Jump to content

Canadian Eezham Tamil MP Rathika Sitsabaiesan under house arrest in Jaffna


Recommended Posts

திரியின் தலைப்பு ஏதோ, விவாதம் போவது  வேறு திசையில். அவரவர் தனக்கு பிடிக்காதவர்களை திட்டி தீர்ப்பதற்கு பெயர் கருத்து களமா?  ராதிகா உடுத்தும் உடையை தெரிவு செய்யும் உரிமையை கூட அவரிடம் இருந்து பறித்து விமர்சனம் ஒரு பக்கம். கனேடிய சட்ட பாதுகாப்பு இருக்கும் ராதிகாவிற்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தால் சிறிலங்கா அரசு சிக்கலில் மாட்டிவிடுமோ என்ற கவலை சிலருக்கு. இவ்வளவு சம்பளம் வாங்காத வக்கீல்கள் உள்ள சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு தமிழின படுகொலையை தயங்காமல் செய்யலாம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply

thumbsup-300x300.jpgகாலத்திற்கு காலம் மாறும் உலகம். அதற்கேற்ர மாற்ரம்
வருவது வழக்கம். தமிழரிடம் மட்டும் அது இல்லை.

Link to comment
Share on other sites

thumbsup-300x300.jpgகாலத்திற்கு காலம் மாறும் உலகம். அதற்கேற்ர மாற்ரம்

வருவது வழக்கம். தமிழரிடம் மட்டும் அது இல்லை.

யாராவது சிங்களவர் ஒஸ்கார் வென்றிருக்கிறாரா?

யாராவது சிங்களவர் வெளிநாடுகளில் அமைச்சரா இருக்கிறாரா?

நாங்கள் எங்கேயோ போயிட்டம். நீங்கள் இன்னும் பழைய டியூனை போட்டு சந்தோச படுங்கோ.

Link to comment
Share on other sites

1979-1990 வரை வடக்கத்தையான்ரை முதுகுக்குபின்னால்
1988-1992 வரை சிங்களம் எங்கள் முதுகிலும் நாங்கள் அவர்கள் முதுகிலும்
2002-2014 வெள்ளை முதுகில் மனிதஉரிமையை சுமந்து திரிகிறம் இதில் ஆருக்கு ஆப்படிக்க அதையும் சிங்கள இராணுவம் தான் கொடுத்த சாட்சி----விளங்காத...

Link to comment
Share on other sites

ஆனை இறந்தாலும் ஆயிரம் பொன். தமிழனை சித்திரவதை செய்த்து கொலை செய்தாலும் நல்ல பணம்.

 

நீங்களும் video வைத்திருந்தால் உங்களிடமும் வாங்குவார்கள். ஏதாவது இருக்கா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு யாழில் செய்தி தலைப்பினைத் தவிர வேறு கருத்துக்கள் எழுதப்பட்டால் நீக்கப்பட்டுவந்தன. ஆனால் இப்பொழுது குறிப்பாக அண்மைக்காலங்களில் தேவையற்ற விவாதங்கள் சிலரினால் வேண்டுமென்றே எழுதப்பட்டுவருகிறது. முன்பு தமிழகத்தில் சிறிலங்கா தூதுவராக இருந்த அம்சாவினால் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பல செயற்பாடுகளை செய்துவந்தார். அதே போல புலம்பெயர்ந்த நாடுகளிலும் சிங்களம் தற்பொழுது ஈழத்தமிழர்களுக்கு எதிராக பல செயற்பாடுகளை செய்துவருகிறது. இங்கு யாழில் நான் பெரியவன் , நீ பெரியவன் என்று போட்டி போடும் சிலரினால் தெரிந்தோ தெரியாமலோ எழுதும் கருத்துக்கள் துணைபோகின்றன. சிங்கள அரசு எதைவிரும்பியதோ அதனை சில கருத்தாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

தேசிய சொத்துக்களை வைத்து தன் சுயநல அரசியலில் ஈடுபடும் நபர்களிற்கு இந்த கருத்துக்கள் ஆபத்தைவிளைவிக்கும். :(  அதை நேசிப்பவர்கள் தமிழ் சார்ந் சிந்திப்பவர்கள் மே 19ற்கு பிறகு விமர்சனங்களால் தான் தெளிவடையவேண்டும் :D . 

