Jump to content

அரிசிமாத் தோசை


Recommended Posts

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%883.jp

அரிசிமாத் தோசை – யாழ்ப்பாணம் முறை:

 

 
தேவையான பொருள்கள்:
 
புழுங்கல் அரிசி –  2 சுண்டு

 

பச்சரிசி – 2 சுண்டு

 

முழு உளுத்தம் பருப்பு – 1 சுண்டு (தோல் நீக்கியது)

 

வெந்தயம் – 2 – 3 மேசைக் கறண்டி

 

மிளகு, சீரகம் - 1 தேக் கறண்டி (தூள்)
 
மஞ்சள் தூள் - கொஞ்சம்
 
உப்பு – தேவையான அளவு

 

 
தாளிதப் பொருட்கள்:
 
(கடுகு,
 
பெருஞ்சீரகம்,
 
கருவேப்பிலை,
 
நறுக்கிய வெண்காயம்,
 
2-3 செத்தல் மிளகாய் சிறிதாக நறுக்கியவை)

 

எண்ணை – தேவையான அளவு
 
(அரிசிகளின் அளவை தேவைக் கேற்ப கூட்டியும் குறைத்தும் செய்யும் போது மற்றைய பொருட்களின் அளவையும் கூட்டியும் குறைதும் தயாரிக்கவும்-இவை பொதுவான அளவுகள்)
 
 
செய்முறை:
 
தோசை வகைகளில் மாக்கலவை எல்லாவற்றிக்கும் பொதுவானவை. ஆனால் அவற்றின் மேல் சேர்க்கப் பெறும் பொருட்களைப் பொறுத்து அவற்றிக்கு பெயர் சூட்டப்பெறுகின்றது.
பொதுவாக அரிசிமாத் தோசைக் கான செய்முறை: 
 
புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு இவை யாவற்றையும் ஒன்றாக  சேர்த்து 3 - 4 மணி நேரம் வரை  தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின்;

கிரைண்டரில்  அல்லது ஆட்டுக் கல்லில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக  பசை போல் அரைத்துக் கொள்ளவும். மிக மெதுமையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும். மாவை எவ்வளவு மெதுமையாக அரத்து எடுக்கின்றோமோ அவ்வளவுக்கு தோசையும் மெதுமையாக இருக்கும்.

அரைத்த மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் வழித்தெடுத்து 6, 7 மணித்தியாலங்களுக்கு பிறிம்பாக மூடிவைத்து (புளிக்க) பொங்க விடவும். சிலர் கணக்கான உப்பையும் போட்டு வைப்பார்கள. ஆனால் உப்புப் போட்டால் பொங்குவதற்கு நேரம் எடுக்கும் என்பதனால் பலர் தோசை சுடும்போது போடுகிறார்கள்.

மா பொங்கியதும் அதற்குள் மிளகு-சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் தாளிதம் செய்து அதனையும் அதற்குள் இட்டு நன்றாக கலக்கவும். இப்போது தோசை மா றெடி.

தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, அகப்பையால்  மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும். தோசையின் மேல் சுற்றிலும் ஒரு தேக்கறண்டி  நல்லெண்ணை விட்டு, சிவந்ததும் தட்டகப்பையால் திருப்பிப் போட வேண்டும். எண்ணெய் விட்டதனால் சுலபமாகத் திருப்ப முடியும்.

அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு எண்ணெய் தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக இருக்கும்.  

மெதுமையான தோசை தேவையாயின் பச்சரிசியை கூட்டி புழுங்கல் அரிசியை குறைத்தும் அல்லது கொஞ்ச கோதுமை மாவையும் கலந்தும் செய்யலாம். அல்லது அரிசிக்குப் பதிலாக சாதத்தையும் (சோறு) சேர்த்து அரைக்கலாம். அல்லது உழுந்தை மாத்திரம் அரைத்தெடுத்து அத்துடன் கோதுமை மாவை கலந்தும் தோசை செய்யலாம். 

