Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாம.... ஜாக்கிரதையாய், இருக்கிறது நல்லது.
நெடுக்ஸ்சிற்க்கு... விசர் பிடிச்சுப் போட்டுது, என்று சந்தேகமாய்... இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ அறப்படிச்சவன் கூழ்ப்பானைக்கை விழுந்த கதை மாதிரி முடியப்போகுதோ தெரியேல்லை :lol:  :D

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு, தொடருங்கோ. :)


அதே மனதோடு.. அவளோடு சேர்ந்து அவளுக்காக உடுப்புகளை தெரிவு செய்தேன். உங்க தெரிவுகள் எல்லாம்.. நல்லாத்தான் இருக்கு. என்ன.. அப்படியே  பில்லையும் கட்டிட்டீங்கன்னா.. நல்லா இருக்கும் என்றாள்.. சிரித்தபடி. சரி தாங்க நான் பில் கட்டிறேன் என்றேன். ஆனாலும் என்னிடத்தில் அந்தளவுக்கு வங்கி அட்டையில் பணம் இருக்கவில்லை. இருந்தாலும்.. அவள் அதனை உணர்ந்தவளாய்.. நீங்களே படிக்கிறதுக்கு கஸ்டப்படுறீங்க.. இதில எனக்கு பில் கட்டப் போறாராம்.. ஆளைப் பாரு. சும்மா பகிடிக்கு கேட்டேங்க என்றாள்.. எல்லாவற்றையும் புரிந்து கொண்டவளாய்.

 

இதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை. இவ்வாறான சம்மதங்கள் தான் பின்னர் பெரும்பாலான பெண்கள் தாம் shopping செய்வதற்கு தனது காதலனின் பணத்தை தொடர்ந்து நாடுவதற்கு காரணமாக அமைகிறது. :rolleyes:

பின்னர் இடையில் பிரிவு ஏற்பட்டால் அவள் காசுக்காக தான் பழகினாள், தனது தேவைக்கு பயன்படுத்தி விட்டு கழட்டி விட்டிட்டாள் என அப்பெண் மேல் பழி போடுறது. :icon_idea:
 

Link to comment
Share on other sites

இதுதான் பிழை. தனது தங்கைக்கும், தனக்கும் உடை வாங்குவதற்கு உங்களை பணம் கட்ட சொன்னதும் உடனே சம்மதிப்பது பிழை.

எல்லாம் ஒரு முன்னேற்பாடுதானே.. :rolleyes: ஜொள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.. கண்டுக்காதீங்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முக்கியமான சொப்பிங் முடித்து நாங்கள் இருவரும்.. ஆளுக்கொரு பார்க்கை கையில் சுமந்து கொண்டு.. வெளியே வரும் போது.. வழியில் ஒரு அலங்காரப் பொருள் அங்காடி இருந்தது. அங்கு பல வர்ணங்களில் உருவான பல வகை..கண்ணாடியிலான அழகு சிலைகள் நிறைந்திருந்தன. அவளுக்கு மேர்க்கப் பிடிக்காது என்பதால்.. அவள் அழகு சிலைகள் மீது கண்ணோட்டம் விட்டாள். நானும்.. அவளை அங்கு நிறுத்தி அவற்றின் மீது ஒரு கண்ணோட்டத்தை செலுத்தினேன். அவளோ.. அவற்றில் ஒன்றை தெரிவு செய்து "இது அழகா இருக்குங்க.. வாங்கித் தாறீங்களா" என்றாள். அவள் என்னிடம் ஆசைப்பட்டு முதன்முதலில் வாங்கித் தரச் சொன்ன பொருள் அது தான். அதனால் அதனை எப்படியாவது வாங்கிக் கொடுத்திட வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள். ஆனால் கடைக்காரனிடம் விலை கேட்ட போது.. அவன் அங்காடிக்கும் சேர்த்து விலை சொல்வது போலச் சொல்ல.. அவளே "வேணாங்க.. அவன் ஆளுக்கும் சேர்த்து விலை சொல்லுறான் போலக் கிடக்கு" என்று தனது ஆசையை மாற்றிக் கொண்டாள்.
 
 
ஆனாலும் எனக்குள் அது.. ஒரு வடுவாக மாறிப் போனது. அவள் கேட்டு நான் வாங்கிக் கொடுக்கல்லையே என்ற சிந்தனையே எனக்குள் எழுந்திருந்தது. சொப்பிங் சென்ரரில் இருந்து.. இரு வேறு வழித்தடங்களில் எங்கள் பயணம் ஆரம்பமானது. அவள் தன் வீட்டிற்கும்.. நான் என் வீட்டிற்கும் பயணமானோம். அவளின் சொப்பிங்கை அவளின் வழித்தடத்தில் ரெயில் நிலையத்தில் வைத்துக் கையளித்து விட்டு நான் பேரூந்தில் பயணித்து வீடு வந்து சேர்ந்தேன். அவளும் வீடு போய் சேர்ந்ததை போனுக்கு ரெக்ஸ்டில் சொல்லி இருந்தாள்.
 
