அரைத்து வைத்திருப்பதை கொண்டு சம்பல் என்கிற க்ரேவி தயாரித்து 
 
விடலாம்.ஒரு வானலியில் எண்ணெய் விட்டு அதில் கடலையை வறுத்து எடுத்து வைத்துக் 
 
கொள்ளவும்.அதே போல் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் நெத்திலியில் சிறிது 
 
உப்பு,மிளகாய்த்தூள் போட்டு பிரட்டி அதையும் அந்த எண்ணெயில் சிவக்க வறுத்து எடுத்து 
 
இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின் அதே எண்ணெயில் இந்த அரைத்து 
 

IMG_0238.JPGIMG_0239.JPG
 
 
வைத்திருக்கும் விழுதை கொட்டி சிறிது தண்ணீர் அலசி ஊற்றி புளித்தண்ணீர்,உப்பு,சீனி 
 
இவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மிலேயே சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க 
 
விடவும்.அந்த மசாலா நன்கு சுண்டி எண்ணேய் மேலே மிதந்து வாசமாக வந்தவுடன் இறக்கி 
 
விடவும்.
 
 
இப்போது எப்படி கடையில் நாஸி லிமக் என்று கேட்டால் கொடுப்பார்களோ அப்படியே 
 
காண்பிக்கிறேன் பாருங்கள்.
 
IMG_0240.JPG
 
ஒரு ப்ளேட் அல்லது பவுலில் வட்ட அச்சு வடிவில் தேங்காய் பால் சாதத்தை நடுவில் கொட்டி 
 
அதன் மேல் முட்டையை பாதியாக வெட்டி வைத்து ஒரு பக்கம் அந்த சம்பலையும்(சாதத்தின் 
 
மேலேயே அந்த க்ரேவியை போட்டுதான் தருவார்கள் நான் சைடில் தெரிவதற்க்காக 
 
வைத்துள்ளேன்),மற்றொரு  பக்கம் வறுத்த கடலை நெத்திலி காம்பினேஷனையும் வைத்து 
 
சுற்றி நறுக்கிய  வெள்ளரிக்காயோடு தருவார்கள்.இது பார்க்க மட்டுமல்லாமல் சாப்பிடவும் 
 
சுவையாக  இருக்கும். 
 
நாஸி லிமா(க்)ஆயம் என்றால் இந்த காம்பினேஷனுடன் கோழியையும் சேர்த்து 
 
தருவது.அதுவும் சேர்ந்து இருந்தால் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவே
 
தேவையில்லை.நாம் வெளியில் சாப்பிடுவதை விட இது போல் ஆசையாக இருக்கும் போது
 
வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுத்தமாக செய்து சாப்பிட்ட ஒரு திருப்தியோடு
 
நமக்கும் அடிக்கடி செய்யும் சமையலில் இருந்து ஒரு சின்ன மாற்றமாகவும்இருக்கும் இல்லையா...?
 
முயன்று பாருங்களேன்.
 
குறிப்பு:- இந்த சம்பலில் அதிக காரம் விரும்புவோர் கூடுதல் காய்ந்த
மிளகாயையும்,நெத்திலி வாசம் விரும்புவோர் அதையும் கூடுதலாக சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாஸி என்று... ஜேர்மனியில் உச்சரித்தால், ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
இதுக்கு... வேறை பெயர் வைத்தால், நல்லது. நுணா... :D

Link to comment
Share on other sites

நாசி என்றால் மலாயில் சோறு.. லெமா என்றால் ஆடு என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.. இதில் ஆட்டையே காணவில்லையே.. :unsure: உடாங் தான் உள்ளது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தால் னன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கின்றேன். ஒரு நாளைக்கு மனுசியோட  சன்டை பிடித்திட்டு அவள் இல்லாத நேரத்தில் இதச் செய்து கொடுக்கவேண்டும்!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்க்கு நன்றி நூணாவிலான்.   

Link to comment
Share on other sites

எதேச்சையாக இன்று வேலைக்குப் பக்கத்த்தில் உள்ள கடையில் 'நாசி லிமாக்' சாப்பிட்டேன்.

தேங்காய்ப் பாலில் அவித்த சோறுடன் கோழிக் குழம்பு, நெததலிக் கருவாட்டுப் பொரியல்,  உறைப்பான சம்பல், வெள் ளரிககாய் துண்டுகள் தந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை உடம்பு நாசமாய்ப்போனாலும் பரவாயில்லை....வாற சனிக்கிழமை சமைச்சு சாப்பிடத்தான் இருக்கு....... :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.