 

.

 

Link to comment
Share on other sites

தேசிய சொத்துக்களை வைத்து தன் சுயநல அரசியலில் ஈடுபடும் நபர்களிற்கு இந்த கருத்துக்கள் ஆபத்தைவிளைவிக்கும். :( அதை நேசிப்பவர்கள் தமிழ் சார்ந் சிந்திப்பவர்கள் மே 19ற்கு பிறகு விமர்சனங்களால் தான் தெளிவடையவேண்டும் :D .

.

தேசிய சொத்து என்றால் என்ன? அதன் பெறுமதி எவ்வளவு?

Link to comment
Share on other sites

தேசிய சொத்து என்றால் என்ன? அதன் பெறுமதி எவ்வளவு?

தேசிய சொத்துக்கள் என்றால் இலங்கை நாட்டின் மூவின மக்களாலும் செலுத்தம் படும் வரி வருமானங்கள். அரச திணைக்களங்கள், கூட்டுஸதாபனங்களின் இலாபங்கள், மக்களிடம் அறவிடப்படும் தண்டனை, அபராதம் ஆகியன அடங்கும் இவை அனைத்தும் இலங்கை மக்களின் பணம் ஆகும். தமிழ் மக்கள் உட்பட இலங்கையின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழும

மக்களுக்கு இத்தேசிய சொத்துகளில் உரித்து உண்டு. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அனைத்து அரசாங்கங்களில் அங்கம் வகித்த, தற்போது வகித்து கொண்டிருக்கும் பல தனி நபர்கள் இப்பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து தற்போதும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். பெப்ரவரி 4 1948 இன் பின்னர் கடந்த 65 ஆண்டுகளாக இந்த கொள்ளையடிப்பு தொடர்கிறது. இன்னமும் அது நிறுத்தப்படுவதற்கான அறிகுறியும் இல்லை. இப்படியாக இவர்கள் கொள்ளையடித்த தேசிய சொத்துகளின் பெறுமதி கணக்கிட முடியாத அளவிற்கு அதிகமானது. அதையே நண்பர் குறிப்ட்டார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தேசிய சொத்துக்கள் என்றால் இலங்கை நாட்டின் மூவின மக்களாலும் செலுத்தம் படும் வரி வருமானங்கள். அரச திணைக்களங்கள், கூட்டுஸதாபனங்களின் இலாபங்கள், மக்களிடம் அறவிடப்படும் தண்டனை, அபராதம் ஆகியன அடங்கும் இவை அனைத்தும் இலங்கை மக்களின் பணம் ஆகும். தமிழ் மக்கள் உட்பட இலங்கையின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழும

மக்களுக்கு இத்தேசிய சொத்துகளில் உரித்து உண்டு. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அனைத்து அரசாங்கங்களில் அங்கம் வகித்த, தற்போது வகித்து கொண்டிருக்கும் பல தனி நபர்கள் இப்பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து தற்போதும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். பெப்ரவரி 4 1948 இன் பின்னர் கடந்த 65 ஆண்டுகளாக இந்த கொள்ளையடிப்பு தொடர்கிறது. இன்னமும் அது நிறுத்தப்படுவதற்கான அறிகுறியும் இல்லை. இப்படியாக இவர்கள் கொள்ளையடித்த தேசிய சொத்துகளின் பெறுமதி கணக்கிட முடியாத அளவிற்கு அதிகமானது. அதையே நண்பர் குறிப்ட்டார் என நினைக்கிறேன்.

 

கொள்ளை அடிப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. இலங்கை மக்களின் பணத்தில் இலவச கல்வியும், மருத்துவ வசதிகளும் பெற்று அந்த மக்களின் கடன் சுமையில் உணவும் ஊட்ட சத்தும் பெற்று, பின்னர் வேறு நாடுகளுக்கு வெளியேறி, தாம் பெற்ற முதலீட்டுக்கு எந்த பிரதிபலனும் கொடுக்காத நாமனைவரும் இந்த கொள்ளை அடிப்பவர்களுக்குள் அடங்குகிறோம்.

