Jump to content

பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார்
ரூபன் சிவராஜா

 

 

5531b71d-7810-419f-a408-77ec149482921.jp

 

சொல்லப்படுகின்ற கருத்துக்கள் மீது கேள்விகளை எழுப்பாது அப்படியே நம்புவதும் ஏற்பதும் அறிவுடமையாகாது. கருத்துக்கள் மீது ஏன்- எதற்காக- எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலமே தெளிவடைய முடியும் என்ற ஆழமான மெய்யறிவின் பாற்பட்ட சிந்தனையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி).

 

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற சிந்தனையாளர் தந்தை பெரியார். 1879ம் ஆண்டு பிறந்து, 1973ம் ஆண்டு தனது 95வது அகவையில் காலமானார். 2013 டிசம்பர் 24 பெரியாரின் 40வது ஆண்டு நினைவு நாள் ஆகும்.

 

அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படமுடியாத பிற்போக்கான கருத்துக்களை, மக்களை அச்சத்திற்கு ஆளாக்குவதனூடு புகுத்துவதற்கும் - திணிப்பதற்கும் இடமளிக்காதிருப்பதே உண்மையான பகுத்தறிவுள்ள- சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய காரியம் என்பது பெரியாரின் திண்ணமான நிலைப்பாடாகும். அது மட்டுமல்ல ஏற்க முடியாதவை - பிற்கோக்கானவை என்று உணரப்படும் கருத்துக்களை எதிர்ப்பதற்குரிய துணிச்சலும் நெஞ்சுரமும் கொண்டிருக்க வேண்டுமென்பதையும் பெரியார் வலியுறுத்தி வந்தார்.

 

சமூக மாற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்குமான அதி முற்போக்கான சிந்தனைகளை மானிடம், வாழ்வியல், சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி போன்ற பல்வேறு தளங்களில் விதைத்தவர். வெறுமனே கருத்துக்களை சொல்லியும் எழுதியும் திருப்தி கண்டவர் அல்ல பெரியார். சமூக மாற்றத்திற்காக தனது வாழ்க்கையை முற்றுமுழுதாக அர்ப்பணித்து, சிந்தனைப் புரட்சி நிகழ்த்தி, நேர்த்தியான திட்டங்களை வகுத்து, களத்தில் இறங்கிச் செயற்பட்டவர்.

 

அறிவுக்கண்களை மூடிக்கொண்டு, மூடநம்பிக்கைக் குழியில் புதைந்து கிடந்த தமிழக மக்கள் வாழ்வில் பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சியவர் தந்தை பெரியார். தமிழ் நாட்டின் தமிழர்கள் மானமும் அறிவுமுள்ள புரட்சிகரமான இனமாக எழுச்சி கொள்ள வேண்டுமென்பதற்காக தனது இறுதி மூச்சிருக்கும் வரையும் தளராத உறுதியோடு போராடியவர். தனது போராட்டங்கள் மூலம் தமிழகத்தின் சமூக-அரசியல்-பொருளாதார நிலைகளில் பெரும் சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்.

 

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பகுத்தறிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பெரியாரின் இலக்கு நிறைவேறவில்லை என்றாலும், சமத்துவநெறியையும் சமூகநீதியையும் வலியுறுத்துகின்ற பகுத்தறிவாளர்ளையும் போராளிகளையும் உருவாக்கிய அரும்பணி பெரியார் அவர்களைச் சாரும். புதிய சிந்தனைகளும் போர்க்குணமும் கொண்ட சிறு தொகுதியினராவது இன்று தமிழத்தில் இருப்பதற்கு, அன்று வேரூன்றியவர் பெரியார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

உலக வரலாற்றில் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகளின் சிந்தனை வெளிப்பாடுகளையும் தத்துவக் கோட்பாடுகளையும் நாம் படிக்கும் போது, அவர்கள் பல்வேறு ஆய்வுகள், தத்துவ நூல்களையும் பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் ஊன்றிப்படித்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தியதன் ஊடாகவே புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் வகுத்தார்கள் - வெளிப்படுத்தினார்கள் என்பதை அறிகின்றோம். ஆனால் பெரியார் எந்தவொரு உலக அறிஞர்கள், தத்துவஞானிகளின் சிந்தனைகளையோ தத்துவங்களையோ படித்து, ஆய்வுசெய்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் அல்லர்.

