Jump to content

மீண்டுமொருமுறை வந்துவிடாதே...!!! (இசைக்கவிதை)


Recommended Posts

ஒரு மார்கழி இருபத்தாறில்தான்,
பேராறுபோல் பெருக்கெடுத்தாய்....
எம்  ஊருக்குள்ளே!
பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை...
நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்!

சொல்லாமல் கொள்ளாமல் வந்து,
எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..!
இத்தனைநாளாய் உன்னில்
அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,
ஒற்றைநாளில் மொத்தமாய்
நீ அள்ளியெடுத்தாய்..!!
கடல்தாயே... மறந்துவிட்டாயா?

சுனாமியென்றால் எமனின் பினாமியென்று
அன்றைக்குத்தான் தெரியும்!
என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...!
அன்றுதான்  உன்னைத் தூற்றினோம்...!!

என் பாட்டன் உன்மேல் வலைவீசினான்,
என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான்,
எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது?
நீ அலையலையாய் அடிக்க...
நுரைக்குமிழி பிடித்து விளையாடிய  பிஞ்சுகளையும்  
அலையோடு அழைத்துச்சென்றதேனோ?

உன்னைத்தானே தெய்வமென்றோம்!  -அதற்கும் மேலே,
உன்னைத்தானே தாயுமென்றோம்!!
எம்  பிஞ்சைக்கூட    
வஞ்சம் தீர்த்தாய்... ஏன் தாயே?!

செத்து  மிதந்தது  யேசுபாலன் சிலைகள் மட்டுமல்ல,
எம் பாலகரும்தான்...!
பாலூட்டிச் சீராட்டி  வளர்த்த பாலரையெல்லாம்
நீராட்டி அழித்தாய்... ஏன் தாயே?!

மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!

 

மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

26-12-2013


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைநாளாய் உன்னில்

அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,

ஒற்றைநாளில் மொத்தமாய்

நீ அள்ளியெடுத்தாய்..!!

 

கவிதை சோகத்தைப் பிழிகின்றது!

 

கவிதை வரிகளையும் விடவும், நீங்கள் தேடியெடுத்த சுனாமி அலைகளின் கோரம் நெஞ்சில் கனக்கின்றது!

 

இரண்டும் சேரும்போது, நீங்கள் சொல்ல விரும்பிய செய்தி, பசுமரத்தில் அறைகின்ற ஆணியாகின்றது! உங்கள் புதிய ஊடகத்தின் வலிமையையும் உணர்த்துகின்றது!

 

இரண்டு விடயங்களில், இரு துருவங்களில் , ஒரே நேரத்தில் என்னைப் பயணிக்க வைத்திருக்கின்றது, உங்கள் கவிதை!

 

முதலாவது சுனாமி தந்த சோகம்! மீண்டுமொரு முறை, பலியாகிப் போன சொந்தங்களுக்கு என் நினைவஞ்சலிகள்!

 

இரண்டாவது, நீங்கள் உங்கள் பூட்டிய கதவைத் திறந்து, வெளியில் வந்து 'நிஜமான' உலகத்தைத் தரிசிப்பது! சோகம் சிந்தும் கவிதையிலும், எனக்கு ஒரு சிறு ஆறுதலைத் தருகின்றது!

 

முற்றாக வெளியே வந்து விடு கவிதையே, ஒரு மாபெரும் உலகு, கை நிறைந்த சந்தர்ப்பங்களோடு, உனக்காகக் காவலிருக்கின்றது! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழி கொன்ற மக்களுக்கு இறை வணக்கம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆதிகாலத்தில் இருந்தே  தமிழனை அழிப்பதிலையே குறியாக இருக்கும் ஆழிப்பேரலையே  
மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!  :(  :(  :(
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிக்கு  கவிதை

 

மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!

 

எமது படை பலத்தை  நாசமாக்கி

சமபலத்தை சிதைத்து

எதிரிக்கு எம்மீது கைவைக்க

துணிவு  தந்ததும் இதுவே........ :(  :(  :( 

Link to comment
Share on other sites

கவிதை சோகத்தைப் பிழிகின்றது!

 

கவிதை வரிகளையும் விடவும், நீங்கள் தேடியெடுத்த சுனாமி அலைகளின் கோரம் நெஞ்சில் கனக்கின்றது!

