Jump to content

வோர்மல்..(Formal)


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவருவதை கண்ட சுதா "சுருதி! கிரான்ட்மா இஸ் தெயர்" என்று கத்தியபடியே ஒடிப்போனாள் .மகளை கண்ட தாயும் உடனடியாக சக்கரநாற்காலியை விட்டெழுந்து ஓடிப்போய் கட்டியணைத்துகொண்டாள் .இருவரும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.இந்த காட்சியை கண்ட விமானபணிப்பெண் திகைத்து ஒரு விநாடி அதிர்ந்து போனாள்.சக்கர நாற்காலி எதற்கு பாவிப்பது என்பதின் வரைவிலக்கணத்தை அறிய வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டாள்.

அதே மனநிலையில்தான் சுருதியும் இருந்தாள்.

"அம்மா இவள்தான் மூத்தவள்"

"அப்படியே உன்னை மாதிரி இருக்கிறாள் ,இரண்டு வயசில் கண்டதற்கு பிறகு இப்பதானே பார்க்கிறேன் என்ட மனுசனின்ட உசரம் அவளுக்கு வந்திருக்கு,அவரும் போய் ஐந்து வருசமாகி விட்டது.,மனுசன் இருந்திருந்தால் இப்ப என்னோட வந்திருக்கும் என்ன செய்யிறது காலம் செய்த கோலம்"என்று கூறியபடியே கண்களை துடைத்துகொண்டாள்.

"Hi Grandmamaa how are you........"

" I am good...தமிழ் தெரியாதோ"

"அவளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கமாட்டாள்"

"அப்ப என்னை மாதிரித்தான் என்று சொல்லு,எனக்கு இங்கிளிஸ் விளங்கும் பேசவராது but I can manage"..

"வீல் செயர் ஒன்றை எடுக்கவோ அம்மா?"

"என்ன பகிடியே விடுகிறாய்,நான் நல்லாய் நடப்பன்,வெளிநாட்டுப்பிள்ளைகள் மாதிரி ஐந்து வயசிலயே கண்ணாடி போட்டு வாழ்கிற கோஸ்டிகளே,நான் வாசிக்கமட்டும் கண்ணாடி போடுகிறன் அதுவும் 50 வயசுக்கு பிறகுதான்..."

"காரை தூர பார்க் பண்ணியிருக்கிறன் அதுதான் கேட்டனான்.அம்மா"

"பிள்ளையாரை பார்க்க இரண்டுகட்டை நடந்து போறனான் உது என்ன பெரிய தூரம்" மூவரும் கதைத்த படியே கார்தரிப்பிடத்தை அடைந்தனர்.

காரினுள் ஏறியவுடன் சுருதி அம்மாவின் பெல்டை போட்டுவிட்டு அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

"நீயும் கார் ஒடுவியே சுருதி"

"ஜெஸ் கிரான்ட்மா"

"அது என்ன கிரான்ட்மா, அம்மம்மா என்று சொல்லு"

"ஒகே அம்மம்மா"

"எங்க அப்பா ?வேலைக்கு போயிட்டாரே"

"ஒம் அம்மம்மா ஒவ் சோர்(off shore) வர வண் வீக் ஆகும்"

"நான் திரும்பி ஊருக்கு போகமுதல் உனக்கு தமிழ் படிப்பிச்சு போட்டுதான் போவன் யு வெயிட் அன் சி" சுருதிக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மம்மாவின் இங்கிலிஸ் உச்சரிப்பை கேட்டு.

"அம்மா பிளெனில் வந்தது களைப்பா இருக்குதோ"

"எனக்கு என்ன களைப்பு,சின்னவன் விமான பணிப்பெண்ணிடம் எல்லாத்தையும் கொடுத்து கதைத்து விட்டவன்,அவள் வடிவாக என்னை கூட்டிக்கொண்டு வந்தவள்.....மற்றது நான் எல்லோரும் வார எக்கனமிக்ஸ் கிளாசில வரவில்லை..பிசினஸ் கிளாசில வந்தனான்...."

