Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம.... ஜாக்கிரதையாய், இருக்கிறது நல்லது.
நெடுக்ஸ்சிற்க்கு... விசர் பிடிச்சுப் போட்டுது, என்று சந்தேகமாய்... இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ அறப்படிச்சவன் கூழ்ப்பானைக்கை விழுந்த கதை மாதிரி முடியப்போகுதோ தெரியேல்லை :lol:  :D

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு, தொடருங்கோ. :)


அதே மனதோடு.. அவளோடு சேர்ந்து அவளுக்காக உடுப்புகளை தெரிவு செய்தேன். உங்க தெரிவுகள் எல்லாம்.. நல்லாத்தான் இருக்கு. என்ன.. அப்படியே  பில்லையும் கட்டிட்டீங்கன்னா.. நல்லா இருக்கும் என்றாள்.. சிரித்தபடி. சரி தாங்க நான் பில் கட்டிறேன் என்றேன். ஆனாலும் என்னிடத்தில் அந்தளவுக்கு வங்கி அட்டையில் பணம் இருக்கவில்லை. இருந்தாலும்.. அவள் அதனை உணர்ந்தவளாய்.. நீங்களே படிக்கிறதுக்கு கஸ்டப்படுறீங்க.. இதில எனக்கு பில் கட்டப் போறாராம்.. ஆளைப் பாரு. சும்மா பகிடிக்கு கேட்டேங்க என்றாள்.. எல்லாவற்றையும் புரிந்து கொண்டவளாய்.

 

இதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை. இவ்வாறான சம்மதங்கள் தான் பின்னர் பெரும்பாலான பெண்கள் தாம் shopping செய்வதற்கு தனது காதலனின் பணத்தை தொடர்ந்து நாடுவதற்கு காரணமாக அமைகிறது. :rolleyes:

பின்னர் இடையில் பிரிவு ஏற்பட்டால் அவள் காசுக்காக தான் பழகினாள், தனது தேவைக்கு பயன்படுத்தி விட்டு கழட்டி விட்டிட்டாள் என அப்பெண் மேல் பழி போடுறது. :icon_idea:
 

Link to comment
Share on other sites

இதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை.

எல்லாம் ஒரு முன்னேற்பாடுதானே.. :rolleyes: ஜொள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. கண்டுக்காதீங்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முக்கியமான சொப்பிங் முடித்து நாங்கள் இருவரும்.. ஆளுக்கொரு பார்க்கை கையில் சுமந்து கொண்டு.. வெளியே வரும் போது.. வழியில் ஒரு அலங்காரப் பொருள் அங்காடி இருந்தது. அங்கு பல வர்ணங்களில் உருவான பல வகை..கண்ணாடியிலான அழகு சிலைகள் நிறைந்திருந்தன. அவளுக்கு மேர்க்கப் பிடிக்காது என்பதால்.. அவள் அழகு சிலைகள் மீது கண்ணோட்டம் விட்டாள். நானும்.. அவளை அங்கு நிறுத்தி அவற்றின் மீது ஒரு கண்ணோட்டத்தை செலுத்தினேன். அவளோ.. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து "இது அழகா இருக்குங்க.. வாங்கித் தாறீங்களா" என்றாள். அவள் என்னிடம் ஆசைப்பட்டு முதன்முதலில் வாங்கித் தரச் சொன்ன பொருள் அது தான். அதனால் அதனை எப்படியாவது வாங்கிக் கொடுத்திட வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள். ஆனால் கடைக்காரனிடம் விலை கேட்ட போது.. அவன் அங்காடிக்கும் சேர்த்து விலை சொல்வது போலச் சொல்ல.. அவளே "வேணாங்க.. அவன் ஆளுக்கும் சேர்த்து விலை சொல்லுறான் போலக் கிடக்கு" என்று தனது ஆசையை மாற்றிக் கொண்டாள்.
 
 
ஆனாலும் எனக்குள் அது.. ஒரு வடுவாக மாறிப் போனது. அவள் கேட்டு நான் வாங்கிக் கொடுக்கல்லையே என்ற சிந்தனையே எனக்குள் எழுந்திருந்தது. சொப்பிங் சென்ரரில் இருந்து.. இரு வேறு வழித்தடங்களில் எங்கள் பயணம் ஆரம்பமானது. அவள் தன் வீட்டிற்கும்.. நான் என் வீட்டிற்கும் பயணமானோம். அவளின் சொப்பிங்கை அவளின் வழித்தடத்தில் ரெயில் நிலையத்தில் வைத்துக் கையளித்து விட்டு நான் பேரூந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்தேன். அவளும் வீடு போய் சேர்ந்ததை போனுக்கு ரெக்ஸ்டில் சொல்லி இருந்தாள்.
 