வீடு வந்து சேர்ந்த எனக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. யுனியில் இருந்து வந்திருந்த நீதிமன்ற நோட்டீஸ் தான் அது. தவணைக்குரிய யுனிக் கட்டணம் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை என்பதால்.. குறித்த 7 நாளைக்குள் கட்டணத்தைச் செலுத்தா விட்டால்.. நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பதோடு தண்டனைப் பணமும் சேர்த்துக் கட்ட வேண்டும் என்று வந்திருந்தது. பணம் கட்டுவதற்குரிய..திகதியை நான் மாறி யோசித்து வைச்சிருந்ததால்.. பணம் கட்ட தயாராகவும் இருக்கவில்லை. எனக்கோ நீதிமன்ற நோட்டீஸ் என்பது புதிய அனுபவம் என்பதால்.. ஒரே பதட்டம். கையிலோ அந்தளவு தொகை காசில்லை. உறவினர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்களும் என்ன சொல்கிறார்களோ தெரியாது. என்ன செய்வது ஏது செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருக்க.. அவள்.. இணையத் தூதில் இணைந்து.. என்னை அழைத்துக் கொண்டிருந்தாள். 
 
அங்கு "நன்றீங்க.. என் பார்க்கை சுமந்து வந்தததிற்கு" என்று அந்தச் சின்ன விசயத்திற்கும்... நன்றி சொல்லி இருந்தாள். நான் அவளுக்கு பதில் அளிக்க நாளிகைகள் எடுத்ததால்.. என்னமோ ஏதோ என்று பதறிப் போய்.. போன் செய்தாள். போனில் அவளுக்கு விபரம் சொன்னேன். கவலைப்படாதேங்க.. அப்ப நாளைக்கு யுனில சந்திப்பம் என்று விட்டு அவளாகவே போனை கட் செய்து கொண்டாள்.. நிலைமையைப் புரிந்து கொண்டவளாய். இணையத் தூதிலும்.. "Don't Worry" என்ற செய்தியோடு செல்லக் குட்டும் தந்திருந்தாள். ஆனால் அது எல்லாம் அன்றைய பணப் பிரச்சனையின் முன் பெரிசாகத் தெரியவே இல்லை. முதன்முறையாக அவளை மிஞ்சி ஒரு பிரச்சனை எனக்குள் முக்கியம் பெற்ற நாள் அது தான். 
 
மறுநாள்.. யுனியில் அவளை சந்தித்தேன். அவள் கணணி அறைக்கு கூட்டிக் கொண்டு போனாள். தன்னருகில் வந்து அமரச் சொன்னாள். அமர்ந்தேன். சில பழங்களை வேண்டி வந்திருந்தாள். அவற்றை சுத்தம் செய்து எனக்கும் தந்து தானும் சாப்பிட்டாள். சிலவற்றை வழமைக்கு மாறாக.. எனக்கு ஊட்டியும் விட்டாள். திடீர் என்று உங்க கையைக் காட்டுங்க என்றாள். என் கை விரலில் இருந்த மோதிரத்தை பார்த்தவள்.. அதனை கழற்றச் சொன்னாள். கழற்றிக் கொடுத்தேன். அதனை தான் அணிந்து கொண்டாள். என் மோதிரம் அணிந்திருந்த தன் கையை முன்னும் பின்னும் புரட்டி பார்த்திட்டு.. "உங்க மோதிரம்.. எனக்கும் நல்ல மச்சா" இருக்குது என்றாள். அதோடு நிற்கவில்லை.. என் மோதிர விரலை.. நீட்டச் சொன்னாள். தான் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி எனக்கு தானே அணிவித்தாள். "இப்ப எங்க கல்யாணம் முடிஞ்சு போச்சுது. ஓகே..." என்றாள் விளையாட்டோ.. சிரீயஸோ என்று கண்டுபிடிக்க முடியாதபடி.. முகத்தில் ஒரு புன்னகையோடு. 
 
