Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ரெலிபோன் மணி அடித்தது.. அவளாகத் தான் இருக்கும்.. என்ற நினைப்பில் போனைத் எடுத்தேன்.. தொட்டேன்..  அமுக்கினேன்.. ஏதோ அவளை நேரில்.. தொடுவது போல எல்லாம்..மெதுவாக.... நிதானமாக நடந்தது. ஆம் அது அவளே தான்...
 
 
ஹலோ... என்றேன்.. பவுத்திரமாக. மறுமுனையில்...
 
 
எப்படி இருக்கீங்க.. என்றவள் என்னிடம் இருந்து.. பதிலை எதிர்பார்க்க முதலே...நீங்க விரும்பியது போல.. இன்றைக்கு சந்திக்கலாம்... இன்றைக்கு ஏமாற்றமாட்டன். சொல்லிற இடத்த வாங்க... என்றாள் அவசரப்பட்டவளாக. அதனைக் கேட்டு.. அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில்.. திகைத்துப் போய் நான் போனோடு நிற்க.. சிந்திக்க கால அவகாசம் தராமல்.... நவிக்கேற்றறை மூளையில் பதித்தவள் போல.. சந்திக்கும் இடத்திற்கும் வழியும் சொல்லிக் கொண்டே போனால்..... கெதியா வாங்க... என்று கட்டளையும் இட்டுக்கொண்டாள்...!
 
ஆமாங்க. வந்திடுறேங்க. அவள் அழைத்த இடத்திற்கு போகத் தேவையான நேரத்தை கணப் பொழுதில்.. கணக்குப் பண்ணிச் சொல்லி அமைதியாக.. அனுமதியும் பெற்றேன். இறுதியில்.. வாங்க சந்திப்பம்.. என்று சொல்லி.. மகிழ்ச்சியாகவே போனையும் கட் செய்தாள்.
 
இப்படி நேரிடையாக.. முன்பின் காணாத ஒருத்தியை..  தேடிச் செல்வது.. முதல் அனுபவமாகினும்.. சேதி கேட்ட..அடுத்த வினாடி.. என் உடல் எப்படி உடைகள் மாற்றியது என்று தெரியவில்லை. கைகள் எப்படி வீட்டுச் சாவியை எடுத்தது என்று தெரியவில்லை. எல்லாம்.. தோழியை நேரிடையாகக் காணும்.. நினைப்பில்.. தானா நடந்து முடிந்திருந்தது. கால்கள் நடையை கட்ட... மூளை சிந்தனை இன்றியே வழிகாட்டியது. வழமையாக காக்க வைக்கும் பேரூந்துத் தடம் அது. ஆனால்.. அன்றென்று போக வேண்டிய பேரூந்தும் எனக்காக காத்திருப்பது போல காத்திருந்தது. தொத்தி ஏறி அவள் இடம் சேர்ந்தேன்.
 
அழகான புதிய கட்டட்டத்தில்.. பல நூறு பேர் கூடி இருந்த அந்த மண்டபத்தில்... அவள் சொன்ன 
இடத்தில்.அவளைத் தேடியது கண். இணையம் வழி அவள் காட்டிய படத்தில் பார்த்த முகம் மட்டுமே ஞாபகத்தில். அதனை வைச்சு ஆள் அடையாளம் தேடியது.. ஆனால் கால்கள் திசைமாறவில்லை. நேரடியாக போய் அவள் முன் நின்றது.
 
 
ஹலோ என்றேன்.. அவளும் பரீட்சயமானவள் போல.. பதிலுக்கு.. ஹலோ சொல்லி இருக்கச் சொன்னாள். அவளின் முன்னாள் கதிரையில் இருந்த என்னை.. உற்றுப் பார்த்ததும்.. தலையை குனிந்து தனக்குள் சிரித்தும் கொண்டாள். "என்ர பேச்சை நம்பி வந்திருக்கிறான்.. என்ன பாடுபடப் போறானோ என்று  நினைச்சாளோ என்னவோ".. தனக்குள் பலமாகவே புன்னகைத்துக் கொண்டாள். படத்திலும் பார்க்க நேரில் அழகாக.. சிலிம்மாக.. எப்படி அவள் இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேனோ அப்படியே இருந்தாள். புதிய தங்க ஆபரணம் போல.. அந்த மண்டப மின்விளக்குகளின் ஒளி பட்டு.. ஜொலித்தாள். கண்கள் அவளை உச்சி முதல்.. இடை வரை..ஸ்கான் செய்தது. அதற்குக் கீழ் காண முடியவில்லை.. ஏனென்றால் அவள் உட்கார்ந்திருந்தாள். மேசை மறைப்பிட்டிருந்தது.
 
அவளோ.. அப்புறம்.. சொல்லுங்க... என்றாள். நானோ மெளனம் சாதித்துக் கொண்டு கண்களால் அவளைக் கைது செய்து கொண்டிருந்தேன். அந்த மெளனத்தின் வேளையில்.... நான் அவளை ரசிக்க அவளோ.."சந்திக்க ஆசைப்பட்டீங்கல்ல..சந்திட்டீங்கல்ல. அப்ப நடையை கட்டுங்க என்றாள்.. சிரித்த வாறே". 
 