வீடு வந்து சேர்ந்த எனக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. யுனியில் இருந்து வந்திருந்த நீதிமன்ற நோட்டீஸ் தான் அது. தவணைக்குரிய யுனிக் கட்டணம் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்பதால்.. குறித்த 7 நாளைக்குள் கட்டணத்தைச் செலுத்தா விட்டால்.. நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பதோடு தண்டனைப் பணமும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்று வந்திருந்தது. பணம் கட்டுவதற்குரிய..திகதியை நான் மாறி யோசித்து வைச்சிருந்ததால்.. பணம் கட்ட தயாராகவும் இருக்கவில்லை. எனக்கோ நீதிமன்ற நோட்டீஸ் என்பது புதிய அனுபவம் என்பதால்.. ஒரே பதட்டம். கையிலோ அந்தளவு தொகை காசில்லை. உறவினர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களும் என்ன சொல்கிறார்களோ தெரியாது. என்ன செய்வது ஏது செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க.. அவள்.. இணையத் தூதில் இணைந்து.. என்னை அழைத்துக் கொண்டிருந்தாள். 
 
அங்கு "நன்றீங்க.. என் பார்க்கை சுமந்து வந்தததிற்கு" என்று அந்தச் சின்ன விசயத்திற்கும்... நன்றி சொல்லி இருந்தாள். நான் அவளுக்கு பதில் அளிக்க நாளிகைகள் எடுத்ததால்.. என்னமோ ஏதோ என்று பதறிப் போய்.. போன் செய்தாள். போனில் அவளுக்கு விபரம் சொன்னேன். கவலைப்படாதேங்க.. அப்ப நாளைக்கு யுனில சந்திப்பம் என்று விட்டு அவளாகவே போனை கட் செய்து கொண்டாள்.. நிலைமையைப் புரிந்து கொண்டவளாய். இணையத் தூதிலும்.. "Don't Worry" என்ற செய்தியோடு செல்லக் குட்டும் தந்திருந்தாள். ஆனால் அது எல்லாம் அன்றைய பணப் பிரச்சனையின் முன் பெரிசாகத் தெரியவே இல்லை. முதன்முறையாக அவளை மிஞ்சி ஒரு பிரச்சனை எனக்குள் முக்கியம் பெற்ற நாள் அது தான். 
 
மறுநாள்.. யுனியில் அவளை சந்தித்தேன். அவள் கணணி அறைக்கு கூட்டிக் கொண்டு போனாள். தன்னருகில் வந்து அமரச் சொன்னாள். அமர்ந்தேன். சில பழங்களை வேண்டி வந்திருந்தாள். அவற்றை சுத்தம் செய்து எனக்கும் தந்து தானும் சாப்பிட்டாள். சிலவற்றை வழமைக்கு மாறாக.. எனக்கு ஊட்டியும் விட்டாள். திடீர் என்று உங்க கையைக் காட்டுங்க என்றாள். என் கை விரலில் இருந்த மோதிரத்தை பார்த்தவள்.. அதனை கழற்றச் சொன்னாள். கழற்றிக் கொடுத்தேன். அதனை தான் அணிந்து கொண்டாள். என் மோதிரம் அணிந்திருந்த தன் கையை முன்னும் பின்னும் புரட்டி பார்த்திட்டு.. "உங்க மோதிரம்.. எனக்கும் நல்ல மச்சா" இருக்குது என்றாள். அதோடு நிற்கவில்லை.. என் மோதிர விரலை.. நீட்டச் சொன்னாள். தான் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி எனக்கு தானே அணிவித்தாள். "இப்ப எங்க கல்யாணம் முடிஞ்சு போச்சுது. ஓகே..." என்றாள் விளையாட்டோ.. சிரீயஸோ என்று கண்டுபிடிக்க முடியாதபடி.. முகத்தில் ஒரு புன்னகையோடு. 
 
