Jump to content

ஒரு பொழுது ரயிலில் .!


Recommended Posts

வேலையின் களைப்பு வீடு செல்லும் வேகத்தில் ரயில் தரிப்பிடம் நோக்கி வேகமா வந்து கொட்டாவி விட்டபடி கடிகாரம் பார்த்தேன் இன்னும் இரண்டு நிமிடம் வந்திடும் ரயில் சுற்றும் முற்றும் யாராவது தெரிந்த முகம் நிக்கும் என்னும் நினைவில் கண்களை எல்லா திசையிலும் சுழற்றி பார்த்த படி மனதில் நாட்டு நிலவரம் செய்திகளும் வந்து வந்து போனது அப்பொழுது பெரும் இரைச்சலுடன் தரிப்பிடம் வந்து நின்றது ரயில் .

 

ஏறி நடுப்பக்கம் ஒரு சீட்டில் இருந்து விட்டால் எழும்ப வேண்டிய தேவை இருக்காது என்று எண்ணி முண்டி அடித்து இடம் பிடித்து அமர்த்தேன் பக்கத்தில் ஒரு ஆபிரிக்க நாட்டு இளையன் அவனின் காதுகளில் மாட்டி இருந்த மார்க்கான கேட்போனில் இருந்து வந்த பாடல் இரைச்சல் என் காதுகளுக்கு வண்டுகளின் சத்தமா கேட்டது ...அப்படியே தலையை நிமிர்த்தி முன்னாடி பார்த்தேன்  உதட்டு சாயம் பளபளப்பா இருக்க தனது நாவால் ஈரம் கொடுத்து தன்னை சிறிய கண்ணாடியில் ரசித்தபடி ஒரு வெள்ளை கண்களை சிமிட்டி புன்சிரிப்புடன் அமர்த்து இருந்ததாள் நானோ ரயிலின் கண்ணாடி ஊடக வெளி உலகை வெறித்து பார்த்தபடி சேர்வாய் தலை சாய்த்து குறைக்கண்ணில் இருக்கையில் ..

 

அப்பொழுது பின்னாடி இருந்து இருவரின் உரையாடல் என் காதுகளுக்கு அண்மையா கேட்டது .

உங்களுக்கு விஷயம் தெரியுமே அக்கா அவள் கலா வட்டிக்கு கொடுத்தவன் காசை கொடுக்காமல் கொண்டு ஓடிட்டான் அவளின் திமிருக்கு இன்னும் வேணும் ...

ஓ ... நானும் கேள்வி பட்டனான் இவர் நவத்தாரின் மனுசியும் அவாவும் நல்ல கூட்டு இருவரும் சேர்த்துதான் மாறி மாறி கொடுக்கிறது ..

ஒருக்கா நான் காசு மாறி கேட்டதுக்கு உங்கட மனுஷன் ஒரு வேலை தான் செய்கிறார் எப்படி வட்டி தருவியல் எண்டு கேட்டவள் இப்ப பார்த்தியே ....என தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தபடி அவர்களின் பயணம் தொடருது .....

 

முன்னாடி ஒரு தொலைபேசி ...அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...என்னும் பாடலுடல் எனது மனதில் ஆள் புதுசா வந்து இருக்கு வெளிநாடு இன்னும் அம்மா நினைவு போகவில்லை வந்த புதிதில் நானும் இப்படியான பாடல்கள் கேட்பது அதிகம் என்பதால் மனதில் ஊகித்தபடி இருக்க போனை எடுத்து ஹலோ என்கிறான் அந்த வாலிபன் ..

 

ஓம் அம்மா வா ..சொல்லுங்கோ கேட்குது ..

என்னம்மா செய்ய இப்பவும் ஒரு வேலைக்குதான் போய் கேட்டுட்டு வாறன் ....

ம்ம்ம் ..அப்படியா சொன்னவர் ....இன்னும் எனக்கு வீசா சரிவரவில்லை அம்மா ...

 

ஆ ஆ இல்லை இருக்கிற ரூமுக்கு காசு கொடுக்கவே சரியான கஷ்டம் எனக்கு அம்மா .

