Jump to content

வோர்மல்..(Formal)


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவருவதை கண்ட சுதா "சுருதி! கிரான்ட்மா இஸ் தெயர்" என்று கத்தியபடியே ஒடிப்போனாள் .மகளை கண்ட தாயும் உடனடியாக சக்கரநாற்காலியை விட்டெழுந்து ஓடிப்போய் கட்டியணைத்துகொண்டாள் .இருவரும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.இந்த காட்சியை கண்ட விமானபணிப்பெண் திகைத்து ஒரு விநாடி அதிர்ந்து போனாள்.சக்கர நாற்காலி எதற்கு பாவிப்பது என்பதின் வரைவிலக்கணத்தை அறிய வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டாள்.

அதே மனநிலையில்தான் சுருதியும் இருந்தாள்.

"அம்மா இவள்தான் மூத்தவள்"

"அப்படியே உன்னை மாதிரி இருக்கிறாள் ,இரண்டு வயசில் கண்டதற்கு பிறகு இப்பதானே பார்க்கிறேன் என்ட மனுசனின்ட உசரம் அவளுக்கு வந்திருக்கு,அவரும் போய் ஐந்து வருசமாகி விட்டது.,மனுசன் இருந்திருந்தால் இப்ப என்னோட வந்திருக்கும் என்ன செய்யிறது காலம் செய்த கோலம்"என்று கூறியபடியே கண்களை துடைத்துகொண்டாள்.

"Hi Grandmamaa how are you........"

" I am good...தமிழ் தெரியாதோ"

"அவளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கமாட்டாள்"

"அப்ப என்னை மாதிரித்தான் என்று சொல்லு,எனக்கு இங்கிளிஸ் விளங்கும் பேசவராது but I can manage"..

"வீல் செயர் ஒன்றை எடுக்கவோ அம்மா?"

"என்ன பகிடியே விடுகிறாய்,நான் நல்லாய் நடப்பன்,வெளிநாட்டுப்பிள்ளைகள் மாதிரி ஐந்து வயசிலயே கண்ணாடி போட்டு வாழ்கிற கோஸ்டிகளே,நான் வாசிக்கமட்டும் கண்ணாடி போடுகிறன் அதுவும் 50 வயசுக்கு பிறகுதான்..."

"காரை தூர பார்க் பண்ணியிருக்கிறன் அதுதான் கேட்டனான்.அம்மா"

"பிள்ளையாரை பார்க்க இரண்டுகட்டை நடந்து போறனான் உது என்ன பெரிய தூரம்" மூவரும் கதைத்த படியே கார்தரிப்பிடத்தை அடைந்தனர்.

காரினுள் ஏறியவுடன் சுருதி அம்மாவின் பெல்டை போட்டுவிட்டு அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"நீயும் கார் ஒடுவியே சுருதி"

"ஜெஸ் கிரான்ட்மா"

"அது என்ன கிரான்ட்மா, அம்மம்மா என்று சொல்லு"

"ஒகே அம்மம்மா"

"எங்க அப்பா ?வேலைக்கு போயிட்டாரே"

"ஒம் அம்மம்மா ஒவ் சோர்(off shore) வர வண் வீக் ஆகும்"

"நான் திரும்பி ஊருக்கு போகமுதல் உனக்கு தமிழ் படிப்பிச்சு போட்டுதான் போவன் யு வெயிட் அன் சி" சுருதிக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மம்மாவின் இங்கிலிஸ் உச்சரிப்பை கேட்டு.

"அம்மா பிளெனில் வந்தது களைப்பா இருக்குதோ"

"எனக்கு என்ன களைப்பு,சின்னவன் விமான பணிப்பெண்ணிடம் எல்லாத்தையும் கொடுத்து கதைத்து விட்டவன்,அவள் வடிவாக என்னை கூட்டிக்கொண்டு வந்தவள்.....மற்றது நான் எல்லோரும் வார எக்கனமிக்ஸ் கிளாசில வரவில்லை..பிசினஸ் கிளாசில வந்தனான்...."

