Jump to content

என்னை விட்டால் யாரும் இல்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டால் யாரும் இல்லை
ஆழ்வாப்பிள்ளை
 
'மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்...' என்ற பாடல் வெளிவந்த பொழுது, இது கண்ணதாசன் பாடல் வரிகள் என்றுதான் நினைத்திருந்தேன். அன்று சிவாஜி கணேசன் படங்களுக்கு கண்ணதாசனே அதிகமாகப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்ததாலும், பெண் மயிலுக்கு ஏது தோகை? என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டதாலும் இது கண்டிப்பாகக் கண்ணதாசன் பாடல் வரிகள் என்ற எண்ணமே மேலாக நின்றது. ஆனால் ஒரு சினிமா பத்திரிகையில், 'சமீபத்திய சினிமாப் பாடல்களைப் பார்க்கும்போது, எது நான் எழுதியது, எது வாலி எழுதியது என என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இருமலர்கள் படத்தில் வாலி எழுதிய, மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள்.. பாடலும் அந்த ரகம்தான்...' என்று கண்ணதாசன் பேட்டி ஒன்றில் சொன்ன பொழுதுதான் தெரிந்து கொண்டேன். அந்தப் பாடல் வாலி எழுதியதுதான் என்று.

 

கண்ணதாசனுக்குப் பிறகே சினிமாவுக்குள் வாலி நுழைந்தாலும், தனக்கென்று ஓர் இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆருக்கு வாலி என்ற நிலையும், சிவாஜிக்கு கண்ணதாசன் என்ற நிலையும் அன்று ரசிகர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும் இரு பாடலாசிரியர்களும் வரும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு அந்த இரண்டு நாயகர்களின் படங்களுக்கு மாறி மாறிப் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். சிவாஜி கணேசன் சொந்தமாகத் தயாரித்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்கு வாலியே முழுப் பாடல்களையும் எழுதியிருந்தார். 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..' என்று எம்.ஜி.ஆர் பாணியிலான ஒரு தத்துவப் பாடலை அந்தப் படத்தில் வாலி எழுதியிருந்தார். இந்தப் படம் வெளிவந்த பொழுது, 'வாலி எம்ஜிஆரை விட்டிட்டு சிவாஜி பக்கம் சாய்ந்திட்டார்' என்று இரசிகர்கள் மத்தியில் ஓர் ஐயம் எழுந்தது.

 

கண்ணதாசனும் தன் பங்குக்கு 'அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்..' பாடலை எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு எழுதியிருந்தார். ஆக நாயகர்களுக்கு ஏற்ற இப்படியான பாடல்களை எழுதி இருந்தாலும், இருவரும் பகைத்துக் கொண்டதோ, பொறாமை கொண்டதோ இல்லை. நல்லவைகளைப் பாராட்டி விட்டு தங்கள் பாணிப் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

 

இருவரிலும் கண்ணதாசன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விடுவார். தனது ஆதங்கங்களை தான் எழுதும் பாடல்களில் அவ்வப்போது கொட்டிவிடுவார். 'உள்ள பணத்தைப் பூட்டி வைச்சு வள்ளல் வேடம் போடு, ஒழிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு..' என்று சிவாஜி கணேசன் படத்தில் எம்.ஜி.ஆரை தாக்கி பாடல் எழுதியிருந்தார். சில வருடங்களுக்கு முதல், 'சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா? பாரி வள்ளல் மகனா?' என்றெல்லாம் எம்.ஜி.ஆர் படத்தில் அவரைப் புகழ்ந்திருந்தார். அடிக்கடி இவரது கருத்துக்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 

'ஒருகால் தூக்கி ஆடும் நடராஜர் மறுகாலும் தூக்கி மாண்டு விழுவது எக்காலம்?' என்று எழுதியவர்தான் பின்னாளில் இந்து மதத்துக்குள் அர்த்தம் தேடினார். ஆனாலும் அவரது கவிதை வரிகள் இரசிக்கத் தக்கவையாகவே இருந்தன.

 

கண்ணதாசன், வாலி இருவரதும் காலகட்டத்தில் பல கவிஞர்கள் வந்து போனாலும், என்னைக் கவர்ந்த வேறு இரண்டு கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆலங்குடி சோமு. மற்றையவர் புலமைப் பித்தன்.

