Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் பெண் வித்தியாசமான ஆளாய் இருக்கு! தொடருங்கள் வாசிக்க ஆவல்!!

வித்தியாசம் தான். வித்தியாசமான ஆளுக்கு கிட்ட மாட்டிக்கிட்ட.. வித்தியாசமானவள்.. என்பதை இன்னும் சொற்ப நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் அக்கா. அப்புறம்.. "கதாசிரியர்" இன்றைக்கு ரெம்ப பிசி.. அதனால கதை கொஞ்சம் லேட்டா தான் வரும்.  :lol:  :D

இந்தக் கதையை தொடர ஊக்கமும் கருத்தும் அளிக்கும் எம் யாழ் உறவுகளுக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறோம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளிடம் இருந்து.. தொடர்ந்தும்.. கோபம் தீப்பொறியாகி வார்த்தைகளாய் வீழ்ந்து கொண்டிருந்தது. நானோ.. மெளனமாக அவள் அருகிலேயே இருந்தேன். ஆனாலும்.. அவள் கோபம் அடங்கவில்லை. என் முகம் பார்த்துப் பேசாமல்.. எங்கோ பார்த்துப் பேசியவள்.. என் தொடர் மெளனத்தின் பின் தானும் மெளனமாகிக் கொண்டாள்.

அந்த நேரத்தில்.. ஏற வேண்டிய தொடரூந்தும் வந்து சேர்ந்தது. எதுவுமே பேசாமல்.. பக் என்று ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். நான்.. இவாவின்ர.. இந்தக் கோபத் தீப்பொறியை எனியும் அனுமதித்தால்.. விளைவுகள் மோசமாகும் என்று கருதியதால்... கொஞ்ச நேரம் பெஞ்சில் இருந்துவிட்டு.. தொடரூந்து புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் ஓடிப் போய் அதில் ஏறிக் கொண்டேன். இங்கு.. தொடரூந்து மற்றும் பேரூந்தில் பயணிக்க ஒரே பயண அட்டையை பாவிக்க முடியும் என்பதால்.. பிற யோசனைக்கு இடமளிக்காமல்.. அவளின் கோபத் தீயை அணைக்கும் வழிமுறையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டேன்.

http://youtu.be/v_CTFxmpMk0

தொடரூந்தில் ஏறிய நான்.. அவள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். நான் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தும்.. மெளனத்தை முழுங்கியவள் போல.. வாய் மூடி.. முகத்தைத் திருப்பி வெளியில் பார்த்துக் கொண்டே வந்தாள். நான்.. அந்த மெளனத்தை.. கலைக்க.. "சொறீங்க" என்றேன். "எதுக்கு சொறி சொல்லுறீங்க... சரி.. விடுங்க. எனி மேல் இப்படிச் செய்யாதீங்க. செய்தீங்க.. உங்க கூட எல்லாத் தொடர்பையும் கட்பண்ணிட்டு இருந்திடுவன்..! சொல்லிட்டன். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது" என்றாள்.. காட்டமாக ஆனால்..கொஞ்சம் கோபம் தணிந்தவளாய்.

அந்தச் சந்தர்ப்பத்தில்.. அவளின் கையை மணிக்கட்டில் பிடித்தேன். மிக மிருதுவாக இருந்த அவள் கையை என் கரம்.. மிகவும் பக்குவமாகவே பற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தால். அதன் பின் விடுங்க.. கையை என்றாள். நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கிறன்.... உங்களுக்கு என்ன என்றேன். "ஆமா.. அவற்ற மனிசி. அதுதான் பேரூந்தில ஏற விட்டிட்டு வெளில நிண்டவர்".. என்றாள்.. மீண்டும் அதே பிரச்சனைக்குரிய.. அம்சத்தை தலைக்குள் அமுக்கி வைச்சிருந்தவளாய். நான் தானோ சொன்னனே.. அதில.. போக வேணான்னு.. நீங்க கேட்கல்ல என்றேன். மீண்டும்.. கோபத்தோடு என்னை திரும்பிப் பார்த்தாள். "என்ன பார்க்கிறீங்க.. இதுக்கெல்லாமாங்க கோவிக்கிறது. நான் நினைச்சன் நீங்க நிற்பீங்க... யுனி முடிற நேரம் பேரூந்து அடிக்கடி வரும்..அடுத்த பேரூந்தில.. போவம் என்று தான் நினைச்சுச் சொன்னன். அந்தச் சன நெருசலுக்க.. என்னால பேரூந்தில பயணிக்க முடியாது.. அதுதான் சொன்னேன். அது தப்பாங்க என்று என்னிலை விளக்கம் அளிக்க.. பேசாமல் மெளனமானாள்.