"இப்ப கேளுங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும். உங்களுக்கு பணப் பிரச்சனை என்றதும்.. என்னைக் கேட்கல்ல. ஏங்க.." என்றாள். உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்று தான் கேட்கல்ல. உறவினர்களட்ட கேட்டிருக்கிறன். அவை தருவினம்.. பார்ப்பம் என்றேன் பதிலுக்கு. "அப்ப நான்.. உங்களுக்கு சொந்தமில்லையாங்க என்றாள்".. கண்கள் கலங்க. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐயோ அப்படி இல்லைங்க.. நீங்க பாவம் அது தான் கேட்கல்ல என்றேன். "இந்தப் பாவம் கீவம் கதை எல்லாம் வேண்டாம். நாளைக்கு செக் கொண்டு வாறன்.. எவ்வளவு வேணும்..என்று சொல்லுங்க. காசை உடனடியா யுனிக்கு கட்டுறீங்க" என்று காட்டமாகச் சொல்லி நின்றவள்.. "இப்ப எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுது நினைவில வைச்சுங்க. அதுக்காக அட்வான்ரேஜ் எடுத்துக்கப்படாது. படிப்பு படிப்பா இருக்கனும்" என்றிட்டு.. "சரிங்க நேரமாகுது.. அப்ப நாங்க போவமாங்க" என்றாள். நான் மறு பேச்சின்றி.. "ஆமாங்க போவம்" என்றேன். என்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பேரூந்துத் தடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
 
 
அன்று அவள் அப்படி நடந்து கொண்டதற்கு.. காரணம் புரியாமலே நான். இருந்தாலும்.. நான் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த.. அவள் சொப்பிங் சென்ரரில் அலங்காரப் பொருள் அங்காடியில் காட்டிய அதே வகை சிலை ஒன்றை எடுத்து.. அவளுக்குக் கொடுத்தேன். அவள் விழிகளில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க அதனை பவுத்திரமாக வாங்கி தன் கைப்பைக்குள் வைச்சுக் கொண்டாள். "என்ன இதனை வீட்டு எடுத்துக் கொண்டு போய்.. எங்க ஒளிச்சு வைக்கிறது என்றது தான் பிரச்சனை" என்றாள். "வீட்ட தங்கச்சியவளவை கண்டாளவ தொலைஞ்சன்" என்றாள்.. சிரித்தபடி. "வீட்டுக்குத் தெரியாமல் இருக்க.. பாத்ரூமில நின்று என் கூட போன் போட்டுக் கதைக்கிற உங்களுக்காங்க ஒளிச்சு வைக்க வழி சொல்லித் தரணும்" என்றேன் நான் பதிலுக்கு நக்கலாக. "ஐயா பாவம்.. நான் போன் பண்ணாட்டி.. ரெக்ஸ்ட் பண்ணாட்டி.. நித்திரை இல்லாமல்.. கிடப்பார் என்றிட்டு றிஸ்க் எடுத்து பண்ணினா.. அவருக்கு நக்கல்".. என்றாள் என்னை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய்... கொஞ்சம் கோபமாகவே. இருந்தாலும்.. "சும்மா பகிடிக்குங்க" என்று நான் சமாளிக்க அவள் சாந்தமானாள். 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை.) :)  :lol: 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *


இது ஒரு கதை.. என்பதை எல்லோரும் கருத்தில் கொள்ளுங்கள். நெடுக்காலபோவன் பற்றிய  சுய அளவீட்டுக்கு இதனை பயன்படுத்துவது மகா தவறு ஆகும்.  :) 

Link to comment
Share on other sites

கதை என்று நல்லா தெரியுது நெடுக்ஸ்.. :unsure: எனக்கெல்லாம் மோதிரத்தை மாத்திவிட்டால் நான் எங்கையோ போயிடுவன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!  :)

உங்கள் பெண் இந்தியத் தமிழோ? ( கதையில் வாற பெண்)

இந்தியாவில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழிச்சி அப்படின்னு வைச்சுக்குங்களேன். :)

Link to comment
Share on other sites

* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *

 

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :) நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். :rolleyes: அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். :D போட்டு வந்து சொல்லுங்கோ. :icon_idea::)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  நிணைவுகள், கனவுகள் , நனவுகளாக  புத்தாண்டும் பிறக்கின்றது , வாழ்த்துக்கள் நெடுக்ஸ் !! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :) நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். :rolleyes: அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். :D போட்டு வந்து சொல்லுங்கோ. :icon_idea::)

 