 

மாறாக சிறுபராயத்திலிருந்து பெற்ற தனது சுய வாழ்பனுபவங்களினூடாகவும், தான் சந்தித்த நிகழ்வுகளினூடாகவுமே தனது சிந்தனையை வளர்த்துக்கொண்டார். மானுடப் பெறுமதிகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள், மூட நம்பிக்கைகள், சாதிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்கள் போன்ற பெரியாரின் கண்முன் நிகழ்ந்த, அவர் பட்டறிந்து கொண்ட சமூக அநீதிகளே அவரது சிந்தனையின் தோற்றுவாய்க்கான ஊற்றுவாய் என்பதை இன்று நாம் அறிகின்றோம்.

 

'மானமும் அறிவும் மனிதருக்கு அழகு' - என்பது பெரியார் தாங்கி நின்ற முதன்மைக் கொள்கையாகும். இந்த வாசகம் வெளிப்படுத்தி நிற்கும் அடிப்படை வாழ்வியல் தத்துவமே பெரியாரின் போராட்டத்தின் முதன்மை இலக்கினை எடுத்தியம்புகின்றது. அறிவு வளர்ச்சியே மனித வாழ்வை மேம்படுத்துகின்றது. அறிவின் பாற்பட்ட சிந்தனைகளே மனிதனை நாகரீகமானவன் ஆக்குகின்றது. இவைபோன்ற பல முற்போக்கு சிந்தனைகளை உடையவராகவும் வாழ்வியல்-சமூகம்-அரசியல்-மதம் போன்ற விடயங்களில் மிகமிக முற்போக்கான கருத்துக்களை உடையவராகவும் தந்தை பெரியார் களப்பணி ஆற்றினார்.

 

நம் தமிழர்கள் பலர் பெரியாரை கடவுள் மறுப்பாளர், நாத்திகர் என்ற குறுகிய வரையறைக்குள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். அவருடைய புரட்சிகரமான-முற்போக்கான, வாழ்வை, சமூகத்தை, தேசத்தை மேம்படுத்தவல்ல கருத்துக்களையும் கொள்கைகளையும், பெண்ணியம் பற்றிய தெளிவான பார்வைகள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பலர் அறியாதிருப்பது, சரியான முறையில் உணராதிருப்பது வேதனைக்குரியது.

 

பெரியார் தனது போராட்டத்திற்கான அடித்தளமாக கடவுள் மறுப்பு, மதநீக்கம் ஆகியவற்றை ஏன் கையிலெடுத்தார் என்பதை விளக்குவதன் மூலமும் அவரது போராட்ட முன்னெடுப்பின் தார்ப்பரியம் யாதென்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலமும் பெரியாரை முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

 

இந்திய சமூகத்தில், குறிப்பாக தமிழகச் சூழலில் சகல துறைகளிலும் தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கு பார்ப்பனியம் பாரிய தடைக்கல்லாக இருந்தது. திட்டமிட்ட முறையில் இன்றும் தடையாக இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பரந்துபட்ட தொலைநோக்குப் பார்வையுடையது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியாரது களச்செயல்களில் பார்ப்பன எதிர்ப்பே முதன்மை பெற்று நிற்கின்றது.

 

பண்டைத்தமிழன் அறிவியலிலும் நாகரிகத்திலும் உலகில் முன்னிலை வகித்தான் என்ற மெய்ப்பிக்கப்பட்ட வரலாறு உண்டு. சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருட்கள், அங்கு காணப்படும் கட்டட எச்சங்கள் என்பன தமிழரின் அறிவியல் சிந்தனைக்கும் வாழ்வியல் நாகரீக வளர்ச்சிக்கும் சான்று பகர்கின்றன என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்று.

 

இந்நிலையில் கி.மு 1500 காலப்பகுதியில் ஈரானிலிருந்து வந்தேறுகுடிகளாக வந்த பார்ப்பனியர்களின் வருகையோடு அறிவியலில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்த தமிழரின் வாழ்வில் அழிவுக்காலம் ஆரம்பித்தது. தொடர்ந்து ஆரியர்களால் திட்டமிட்ட முறையில் தமிழர் வாழ்வும் வளமும் சிதைக்கப்பட்டது என்பதே உண்மை நிலை.

 

ஆரிய இன பார்ப்பனர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இந்துமத தர்மம், மனுநீதி என்ற பெயரில் தமிழர்களிடையே சாதிப் பிரிவினைகளையும் மூட நம்பிக்கைளையும் விதைத்து வளர்த்தனர். புராண இதிகாசங்கள் என்ற பெயரில் பொய்களையும் புரட்டுக்களையும் தமிழர் பால் திணித்து, பல சூழ்ச்சிகள் மூலம் தமிழர்களை ஏமாற்றித் தம்மை வளர்த்துக் கொண்டனர்.