சரி அதை விடுங்க. இப்ப கையை எடுங்க என்றாள் என் தன்னிலை விளக்கத்தில் சமாதானமானவளாய். "இல்லை எடுக்க மாட்டன்.. நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கின்றன். அதை எடுக்கச் சொல்ல நீங்க யாரு" என்றேன். சிரிச்சுக் கொண்டே.. தொடரூந்தில் பூட்டப்பட்டிருந்த கமராவைக் காட்டி.. "அதில கமரா பூட்டி இருக்குது... இவனை முன்னப் பின்ன.. எனக்கு தெரியாது.. என்ர கையைப் பிடிச்சு இழுக்கிறான்.. என்று உதில இருக்கிற சனங்களட்டச் சொன்னன்.. உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கள்" என்றாள். "முதலில.. அதைச் செய்யுங்க.. நான்.. அதுக்கு எப்படி விளக்கம் கொடுக்கிறேன்னு அப்ப பாருங்க" என்றேன்.. பதிலுக்கு போட்டியாக. சரி சொல்லேல்ல.. இப்ப விடுங்க கையை..என்றாள். விடுவிக்க வேண்டும் என்றாள் அவளே என் கையை தட்டி விட்டிருக்கலாம்.. அல்லது உதறி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை. இருந்தாலும்.. அவளின் தொடர் வேண்டுகோளிற்கு இணங்கி கையை விட்டேன். போய் என் முன்னாடி உள்ள சீட்டில.. இருங்க என்றாள். எதுக்கு என்றேன். உங்க கண்களைப் பார்த்துக்கிட்டு இருக்கனும் போல இருக்கு என்றாள். என் கண்ணைத் தானே.. இப்படி திரும்பி இருந்து பாருங்க.. என்றேன்... அவளின் அருகில் இருந்தபடியே. "நீங்க திருந்தவே மாட்டீங்க.. போங்க..." என்றாள் செல்லமாக.

அதுசரி.. "இப்ப எங்கேங்க வாறீங்க. நீங்க இறங்க வேண்டிய ஸ்ரேசனும் போட்டுது" என்றாள். அப்போதுதான் எனக்கே அந்த விசயம் தெரிந்திருந்தது. இருந்தாலும்.. பதட்டப்படவில்லை. உங்க கூட கடைசி ஸ்ரேசன் வரை வந்திட்டு.. அங்க இருந்து திரும்பி வருவன் என்றேன். நான் இடையில் இறங்கி.. பேரூந்தில போகப் போறன் என்றாள். அப்ப நானும் அங்க இறங்கி திரும்பி வருவன் என்றேன். சிரிச்சுக் கொண்டே.. என் தலையில் குட்டினாள்.