மத்திய இலண்டனுக்குப் போகும் எண்ணமில்லை. வழமை போல.. நண்பர்களோடு மட்டும் சாதாரண ஒரு நாளாக இந்த இரவும் விடியும். மேலும்.. அந்தப் பொண்ணா.. எந்தப் பொண்ணு. இது கதை..!  :)  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யூனி பீசை கட்ட முடியாத நெடுக்ஸ் கடையின் பெறுமதியான சிலையை வாங்கி அவவுக்கு பரிசாக கொடுப்பாராம் பதிலுக்கு அவ பீசை கட்டுவாவாம் ஜயோ,ஜயோ முடியல அலப்பறை தாங்க முடியல்ல :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கதைபுரியல்ல. விடுங்க. எல்லாருக்கும் ஒரே புரிதல் இருந்திட்டா.. கதை விடுகதை ஆகிடும்.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அது சரி நெடுக்ஸ் இந்த கதை எப்ப நடந்தது 5,6 வருசத்திற்கு :D  முந்தியா அல்லது அண்மையிலா :D  படிப்பிற்கு வயசில்லை இல்லை என்டது உண்மை தான் ஆனால் 7 கழுதை வயதாகியும் நெடுக்கருக்கு இன்னும் யூனியில் படிச்சு முடியலையாம் :lol: ...மற்றது கதையில் உங்களை நீங்களே புகழ்கிறீர்களே ஓவராய் இல்லை :) தன்னம்பிக்கை இருக்கத் தான் வேண்டும் ஆனால் எதுக்கும் ஒரு எல்லை இருக்கு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு :icon_idea:
 
 
 
 
 
வருடம் பிறந்த முதல் நாளே யாரோடாவது கொழுவோணும் போல இருக்கு நெடுக்ஸ் அச்சாப் பையன் தானே :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் மறுநாள்.. சொன்ன நேரத்துக்கு முன்னரே.. அவள் யுனிக்கு வந்திருந்தாள். கையில் செக்கோடு. "வாங்க போய் காசைக் கட்டிட்டு வருவம்" என்றாள். எனக்கு இப்படிச் செய்வது சரியா தவறா என்ற தயக்கம் மனதில் இருந்தாலும்.. அவளின் அக்கறையினை தட்டிக்கழிக்க முடியாமல்.. தலையாட்டிக் கொண்டே.. எனக்கு வந்திருந்த கடிதத்தோடு கவுண்டரில் நான் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.
 
நான் கடிதத்தைக் காட்டி செக்கை நீட்ட.. கவுண்டரில் இருந்த பெண்மணி கேட்டார். இது உனது செக்கா என்று. நான் இல்லை.. என்னருகில் நின்ற அவளைக் காட்டி.. இவளுடையது என்றேன். அவள் யார் என்று அவர் கேட்டார். அவள் பிரண்ட் என்றேன். நான் அப்படிச் சொல்ல.. அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். சரி என்று சொல்லி செக்கை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்மணி.. காசு கட்டியதற்கான ரசீதை தந்து எங்களைப் போகச் சொல்லி சொல்லி விட்டார்.
 
நாங்கள் இருவரும் கவுண்டரில் இருந்து வெளியேறி.. யுனியில் இருந்து வெளியேற.. யுனி நுழைவாயில் வரும் போது.. அங்கு நுழைந்த மெல்லிய இளங் காலைக் காற்றில்.. அவள் பாவித்திருந்த வாசனைத்திரவியம் மூக்கை இதமாக வருடிச் சென்றது. அந்த மயக்கத்தில் நானிருக்க மயக்கம் தெளிப்பவளாய்..அவள் சொன்னாள்... "எனக்கு சுப்பர் மார்க்கட் ஒன்றில வேலை கிடைக்கும் போல இருக்குது. பகுதி நேரம் தான். என் சி.வி யை அங்க ஒருத்தன் கிட்ட குடுத்திருக்கிறன். போய் அவனட்ட ரிசல்ட் கேட்கனும்".. என்றாள். "அப்புறங்க.. அவன் ஒரு மாதிரி.. நேற்றும் வீட்ட போற வழில அங்க போயிருந்தன். அவன் என் போன் நம்பர் கேட்டான். ஏன் உனக்கு என் போன் நம்பர் என்று கேட்க.. சும்மா பொழுதுபோக்கக் கதைக்கத்தான் என்றான். இந்த ஆம்பிளைங்களே ஒரே ஜொள்ளுப் பேர்வழி தானாங்க" என்றாள் அவள்.. வில்லங்கமான வினாவை தொக்க வைச்சு. 
 
