Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் பெண் வித்தியாசமான ஆளாய் இருக்கு! தொடருங்கள் வாசிக்க ஆவல்!!

வித்தியாசம் தான். வித்தியாசமான ஆளுக்கு கிட்ட மாட்டிக்கிட்ட.. வித்தியாசமானவள்.. என்பதை இன்னும் சொற்ப நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் அக்கா. அப்புறம்.. "கதாசிரியர்" இன்றைக்கு ரெம்ப பிசி.. அதனால கதை கொஞ்சம் லேட்டா தான் வரும்.  :lol:  :D

இந்தக் கதையை தொடர ஊக்கமும் கருத்தும் அளிக்கும் எம் யாழ் உறவுகளுக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறோம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளிடம் இருந்து.. தொடர்ந்தும்.. கோபம் தீப்பொறியாகி வார்த்தைகளாய் வீழ்ந்து கொண்டிருந்தது. நானோ.. மெளனமாக அவள் அருகிலேயே இருந்தேன். ஆனாலும்.. அவள் கோபம் அடங்கவில்லை. என் முகம் பார்த்துப் பேசாமல்.. எங்கோ பார்த்துப் பேசியவள்.. என் தொடர் மெளனத்தின் பின் தானும் மெளனமாகிக் கொண்டாள்.

அந்த நேரத்தில்.. ஏற வேண்டிய தொடரூந்தும் வந்து சேர்ந்தது. எதுவுமே பேசாமல்.. பக் என்று ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். நான்.. இவாவின்ர.. இந்தக் கோபத் தீப்பொறியை எனியும் அனுமதித்தால்.. விளைவுகள் மோசமாகும் என்று கருதியதால்... கொஞ்ச நேரம் பெஞ்சில் இருந்துவிட்டு.. தொடரூந்து புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் ஓடிப் போய் அதில் ஏறிக் கொண்டேன். இங்கு.. தொடரூந்து மற்றும் பேரூந்தில் பயணிக்க ஒரே பயண அட்டையை பாவிக்க முடியும் என்பதால்.. பிற யோசனைக்கு இடமளிக்காமல்.. அவளின் கோபத் தீயை அணைக்கும் வழிமுறையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டேன்.

http://youtu.be/v_CTFxmpMk0

தொடரூந்தில் ஏறிய நான்.. அவள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். நான் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தும்.. மெளனத்தை முழுங்கியவள் போல.. வாய் மூடி.. முகத்தைத் திருப்பி வெளியில் பார்த்துக் கொண்டே வந்தாள். நான்.. அந்த மெளனத்தை.. கலைக்க.. "சொறீங்க" என்றேன். "எதுக்கு சொறி சொல்லுறீங்க... சரி.. விடுங்க. எனி மேல் இப்படிச் செய்யாதீங்க. செய்தீங்க.. உங்க கூட எல்லாத் தொடர்பையும் கட்பண்ணிட்டு இருந்திடுவன்..! சொல்லிட்டன். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது" என்றாள்.. காட்டமாக ஆனால்..கொஞ்சம் கோபம் தணிந்தவளாய்.

அந்தச் சந்தர்ப்பத்தில்.. அவளின் கையை மணிக்கட்டில் பிடித்தேன். மிக மிருதுவாக இருந்த அவள் கையை என் கரம்.. மிகவும் பக்குவமாகவே பற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தால். அதன் பின் விடுங்க.. கையை என்றாள். நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கிறன்.... உங்களுக்கு என்ன என்றேன். "ஆமா.. அவற்ற மனிசி. அதுதான் பேரூந்தில ஏற விட்டிட்டு வெளில நிண்டவர்".. என்றாள்.. மீண்டும் அதே பிரச்சனைக்குரிய.. அம்சத்தை தலைக்குள் அமுக்கி வைச்சிருந்தவளாய். நான் தானோ சொன்னனே.. அதில.. போக வேணான்னு.. நீங்க கேட்கல்ல என்றேன். மீண்டும்.. கோபத்தோடு என்னை திரும்பிப் பார்த்தாள். "என்ன பார்க்கிறீங்க.. இதுக்கெல்லாமாங்க கோவிக்கிறது. நான் நினைச்சன் நீங்க நிற்பீங்க... யுனி முடிற நேரம் பேரூந்து அடிக்கடி வரும்..அடுத்த பேரூந்தில.. போவம் என்று தான் நினைச்சுச் சொன்னன். அந்தச் சன நெருசலுக்க.. என்னால பேரூந்தில பயணிக்க முடியாது.. அதுதான் சொன்னேன். அது தப்பாங்க என்று என்னிலை விளக்கம் அளிக்க.. பேசாமல் மெளனமானாள்.