"நித்திரை வந்தால் உதுல சாய்ந்து படுங்கோ'சுருதி அம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிடுங்கோ"

சுருதி அம்மம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிட்டாள். அம்மம்மா பயணகளைப்பில் நித்திரையாகப் போய்விட்டார்.கார் வீட்டினுள் சென்று நிற்பாட்டியவுடன் அம்மம்மா விழித்து கொண்டார்.திடுக்கெட்டு எழுந்த அம்மம்மா

"அடி என்னடி கார் வீட்டுக்குள்ள நிற்குது"

சுதாவின் வீட்டினுள் காரை நிறுத்தினால்நேராக வரவேற்பறைக்கு செல்லலாம்.காருக்கு ஏற்ற வீடு ...வீட்டுக்கு ஏற்ற கார்.தாயாரைஉள்ளே அழைத்துச் சென்றாள். தமிழ்சினிமாவிலும்,நாடகங்களிலும் பார்த்த வீட்டை நேரில் கண்ட அம்மம்மாவுக்கு தான் நிஜவுலகில் இருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

கீழ்தரையில் குளியலறை,மலசலகூடத்துடன்கூடிய பெரிய அறை ,அழகான உயர்தர மெத்தை விரிப்புடன் கூடிய கட்டில் ,கட்டிலுக்கு அருகே இரு விலையுயர்ந்த மேசைகளின் மேல் டெபிள் லாம்ப் இருந்தன.உடுப்புக்களை வைப்பதற்கு என ஒரு அறை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நட்சத்திர கொட்டல் அறை போல காட்சி அளித்தது.

"அம்மா உள்ளே வாங்கோ இது தான் உங்கன்ட அறை, குளிச்சு போட்டு வாங்கோ சாப்பிடுவோம்"எனகூறிய படியே குளியலறை கதைவை திறந்து சுடுதண்ணி பைப்,குளிர்தண்ணீர்பைப் போன்றவற்றை விளங்கப்படுத்தி தாயருக்கு குளிக்க உதவிகள் செய்தாள்.குளித்து முடித்து வெளியே வந்தாள் அம்மம்மா .

"அம்மா சாப்பிட்ட பிறகு வீட்டை பார்க்க போறியளோ,இப்ப பார்க்க போறியளோ"

" எனக்கு இப்ப பசிக்கவில்லை ,வா உன்ட வீட்டை பார்ப்போம் முதலில"

" இது வோர்மல் லிவ்விங் ,இது வோர்மல் டைனிங்"இரண்டிலும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்காலிகளும் ,சோப செட்களும் போடப்பட்டிருந்தது.

"இது குசினி "

"என்னடி அப்படியே எல்லாம் புதுசா கிடக்கு நீ சமைக்கிற இல்லையோ"

"பின்னுக்கு ஸ்பைஸ்கிச்சின் என்று ஒன்று இருக்கு அதிலதான் சமைக்கிறனாங்கள்,இதுக்குள் சமைச்ச வீடெல்லாம் மணக்கும் "

"இது என்னடி ஊர் கோவிலில் சர்பத் கடையில கலர் கலராக அடுக்கி வைச்சிருக்கிற மாதிரி நீயும் வாங்கி அடுக்கி வைச்சிருக்கிறாய் எனக்கும் உதுல கொஞ்சத்தை தாவேன் குடிப்பம் "

"ஐயோ அம்மா அது சர்பத் இல்லை அது இவரின்ட மினிபார்"

"அது என்ன மினிபார்"

"அ....து அம்மா சாராயப்போத்தல்கள் இவர் பார்ட்டி வைச்சா சினேகிதர்மாருடன் சேர்ந்து குடிக்கிறவர்"

"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,அதுசரி உன்ட மனுசன் கலியாணம் கட்டும்பொழுது தண்ணி கிண்னி பாவிக்கிறதில்லை என்று சொல்லிச்சினம் "

""உன்ட மனுசனின்ட கொப்பர்ரும் அந்தகாலத்தில நல்ல தண்ணிச்சாமி அதுதான் மகனும் தண்ணிச்சாமி போல கிடக்குது,நானும் நாலு பெடியள் பெத்து வளர்ந்தனான் ஒருத்தனும் தண்ணி பாவிக்கிறதில்லை"

"அம்மா அது எல்லாம் உங்களோட இருக்குமட்டும்தான் இப்ப பெரியண்ணனின் மெல்பெர்ன் வீட்டில் இதை விட பெரிய பார் இருக்கு,சின்னண்ணன்வீட்டையும் இப்படிதான்,,அப்பா குடிக்கிறதில்லை ஆனால் அண்ணன்மார் குடிக்கினம்,அதற்காக பரம்பரை குடிகாரர் என்றே சொல்லுறது"

