Jump to content

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிகாரியிடம் நாடு இருக்கும் வரை கடும் அதிர்ச்சியைதான் இந்தியர்கள் காட்ட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர்" இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

devyani-khobragade1_CI.jpg

அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதைக் கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கர்கள் எப்போதுமே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் இந்தியா  கை வைத்துள்ளது. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகமே இதைச் செய்துள்ளது. அவை அத்தனையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது. தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்தியப் பெண் தூதரக அதிகாரியின் உடையை களைந்து  அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர் - இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-

 01:49

விசா மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியப் பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்ட செயல் இரு நாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து செல்வதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த செயலுக்கு வழக்கம் போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்து வருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடி நடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இந்திய அளவில் ஏற்பட்டு இருக்கின்றது.

தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்றுள்ள அமெரிக்க எம்.பிக்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனனும் மறுத்துள்ளனர்.

தேவயானி விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40வது பிரிவை அமெரிக்கா மீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒரு தூதரக அதிகாரி என்பது தெரிந்தும் கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படி நடந்துள்ளனர் என்றனர். 1999ம் ஆண்டு முதல் ஐஎப்எஸ் அதிகாரி தேவயானி. அவர் தூதரக அதிகாரி என்றாலும் கூட அவருக்குப் சட்டப் பாதுகாப்பு சிறப்பு சலுகையைத் தர முடியாது என்று அமெரிக்கா திமிராகப் பேசி வருகிறது. மேலும் உயர் மட்ட அளவிலிருந்து வந்த உத்தரவுப்படியே தாங்கள் நடந்து வருவதாகவும், நியூயார்க் போலீஸார் கூறுகிறார்கள்.

இந்திய பெண் தூதர் கைதுக்கு எதிர்ப்பு.. அமெரிக்க எம்.பிக்களைச் சந்திக்க ராகுல், மோடி மறுப்பு

இந்தியத் துணைத் தூதர் தேவ்யானியை அமெரிக்கப் போலீஸார் அடாவடியாக கைது செய்து, கைவிலங்கிட்டும், ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ரத்து செய்து விட்டனர். ஆனால் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்து என்று ராகுல் காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றப் பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்கவில்லை என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துணைத் தூதருக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் தான் அமெரிக்க குழுவை சந்திக்கவில்லை என்று வெளிப்படையாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், நமது நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களுக்குத் துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதே குழுவை, இதே காரணத்திற்காக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சந்திக்க மறுத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்க்வீகெர்ட், ராபர்ட் உடால், மெடலின் போர்டெல்லா ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு டெல்லி சென்றுள்ளது. இந்தக் குழுவைச் சந்திக்கத்தான் இந்தியத் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தனது அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிக்குமாறு இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100469/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

Link to comment
Share on other sites

இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

 

 

 

குண்டை கொண்டு வந்து போட்டு விடுமோ என பயமாக உள்ளது. சில வேளை 3ம் உலக யுத்தம் கூட உருவாகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோவில் மன்மோகன் சிங் என்னத்தை செய்கிறாரோ அதுபோல தான் இந்தியாவின் கடுமையான நடவடிக்கையாக இருக்கும்  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏட்டுகளுக்கு எல்லா சட்டமும் தெரியும் என்றில்லை.. தெருவில் ஏதாவது சந்தேகத்தில் மறித்திருக்க வாய்ப்பு உள்ளது.. தேவையான அடையாள அட்டை ஏதும் இல்லாமல் சென்றிருந்தால் சிக்கலில் மாட்டியிருக்க வாய்ப்பு உண்டு. :blink:

ஆனானப்பட்ட எம்.கே நாராயணனே சத்தம் வைக்காமல் கொழும்பு வீதியொன்றில்.. நடந்தே ஹோட்டலுக்குப் போனவர்.. :D இதையெல்லாம் பெரிசுபடுத்தப்படாது.. :lol:

 

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள். 