 

அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியாத சாத்திர- சமயச் சடங்குகளை எண்ணுக்கணக்கில்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் புகுத்தினர். இதன் அடிப்படை நோக்கம் பொருளாதார சுரண்டல் என்பதை அறியாத தமிழர்கள் அவற்றைக் கண்மூடித்தனமாக நம்பினர். மூடத்தனங்களும் பிற்போக்குவாதங்களும் திட்டமிட்ட முறையில் தமிழர்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்டு, அவற்றினூடக அடிமை மனப்பான்மை, சாதி-மதவெறி போன்ற இழிநிலைகள் புகுத்தப்பட்டன.

 

பிராமணராகிய தாமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் மற்றையவர்கள் (தமிழர்கள்) பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்ற அறிவுக்குப் புறம்பான, சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மூடக்கருத்தை பாமரத் தமிழர் மத்தியில் பரப்பினர். பரப்பியதோடு மட்டுமல்லாமல் அந்த மக்கள் இப் பொய்யுரைகளையும் கபடத்தனம் நிறைந்த சூழ்ச்சிகளையும் நம்பும்படியும் செய்திருந்தனர்.

 

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களே முதலிடம் வகித்தனர். பல துறைகளில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, பெருந்துன்பங்களுக்காளானார்கள். தீண்டாமைக் கொடுமையால் சொல்லிலடங்காத அவலங்களுக்கு உள்ளானார்கள்.

 

மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகள் புகுத்தப்படுவதால் உண்மை அறிவு இழக்கப்படுகின்றது, அச்ச உணர்வில் உழலவேண்டிய நிலை ஏற்படுகின்றது, நம்பிக்கையீனம் ஏற்படுகின்றது, கோழைத்தனமும் சோம்பேறித்தனமும் வளர்க்கப்படுகின்றது. அறிவியல்- தர்க்கவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட முடியாத புராண இதிகாசங்களை நம்புவதால், கடவுளிடம் மன்னிப்புக் கோரலாம் என்ற துணிவில் (பரிகாரம் தேடலாம் என்ற மனநிலை உந்துதலால்) மனிதன் குற்றங்களையும் தவறுகளையும் புரிவதற்குத் தூண்டப்படுகின்றான். இவை பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன என்பதான உண்மைகளை தனது பட்டறிவு மூலம் கண்டறிந்து புரட்சிகரமான கருத்துக்களை, சமூதாய மறுமலர்ச்சிக்குரிய கருத்துக்களை தந்தை பெரியார் பரப்பினார்.

 

மானிடத்தின் சம பாதியானவர்கள் பெண்கள். சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வையில் மனநிலை மாற்றம் ஏற்படவேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை ஏற்படவேண்டும். 'கற்பு' என்ற கற்பிதம் மூலம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனையை கடுமையாக எதிர்த்துப் போராடினார். பெண்களின் உணர்வு, அறிவு, உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையோடு ஆணாதிக்கத்தைத் தோலுரிப்பதற்கும் பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அயராது உழைத்தார்.

 

'மனைவி' என்பவள் மனைக்கு உரியவள் என்ற கற்பிதத்தோடு வீட்டு வேலைகள் செய்வதற்கும், கணவனின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பிள்ளைகள் பெறும் இயந்திரமாகவும் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருந்த அடக்குமுறையை கண்டு கொதித்து, பெண்களின் உரிமைக்காக கருத்துப் போர் நடத்தி சாதித்தவர் தான் பெரியார் அவர்கள். (மனைவியென்ற சொல்லைத் தவிர்த்து 'துணைவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவதே கருத்து ரீதியாக பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்க)

 

இவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துச் சமூகச் சீர்கேடுகளுக்கும் பார்ப்பனியமும் கடவுள் நம்பிக்கையுமே அடிப்படை என்பதை பெரியார் அறிவுபூர்வமாக உணர்ந்து கொண்டார். அத்தோடு கடவுள் நம்பிக்கை மூலம் போதிக்கப்பட்ட மூடநம்பிக்கையே அடித்தளம் என்ற உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கொண்ட அவர், தமிழர்கள் மத்தியில் அறிவுப்புரட்சியை ஏற்படுத்த உறுதிகொண்டார்.

