Jump to content

பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார்
ரூபன் சிவராஜா

 

 

5531b71d-7810-419f-a408-77ec149482921.jp

 

சொல்லப்படுகின்ற கருத்துக்கள் மீது கேள்விகளை எழுப்பாது அப்படியே நம்புவதும் ஏற்பதும் அறிவுடமையாகாது. கருத்துக்கள் மீது ஏன்- எதற்காக- எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலமே தெளிவடைய முடியும் என்ற ஆழமான மெய்யறிவின் பாற்பட்ட சிந்தனையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி).

 

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற சிந்தனையாளர் தந்தை பெரியார். 1879ம் ஆண்டு பிறந்து, 1973ம் ஆண்டு தனது 95வது அகவையில் காலமானார். 2013 டிசம்பர் 24 பெரியாரின் 40வது ஆண்டு நினைவு நாள் ஆகும்.

 

அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படமுடியாத பிற்போக்கான கருத்துக்களை, மக்களை அச்சத்திற்கு ஆளாக்குவதனூடு புகுத்துவதற்கும் - திணிப்பதற்கும் இடமளிக்காதிருப்பதே உண்மையான பகுத்தறிவுள்ள- சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய காரியம் என்பது பெரியாரின் திண்ணமான நிலைப்பாடாகும். அது மட்டுமல்ல ஏற்க முடியாதவை - பிற்கோக்கானவை என்று உணரப்படும் கருத்துக்களை எதிர்ப்பதற்குரிய துணிச்சலும் நெஞ்சுரமும் கொண்டிருக்க வேண்டுமென்பதையும் பெரியார் வலியுறுத்தி வந்தார்.

 

சமூக மாற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்குமான அதி முற்போக்கான சிந்தனைகளை மானிடம், வாழ்வியல், சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி போன்ற பல்வேறு தளங்களில் விதைத்தவர். வெறுமனே கருத்துக்களை சொல்லியும் எழுதியும் திருப்தி கண்டவர் அல்ல பெரியார். சமூக மாற்றத்திற்காக தனது வாழ்க்கையை முற்றுமுழுதாக அர்ப்பணித்து, சிந்தனைப் புரட்சி நிகழ்த்தி, நேர்த்தியான திட்டங்களை வகுத்து, களத்தில் இறங்கிச் செயற்பட்டவர்.

 

அறிவுக்கண்களை மூடிக்கொண்டு, மூடநம்பிக்கைக் குழியில் புதைந்து கிடந்த தமிழக மக்கள் வாழ்வில் பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சியவர் தந்தை பெரியார். தமிழ் நாட்டின் தமிழர்கள் மானமும் அறிவுமுள்ள புரட்சிகரமான இனமாக எழுச்சி கொள்ள வேண்டுமென்பதற்காக தனது இறுதி மூச்சிருக்கும் வரையும் தளராத உறுதியோடு போராடியவர். தனது போராட்டங்கள் மூலம் தமிழகத்தின் சமூக-அரசியல்-பொருளாதார நிலைகளில் பெரும் சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்.

 

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பகுத்தறிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பெரியாரின் இலக்கு நிறைவேறவில்லை என்றாலும், சமத்துவநெறியையும் சமூகநீதியையும் வலியுறுத்துகின்ற பகுத்தறிவாளர்ளையும் போராளிகளையும் உருவாக்கிய அரும்பணி பெரியார் அவர்களைச் சாரும். புதிய சிந்தனைகளும் போர்க்குணமும் கொண்ட சிறு தொகுதியினராவது இன்று தமிழத்தில் இருப்பதற்கு, அன்று வேரூன்றியவர் பெரியார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

உலக வரலாற்றில் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகளின் சிந்தனை வெளிப்பாடுகளையும் தத்துவக் கோட்பாடுகளையும் நாம் படிக்கும் போது, அவர்கள் பல்வேறு ஆய்வுகள், தத்துவ நூல்களையும் பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் ஊன்றிப்படித்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தியதன் ஊடாகவே புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் வகுத்தார்கள் - வெளிப்படுத்தினார்கள் என்பதை அறிகின்றோம். ஆனால் பெரியார் எந்தவொரு உலக அறிஞர்கள், தத்துவஞானிகளின் சிந்தனைகளையோ தத்துவங்களையோ படித்து, ஆய்வுசெய்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் அல்லர்.