"நித்திரை வந்தால் உதுல சாய்ந்து படுங்கோ'சுருதி அம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிடுங்கோ"

சுருதி அம்மம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிட்டாள். அம்மம்மா பயணகளைப்பில் நித்திரையாகப் போய்விட்டார்.கார் வீட்டினுள் சென்று நிற்பாட்டியவுடன் அம்மம்மா விழித்து கொண்டார்.திடுக்கெட்டு எழுந்த அம்மம்மா

"அடி என்னடி கார் வீட்டுக்குள்ள நிற்குது"

சுதாவின் வீட்டினுள் காரை நிறுத்தினால்நேராக வரவேற்பறைக்கு செல்லலாம்.காருக்கு ஏற்ற வீடு ...வீட்டுக்கு ஏற்ற கார்.தாயாரைஉள்ளே அழைத்துச் சென்றாள். தமிழ்சினிமாவிலும்,நாடகங்களிலும் பார்த்த வீட்டை நேரில் கண்ட அம்மம்மாவுக்கு தான் நிஜவுலகில் இருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

கீழ்தரையில் குளியலறை,மலசலகூடத்துடன்கூடிய பெரிய அறை ,அழகான உயர்தர மெத்தை விரிப்புடன் கூடிய கட்டில் ,கட்டிலுக்கு அருகே இரு விலையுயர்ந்த மேசைகளின் மேல் டெபிள் லாம்ப் இருந்தன.உடுப்புக்களை வைப்பதற்கு என ஒரு அறை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நட்சத்திர கொட்டல் அறை போல காட்சி அளித்தது.

"அம்மா உள்ளே வாங்கோ இது தான் உங்கன்ட அறை, குளிச்சு போட்டு வாங்கோ சாப்பிடுவோம்"எனகூறிய படியே குளியலறை கதைவை திறந்து சுடுதண்ணி பைப்,குளிர்தண்ணீர்பைப் போன்றவற்றை விளங்கப்படுத்தி தாயருக்கு குளிக்க உதவிகள் செய்தாள்.குளித்து முடித்து வெளியே வந்தாள் அம்மம்மா .

"அம்மா சாப்பிட்ட பிறகு வீட்டை பார்க்க போறியளோ,இப்ப பார்க்க போறியளோ"

" எனக்கு இப்ப பசிக்கவில்லை ,வா உன்ட வீட்டை பார்ப்போம் முதலில"

" இது வோர்மல் லிவ்விங் ,இது வோர்மல் டைனிங்"இரண்டிலும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்காலிகளும் ,சோப செட்களும் போடப்பட்டிருந்தது.

"இது குசினி "

"என்னடி அப்படியே எல்லாம் புதுசா கிடக்கு நீ சமைக்கிற இல்லையோ"

"பின்னுக்கு ஸ்பைஸ்கிச்சின் என்று ஒன்று இருக்கு அதிலதான் சமைக்கிறனாங்கள்,இதுக்குள் சமைச்ச வீடெல்லாம் மணக்கும் "

"இது என்னடி ஊர் கோவிலில் சர்பத் கடையில கலர் கலராக அடுக்கி வைச்சிருக்கிற மாதிரி நீயும் வாங்கி அடுக்கி வைச்சிருக்கிறாய் எனக்கும் உதுல கொஞ்சத்தை தாவேன் குடிப்பம் "

"ஐயோ அம்மா அது சர்பத் இல்லை அது இவரின்ட மினிபார்"

"அது என்ன மினிபார்"

"அ....து அம்மா சாராயப்போத்தல்கள் இவர் பார்ட்டி வைச்சா சினேகிதர்மாருடன் சேர்ந்து குடிக்கிறவர்"

"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,அதுசரி உன்ட மனுசன் கலியாணம் கட்டும்பொழுது தண்ணி கிண்னி பாவிக்கிறதில்லை என்று சொல்லிச்சினம் "

""உன்ட மனுசனின்ட கொப்பர்ரும் அந்தகாலத்தில நல்ல தண்ணிச்சாமி அதுதான் மகனும் தண்ணிச்சாமி போல கிடக்குது,நானும் நாலு பெடியள் பெத்து வளர்ந்தனான் ஒருத்தனும் தண்ணி பாவிக்கிறதில்லை"

"அம்மா அது எல்லாம் உங்களோட இருக்குமட்டும்தான் இப்ப பெரியண்ணனின் மெல்பெர்ன் வீட்டில் இதை விட பெரிய பார் இருக்கு,சின்னண்ணன்வீட்டையும் இப்படிதான்,,அப்பா குடிக்கிறதில்லை ஆனால் அண்ணன்மார் குடிக்கினம்,அதற்காக பரம்பரை குடிகாரர் என்றே சொல்லுறது"