 

இதில் ஆலங்குடி சோமு, பாடல் வரிகளில் அழகான உவமைகளைக் கையாண்டிருப்பார். ஒரு பாடலில் 'கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக?' என்று தொழிலாளியின் நிலையை அழகாக விளக்கி இருப்பார். இன்னும் ஒரு பாடலில், 'தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைக் கண்டவர் யார்?' என அற்புதமாகக் கேட்டு வைத்திருப்பார். (இந்தப் பாடல் வரிகளை பல வருடங்களுக்குப் பிறகு ரி.இராஜேந்தர் தனது பாடலில் சேர்த்து விட்டு தனது சொந்த வரிகள் என்று கூத்தடித்தது தனியாக எழுத வேண்டியது)

 

புலமைப்பித்தன் இலக்கிய இரசனை கொண்ட காதற் பாடல்களைத் தந்து கொண்டிருந்தார். 'நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில், தலைவன் வாராமல் பெண் ஒருத்தி காத்திருந்தாள், விழி மலர் பூத்திருந்தாள்..', 'பொய்கை எனும் நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள்.. தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்' என்று அவரது பல பாடல் வரிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இசையமைப்பாளர் இளையராஜா வருகைக்குப் பின்னர், வைரமுத்து சினிமாவிற்குப் பாடல்கள் எழுதுவதில் முன்னுக்கு வந்தார். ஆனால் முன்னால் நான் பேசிய கவிஞர்களோடு ஒப்பிடுகையில், வைரமுத்துவை ஓர் ஆணவம் மிக்கவராகவே என்னால் பார்க்க முடிந்தது. 'தான்' என்கிற கர்வம் அவரது பேச்சிலும், சில சமயங்களில் பாடல் வரிகளிலும் வந்து போகும். தமிழுக்குத் தொண்டு செய்வதாக அடிக்கடி பிதற்றிக் கொள்வார். தான் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் (பாட்டெழுதும்) மற்றைய கவிஞர்களை அதிகம் பாராட்ட மாட்டார். மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி என்று இப்பொழுது இல்லாத கவிஞர்களைப் பற்றி சமயம் கிடைத்தால் மட்டும் பேசிக் கொள்வார். ஈழத் தமிழர் வீரம் காட்டிய பொழுதும், அவலப்பட்ட பொழுதும் அவர்களுக்காக அதிகம் வாய் திறவாத வைரமுத்து, இப்பொழுது அவர்களைப் பற்றி காவியம் எழுதப் போகிறேன் என்கிறார். வேதனையாக இருக்கிறது.

 

சமீபத்தில் விஜய் ரிவி நடாத்தும் சுப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வைரமுத்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களில் ஒருவராக நீயா நானா கோபிநாத் இருந்தார். வழமையாக தனது நீயா நானா நிகழ்ச்சியில் மற்றவர்களிடம் கேள்விகளைக் கேட்டு விட்டு நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தரும் பதில்களை இடைமறித்து 'வேறை.. வேறை..' என்று அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் கோபிநாத், வைரமுத்துவின் அலம்பலை பௌவியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது அவரது மதிப்பை என்னுள் குறைத்து விட்டது.

 

இளையராஜாவுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு இருக்கிறதா? என கோபிநாத் கேட்ட பொழுது, 'காலம் கடந்துவிட்டதாக நினைக்கிறேன். விருப்பங்கள் வேறு, யதார்த்தங்கள் வேறு. இப்போது கூட அவரது இசையை நேசிக்கிறேன். பழைய பாடல் கேட்கிற போதெல்லாம் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. பார்த்துப் பேசலாம் என்று கூடத் தோன்றுகிறது. ஆனால், சில சின்னச் சின்னத் தடைகள் பெரிய பெரிய சுவர்களை எழுப்புகின்றன. அந்தச் சுவர்கள் இல்லை என்று நான் தீர்மானிக்கிறபோது, அது சாத்தியமாகலாம். ஒன்று, அந்தச் சுவர்கள் இடியலாம். அல்லது சிலர் இடிக்கலாம். அதன்பிறகு உறவுகள் எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்ப்போம். என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை. அவரோடு சேர்ந்துதான் பணியாற்றி ஆகவேண்டும் என்கிற சூழ்நிலையிலும் நான் இல்லை. ஆனால், காலம் என்ன சொல்கிறதோ, அதைக்கேட்டு கட்டுப்படுவதற்கு நான் காத்திருப்பது மாதிரியே அவரும் காத்திருந்தால், சாத்தியமாகலாம்' என்று வைரமுத்து பதில் தந்திருந்தார். இதில் 'என்னோடு சேர்ந்துதான் வெற்றி பெற வேண்டும் என்கிற நிலையில் அவர் இல்லை..' என்ற வரிகளைக் கூர்ந்து கவனித்தால் இளையராஜாவின் வெற்றிக்கு தனது கவிதைதான் காரணம் எனும் தொனி தெரியும்.