"இப்ப கேளுங்க.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும். உங்களுக்கு பணப் பிரச்சனை என்றதும்.. என்னைக் கேட்கல்ல. ஏங்க.." என்றாள். உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்று தான் கேட்கல்ல. உறவினர்களட்ட கேட்டிருக்கிறன். அவை தருவினம்.. பார்ப்பம் என்றேன் பதிலுக்கு. "அப்ப நான்.. உங்களுக்கு சொந்தமில்லையாங்க என்றாள்".. கண்கள் கலங்க. இதனை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐயோ அப்படி இல்லைங்க.. நீங்க பாவம் அது தான் கேட்கல்ல என்றேன். "இந்தப் பாவம் கீவம் கதை எல்லாம் வேண்டாம். நாளைக்கு செக் கொண்டு வாறன்.. எவ்வளவு வேணும்..என்று சொல்லுங்க. காசை உடனடியா யுனிக்கு கட்டுறீங்க" என்று காட்டமாகச் சொல்லி நின்றவள்.. "இப்ப எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சுது நினைவில வைச்சுங்க. அதுக்காக அட்வான்ரேஜ் எடுத்துக்கப்படாது. படிப்பு படிப்பா இருக்கனும்" என்றிட்டு.. "சரிங்க நேரமாகுது.. அப்ப நாங்க போவமாங்க" என்றாள். நான் மறு பேச்சின்றி.. "ஆமாங்க போவம்" என்றேன். என்னையும் தன்னோடு அழைத்துக் கொண்டு பேரூந்துத் தடம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
 
 
அன்று அவள் அப்படி நடந்து கொண்டதற்கு.. காரணம் புரியாமலே நான். இருந்தாலும்.. நான் அவளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த.. அவள் சொப்பிங் சென்ரரில் அலங்காரப் பொருள் அங்காடியில் காட்டிய அதே வகை சிலை ஒன்றை எடுத்து.. அவளுக்குக் கொடுத்தேன். அவள் விழிகளில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க அதனை பவுத்திரமாக வாங்கி தன் கைப்பைக்குள் வைச்சுக் கொண்டாள். "என்ன இதனை வீட்டு எடுத்துக் கொண்டு போய்.. எங்க ஒளிச்சு வைக்கிறது என்றது தான் பிரச்சனை" என்றாள். "வீட்ட தங்கச்சியவளவை கண்டாளவ தொலைஞ்சன்" என்றாள்.. சிரித்தபடி. "வீட்டுக்குத் தெரியாமல் இருக்க.. பாத்ரூமில நின்று என் கூட போன் போட்டுக் கதைக்கிற உங்களுக்காங்க ஒளிச்சு வைக்க வழி சொல்லித் தரணும்" என்றேன் நான் பதிலுக்கு நக்கலாக. "ஐயா பாவம்.. நான் போன் பண்ணாட்டி.. ரெக்ஸ்ட் பண்ணாட்டி.. நித்திரை இல்லாமல்.. கிடப்பார் என்றிட்டு றிஸ்க் எடுத்து பண்ணினா.. அவருக்கு நக்கல்".. என்றாள் என்னை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய்... கொஞ்சம் கோபமாகவே. இருந்தாலும்.. "சும்மா பகிடிக்குங்க" என்று நான் சமாளிக்க அவள் சாந்தமானாள். 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை.) :)  :lol: 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *


இது ஒரு கதை.. என்பதை எல்லோரும் கருத்தில் கொள்ளுங்கள். நெடுக்காலபோவன் பற்றிய  சுய அளவீட்டுக்கு இதனை பயன்படுத்துவது மகா தவறு ஆகும்.  :) 

Link to comment
Share on other sites

கதை என்று நல்லா தெரியுது நெடுக்ஸ்.. :unsure: எனக்கெல்லாம் மோதிரத்தை மாத்திவிட்டால் நான் எங்கையோ போயிடுவன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!  :)

உங்கள் பெண் இந்தியத் தமிழோ? ( கதையில் வாற பெண்)

இந்தியாவில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த யாழ்ப்பாணத் தமிழிச்சி அப்படின்னு வைச்சுக்குங்களேன். :)

Link to comment
Share on other sites

* மீண்டும் புத்தாண்டைத் தாண்டி வருவோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். *

 

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :) நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். :rolleyes: அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். :D போட்டு வந்து சொல்லுங்கோ. :icon_idea::)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள்  நிணைவுகள், கனவுகள் , நனவுகளாக  புத்தாண்டும் பிறக்கின்றது , வாழ்த்துக்கள் நெடுக்ஸ் !! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :) நீங்கள் westminster க்கு போய் அங்கு இடம்பெறும் வான வேடிக்கைகளை (fireworks) பார்க்க போகிறீர்களாக்கும். :rolleyes: அந்த பெண்ணும் வாறாவா இல்லையா என அறிய ஆவல். :D போட்டு வந்து சொல்லுங்கோ. :icon_idea::)

