Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் பெண் வித்தியாசமான ஆளாய் இருக்கு! தொடருங்கள் வாசிக்க ஆவல்!!

வித்தியாசம் தான். வித்தியாசமான ஆளுக்கு கிட்ட மாட்டிக்கிட்ட.. வித்தியாசமானவள்.. என்பதை இன்னும் சொற்ப நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் அக்கா. அப்புறம்.. "கதாசிரியர்" இன்றைக்கு ரெம்ப பிசி.. அதனால கதை கொஞ்சம் லேட்டா தான் வரும்.  :lol:  :D

இந்தக் கதையை தொடர ஊக்கமும் கருத்தும் அளிக்கும் எம் யாழ் உறவுகளுக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறோம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளிடம் இருந்து.. தொடர்ந்தும்.. கோபம் தீப்பொறியாகி வார்த்தைகளாய் வீழ்ந்து கொண்டிருந்தது. நானோ.. மெளனமாக அவள் அருகிலேயே இருந்தேன். ஆனாலும்.. அவள் கோபம் அடங்கவில்லை. என் முகம் பார்த்துப் பேசாமல்.. எங்கோ பார்த்துப் பேசியவள்.. என் தொடர் மெளனத்தின் பின் தானும் மெளனமாகிக் கொண்டாள்.

அந்த நேரத்தில்.. ஏற வேண்டிய தொடரூந்தும் வந்து சேர்ந்தது. எதுவுமே பேசாமல்.. பக் என்று ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். நான்.. இவாவின்ர.. இந்தக் கோபத் தீப்பொறியை எனியும் அனுமதித்தால்.. விளைவுகள் மோசமாகும் என்று கருதியதால்... கொஞ்ச நேரம் பெஞ்சில் இருந்துவிட்டு.. தொடரூந்து புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் ஓடிப் போய் அதில் ஏறிக் கொண்டேன். இங்கு.. தொடரூந்து மற்றும் பேரூந்தில் பயணிக்க ஒரே பயண அட்டையை பாவிக்க முடியும் என்பதால்.. பிற யோசனைக்கு இடமளிக்காமல்.. அவளின் கோபத் தீயை அணைக்கும் வழிமுறையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டேன்.

http://youtu.be/v_CTFxmpMk0

தொடரூந்தில் ஏறிய நான்.. அவள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். நான் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தும்.. மெளனத்தை முழுங்கியவள் போல.. வாய் மூடி.. முகத்தைத் திருப்பி வெளியில் பார்த்துக் கொண்டே வந்தாள். நான்.. அந்த மெளனத்தை.. கலைக்க.. "சொறீங்க" என்றேன். "எதுக்கு சொறி சொல்லுறீங்க... சரி.. விடுங்க. எனி மேல் இப்படிச் செய்யாதீங்க. செய்தீங்க.. உங்க கூட எல்லாத் தொடர்பையும் கட்பண்ணிட்டு இருந்திடுவன்..! சொல்லிட்டன். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது" என்றாள்.. காட்டமாக ஆனால்..கொஞ்சம் கோபம் தணிந்தவளாய்.

அந்தச் சந்தர்ப்பத்தில்.. அவளின் கையை மணிக்கட்டில் பிடித்தேன். மிக மிருதுவாக இருந்த அவள் கையை என் கரம்.. மிகவும் பக்குவமாகவே பற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தால். அதன் பின் விடுங்க.. கையை என்றாள். நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கிறன்.... உங்களுக்கு என்ன என்றேன். "ஆமா.. அவற்ற மனிசி. அதுதான் பேரூந்தில ஏற விட்டிட்டு வெளில நிண்டவர்".. என்றாள்.. மீண்டும் அதே பிரச்சனைக்குரிய.. அம்சத்தை தலைக்குள் அமுக்கி வைச்சிருந்தவளாய். நான் தானோ சொன்னனே.. அதில.. போக வேணான்னு.. நீங்க கேட்கல்ல என்றேன். மீண்டும்.. கோபத்தோடு என்னை திரும்பிப் பார்த்தாள். "என்ன பார்க்கிறீங்க.. இதுக்கெல்லாமாங்க கோவிக்கிறது. நான் நினைச்சன் நீங்க நிற்பீங்க... யுனி முடிற நேரம் பேரூந்து அடிக்கடி வரும்..அடுத்த பேரூந்தில.. போவம் என்று தான் நினைச்சுச் சொன்னன். அந்தச் சன நெருசலுக்க.. என்னால பேரூந்தில பயணிக்க முடியாது.. அதுதான் சொன்னேன். அது தப்பாங்க என்று என்னிலை விளக்கம் அளிக்க.. பேசாமல் மெளனமானாள்.

