Jump to content

என்னை விட்டால் யாரும் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டால் யாரும் இல்லை
ஆழ்வாப்பிள்ளை
 
'மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்...' என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தோகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன் பாடல் வரிகள் என்ற எண்ணமே மேலாக நின்றது. ஆனால் ஒரு சினிமா பத்திரிகையில், 'சமீபத்திய சினிமாப் பாடல்களைப் பார்க்கும்போது, எது நான் எழுதியது, எது வாலி எழுதியது என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருமலர்கள் படத்தில் வாலி எழுதிய, மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்.. பாடலும் அந்த ரகம்தான்...' என்று கண்ணதாசன் பேட்டி ஒன்றில் சொன்ன பொழுதுதான் தெரிந்து கொண்டேன். அந்தப் பாடல் வாலி எழுதியதுதான் என்று.

 

கண்ணதாசனுக்குப் பிறகே சினிமாவுக்குள் வாலி நுழைந்தாலும், தனக்கென்று ஓர் இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆருக்கு வாலி என்ற நிலையும், சிவாஜிக்கு கண்ணதாசன் என்ற நிலையும் அன்று ரசிகர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் இரு பாடலாசிரியர்களும் வரும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அந்த இரண்டு நாயகர்களின் படங்களுக்கு மாறி மாறிப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். சிவாஜி கணேசன் சொந்தமாகத் தயாரித்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்கு வாலியே முழுப் பாடல்களையும் எழுதியிருந்தார். 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..' என்று எம்.ஜி.ஆர் பாணியிலான ஒரு தத்துவப் பாடலை அந்தப் படத்தில் வாலி எழுதியிருந்தார். இந்தப் படம் வெளிவந்த பொழுது, 'வாலி எம்ஜிஆரை விட்டிட்டு சிவாஜி பக்கம் சாய்ந்திட்டார்' என்று இரசிகர்கள் மத்தியில் ஓர் ஐயம் எழுந்தது.

 

கண்ணதாசனும் தன் பங்குக்கு 'அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்..' பாடலை எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு எழுதியிருந்தார். ஆக நாயகர்களுக்கு ஏற்ற இப்படியான பாடல்களை எழுதி இருந்தாலும், இருவரும் பகைத்துக் கொண்டதோ, பொறாமை கொண்டதோ இல்லை. நல்லவைகளைப் பாராட்டி விட்டு தங்கள் பாணிப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

 

இருவரிலும் கண்ணதாசன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். தனது ஆதங்கங்களை தான் எழுதும் பாடல்களில் அவ்வப்போது கொட்டிவிடுவார். 'உள்ள பணத்தைப் பூட்டி வைச்சு வள்ளல் வேடம் போடு, ஒழிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு..' என்று சிவாஜி கணேசன் படத்தில் எம்.ஜி.ஆரை தாக்கி பாடல் எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முதல், 'சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா? பாரி வள்ளல் மகனா?' என்றெல்லாம் எம்.ஜி.ஆர் படத்தில் அவரைப் புகழ்ந்திருந்தார். அடிக்கடி இவரது கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 

'ஒருகால் தூக்கி ஆடும் நடராஜர் மறுகாலும் தூக்கி மாண்டு விழுவது எக்காலம்?' என்று எழுதியவர்தான் பின்னாளில் இந்து மதத்துக்குள் அர்த்தம் தேடினார். ஆனாலும் அவரது கவிதை வரிகள் இரசிக்கத் தக்கவையாகவே இருந்தன.

 

கண்ணதாசன், வாலி இருவரதும் காலகட்டத்தில் பல கவிஞர்கள் வந்து போனாலும், என்னைக் கவர்ந்த வேறு இரண்டு கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆலங்குடி சோமு. மற்றையவர் புலமைப் பித்தன்.

 

இதில் ஆலங்குடி சோமு, பாடல் வரிகளில் அழகான உவமைகளைக் கையாண்டிருப்பார். ஒரு பாடலில் 'கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?' என்று தொழிலாளியின் நிலையை அழகாக விளக்கி இருப்பார். இன்னும் ஒரு பாடலில், 'தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைக் கண்டவர் யார்?' என அற்புதமாகக் கேட்டு வைத்திருப்பார். (இந்தப் பாடல் வரிகளை பல வருடங்களுக்குப் பிறகு ரி.இராஜேந்தர் தனது பாடலில் சேர்த்து விட்டு தனது சொந்த வரிகள் என்று கூத்தடித்தது தனியாக எழுத வேண்டியது)

 

புலமைப்பித்தன் இலக்கிய இரசனை கொண்ட காதற் பாடல்களைத் தந்து கொண்டிருந்தார். 'நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில், தலைவன் வாராமல் பெண் ஒருத்தி காத்திருந்தாள், விழி மலர் பூத்திருந்தாள்..', 'பொய்கை எனும் நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள்.. தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்' என்று அவரது பல பாடல் வரிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இசையமைப்பாளர் இளையராஜா வருகைக்குப் பின்னர், வைரமுத்து சினிமாவிற்குப் பாடல்கள் எழுதுவதில் முன்னுக்கு வந்தார். ஆனால் முன்னால் நான் பேசிய கவிஞர்களோடு ஒப்பிடுகையில், வைரமுத்துவை ஓர் ஆணவம் மிக்கவராகவே என்னால் பார்க்க முடிந்தது. 'தான்' என்கிற கர்வம் அவரது பேச்சிலும், சில சமயங்களில் பாடல் வரிகளிலும் வந்து போகும். தமிழுக்குத் தொண்டு செய்வதாக அடிக்கடி பிதற்றிக் கொள்வார். தான் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் (பாட்டெழுதும்) மற்றைய கவிஞர்களை அதிகம் பாராட்ட மாட்டார். மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி என்று இப்பொழுது இல்லாத கவிஞர்களைப் பற்றி சமயம் கிடைத்தால் மட்டும் பேசிக் கொள்வார். ஈழத் தமிழர் வீரம் காட்டிய பொழுதும், அவலப்பட்ட பொழுதும் அவர்களுக்காக அதிகம் வாய் திறவாத வைரமுத்து, இப்பொழுது அவர்களைப் பற்றி காவியம் எழுதப் போகிறேன் என்கிறார். வேதனையாக இருக்கிறது.