 

மாறாக சிறுபராயத்திலிருந்து பெற்ற தனது சுய வாழ்பனுபவங்களினூடாகவும், தான் சந்தித்த நிகழ்வுகளினூடாகவுமே தனது சிந்தனையை வளர்த்துக்கொண்டார். மானுடப் பெறுமதிகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள், மூட நம்பிக்கைகள், சாதிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்கள் போன்ற பெரியாரின் கண்முன் நிகழ்ந்த, அவர் பட்டறிந்து கொண்ட சமூக அநீதிகளே அவரது சிந்தனையின் தோற்றுவாய்க்கான ஊற்றுவாய் என்பதை இன்று நாம் அறிகின்றோம்.

 

'மானமும் அறிவும் மனிதருக்கு அழகு' - என்பது பெரியார் தாங்கி நின்ற முதன்மைக் கொள்கையாகும். இந்த வாசகம் வெளிப்படுத்தி நிற்கும் அடிப்படை வாழ்வியல் தத்துவமே பெரியாரின் போராட்டத்தின் முதன்மை இலக்கினை எடுத்தியம்புகின்றது. அறிவு வளர்ச்சியே மனித வாழ்வை மேம்படுத்துகின்றது. அறிவின் பாற்பட்ட சிந்தனைகளே மனிதனை நாகரீகமானவன் ஆக்குகின்றது. இவைபோன்ற பல முற்போக்கு சிந்தனைகளை உடையவராகவும் வாழ்வியல்-சமூகம்-அரசியல்-மதம் போன்ற விடயங்களில் மிகமிக முற்போக்கான கருத்துக்களை உடையவராகவும் தந்தை பெரியார் களப்பணி ஆற்றினார்.

 

நம் தமிழர்கள் பலர் பெரியாரை கடவுள் மறுப்பாளர், நாத்திகர் என்ற குறுகிய வரையறைக்குள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். அவருடைய புரட்சிகரமான-முற்போக்கான, வாழ்வை, சமூகத்தை, தேசத்தை மேம்படுத்தவல்ல கருத்துக்களையும் கொள்கைகளையும், பெண்ணியம் பற்றிய தெளிவான பார்வைகள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பலர் அறியாதிருப்பது, சரியான முறையில் உணராதிருப்பது வேதனைக்குரியது.

 

பெரியார் தனது போராட்டத்திற்கான அடித்தளமாக கடவுள் மறுப்பு, மதநீக்கம் ஆகியவற்றை ஏன் கையிலெடுத்தார் என்பதை விளக்குவதன் மூலமும் அவரது போராட்ட முன்னெடுப்பின் தார்ப்பரியம் யாதென்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலமும் பெரியாரை முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

 

இந்திய சமூகத்தில், குறிப்பாக தமிழகச் சூழலில் சகல துறைகளிலும் தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கு பார்ப்பனியம் பாரிய தடைக்கல்லாக இருந்தது. திட்டமிட்ட முறையில் இன்றும் தடையாக இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பரந்துபட்ட தொலைநோக்குப் பார்வையுடையது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியாரது களச்செயல்களில் பார்ப்பன எதிர்ப்பே முதன்மை பெற்று நிற்கின்றது.

 

பண்டைத்தமிழன் அறிவியலிலும் நாகரிகத்திலும் உலகில் முன்னிலை வகித்தான் என்ற மெய்ப்பிக்கப்பட்ட வரலாறு உண்டு. சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருட்கள், அங்கு காணப்படும் கட்டட எச்சங்கள் என்பன தமிழரின் அறிவியல் சிந்தனைக்கும் வாழ்வியல் நாகரீக வளர்ச்சிக்கும் சான்று பகர்கின்றன என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்று.

 

இந்நிலையில் கி.மு 1500 காலப்பகுதியில் ஈரானிலிருந்து வந்தேறுகுடிகளாக வந்த பார்ப்பனியர்களின் வருகையோடு அறிவியலில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்த தமிழரின் வாழ்வில் அழிவுக்காலம் ஆரம்பித்தது. தொடர்ந்து ஆரியர்களால் திட்டமிட்ட முறையில் தமிழர் வாழ்வும் வளமும் சிதைக்கப்பட்டது என்பதே உண்மை நிலை.

 

ஆரிய இன பார்ப்பனர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இந்துமத தர்மம், மனுநீதி என்ற பெயரில் தமிழர்களிடையே சாதிப் பிரிவினைகளையும் மூட நம்பிக்கைளையும் விதைத்து வளர்த்தனர். புராண இதிகாசங்கள் என்ற பெயரில் பொய்களையும் புரட்டுக்களையும் தமிழர் பால் திணித்து, பல சூழ்ச்சிகள் மூலம் தமிழர்களை ஏமாற்றித் தம்மை வளர்த்துக் கொண்டனர்.