"தம்பியவையள் குடிக்கிறவங்களோ,அதுகென்ன குடிச்சா ? வெளிநாட்டில் இது எல்லாம் சகயம்"

"அதென்ன உங்களுடைய பிள்ளைகள் குடிச்சா சகயம்,மற்றவங்கள் குடிச்சா பரம்பரை குடிகாரன் என்கிறது..நல்ல நியாயம்"

"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"

"உலக வழக்கில்லை,உங்கன்ட ஊர் வழக்கு"

"என்ன மனுசனைபற்றி சொன்னவுடன் கோபம் வருகுதுபோலகிடக்கு,சரி,சரி வா மிச்ச வீட்டையும் பார்ப்போம்"

சுதா தனது வீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்பைஸ் கிச்சின்,மற்றும் ரம்பஸ் , BBQபோடும் இடம் ,தனது வீட்டுதோட்டம் எல்லாம் சுற்றிக்காட்டினாள்.

"எல்லாம் இரண்டு இரண்டா வைச்சிறுக்கிறீயள்,சாப்பாட்டு மேசை,குசினி,டிவி எல்லாம் இரண்டு"

"வாங்கோ அம்மா மேல போய் பார்ப்போம்""இது மாஸ்டர் பெட்ரூம் இது எங்கன்ட அறை உள்ளே வாங்கோ,"

ஸ்பாவுடன் கூடிய குளியலறை,பில்ட் இன் வோர்ரோப் ,பெரிய டிவி எல்லாம் அந்த அறையிலிருந்தது.

"உன்ட பாத்ரூமிலயும்,உடுப்பு வைக்கிற இடத்திலயும் இரண்டு கட்டில் போடலாம் போலகிடக்கு""இது கோம் தியட்டர் அம்மா"

"அதென்னடி கோம் தியட்டர்"இவர்கள் அங்கே இருக்கும்பொழுது சுருதியும் உள்ளே வந்தாள்.

"கிரான்ட்மா ...அம்மம்மா தியட்டருக்கு போய் படம் பார்க்க தேவையில்லை ,வீட்ட இருந்தே படம் பார்க்க முடியும்,இவினிங் ஒரு படம் போட்டு பார்ப்போம்"

வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்பு மதிய உணவை சுதா தயாருக்கு பரிமாறினாள். அம்மம்மா சாப்பிட்டவுடன் ஒரு சிறிய தூக்கம் போடுவது வழக்கம்.நித்திரையால் எழுந்து சுதா கொடுத்த தேனீரை பருகிகொண்டிருக்கும் பொழுது,வீட்டு அழைப்புமணி அடித்தது.கம்மிங்க் என்று குரல் கொடுத்தபடியே சுருதி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.

"காய் சுணில்"

"காய் சுருதி"

இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.இதை பார்த்த அம்மம்மா. இங்கு என்ன நடக்குது என்ற ரீதியில் சுதாவை திரும்பி பார்த்தார். அம்மா அவன் சுணில் முன்வீட்ட இருக்கிறவன் .சிங்களவர்கள், நல்ல சனம் இப்ப உங்களை பார்க்கத்தான் வந்திருக்கிறான்.

"சுணில் சீ இஸ் மை மதர்"

"கலோ அன்ரி"

"கலோ"

சுணிலும் சுருதியும் ஆங்கிலத்தில் எதோ பேசி சிரித்துக்கொண்டிரிந்தார்கள்.இவற்றை பார்த்த அம்மம்மாவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது. சுணில் விடை பெற்று சென்ற பின்பு

"நீ சிங்களவனோட நல்ல கொண்டாட்டம் போலகிடக்கு,உவங்களால் தானே எங்கன்ட சனம் அநியாயமாக செத்தது"

"அம்மா, சும்மா அரசியல் கதைக்காதையுங்கோ"

"இதில என்னடி அரசியல் கிடக்குது, அவங்களின்ட ஆட்கள்தானே இவ்வளவு சனத்தையும் கொண்டவங்க"

"ஏன் என்கன்ட ஆட்களும் அவங்களை கொண்டவங்கள் தானே"

"ஏய் நீ சும்மா விதண்டா வாதம் பண்ணாதே பக்தியும்,படிப்பும் என்று இருந்த சனத்தை துவக்கு தூக்க வைத்தவன் அவன் தான் இதில எனக்கு மாற்றுகருத்து இல்லை "