 

மக்கள் மனங்களில் விழிப்புணர்வை விதைக்க வேண்டுமாயின் அதற்குத் தடையாக எல்லா மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ள கடவுள், மதம் என்ற சூழ்ச்சிகளை தோலுரிக்க வேண்டும் என்றும் திடங்கொண்டார். மதம் அறிவைத் தடைப்படுத்தக்கூடாது, உரிமைகளைப் பறிக்கக்கூடாது. மதத்தின், கடவுளின் பெயரால் ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்ற இழிவு இல்லாதொழிய வேண்டும். எல்லா மக்களும் ஒன்றென்ற உண்மை உணரப்பட்டு, ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமுதாயம் உருவாகவேண்டும். இவைபோன்ற பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கு, தன்னை வருத்தி தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியோடு போராடினார்.

 

வரித்துக் கொண்ட கொள்கைக்கமைய களச் செயல்களை வீச்சாக்கும் பொருட்டு வெளிநாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். அந்நாடுகளிலுள்ள அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இயக்கத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். அந்தந்த நாடுகளிலுள்ள அரசியல்-சமூக இயக்கங்கள்-அமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும், அவை தமது அரசியல்-சமூக-பொருளாதார நிலைகளில் எவ்வாறு உயர்ந்தன என்பதையும், அவை மக்களின் உரிமைகளை எவ்வாறு வெற்றி கொண்டன என்பதையெல்லாம் நேரடியாகப் பட்டறிந்து கொண்டார். ஏற்கனவே பெரியாரிடம் குடிகொண்டிருந்த இலட்சிய வேட்கையும் வெளிநாடுகளில் பெற்ற பட்டறிவும் அவரை புயல் வேகத்தோடு மக்களுக்காக உழைக்க வைத்தது.

 

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற அமைப்புக்களை நிறுவி அவற்றினூடாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை இணைத்து பகுத்தறிவு - விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டார்.

 

தமிழகத்தின் இன்றைய அரசியல் கட்சிகளின் தாய்க்கட்சியாக அன்று பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகமே விளங்குகின்றது. தமிழக அரசியலில் பெரியார் ஒரு மாபெரும் சக்தியாகத்தான் இருந்தார். இன்று பெரியார் உயிரோடு இல்லாத போதிலும் கூட பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் நடத்த முடியாது, தேர்தல் களத்தில் இறங்க முடியாது என்ற உண்மை ஒருபுறமிருக்க, பெரியாரின் கொள்கைகளை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு இன்றைய தமிழக அரசியல் கட்சிகள் சில வாக்குகளைச் சேகரிப்பதற்கு மட்டுமே பெரியார் பெயரை உச்சரிப்பது உண்மையில் வேதனைக்குரியதாகும்.

 

தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி குடியரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, திராவிடன் ஆகிய இதழ்களை வெளியிட்டு, அவற்றின் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் சுதந்திர தன்மான உணர்வையும் வளர்ப்பதற்கு அஞ்சாது சேவையாற்றினார்.

 

முற்போக்குடைய சமதர்மக் கருத்துக்களை (குடியரசு, விடுதலை) இதழ்களில் பதிவுசெய்தவர் என்ற காரணங்களுக்காகவும் பெரியார் அவர்கள் பலதடவைகள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு. ஆனபோதும் சற்றேனும் சலிப்படையாது தாங்கி நின்ற கொள்கைக்காக அல்லும் பகலும் ஓயாது செயற்பட்டார். துளியளவு கூட தன்னலமின்றி தமிழின விடிவிற்காக தன் வாழ்நாளின் இறுதிக்கணங்கள் வரை களத்தில் நின்று போராடிய தந்தையை நினைவு கொள்வதும் அவரது சிந்தனைகளை தமிழர்கள் மத்தியில் அறியச்செவ்வதும் காலத்தின் தேவையும் ஆகும்.

 

 

உசாத்துணை நூல்கள்

 

'தமிழர் தலைவர்': சாமி சிதம்பரனார், 'பெரியார் கணினி-1': முனைவர் மா.நன்னன், 'பெரியாரியல்': கி.வீரமணி ஆகிய நூல்கள் இக்கட்டுரைக்கு பெரிதும் பயன்பட்டன என்பதை நன்றியோடு பதிவுசெய்கின்றேன்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=5531b71d-7810-419f-a408-77ec14948292

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.