அவள் அப்படிச் சொன்னதும்.. முதல் அனுபவம் என்பதால்.. உண்மையாகத்தான் சொல்லுறாளா.. என்று ஒரு கணம் கலக்கம் எழுந்தாலும்.... இருக்காது என்று மனதுக்குள் தேற்றிக் கொண்டு.. ஆமா.. இந்த வேளைக்காக எத்தனை மாதங்கள் காத்திருந்திருப்பேன். எத்தனை ஆசைகள்.. ஏக்கங்கள்.. 
ஏமாற்றங்கள் கடந்து வந்திருப்பேன். சந்தித்ததும் நடையைகட்டுவேன்னா நினைக்கிறீங்க.. என்று மனசுக்குள் எண்ணிக் கொண்டு.. அவள் அனுமதி பெற்று அருகில் இருந்த காப்பிக் கடைக்குச் சென்று காப்பி ஓடர் செய்தேன்.
 
காப்பி மட்டுமன்றி.. பிற சிற்றுண்டி..உணவு வகைகளையும்.. தெரிவு செய்ய.. அதனை அவதானித்தவள் தானாக.. எழுந்து வந்து அருகில் நின்று.. தெரிந்தும்.. என்ன வாங்கிறீங்க என்றாள். காப்பி என்றேன்.  ஆனால் என் மூளை அவள் கேள்வியை கவனிக்கவில்லை. மாறாக.. அவளின் அருகாமையை ரசித்தது. அவளின் உயரம் பார்த்தது. அவளை என்னோடு பொருத்திப் பார்த்தது. அது தன்பாட்டிற்கு என்னென்னவோ எல்லாம் சிந்தனை செய்தது. ஆனால் தப்பா மட்டும் சிந்திக்கல்ல. சிந்திக்கவும் தோனேல்ல.
 
அப்ப சரி.. எனக்கு ஒரு ஓசி காப்பி வரும் என்றீங்க. மிகவும் இயல்பாக சிரித்தபடி சொன்னாள். வெளியில் இருந்து வந்த காற்றில் பறந்த அவளின் ஆடையின் ஒரு பகுதி என் கைகளில் தொட.. உள்ளூர மின்சாரப் 
பொறியாக உணர்வு ஓடியது. அது என்னவள் ஆடை என்ற உணர்வோடு அந்த ஆடையின் சுத்தம் சுகாதாரம் எதுவும் பார்க்காமல்.. மனசு.. சொந்தம் கொண்டாடியது...
 
 
மிகுதி அப்புறம்....
 
(பகுதி கற்பனை.)  :lol:  :) 

 

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

நெடுக்ஸ் அண்ணா மாட்டியாச்சா? :lol:

 

உங்களை கவர்ந்த அந்த கள்ளி பற்றி மேலும் அறிய ஆவல்.. :) தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை முற்றிலுமா படிச்சிட்டு.. தான் கேள்வி கேட்கனும். ஆரம்பத்திலேயே கேட்டா பதில் சொல்வது கடினம். ஏன்னா.. கதை அப்படி.  :)  :lol:

Link to comment
Share on other sites

இப்ப சொல்வது எல்லாம் நிஜமா அண்ணே :D

 

அருமை தொடருங்கோ . :)

Link to comment
Share on other sites

 

அந்த ஆடையின் சுத்தம் சுகாதாரம் எதுவும் பார்க்காமல்.. மனசு.. சொந்தம் கொண்டாடியது...

 

 

நெடுக்ஸா இப்படி அனுபவித்தாற்போல் எழுதியது என்ற சந்தேகத்தை, நெடுக்ஸ்தான் எழுதியது எனத் தீர்த்தது மேற்படி வசனம்.  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா மாட்டியாச்சா? :lol:

இவரா மாட்டிக்கிட்டார் :unsure: அவுங்க தாங்களாவே வந்து மாட்டிக்கிட்டாங்க!!! :D :D

 

 

உங்களை கவர்ந்த அந்த கள்ளி பற்றி மேலும் அறிய ஆவல்..  :) தொடருங்கள். :)

ஏன் மேடம் அவுங்களை கள்ளீங்கிறீங்க, இவரு உள்ளங்கவர் கள்வனாகக் கூட இருக்கலாம் இல்லீங்களா மேடம்? :D

Link to comment
Share on other sites

இவரா மாட்டிக்கிட்டார் :unsure: அவுங்க தாங்களாவே வந்து மாட்டிக்கிட்டாங்க!!! :D :D

 

ஏன் மேடம் அவுங்களை கள்ளீங்கிறீங்க, இவரு உள்ளங்கவர் கள்வனாகக் கூட இருக்கலாம் இல்லீங்களா மேடம்? :D

 

அட இவர் யாழில் இருந்ததால் இவரை மட்டும் சொன்னேன். மற்றபடி மாட்டினது 2 பேரும் தான். :) இவர் உள்ளங்கவர்ந்த கள்வனா இருக்கலாம். இல்லைன்னு சொல்லலையே... :)  but இவர் மனதை கவர்ந்ததால் அந்த பெண் (மனம் கவர்ந்த) கள்ளி தானே. :D

நாம இப்பிடி நினைக்க நெடுக்ஸ் அண்ணா கிளைமாக்ஸை மாத்திட போறார். :lol:

 

கதையை முற்றிலுமா படிச்சிட்டு.. தான் கேள்வி கேட்கனும். ஆரம்பத்திலேயே கேட்டா பதில் சொல்வது கடினம். ஏன்னா.. கதை அப்படி.  :)  :lol:

 

நாம சும்மா பகிடிக்கு கதைக்கிறம். பிறகு உண்மையாவே அந்த பொண்ணை பிடிச்சிருந்தாலும் நாங்கள் நக்கலடிப்பம் என நினைச்சு கதையை இடையில் மாத்தி எழுதிறேல்லை. சொல்லிட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயஹோ! நெடுக்கரிட யாழ் அக்கவுண்டை யாரோ 'ஹக்" பண்ணி  போட்டாங்கள்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா !

 

உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு,!

 

ஆனால்,

 

இந்த யாழ்களத்தின் நம்பிக்கையின் ஒளிவிளக்கு !

 

உள்ளமதில் உள்ளவரை, அள்ளித் தரும் நல்லவரை,

 

மெல்ல, மெல்ல விட்டு விட்டு,

 

மேகங்ளுள் புதைந்து விடு! :D

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஓடர் கொடுத்த காப்பியும் உணவும் வந்து சேர.. நானும் ஒப்பீடுகளில் இருந்து விலகி..நிஜத்திற்குத் திரும்பி.. முன்னர் இருந்த மேசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆனால் அவள் குறுக்கிட்டு.. வாங்க வெளில போய் அந்த பெஞ்சில இருப்பம் என்றாள்.
 
அந்த பெஞ்ச்.. பிரதான விமான நிலையம் ஒன்றின்.. ஓடுதளத்திற்கு அந்தப்புறமாக.. அமைதியாக ஓடிக்கொண்டிருந்த கிளையாற்றின் பக்கம் இருந்தது. இயந்திரப் பறவைகள்.. அடிக்கடி வந்து இறகுவதும்.. ஏறுவதுமாக இருந்தன. அவை மேகக் கூட்டங்களிடையே மறைந்து வந்து தாழ்வதும்.. உயரப் பறந்து மேகக் கூட்டங்களை உரசி மறைவதும்.. அவற்றிற்கு போட்டியாக காவலாக.. இயற்கை அன்னையின் பறவையினங்கள் வானில் வட்டமிட்டு வட்டமிட்டுப் பறப்பதும்.. அருமையான ரசிப்புக்குரிய.. அம்சங்களாக இருந்தன. காதைப் பிளக்கும்..இரைச்சல் ஒன்று அங்கிருந்தது கூட அவளின் அருகிருப்பிலான அந்த ரசிப்பில் தெரியவில்லை.
 
நானும் அவளும்.. வந்து அந்த பெஞ்சில் அமர்ந்தோம். நான் எதிர்பார்க்காத வகையில்.. அவள் சற்று எட்ட அமர்ந்திருந்தாலும்.. தூரமில்லை... அருகில் தான் இருந்தாள். முதல் சந்திப்பிலேயே அவள் தன் நெருக்கத்தைக் காட்ட தயங்கவில்லை. நெருக்கம் ஒரு எல்லைக்குள் என்றதையும் அவள் செயலால் சொல்லிக் கொண்டே இருந்தால். அவளை விட நான்.. காதலோ.. அன்போ.. ஒழுக்கத்துக்கு அப்புறம் என்ற கொள்கையில்.. அதனையே காத்தேன். அவளிடமும் அது இருந்திருக்க வேண்டும். 
 
 
மீண்டும்.. ஒரு மிடர் காப்பியை குடித்துவிட்டு வாய்கொட்டிச் சிரித்தாள். என்னாச்சு என்றேன்...??! எவ்வளவு துணிச்சல் எங்கள் இருவருக்கும். யாருக்குமே தெரியாத ஒரு சந்திப்பு. வீட்டில் நண்பியை சந்திக்கப் போறன் என்று சொல்லிட்டு வந்தன். வந்ததும் இல்லாமல்.. சோடியாக குந்தி வேற இருக்கிறம். இதனை யாரேனும் கண்டு வீட்டில் சொன்னால்...??! என்று கேள்வியைத் தொடுத்தவள்.. "சொல்லட்டுமேன்.. அப்புறம் பார்த்துக்கலாம்".. என்று அவளே பதிலும் தந்து தெம்பூட்டினாள். ஆனால்.. எனக்கு அந்தப் பயம் எதுவுமில்லை. காரணம்.. அவளுடனான நட்புப் பற்றி.. ஏலவே வீட்டுக்கு சாடைமாடையாகச் சொல்லி இருந்தேன். நான் அவளை சந்தித்ததில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். அவள் வேணாம் என்ற போதும்.. அவளின் படத்தை வீட்டுக்கு காட்டும் சூழல் ஒன்று எழுந்த போது காட்டி இருக்கிறேன். அவளுக்கும் அதைச் சொல்லி இருந்தேன். அந்த துணிவு என்னுள். ஆனால்.. அவளிடம் அது இருக்கவில்லை. அவளிடம் வீடு பற்றிய பயம் இருந்தது. அதனால் அவளின் ரசிப்புக்கு காலம் கட்டுப்பாடு போட்டிருந்தது. ஆனால்.. எனக்கோ அது இல்லை. 
 