சரி அதை விடுங்க. இப்ப கையை எடுங்க என்றாள் என் தன்னிலை விளக்கத்தில் சமாதானமானவளாய். "இல்லை எடுக்க மாட்டன்.. நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கின்றன். அதை எடுக்கச் சொல்ல நீங்க யாரு" என்றேன். சிரிச்சுக் கொண்டே.. தொடரூந்தில் பூட்டப்பட்டிருந்த கமராவைக் காட்டி.. "அதில கமரா பூட்டி இருக்குது... இவனை முன்னப் பின்ன.. எனக்கு தெரியாது.. என்ர கையைப் பிடிச்சு இழுக்கிறான்.. என்று உதில இருக்கிற சனங்களட்டச் சொன்னன்.. உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கள்" என்றாள். "முதலில.. அதைச் செய்யுங்க.. நான்.. அதுக்கு எப்படி விளக்கம் கொடுக்கிறேன்னு அப்ப பாருங்க" என்றேன்.. பதிலுக்கு போட்டியாக. சரி சொல்லேல்ல.. இப்ப விடுங்க கையை..என்றாள். விடுவிக்க வேண்டும் என்றாள் அவளே என் கையை தட்டி விட்டிருக்கலாம்.. அல்லது உதறி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை. இருந்தாலும்.. அவளின் தொடர் வேண்டுகோளிற்கு இணங்கி கையை விட்டேன். போய் என் முன்னாடி உள்ள சீட்டில.. இருங்க என்றாள். எதுக்கு என்றேன். உங்க கண்களைப் பார்த்துக்கிட்டு இருக்கனும் போல இருக்கு என்றாள். என் கண்ணைத் தானே.. இப்படி திரும்பி இருந்து பாருங்க.. என்றேன்... அவளின் அருகில் இருந்தபடியே. "நீங்க திருந்தவே மாட்டீங்க.. போங்க..." என்றாள் செல்லமாக.

அதுசரி.. "இப்ப எங்கேங்க வாறீங்க. நீங்க இறங்க வேண்டிய ஸ்ரேசனும் போட்டுது" என்றாள். அப்போதுதான் எனக்கே அந்த விசயம் தெரிந்திருந்தது. இருந்தாலும்.. பதட்டப்படவில்லை. உங்க கூட கடைசி ஸ்ரேசன் வரை வந்திட்டு.. அங்க இருந்து திரும்பி வருவன் என்றேன். நான் இடையில் இறங்கி.. பேரூந்தில போகப் போறன் என்றாள். அப்ப நானும் அங்க இறங்கி திரும்பி வருவன் என்றேன். சிரிச்சுக் கொண்டே.. என் தலையில் குட்டினாள்.