எனக்கோ.. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் உள்ளூர ஒரு பயம் தொற்றிக் கொண்டது. வில்லன் ஒருத்தன் கிராஸ் பண்ணிடுவானோ என்றல்ல.. இவள் தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று. ஆனாலும் நான் அவளுக்கு புத்திமதி சொல்லப் போய்.. வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. இணையத் தூதில் அவளுடன் பேசும் தருணங்களில்.. ஒரு பேச்சுக்கு என்றாலும்.. ஆண் - பெண் விவாதங்கள் வந்தால் அவள்.. பொங்கி எழுந்து ஆண்களை ஒரு வாங்குவாங்குவதுமின்றி.. அந்தப் பழிபாவத்தை என் மீது கோபமாக உதிர்த்துக் கொள்ளவும் தயங்காதவள்.. என்ற வகையில்.. அவளை அவள் போக்கிலேயே விட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். 
 
அவள் வாரம் தோறும் அந்த சுப்பர் மார்க்கெட் வேலை சரி வருமா வராதா என்று கேட்க அங்கு போகும் வாடிக்கையை கொண்டிருந்தாள். ஆனாலும் நடப்பதை எல்லாம் எனக்கு அப்டேட் செய்வாள். அதில் உண்மை பொய் என்பது.. அவளின் வார்த்தைகளை நம்பும் அளவில் தான் இருந்தது. ஒரு நாள்.. என்னை மீண்டும் கணணி ரூமுக்கு அழைத்தாள். அழைத்தவள் அன்று வழமைக்கு மாறாக சோகத்தோடு உட்கார்ந்திருந்தாள். என்ன விசயம். முகம் மாறி இருக்குது. சோகம் தாண்டவமாடுது என்று கேட்டேன்.. "இல்லைங்க... என் பிரண்ட் ஒருத்தி ஊரில இருந்து வந்திருக்கிறாள். அவளுடைய அம்மாக்கு  கொஞ்சம் சீரியஸ். அவா இங்க தான் கொஸ்பிட்டலில. அவவை போய் பார்க்கப் போனனான். அது தான்".. என்றாள். "அப்புறங்க என் பிரண்ட் கிட்ட உங்களைப் பற்றியும் சொன்னன். அவள் சொன்னாள் பார்த்துப் பழகடி. உங்க ஊருக்க பல கதைகள் நடக்குது. ஏமாந்திடாத" என்று.
 
நான் பதிலுக்கு.. "உங்க பிரண்ட்.. சொன்னதை அப்படியே நம்புறீங்களா" என்றேன். "நம்பவும் முடியல்ல.. நம்பாமலும் இருக்க முடியல்ல. அந்த சுப்பர் மார்க்கெட் ஆளை நினைச்சா.. எப்படிங்க ஆம்பிளையள நம்புறது. கொஞ்சம் அழகா இருந்த உடன.. உதவி செய்யுற மாதிரி வந்து.. போன் நம்பர் கேட்கிறது. அட்ரஸ் கேட்கிறது... அவனை நம்பி.. அவனட்ட சி வி யை கொடுத்திட்டன். எப்படி அதில இருந்து வெளில வாறது என்று தெரியாமல் இருக்கிறன். அப்படிப் பார்க்கேக்க.. பிரண்ட் சொன்னதையும் தட்டிக்கழிக்க முடியல்ல" என்றாள்.
 