http://youtu.be/y_40EdvtU-o

சரி.. எனக்கு இப்ப கால் உளையுதுங்க.. அமுக்கி விடுவீங்களா என்றாள். "என் மனிசிக்குத் தானே.. கால் அமுக்கி விடுறது பிரச்சனையே இல்லை.. ஆனால்.. அதை..தொடரூந்துக்க செய்ய முடியாது.." என்றேன். ஆமா ஆசையப் பாரு என்றாள். "நீங்க தானே கேட்டீங்க.. அப்புறம் என்னங்க ஆசையப்பாருன்னுறீங்க" என்றேன். நிசமாத்தாங்க கால் உளையுது.. என்று தன் கால் பாதங்களைக் காட்டினாள். அவளின் ஒரு பாதத்தில் சிறிய வீக்கம் இருந்தது. அதனைப் பார்த்ததுமே என் மனசு.. பரிவால் துடித்தது.என்னாச்சுங்க.. என்று கேட்டுக் கொண்டே.. என்னை அறியமாமலே.. பாதத்தை மெல்லத் தொட்டுத் தடவி விட்டேன். என் யுனி பாக்கில் இருந்த.. ஒரு ஸ்ரிக்கரையும் எடுத்து.. அவளின் காலில் ஒட்டியும் விட்டேன். அழகான அந்த வண்ணத்துப்பூச்சி ஸ்ரிக்கர் அவளின் செந்நிறமான பாதங்களுக்கு அழகாக இருந்தது. மலரில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல அது அங்கு காட்சி அளித்தது. அது அவளுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். மெல்ல என் மீது சாய்ந்து கொண்டு காலைல இருந்து ஒரே நடையுங்க.. அதுதான் கால் வீங்கி இருக்குது.. உளையுது என்றாள்.. செல்லமாக. என்னில் சாய்ந்திருந்தவளை நான் என் தோளோடு தாங்கிக் கொண்டேன்.. இருவரின் ஆறுதலுக்காகவும்.

http://youtu.be/CEHZAZ_3CGo

மிகுதி அப்புறம்...

(பகுதி கற்பனை) :) :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் நெடுக்ஸ்..... நல்லாத்தான் போகுது. :)

காதல் கதை.... வாசிக்கிறதுக்கும் கேக்கிறதுக்கும் ரொம்ப நல்லாருக்கும்! :wub::D

ஆனால் அதை உண்மையிலயே அனுபவிக்கிறவன்தான் பாவம்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாகக் கதை எழுதுகிறீர்கள் நெடுக்ஸ். ஆனால் நிச்சயமாய் கற்பனை அல்லது நீண்ட கனவேதும் கண்டிருப்பியள். உண்மையில் இப்பிடி நெடுக்ஸ் காதல்வசப்பட்டிருக்கவே முடியாது :lol:

Link to comment
Share on other sites

தொடர் அருமையா போகுது ஆனாலும் நீங்கள் தெரிவு செய்யும் பாட்டு  அம்புட்டும் சூப்பர் அண்ணா தொடருங்கோ எங்க கொண்டுபோய் கவிழ்க்க போறியள் என்று பார்ப்பம் :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு திரும்பியதும்... பேரூந்து களேபரத்தில்.. எதிர்வரும் வாரங்களில் யுனி ஈஸ்டர் விடுமுறைக்காக மூடப்படுவதை மறந்துவிட்டிருந்த நான்.. அப்ப எனி இரண்டு வாரங்களுக்கு அவளைச் சந்திக்க முடியாதே.. நேரில் ஈஸ்டர் வாழ்த்தும் சொல்ல முடியாதே என்ற தவிப்பில்.. எனது கணணிக்குள் நுழைந்து.. இணையத் தூதை திறந்தேன்.

அவளும் வீடு போய் சேர்ந்து இணையத் தூதில் நின்றிருந்தாள். நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு.. இணையத் தூதை அதிர வைத்து.. அவளை அழைத்தேன். அவளிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் அவள் ஆன் லைனில் நிற்கிறாள் என்று காட்டியது. மீண்டும் இணையத் தூதை.. அதிர வைத்தேன். பதில் இல்லை. சற்று நேரத்தில்.. ஆன் லைன் என்பது.. "பிசி".. என்று மாறி நின்றது. அப்ப கணணியில் இருக்கிறாள்.. ஆனால் கதைக்கிறாள் இல்லை என்ற முடிவோடு.. "அவசரம்" என்று ஒரு ஈமெயில் செய்தி போட்டேன். ஈமெயிலுக்கும் பதில் இல்லை.