 

மத்திய இலண்டனுக்குப் போகும் எண்ணமில்லை. வழமை போல.. நண்பர்களோடு மட்டும் சாதாரண ஒரு நாளாக இந்த இரவும் விடியும். மேலும்.. அந்தப் பொண்ணா.. எந்தப் பொண்ணு. இது கதை..!  :)  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யூனி பீசை கட்ட முடியாத நெடுக்ஸ் கடையின் பெறுமதியான சிலையை வாங்கி அவவுக்கு பரிசாக கொடுப்பாராம் பதிலுக்கு அவ பீசை கட்டுவாவாம் ஜயோ,ஜயோ முடியல அலப்பறை தாங்க முடியல்ல :lol:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கதைபுரியல்ல. விடுங்க. எல்லாருக்கும் ஒரே புரிதல் இருந்திட்டா.. கதை விடுகதை ஆகிடும்.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அது சரி நெடுக்ஸ் இந்த கதை எப்ப நடந்தது 5,6 வருசத்திற்கு :D  முந்தியா அல்லது அண்மையிலா :D  படிப்பிற்கு வயசில்லை இல்லை என்டது உண்மை தான் ஆனால் 7 கழுதை வயதாகியும் நெடுக்கருக்கு இன்னும் யூனியில் படிச்சு முடியலையாம் :lol: ...மற்றது கதையில் உங்களை நீங்களே புகழ்கிறீர்களே ஓவராய் இல்லை :) தன்னம்பிக்கை இருக்கத் தான் வேண்டும் ஆனால் எதுக்கும் ஒரு எல்லை இருக்கு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு :icon_idea:
 
 
 
 
 
வருடம் பிறந்த முதல் நாளே யாரோடாவது கொழுவோணும் போல இருக்கு நெடுக்ஸ் அச்சாப் பையன் தானே :lol: 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் மறுநாள்.. சொன்ன நேரத்துக்கு முன்னரே.. அவள் யுனிக்கு வந்திருந்தாள். கையில் செக்கோடு. "வாங்க போய் காசைக் கட்டிட்டு வருவம்" என்றாள். எனக்கு இப்படிச் செய்வது சரியா தவறா என்ற தயக்கம் மனதில் இருந்தாலும்.. அவளின் அக்கறையினை தட்டிக்கழிக்க முடியாமல்.. தலையாட்டிக் கொண்டே.. எனக்கு வந்திருந்த கடிதத்தோடு கவுண்டரில் நான் அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன்.
 
நான் கடிதத்தைக் காட்டி செக்கை நீட்ட.. கவுண்டரில் இருந்த பெண்மணி கேட்டார். இது உனது செக்கா என்று. நான் இல்லை.. என்னருகில் நின்ற அவளைக் காட்டி.. இவளுடையது என்றேன். அவள் யார் என்று அவர் கேட்டார். அவள் பிரண்ட் என்றேன். நான் அப்படிச் சொல்ல.. அவள் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். சரி என்று சொல்லி செக்கை ஏற்றுக் கொண்ட அந்தப் பெண்மணி.. காசு கட்டியதற்கான ரசீதை தந்து எங்களைப் போகச் சொல்லி சொல்லி விட்டார்.
 
நாங்கள் இருவரும் கவுண்டரில் இருந்து வெளியேறி.. யுனியில் இருந்து வெளியேற.. யுனி நுழைவாயில் வரும் போது.. அங்கு நுழைந்த மெல்லிய இளங் காலைக் காற்றில்.. அவள் பாவித்திருந்த வாசனைத்திரவியம் மூக்கை இதமாக வருடிச் சென்றது. அந்த மயக்கத்தில் நானிருக்க மயக்கம் தெளிப்பவளாய்..அவள் சொன்னாள்... "எனக்கு சுப்பர் மார்க்கட் ஒன்றில வேலை கிடைக்கும் போல இருக்குது. பகுதி நேரம் தான். என் சி.வி யை அங்க ஒருத்தன் கிட்ட குடுத்திருக்கிறன். போய் அவனட்ட ரிசல்ட் கேட்கனும்".. என்றாள். "அப்புறங்க.. அவன் ஒரு மாதிரி.. நேற்றும் வீட்ட போற வழில அங்க போயிருந்தன். அவன் என் போன் நம்பர் கேட்டான். ஏன் உனக்கு என் போன் நம்பர் என்று கேட்க.. சும்மா பொழுதுபோக்கக் கதைக்கத்தான் என்றான். இந்த ஆம்பிளைங்களே ஒரே ஜொள்ளுப் பேர்வழி தானாங்க" என்றாள் அவள்.. வில்லங்கமான வினாவை தொக்க வைச்சு. 
 