எனக்கோ.. ஒரு பெண்ணின் வாயால் இப்படி ஒரு நம்பிக்கையீனத்தை..கேட்பது அன்று தான் முதல்தடவை... என்பதால் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே வெளிப்பட்டது மனதில். நான் அழகாக அன்பாக ஆராதித்தது.. நிலையில்லாத ஒரு மனநிலையில்.. நிற்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னோடு என்ன தான் அவள் நெருக்கம் காட்டினாலும்.. அவளிடத்தில் ஒரு அந்நியத்தனம் ஒட்டி உள்ளதை அன்று உணர்ந்தேன். நான் இப்படி யோசிச்சுக் கொண்டிருக்க, அவள்.. "என்ன யோசிக்கிறீங்க. நீங்க ஒன்றுக்கும் யோசிக்காதேங்க... நான் உங்களை அப்படிப் பார்க்கேல்ல... ஆனாலும்.. ஆம்பிளையள எப்படிங்க நம்புறது".. என்றாள் மீண்டும்.. சுற்றிவளைத்து அதே தொடுபுள்ளியைச் சுற்றி...! அன்று தான்... என்னில் எல்லாமாக நினைத்திருந்த அவள் மீது நான்.. வளர்த்திருந்த.. அன்பின்... நம்பிக்கையின்... நிலையில்லாத தன்மையை வாழ்க்கையில் முதன்முதலில் உணர ஆரம்பித்தேன்..! வாழ்க்கையில்.. ஒரு வெறுமைக்குள் சென்று வந்த நாளிகையும் அப்போதே வந்து போயிருந்தது..! இருந்தாலும் அவளின் மீதி.. வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் நான் உணராமல் இல்லை..! அதுவே அன்று.. எனக்கு அவளிடம்.. உயிர்ப்பாகவும் தென்பட்டது.  
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை) :)  :lol: 
Link to comment
Share on other sites

அந்த supermarket இல் நிற்பவன் தான் வில்லனோ? :rolleyes: தொடருங்கள். :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் .. இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டால் விஞ்ஞான ரீதியில் எல்லாம் சிந்திக்கப்படாது.. :huh: 'சி.வி. வாங்கினவன் மாதிரி போக்கிரிகள்தான் முக்கால்வாசி ஆம்பிளைகள்.. ஆனால் என்னை இளகின மனத்துடன் ஆண்டவன் படைத்துவிட்டானே' எண்டு புளுக வேணும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே? வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே? வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ? :lol:

தமிழ் ஆக்களிடம் தான் வன்முறைக்குப் பஞ்சமில்லையே. நாங்களும் அதே பாதையைக் காட்டக் கூடாது. நாடக் கூடாது. மாற்றி யோசிக்கனும்.  :)  :lol:

ம்ம்..... சின்னத் தொடர் தானே கெதியாய் எழுதி முடியுங்கோ

சின்னத் தொடர் என்றதற்காக நாலு வரில நிறுத்திறதா அலையக்கா. சொல்ல வந்ததை சொல்லிட்டு நிறுத்துவமில்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சரி.. சரி ரெம்ப யோசிக்காதீங்க. நீங்களாவது ஒழுங்கா இருக்க. மற்ற ஆம்பிளையள் மாதிரி பொம்பிளையளோட விளையாடாமல்.. ஜொள்ளு வழியாமல்.. ஒழுங்க இருங்கப் பாருங்க. இல்ல மாமிட்ட சொல்லிடுவன்.. போன் போட்டு என்றாள். மாமியா.. யாருங்க அது என்றேன் ஆச்சரியம் பொங்க. உங்க அம்மா தான் எனக்கு மாமி. அவட போன் நம்பர் எடுத்து வைச்சிருக்கிறனில்ல. உங்க ஸ்கூல் பழைய மாணவர் லிஸ்டில இருந்து எடுத்து வைச்சிருக்கிறன்.. சோ.. நீங்க குழப்படி செய்தீங்க.. ஐயாவைப் பற்றி.. போன் போட்டுச் சொல்லிடுவன். என்ன நினைச்சீங்க என்னைப் பற்றி. நான் ஒன்னும் ஏமாளி இல்லைங்க என்றாள். அப்புறங்க... எனக்கு ஏலாமல் இருக்குது.. வாங்க வீட்ட போவம்.. தலையிடிக்குதுங்க என்றாள். 
 
யுனி.. கன்ரீன் மதிய நேரத்தோடு.. நேரகாலத்துக்கு மூடப்பட்டு விடுவதால்.. நான் யுனி ஸ்ருடண்ட் சொப்பில போய் பரசிற்றமோலும் பெப்சியும் வாங்கி வரட்டா என்று கேட்க.. ஓம் என்று தலையாட்டினாள். நான் ஓடிப்போய் மருந்தோடும் மென்பானத்தோடும்.. வர... "நல்ல ஸ்பீட்டா தான் வேலை செய்யுறீங்க. இதென்ன உண்மையாக அக்கறையா இல்ல நடிப்பாங்க" என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பாவம் என் தயவை நாடியவளுக்கு உதவனுமே என்ற நிஜ அக்கறையில் ஓடிப் போய் ஓடி வாறன்.. இவள் என்ன இப்படிக் கேட்கிறாள் என்று யோசிச்சுக் கொண்டிருக்க..... மெல்லச் சிரிச்சுக் கொண்டே.. "என்ன ஐயா சீரியஸ் ஆகிட்டாரோ.... சும்மா பகிடிங்குங்க" என்றாள்.. என்னை சமாதானப்படுத்தியவாறு.
 