 

Link to comment
Share on other sites

விசயம் சாதாரண சந்தேகமல்ல. விசா மோசடி, வேலையாளுக்கு உரிய சம்பளம் கொடுக்காமை போன்ற குற்றச் சாட்டுகள் அமெரிக்காவில் பாரதூரமானவை. இது போன்ற விதிமீறல்களை இந்தியர்கள் பலர் இங்கு செய்கிறார்கள். பெற்றோரைப் பிள்ளை பார்க்கக் கூப்பிட்டு விட்டு அவர்களுக்கு தாங்கள் காசு செலவு செய்ததாக பொயக்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது எல்லாம் பல இடங்களில் நடக்கிறது. அது போன்ற ஒரு விடயமாக இருக்கக் கூடும். ராஜ தந்திரப் பாதுகாப்பில் இருக்கும் பல நாட்டவர்கள் இப்படியான வேலைகளைத் துணிந்து செய்வதுண்டு-அண்மையில் ரஷ்யர்கள் பலரும் இப்படியான கேஸ் ஒன்றில் மாட்டிக் கொண்டார்கள்.

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒரு காங்கிரஸ் பெரும்புள்ளியின் கையாளாகத்தான் இந்தப் பெண்மணி இந்தப் பதவியைப் பெற்றிருக்க வேண்டும்.  செய்த பிழையை விசாரிக்க வேண்டியது அமெரிக்கப் பொலீஸாரின் கடமை.  சும்மா முகத்துக்கு அஞ்சி இதையெல்லாம் விடமுடியாது. உவவை பெரிய பதவியில் வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பியது காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறு. அதற்காக அமெரிக்காவுடன் ராஜதந்திர இழுபறிகளில் காங்கிரஸார் ஈடுபடுவது இந்தியாவுக்கு நல்லதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

 

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவயானி நல்ல களையா இருக்கிறா.. :wub: அவக்கேன் உந்தத் தேவையில்லாத வேலை?? :unsure::D

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..
Link to comment
Share on other sites

அதுதானே உடையெல்லாம் களைந்து பரிசோதனை வேற ஐயோ...ஐயோ...இதால இரவு நித்திரையும் போச்சே..

அந்தக் கொடுமையைத் தாங்கின ஏட்டய்யாவுக்கு நிவாரணம் குடுப்பினமா?? :blink::D

Link to comment
Share on other sites

எந்தச் செய்தியக் கொண்டு வந்து போட்டாலும் அதில இதையே தேடுங்கோ! நல்லா வருவீங்கப்பா நீங்களெல்லாம்! உங்களோட சேர்ந்து என்னை மாதிரி நல்ல பிள்ளையளும் பழுதாப் போகுங்கள், நான் வாறன்! <_<

 

ஆமாம் நானும் கொஞ்சம் கெட்டு போய்க்கொண்டிருக்கிற மாதிரி ஒரு பீலிங் .............. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்போது நடந்து கொள்ளும் விதம் தான் சிரிப்பாக உள்ளது. பாதுகாப்பினைக் குறைக்கின்றார்களாம்.அமெரிக்கர்களிடம் விசாரணை நடத்துகின்றார்களாம்...உண்மையில் இவ்வளவு நாளும், அமெரிக்கர்கள் இந்தியாவில் முரணாக நடந்து கொண்டதை அனுமதித்தார்கள் போலுள்ளது. தங்களுக்குப் பிரச்சனை வரும்போது தான் அதைக் கிண்டுகின்றார்கள் எனும்போது, அது இந்தியாவின் சட்டத்தை எப்படிப் பின்பற்றுகின்றார்கள் என்ற கேலிக்குரிய அரசாக வெளிப்படுத்துகின்றது. இருக்காதா பின்னே, மின்கலம் வாங்கியதற்காக 22 வருடங்களுக்கு மேலாக ஒருவனைச் சிறையில் போட்டு வதைக்கும் நாடு அல்லவா அது....

அமெரிக்காவின் செயலில் தப்பு உள்ளது போல் தெரியவில்லை. இந்தப் பெண் தூதரக பிரச்சனையில் சிறை செல்லவில்லை. தனிப்பட்டரீதியில் நடந்து கொண்ட விதத்துக்காகச் சிறை சென்றுள்ளார். ஒரு பெண்ணை அளவுக்கு மிஞ்சி வேலை வாங்கியதும், குறைந்த ஊதியம் கொடுத்ததும் மனித உரிமை மீறல். தொழிலாளர் விதியை மீறுகின்றார். நிச்சயம் இதற்குத் தண்டனை கிடைக்கத் தான் வேண்டும். இதற்குப் போய் இந்தியாவில் பழிவாங்குகின்றோம், புடுங்குகின்றோம் என்பது, தேர்தல் நேரத்துக்காப் பாவிக்கும் ச்சாண்டி...