 

நாம் எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளையும் வேற்று இன தேசியவாதிகளையும் குறைகூறிவிட்டு இவர்களால் தான் நாம் எதுவும் செய்ய முடியவில்லை என்று சாட்டுகள் சொல்லலாம். ஆனால் அவை நம்மை இந்த "கொள்ளை அடிப்பவர்கள்" என்ற நிலையில் இருந்து மாற்றப்போவதில்லை.

 

Link to comment
Share on other sites

தேசிய சொத்துக்கள் என்றால் இலங்கை நாட்டின் மூவின மக்களாலும் செலுத்தம் படும் வரி வருமானங்கள். அரச திணைக்களங்கள், கூட்டுஸதாபனங்களின் இலாபங்கள், மக்களிடம் அறவிடப்படும் தண்டனை, அபராதம் ஆகியன அடங்கும் இவை அனைத்தும் இலங்கை மக்களின் பணம் ஆகும். தமிழ் மக்கள் உட்பட இலங்கையின் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழும

மக்களுக்கு இத்தேசிய சொத்துகளில் உரித்து உண்டு. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அனைத்து அரசாங்கங்களில் அங்கம் வகித்த, தற்போது வகித்து கொண்டிருக்கும் பல தனி நபர்கள் இப்பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து தற்போதும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். பெப்ரவரி 4 1948 இன் பின்னர் கடந்த 65 ஆண்டுகளாக இந்த கொள்ளையடிப்பு தொடர்கிறது. இன்னமும் அது நிறுத்தப்படுவதற்கான அறிகுறியும் இல்லை. இப்படியாக இவர்கள் கொள்ளையடித்த தேசிய சொத்துகளின் பெறுமதி கணக்கிட முடியாத அளவிற்கு அதிகமானது. அதையே நண்பர் குறிப்ட்டார் என நினைக்கிறேன்

தேசிய சொத்து என்றால் என்ன?