"சரி சரி உதுகளை பற்றி நாங்கள் கதைச்சு வீணாக சண்டை பிடிக்காமல் வாங்கோவன் வெளியால நடக்கப் போவம்"

"இரு சீலையை சுற்றிகொண்டு வாரன்"

"உப்படியே வாங்கோவன் "

"சீ சீ ஒரு நிமிசத்தில் சீலை சுற்றிகொண்டு ஒடிவாரன்" இருவரும் வெளியால் நடக்கதொடங்கினார்கள்.வீதியில் காண்பவர்களுக்கு தனது தாயாரை அறிமுகசெய்து வைத்து கொண்டிருந்தாள் சுதா.

"அது சரி இவள் சுருதி குமர் பிள்ளை பெடியளை கண்டவுடன் இப்படி கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கிறது சரியில்லை,நான் இப்பவும் வேறு மனுசங்கள் பக்கத்தில் இருந்தால் விலத்தித்தான் இருக்கிறனான்.ஒரு கூச்சம் இருக்கு"

"அம்மா இங்க உதெல்லாம் சகயம் ,நானே வேலை செய்யிற இடங்களில் சில நேரம் முத்தம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு,அவள் இங்க பிறந்து வளர்ந்தவள், இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியும்"

"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."

"அம்மா அது விலையுயர்ந்த சட்டை பாடசாலை வோர்மலுக்கு வாங்கினது,அப்படியான உடுப்புதான் போடவேணும் எல்லா பெட்டைகளும் இப்படித்தான் போடுங்கள் அப்படி போட்டாத்தான் மதிப்பு".

"எதுக்கு எடுத்தாலும் உங்களுக்கு ஒரு கண்டறியாத வோர்மல் ...."

ஒரு கிழமை சென்றும் சுதாவின் கணவனை வீட்டில் காணாதது அம்மம்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. பக்கத்துவீட்டு வெள்ளை இனத்தவன் சுதா வீட்டு குப்பை தொட்டியை தள்ளி வைத்துவிட்டு செல்வதை கண்டுவிட்டார்.அம்மம்மாவுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.உந்த வெளிநாட்டில புருசன்மாரும் வொர்மல்,இன்வொர்மல் என்று இருக்குமோ!!!!!!!!!!!!!!!! என்ட கடவுளே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு 'வித்தியாசமான' கிறுக்கலுடன் புத்தனைக் காண்பது மகிழ்ச்சி!

 

இந்த முறை, தமிழ், சிங்கள இனப்பிரச்சனையையும் தொட்டுச் செல்லும் விதம் அழகு! மேலோட்டமாகப் பார்க்கும்போது, நகைச்சுவையாகத் தோன்றினாலும், பல துயரம் கலந்த சோகங்களும் அந்த அம்மாவின் ஆதங்கங்களில் புதைந்துள்ளன!

 

அடையாளம் இழந்து வரும், தமிழர்கள் ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதுடன், முந்திய தலைமுறைக்கும், அதனைத் திணிக்க முயல்வதையும் கதை சொல்லிச் செல்கின்றது!

 

கதையின் இறுதியில் இவ்வளவு காலமும் எங்கள் கலாச்சாரங்கள் என்று நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த அனைத்தும்,

ஒவ்வொன்றாக உடைந்து விழுவதைக் கதை அருமையாகச் சொல்லிச் செல்கின்றது! கதை சொல்லப்பட்ட விதம், புத்தனுக்கே தனித்துவமானது!

 

நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும் புத்தன்!

Link to comment
Share on other sites

போமல் என்கிறீங்கள், சட்டை என்கிறீங்கள், சிங்கள் என்கிறீங்கள். எதோ சொல்ல வாறீங்கள் எண்டு மட்டும் தெரியுது. ஆனால் இந்த மரமண்டைக்கு தான் ஒண்டும் விளங்குதில்லை..

Link to comment
Share on other sites

அம்மம்மாவின் சடையல் அந்தமாதிரி இருந்தது.. :wub: கடைசி வரிகள் இன்னும் முத்தாய்ப்பு..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினை கூத்துக்கள்.. எங்கட ஆக்களிட்ட. ஆனால் இருக்க சொந்தமா ஒரு நாடு இல்லை..! எல்லாம் அடுத்தவன்ர..!  :lol:  :D


மீண்டும் ஒரு நல்ல அம்சமான குட்டிக்கதை.. புத்தன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

வோர்மல் மனிசி மாரும் இருந்தால் எவ்வளவு நல்லம் :icon_mrgreen:

 

நல்ல கதை புத்து....