மருந்து குடித்து கொஞ்ச நேரம் இருவரும்.. ஊர் அரசியல் பேசிட்டு.. வீட்டுக்குக் கிளம்பத் தயாரானோம். அவளுக்கும் விடுதலைப் புலிகள் மேல் ஒரு பெரிய மரியாதை இருந்தது. குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணா மீது நல்ல மரியாதை வைத்திருந்தாள். இருந்தாலும்.. புலிகளின் தவறுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நானோ அவை தவறுகள் அல்ல.. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள். அதனை ஏற்படுத்தியவர்களும் அவற்றைத் தவிர்த்திருந்தால்.. புலிகளுக்கும் தவறு செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது என்று சொல்ல.... அவளும் நிஜம் தாங்க என்று ஒத்துக் கொண்டாள். அவளும் சூரியக்கதிர் சிறீலங்கா சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கையின் போது.. வன்னிக்கு இடம்பெயர்ந்து ஜெயசிக்குறு.. இராணுவ நடவடிக்கைகளால்.. தொடர்ந்து பலமுறை இடம்பெயர்ந்து..துன்பப்பட்டு அப்புறம் இந்தியா போய் தகப்பனின் ஸ்பொன்சரில் இங்கு வந்திருந்தாள்.  
 
பேரூந்து தரிப்பிடத்தில் இருவரும் பேரூந்திற்காகக் காத்திருக்க.. நாங்கள் ஏற வேண்டிய வழித்தட பேரூந்து கொஞ்சம் ஆள் நெரிசலோட வர.. நான் அடுத்த பேரூந்தில் போவமே என்றேன். அவள் இல்லை.. எனக்கு அவசரமாப் போகனும்.. என்றாள். நானோ.. அது சரியான நெரிசலுங்க என்று சொல்லிக் கொண்டு நிற்க.. பேரூந்து வந்து நின்று கதவைத் திறக்க.. அவள் ஓடிப் போய் ஏறிவிட்டாள். வழமையாக நான் ஏற வரும் வரை காத்திருப்பவள் அன்று அப்படி நிற்கவில்லை. ஓடிப் போய் ஏறிவிட்டாள். ஆனால் நான் ஏறவில்லை. அவள் ஏறிவிட்ட நிலையில்.. பேரூந்தும் கதவுகளை அடைத்துவிட்ட நிலையில்.. எதுவும் செய்ய முடியாத நான்.. வெளியில் நின்று அப்பாவியாய்.. கைகாட்டி விட்டேன். பேரூந்து புறப்பட்டு போய் விட்ட கொஞ்ச நேரத்தில் போன் பண்ணினாள். கோபமாகப் பேசினாள். அவசரமாப் போகனும் என்றிறன்.. நீங்கள் நிலைமையைப் புரிஞ்சுக்காம விளையாடிக் கொண்டு நிற்கிறீங்க. அடுத்த ஸ்ரொப்பில இறங்கி நிற்பன். வாங்க. ஆனால் ஒன்று இதுதான் கடைசியும் முதலும். எனி உங்க கூட கூடிக் கொண்டு பேரூந்தில.. போய் வாற விளையாட்டு என்னட்ட இல்லை என்றாள் கோபமாக. நானோ.. பதில் எதுவும் பேசவில்லை. இந்தா மற்றப் பேரூந்து வந்திட்டு கெதியா வாறன் என்று மட்டும் சொல்லிக் கொண்டு போனை கட் பண்ணிக் கொண்டேன். அதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.
 