 

 

நீங்கள் சொன்னது சரி. அவர் கைதுசெய்யப்பட்டிருப்பது சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் ஒருவரை அமெரிக்காவுக்குள் கொண்டுவந்து மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தியதற்காகத்தான். மாறாக இந்தியர் என்பதற்காக அல்ல. 

 

அதுமட்டுமல்லாமல், இந்த அதிகாரியின் மேல் இந்தியாவிலேயே சட்டத்திற்குப் புறம்பான வகையில் சொத்துச் சேர்த்ததற்காக வழக்கொன்றும் பதியப்பட்டிருக்கிறது. தனது ராஜதந்திரச் செல்வாக்கைப் பாயன்படுத்தி இவ்விரு குற்றங்களையும் இவர் புரிந்திருக்கிறார் என்று இந்தியச் செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிற்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Devyani-Khobragade-seithy-20131217.jpg

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேவயானி கோபர்கடே (39) போலியான தகவல்கள் மூலம் விசா மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ரூ.1 கோடியே 50 லட்சம் ஜாமீனில் அவர் விடப்பட்டார். இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் அவரை அவமானபடுத்தும் விதமாக அதிகாரி தேவயானி அவர், நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பொதுவான சிறையில் அடைக்கபட்டார் இதில் போதைமருந்து குற்றவாளிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் வைக்கபடும் சிறையாகும்.

  

துணைத்தூதர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் இவ்வாறு நடத்தப்படுவது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு டெல்லி வந்துள்ளது. நேற்று அவர்கள் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்ட்டது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=99259&category=IndianNews&language=tamil

 

 

 

இவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில், தவறான வேலைவிசா ஒன்றின்மூலம் ஒருவரை வேலைக்குக் கொண்டுவந்து, அவருக்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 4 டாலர்களுக்கும் குறைவான ஊதியத்தையே வழங்கி வேலை வாங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் இந்தியாவில் பெயர் பெற்ற பெண் உரிமை வாதியாம் !!! இது எப்படியிருக்கு???

Link to comment
Share on other sites

சர்வதேச குற்ற்வாளிகளான விஜய் நம்பியார், கமேஸ் சர்மா, சிவசங்கர் மேனன் போன்றவர்களை கொண்ட நாடு, தேவயானியை கொண்டிருப்பதில் எந்த வெக்ககேடும் இல்லை. இவர்கள் பிரபாகனை ஏமாற்றியது மாதிரி எல்லோரையும் ஏமாற்றிவிட்டத்தாக நினைத்தால் அவர்கள் பார்த்து வைத்திருப்பார்கள் என்றதை புரிந்து கொள்ள வேண்டும். காவாட்டில் துப்பல் வங்கிய படி பயணம் செய்த சுப்பிரமணிய சுவாமியால் மகிந்தா கொடுக்கும் பணத்துக்கு மகிந்தாவை காப்பாற்ற முடியும். இந்த தேவயானி தானும் யாருக்காவது பணம் கொடுத்து பார்க்க வேண்டியதுதானே.

எத்தனைதரம் இந்திய ராஸ்ரபதி அபுதுல் கலாமை சோதனை செய்தார்கள். அப்போது எதுவும் செய்யாமல் தட்டிகழித்த்தால்தான் இது வந்தது. 

 

அமெரிக்க ரேடியோ செய்திகளின் படி இந்தியா அமெரிக்க தூதுவராலய அதிகாரிகளுக்கு ஜெனிவா மகாநாட்டின் கடமைகளை மறுத்துவிட்டத்தாக குற்றம் சாட்டப்படுகிறது. குற்றவாளியை தண்டித்தற்காக குற்றம் இழைக்காத அதிகாரிகளை இந்தியா தண்டிக்கிறது. இது இஹ்தியாவில் முசோலினியின் ஆட்சி நடைபெறுவதாலாகும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

Link to comment
Share on other sites

அழகான நடுத்தர வயது aunty விட்டுப் பிடித்திருக்கலாம். :D

 

என்னத்தை… விட்டு… என்னத்தை… பிடிச்சு…!!!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