அங்கு எமக்கிடையே.. நீண்ட பேச்சு இருக்கவில்லை. நீல வெளியில்.. அழகான முகில் கோலங்களை அவதானித்தபடி காப்பியை சுவைப்பதில் தான் கூடிய கவனமாக.. இருந்தோம். அவள் மெல்ல எழுந்து இன்னும்.. கிட்ட வந்து அமர்ந்து கொண்டாள். ஆடைகள் என்னில் தொட்டுப் பேசும் அளவிற்கு அந்த நெருக்கம். அந்த நெருக்கத்தின் மத்தியில்.. அவளுக்கே உரித்தான.. அந்த வாசம் மூக்கைத் துளைத்தது. சட்டென்று திரும்பி அவள் கண்களைப் பார்த்தேன். கருமணிகள்.. இடதும் வலதுமாக..சிறுகச் சிறுக ஆடி.. கதை பேசின. அவளின் கண்கள் பிரகாசமாக இருந்தன. முகம் மலர்ச்சியில் ஜொலித்தது. அவளின் ரோஜாப்பூப் போன்ற கன்னங்கள் சிவப்பாகி இரத்த ஓட்டத்தை அதிகம் வாங்கி இருந்தன. அவளின் மனதில் மகிழ்ச்சி ஒன்றிருப்பதை அது காட்டியது. நான் இந்த ரசிப்பில் இருக்க.. அவள் கண்களை நீல வானத்தின் மீது ஓட விட்டாள். மேகக் கூட்டங்களில் ஒன்றைக் காட்டி அதில் என்ன உருவம் இருக்கு என்று சொல்லுங்க என்றாள்... என் கவனத்தை அவள் கண்களில் இருந்து திருப்ப. நானும் பதில் சொல்ல.. அதே.. தான் என்று.. ஒத்திசைந்தாள். இப்படி ரசிப்புகளின் எல்லை.. சுற்றுச் சூழலை ஒட்டி இருந்தது. ஒருவரை ஒருவர் அதிகம்.. ரசிக்கும் எண்ணம் இல்லாத முதிர்ச்சி இருவரிடத்தும் ஏதோ எழுந்திருந்து. அதற்குக் காரணமும் உண்டு. அவளை சந்திக்க முதல்.. அவளோடு இணையத்தில் கடலை போட்டது.. கொஞ்ச நெஞ்சம் அல்ல. கிட்டத்தட்ட மனதின் ஆசைகளை எல்லாம் இருவரும் பகிர்ந்து கொண்டதும் அல்லாமல்.. ஒலி வடிவிலும் கலந்துரையாடி இருக்கிறோம். எப்போதும் வார்த்தை அளவில் கூட.. எல்லை மீறாத அவள்... என்னிடத்திலும் கேட்டுப் பெறாத அந்த ஒழுக்கம் இருந்ததை.. அதிகம் விரும்பி இருந்தாள். அதனால் தான் அவளுக்கு என் மீது.. அப்படி ஒரு நம்பிக்கை. 
 
 
மணித்துளிகள்.. ஓடி மறைந்தன. இரண்டு மணி நேரம்... கடந்ததே தெரியவில்லை. வாங்க போவம்.. என்றாள். எங்கே என்றேன். வீட்ட தான்... என்று இழுத்தாள். உங்க கூட இருப்பது சந்தோசம் ஆனாலும் வீட்ட போகனுமே தேடப் போகினம் என்றாள். அவளின் ஒளிவுமறைவற்ற.. அந்த நேர்த்தி எனக்குப் பிடித்திருந்தது. சரி போவம் என்று எழுந்து நடக்க ஆரம்பித்தேன். நடக்கும் போது.. அவள் மிக அருகில் நடந்தாள். ஆனால் அது அப்போது சாதாரணமாகி இருந்தது. பல முறை பார்த்துப் பழகின உணர்வு போல.. சகஜமாகி இருந்தது. அவளும் எட்ட நட என்று சொல்லவில்லை. ஆனாலும் நான் அதிகம் நெருக்கம் காண்பிக்கவில்லை. பிரதான வீதியை அடைந்ததும்.. திடீர் என்று.. நின்றாள். டிஸ்ரன்ஸ் என்றாள். விட்டா நல்லா ஒட்டுவீங்க போல இருக்கு என்றாள்... ஆனாலும் முகத்தில் சிரிப்பு. எதுக்கு பொல்லாப்பு என்றுவிட்டு நான் தொடர்ந்து கொஞ்சம் டிஸ்ரன்ஸ்.. வைச்சுக் கொண்டேன்.
 
 
நாங்கள் இருவரும் போக வேண்டிய வழித்தடங்கள் வெவ்வேறானவை. இருந்தாலும்.. அவள் எனது வழித்தடத்தில் வரப் போவதாகச் சொன்னாள். அதிக நேரம் காத்திருக்கவில்லை. சரியான நாளிகைக்கு பேரூந்தும் வந்து சேர நான் போய் தனி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ஏற்கனவே டிஸ்ரன்ஸ்.. என்று அவள் சுட்டிக்காட்டியது.. மனதில் இருந்தது. அவளும் இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டால். இருந்தாலும்.. அதிக நேரமில்லை. நான் அவளைப் பார்த்தேன். சிரித்துக் கொண்டு எழுந்து வந்து அருகில் இருந்தாள். கண்ணாடிப் பக்கம் இருக்கப் போறன்.. இடம் விடுங்கோ என்றாள்.. தனக்கே உரிய அதிகாரத்தோடு. எழுந்து இடம்விட்டேன். வந்து இருங்க என்று தன் அருகைக் காட்டினாள். நான் எதுக்கும் முட்டாமல் இருப்பம் என்று முயல.. சிரித்துக் கொண்டே..முட்டலாம். பிரச்சனை இல்லை என்றாள். கொஞ்ச நேர அமைதி. எனக்கு அது புது அனுபவம் வேற. கொஞ்சம் பதட்டமும்... கூட. 
 