 

அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியாத சாத்திர- சமயச் சடங்குகளை எண்ணுக்கணக்கில்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் புகுத்தினர். இதன் அடிப்படை நோக்கம் பொருளாதார சுரண்டல் என்பதை அறியாத தமிழர்கள் அவற்றைக் கண்மூடித்தனமாக நம்பினர். மூடத்தனங்களும் பிற்போக்குவாதங்களும் திட்டமிட்ட முறையில் தமிழர்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்டு, அவற்றினூடக அடிமை மனப்பான்மை, சாதி-மதவெறி போன்ற இழிநிலைகள் புகுத்தப்பட்டன.

 

பிராமணராகிய தாமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் மற்றையவர்கள் (தமிழர்கள்) பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்ற அறிவுக்குப் புறம்பான, சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மூடக்கருத்தை பாமரத் தமிழர் மத்தியில் பரப்பினர். பரப்பியதோடு மட்டுமல்லாமல் அந்த மக்கள் இப் பொய்யுரைகளையும் கபடத்தனம் நிறைந்த சூழ்ச்சிகளையும் நம்பும்படியும் செய்திருந்தனர்.

 

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களே முதலிடம் வகித்தனர். பல துறைகளில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, பெருந்துன்பங்களுக்காளானார்கள். தீண்டாமைக் கொடுமையால் சொல்லிலடங்காத அவலங்களுக்கு உள்ளானார்கள்.

 

மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகள் புகுத்தப்படுவதால் உண்மை அறிவு இழக்கப்படுகின்றது, அச்ச உணர்வில் உழலவேண்டிய நிலை ஏற்படுகின்றது, நம்பிக்கையீனம் ஏற்படுகின்றது, கோழைத்தனமும் சோம்பேறித்தனமும் வளர்க்கப்படுகின்றது. அறிவியல்- தர்க்கவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட முடியாத புராண இதிகாசங்களை நம்புவதால், கடவுளிடம் மன்னிப்புக் கோரலாம் என்ற துணிவில் (பரிகாரம் தேடலாம் என்ற மனநிலை உந்துதலால்) மனிதன் குற்றங்களையும் தவறுகளையும் புரிவதற்குத் தூண்டப்படுகின்றான். இவை பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன என்பதான உண்மைகளை தனது பட்டறிவு மூலம் கண்டறிந்து புரட்சிகரமான கருத்துக்களை, சமூதாய மறுமலர்ச்சிக்குரிய கருத்துக்களை தந்தை பெரியார் பரப்பினார்.

 

மானிடத்தின் சம பாதியானவர்கள் பெண்கள். சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வையில் மனநிலை மாற்றம் ஏற்படவேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை ஏற்படவேண்டும். 'கற்பு' என்ற கற்பிதம் மூலம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனையை கடுமையாக எதிர்த்துப் போராடினார். பெண்களின் உணர்வு, அறிவு, உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையோடு ஆணாதிக்கத்தைத் தோலுரிப்பதற்கும் பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அயராது உழைத்தார்.

 

'மனைவி' என்பவள் மனைக்கு உரியவள் என்ற கற்பிதத்தோடு வீட்டு வேலைகள் செய்வதற்கும், கணவனின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பிள்ளைகள் பெறும் இயந்திரமாகவும் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருந்த அடக்குமுறையை கண்டு கொதித்து, பெண்களின் உரிமைக்காக கருத்துப் போர் நடத்தி சாதித்தவர் தான் பெரியார் அவர்கள். (மனைவியென்ற சொல்லைத் தவிர்த்து 'துணைவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவதே கருத்து ரீதியாக பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்க)

 

இவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துச் சமூகச் சீர்கேடுகளுக்கும் பார்ப்பனியமும் கடவுள் நம்பிக்கையுமே அடிப்படை என்பதை பெரியார் அறிவுபூர்வமாக உணர்ந்து கொண்டார். அத்தோடு கடவுள் நம்பிக்கை மூலம் போதிக்கப்பட்ட மூடநம்பிக்கையே அடித்தளம் என்ற உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கொண்ட அவர், தமிழர்கள் மத்தியில் அறிவுப்புரட்சியை ஏற்படுத்த உறுதிகொண்டார்.