தெளிவான விளக்கம்

Link to comment
Share on other sites

தமிழ்ம்க்கள் தொடர்ந்து தமிழர்களால் ஏமாற்றப்படுகிறார்களா? செய்யவேண்டிய வேலைகளை செய்யாமல் தேர்தல் ஆதாயம் தேட யாழ் வந்த ராதிகா!! இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் எம் உறவுகள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், புலம் பெயர் சமூகமாக வீதிகளில் லட்சக் கணக்கில் நின்று போராடிய எம்மை புறக்கணித்து பாராமுகம் காட்டி கைவிட்டிருந்தபோது, எம்மால் உணரப்பட்ட எமக்கான அரசியல் அதிகாரத்தின் தேவை கருதி கனடிய தமிழ்ச சமூகத்தின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட தமிழ்ப பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சர்வதேச அரங்கினில் செய்யப்படவேண்டிய, செய்யப்படக் கூடிய அரசியல் வேலைகள் எதனையும் செய்யாமல் மற்றும் முன்னெடுக்கப்பட்ட வேலைகளை முடக்கியும் செயற்பட்டவர் இன்று எதிர்வரும் தேர்தல் ஆதாயத்துக்காக யாழ் வந்துள்ளமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்றுஎன புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் அவலங்களின்போது சர்வதேசத்தில் உள்ள பல நாடுகளில் தொடர்ச்சியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக லண்டன் மற்றும் கனடாவில் நடாத்தப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் அந்நாடுகளில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டங்களாக நடந்தேறின. இவ்வளவு பாரிய போராட்டங்களில் - அதாவது கனடா ரொரன்ரோவை எடுத்துக் கொண்டால் கனடாவின் மிக முக்கிய நகரமான ரொரன்ரோவில் நாட்களாக, மாதங்களாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பங்குபெற்றலுடன் நடைபெற்ற தொடர் ஆர்ப்பட்டங்களின் உச்சக்கட்டமாக ரொரன்ரோ பெருந்தெருக்களை முற்றுகையிட்டு நடாத்திய போராட்டங்கள் கனடாவின் பொருளாதார நகரமான ரொரன்ரோவை ஸ்தம்பிக்க வைத்தது. அவ்வளவுக்கு எமது கனடிய தமிழ்மக்களின் முழுப் பங்குபற்றலும் இருந்து வந்த போராட்டமானது. தமிழீழமக்களின் வரலாற்றில் என்றுமில்லாத இழப்பாக, பாரிய கொலைகளுடன் தமிழின அழிப்பு நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில் எம்மக்களின் முழுப்பலத்துடனும், பங்குபற்றலுடனும் நடைபெற்ற போராட்டங்களில் பங்குபற்றாத எவரும் ஒரு தமிழனாக இருக்க முடியாது. ஆனால், மிகத் துரதிஸ்டவசமாக அப்போராட்டங்களில் கூட பங்குபெற்றாத ராதிகா என்பவரை(இவரை வேட்பாளராக நிறுத்தும் வரை இவர் இந்த விடயத்தை சொல்லவில்லை. பின்னர் இவ்விடயம் வெளிவர, இவர் தான் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகப் போகமுடியாது போனதெனவும், தான் இனிவரும் காலங்களில் எமது மக்களின் துயரங்களையும், அவர்களின் விடுதலைக்காக உழைப்பேன் என்கின்ற உறுதி பெறப்பட்ட பின்னரே ஆதரவு வழங்கப்பட்டது) தமிழர்கள் தமது குரலாக கட்சி பேதங்கள், கருத்து பேதங்களுக்கப்பால் ஒரு சமூகமாக நின்று மிகக் கடுமையான உழைப்பினூடாக தெரிவாக்கி வரலாறு படைத்ததும் பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே ராதிகா வெறுமனே தனது சொந்த லாபங்களுக்காக அப்பதவியைப் பயன்படுத்த தொடங்கியதானது இன்னுமோர் துரோகத்தனத்தை வெளிக்காட்டி இருந்தது. எமக்கென ஒரு பிரதிநிதியை தெரிவாக்கும் காலம் வரைக்கும் எமக்காக உழைத்து நின்ற மாற்றின பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆதரவை நிறுத்தி, எமக்கான பிரதிநிதியென ராதிகாவின் மீது எம்மக்கள் முழு நம்பிக்கை வைத்து எடுத்த நிலைப்பாடுகளானது பின்னர் அதே மாற்றின பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மை