Jump to content

ஒபாமா-ரவுல் காஸ்ட்ரோ கை குலுக்கியது எதிர்பாராமல் நடந்த சம்பவம்: அமெரிக்கா


Recommended Posts

நெல்சன் மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1961-ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் அரசியல் உறவு ஏற்படுத்திக் கொண்டதால் கியூபாவுடனான அரசியல் உறவை துண்டித்துக் கொண்டது அமெரிக்கா.

இந்நிலையில், நேற்று முன்தினம் தென்ஆப்ரிக்காவில் மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதற்கு, சுதந்திர உலகத் தலைவர் ஒருவரும், சர்வாதிகாரி ஒருவரும் கைகுலுக்கிக் கொள்வது ஏற்கத்தக்கதல்ல என அமெரிக்காவின் குடியரசு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக கியூபா அதிபல் ரவுல் காஸ்ட்ரோவிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா கைகுலுக்கியது திட்டமிட்ட செயல் அல்ல என விளக்கம் அளித்துள்ளார் வெள்ளை மாளிகையின் உதவியாளர் பென் ரோட்ஸ்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது,

‘மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டார்களே தவிர, இதில் வேறெந்த முக்கியத்துவமும் இல்லை. மேலும், கியூபாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், கியூபா தரப்பில் இந்தக் கைகுலுக்கல் பற்றிக் குறிப்பிடுகையில், ‘இருநாட்டு தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளுக்கு முடிவு கட்டுவதாக அமைந்துள்ளது’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க, கியூபா அரசியல் பிரிவிற்குப் பின்னர், கியூபா அதிபர் ஒருவருடன் கைகுலுக்கும் 2 -வது அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த ஐ.நா. சபை கூட்டத்தின்போது முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார்.

mandela1-610x801.jpg

131210-obama-castro-hmed-650a.photoblog6

D5454541.jpg

http://www.mrtamil.com/news/126768.html

Link to comment
Share on other sites

ராகுல் காஸ்ட்ரோ ஏற்கனவே சிறு அளவில் கூபாவை தனியார்மயபடுதித்தி வருகிறார்.

அண்ணர் மண்டைய போட்ட உடனே கபிடலிசம் புகுந்துவிடும்.

எல்லாம் செட்டப்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.