திடீர் என்று தோளில் சாயட்டா என்றாள். நான் அதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆம் என்றேன்... எந்த உள்நோக்கமும் இன்றி. என்னவள் பாவம்.. தானே என்ற ஒரு எண்ணம் மட்டுமே மனதெங்கும் இருந்தது. ஆனால் அந்தக் கணத்தில்.. நான் அவளுக்கு காப்பரணாகி இருக்கிறேன் என்ற ஒரு இறுமாப்பு மனதில். கொஞ்சம் சாய்ந்தாள். சரி பறுவாயில்லை.. பிறகு ஒரு நாளைக்கு சாய்வம்.. என்று தனக்குள் ஏதோ நினைத்துக் கொண்டவளாய் தன்னை சுதாகரித்துக் கொண்டு.. தலையை நிமிர்த்தி என்னை பார்த்துச் சிரித்தாள். என்னால் அந்தச் சிரிப்பினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேவேளை எதையும் குறையாகவும் உணர முடியவில்லை..! அவளை நான் புரிய முடியாத பல தருணங்களில்.. அதுவும் ஒன்றாகி நின்றது....!
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை.) :)  :lol:
Link to comment
Share on other sites

சும்மா வீம்புக்கு பெண்களுக்கெதிராக எழுதினாலும் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என நீங்கள் கற்பனை பண்ணி வைத்திருக்கும் பெண் பற்றி முன்னர் யாழில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுதே உங்கள் ரசனையை புரிந்து கொண்டோம். :) அத்துடன் இயற்கை மேலுள்ள உங்கள் காதலை யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. :) இரண்டும் கலந்து எழுதப்படும் வர்ணனையுடன் கூடிய கதை மிக அழகு. தொடருங்கள். :)

கதைகள், கவிதைகள் வாசிக்கும் பொறுமை இல்லாததால் அண்மைக்காலமாக பெரிதாக எதையும் வாசித்ததில்லை. நீங்கள் எழுதுகிறீர்கள் என்றதும் அப்படி என்ன தான் எழுதுகிறீர்கள் என்று பார்க்க உள்நுழைந்தேன். :D நன்றாக செல்கிறது. முடிவு எதுவாக இருந்தாலும் இப்படியே அழகாக தொடருங்கள். :)

 

உங்கள் வீம்பு பிடிவாதத்தை இறுதியில் காட்டப்போய் பெண்களை கேவலப்படுத்தி எழுதி கதையையும் கேவலப்படுத்தி விடாதீர்கள் என்பது முன்கூட்டியே எனது வேண்டுகோள். :wub::rolleyes::)

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது. தொடருங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முத்திரையை அழித்து விடாதீர்கள் நெடுக்ஸ்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முத்திரையை அழித்து விடாதீர்கள் நெடுக்ஸ்! :)

 

கவலைப்படாதீங்க சுவி அண்ணா. கதையின் நாயகன் "நான்" இப்பவும் கன்னிப் பையன் தான்.  :lol:

மேலும் கருத்துச் சொன்ன.. ஊக்கம் தந்த.. உறவுகளான..  துளசி.. அஞ்சரன்.. சோழியான் அண்ணா..வாலி.. புங்கையூரன் அண்ணா..ஜஸ்ரின் அண்ணா... சுவி அண்ணா.. எல்லோருக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீம்பு பிடிவாதத்தை இறுதியில் காட்டப்போய் பெண்களை கேவலப்படுத்தி எழுதி கதையையும் கேவலப்படுத்தி விடாதீர்கள் என்பது முன்கூட்டியே எனது வேண்டுகோள். :wub::rolleyes::)

நன்றி துளசி... தங்களின் கருத்துக்கு. "நான்" நானாகவே இருப்பான். அவனுக்கு என்று கொள்கை இருக்குது. அதன் வழி போய்க்கிட்டே இருப்பான். போற வழியில.. சந்திக்கிற நிகழ்வுகளுக்காக எல்லாம் அவன் தன்னை மாற்றிக் கொள்பவனாக இருந்தால்... அவனுக்கு நாயகன் தகுதி வழங்க முடியாது எல்லோ.  :)  :lol:

Link to comment
Share on other sites

//

"டமா...ர்ர்ர்ர்...."

பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. தொப்பலாக நனைந்திருந்தேன்.. கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தால் அருகில் நண்பன் ஈ குருவி..

"ஏய் தடியா.. காலங்கார்த்தாலை என்ன கனவு வேண்டிக்கிடக்கு??!!" :(

//

கதை நல்லாயிருக்கு நெடுக்ஸ்.. :D அது இருக்கட்டும்.. முன்னம் கண்களால் கயல் மீனை கைது செய்தீங்களே.. பிறகு என்னாச்சு? Live release பண்ணிட்டீங்களா? :blink::D

Link to comment
Share on other sites

நன்றி துளசி... தங்களின் கருத்துக்கு. "நான்" நானாகவே இருப்பான். அவனுக்கு என்று கொள்கை இருக்குது. அதன் வழி போய்க்கிட்டே இருப்பான். போற வழியில.. சந்திக்கிற நிகழ்வுகளுக்காக எல்லாம் அவன் தன்னை மாற்றிக் கொள்பவனாக இருந்தால்... அவனுக்கு நாயகன் தகுதி வழங்க முடியாது எல்லோ.  :)  :lol:

 

உங்களை மாற சொல்லி சொல்லேல்லை. :) ஆனால் கதையில் வீம்புக்கு பொண்ணுங்களுக்கு எதிரான கருத்துக்களை வலிந்து திணிக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். :) சரி, சரி. எழுதி முடியுங்கோ. பிறகு பாப்பம். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதற் சந்திப்பின் நினைவுகளோடு.. மீண்டும் அன்று இரவு.. இணையத்தில் சந்தித்தோம். அன்று.. இணையத் தூதில் அவள் கேட்ட முதல் கேள்வி.. "என்னைப் பிடிச்சிருக்கா" என்பது தான். நான் எந்தத் தயக்குமும் இன்றி நேரிடையாக.. நல்லா இருக்கீங்க என்றேன். பதிலுக்கு அவளும் "உங்களைப் பிடிச்சிருக்கு" என்றாள். அத்தோடு இணையத் தூதின் வழி செல்லக் குட்டும் தந்தாள். அவளிடம் செல்லக் குட்டுக்கள் நிறைய வாங்கி இருக்கிறேன். அதில் ஒரு தனி சுகமே இருக்கும்.
 
 
அடுத்த நாள்.. மீண்டும் சந்திப்பு. ஆனால் அது நான் எதிர்பாராதது. அவள் என்னை எனது யுனிக்கே வர அழைத்திருந்தாள். நானும் விழுந்தடித்து அங்கு சென்ற போதுதான் சங்கதி தெரிந்தது. அவள் தனக்குக் கிடைத்த யுனியின் அனுமதியை மாற்றி எடுத்துக் கொண்டு.. எனது யுனிக்கு மாறி வந்திருப்பது. அன்று.. அங்கு தன்னை மாணவியாகப் பதிவு செய்ய வந்திருந்தாள். உங்களுக்காகத் தான் இஞ்ச வந்திருக்கிறன். "காலைல விடிய வெள்ளனவா எழும்பி.. இந்தக் குளிருக்க.. எப்படி வரப் போறனோ தெரியல்ல. இவ்வளவு தூரத்துக்கு யுனியை எடுத்திட்டன். எல்லாம் உங்களுக்காகத்தான்".. என்றாள் மீண்டும் அழுத்தமாக. இதனைக் கேட்ட எனக்கு.. அவள் மீது அன்பும்.. பரிவுமே அதிகம் ஏற்பட்டது. "அதுதான் வந்திட்டீங்கல்ல.. நான் உங்களுக்கு உதவியா இருப்பேன்" என்றேன். "வேண்டாம் ராசா.. உங்க உதவி. இஞ்ச நான் மட்டும் வரல்ல.. எங்கட உறவுக்கார ஆக்களும் படிக்கினம். பார்த்து நடந்துக்கனும்" என்றாள் எச்சரிக்கையோடு. 
 
அவள் தன்னை எங்கள் யுனியில் பதிவு செய்து கொண்டதும்.. தனது பாடத்துறையின் அறிமுக வகுப்புக்குப் போகப் பாவதாகச் சொன்னாள். நான் கூட வரப் போவதாகச் சொல்ல... சரி வாங்கோ என்று கூட்டிக் கொண்டு போனாள். போதானாவறையில்.. தனக்கு அருகில் என்னை அமர வைத்தாள். அவளின் பாடத்துறை வேறு. எனது பாடத்துறை வேறு. இருந்தாலும்.. எனக்காக என் யுனி தேடி வந்தவளுக்கு நன்றிக்கடனாக.. அவளுக்காக அங்கு போய் இருந்தேன். அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்த பேராசிரியர் மாணவர்களை சுயஅறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்க.. எனக்கு பிடிபட்டிட்டுவமோ என்ற பயம் உள்ளூர ஆக்கிரமித்திருந்தாலும்.. அதனை வெளிக்காட்டாமல்.. நானும் அங்கிருந்த மற்றவர்களைப் போலவே.. என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவளுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. "அப்பவே சொன்னனான்.. என்னை வாசலில விட்டிட்டுப் போங்கோ என்று. கேட்டீங்களா".. என்றாள்.. காதுக்குள்.
 
சுயஅறிமுகம்.. அதனைத் தொடர்ந்தான..பாட அறிமுகத்தின் பின் பேராசிரியர் பாடப்பரப்புச் சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். மாணவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக. எனக்கோ.. சம்பந்தப்பட்ட பாடப்பரப்பு பற்றி அதிக அறிவில்லை. ஆனாலும் என்னிடம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்தேன். பேராசிரியரை விட அவளே அதனால் அதிகம் மகிழ்ச்சியை வெளிக்காட்டியிருந்தாள். அவளின் முகத்தில் மலர்ந்திருந்த புன்னகையில் இருந்து அந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது. அந்த மகழ்ச்சியில் அவள் முகம் பிரகாசமாக ஒளித்தது. அந்தக் கூட்டத்தில் அவள் எனக்கு ஒளிரும்.. நட்சத்திரமாக பிரகாசித்தாள். 
 