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு கலக்கல் பதிவுடன் புத்தன். 

 

 

"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,

 

:D  :D

 

 

"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."

 

கிரான்மா தான் வளரவேணும் என்று சொல்லுவினம் போல. :)

Link to comment
Share on other sites

"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"  ///

 

இது எண்டைக்குமே மாறாது . கதைக்குப் பாராட்டுக்கள் புத்தா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இங்கன நடப்பவற்றை  உங்களின்  நடையில் சொல்லியுள்ளீர்கள்  நன்றாக உள்ளது புத்தன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலை வாழுற எங்கடை சனத்தின்ரை நாட்டியங்கள் சொல்லி வேலையில்லை புத்தன்...... :(

 

இன்னொரு சமூக அவலத்தை அழகாக எழுத்தில் சொல்லியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... கதைகள் வாசிப்பது, குறைவு.
புத்தனின்.. கதைகளிளில், ஏதாவது விசேசமிருக்கும்.
நல்ல, ஒரு கதையை எம்முடன், பகிர்ந்த புத்தனுக்கு... சாவில்லை.
நூறு வயசு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு 'வித்தியாசமான' கிறுக்கலுடன் புத்தனைக் காண்பது மகிழ்ச்சி!

 

இந்த முறை, தமிழ், சிங்கள இனப்பிரச்சனையையும் தொட்டுச் செல்லும் விதம் அழகு! மேலோட்டமாகப் பார்க்கும்போது, நகைச்சுவையாகத் தோன்றினாலும், பல துயரம் கலந்த சோகங்களும் அந்த அம்மாவின் ஆதங்கங்களில் புதைந்துள்ளன!

 

அடையாளம் இழந்து வரும், தமிழர்கள் ஒரு புதிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதுடன், முந்திய தலைமுறைக்கும், அதனைத் திணிக்க முயல்வதையும் கதை சொல்லிச் செல்கின்றது!

 

கதையின் இறுதியில் இவ்வளவு காலமும் எங்கள் கலாச்சாரங்கள் என்று நாம் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த அனைத்தும்,

ஒவ்வொன்றாக உடைந்து விழுவதைக் கதை அருமையாகச் சொல்லிச் செல்கின்றது! கதை சொல்லப்பட்ட விதம், புத்தனுக்கே தனித்துவமானது!

 

நன்றிகளும், புத்தாண்டு வாழ்த்துக்களும் புத்தன்!

 

எனது கிறுக்களுக்கு முகவுரை எழுதியமைக்கு நன்றிகள் புங்கையூரன்....புது வருட வாழ்த்துக்கள்

போமல் என்கிறீங்கள், சட்டை என்கிறீங்கள், சிங்கள் என்கிறீங்கள். எதோ சொல்ல வாறீங்கள் எண்டு மட்டும் தெரியுது. ஆனால் இந்த மரமண்டைக்கு தான் ஒண்டும் விளங்குதில்லை..

 

பஜனை,உபதேசம் என்று போனால் மண்டை மரமண்டையாவதை அந்த கடவுளாலும் தடுக்கமுடியாது.. :D

போமல் என்கிறீங்கள், சட்டை என்கிறீங்கள், சிங்கள் என்கிறீங்கள். எதோ சொல்ல வாறீங்கள் எண்டு மட்டும் தெரியுது. ஆனால் இந்த மரமண்டைக்கு தான் ஒண்டும் விளங்குதில்லை..

 

பஜனை,உபதேசம் என்று போனால் மண்டை மரமண்டையாவதை அந்த கடவுளாலும் தடுக்கமுடியாது.. :D

வழக்கம் போல சூப்பர் புத்தன்.

 

நன்றிகள் அர்ஜூன்.....புதுவருட வாழ்த்துக்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் கதையைப் படிக்கும் ஃபோர்மல்காரர்கள் இருட்டடி கொடுக்க வெளிக்கிடப்போகின்றார்கள்!