ஆள் நிஜமாவே பிசி போல.. சரி என்று சற்று நேரம் செல்ல வருவோம் என்றுவிட்டு.. சமையலறை சென்று.. ரீ போட்டுக் கொண்டு வந்தேன். வந்ததும் வராததுமாக மீண்டும் இணையத் தூதை திறந்தேன். பதில் இல்லை. ஈமெயிலுக்கும் பதில் இல்லை. மொபைலை எடுத்து ஒரு ரெக்ஸ்ட் போட்டேன்.. இணையத்தூதிற்கு வரும் படி. ஆனால் அதற்கும் பதில் இல்லை. சரி.. ஆள்.. இன்னும்... பிசி போல என்றிட்டு.. சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் இணையத் தூதை அதிர வைத்தேன்.

"வாட்" என்ற கேள்வியோடு வந்தாள். "என்ன.. பிசியோ" என்றேன். "ஆமா பிசி தான். அதுக்கு இப்ப என்ன" என்றாள். இல்ல ஈமெயில் போட்டன்... பதில் இல்லை. மெசேஜ் போட்டன் பதில் இல்லை. அவ்வளவு பிசியாங்க என்றேன். ஆமா அவ்வளவு பிசிதான். தெரிஞ்ச.. ஒருவரோடு சாட் பண்ணிக்கிட்டு இருந்தன். அதுதான் பதில் போட முடியல்ல என்றாள். ஏங்க.. சாட் பண்ணிட்டு இருக்கிற நீங்க.. இணையத்தூதில் அதைச் சொல்ல அதிக நேரமா எடுக்கும் என்றேன். உடனே கோபத்தின் உச்சிக்குப் போனவளாய்.. "நான் எதுக்கு உங்களுக்கு பதில் போடனும். அப்படி என்ன அவசரம். இப்பதானே யுனில பார்த்துப் பேசிட்டு வந்தன். அப்புறம் என்ன" என்றாள். பார்த்துப் பேசினது நிஜந்தாங்க.. ஆனால்.. ஈஸ்டர் விடுமுறை வரப் போகுதெல்லோ.. எனி இரண்டு கிழமைக்கு பார்க்க முடியாதே என்று சொல்லத்தான் அழைத்தேன். அந்தக் காலத்தில் முடிந்தால்.. இணையத் தூதுக்கு வாங்க என்றேன்.

அதுக்கு அவள்.. "ஏன் நான்.. வரனும். நீங்க கூப்பிடுற நேரம் எல்லாம் வர எனக்கு வேற வேலை இல்லையா" என்றாள். நான் அதிர்ச்சியோடு.. மெளனமானேன். மீண்டும் அவளே தொடர்ந்தாள். "இஞ்ச பாருங்க.. என்னை யாரும் டிமாண்ட் பண்ண ஏலாது. நான் நினைச்சது தான் செய்வன். நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை. அதுக்காக சதா பக்கத்தில இருக்கனும்.. கொஞ்சிக் குலாவிட்டு இருக்கனும்.. ஐ லவ் யு சொல்லிட்டு இருக்கனும்.. என்று நினைக்காதேங்க. அதுக்கு வேற ஆளைப் பாருங்க. மீண்டும் சொல்லுறன்.. எனக்குப் பிடிக்காட்டி உங்களை தூக்கி எறிஞ்சிட்டுப் போக எனக்கு அதிக நேரம் எடுக்காது. அதை மனசில வைச்சிருங்க" என்றாள். அதோடு நிறுத்தாமல்.. மேலும்.. தொடர்ந்தாள்.. "அதுவும் இல்லாமல்.. நீங்க தான் எனக்கு வாழ்க்கையில தேவை என்றும் இல்லை. நீங்க இல்லாட்டி இன்னொருத்தனை கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுவன். ஏதோ உங்களை நம்பி நான் இருக்கிறன் என்று மட்டும் நினைக்காதேங்க. உங்களைக் காதலிக்கிறதுக்காக நான் உங்க அடிமை இல்லை. ஓ.கே.." என்றாள்.. தனது பொழிப்புரையை கோபத்தோடு..!