அறிமுக வகுப்பு முடிந்து இருவரும் யுனி சிற்றுண்டிச் சாலைக்கு வந்தோம். அத்தோடு அன்றைய யுனி நிகழ்வுகளும் முடிந்திருந்தன. அதனால் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பும் நோக்கில்.. சிற்றுண்டிச் சாலையில்... உணவும் மென்பானமும் எடுத்துக் கொள்ள வரிசையில் நின்றோம். அப்போது அந்தக் கன்ரீனில் இருந்த கறுப்பினப் பெண்மணி.. நாங்கள் இருவரும் பொருட்களோடு காசு கொடுக்க வர.. நல்ல அழகான ஜோடி என்று சொன்னதும் இல்லாமல்.. நீ கொடுத்து வைத்தவள்.. அவன் உனக்காக இத்தனை உணவுகளைத் தெரிவு செய்வதைப் பார்த்தேன் என்றாள். அதுமட்டுமல்ல.. அவன் உன்னை கூப்பிட்டு உனக்கு விரும்பியதை எடுக்கச் சொன்னத்தையும் கண்டேன் என்றாள். இவ்வாறு.. அந்தக் கறுப்பின பெண்மணி என்னைப் புகழ்ந்து கொண்டே போனாள். இதனைக் கேட்டவள்.... ரகசியமாக என்ன "கறுப்பிக்கும் உங்க மேல லவ் போல" என்றாள் நக்கலாக.... புன்னகைத்தபடி. 
 
அன்றைய அந்த சிற்றுண்டிச்சாலை அனுபவம்.. அவளுக்கும் புதிசு எனக்கும் புதிசு.. இருவரும் ஒருவருக்கு ஒருவர் உணவு பரிமாறிக்கொள்ளும் தொடக்கத்தின் முதல் நாள் மட்டுமன்றி.. சிறந்த ஜோடியாக.. மூன்றாமவரால்.. நாங்கள் வாழ்த்தப்பட்ட முதல் நாளும் அது தான். அந்த நாள்.. அதுவாக இருந்துவிட்ட மகிழ்ச்சியில்..  இருவரும் நிறைந்த மனதோடு.. பல எதிர்பார்ப்புக்கள் மனங்களில் குவிய.. வீடு நோக்கிப் புறப்பட ஆயத்தமானோம். 
 
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை)  :lol:  :) 
Link to comment
Share on other sites

 

அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்த பேராசிரியர் மாணவர்களை சுயஅறிமுகம் செய்யச் சொல்லிக் கேட்க.. எனக்கு பிடிபட்டிட்டுவமோ என்ற பயம் உள்ளூர ஆக்கிரமித்திருந்தாலும்.. அதனை வெளிக்காட்டாமல்.. நானும் அங்கிருந்த மற்றவர்களைப் போலவே.. என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவளுக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. "அப்பவே சொன்னனான்.. என்னை வாசலில விட்டிட்டுப் போங்கோ என்று. கேட்டீங்களா".. என்றாள்.. காதுக்குள்.

 
சுயஅறிமுகம்.. அதனைத் தொடர்ந்தான..பாட அறிமுகத்தின் பின் பேராசிரியர் பாடப்பரப்புச் சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். மாணவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக. எனக்கோ.. சம்பந்தப்பட்ட பாடப்பரப்பு பற்றி அதிக அறிவில்லை. ஆனாலும் என்னிடம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் அளித்தேன். 

 

:lol: :lol:

 

நல்லவேளை, அந்த பேராசிரியர் அந்த பாடத்துறையை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அன்றையதினம் வந்திருந்தோரின் எண்ணிக்கையும் சரியா என எண்ணிப்பார்க்கவில்லை. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol:

 

நல்லவேளை, அந்த பேராசிரியர் அந்த பாடத்துறையை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அன்றையதினம் வந்திருந்தோரின் எண்ணிக்கையும் சரியா என எண்ணிப்பார்க்கவில்லை. :D

 

 

Induction day இல்.. சும்மா வாற எல்லாரட்டையும்.. கையொப்பம் வாங்கிறது மட்டும் தான். பெரிசா.. ஒன்றும் செய்யமாட்டார்கள். ஆனால் நாளாந்த lecture என்றால் தெரியவரும். ஏனெனில்.. module register பண்ணின எண்ணிக்கையை attendant register எண்ணிக்கையையோடு ஒப்பிட்டு கண்டுபிடித்திடுவார்கள். ஆனாலும்.. அது ஒரு திரில்லான நிகழ்வு தான்..!  :)  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யுனி கன்ரீனில் இருந்து இருவரும்.. வீடு நோக்கிப் புறப்படத் தயாரான வேளையில்.. ஆ.. மறந்து போனன். தங்கச்சி புதுவருசத்துக்கு சேல் போகுதாம்.. உடுப்பு வாங்கிவரச் சொல்லிவிட்டவள். சொப்பிங் போகனும்.. வாறீங்களா என்றாள். சொப்பிங்.. அதுவும் எனக்கென்று மனதால் உணரப்பட்டவளோடு முதன்முதலில்..சொப்பிங் போகக் கசக்குமா என்ன..?! இருந்தாலும்.. அவளோட சொப்பிங் போறது என்பதை இட்டு..உள்ளூர மகிழ்ச்சியில் மிதந்த மனசு அந்த மகிழ்ச்சியை வெளிப்படையாக காட்ட விரும்பவில்லை. கையில் இருந்த.. கடிகாரத்தை பார்த்தேன்.. நேரம் இருக்கு... இப்போதைக்கு வீட்ட தேடமாட்டினம். ஓகே.. போகலேமே என்றேன்.. சற்றுத் தாமதமாக. இருந்தாலும்.. உங்களுக்கு சொப்பிங் வாறதை விட என்னோட பேரூந்தில வாறது தான் ரெம்பப் பிடிக்கும் போல.. என்றாள் என் மனதைப் படித்தவளாய்.
 