சரி அதை விடுங்க. இப்ப கையை எடுங்க என்றாள் என் தன்னிலை விளக்கத்தில் சமாதானமானவளாய். "இல்லை எடுக்க மாட்டன்.. நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கின்றன். அதை எடுக்கச் சொல்ல நீங்க யாரு" என்றேன். சிரிச்சுக் கொண்டே.. தொடரூந்தில் பூட்டப்பட்டிருந்த கமராவைக் காட்டி.. "அதில கமரா பூட்டி இருக்குது... இவனை முன்னப் பின்ன.. எனக்கு தெரியாது.. என்ர கையைப் பிடிச்சு இழுக்கிறான்.. என்று உதில இருக்கிற சனங்களட்டச் சொன்னன்.. உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கள்" என்றாள். "முதலில.. அதைச் செய்யுங்க.. நான்.. அதுக்கு எப்படி விளக்கம் கொடுக்கிறேன்னு அப்ப பாருங்க" என்றேன்.. பதிலுக்கு போட்டியாக. சரி சொல்லேல்ல.. இப்ப விடுங்க கையை..என்றாள். விடுவிக்க வேண்டும் என்றாள் அவளே என் கையை தட்டி விட்டிருக்கலாம்.. அல்லது உதறி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை. இருந்தாலும்.. அவளின் தொடர் வேண்டுகோளிற்கு இணங்கி கையை விட்டேன். போய் என் முன்னாடி உள்ள சீட்டில.. இருங்க என்றாள். எதுக்கு என்றேன். உங்க கண்களைப் பார்த்துக்கிட்டு இருக்கனும் போல இருக்கு என்றாள். என் கண்ணைத் தானே.. இப்படி திரும்பி இருந்து பாருங்க.. என்றேன்... அவளின் அருகில் இருந்தபடியே. "நீங்க திருந்தவே மாட்டீங்க.. போங்க..." என்றாள் செல்லமாக.

அதுசரி.. "இப்ப எங்கேங்க வாறீங்க. நீங்க இறங்க வேண்டிய ஸ்ரேசனும் போட்டுது" என்றாள். அப்போதுதான் எனக்கே அந்த விசயம் தெரிந்திருந்தது. இருந்தாலும்.. பதட்டப்படவில்லை. உங்க கூட கடைசி ஸ்ரேசன் வரை வந்திட்டு.. அங்க இருந்து திரும்பி வருவன் என்றேன். நான் இடையில் இறங்கி.. பேரூந்தில போகப் போறன் என்றாள். அப்ப நானும் அங்க இறங்கி திரும்பி வருவன் என்றேன். சிரிச்சுக் கொண்டே.. என் தலையில் குட்டினாள்.