எனக்கோ.. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் உள்ளூர ஒரு பயம் தொற்றிக் கொண்டது. வில்லன் ஒருத்தன் கிராஸ் பண்ணிடுவானோ என்றல்ல.. இவள் தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாளே என்று. ஆனாலும் நான் அவளுக்கு புத்திமதி சொல்லப் போய்.. வாங்கிக் கட்டிக்கொள்ள தயாராக இருக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. இணையத் தூதில் அவளுடன் பேசும் தருணங்களில்.. ஒரு பேச்சுக்கு என்றாலும்.. ஆண் - பெண் விவாதங்கள் வந்தால் அவள்.. பொங்கி எழுந்து ஆண்களை ஒரு வாங்குவாங்குவதுமின்றி.. அந்தப் பழிபாவத்தை என் மீது கோபமாக உதிர்த்துக் கொள்ளவும் தயங்காதவள்.. என்ற வகையில்.. அவளை அவள் போக்கிலேயே விட்டுவிடுவது என்று தீர்மானித்தேன். 
 
அவள் வாரம் தோறும் அந்த சுப்பர் மார்க்கெட் வேலை சரி வருமா வராதா என்று கேட்க அங்கு போகும் வாடிக்கையை கொண்டிருந்தாள். ஆனாலும் நடப்பதை எல்லாம் எனக்கு அப்டேட் செய்வாள். அதில் உண்மை பொய் என்பது.. அவளின் வார்த்தைகளை நம்பும் அளவில் தான் இருந்தது. ஒரு நாள்.. என்னை மீண்டும் கணணி ரூமுக்கு அழைத்தாள். அழைத்தவள் அன்று வழமைக்கு மாறாக சோகத்தோடு உட்கார்ந்திருந்தாள். என்ன விசயம். முகம் மாறி இருக்குது. சோகம் தாண்டவமாடுது என்று கேட்டேன்.. "இல்லைங்க... என் பிரண்ட் ஒருத்தி ஊரில இருந்து வந்திருக்கிறாள். அவளுடைய அம்மாக்கு  கொஞ்சம் சீரியஸ். அவா இங்க தான் கொஸ்பிட்டலில. அவவை போய் பார்க்கப் போனனான். அது தான்".. என்றாள். "அப்புறங்க என் பிரண்ட் கிட்ட உங்களைப் பற்றியும் சொன்னன். அவள் சொன்னாள் பார்த்துப் பழகடி. உங்க ஊருக்க பல கதைகள் நடக்குது. ஏமாந்திடாத" என்று.
 
நான் பதிலுக்கு.. "உங்க பிரண்ட்.. சொன்னதை அப்படியே நம்புறீங்களா" என்றேன். "நம்பவும் முடியல்ல.. நம்பாமலும் இருக்க முடியல்ல. அந்த சுப்பர் மார்க்கெட் ஆளை நினைச்சா.. எப்படிங்க ஆம்பிளையள நம்புறது. கொஞ்சம் அழகா இருந்த உடன.. உதவி செய்யுற மாதிரி வந்து.. போன் நம்பர் கேட்கிறது. அட்ரஸ் கேட்கிறது... அவனை நம்பி.. அவனட்ட சி வி யை கொடுத்திட்டன். எப்படி அதில இருந்து வெளில வாறது என்று தெரியாமல் இருக்கிறன். அப்படிப் பார்க்கேக்க.. பிரண்ட் சொன்னதையும் தட்டிக்கழிக்க முடியல்ல" என்றாள்.
 
எனக்கோ.. ஒரு பெண்ணின் வாயால் இப்படி ஒரு நம்பிக்கையீனத்தை..கேட்பது அன்று தான் முதல்தடவை... என்பதால் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமே வெளிப்பட்டது மனதில். நான் அழகாக அன்பாக ஆராதித்தது.. நிலையில்லாத ஒரு மனநிலையில்.. நிற்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னோடு என்ன தான் அவள் நெருக்கம் காட்டினாலும்.. அவளிடத்தில் ஒரு அந்நியத்தனம் ஒட்டி உள்ளதை அன்று உணர்ந்தேன். நான் இப்படி யோசிச்சுக் கொண்டிருக்க, அவள்.. "என்ன யோசிக்கிறீங்க. நீங்க ஒன்றுக்கும் யோசிக்காதேங்க... நான் உங்களை அப்படிப் பார்க்கேல்ல... ஆனாலும்.. ஆம்பிளையள எப்படிங்க நம்புறது".. என்றாள் மீண்டும்.. சுற்றிவளைத்து அதே தொடுபுள்ளியைச் சுற்றி...! அன்று தான்... என்னில் எல்லாமாக நினைத்திருந்த அவள் மீது நான்.. வளர்த்திருந்த.. அன்பின்... நம்பிக்கையின்... நிலையில்லாத தன்மையை வாழ்க்கையில் முதன்முதலில் உணர ஆரம்பித்தேன்..! வாழ்க்கையில்.. ஒரு வெறுமைக்குள் சென்று வந்த நாளிகையும் அப்போதே வந்து போயிருந்தது..! இருந்தாலும் அவளின் மீதி.. வார்த்தைகளில் இருந்த நம்பிக்கையையும் நான் உணராமல் இல்லை..! அதுவே அன்று.. எனக்கு அவளிடம்.. உயிர்ப்பாகவும் தென்பட்டது.  
 