நான்.. அதற்கு எந்தப் பதிலும் போடாமல்.. இருந்துவிட.. மீண்டும்.. "என்ன பதிலைக் காணம்" என்று எழுதினாள். அதற்கு நான்.. உங்ககிட்ட.. ஈஸ்டர் கொலிடே வரப்போகுது.. நேரில.. சந்திக்க முடியாத தருணங்கள் வரும்.. அதுதான்.. முடிஞ்சா.. இணையத்தூதுக்கு வாங்க என்று சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா.. ஏதேதோ எழுதுறீங்க.. ஏங்க கோவப்படுறீங்க என்றேன்.. அமைதியாக. அதற்கு அவள்.. "ஹலோ.. நான் ஒன்றும் கோவப்படல்ல. நிஜத்தை தான் எழுதிறன். நான் சாட்டில ஆயிரம் பேரோடும் கதைப்பன். அது என் இஸ்டம். எனக்கு நேரம் இருந்தால் தான்.. உங்க கூட கதைப்பன். இல்ல பேசாமல் இருப்பன். என்னை அங்க வா.. இங்க வா.. அதைச் செய்.. இதைச் செய்.. அங்க கதை.. இங்க கதை என்று டிமாண்ட் பண்ண ஏலாது. சொல்லிட்டேன். நான் இப்படித்தான். பிடிச்சா கூட இருங்க.. இல்லாட்டி விட்டிட்டுப் போங்க. எனக்கு ஒரு தலையிடி குறைஞ்ச மாதிரி" என்றாள்.. எடுத்தெறிபவளாய்.

http://youtu.be/JDu_NrQHKy0

நான்.. நம்பிக்கையும் அன்பும் வைச்சிருந்தவள்.. இப்படி பேசுறாளே.. என்ற மனவேதனையோடு.. "சரிங்க " என்று கூறிவிட்டு.. இணையத் தூதை லாக் அவுட் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.

அன்று.. pause ஆன அவளுடனான தொடர்புகள்.. மீண்டும் தொடரவே வாய்ப்பில்லாத வகைக்கு.. அவள் நடவடிக்கைகள் இருந்தன. அது எனக்குள் அந்த நேரத்தில் வேதனையாகவும்.... நானா அவளிடம் போகாத போதும்.. அவளா தேடி வந்திட்டு இப்போ என்னை சொற்களால் நடத்தைகளால் வேதனைப்படுத்துகிறாளே என்ற எண்ணமும்.. மனதில் வேதனையை தொடர்ச்சியாக பிரசவித்தது. எனி.. அவளாக தேடி வந்தால் தான் கதைக்கிறது. இல்லாது போனால் அவள் விருப்பப்படியே நடந்து கொள்ளட்டும். எனியும் அவளுக்காக நான் இறங்கிப் போகப் போறதில்லை என்ற முடிவோடு... நானும்.. அவளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டிக்க திடசங்கற்பம் பூண்டேன். அந்த முடிவு.. மனதில்.. தாளாத வேதனையையும்.. நித்திரை இல்லாத இரவுகளையுமே எனக்குப் பரிசாகத் தந்திருந்தது. அதுமட்டுமல்ல.. அவளுக்காக நான்.. என் பெற்றோர் விருப்பங்களை எல்லாம் உதாசீனம் செய்தது.. என் வாழ்க்கையில்.. பெண் என்ற அத்தியாயத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதி விட்டிருந்தது.

மீண்டும்.. அவளைச் சந்தித்தாலும் கூட அவளாக வந்து பேசாத வரை நானாகப் பேசப் போவதில்லை என்ற முடிவோடு.. நாட்கள் கழிந்தன. அது வாரங்கள் ஆகின. அது மாதங்கள் ஆகின. ஏன் வருடங்களும் ஆகின. அவளோ.. விண்ணோடு ஒளிர் விட்டு மறையும் எரிநட்சத்திரமாக என் வாழ்க்கை எனும் வானில் தோன்றி மறைந்திருந்தாள். நான்.. விடியற் சூரியன் என்று நினைத்தது.. எரிகல்லாகி.. சாம்பலாகி நின்றது என் வாழ்க்கையில் வேதனையாகவே அமைந்திருந்தது. இருந்தாலும்.. நானே தேடிக் கொண்டதில் இருந்து நானே வெளியே வரவும் கற்றுக் கொள்ள அவள் தந்த அனுபவம் எனக்குப் பாடமானது ஆறுதல். அதற்காக நான் அவளுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