http://youtu.be/y_40EdvtU-o

சரி.. எனக்கு இப்ப கால் உளையுதுங்க.. அமுக்கி விடுவீங்களா என்றாள். "என் மனிசிக்குத் தானே.. கால் அமுக்கி விடுறது பிரச்சனையே இல்லை.. ஆனால்.. அதை..தொடரூந்துக்க செய்ய முடியாது.." என்றேன். ஆமா ஆசையப் பாரு என்றாள். "நீங்க தானே கேட்டீங்க.. அப்புறம் என்னங்க ஆசையப்பாருன்னுறீங்க" என்றேன். நிசமாத்தாங்க கால் உளையுது.. என்று தன் கால் பாதங்களைக் காட்டினாள். அவளின் ஒரு பாதத்தில் சிறிய வீக்கம் இருந்தது. அதனைப் பார்த்ததுமே என் மனசு.. பரிவால் துடித்தது.என்னாச்சுங்க.. என்று கேட்டுக் கொண்டே.. என்னை அறியமாமலே.. பாதத்தை மெல்லத் தொட்டுத் தடவி விட்டேன். என் யுனி பாக்கில் இருந்த.. ஒரு ஸ்ரிக்கரையும் எடுத்து.. அவளின் காலில் ஒட்டியும் விட்டேன். அழகான அந்த வண்ணத்துப்பூச்சி ஸ்ரிக்கர் அவளின் செந்நிறமான பாதங்களுக்கு அழகாக இருந்தது. மலரில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல அது அங்கு காட்சி அளித்தது. அது அவளுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். மெல்ல என் மீது சாய்ந்து கொண்டு காலைல இருந்து ஒரே நடையுங்க.. அதுதான் கால் வீங்கி இருக்குது.. உளையுது என்றாள்.. செல்லமாக. என்னில் சாய்ந்திருந்தவளை நான் என் தோளோடு தாங்கிக் கொண்டேன்.. இருவரின் ஆறுதலுக்காகவும்.

http://youtu.be/CEHZAZ_3CGo

மிகுதி அப்புறம்...

(பகுதி கற்பனை) :) :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் நெடுக்ஸ்..... நல்லாத்தான் போகுது. :)

காதல் கதை.... வாசிக்கிறதுக்கும் கேக்கிறதுக்கும் ரொம்ப நல்லாருக்கும்! :wub::D

ஆனால் அதை உண்மையிலயே அனுபவிக்கிறவன்தான் பாவம்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாகக் கதை எழுதுகிறீர்கள் நெடுக்ஸ். ஆனால் நிச்சயமாய் கற்பனை அல்லது நீண்ட கனவேதும் கண்டிருப்பியள். உண்மையில் இப்பிடி நெடுக்ஸ் காதல்வசப்பட்டிருக்கவே முடியாது :lol:

Link to comment
Share on other sites

தொடர் அருமையா போகுது ஆனாலும் நீங்கள் தெரிவு செய்யும் பாட்டு  அம்புட்டும் சூப்பர் அண்ணா தொடருங்கோ எங்க கொண்டுபோய் கவிழ்க்க போறியள் என்று பார்ப்பம் :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு திரும்பியதும்... பேரூந்து களேபரத்தில்.. எதிர்வரும் வாரங்களில் யுனி ஈஸ்டர் விடுமுறைக்காக மூடப்படுவதை மறந்துவிட்டிருந்த நான்.. அப்ப எனி இரண்டு வாரங்களுக்கு அவளைச் சந்திக்க முடியாதே.. நேரில் ஈஸ்டர் வாழ்த்தும் சொல்ல முடியாதே என்ற தவிப்பில்.. எனது கணணிக்குள் நுழைந்து.. இணையத் தூதை திறந்தேன்.

அவளும் வீடு போய் சேர்ந்து இணையத் தூதில் நின்றிருந்தாள். நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு.. இணையத் தூதை அதிர வைத்து.. அவளை அழைத்தேன். அவளிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் அவள் ஆன் லைனில் நிற்கிறாள் என்று காட்டியது. மீண்டும் இணையத் தூதை.. அதிர வைத்தேன். பதில் இல்லை. சற்று நேரத்தில்.. ஆன் லைன் என்பது.. "பிசி".. என்று மாறி நின்றது. அப்ப கணணியில் இருக்கிறாள்.. ஆனால் கதைக்கிறாள் இல்லை என்ற முடிவோடு.. "அவசரம்" என்று ஒரு ஈமெயில் செய்தி போட்டேன். ஈமெயிலுக்கும் பதில் இல்லை.