 
மிகுதி அப்புறம்..
 
(பகுதி கற்பனை) :)  :lol: 
Link to comment
Share on other sites

அந்த supermarket இல் நிற்பவன் தான் வில்லனோ? :rolleyes: தொடருங்கள். :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் .. இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டால் விஞ்ஞான ரீதியில் எல்லாம் சிந்திக்கப்படாது.. :huh: 'சி.வி. வாங்கினவன் மாதிரி போக்கிரிகள்தான் முக்கால்வாசி ஆம்பிளைகள்.. ஆனால் என்னை இளகின மனத்துடன் ஆண்டவன் படைத்துவிட்டானே' எண்டு புளுக வேணும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே? வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த்ரில் ரசிகர்களைக் கவர இந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியைச் செருகலாமே? வில்லன் வந்தாச்சு, ஹீரோவுக்கு சண்டை போட வருமா அல்லது ஜொள்ளு விட மட்டும் தான் வருமா எண்டு வாசகர்களுக்குத் தெரிய வேணாமோ? :lol:

தமிழ் ஆக்களிடம் தான் வன்முறைக்குப் பஞ்சமில்லையே. நாங்களும் அதே பாதையைக் காட்டக் கூடாது. நாடக் கூடாது. மாற்றி யோசிக்கனும்.  :)  :lol:

ம்ம்..... சின்னத் தொடர் தானே கெதியாய் எழுதி முடியுங்கோ

சின்னத் தொடர் என்றதற்காக நாலு வரில நிறுத்திறதா அலையக்கா. சொல்ல வந்ததை சொல்லிட்டு நிறுத்துவமில்ல. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சரி.. சரி ரெம்ப யோசிக்காதீங்க. நீங்களாவது ஒழுங்கா இருக்க. மற்ற ஆம்பிளையள் மாதிரி பொம்பிளையளோட விளையாடாமல்.. ஜொள்ளு வழியாமல்.. ஒழுங்க இருங்கப் பாருங்க. இல்ல மாமிட்ட சொல்லிடுவன்.. போன் போட்டு என்றாள். மாமியா.. யாருங்க அது என்றேன் ஆச்சரியம் பொங்க. உங்க அம்மா தான் எனக்கு மாமி. அவட போன் நம்பர் எடுத்து வைச்சிருக்கிறனில்ல. உங்க ஸ்கூல் பழைய மாணவர் லிஸ்டில இருந்து எடுத்து வைச்சிருக்கிறன்.. சோ.. நீங்க குழப்படி செய்தீங்க.. ஐயாவைப் பற்றி.. போன் போட்டுச் சொல்லிடுவன். என்ன நினைச்சீங்க என்னைப் பற்றி. நான் ஒன்னும் ஏமாளி இல்லைங்க என்றாள். அப்புறங்க... எனக்கு ஏலாமல் இருக்குது.. வாங்க வீட்ட போவம்.. தலையிடிக்குதுங்க என்றாள். 
 
யுனி.. கன்ரீன் மதிய நேரத்தோடு.. நேரகாலத்துக்கு மூடப்பட்டு விடுவதால்.. நான் யுனி ஸ்ருடண்ட் சொப்பில போய் பரசிற்றமோலும் பெப்சியும் வாங்கி வரட்டா என்று கேட்க.. ஓம் என்று தலையாட்டினாள். நான் ஓடிப்போய் மருந்தோடும் மென்பானத்தோடும்.. வர... "நல்ல ஸ்பீட்டா தான் வேலை செய்யுறீங்க. இதென்ன உண்மையாக அக்கறையா இல்ல நடிப்பாங்க" என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. பாவம் என் தயவை நாடியவளுக்கு உதவனுமே என்ற நிஜ அக்கறையில் ஓடிப் போய் ஓடி வாறன்.. இவள் என்ன இப்படிக் கேட்கிறாள் என்று யோசிச்சுக் கொண்டிருக்க..... மெல்லச் சிரிச்சுக் கொண்டே.. "என்ன ஐயா சீரியஸ் ஆகிட்டாரோ.... சும்மா பகிடிங்குங்க" என்றாள்.. என்னை சமாதானப்படுத்தியவாறு.
 