எண்ணெய்க்கு பதிலாக பட்டர், நெய் விட்டும் சுடலாம். இவை யாவும் வித்தியாசமான வாசனையுடன் ருசியாகவும் இருக்கும். இவற்றை பட்டர்தோசை, நெய்த்தோசை என அழைப்பர்.

தோசைமீது எண்ணெய் விடாது தோசைக் கல்லில் மாக்கலவையை வார்ப்பதற்கு முன் ஒரு சிறிய துணிப் பொட்டலத்தில் எண்ணெய் அதன் மூலம் மெல்லிதாக தோசைக் கல்லில் எண்ணெய் பூசியும் சுடலாம். இதை கல்லுத் தோசை என்பார்கள்.
 
கல்லுத் தோசையின் மீது ஒன்றோ அல்லது இரண்டோ முட்டைகளை அடித்து ஊற்றி செய்யப் பெறும் தோசை முட்டைத்தோசை எனப்பெறும்.
இத் தோசை மாக்கலவையை சிறிது இளக்கமாக கரைத்து நீள்வட்டமாகவும், பெரிதாகவும், கல்லில் ஒட்டியது போல் மெல்லியதாகவும் சுடும் தோசை பேப்பர் தோசைஎனப்பெறும்.  இவை இந்தியாவில் மிகவும் பிரபல்யம்.
கல்லுத் தோசை சுடும்போது உருளைக்கிழங்குப் பிரட்டலை அதன் மேல் பரவி தோசை வெந்ததும் அதனை சுறுட்டி, அல்லது மடித்தெடுத்தால் மசாலா தோசைஆகிவிடும். இதற்கு கறி தேவையில்லை றோல்ஸ், போல் பாடசாலைக்கு, அல்லது வேலைத் தலங்களுக்கு ஸ்ரைலாக எடுத்துச்செல்லலாம்.
அரைத்தெடுத்த மாக் கலவையில் அடுத்த அரைமணி நேரத்திலும் தோசை சுடலாம். ஆனால் அவை புளிப்படையாத காரணத்தினால் றொட்டி போன்று இருக்கும். சிறு சிறு ஓட்டை விழாது.றோட்டி போன்று விறைப்பாக இருக்கும். அவசரத்திற்கு சாப்பிடலாம்.

குளிர் காலங்களில் அல்லது குளிர் நாடுகளில் இந்த மாக்கலவை பொங்க அதிக நேரம் பிடிக்கும் அல்லது பொங்கவே மாட்டாது. அதனால் அக்கலவைக்குள் கொஞ்ச தயிர் அல்லது ஈஸ்ற் சேர்த்து சூடு உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

பொங்க வைத்த மாவை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 2 - 3 நாட்களுக்கும் வைத்தும் தோசை செய்யலாம்.

பொங்கிய மாவில் சுட்ட தோசை ருசியாகவும் மெருதுவாகவும் இருக்கும். இதனை பொரித்து இடித்த மிளகாய்ச் சம்பலுடன் அல்லது மீன், இறைச்சி கறியுடன் அல்லது உறுளைக்கிழங்கு பிரட்டலுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

 

நன்றி:- http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=767:2010-10-29-01-18-12&catid=90:games&Itemid=455

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் தோசை மாவை வெளியே வைத்தாலும் புளிக்காது. நன்றி அலை பகிர்வுக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தோசை எனக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாகும், அதுவும் கட்டி சட்னியும், காரச்சட்னியும், தோசைக் கறியும் என்றால்  ம் ...., ஒரு பிடி பிடிப்பேன்.  :D
 
பகிர்விற்க்கு நன்றி அலைமகள்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் தோசை மா புளிப்பதற்கு ,  அவனைச் சூடாக்கிவிட்டு  பின் அவனை அணைத்துவிட்டு  அவனுள் தோசை மாக் கரைசலை வைத்தால் கெதியில் புளித்துவிடும். :D

 