ஒ ...வட்டி காசோட திருப்பி தரலாம் எண்டு சொல்லுங்கோ எப்படியும் நான் இந்தமாதம் வேலை தேடி எடுத்துடுவன் ஒரு முன்று மாதம் பொறுக்க சொல்லுங்கோ அம்மா .

என்னது இல்லையாமா ...சரி மாமாவிடம் கேட்டு பாருங்கோவன் ..அதுசரி அவர் பேசுவார்தானே வந்த காசே இன்னும் கொடுக்கவில்லை ...

சரி அம்மா நான் இங்க சிநேகித பெடியளிடம் கேட்டு பார்கிறேன் நீங்க கவலை படவேண்டாம் எப்படியும் மீட்டு எடுக்கலாம் அழவேணாம் அம்மா என்ன ...

தங்கச்சி சுகமே ஓகே உங்களுக்கு காசு நான் பிறகு காட் போட்டு எடுக்கிறேன் அம்மா வையுங்கோ போனை என்ன ஓகே ஓகே கவலை படாமல் இருங்கோ என்ன ஓகே ஓகே ..

 

என்றபடி துண்டிக்கப்பட்டது அவனின் உரையாடல் நிமிர்த்து பார்க்கிறேன் அவனின் கண்களில் நீ நிறைத்து இருந்தது குனித்தபடி நின்று இருந்தான் கண்கள் உடைவது பிறருக்கு தெரியாமல் இருக்க உரையாடல் கேட்ட எனது மனமும் கலங்கி போயிட்டு ஏன்?எமக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை என எண்ணியபடி இருக்க இடதுபக்கம் ஒரு பெரிய சத்தம் ...

 

வாட் வாட்  பாய்ஸ்  வாட் வாட் பாய்ஸ்... என்னும் அழைப்பு மணியுடன் வேறு ஒரு தொலைபேசி காது மாட்டி கொலுவியபடி டேய் ..மச்சான் சொல்லு எங்க நிக்கிற ....

இப்ப ஒரு ஐந்து நிமிடத்தில் வந்திடுவன் நில்லு என்ன பெடியள் எல்லாம் வந்திட்டங்களா இஸ் பொட்டுக்கு ....என்னவாம் அவர் அவருக்கு ஒரு பொண்டு பிளான் இருக்கு இண்டைக்கு போடுறன் காதை பொத்தி ..கண்டா சொல்லு வாறன் சுள்ளான் என்று ....மச்சி இண்டைக்கு ஏரியாவை ஒரு ஆட்டு ஆட்டுறம் ஓகே ...

பிறகு அவள் என்னவாம் ......விடு மச்சி அவள் ஒரு மொக்கை பிகர் அவளுக்கு நீ ஏன் அலையிற விடு விடு ..ஓகே ரயிலில நிக்கிறன் நேர சந்திப்பம் என்ன வாறன் வை .

 

திரும்பி பார்த்தேன் இன்னும் பால் மணம் கூட மாறவில்லை பூனை முடிகளாக இப்பதான் எட்டி பார்க்கும் தாடையில் சில ரோமம் ஓங்கி ஒரு அடி அடிச்சா செத்து போடும் இம்புட்டு சீனை போடுது ..நாதாரி என்று நினைத்து கொண்டு இருக்க ...

 

சவா (நலமா )சொல்லுங்க அம்மா.... கொச்சை தமிழ் எப்படியும் இங்க பிறந்த பிள்ளை போல இருக்கு ஓம் நான் கிளாஸ் முடிச்சு அங்க போயிட்டு இருக்கிறன் (ரயில் போகும் இடம் வேறு பிள்ளை சொல்லும் இடம் வேறு ).....ஓகே சுவார் (பின்னேரம் )வந்திடுவன் மாம் ஓகே முத்தத்துடன் கட்பண்ண பட்டது அம்மாவின் அழைப்பு .....அப்படியே ம்ம் சொல்லு நீ மாம் கால் பண்ணினா எங்க நிக்கிற என்று கேட்டா நான் மாறி சொல்லுட்டு வாறன் மைக்டொனட் போவமே அங்கதான் எங்கட ஆக்கள் வாறது குறைவு அந்த மைக்கில் மேல்மாடி இருக்கு அங்க போவம் என்ன ...ஓகே ரயிலில் எங்கட ஆக்களும் இருகினாம் நான் போனை கட் பண்ணுறன் இறங்கி மேல வந்திட்டு ரின்க் பண்ணுறன் ஓகே ம்ம் ...