+++++++++++++++++++++++++

என்னடா... காட் ரைவ் (Hard drive) வில இருந்து.. பைல்களை கொப்பி பண்ண முடிஞ்சு தா.. என்று கேட்டான் நண்பன். ஆமாம்.. ஆனால் உனது கிரக்டான (Crack) காட் ரைவில் இருந்த ஒரு பைல் என்னை மிகவும் பாதிச்சிட்டுதடா என்றேன். அதற்கு அவன் "எந்த பைல்".. அந்த "என் கதை சொல்லும் நேரமிது" என்ற பைல் தான்... அதை யாழ் இணையத்தோட பகிர்ந்து கொள்ளப் போறன். சம்மதிப்பியா என்றேன். அதற்கு நண்பன் சொன்னான்.. "அவள் தான் என்னை வைச்சு வேடிக்கை காட்டிட்டுப் போய்ட்டாள் என்றாள்.. நீயும் என்னை வைச்சு.. வேடிக்கை காட்டப் போறன் என்ரா.... சரி ஏதோ செய்" என்றான்.

நான் சொன்னேன்.. இது வேடிக்கை இல்லை மச்சான்.. இது ஒரு பாடம்..! உது நீதிமன்றம் போய்க் கூட.. நீதி தேட முடியாத சங்கதி. அதனால் இதனை.. ஒரு பாடமாக்கி.. அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று. "சரி ஏதோ..செய்"... என்று அனுமதி தந்தான்.. மனதில் உள்ள வேதனைகளைத் தாண்டி புன்னகைத்தபடி.

நன்றி. முற்றும். (பகுதி கற்பனை)  :) :lol: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எண்டாலும் இப்பிடி சப்பென்ன்று முடித்துவிடீர்களே. நான் இன்னும் எதோ எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

முடிவு சோகமாக உள்ளது.  :rolleyes: நெடுக்ஸ் அண்ணா வேணும்னே நண்பனது என்று இறுதியில் மாற்றி விட்டிருக்கிறார். :icon_idea: முன்னர் நீங்கள் ஒரு பெண்ணை காதலித்திருந்தீர்கள் என வாசித்திருந்தேன். அந்த பெண் தான் இவராக இருக்குமோ என சந்தேகம். :)

 

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

Link to comment
Share on other sites

அதானே பார்த்தன்.. நெடுக்காவது ஏமாறுவதாவது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கலாம்.. காட்டலாம். அவள் எவனையும் காதலிக்கட்டும்.. எவனோடும் வாழட்டும். அது அவளின்ர பிரச்சனை. ஆனால்.. குறைந்தது உதட்டளவில் உச்சரிக்கும்.. " நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை" என்ற அந்த வார்த்தைக்காவது உண்மையாக இருக்கலாம் அல்லவா. அது கூடவா.. ஒரு பெண்ணால் செய்ய முடியாது. அதைச் செய்ய முடியாதவளுடன்.. எப்படி ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான.. நல்ல வாழ்வை எதிர்பார்க்கலாம்.  இவன் மட்டுமல்ல.. எவனும்..???!  இது இந்தக் கதையின் நாயகனுக்குரிய பிரச்சனை மட்டுமல்ல.. பல பேருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒரு வடிவம்.  :)   :icon_idea:

சமீபத்தில் கருத்துக்களும் ஊக்கமும் தந்த.. சுமே அக்கா.. அலை அக்கா.. கவிதை.. யாழ்வாலி.. அஞ்சரன்.. இசைக்கலைஞன் மற்றும் துளசி போன்ற உறவுகளுக்கும் நன்றி. மீண்டும் இன்னொரு தொடர்கதை போடுற ஐடியா இல்லை. ரெம்ப ரயேட் ஆயிடுச்சு..! எப்படித்தான் உந்த நாவல்களை பக்கம் பக்கமாக.. எழுதித் தள்ளுறாய்ங்களோ..??! :D   :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.