என்னதான் ஃபோர்மலாக இருந்தாலும் சோற்றையும் மிளகாய்த்தூளையும் விடமுடியாமல் ஸ்பைஸ்கிச்சின் கட்டவேண்டிய நிலைமைதான் தமிழர்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மாவின் சடையல் அந்தமாதிரி இருந்தது.. :wub: கடைசி வரிகள் இன்னும் முத்தாய்ப்பு..! :lol:

 

நன்றிகள் இசை .....புதுவருட வாழ்த்துக்கள்

புத்தனின் கதையைப் படிக்கும் ஃபோர்மல்காரர்கள் இருட்டடி கொடுக்க வெளிக்கிடப்போகின்றார்கள்!

என்னதான் ஃபோர்மலாக இருந்தாலும் சோற்றையும் மிளகாய்த்தூளையும் விடமுடியாமல் ஸ்பைஸ்கிச்சின் கட்டவேண்டிய நிலைமைதான் தமிழர்களுக்கு!

 

நன்றிகள் கிருபன்... முகமூடி போட்டுக்கொண்டுதான் திரிகின்றேன்..... :D புதுவருட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோர்மலா அல்லது போர்மலா :unsure: தன்ட அனுபவங்களை கதையாக எழுதும் புத்தனுக்கு வாழ்த்துக்கள் :)  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோர்மலா அல்லது போர்மலா :unsure: தன்ட அனுபவங்களை கதையாக எழுதும் புத்தனுக்கு வாழ்த்துக்கள் :)  :)

 

நன்றிகள் ரதி அவர்களே...எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துகொள்ளுங்கோ :D..மீண்டும் எனது கிறுக்கலுக்கு கருத்து பதிந்தமைக்கு நன்றிகள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினை கூத்துக்கள்.. எங்கட ஆக்களிட்ட. ஆனால் இருக்க சொந்தமா ஒரு நாடு இல்லை..! எல்லாம் அடுத்தவன்ர..!  :lol:  :D

மீண்டும் ஒரு நல்ல அம்சமான குட்டிக்கதை.. புத்தன் அண்ணா. :)

 

நன்றிகள் நெடுக்ஸ்.....எம்மவர் கூத்துக்கள் தொடர வேண்டும் நானும் கிறுக்க வேண்டும்..:D

வோர்மல் மனிசி மாரும் இருந்தால் எவ்வளவு நல்லம் :icon_mrgreen:

 

நல்ல கதை புத்து....

 

நன்றிகள் நிழலி.....மனிசிமார் வோர்மலாக வந்தால்.. நினைக்கும் பொழுதே புல்லரிக்குது

மீண்டும் ஒரு கலக்கல் பதிவுடன் புத்தன். 

 

 

:D  :D

 

 

கிரான்மா தான் வளரவேணும் என்று சொல்லுவினம் போல. :)

 

நன்றிகள் நுனா...சொன்னாலும் சொல்லுவினம்...

"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"  ///

 

இது எண்டைக்குமே மாறாது . கதைக்குப் பாராட்டுக்கள் புத்தா .

 

நன்றிகள் கோமகன்....

இன்று இங்கன நடப்பவற்றை  உங்களின்  நடையில் சொல்லியுள்ளீர்கள்  நன்றாக உள்ளது புத்தன் !!

 

நன்றிகள் சுவி

வெளிநாட்டிலை வாழுற எங்கடை சனத்தின்ரை நாட்டியங்கள் சொல்லி வேலையில்லை புத்தன்...... :(

 

இன்னொரு சமூக அவலத்தை அழகாக எழுத்தில் சொல்லியுள்ளீர்கள்.

 

நன்றிகள் கு.சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்... கதைகள் வாசிப்பது, குறைவு.

புத்தனின்.. கதைகளிளில், ஏதாவது விசேசமிருக்கும்.

நல்ல, ஒரு கதையை எம்முடன், பகிர்ந்த புத்தனுக்கு... சாவில்லை.

நூறு வயசு. :wub:

 

நன்றிகள் தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் இருக்கிற எங்கட சனங்களைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறியள் புத்தன்.

Link to comment
Share on other sites

புத்தனின் அனுபவக்கதையை வாசித்தேன் வளமைபோல சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதை. எண்டாலும் அம்மம்மா கடைசி சந்தேகம் கொஞ்சம் கூடித்தான் போச்சு. 
 
மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனாலும் நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியவற்றையெல்லாம் மடியில் கட்டி வைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டும் முணுமுணப்பதை அம்மம்மா அழகாக வெளிப்படுத்தியுள்ளா.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.