 

மக்கள் மனங்களில் விழிப்புணர்வை விதைக்க வேண்டுமாயின் அதற்குத் தடையாக எல்லா மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ள கடவுள், மதம் என்ற சூழ்ச்சிகளை தோலுரிக்க வேண்டும் என்றும் திடங்கொண்டார். மதம் அறிவைத் தடைப்படுத்தக்கூடாது, உரிமைகளைப் பறிக்கக்கூடாது. மதத்தின், கடவுளின் பெயரால் ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்ற இழிவு இல்லாதொழிய வேண்டும். எல்லா மக்களும் ஒன்றென்ற உண்மை உணரப்பட்டு, ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமுதாயம் உருவாகவேண்டும். இவைபோன்ற பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கு, தன்னை வருத்தி தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியோடு போராடினார்.

 

வரித்துக் கொண்ட கொள்கைக்கமைய களச் செயல்களை வீச்சாக்கும் பொருட்டு வெளிநாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். அந்நாடுகளிலுள்ள அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இயக்கத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். அந்தந்த நாடுகளிலுள்ள அரசியல்-சமூக இயக்கங்கள்-அமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும், அவை தமது அரசியல்-சமூக-பொருளாதார நிலைகளில் எவ்வாறு உயர்ந்தன என்பதையும், அவை மக்களின் உரிமைகளை எவ்வாறு வெற்றி கொண்டன என்பதையெல்லாம் நேரடியாகப் பட்டறிந்து கொண்டார். ஏற்கனவே பெரியாரிடம் குடிகொண்டிருந்த இலட்சிய வேட்கையும் வெளிநாடுகளில் பெற்ற பட்டறிவும் அவரை புயல் வேகத்தோடு மக்களுக்காக உழைக்க வைத்தது.

 

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற அமைப்புக்களை நிறுவி அவற்றினூடாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை இணைத்து பகுத்தறிவு - விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டார்.

 

தமிழகத்தின் இன்றைய அரசியல் கட்சிகளின் தாய்க்கட்சியாக அன்று பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகமே விளங்குகின்றது. தமிழக அரசியலில் பெரியார் ஒரு மாபெரும் சக்தியாகத்தான் இருந்தார். இன்று பெரியார் உயிரோடு இல்லாத போதிலும் கூட பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் நடத்த முடியாது, தேர்தல் களத்தில் இறங்க முடியாது என்ற உண்மை ஒருபுறமிருக்க, பெரியாரின் கொள்கைகளை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு இன்றைய தமிழக அரசியல் கட்சிகள் சில வாக்குகளைச் சேகரிப்பதற்கு மட்டுமே பெரியார் பெயரை உச்சரிப்பது உண்மையில் வேதனைக்குரியதாகும்.

 

தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி குடியரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, திராவிடன் ஆகிய இதழ்களை வெளியிட்டு, அவற்றின் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் சுதந்திர தன்மான உணர்வையும் வளர்ப்பதற்கு அஞ்சாது சேவையாற்றினார்.

 

முற்போக்குடைய சமதர்மக் கருத்துக்களை (குடியரசு, விடுதலை) இதழ்களில் பதிவுசெய்தவர் என்ற காரணங்களுக்காகவும் பெரியார் அவர்கள் பலதடவைகள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு. ஆனபோதும் சற்றேனும் சலிப்படையாது தாங்கி நின்ற கொள்கைக்காக அல்லும் பகலும் ஓயாது செயற்பட்டார். துளியளவு கூட தன்னலமின்றி தமிழின விடிவிற்காக தன் வாழ்நாளின் இறுதிக்கணங்கள் வரை களத்தில் நின்று போராடிய தந்தையை நினைவு கொள்வதும் அவரது சிந்தனைகளை தமிழர்கள் மத்தியில் அறியச்செவ்வதும் காலத்தின் தேவையும் ஆகும்.

 

 

உசாத்துணை நூல்கள்

 

'தமிழர் தலைவர்': சாமி சிதம்பரனார், 'பெரியார் கணினி-1': முனைவர் மா.நன்னன், 'பெரியாரியல்': கி.வீரமணி ஆகிய நூல்கள் இக்கட்டுரைக்கு பெரிதும் பயன்பட்டன என்பதை நன்றியோடு பதிவுசெய்கின்றேன்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=5531b71d-7810-419f-a408-77ec14948292

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.