பி.கு: எவனைச் சூடாக்கி  பின் எவனை அணைக்கிறதென்டு எக்குத்தப்பாக எல்லாம் நிணைக்கக் கூடாது. :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்தில் தோசை மா புளிப்பதற்கு ,  அவனைச் சூடாக்கிவிட்டு  பின் அவனை அணைத்துவிட்டு  அவனுள் தோசை மாக் கரைசலை வைத்தால் கெதியில் புளித்துவிடும். :D

 

பி.கு: எவனைச் சூடாக்கி  பின் எவனை அணைக்கிறதென்டு எக்குத்தப்பாக எல்லாம் நினைக்கக் கூடாது. :lol:

 

அவன் என்னிடம் இல்லை. அவல் தான் உள்ளது. :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் என்னிடம் இல்லை. அவல் தான் உள்ளது. :o

 

உங்களிடம்  அவல் இருந்தால் நல்லது,  என்னிடம் உமி உள்ளது , அதைக் கலந்து இருவரும் ஊதி ஊதிச் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடருவோம்  வன்னியன்!! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த உணவுகளில், தோசை மிகவும் பிடித்தது. 
ஆனால் இதுவரை... உழுந்து தோசை, கோதம்ப மா தோசை மட்டுமே சாப்பிட்டுள்ளேன்.
அரிசி மா தோசை சாப்பிட்டதாக ஞாபகமில்லை.
விரைவில்.. இந்த முறையில், தோசை சுட ஐடியா இருக்கு.
தகவலுக்கு நன்றி அலை.

Link to comment
Share on other sites

எனக்குப் பிடித்த உணவுகளில், தோசை மிகவும் பிடித்தது. 

ஆனால் இதுவரை... உழுந்து தோசை, கோதம்ப மா தோசை மட்டுமே சாப்பிட்டுள்ளேன்.

அரிசி மா தோசை சாப்பிட்டதாக ஞாபகமில்லை.

விரைவில்.. இந்த முறையில், தோசை சுட ஐடியா இருக்கு.

தகவலுக்கு நன்றி அலை.

 

 

கருத்துக்கு நன்றி தமிழ்சிறி, சாப்பிட்டுட்டுக் கருத்தை எழுதுங்கோ  :)

Link to comment
Share on other sites

நானும் தோசை என்றால் நல்லா வெட்டுவேன் (அடிக்கடி சரவணபவன் போவேன் ).

ஒரு சுண்டு உழுந்திற்கு நாலு சுண்டு அரிசி போட்டு ஒருக்காலும் தோசை தின்றதாக நினைவில்லை .அடுத்த முறை கேட்டுப்பார்ப்பம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுண்டு என்று குறிப்பிட்டுள்ளது எங்கள் சுண்டலையா?

 

 

பாருங்க

இவருக்கு வேறு ஒரு பிரச்சினை......... :lol:  :D

(தோசைக்குள்ள  நிழலி  என்ன  எழுதப்போறார் என்று வந்தால்... :D )

Link to comment
Share on other sites

நானும் தோசை என்றால் நல்லா வெட்டுவேன் (அடிக்கடி சரவணபவன் போவேன் ).

ஒரு சுண்டு உழுந்திற்கு நாலு சுண்டு அரிசி போட்டு ஒருக்காலும் தோசை தின்றதாக நினைவில்லை .அடுத்த முறை கேட்டுப்பார்ப்பம் .

 

 

கருத்துக்கு  நன்றி அர்ஜுன் அண்ணா!

 

அரிசி  கூடப் போட்டால் தோசை மொறு, மொறுப்பாக வரும் என நினைக்கிறேன். நானும் ஒருக்கா இந்த முறைப்படி செய்து பார்க்க வேணும்,எதுக்கும் தமிழ்சிறி சொல்லட்டும் முதல்  :D 

இங்கு சுண்டு என்று குறிப்பிட்டுள்ளது எங்கள் சுண்டலையா?