 

முடியை கொத்தி கொத்தி விட்டபடி கழுத்துக்கு சுற்றுவதை அரைவாசி முகத்துக்கு சுற்றியபடி தான் எதோ பெரிய கெட்டிக்காரி என்னும் நினைப்புடன் ரயிலின் கம்பியை பிடித்தபடி ஒரு 17 வயது இருக்கும் அந்த பிஞ்சு முகத்தில் ஒருவித வெட்க சிரிப்புடன் பயணம் செய்தது ..

 

இந்த ஒரு பெட்டிக்குள் இவ்வளவு மனிதர்கள் ஒவ்வெரு சோகத்துடன் ..சந்தோஷத்துடன் ..பயணங்கள் தொடர்வதை எண்ணி இறந்த காலத்தை அசை போட்டபடி எனது போனை எடுத்து ..கடவுள் ஏன் கல்லானார் மானம் கால்லாய் போன மனிதர்களாலே ...என்னும் பாடலை போட்டு கேட்டபடி எனது பயணம் தொடருது .....

rayil_1066656f.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் கற்பனையில் கூட மற்றவரைப் பற்றி யோசிச்சுக் கொண்டு இருக்கிறீங்கள் :icon_idea:
 
Link to comment
Share on other sites

 

ஏன் கற்பனையில் கூட மற்றவரைப் பற்றி யோசிச்சுக் கொண்டு இருக்கிறீங்கள் :icon_idea:

 

எல்லாம் உங்களோடு சேர்த்து வந்த பழக்கம் பாருங்கோ :icon_idea:

 

கற்பனை என்பதே இப்படி நடந்தால் என்று எண்ணி எழுதுவது தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

ரயில் பயணங்களில்...................

நன்றி  அஞ்சரன்

தொடருங்கோ.......

Link to comment
Share on other sites

உண்மைதான்

ரயில் பயணங்களில்...................

நன்றி  அஞ்சரன்

தொடருங்கோ.......

 

நன்றி விசு அண்ணே வரவுக்கு .

Link to comment
Share on other sites

ரயில் பயணம் பலவித சுகானுபவங்களைக் கொண்டது . நாத்தங்களையும் சேர்த்து எழுதியிருக்கலாம் . கதை சொல்லும் இடத்துக்கும்  போட்ட படத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை , அதைக்கவனத்தில் கொண்டால் நல்லது . படைப்புக்குப் பாராட்டுக்கள் அஞ்சரா :) :) .

Link to comment
Share on other sites

ரயில் பயணம் பலவித சுகானுபவங்களைக் கொண்டது . நாத்தங்களையும் சேர்த்து எழுதியிருக்கலாம் . கதை சொல்லும் இடத்துக்கும்  போட்ட படத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை , அதைக்கவனத்தில் கொண்டால் நல்லது . படைப்புக்குப் பாராட்டுக்கள் அஞ்சரா :) :) .

 

உண்மையன்னே சிலவேளை முடியாமல் இறங்கி நின்று இருக்கிறேன் . :D

 

நன்றி வரவுக்கு உங்கள் கருத்துக்கு .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் பயணம் தொடர வாழ்த்துக்கள் :D

Link to comment
Share on other sites

ரயில் பயணம் தொடர வாழ்த்துக்கள் :D

 

நன்றி புத்தன் அண்ணே வரவுக்கு . :)

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

இங்க சிட்னியில எப்பவும் கிந்தியில , சப்பாத்தி எண்ணெய் மணத்துடன், புகையிரதத்தில் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், ஊரத்த குரலில் கதைத்துக் கொண்டு வட இந்தியர்கள் பயணிப்பார்கள்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.