பார்த்து கேலி செய்யுமளவிற்கு எம்மை தலைகுனிய வைத்துள்ளார் ராதிகா. பிற்காலங்களில் பல்வேறு தேவைகளுக்கு அதே மாற்றின பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தலைகுனிந்து போக வேண்டியிருந்தது. வெறுமனே தனது செல்வாக்கையும் பிரபலத்தையும் வளர்த்துக் கொள்வதற்காக களியாட்ட மேடைகளிலும், திறப்பு விழாக்கள், நூல் வெளியீடுகள், நடன அரங்கேற்றங்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் ராதிகா எமது மக்களின் போராட்ட விடயங்கள் மற்றும் கனடிய மைய நீரோட்ட அரசியல் தளத்தில் எமது மக்களின் விடிவிற்காக செய்யக்கூடிய, செய்யப்படவேண்டிய வேலைகள் எதனையும் செய்யாது, அவ்வாறான முன்னெடுப்புக்களை எம்முள் சிலர் செய்ய முற்பட்டு அதற்கான ஆதரவை அவரிடம் கோரும் பொழுது அவர் சொல்லும் விடயம் தான் தமிழர்களுக்கு மட்டும் எம்.பியல்ல மற்றைய சமூகங்களுக்கும்தான் ஆகவே தான் தமிழர்களுக்காக நெடுகப் பேசேலாதென்பதே. அவர் அப்படிக் குறிப்பிடுமளவிற்கு ஏதேனும் செய்தாராவென்றால் அவர் செய்தது நடன நிகழ்சிமேடைகளில் தோன்றியது மட்டுமே. அதுமட்டுமல்ல கேள்விகளை எழுப்பியவர்களுக்கு அவர் சொன்னதொரு இன்னொருவிடயமும் உண்டு. அதாவது தனக்குத் தெரியும் தனது பாராளுமன்றக் காலத்தின் கடைசி வருடத்தில் எப்படி மீண்டும் தமிழ்மக்களை தன்;பக்கம் கொண்டுவருவதென்பதென்று. அதாவது தனது அடுத்த தேர்தலுக்காக. இக்கட்டத்தில்தான் தற்போது அவர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். அதாவது 2015ல் தேர்தலில் - அதற்கான அறிவிப்புக்களும் ஆயத்தங்களும் நடைபெறும் நிலையில் - குறிப்பாக இவரின் தேர்தல் தொகுதியில் இன்னொரு தமிழர் இன்னொரு கட்சியில் அடுத்த தேர்தலில் தான் நிற்பதாக அறிவித்ததும் தான் தற்பொழுது ராதிகா 'தமிழ் அக்கறை" சார்ந்து யாழ்ப்பாணம் வந்ததற்கான பின்புலமாகிறது. ராதிகா தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களோடு, அவர்களது அக்கறைகளோடு செயற்பட்டிருந்தால் கனடியத் தமிழ் மக்கள் தமது கடும் உழைப்பால் உருவாக்கிய ஒரேயொரு தமிழ் பிரதிநிதியை எதிர்த்து தேர்தலில் நிற்க இன்னொருவரை ஆதரித்திருக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல மிக அண்மையில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை, இலங்கை அரசின் தமிழர்கள் மீதான பாரிய மனித உரிமை மீறல்களை முன்வைத்து புறக்கணிப்புச் செய்த கனடிய அரசினது முடிவையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள செய்கின்ற பயணமுமே இதுவாகும். கனடிய அரசில் ஆளும் கட்சியாக பெரும்பான்மையுடன் இருப்பது பழமைவாதக் கட்சியாகும். அக்கட்சியில் இருந்துவரும் நம்மக்கள் பலரின் உழைப்பே கனடிய அரசாங்கத்தின் காமன்வெல்த மாநாட்டு புறக்கணிப்பின் முடிவில் பெரும் பங்காகும்;. உண்மையில் அம்முடிவிற்கும் ராதிகாவிற்கும் எந்தச் சம்பந்தமுமே இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தனது கட்சியலிருந்து(பிரதான எதிர்க் கட்சி)அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் தானகவோ அல்லது எமது சமூகத்தில் இயங்கிவரும் சமூக ஸ்தாபனங்களுடனோ இணைந்து முன்னெடுத்துச் செய்ததாக எதுவமே இல்லை. மற்றவர்களது கடும் உழைப்புக்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தன் கைக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் நடன மேடைகளில பேசுவதுதான் அவரது அரசியல். கனடிய அரசின் காமன்வெல்த மாநாட்டு புறக்கணிப்பு முடிவில் இவருக்கு இருந்த ஈடுபாட்டையும் பங்களிப்பையும் பார்ப்பதற்கு அவர் தமிழ்வின் இணயத் தளத்தளத்திற்கு கனடிய அரசின் புறக்கணிப்புச் தொடர்பாக