http://youtu.be/y_40EdvtU-o

சரி.. எனக்கு இப்ப கால் உளையுதுங்க.. அமுக்கி விடுவீங்களா என்றாள். "என் மனிசிக்குத் தானே.. கால் அமுக்கி விடுறது பிரச்சனையே இல்லை.. ஆனால்.. அதை..தொடரூந்துக்க செய்ய முடியாது.." என்றேன். ஆமா ஆசையப் பாரு என்றாள். "நீங்க தானே கேட்டீங்க.. அப்புறம் என்னங்க ஆசையப்பாருன்னுறீங்க" என்றேன். நிசமாத்தாங்க கால் உளையுது.. என்று தன் கால் பாதங்களைக் காட்டினாள். அவளின் ஒரு பாதத்தில் சிறிய வீக்கம் இருந்தது. அதனைப் பார்த்ததுமே என் மனசு.. பரிவால் துடித்தது.என்னாச்சுங்க.. என்று கேட்டுக் கொண்டே.. என்னை அறியமாமலே.. பாதத்தை மெல்லத் தொட்டுத் தடவி விட்டேன். என் யுனி பாக்கில் இருந்த.. ஒரு ஸ்ரிக்கரையும் எடுத்து.. அவளின் காலில் ஒட்டியும் விட்டேன். அழகான அந்த வண்ணத்துப்பூச்சி ஸ்ரிக்கர் அவளின் செந்நிறமான பாதங்களுக்கு அழகாக இருந்தது. மலரில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல அது அங்கு காட்சி அளித்தது. அது அவளுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். மெல்ல என் மீது சாய்ந்து கொண்டு காலைல இருந்து ஒரே நடையுங்க.. அதுதான் கால் வீங்கி இருக்குது.. உளையுது என்றாள்.. செல்லமாக. என்னில் சாய்ந்திருந்தவளை நான் என் தோளோடு தாங்கிக் கொண்டேன்.. இருவரின் ஆறுதலுக்காகவும்.

http://youtu.be/CEHZAZ_3CGo

மிகுதி அப்புறம்...

(பகுதி கற்பனை) :) :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் நெடுக்ஸ்..... நல்லாத்தான் போகுது. :)

காதல் கதை.... வாசிக்கிறதுக்கும் கேக்கிறதுக்கும் ரொம்ப நல்லாருக்கும்! :wub::D

ஆனால் அதை உண்மையிலயே அனுபவிக்கிறவன்தான் பாவம்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாகக் கதை எழுதுகிறீர்கள் நெடுக்ஸ். ஆனால் நிச்சயமாய் கற்பனை அல்லது நீண்ட கனவேதும் கண்டிருப்பியள். உண்மையில் இப்பிடி நெடுக்ஸ் காதல்வசப்பட்டிருக்கவே முடியாது :lol:

Link to comment
Share on other sites

தொடர் அருமையா போகுது ஆனாலும் நீங்கள் தெரிவு செய்யும் பாட்டு  அம்புட்டும் சூப்பர் அண்ணா தொடருங்கோ எங்க கொண்டுபோய் கவிழ்க்க போறியள் என்று பார்ப்பம் :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு திரும்பியதும்... பேரூந்து களேபரத்தில்.. எதிர்வரும் வாரங்களில் யுனி ஈஸ்டர் விடுமுறைக்காக மூடப்படுவதை மறந்துவிட்டிருந்த நான்.. அப்ப எனி இரண்டு வாரங்களுக்கு அவளைச் சந்திக்க முடியாதே.. நேரில் ஈஸ்டர் வாழ்த்தும் சொல்ல முடியாதே என்ற தவிப்பில்.. எனது கணணிக்குள் நுழைந்து.. இணையத் தூதை திறந்தேன்.

அவளும் வீடு போய் சேர்ந்து இணையத் தூதில் நின்றிருந்தாள். நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு.. இணையத் தூதை அதிர வைத்து.. அவளை அழைத்தேன். அவளிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் அவள் ஆன் லைனில் நிற்கிறாள் என்று காட்டியது. மீண்டும் இணையத் தூதை.. அதிர வைத்தேன். பதில் இல்லை. சற்று நேரத்தில்.. ஆன் லைன் என்பது.. "பிசி".. என்று மாறி நின்றது. அப்ப கணணியில் இருக்கிறாள்.. ஆனால் கதைக்கிறாள் இல்லை என்ற முடிவோடு.. "அவசரம்" என்று ஒரு ஈமெயில் செய்தி போட்டேன். ஈமெயிலுக்கும் பதில் இல்லை.