மருந்து குடித்து கொஞ்ச நேரம் இருவரும்.. ஊர் அரசியல் பேசிட்டு.. வீட்டுக்குக் கிளம்பத் தயாரானோம். அவளுக்கும் விடுதலைப் புலிகள் மேல் ஒரு பெரிய மரியாதை இருந்தது. குறிப்பாக தமிழ்செல்வன் அண்ணா மீது நல்ல மரியாதை வைத்திருந்தாள். இருந்தாலும்.. புலிகளின் தவறுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. ஆனால் நானோ அவை தவறுகள் அல்ல.. அவர்களுக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள். அதனை ஏற்படுத்தியவர்களும் அவற்றைத் தவிர்த்திருந்தால்.. புலிகளுக்கும் தவறு செய்ய வேண்டிய தேவை வந்திருக்காது என்று சொல்ல.... அவளும் நிஜம் தாங்க என்று ஒத்துக் கொண்டாள். அவளும் சூரியக்கதிர் சிறீலங்கா சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு.. நடவடிக்கையின் போது.. வன்னிக்கு இடம்பெயர்ந்து ஜெயசிக்குறு.. இராணுவ நடவடிக்கைகளால்.. தொடர்ந்து பலமுறை இடம்பெயர்ந்து..துன்பப்பட்டு அப்புறம் இந்தியா போய் தகப்பனின் ஸ்பொன்சரில் இங்கு வந்திருந்தாள்.  
 
பேரூந்து தரிப்பிடத்தில் இருவரும் பேரூந்திற்காகக் காத்திருக்க.. நாங்கள் ஏற வேண்டிய வழித்தட பேரூந்து கொஞ்சம் ஆள் நெரிசலோட வர.. நான் அடுத்த பேரூந்தில் போவமே என்றேன். அவள் இல்லை.. எனக்கு அவசரமாப் போகனும்.. என்றாள். நானோ.. அது சரியான நெரிசலுங்க என்று சொல்லிக் கொண்டு நிற்க.. பேரூந்து வந்து நின்று கதவைத் திறக்க.. அவள் ஓடிப் போய் ஏறிவிட்டாள். வழமையாக நான் ஏற வரும் வரை காத்திருப்பவள் அன்று அப்படி நிற்கவில்லை. ஓடிப் போய் ஏறிவிட்டாள். ஆனால் நான் ஏறவில்லை. அவள் ஏறிவிட்ட நிலையில்.. பேரூந்தும் கதவுகளை அடைத்துவிட்ட நிலையில்.. எதுவும் செய்ய முடியாத நான்.. வெளியில் நின்று அப்பாவியாய்.. கைகாட்டி விட்டேன். பேரூந்து புறப்பட்டு போய் விட்ட கொஞ்ச நேரத்தில் போன் பண்ணினாள். கோபமாகப் பேசினாள். அவசரமாப் போகனும் என்றிறன்.. நீங்கள் நிலைமையைப் புரிஞ்சுக்காம விளையாடிக் கொண்டு நிற்கிறீங்க. அடுத்த ஸ்ரொப்பில இறங்கி நிற்பன். வாங்க. ஆனால் ஒன்று இதுதான் கடைசியும் முதலும். எனி உங்க கூட கூடிக் கொண்டு பேரூந்தில.. போய் வாற விளையாட்டு என்னட்ட இல்லை என்றாள் கோபமாக. நானோ.. பதில் எதுவும் பேசவில்லை. இந்தா மற்றப் பேரூந்து வந்திட்டு கெதியா வாறன் என்று மட்டும் சொல்லிக் கொண்டு போனை கட் பண்ணிக் கொண்டேன். அதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.
 