 

 

அவரே தான்  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதிலேயே சோத்து அன்ரிமார் என்று யாழில சப்புக் கொட்டுகினம்.... இதில வேற அரிசிமாத் தோசையா? தேவைதானே நமக்கு :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் தோசை பிடித்த உணவு. ஆனால் அரிசிமா தோசை இன்னும் சுட்டுப்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

உள்ளதிலேயே சோத்து அன்ரிமார் என்று யாழில சப்புக் கொட்டுகினம்.... இதில வேற அரிசிமாத் தோசையா? தேவைதானே நமக்கு :icon_mrgreen:

 

 

பறுவாயிலை சகாரா ஒரு நாளைக்குத் தானே சுட்டுப் பாருங்கோ!

எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் தோசை பிடித்த உணவு. ஆனால் அரிசிமா தோசை இன்னும் சுட்டுப்பார்க்கவில்லை.

 

 

ஒரு நாளைக்குச் சுட்டுப் பாருங்கோ ராசம்மாக்கா!

Link to comment
Share on other sites

 சாமை தோசை

 
சில வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக, மகாராஷ்டிராவில், நவராத்திரி விரதத்தின் போது, சாமை அரிசியில் செய்த உணவை விரும்பி உண்கிறார்கள். அவர்களுக்கு, சாமை விரத கால உணவு. நல்லவை எவ்வளவு தொலைவிலிருந்து வந்தாலும், விரும்பி ஏற்கலாமே?
 
samaidosaifinal.JPG சாமை தோசை 
samaidosaititle.JPG

சாமை மாவு 

தக்காளி

பச்சை மிளகாய் 

மிளகு, சீரக பொடி 

உப்பு  

samaidosaieppadi.JPG

ஒரு டம்ளர் சாமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கவும். மிளகு, சீரகபொடி கலந்து நீர் விட்டு கரைக்கவும்.தோசை மாவு பதம் வருமளவில் தண்ணீர் சேர்க்கவும். தோசை கல்லை சூடாக்கி  வார்க்கவும். ஒரே சீராக ஊற்ற வேண்டும். கரண்டியால் தேய்க்கக் கூடாது.
 
samaidosaiingfinal.JPG சாமை மாவு +தக்காளி+பச்சை மிளகாய்+

மிளகு, சீரக பொடி+உப்பு

 

ஆர்கானிக் பொருட்கள் விற்கும் கடைகளில், சாமை மாவு கிடைக்கும்.மிளகு, சீரக பொடி தயார் செய்து வைத்துக் கொண்டால் நொடியில் ரெடி சாமை தோசை.

சாமை மாவை கரைத்த உடனே தோசை வார்க்கலாம்.காத்திருக்க தேவையில்லை.

சாமை தோசை சுவை மிக நன்றாக வந்திருந்தது.

வழக்கமாக தோசைக்கு தொட்டுக் கொள்ளும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி துவையல், தோசை மிளகாய் பொடி....இவற்றில் ஏதாவது ஒன்றை தொட்டு சாப்பிடலாம். மிளகு, சீரக பொடியும், தக்காளியும் சேர்ப்பதால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே கூட சாமை தோசையை சாப்பிடலாம்.   

http://thalaivazhaivirundhu.blogspot.ca/2013/10/blog-post_8755.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
    • இல்லை, தமிழர்கள் கொழும்பிலே பெருமளவு நிதியைக்கொட்டியே வாழ்கிறார்கள். யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. ஆனால் சிங்களவர்கள் படைபலத் துணையோடு தமிழரது நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள். கடைசியாகத் தமிழரது மேய்ச்சற்தரைகளும் பறிக்கப்படுகின்றன. புத்தர்சிலைகள் வைத்தல். தமிழரது பாரம்பரிய வாழிடங்களோடு வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்படுகிறது. தமிழர் கொழும்பில் வாழ்வதையும் வட-கிழக்கில் சிங்களம் திட்டமிட்டுக் குடியேற்றம் செய்வதையும் ஒன்றென்பவர்களுக்கு எமது தேசம் குறித்த தெளிவீனம் கரணியமாக இருக்கலாம். அல்லது சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கும் நோக்கமாகவும் இருக்கலாம்.  நன்றி  
    • கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக  அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு. ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்?   According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia.   7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில்  74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......
    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.