ஆள் நிஜமாவே பிசி போல.. சரி என்று சற்று நேரம் செல்ல வருவோம் என்றுவிட்டு.. சமையலறை சென்று.. ரீ போட்டுக் கொண்டு வந்தேன். வந்ததும் வராததுமாக மீண்டும் இணையத் தூதை திறந்தேன். பதில் இல்லை. ஈமெயிலுக்கும் பதில் இல்லை. மொபைலை எடுத்து ஒரு ரெக்ஸ்ட் போட்டேன்.. இணையத்தூதிற்கு வரும் படி. ஆனால் அதற்கும் பதில் இல்லை. சரி.. ஆள்.. இன்னும்... பிசி போல என்றிட்டு.. சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் இணையத் தூதை அதிர வைத்தேன்.

"வாட்" என்ற கேள்வியோடு வந்தாள். "என்ன.. பிசியோ" என்றேன். "ஆமா பிசி தான். அதுக்கு இப்ப என்ன" என்றாள். இல்ல ஈமெயில் போட்டன்... பதில் இல்லை. மெசேஜ் போட்டன் பதில் இல்லை. அவ்வளவு பிசியாங்க என்றேன். ஆமா அவ்வளவு பிசிதான். தெரிஞ்ச.. ஒருவரோடு சாட் பண்ணிக்கிட்டு இருந்தன். அதுதான் பதில் போட முடியல்ல என்றாள். ஏங்க.. சாட் பண்ணிட்டு இருக்கிற நீங்க.. இணையத்தூதில் அதைச் சொல்ல அதிக நேரமா எடுக்கும் என்றேன். உடனே கோபத்தின் உச்சிக்குப் போனவளாய்.. "நான் எதுக்கு உங்களுக்கு பதில் போடனும். அப்படி என்ன அவசரம். இப்பதானே யுனில பார்த்துப் பேசிட்டு வந்தன். அப்புறம் என்ன" என்றாள். பார்த்துப் பேசினது நிஜந்தாங்க.. ஆனால்.. ஈஸ்டர் விடுமுறை வரப் போகுதெல்லோ.. எனி இரண்டு கிழமைக்கு பார்க்க முடியாதே என்று சொல்லத்தான் அழைத்தேன். அந்தக் காலத்தில் முடிந்தால்.. இணையத் தூதுக்கு வாங்க என்றேன்.

அதுக்கு அவள்.. "ஏன் நான்.. வரனும். நீங்க கூப்பிடுற நேரம் எல்லாம் வர எனக்கு வேற வேலை இல்லையா" என்றாள். நான் அதிர்ச்சியோடு.. மெளனமானேன். மீண்டும் அவளே தொடர்ந்தாள். "இஞ்ச பாருங்க.. என்னை யாரும் டிமாண்ட் பண்ண ஏலாது. நான் நினைச்சது தான் செய்வன். நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை. அதுக்காக சதா பக்கத்தில இருக்கனும்.. கொஞ்சிக் குலாவிட்டு இருக்கனும்.. ஐ லவ் யு சொல்லிட்டு இருக்கனும்.. என்று நினைக்காதேங்க. அதுக்கு வேற ஆளைப் பாருங்க. மீண்டும் சொல்லுறன்.. எனக்குப் பிடிக்காட்டி உங்களை தூக்கி எறிஞ்சிட்டுப் போக எனக்கு அதிக நேரம் எடுக்காது. அதை மனசில வைச்சிருங்க" என்றாள். அதோடு நிறுத்தாமல்.. மேலும்.. தொடர்ந்தாள்.. "அதுவும் இல்லாமல்.. நீங்க தான் எனக்கு வாழ்க்கையில தேவை என்றும் இல்லை. நீங்க இல்லாட்டி இன்னொருத்தனை கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுவன். ஏதோ உங்களை நம்பி நான் இருக்கிறன் என்று மட்டும் நினைக்காதேங்க. உங்களைக் காதலிக்கிறதுக்காக நான் உங்க அடிமை இல்லை. ஓ.கே.." என்றாள்.. தனது பொழிப்புரையை கோபத்தோடு..!