 

ஏழு வருடங்களாக எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்குபற்றாத வைரமுத்து அவர்கள் அன்று அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும்? அதுவும் நான்கு மணித்தியாலங்கள் அமர்ந்திருப்பதற்கு என்று யோசித்தால், நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்கு பெருந்தொகை பெற்றுக் கொண்டிருப்பார் என்பது கையிடை நெல்லிக்கனி. இதை உறுதிப்படுத்த சில நாட்களுக்கு முதல் வந்த செய்தி ஒன்று போதும். அது - வைரமுத்து, தான் வேலை பார்த்த, பாடல்கள் எழுதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வர ரூ 1 லட்சம் பணத்தை கறாராகக் கேட்டுப் பெற்றுக்கொண்டார் என்பதாகும். இதற்குள் சுப்பர் சிங்கர் 4 நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் பத்துப் பேருக்கும் தலா பத்தாயிரம் வீதம் ஒரு இலட்சம் அன்பளிப்பு செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் இலவசமாக விளம்பரமும் செய்து கொண்டார். அந்தப் பணத்தையும் தொலைக்காட்சி நிறுவனத்தினர்தான் அழுதிருப்பார்கள் என நினைக்கிறேன்.

 

தனது கருத்துகளை அந்த நிகழ்ச்சியில் வைரமுத்து சொல்லும் பொழுது, 'நான் இந்த நிகழ்ச்சிக்கு விமர்சகனாக வரவில்லை. ரசிகனாக வந்திருக்கிறேன். விமர்சகனுக்கும் ரசிகனுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. விமர்சகன் ஒட்டகம் போன்றவன். பழங்களை விட்டு விட்டு முட்களை மட்டுமே மேய்ந்து கொண்டிருக்கிறவன். ரசிகன் வண்டு போன்றவன். முள் உள்ள ரோஜாவிலும் கூட முள்ளை விட்டு விட்டு ரோஜாவில் தேன் எடுப்பவன். நான் தேன் எடுக்க வந்திருக்கும் வண்டு' என்று விமர்சகர்களை உரசிப் பார்த்திருக்கிறார். விமர்சகர்கள் முட்களை அகற்றினால்தானே ரசிகன் இலகுவாகத் தேனைப் பருகலாம் என்பது வைரமுத்துவுக்கு ஏன் தெரியாமல் போனது?

 

'இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் அப்படி என்னதான் பிரச்சினை?' என்ற கோபிநாத்தின் கேள்விக்கு, வைரமுத்து சொன்ன பதில் 'இளையராவுக்கு இளையராஜா பிரச்சினை. வைரமுத்துவுக்கு வைரமுத்து பிரச்சினை.'

 

இவரது பதில்கள் எப்பொழுதுமே என்னை விட்டால் யாரும் இல்லை என்கின்ற பாணியிலேயே இருக்கும்.

 

வைரமுத்து வைரமுத்துவுக்கு மட்டும்தான் பிரச்சினையா?

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=4b6a960d-bd41-44b0-88ed-b9c59102bd82

Link to comment
Share on other sites

வைரமுத்து கற்பனையை பலாத்காரமாக வரவைக்க முயல்பவர்.. அதனால் இளையராஜாவுடன் இணைந்து நீண்டகாலம் பணியாற்ற முடியவில்லை..

இசையமைப்பாளர் அரை மணிரேத்தில் ஐந்து மெட்டுக்களைப் போட்டு இசைக் குறிப்பையும் எழுதிவைத்துவிட்டுக் காத்திருந்தால் அருகில் உள்ள பூங்காவில் வரிகளைத் தேடிக்கொண்டிருந்தவர் வைரமுத்து.. காலதாமதமாக வந்த வரிகளும் சந்தத்துக்குள் அடங்காமல் அழிச்சாட்டியம் செய்தபோது ஏற்கனவே எழுதப்பட்ட இசைக்குறிப்புகளில் மாற்றம் தேவைப்படும். ஆகவே இவர்களுக்குள் பிரச்சினை வந்தது ஆச்சரியமல்ல.

புலமைப்பித்தன் அவர்களது பாடல்வரிகளும் எனக்கு மிகப்பிடித்தமானவை.. குறிப்பாக "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த.." என்கிற பாடல்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.