"தம்பியவையள் குடிக்கிறவங்களோ,அதுகென்ன குடிச்சா ? வெளிநாட்டில் இது எல்லாம் சகயம்"

"அதென்ன உங்களுடைய பிள்ளைகள் குடிச்சா சகயம்,மற்றவங்கள் குடிச்சா பரம்பரை குடிகாரன் என்கிறது..நல்ல நியாயம்"

"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"

"உலக வழக்கில்லை,உங்கன்ட ஊர் வழக்கு"

"என்ன மனுசனைபற்றி சொன்னவுடன் கோபம் வருகுதுபோலகிடக்கு,சரி,சரி வா மிச்ச வீட்டையும் பார்ப்போம்"

சுதா தனது வீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்பைஸ் கிச்சின்,மற்றும் ரம்பஸ் , BBQபோடும் இடம் ,தனது வீட்டுதோட்டம் எல்லாம் சுற்றிக்காட்டினாள்.

"எல்லாம் இரண்டு இரண்டா வைச்சிறுக்கிறீயள்,சாப்பாட்டு மேசை,குசினி,டிவி எல்லாம் இரண்டு"

"வாங்கோ அம்மா மேல போய் பார்ப்போம்""இது மாஸ்டர் பெட்ரூம் இது எங்கன்ட அறை உள்ளே வாங்கோ,"

ஸ்பாவுடன் கூடிய குளியலறை,பில்ட் இன் வோர்ரோப் ,பெரிய டிவி எல்லாம் அந்த அறையிலிருந்தது.

"உன்ட பாத்ரூமிலயும்,உடுப்பு வைக்கிற இடத்திலயும் இரண்டு கட்டில் போடலாம் போலகிடக்கு""இது கோம் தியட்டர் அம்மா"

"அதென்னடி கோம் தியட்டர்"இவர்கள் அங்கே இருக்கும்பொழுது சுருதியும் உள்ளே வந்தாள்.

"கிரான்ட்மா ...அம்மம்மா தியட்டருக்கு போய் படம் பார்க்க தேவையில்லை ,வீட்ட இருந்தே படம் பார்க்க முடியும்,இவினிங் ஒரு படம் போட்டு பார்ப்போம்"

வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்பு மதிய உணவை சுதா தயாருக்கு பரிமாறினாள். அம்மம்மா சாப்பிட்டவுடன் ஒரு சிறிய தூக்கம் போடுவது வழக்கம்.நித்திரையால் எழுந்து சுதா கொடுத்த தேனீரை பருகிகொண்டிருக்கும் பொழுது,வீட்டு அழைப்புமணி அடித்தது.கம்மிங்க் என்று குரல் கொடுத்தபடியே சுருதி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.

"காய் சுணில்"

"காய் சுருதி"

இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.இதை பார்த்த அம்மம்மா. இங்கு என்ன நடக்குது என்ற ரீதியில் சுதாவை திரும்பி பார்த்தார். அம்மா அவன் சுணில் முன்வீட்ட இருக்கிறவன் .சிங்களவர்கள், நல்ல சனம் இப்ப உங்களை பார்க்கத்தான் வந்திருக்கிறான்.

"சுணில் சீ இஸ் மை மதர்"

"கலோ அன்ரி"

"கலோ"

சுணிலும் சுருதியும் ஆங்கிலத்தில் எதோ பேசி சிரித்துக்கொண்டிரிந்தார்கள்.இவற்றை பார்த்த அம்மம்மாவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது. சுணில் விடை பெற்று சென்ற பின்பு

"நீ சிங்களவனோட நல்ல கொண்டாட்டம் போலகிடக்கு,உவங்களால் தானே எங்கன்ட சனம் அநியாயமாக செத்தது"

"அம்மா, சும்மா அரசியல் கதைக்காதையுங்கோ"

"இதில என்னடி அரசியல் கிடக்குது, அவங்களின்ட ஆட்கள்தானே இவ்வளவு சனத்தையும் கொண்டவங்க"

"ஏன் என்கன்ட ஆட்களும் அவங்களை கொண்டவங்கள் தானே"