 
நான் பயணித்த பேரூந்து அவள் இறங்கி நின்ற ஸ்ராண்டில் வந்து நிற்க அவளும் அதே பேரூந்தில்... ஏறிக் கொண்டாள். எனக்கு அருகில் ஒரு இருக்கை இருந்தது. ஆனால் அவள் அதில் இருக்கவில்லை. மாறாக இன்னொரு இருக்கையில் போய் இருந்து கொண்டாள். அங்கு வருமாறு கூப்பிட்டாள். எழுந்து போனேன்... இது விளையாட்டில்ல.. நீங்க.. இப்படித்தான் என்னை விட்டிட்டு போவிங்க. நான் தவிச்சுக் கொண்டு நிற்க ஏலாது. இந்த காதல் கத்தரிக்காய் ஒன்றும் எனக்கு வேண்டாம். உதால தலையிடிதான் எனக்கு. வீட்டிலும் பிரச்சனை. இங்கும் பிரச்சனை. நீங்கள் என்னைப் புரிஞ்சுக்கிட்ட மாதிரித் தெரியல்ல... என்றாள் கண்களில் அனல் பறக்கும் கோவத்தோடு. நான் அவள் கோபத்தோடு நிற்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு மெளனமாக நின்றேன். எனது தவறை உணர்ந்து எனக்குள் வருந்திக் கொண்டதும் இல்லாமல்.. சொறி சொறி என்று பல தடவை சொன்னேன்.  ஆனால் அவள் ஏலவே அன்று சோகத்தோடு காணப்பட்டதற்கான காரணம் அப்போது தான் வெளிப்பட்டிருந்தது. ஒன்றைப் புரிஞ்சு கொள்ளுங்க.. நீங்க ஒழுங்கா இல்லைன்னா.. உங்களுக்காக மட்டும் காத்திருப்பனுன்னு நினைக்காதீங்க. இன்னொரு கலியாணம் செய்துகிட்டு என் பாட்டில போய்க்கிட்டு இருப்பன். நான் ஒன்றும் அழுது வடிக்கிறவள்.. கிடையாது. எனக்கு சுதந்திரமா இருக்கனும். இப்படி இழுபட்டுக் கொண்டு திரியுறதில இஸ்டமில்லை என்றாள் மீண்டும் கோபம் தணியாமலே.
 
அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்.. நான் திகைத்து நிற்க.. பேரூந்தும் சேரும் இடம் வந்து சேர்ந்தது. விறுக் என்று எதுவும் சொல்லாமல் இறங்கியவள்.. தெருவைக் கடந்து தொடரூந்து நிலையத்துக்குள் தனது தொடரூந்து தரிப்பிடம் நோக்கி ஓடிச் சென்று விட்டாள். நான் அவளை அப்படியே கோபத்தோடு அனுமதிப்பது நியாயமில்லை... நான் அவள் மீது வைச்சிருந்த அன்புக்கும் நல்லதல்ல என்ற காரணத்தாலும்.... அவளின் கோபத்தில் ஓரளவு நியாயம் இருக்கு என்பதை உணர்ந்து கொண்டதாலும்.... அவள் நின்ற இடம் நோக்கி ஓடிப் போனேன். போய் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவள் அருகில் அமர்ந்து கொண்டேன். "ஏங்க கோவிக்கிறீங்க. சொறிங்க" என்றேன். அவளோ..மெளனமாக இருந்தாள். நான் மீண்டும் "சொறிங்க" என்றேன். எனக்கு உங்க சொறி தேவையில்ல. உங்களுக்காக நான் எவ்வளவோ ரிஸ்க் எடுத்திருக்கிறன். அது எனக்குத் தான் தெரியும். ஆனால் நீங்க எல்லாத்தையும் சிம்பிளா நினைச்சுக் கொண்டு இருக்கிறீங்க. என் பிரண்ட் சொன்னவள்.. உன்னை அவன் சரியா புரிஞ்சு கொண்டிருக்கிறான் என்று எப்படி நம்புறாயடி.. என்று. அவள் கேட்டது சரியாப் போச்சுது. எனக்கு உந்தக் காதல்.. கலியாணம் தேவையில்லை. நீங்களும் தேவையில்ல. என்னைத் தொந்தரவு பண்ணாமல் போயிடுங்க" என்றாள்.. கோபம் மாறாமலே. 
 
 
மிகுதி அப்புறம்...
 
(பகுதி கற்பனை.) :)  :lol:  :( 
Link to comment
Share on other sites

இதென்னய்யா அநியாயம்..! சும்மா இருந்த நெடுக்கை இழுத்துவிட்டிட்டு அறிக்கை வேறை வாசிக்கினம்?? :unsure: ஆனாலும் மரக்கட்டை மாதிரி இருந்தால் ஒண்டுக்கும் ஆகாது நெடுக்ஸ்.. :rolleyes:

Link to comment
Share on other sites

சரி. விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாதிரி புடுங்குப்பாடு ஆரம்பிச்சிட்டுது. :D

 

இனி அவா த்ரிஷா மாதிரியும் நெடுக்ஸ் அண்ணா சிம்பு மாதிரியும் ஆகிடப்போறார்கள். :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.