நான்.. அதற்கு எந்தப் பதிலும் போடாமல்.. இருந்துவிட.. மீண்டும்.. "என்ன பதிலைக் காணம்" என்று எழுதினாள். அதற்கு நான்.. உங்ககிட்ட.. ஈஸ்டர் கொலிடே வரப்போகுது.. நேரில.. சந்திக்க முடியாத தருணங்கள் வரும்.. அதுதான்.. முடிஞ்சா.. இணையத்தூதுக்கு வாங்க என்று சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா.. ஏதேதோ எழுதுறீங்க.. ஏங்க கோவப்படுறீங்க என்றேன்.. அமைதியாக. அதற்கு அவள்.. "ஹலோ.. நான் ஒன்றும் கோவப்படல்ல. நிஜத்தை தான் எழுதிறன். நான் சாட்டில ஆயிரம் பேரோடும் கதைப்பன். அது என் இஸ்டம். எனக்கு நேரம் இருந்தால் தான்.. உங்க கூட கதைப்பன். இல்ல பேசாமல் இருப்பன். என்னை அங்க வா.. இங்க வா.. அதைச் செய்.. இதைச் செய்.. அங்க கதை.. இங்க கதை என்று டிமாண்ட் பண்ண ஏலாது. சொல்லிட்டேன். நான் இப்படித்தான். பிடிச்சா கூட இருங்க.. இல்லாட்டி விட்டிட்டுப் போங்க. எனக்கு ஒரு தலையிடி குறைஞ்ச மாதிரி" என்றாள்.. எடுத்தெறிபவளாய்.

http://youtu.be/JDu_NrQHKy0

நான்.. நம்பிக்கையும் அன்பும் வைச்சிருந்தவள்.. இப்படி பேசுறாளே.. என்ற மனவேதனையோடு.. "சரிங்க " என்று கூறிவிட்டு.. இணையத் தூதை லாக் அவுட் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.

அன்று.. pause ஆன அவளுடனான தொடர்புகள்.. மீண்டும் தொடரவே வாய்ப்பில்லாத வகைக்கு.. அவள் நடவடிக்கைகள் இருந்தன. அது எனக்குள் அந்த நேரத்தில் வேதனையாகவும்.... நானா அவளிடம் போகாத போதும்.. அவளா தேடி வந்திட்டு இப்போ என்னை சொற்களால் நடத்தைகளால் வேதனைப்படுத்துகிறாளே என்ற எண்ணமும்.. மனதில் வேதனையை தொடர்ச்சியாக பிரசவித்தது. எனி.. அவளாக தேடி வந்தால் தான் கதைக்கிறது. இல்லாது போனால் அவள் விருப்பப்படியே நடந்து கொள்ளட்டும். எனியும் அவளுக்காக நான் இறங்கிப் போகப் போறதில்லை என்ற முடிவோடு... நானும்.. அவளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டிக்க திடசங்கற்பம் பூண்டேன். அந்த முடிவு.. மனதில்.. தாளாத வேதனையையும்.. நித்திரை இல்லாத இரவுகளையுமே எனக்குப் பரிசாகத் தந்திருந்தது. அதுமட்டுமல்ல.. அவளுக்காக நான்.. என் பெற்றோர் விருப்பங்களை எல்லாம் உதாசீனம் செய்தது.. என் வாழ்க்கையில்.. பெண் என்ற அத்தியாயத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதி விட்டிருந்தது.

மீண்டும்.. அவளைச் சந்தித்தாலும் கூட அவளாக வந்து பேசாத வரை நானாகப் பேசப் போவதில்லை என்ற முடிவோடு.. நாட்கள் கழிந்தன. அது வாரங்கள் ஆகின. அது மாதங்கள் ஆகின. ஏன் வருடங்களும் ஆகின. அவளோ.. விண்ணோடு ஒளிர் விட்டு மறையும் எரிநட்சத்திரமாக என் வாழ்க்கை எனும் வானில் தோன்றி மறைந்திருந்தாள். நான்.. விடியற் சூரியன் என்று நினைத்தது.. எரிகல்லாகி.. சாம்பலாகி நின்றது என் வாழ்க்கையில் வேதனையாகவே அமைந்திருந்தது. இருந்தாலும்.. நானே தேடிக் கொண்டதில் இருந்து நானே வெளியே வரவும் கற்றுக் கொள்ள அவள் தந்த அனுபவம் எனக்குப் பாடமானது ஆறுதல். அதற்காக நான் அவளுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