சொப்பிங் போறதில இரண்டு நன்மை. ஒன்று அவளோடு சேர்ந்து சொப்பிங் செய்வது. இரண்டாவது சொப்பிங் செனரருக்கு போகும் வழித்தடத்தில் மீண்டும் பேரூந்தில் இருவரும் செல்ல வசதி. திட்டமிட்ட படி.. சொப்பிங் சென்ரர் போக பேரூந்துக்காகக் காத்திருக்க.. பேரூந்தும் வந்தது. அவளை முன்னே விட்டு நான் பின்னே ஏறிக் கொண்டேன். அவள் ஒரு இருக்கையை பிடித்து.. தனக்கு அருகில் எனக்கும் இடம் பிடித்து வைச்சுக் கொண்டு.. தன்னருகில் என்னை இருத்திக் கொண்டாள்.
 
 
நான்.. அவளருகில்.. அவள் மூச்சுக் காற்றை உள்ளிளுக்கக் கூடிய நெருக்கத்தில்... கொஞ்ச நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவள் முகத்தை உற்று நோக்கினேன். இதனை அவதானித்தவள்.. என்ன வடிவாப் பார்க்கிறீங்க என்றாள். இல்ல உங்க தோடும்.. முகமும் சமனாக பளிச்சிடுகின்றன அதுதான் பார்த்தேன்... என்றேன் சுதாகரித்தபடி.! நல்லாத்தான்.. ஆள் பார்க்கிறீங்க.. அதோட புளுகுறீங்க.. என்றாள். இல்லை.. இல்லை உண்மையைத் தான் சொல்கிறேன் என்று சொல்ல.. ஆஆ.. சொல்ல மறந்திட்டன். உங்கட பிளார்க் பார்த்தேங்க. நல்ல கவிதை எல்லாம் எழுதிப் போட்டிருக்கீங்க. அவற்றை ஏன் தொகுக்கப்படாது என்றால்.. ஆர்வத்தோடு.
 
அது எல்லாம் கவிதையாங்க. சும்மா வெறும் கிறுக்கல் என்றேன் நான் பதிலுக்கு. எல்லாம் இல்லைங்க.. சிலது நல்ல கவிதை.. வேணுன்னா நான் தொகுத்துத் தரட்டா என்றாள் அக்கறையோடு. விரும்பினாச் செய்யுங்க என்றேன். "சொல்லிட்டீங்கல்ல.. அந்தப் பொறுப்பை என்னட்ட விடுங்க.. அப்புறம் பாருங்க" என்றாள்.. நம்பிக்கையோடும்..துணிவோடும். 
 
 
இப்படியே இருவரும்.. கதை பேசிக் கொண்டிருக்க.. இறங்க வேண்டிய இடமும் வந்து சேர்ந்தது. இருவரும் சேர்ந்து சொப்பிங் சென்ரருக்குள் நுழைந்தோம். அவள் விழிகளைச் சுழற்றி ஒரு நோட்டமிட்டுக் கொண்டே.. இருந்தாள். "என்ன அலேட்டாத்தான் இருக்கீங்க போல" என்றேன். பின்ன யாரும் கண்டு வீட்ட போட்டுக் கொடுத்தா.. உங்களுக்கு என்ன.. நானெல்லோ மாட்டுப்பட்டு.... உங்களையும் பார்க்க முடியாமல்.. அவையிட்ட பேச்சும் வாங்கிக்கிட்டு இருக்கனும். இப்ப வீடு இருக்கிற நிலைமையில..  உது எனக்கு அவசியமாங்க... என்றாள் யதார்த்தத்துடன். இதனைக் கேட்ட எனக்கு அவள் மீது நம்பிக்கையும் பரிவும் இருமடங்கானது. 
 
அதே மனதோடு.. அவளோடு சேர்ந்து அவளுக்காக உடுப்புகளை தெரிவு செய்தேன். உங்க தெரிவுகள் எல்லாம்.. நல்லாத்தான் இருக்கு. என்ன.. அப்படியே  பில்லையும் கட்டிட்டீங்கன்னா.. நல்லா இருக்கும் என்றாள்.. சிரித்தபடி. சரி தாங்க நான் பில் கட்டிறேன் என்றேன். ஆனாலும் என்னிடத்தில் அந்தளவுக்கு வங்கி அட்டையில் பணம் இருக்கவில்லை. இருந்தாலும்.. அவள் அதனை உணர்ந்தவளாய்.. நீங்களே படிக்கிறதுக்கு கஸ்டப்படுறீங்க.. இதில எனக்கு பில் கட்டப் போறாராம்.. ஆளைப் பாரு. சும்மா பகிடிக்கு கேட்டேங்க என்றாள்.. எல்லாவற்றையும் புரிந்து கொண்டவளாய்.

மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை) :lol:  :) 
Link to comment
Share on other sites

நெடுக்ஸ் தனது மன ஆதங்கங்களையெல்லாம் கொ....ட்ட்ட்டி.. எழுதிற கதை நல்லாத்தானே இருக்கும்??!! :D வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் எட்டத்தை நிண்டு என்ன நடக்குது எண்டு பாப்பம்..... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.