ஆள் நிஜமாவே பிசி போல.. சரி என்று சற்று நேரம் செல்ல வருவோம் என்றுவிட்டு.. சமையலறை சென்று.. ரீ போட்டுக் கொண்டு வந்தேன். வந்ததும் வராததுமாக மீண்டும் இணையத் தூதை திறந்தேன். பதில் இல்லை. ஈமெயிலுக்கும் பதில் இல்லை. மொபைலை எடுத்து ஒரு ரெக்ஸ்ட் போட்டேன்.. இணையத்தூதிற்கு வரும் படி. ஆனால் அதற்கும் பதில் இல்லை. சரி.. ஆள்.. இன்னும்... பிசி போல என்றிட்டு.. சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் இணையத் தூதை அதிர வைத்தேன்.

"வாட்" என்ற கேள்வியோடு வந்தாள். "என்ன.. பிசியோ" என்றேன். "ஆமா பிசி தான். அதுக்கு இப்ப என்ன" என்றாள். இல்ல ஈமெயில் போட்டன்... பதில் இல்லை. மெசேஜ் போட்டன் பதில் இல்லை. அவ்வளவு பிசியாங்க என்றேன். ஆமா அவ்வளவு பிசிதான். தெரிஞ்ச.. ஒருவரோடு சாட் பண்ணிக்கிட்டு இருந்தன். அதுதான் பதில் போட முடியல்ல என்றாள். ஏங்க.. சாட் பண்ணிட்டு இருக்கிற நீங்க.. இணையத்தூதில் அதைச் சொல்ல அதிக நேரமா எடுக்கும் என்றேன். உடனே கோபத்தின் உச்சிக்குப் போனவளாய்.. "நான் எதுக்கு உங்களுக்கு பதில் போடனும். அப்படி என்ன அவசரம். இப்பதானே யுனில பார்த்துப் பேசிட்டு வந்தன். அப்புறம் என்ன" என்றாள். பார்த்துப் பேசினது நிஜந்தாங்க.. ஆனால்.. ஈஸ்டர் விடுமுறை வரப் போகுதெல்லோ.. எனி இரண்டு கிழமைக்கு பார்க்க முடியாதே என்று சொல்லத்தான் அழைத்தேன். அந்தக் காலத்தில் முடிந்தால்.. இணையத் தூதுக்கு வாங்க என்றேன்.

அதுக்கு அவள்.. "ஏன் நான்.. வரனும். நீங்க கூப்பிடுற நேரம் எல்லாம் வர எனக்கு வேற வேலை இல்லையா" என்றாள். நான் அதிர்ச்சியோடு.. மெளனமானேன். மீண்டும் அவளே தொடர்ந்தாள். "இஞ்ச பாருங்க.. என்னை யாரும் டிமாண்ட் பண்ண ஏலாது. நான் நினைச்சது தான் செய்வன். நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை. அதுக்காக சதா பக்கத்தில இருக்கனும்.. கொஞ்சிக் குலாவிட்டு இருக்கனும்.. ஐ லவ் யு சொல்லிட்டு இருக்கனும்.. என்று நினைக்காதேங்க. அதுக்கு வேற ஆளைப் பாருங்க. மீண்டும் சொல்லுறன்.. எனக்குப் பிடிக்காட்டி உங்களை தூக்கி எறிஞ்சிட்டுப் போக எனக்கு அதிக நேரம் எடுக்காது. அதை மனசில வைச்சிருங்க" என்றாள். அதோடு நிறுத்தாமல்.. மேலும்.. தொடர்ந்தாள்.. "அதுவும் இல்லாமல்.. நீங்க தான் எனக்கு வாழ்க்கையில தேவை என்றும் இல்லை. நீங்க இல்லாட்டி இன்னொருத்தனை கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுவன். ஏதோ உங்களை நம்பி நான் இருக்கிறன் என்று மட்டும் நினைக்காதேங்க. உங்களைக் காதலிக்கிறதுக்காக நான் உங்க அடிமை இல்லை. ஓ.கே.." என்றாள்.. தனது பொழிப்புரையை கோபத்தோடு..!

