Jump to content

(பிரான்சில்) வாக்காளர்களாக பதிவு செய்துவிட்டீர்களா..? தாமதிக்க வேண்டாம்...


Recommended Posts

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் உள்நாட்டு அரசியலில் பங்கேற்பது ஒவ்வொருவரதும் கடமையும் கூட. எமது கோரிக்கைகளை அரசியல் தலைவர்களின் அக்கறைக்குரிய விடயமாக மாற்றுவதற்கு எவ்வளவு துரத்துக்கு மக்கள் தேர்தல்களில் ஆர்வமாகப் பங்கேற்கிறார்களோ அதனைப் பொறுத்தே அது சாத்தியமானது. இன்று கனடாவும் பிரித்தானியாவும் எமக்குச் சார்பாகக் குரல் கொடுப்பதன் பின்னணியல் அங்கு வாழும் நம் உறவுகள் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இயங்குவதே காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆகிய நாம் இந்நாட்டில் சகல உரிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் நாம் வாழும் நகரத்தில், அதன் வளர்ச்சிக்காக, கல்வி, தொழில் என்று பல வழிகளிலும் நமது உழைப்பினை வழங்கி நாட்டின் வளர்ச்சியில் பங்காளர்களாக இருக்கிறோம். அவற்றோடு மட்டும் நாம் நின்று விடமுடியாது. இந்நாட்டு அரசியலில் பங்கேற்று தமிழர்களின் பிரச்சனை இந்தத் தேசத்தின் பிரச்சினையின் ஒரு பகுதி என்பதாக மாற்றம்பெறச் செய்ய வேண்டும்.

எமது சொந்த தாயகத்தில் உரிமையை இழந்த நாங்கள், வாழும் தேசங்களிலும் எமது உரிமைகளை இழந்து விடக்கூடாது. இருக்கக்கூடிய உரிமைகளை பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்வது போன்றதே! இந்த தேர்தல்களில் பங்கு பற்றுவதன் மூலம், நாமும் எம்மை ஆளப்போகிறவர்களை தெரிவு செய்வதில் எமது கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக வாக்காளர்களாக எம்மை நாம் பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியமானது.

பிரான்சு நாட்டு பிரசையான நாங்கள் வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன், நாம் வாழும் நகரங்களில் உள்ள மாநகர சபைகளில் எம்மையும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். எமது உரிமைகளை நாம் தான் பாதுகாக்க முடியும்! எமது பிரதிநிதிகளை நாமே தெரிவு செய்வோம்.

நாம் செய்யும் இந்தத் தேசிய கடமை- எமது தாயகத்த்தில் இருக்கும் மக்களுக்கும் உதவும் கடமைகளாக மாறும். வரும் தேர்தல்களின் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு விளக்கவும் தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கும் அதற்குரிய படிவங்களை நிரப்புவதற்கு உதவி செய்வதற்கும், அதற்கும் மேலாக எமது மக்களுக்கு பிரான்சு மொழியில் அவர்களுக்கு தேவையான சகல உதவிகளை செய்யவும் இந்த பணிமனை செயல்படும்.

ஈழத் தமிழ் மக்கள் தாம் பிரான்சில் எல்லா மக்களையும் போல சகல உரிமைகளுடன் வாழுவாதற்கான சகல சட்ட ஆலோசனைகளை வழங்க எம்மாலான உதவிகளையும் நாம் செய்வோம். தமிழர்களாக தலை நிமிர்வோம்! தமிழர்களாக எழுவோம், உரிமை மறுக்கப்பட்டுக் குரல் இழந்த எம்மக்களின் குரலாக நாம் இருப்போம் என்ற எமது அடிப்படை சிந்தனைக்கு அமைய எமது பணிமனை செயல்படும்.

தொடர்புகளுக்கு : 06 52 72 58 67, 06 52 72 58 67 ,

mte.france@gmail.com

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

 

(facebook)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதிந்துள்ளேன்

எனது வீட்டில் 5  ஓட்டு இருக்கு.......

 

நன்றி   பதிவுக்கும்

நேரத்துக்கும் துளசி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.