 

சமீபத்தில் விஜய் ரிவி நடாத்தும் சுப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வைரமுத்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக நீயா நானா கோபிநாத் இருந்தார். வழமையாக தனது நீயா நானா நிகழ்ச்சியில் மற்றவர்களிடம் கேள்விகளைக் கேட்டு விட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தரும் பதில்களை இடைமறித்து 'வேறை.. வேறை..' என்று அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் கோபிநாத், வைரமுத்துவின் அலம்பலை பௌவியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது அவரது மதிப்பை என்னுள் குறைத்து விட்டது.

 

இளையராஜாவுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு இருக்கிறதா? என கோபிநாத் கேட்ட பொழுது, 'காலம் கடந்துவிட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிற போதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்துப் பேசலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஆனால், சில சின்னச் சின்னத் தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்தச் சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிறபோது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்தச் சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன்பிறகு உறவுகள் எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்ப்போம். என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்துதான் பணியாற்றி ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக்கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்திருந்தால், சாத்தியமாகலாம்' என்று வைரமுத்து பதில் தந்திருந்தார். இதில் 'என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை..' என்ற வரிகளைக் கூர்ந்து கவனித்தால் இளையராஜாவின் வெற்றிக்கு தனது கவிதைதான் காரணம் எனும் தொனி தெரியும்.

 

ஏழு வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்குபற்றாத வைரமுத்து அவர்கள் அன்று அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும்? அதுவும் நான்கு மணித்தியாலங்கள் அமர்ந்திருப்பதற்கு என்று யோசித்தால், நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு பெருந்தொகை பெற்றுக் கொண்டிருப்பார் என்பது கையிடை நெல்லிக்கனி. இதை உறுதிப்படுத்த சில நாட்களுக்கு முதல் வந்த செய்தி ஒன்று போதும். அது - வைரமுத்து, தான் வேலை பார்த்த, பாடல்கள் எழுதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வர ரூ 1 லட்சம் பணத்தை கறாராகக் கேட்டுப் பெற்றுக்கொண்டார் என்பதாகும். இதற்குள் சுப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பத்துப் பேருக்கும் தலா பத்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் அன்பளிப்பு செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரமும் செய்து கொண்டார். அந்தப் பணத்தையும் தொலைக்காட்சி நிறுவனத்தினர்தான் அழுதிருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

தனது கருத்துகளை அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து சொல்லும் பொழுது, 'நான் இந்த நிகழ்ச்சிக்கு விமர்சகனாக வரவில்லை. ரசிகனாக வந்திருக்கிறேன். விமர்சகனுக்கும் ரசிகனுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. விமர்சகன் ஒட்டகம் போன்றவன். பழங்களை விட்டு விட்டு முட்களை மட்டுமே மேய்ந்து கொண்டிருக்கிறவன். ரசிகன் வண்டு போன்றவன். முள் உள்ள ரோஜாவிலும் கூட முள்ளை விட்டு விட்டு ரோஜாவில் தேன் எடுப்பவன். நான் தேன் எடுக்க வந்திருக்கும் வண்டு' என்று விமர்சகர்களை உரசிப் பார்த்திருக்கிறார். விமர்சகர்கள் முட்களை அகற்றினால்தானே ரசிகன் இலகுவாகத் தேனைப் பருகலாம் என்பது வைரமுத்துவுக்கு ஏன் தெரியாமல் போனது?

 

'இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?' என்ற கோபிநாத்தின் கேள்விக்கு, வைரமுத்து சொன்ன பதில் 'இளையராவுக்கு இளையராஜா பிரச்சினை. வைரமுத்துவுக்கு வைரமுத்து பிரச்சினை.'

 

இவரது பதில்கள் எப்பொழுதுமே என்னை விட்டால் யாரும் இல்லை என்கின்ற பாணியிலேயே இருக்கும்.

 

வைரமுத்து வைரமுத்துவுக்கு மட்டும்தான் பிரச்சினையா?

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=4b6a960d-bd41-44b0-88ed-b9c59102bd82

Link to comment
Share on other sites

வைரமுத்து கற்பனையை பலாத்காரமாக வரவைக்க முயல்பவர்.. அதனால் இளையராஜாவுடன் இணைந்து நீண்டகாலம் பணியாற்ற முடியவில்லை..

இசையமைப்பாளர் அரை மணிரேத்தில் ஐந்து மெட்டுக்களைப் போட்டு இசைக் குறிப்பையும் எழுதிவைத்துவிட்டுக் காத்திருந்தால் அருகில் உள்ள பூங்காவில் வரிகளைத் தேடிக்கொண்டிருந்தவர் வைரமுத்து.. காலதாமதமாக வந்த வரிகளும் சந்தத்துக்குள் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்தபோது ஏற்கனவே எழுதப்பட்ட இசைக்குறிப்புகளில் மாற்றம் தேவைப்படும். ஆகவே இவர்களுக்குள் பிரச்சினை வந்தது ஆச்சரியமல்ல.

புலமைப்பித்தன் அவர்களது பாடல்வரிகளும் எனக்கு மிகப்பிடித்தமானவை.. குறிப்பாக "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என்கிற பாடல்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.