 

இரண்டும் சேரும்போது, நீங்கள் சொல்ல விரும்பிய செய்தி, பசுமரத்தில் அறைகின்ற ஆணியாகின்றது! உங்கள் புதிய ஊடகத்தின் வலிமையையும் உணர்த்துகின்றது!

 

இரண்டு விடயங்களில், இரு துருவங்களில் , ஒரே நேரத்தில் என்னைப் பயணிக்க வைத்திருக்கின்றது, உங்கள் கவிதை!

 

முதலாவது சுனாமி தந்த சோகம்! மீண்டுமொரு முறை, பலியாகிப் போன சொந்தங்களுக்கு என் நினைவஞ்சலிகள்!

 

இரண்டாவது, நீங்கள் உங்கள் பூட்டிய கதவைத் திறந்து, வெளியில் வந்து 'நிஜமான' உலகத்தைத் தரிசிப்பது! சோகம் சிந்தும் கவிதையிலும், எனக்கு ஒரு சிறு ஆறுதலைத் தருகின்றது!

 

முற்றாக வெளியே வந்து விடு கவிதையே, ஒரு மாபெரும் உலகு, கை நிறைந்த சந்தர்ப்பங்களோடு, உனக்காகக் காவலிருக்கின்றது! :D

 

மிகவும் ஆழமான பார்வையோடு இந்தப் படைப்பினை பார்த்தமைக்கும் முதற்கண் என் நன்றிகள் புங்கை.:)

 

நீங்கள் ஆவற்படும் விதமாக.... நான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வெளியே வந்துகொண்டிருக்கின்றேன். எண்ணுவது போல் சில விடயங்கள் அந்தந்த நேரங்களில் கிரமமாக நடந்தேறினால்.... இந்த மாபெரும் உலகில் குவிந்துகிடக்கும் சந்தர்ப்பங்களை அள்ளியெடுக்க ஆவலோடு காத்திருக்கின்றேன். :)

 

மிக்க நன்றி புங்கை! :)

 

Link to comment
Share on other sites

கருத்துக்கள் தெரிவித்த நெடுக்ஸ், தமிழரசு, விசுகண்ணை ....

மற்றும்,

விருப்பு வாக்களித்த உறவுகள் அனைவருக்கும்

என் மனமார்ந்த நன்றிகள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழிப் பேரலையே  வந்துவிடாதே .. கவிதையையும் சோக கதை வடிக்க வைத்து விடாதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி என்றால் எமனின் பினாமி நன்றாய் உள்ளது  !!

 

தொடருங்கள் கவிதை...யை !! :D

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நிலாக்கா.... மற்றும் சுவி அண்ணா! :)

Link to comment
Share on other sites

மிக்க நன்றி ராஜன் விஷ்வா... மற்றும் கோ! :)

Link to comment
Share on other sites

  • 11 months later...
 

பத்து ஆண்டுகள் பறந்தோடிவிட்டது...! ஆனாலும், இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்....

இன்னும் நெஞ்சு பதைக்கிறது! 

"சுனாமி" என்ற ஆழிப்பேரலை தந்த அவலத்தின் நினைவுநாள்...... டிசெம்பர் 26

 

ஆழிப்பேரலைக்குள் கரைந்துபோன அத்தனை உயிர்களுக்கும் நினைவஞ்சலிகள்...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுக் கவிதைக்கு நன்றி.

 

ஆனால் கவிதை எழுதி சுனானியை வரேதேன்னு தடுத்து நிறுத்த முடியாது.

 

சுனாமியால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை பின் நல்ல வளர்ச்சி கண்டுள்ள நிலையில்.. (உலகின் பிற இடங்களும் கூட). ஆனால்.. தமிழர்கள் வதியும்.. வடக்குக் கிழக்கு பகுதிகள்.. காடு பத்திப் போயுள்ளன. மேலும் போர் வடுக்களையும் சுமந்து கொண்டுள்ளன. காலியின் சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்குக் கிழக்கில்.. இராணுவ முகாம்களும்.. காணி அபகரிப்புமே நடந்துள்ளன.

 

கீழ்வரும் இணைப்புக்களில் உள்ள காணொளிகள் சாட்சி..

 

_79880485_460359786.jpg 
 

http://www.bbc.co.uk/news/world-asia-30034501

 

http://www.bbc.co.uk/news/world-asia-30602159

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.