நான்.. அதற்கு எந்தப் பதிலும் போடாமல்.. இருந்துவிட.. மீண்டும்.. "என்ன பதிலைக் காணம்" என்று எழுதினாள். அதற்கு நான்.. உங்ககிட்ட.. ஈஸ்டர் கொலிடே வரப்போகுது.. நேரில.. சந்திக்க முடியாத தருணங்கள் வரும்.. அதுதான்.. முடிஞ்சா.. இணையத்தூதுக்கு வாங்க என்று சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா.. ஏதேதோ எழுதுறீங்க.. ஏங்க கோவப்படுறீங்க என்றேன்.. அமைதியாக. அதற்கு அவள்.. "ஹலோ.. நான் ஒன்றும் கோவப்படல்ல. நிஜத்தை தான் எழுதிறன். நான் சாட்டில ஆயிரம் பேரோடும் கதைப்பன். அது என் இஸ்டம். எனக்கு நேரம் இருந்தால் தான்.. உங்க கூட கதைப்பன். இல்ல பேசாமல் இருப்பன். என்னை அங்க வா.. இங்க வா.. அதைச் செய்.. இதைச் செய்.. அங்க கதை.. இங்க கதை என்று டிமாண்ட் பண்ண ஏலாது. சொல்லிட்டேன். நான் இப்படித்தான். பிடிச்சா கூட இருங்க.. இல்லாட்டி விட்டிட்டுப் போங்க. எனக்கு ஒரு தலையிடி குறைஞ்ச மாதிரி" என்றாள்.. எடுத்தெறிபவளாய்.

http://youtu.be/JDu_NrQHKy0

நான்.. நம்பிக்கையும் அன்பும் வைச்சிருந்தவள்.. இப்படி பேசுறாளே.. என்ற மனவேதனையோடு.. "சரிங்க " என்று கூறிவிட்டு.. இணையத் தூதை லாக் அவுட் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.

அன்று.. pause ஆன அவளுடனான தொடர்புகள்.. மீண்டும் தொடரவே வாய்ப்பில்லாத வகைக்கு.. அவள் நடவடிக்கைகள் இருந்தன. அது எனக்குள் அந்த நேரத்தில் வேதனையாகவும்.... நானா அவளிடம் போகாத போதும்.. அவளா தேடி வந்திட்டு இப்போ என்னை சொற்களால் நடத்தைகளால் வேதனைப்படுத்துகிறாளே என்ற எண்ணமும்.. மனதில் வேதனையை தொடர்ச்சியாக பிரசவித்தது. எனி.. அவளாக தேடி வந்தால் தான் கதைக்கிறது. இல்லாது போனால் அவள் விருப்பப்படியே நடந்து கொள்ளட்டும். எனியும் அவளுக்காக நான் இறங்கிப் போகப் போறதில்லை என்ற முடிவோடு... நானும்.. அவளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டிக்க திடசங்கற்பம் பூண்டேன். அந்த முடிவு.. மனதில்.. தாளாத வேதனையையும்.. நித்திரை இல்லாத இரவுகளையுமே எனக்குப் பரிசாகத் தந்திருந்தது. அதுமட்டுமல்ல.. அவளுக்காக நான்.. என் பெற்றோர் விருப்பங்களை எல்லாம் உதாசீனம் செய்தது.. என் வாழ்க்கையில்.. பெண் என்ற அத்தியாயத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதி விட்டிருந்தது.

மீண்டும்.. அவளைச் சந்தித்தாலும் கூட அவளாக வந்து பேசாத வரை நானாகப் பேசப் போவதில்லை என்ற முடிவோடு.. நாட்கள் கழிந்தன. அது வாரங்கள் ஆகின. அது மாதங்கள் ஆகின. ஏன் வருடங்களும் ஆகின. அவளோ.. விண்ணோடு ஒளிர் விட்டு மறையும் எரிநட்சத்திரமாக என் வாழ்க்கை எனும் வானில் தோன்றி மறைந்திருந்தாள். நான்.. விடியற் சூரியன் என்று நினைத்தது.. எரிகல்லாகி.. சாம்பலாகி நின்றது என் வாழ்க்கையில் வேதனையாகவே அமைந்திருந்தது. இருந்தாலும்.. நானே தேடிக் கொண்டதில் இருந்து நானே வெளியே வரவும் கற்றுக் கொள்ள அவள் தந்த அனுபவம் எனக்குப் பாடமானது ஆறுதல். அதற்காக நான் அவளுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