"ஏய் நீ சும்மா விதண்டா வாதம் பண்ணாதே பக்தியும்,படிப்பும் என்று இருந்த சனத்தை துவக்கு தூக்க வைத்தவன் அவன் தான் இதில எனக்கு மாற்றுகருத்து இல்லை "

"சரி சரி உதுகளை பற்றி நாங்கள் கதைச்சு வீணாக சண்டை பிடிக்காமல் வாங்கோவன் வெளியால நடக்கப் போவம்"

"இரு சீலையை சுற்றிகொண்டு வாரன்"

"உப்படியே வாங்கோவன் "

"சீ சீ ஒரு நிமிசத்தில் சீலை சுற்றிகொண்டு ஒடிவாரன்" இருவரும் வெளியால் நடக்கதொடங்கினார்கள்.வீதியில் காண்பவர்களுக்கு தனது தாயாரை அறிமுகசெய்து வைத்து கொண்டிருந்தாள் சுதா.

"அது சரி இவள் சுருதி குமர் பிள்ளை பெடியளை கண்டவுடன் இப்படி கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கிறது சரியில்லை,நான் இப்பவும் வேறு மனுசங்கள் பக்கத்தில் இருந்தால் விலத்தித்தான் இருக்கிறனான்.ஒரு கூச்சம் இருக்கு"

"அம்மா இங்க உதெல்லாம் சகயம் ,நானே வேலை செய்யிற இடங்களில் சில நேரம் முத்தம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு,அவள் இங்க பிறந்து வளர்ந்தவள், இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியும்"

"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."

"அம்மா அது விலையுயர்ந்த சட்டை பாடசாலை வோர்மலுக்கு வாங்கினது,அப்படியான உடுப்புதான் போடவேணும் எல்லா பெட்டைகளும் இப்படித்தான் போடுங்கள் அப்படி போட்டாத்தான் மதிப்பு".

"எதுக்கு எடுத்தாலும் உங்களுக்கு ஒரு கண்டறியாத வோர்மல் ...."

ஒரு கிழமை சென்றும் சுதாவின் கணவனை வீட்டில் காணாதது அம்மம்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. பக்கத்துவீட்டு வெள்ளை இனத்தவன் சுதா வீட்டு குப்பை தொட்டியை தள்ளி வைத்துவிட்டு செல்வதை கண்டுவிட்டார்.அம்மம்மாவுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.உந்த வெளிநாட்டில புருசன்மாரும் வொர்மல்,இன்வொர்மல் என்று இருக்குமோ!!!!!!!!!!!!!!!! என்ட கடவுளே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு 'வித்தியாசமான' கிறுக்கலுடன் புத்தனைக் காண்பது மகிழ்ச்சி!

 

இந்த முறை, தமிழ், சிங்கள இனப்பிரச்சனையையும் தொட்டுச் செல்லும் விதம் அழகு! மேலோட்டமாகப் பார்க்கும்போது, நகைச்சுவையாகத் தோன்றினாலும், பல துயரம் கலந்த சோகங்களும் அந்த அம்மாவின் ஆதங்கங்களில் புதைந்துள்ளன!

 

அடையாளம் இழந்து வரும், தமிழர்கள் ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதுடன், முந்திய தலைமுறைக்கும், அதனைத் திணிக்க முயல்வதையும் கதை சொல்லிச் செல்கின்றது!

 

கதையின் இறுதியில் இவ்வளவு காலமும் எங்கள் கலாச்சாரங்கள் என்று நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த அனைத்தும்,

ஒவ்வொன்றாக உடைந்து விழுவதைக் கதை அருமையாகச் சொல்லிச் செல்கின்றது! கதை சொல்லப்பட்ட விதம், புத்தனுக்கே தனித்துவமானது!

 

நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும் புத்தன்!

Link to comment
Share on other sites

போமல் என்கிறீங்கள், சட்டை என்கிறீங்கள், சிங்கள் என்கிறீங்கள். எதோ சொல்ல வாறீங்கள் எண்டு மட்டும் தெரியுது. ஆனால் இந்த மரமண்டைக்கு தான் ஒண்டும் விளங்குதில்லை..