 
நான் பயணித்த பேரூந்து அவள் இறங்கி நின்ற ஸ்ராண்டில் வந்து நிற்க அவளும் அதே பேரூந்தில்... ஏறிக் கொண்டாள். எனக்கு அருகில் ஒரு இருக்கை இருந்தது. ஆனால் அவள் அதில் இருக்கவில்லை. மாறாக இன்னொரு இருக்கையில் போய் இருந்து கொண்டாள். அங்கு வருமாறு கூப்பிட்டாள். எழுந்து போனேன்... இது விளையாட்டில்ல.. நீங்க.. இப்படித்தான் என்னை விட்டிட்டு போவிங்க. நான் தவிச்சுக் கொண்டு நிற்க ஏலாது. இந்த காதல் கத்தரிக்காய் ஒன்றும் எனக்கு வேண்டாம். உதால தலையிடிதான் எனக்கு. வீட்டிலும் பிரச்சனை. இங்கும் பிரச்சனை. நீங்கள் என்னைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரித் தெரியல்ல... என்றாள் கண்களில் அனல் பறக்கும் கோவத்தோடு. நான் அவள் கோபத்தோடு நிற்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு மெளனமாக நின்றேன். எனது தவறை உணர்ந்து எனக்குள் வருந்திக் கொண்டதும் இல்லாமல்.. சொறி சொறி என்று பல தடவை சொன்னேன்.  ஆனால் அவள் ஏலவே அன்று சோகத்தோடு காணப்பட்டதற்கான காரணம் அப்போது தான் வெளிப்பட்டிருந்தது. ஒன்றைப் புரிஞ்சு கொள்ளுங்க.. நீங்க ஒழுங்கா இல்லைன்னா.. உங்களுக்காக மட்டும் காத்திருப்பனுன்னு நினைக்காதீங்க. இன்னொரு கலியாணம் செய்துகிட்டு என் பாட்டில போய்க்கிட்டு இருப்பன். நான் ஒன்றும் அழுது வடிக்கிறவள்.. கிடையாது. எனக்கு சுதந்திரமா இருக்கனும். இப்படி இழுபட்டுக் கொண்டு திரியுறதில இஸ்டமில்லை என்றாள் மீண்டும் கோபம் தணியாமலே.
 
அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்.. நான் திகைத்து நிற்க.. பேரூந்தும் சேரும் இடம் வந்து சேர்ந்தது. விறுக் என்று எதுவும் சொல்லாமல் இறங்கியவள்.. தெருவைக் கடந்து தொடரூந்து நிலையத்துக்குள் தனது தொடரூந்து தரிப்பிடம் நோக்கி ஓடிச் சென்று விட்டாள். நான் அவளை அப்படியே கோபத்தோடு அனுமதிப்பது நியாயமில்லை... நான் அவள் மீது வைச்சிருந்த அன்புக்கும் நல்லதல்ல என்ற காரணத்தாலும்.... அவளின் கோபத்தில் ஓரளவு நியாயம் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டதாலும்.... அவள் நின்ற இடம் நோக்கி ஓடிப் போனேன். போய் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவள் அருகில் அமர்ந்து கொண்டேன். "ஏங்க கோவிக்கிறீங்க. சொறிங்க" என்றேன். அவளோ..மெளனமாக இருந்தாள். நான் மீண்டும் "சொறிங்க" என்றேன். எனக்கு உங்க சொறி தேவையில்ல. உங்களுக்காக நான் எவ்வளவோ ரிஸ்க் எடுத்திருக்கிறன். அது எனக்குத் தான் தெரியும். ஆனால் நீங்க எல்லாத்தையும் சிம்பிளா நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்க. என் பிரண்ட் சொன்னவள்.. உன்னை அவன் சரியா புரிஞ்சு கொண்டிருக்கிறான் என்று எப்படி நம்புறாயடி.. என்று. அவள் கேட்டது சரியாப் போச்சுது. எனக்கு உந்தக் காதல்.. கலியாணம் தேவையில்லை. நீங்களும் தேவையில்ல. என்னைத் தொந்தரவு பண்ணாமல் போயிடுங்க" என்றாள்.. கோபம் மாறாமலே. 
 
 
மிகுதி அப்புறம்...
 
(பகுதி கற்பனை.) :)  :lol:  :( 
Link to comment
Share on other sites

இதென்னய்யா அநியாயம்..! சும்மா இருந்த நெடுக்கை இழுத்துவிட்டிட்டு அறிக்கை வேறை வாசிக்கினம்?? :unsure: ஆனாலும் மரக்கட்டை மாதிரி இருந்தால் ஒண்டுக்கும் ஆகாது நெடுக்ஸ்.. :rolleyes:

Link to comment
Share on other sites

சரி. விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாதிரி புடுங்குப்பாடு ஆரம்பிச்சிட்டுது. :D

 

இனி அவா த்ரிஷா மாதிரியும் நெடுக்ஸ் அண்ணா சிம்பு மாதிரியும் ஆகிடப்போறார்கள். :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.