+++++++++++++++++++++++++

என்னடா... காட் ரைவ் (Hard drive) வில இருந்து.. பைல்களை கொப்பி பண்ண முடிஞ்சு தா.. என்று கேட்டான் நண்பன். ஆமாம்.. ஆனால் உனது கிரக்டான (Crack) காட் ரைவில் இருந்த ஒரு பைல் என்னை மிகவும் பாதிச்சிட்டுதடா என்றேன். அதற்கு அவன் "எந்த பைல்".. அந்த "என் கதை சொல்லும் நேரமிது" என்ற பைல் தான்... அதை யாழ் இணையத்தோட பகிர்ந்து கொள்ளப் போறன். சம்மதிப்பியா என்றேன். அதற்கு நண்பன் சொன்னான்.. "அவள் தான் என்னை வைச்சு வேடிக்கை காட்டிட்டுப் போய்ட்டாள் என்றாள்.. நீயும் என்னை வைச்சு.. வேடிக்கை காட்டப் போறன் என்ரா.... சரி ஏதோ செய்" என்றான்.

நான் சொன்னேன்.. இது வேடிக்கை இல்லை மச்சான்.. இது ஒரு பாடம்..! உது நீதிமன்றம் போய்க் கூட.. நீதி தேட முடியாத சங்கதி. அதனால் இதனை.. ஒரு பாடமாக்கி.. அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று. "சரி ஏதோ..செய்"... என்று அனுமதி தந்தான்.. மனதில் உள்ள வேதனைகளைத் தாண்டி புன்னகைத்தபடி.

நன்றி. முற்றும். (பகுதி கற்பனை)  :) :lol: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எண்டாலும் இப்பிடி சப்பென்ன்று முடித்துவிடீர்களே. நான் இன்னும் எதோ எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

முடிவு சோகமாக உள்ளது.  :rolleyes: நெடுக்ஸ் அண்ணா வேணும்னே நண்பனது என்று இறுதியில் மாற்றி விட்டிருக்கிறார். :icon_idea: முன்னர் நீங்கள் ஒரு பெண்ணை காதலித்திருந்தீர்கள் என வாசித்திருந்தேன். அந்த பெண் தான் இவராக இருக்குமோ என சந்தேகம். :)

 

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

Link to comment
Share on other sites

அதானே பார்த்தன்.. நெடுக்காவது ஏமாறுவதாவது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கலாம்.. காட்டலாம். அவள் எவனையும் காதலிக்கட்டும்.. எவனோடும் வாழட்டும். அது அவளின்ர பிரச்சனை. ஆனால்.. குறைந்தது உதட்டளவில் உச்சரிக்கும்.. " நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை" என்ற அந்த வார்த்தைக்காவது உண்மையாக இருக்கலாம் அல்லவா. அது கூடவா.. ஒரு பெண்ணால் செய்ய முடியாது. அதைச் செய்ய முடியாதவளுடன்.. எப்படி ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான.. நல்ல வாழ்வை எதிர்பார்க்கலாம்.  இவன் மட்டுமல்ல.. எவனும்..???!  இது இந்தக் கதையின் நாயகனுக்குரிய பிரச்சனை மட்டுமல்ல.. பல பேருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒரு வடிவம்.  :)   :icon_idea:

சமீபத்தில் கருத்துக்களும் ஊக்கமும் தந்த.. சுமே அக்கா.. அலை அக்கா.. கவிதை.. யாழ்வாலி.. அஞ்சரன்.. இசைக்கலைஞன் மற்றும் துளசி போன்ற உறவுகளுக்கும் நன்றி. மீண்டும் இன்னொரு தொடர்கதை போடுற ஐடியா இல்லை. ரெம்ப ரயேட் ஆயிடுச்சு..! எப்படித்தான் உந்த நாவல்களை பக்கம் பக்கமாக.. எழுதித் தள்ளுறாய்ங்களோ..??! :D   :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.