Link to comment
Share on other sites

அம்மம்மாவின் சடையல் அந்தமாதிரி இருந்தது.. :wub: கடைசி வரிகள் இன்னும் முத்தாய்ப்பு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினை கூத்துக்கள்.. எங்கட ஆக்களிட்ட. ஆனால் இருக்க சொந்தமா ஒரு நாடு இல்லை..! எல்லாம் அடுத்தவன்ர..!  :lol:  :D


மீண்டும் ஒரு நல்ல அம்சமான குட்டிக்கதை.. புத்தன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

வோர்மல் மனிசி மாரும் இருந்தால் எவ்வளவு நல்லம் :icon_mrgreen:

 

நல்ல கதை புத்து....

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு கலக்கல் பதிவுடன் புத்தன். 

 

 

"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,

 

:D  :D

 

 

"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."

 

கிரான்மா தான் வளரவேணும் என்று சொல்லுவினம் போல. :)

Link to comment
Share on other sites

"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"  ///

 

இது எண்டைக்குமே மாறாது . கதைக்குப் பாராட்டுக்கள் புத்தா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கன நடப்பவற்றை  உங்களின்  நடையில் சொல்லியுள்ளீர்கள்  நன்றாக உள்ளது புத்தன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலை வாழுற எங்கடை சனத்தின்ரை நாட்டியங்கள் சொல்லி வேலையில்லை புத்தன்...... :(

 

இன்னொரு சமூக அவலத்தை அழகாக எழுத்தில் சொல்லியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... கதைகள் வாசிப்பது, குறைவு.
புத்தனின்.. கதைகளிளில், ஏதாவது விசேசமிருக்கும்.
நல்ல, ஒரு கதையை எம்முடன், பகிர்ந்த புத்தனுக்கு... சாவில்லை.
நூறு வயசு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு 'வித்தியாசமான' கிறுக்கலுடன் புத்தனைக் காண்பது மகிழ்ச்சி!

 

இந்த முறை, தமிழ், சிங்கள இனப்பிரச்சனையையும் தொட்டுச் செல்லும் விதம் அழகு! மேலோட்டமாகப் பார்க்கும்போது, நகைச்சுவையாகத் தோன்றினாலும், பல துயரம் கலந்த சோகங்களும் அந்த அம்மாவின் ஆதங்கங்களில் புதைந்துள்ளன!

 

அடையாளம் இழந்து வரும், தமிழர்கள் ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதுடன், முந்திய தலைமுறைக்கும், அதனைத் திணிக்க முயல்வதையும் கதை சொல்லிச் செல்கின்றது!

 

கதையின் இறுதியில் இவ்வளவு காலமும் எங்கள் கலாச்சாரங்கள் என்று நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த அனைத்தும்,

ஒவ்வொன்றாக உடைந்து விழுவதைக் கதை அருமையாகச் சொல்லிச் செல்கின்றது! கதை சொல்லப்பட்ட விதம், புத்தனுக்கே தனித்துவமானது!

 

நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும் புத்தன்!

 

எனது கிறுக்களுக்கு முகவுரை எழுதியமைக்கு நன்றிகள் புங்கையூரன்....புது வருட வாழ்த்துக்கள்

போமல் என்கிறீங்கள், சட்டை என்கிறீங்கள், சிங்கள் என்கிறீங்கள். எதோ சொல்ல வாறீங்கள் எண்டு மட்டும் தெரியுது. ஆனால் இந்த மரமண்டைக்கு தான் ஒண்டும் விளங்குதில்லை..

 

பஜனை,உபதேசம் என்று போனால் மண்டை மரமண்டையாவதை அந்த கடவுளாலும் தடுக்கமுடியாது.. :D

போமல் என்கிறீங்கள், சட்டை என்கிறீங்கள், சிங்கள் என்கிறீங்கள். எதோ சொல்ல வாறீங்கள் எண்டு மட்டும் தெரியுது. ஆனால் இந்த மரமண்டைக்கு தான் ஒண்டும் விளங்குதில்லை..

 

பஜனை,உபதேசம் என்று போனால் மண்டை மரமண்டையாவதை அந்த கடவுளாலும் தடுக்கமுடியாது.. :D

வழக்கம் போல சூப்பர் புத்தன்.

 

நன்றிகள் அர்ஜூன்.....புதுவருட வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கதையைப் படிக்கும் ஃபோர்மல்காரர்கள் இருட்டடி கொடுக்க வெளிக்கிடப்போகின்றார்கள்!