இந்தியாவில் பெண்களை  ரொம்ப நன்றாக நடாத்துவது  போல்........... :(  :(

Link to comment
Share on other sites

இந்தியா இப்படி துள்ளுவது ஒரு விதத்தில் நல்லது...அப்போது தான் இந்த பிரச்னை இன்னும் பெரிதாக எல்லாராலும் பார்க்கப்படும்...பின்

எல்லா நாடும் அங்கு உள்ள இந்திய தூதரகங்களை கவனித்தால் அவர்கள் செய்யும் தில்லு முள்ளு எல்லாம் வெளியில் வரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பொதுவாக, உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதி முறைகளுக்குள் அடங்கும் என நினைக்கிறேன்!

 

பொதுவாகப் புதிதாக ஒருவரை, மற்றவர்கள் இருக்கும் சிறைக்குள் அனுமதிக்கும் போது, ஏதாவது போதை வஸ்துக்கள், மற்றும் தடுக்கப்பட்ட பொருட்களை, உள்ளே எடுத்துச் செல்லாமல் தடுப்பதற்காக, (In the body cavity) பெண் காவலர்களாலேயே செய்யப்படும் சோதனையாகும்! 

 

இதில் 'இந்தியர்' என்பதற்காக, ஏன் விதிவிலக்குக் கொடுக்கப்படவேண்டும் எனத் தெரியவில்லை! :o

 

இந்தியர்கள் பொதுவாக, உணர்ச்சி வசப்பட்டுத் துள்ளுவது வழமை தானே!

 

லட்சுமியின் படத்தில் 'நீச்சலுடை'  அணிந்ததற்காக. சிட்னியில் அண்மையில் துள்ளினார்கள்! :wub:

 

267625-india-australia-fashion-protest.j

 

நான் இலட்சுமியை அவமதித்து சரியென்று சொல்ல வரவில்லை!

 

இந்தியாவில் சாராயத் தவறணையில், கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் 'லட்சுமி' படம் இருக்கிறது தானே?

 

அங்கு ஏன் இந்தியக்கொடியை இவர்கள் எரிப்பதில்லை? :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய போன்ற நாடுகளில் சிறைகளில் அரசியல்வாதிகள், நடிகர்கள், சாமிமார்கள் இருப்பதால் அவர்களோடு இவர் போன்ற குற்றவாளிகளை அடைக்கலாம். என்ன செய்வது அமெரிக்காவில் பாலியல் தொழிலாளர்களே பெரும்பான்மையாகக் குற்றவாளிகளாக உள்ளனர் போலுள்ளது. அதனால் தான் அவர்களோடு அடைக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

டெல்கி பாலியல் வழக்கை PBS ல் ஒருதடவை ஆராய்ந்தார்கள். இந்தியாவில் பாலியல் கடுப்பு நோய் தலைவிரித்து ஆடுவதாக முடிவுக்கு வந்தார்கள். தமிழ் படங்களை பற்றி பிரஸ்தாபித்தார்கள். அங்கு Rape காட்சி படங்கள் சக்கை போடு போடுமென்றார்கள். இந்துச் சாமிகள் தம்பாடு அதே நேரம் இந்த இந்திய சாமிகளும் தம் பாடு.

 

இந்தியாவை மதிக்க  வேண்டிய நாடுகளான சீனா, பாகிஸ்த்தான்,  இந்தியாவால் இலங்கையில் ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதை காண்கிறார்கள். இதனால் எல்லையில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் இந்தியாவுக்காக புலிகளை அழிக்க உதவிவிட்டு இந்தியாவால் இந்து சமுத்திரத்தில் ஏதாவது செய்ய முடியுமா எனக் காத்திருந்தார்கள். இந்தியாவால் சீனாவுடன் இந்து சமுத்திரத்தில் வாலாட்ட முடியவில்லை.

 

இனி அவர்கள் இந்து சமுத்திரத்தில் தாம் காலூண்ற இலங்கையை நேராக கையாள முயல்வார்கள். அது தமிழருக்கு இழப்பாகவும் இருக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

இலங்கையை மேற்கு நேரடியாக கையாளாமல் இருக்க, இந்தியாவுக்கு இலங்கைத்தீவில் இப்போது ஒரு "பிரச்சினை" தேவைப்படுகிறது. ஒரேயடியாக மௌனிக்கப்பட்ட காரணம் இப்போது தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.