+++++++++++++++++++++++++

என்னடா... காட் ரைவ் (Hard drive) வில இருந்து.. பைல்களை கொப்பி பண்ண முடிஞ்சு தா.. என்று கேட்டான் நண்பன். ஆமாம்.. ஆனால் உனது கிரக்டான (Crack) காட் ரைவில் இருந்த ஒரு பைல் என்னை மிகவும் பாதிச்சிட்டுதடா என்றேன். அதற்கு அவன் "எந்த பைல்".. அந்த "என் கதை சொல்லும் நேரமிது" என்ற பைல் தான்... அதை யாழ் இணையத்தோட பகிர்ந்து கொள்ளப் போறன். சம்மதிப்பியா என்றேன். அதற்கு நண்பன் சொன்னான்.. "அவள் தான் என்னை வைச்சு வேடிக்கை காட்டிட்டுப் போய்ட்டாள் என்றாள்.. நீயும் என்னை வைச்சு.. வேடிக்கை காட்டப் போறன் என்ரா.... சரி ஏதோ செய்" என்றான்.

நான் சொன்னேன்.. இது வேடிக்கை இல்லை மச்சான்.. இது ஒரு பாடம்..! உது நீதிமன்றம் போய்க் கூட.. நீதி தேட முடியாத சங்கதி. அதனால் இதனை.. ஒரு பாடமாக்கி.. அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று. "சரி ஏதோ..செய்"... என்று அனுமதி தந்தான்.. மனதில் உள்ள வேதனைகளைத் தாண்டி புன்னகைத்தபடி.

நன்றி. முற்றும். (பகுதி கற்பனை)  :) :lol: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எண்டாலும் இப்பிடி சப்பென்ன்று முடித்துவிடீர்களே. நான் இன்னும் எதோ எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

முடிவு சோகமாக உள்ளது.  :rolleyes: நெடுக்ஸ் அண்ணா வேணும்னே நண்பனது என்று இறுதியில் மாற்றி விட்டிருக்கிறார். :icon_idea: முன்னர் நீங்கள் ஒரு பெண்ணை காதலித்திருந்தீர்கள் என வாசித்திருந்தேன். அந்த பெண் தான் இவராக இருக்குமோ என சந்தேகம். :)

 

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

Link to comment
Share on other sites

அதானே பார்த்தன்.. நெடுக்காவது ஏமாறுவதாவது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கலாம்.. காட்டலாம். அவள் எவனையும் காதலிக்கட்டும்.. எவனோடும் வாழட்டும். அது அவளின்ர பிரச்சனை. ஆனால்.. குறைந்தது உதட்டளவில் உச்சரிக்கும்.. " நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை" என்ற அந்த வார்த்தைக்காவது உண்மையாக இருக்கலாம் அல்லவா. அது கூடவா.. ஒரு பெண்ணால் செய்ய முடியாது. அதைச் செய்ய முடியாதவளுடன்.. எப்படி ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான.. நல்ல வாழ்வை எதிர்பார்க்கலாம்.  இவன் மட்டுமல்ல.. எவனும்..???!  இது இந்தக் கதையின் நாயகனுக்குரிய பிரச்சனை மட்டுமல்ல.. பல பேருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒரு வடிவம்.  :)   :icon_idea:

சமீபத்தில் கருத்துக்களும் ஊக்கமும் தந்த.. சுமே அக்கா.. அலை அக்கா.. கவிதை.. யாழ்வாலி.. அஞ்சரன்.. இசைக்கலைஞன் மற்றும் துளசி போன்ற உறவுகளுக்கும் நன்றி. மீண்டும் இன்னொரு தொடர்கதை போடுற ஐடியா இல்லை. ரெம்ப ரயேட் ஆயிடுச்சு..! எப்படித்தான் உந்த நாவல்களை பக்கம் பக்கமாக.. எழுதித் தள்ளுறாய்ங்களோ..??! :D   :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.