என்னதான் ஃபோர்மலாக இருந்தாலும் சோற்றையும் மிளகாய்த்தூளையும் விடமுடியாமல் ஸ்பைஸ்கிச்சின் கட்டவேண்டிய நிலைமைதான் தமிழர்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மாவின் சடையல் அந்தமாதிரி இருந்தது.. :wub: கடைசி வரிகள் இன்னும் முத்தாய்ப்பு..! :lol:

 

நன்றிகள் இசை .....புதுவருட வாழ்த்துக்கள்

புத்தனின் கதையைப் படிக்கும் ஃபோர்மல்காரர்கள் இருட்டடி கொடுக்க வெளிக்கிடப்போகின்றார்கள்!

என்னதான் ஃபோர்மலாக இருந்தாலும் சோற்றையும் மிளகாய்த்தூளையும் விடமுடியாமல் ஸ்பைஸ்கிச்சின் கட்டவேண்டிய நிலைமைதான் தமிழர்களுக்கு!

 

நன்றிகள் கிருபன்... முகமூடி போட்டுக்கொண்டுதான் திரிகின்றேன்..... :D புதுவருட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோர்மலா அல்லது போர்மலா :unsure: தன்ட அனுபவங்களை கதையாக எழுதும் புத்தனுக்கு வாழ்த்துக்கள் :)  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோர்மலா அல்லது போர்மலா :unsure: தன்ட அனுபவங்களை கதையாக எழுதும் புத்தனுக்கு வாழ்த்துக்கள் :)  :)

 

நன்றிகள் ரதி அவர்களே...எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துகொள்ளுங்கோ :D..மீண்டும் எனது கிறுக்கலுக்கு கருத்து பதிந்தமைக்கு நன்றிகள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினை கூத்துக்கள்.. எங்கட ஆக்களிட்ட. ஆனால் இருக்க சொந்தமா ஒரு நாடு இல்லை..! எல்லாம் அடுத்தவன்ர..!  :lol:  :D

மீண்டும் ஒரு நல்ல அம்சமான குட்டிக்கதை.. புத்தன் அண்ணா. :)

 

நன்றிகள் நெடுக்ஸ்.....எம்மவர் கூத்துக்கள் தொடர வேண்டும் நானும் கிறுக்க வேண்டும்..:D

வோர்மல் மனிசி மாரும் இருந்தால் எவ்வளவு நல்லம் :icon_mrgreen:

 

நல்ல கதை புத்து....

 

நன்றிகள் நிழலி.....மனிசிமார் வோர்மலாக வந்தால்.. நினைக்கும் பொழுதே புல்லரிக்குது

மீண்டும் ஒரு கலக்கல் பதிவுடன் புத்தன். 

 

 

:D  :D

 

 

கிரான்மா தான் வளரவேணும் என்று சொல்லுவினம் போல. :)

 

நன்றிகள் நுனா...சொன்னாலும் சொல்லுவினம்...

"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"  ///

 

இது எண்டைக்குமே மாறாது . கதைக்குப் பாராட்டுக்கள் புத்தா .

 

நன்றிகள் கோமகன்....

இன்று இங்கன நடப்பவற்றை  உங்களின்  நடையில் சொல்லியுள்ளீர்கள்  நன்றாக உள்ளது புத்தன் !!

 

நன்றிகள் சுவி

வெளிநாட்டிலை வாழுற எங்கடை சனத்தின்ரை நாட்டியங்கள் சொல்லி வேலையில்லை புத்தன்...... :(

 

இன்னொரு சமூக அவலத்தை அழகாக எழுத்தில் சொல்லியுள்ளீர்கள்.

 

நன்றிகள் கு.சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... கதைகள் வாசிப்பது, குறைவு.

புத்தனின்.. கதைகளிளில், ஏதாவது விசேசமிருக்கும்.

நல்ல, ஒரு கதையை எம்முடன், பகிர்ந்த புத்தனுக்கு... சாவில்லை.

நூறு வயசு. :wub:

 

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

புத்தனின் அனுபவக்கதையை வாசித்தேன் வளமைபோல சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை. எண்டாலும் அம்மம்மா கடைசி சந்தேகம் கொஞ்சம் கூடித்தான் போச்சு. 
 
மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனாலும் நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியவற்றையெல்லாம் மடியில் கட்டி வைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டும் முணுமுணப்பதை அம்மம்மா அழகாக வெளிப்படுத்தியுள்ளா.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.