வழங்கிய செவ்வியானது மிகத் தெளிவான சான்றாகும். கனடிய அரசின் இந்நிலைப்பாடானது தனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது என்று அச்செவ்வியில் அவர் சொல்லுகின்றார். ஏனெனில் கனடியப் பாரளுமன்றில் தன்னைத்தாண்டி தமிழர்கள் செல்லமுடியாதென இறுமாப்புக் கொண்டிருந்த ராதிகாவுக்கு உண்மையில் அது ஒரு ஆச்சரியமானதாகத்தான இருந்திருக்கும். அது மட்டுமல்லாமல், கனடிய அரசு எடுத்த இந்நிலையை விமர்சித்தும் பேசியிருந்தார். இந்த முடிவை எடுத்த கனடிய அரசு எப்படி கனடாவில இருக்கும் பிரச்சினைகளில் அக்கறை காட்டவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தளவுக்கு எம்மக்களின் பிரச்சினையானது அவரைப் பொறுத்தளவில் தனது ஆதாயத்துக்காக அவர் பயன்படுத்தும் ஒன்று. அதைத்தாண்டி யாராவது காத்திரமாகச் செய்ய முற்படுவது அவருக்கு அவரது பிழைப்பில் மண்போடுவதுபோன்றது. இவ்வாறான காத்திரமான ஒரு நிலைப்பாட்டை கனடிய பழமைவாதக் கட்சி எடுத்ததால் ராதிகா அடிக்கடி தானாகச் சொல்லிக்கொள்ளும் 'முதலாவது ஒரே ஒரு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதி" தான்தான் என்பதுவும், தமிழருக்காக கனடியப் பாராளுமன்றத்தில் ஏதாவது கதைப்பதென்றால் தனக்கூடாகத்தான்; உண்டு என்கின்ற அவரது எண்ணப்பாடும், பழமைவாதக் (தற்போதைய கனடிய அரசு)கட்சியில் செயற்பட்டுவரும் தமிழர்களின் கடும் உழைப்பால் கனடிய அரசினை எடுக்கப்பண்ணிய காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவு ராதிகாவை ஓடி முழிக்கப் பண்ணியது. இப்போதுதான் அவர் சொன்ன 'கடைசி வருடத்தில் தமிழ் மக்களை தன்பக்கம் கொண்டு வர தனக்குத் தெரியும்" (தமிழ் மக்களுக்கு காதில் பூ வைக்கவல்ல செருகும் நிகழ்ச்சி நிரல்)என்ற நிகழ்சிசி நிரலை தொடங்கியுள்ளார். இதன் முதற்படிதான் யாழ் வருகை. இவ்வாறு இவர் செய்து வரும் அரசியல் கனடிய தமிழ் மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், ஊரிலுள்ள மக்களுக்குத் தெரிய எவ்வித வாய்ப்பும் இல்லை. ராதிகா கனடிய பாரளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவருடைய கடும் உழைப்பே கனடிய அரசின் காத்திரமான இம்முடிவிற்கு காரணம் என்று மிகவும் பெதுப்படையாகவே நம்பக்கூடும், அதுமட்டுமல்ல அவ்வாறான தொனியில் கதைக்க ராதிகாவுக்கு சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை. இதனை நாம் அனுமதிக்க முடியாது. இதனை வெளிக்கொண்டுவர வேண்டும். காமன்வெலத் மாநாடு சம்பந்தமானது ஒன்று மட்டும்தான், இதனைவிட பல்வேறு விடயங்களை நாம் குறிப்பிடலாம். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத தெரிவாகி சில மாதங்களில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழர்கள் மீதான போர்க்குற்றம் தொடர்பான சில தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டி, அதற்கான ஆதரவை நாடியிருந்த போது ராதிகா அதற்கான எந்த உதவியையும் தராதபோது வேறு ஒரு தேர்தல் தொகுதியில் மாற்றின சமூக அங்கத்தவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் அத்தீர்மானங்கள் மாநாட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அது ஏகமனதாக நிறைவேறும் தறுவாயில் தனக்கு பெயர் சேர்க்கும் வகையில் கடைசியில் செயற்பட்டார். ராதிகாவின் பாராளுமன்ற தேர்தல் தொகுதியில் இருக்கக் கூடிய எம்மக்கள் இவருடன் இணைந்து செயற்பட்டால் சொல்லிப் பேசிச் செய்ய வைக்கலாம் என்ற நோக்கில் அத்தேர்தல் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு பொதுக்கூட்டத்திற்கு அக்கூட்டத்திற்கான அழைப்புக் கடிதங்கள் பெற்றிருந்த, கட்சி உறுப்பினர்களாகவிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் சென்றிருந்தார்கள். தனது அலுவலக உறுப்பினர்களை வைத்து திட்டமிட்டு அவர்களது பெயர்கள் பட்டியலில் இல்லை என்று வெளியே விட்டார். இது மிகவும் அடாவடித்தனமாகவே நடந்தேறியது. இதன்போது நம்மக்கள் மேர்வின் சில்வாவை நினைவுகூர்ந்திருந்தார்கள். ஜெனீவாவில் இந்தவருடம் மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டிற்கு ராதிகாவின் ஆதரவை எதிர்பார்த்த கனடிய தமிழ் மக்களிற்கு கிடைத்தது பெரிய ஏமாற்றமே. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தந்திருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள்- குறிப்பாக கனடாவில் இருந்து வந்திருந்த ஆளும் கட்சி எம்.பி, மற்றும் பிற கட்சி எம் பிக்கள் மத்தியில் எமக்கென்று கடும் உழைப்பில் உருவாக்கிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா வரவில்லை. அதற்கான காரணத்தை அவர் கூறியிருப்பது மிகவும் கபடத்தனமானது. கட்சி அனுமதி தரவில்லை என்பது. அதைவிட அதற்கான காரணம் என்பது அம்மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்மானங்களான தமிழ மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக அவருக்கு எந்த உடன்பாடும் இல்லை என்பதே உண்மையாகும். மாநாட்டிற்கு வராமல் விடடிருந்த போதிலும், அதன் பின்னர் அத்தீர்மானங்களுக்கான ஆதரவைக் கேட்டிருந்தும் இன்று வரை அதற்கான எந்தப் பதிலும் அளிக்காமலிருப்பது வெறுமனே தற்செயலல்ல. அது மிக வெளிப்படையான, மிகத்தெளிவான இலங்கை அரசுடன் ஒத்த நிலையே. பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் மீண்டும் சிலரால் முன்வைத்து நகர்த்தப்பட்ட தமிழீழ மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு மற்றும் போக்குற்ற விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள போன்றவற்றிற்கு எந்தவித ஆதரவும் கொடுக்காமல் மாநாட்டு நிகழ்சிசி நிரலில் பின்னுக்குப்; போட்டு அதனை நிறைவேறாமலே செய்தார். அவ்வாறான தீர்மானங்கள் ஒரு கட்சியின் மாநாட்டில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு சில முறைமைகள் இருக்கின்றன. அதன் படி அது முதலில் கட்சியின் கீழ் மட்டமான தேர்தல் தொகுதிக்கான நிர்வாகக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் மாநாட்டு குழுவுக்கு கொண்டுசெல்லப்படும். இவ்வளவற்றையும் செய்வதற்கு ராதிகா தேவையில்லை. அதன் பின்னர் அதற்கான முன்னுரிமையைக் கொடுப்பதில் கட்சியின் மேல்மட்டத்தில் ஆதரவு தேடுவதில்தான் எம்.பியின் ஆதரவு தேவை. ஆனால் அதனை எதையும் செய்யாமல் கட்சி அங்கத்தவர்கள் முன் வைத்து கொண்டு வந்த தீர்மானங்கள் மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் போடப்பட்டதை தான் செய்ததாக, மிகவும் கீழ்த்தரமாக, மக்களை மந்தைகளாக நினைத்து செயற்பட்டார். அது மட்டுமல்ல நிகழ்ச்சி நிரலில் வந்ததை கட்சியின் 'பொலிசி புக்கில் தான் வரப்பண்ணியதாக தமில்நெற்றுக்கு செவ்வியும் கொடுத்திருந்தார். கடைசியில் எந்தத் தீர்மானங்களும் நிறைவேறாமல் இருக்கச் செய்தார். உண்மையில் இவர் இருக்கும் கட்சியான என்.டி.பி கட்சியின் அரசியல் தளமானது எம் போன்ற அடக்கப்படும் சமூகத்திற்கான அடிப்படை அரசியல் உரிமைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு கட்சியாகும். அப்படியிருந்தும் அக்கட்சிக்குள் இருந்து வரக்கூடிய காத்திரமான நிலைப்பாடுகளை தடுத்து நிற்கும் இவர் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி எடுக்கும் எம்மக்கள் சார்பான காத்திரமான நிலைப்பாட்டை ஆச்சிரியமாகப் பார்ப்பது ஒன்றும் புரியமுடியாததில்லை. அடிப்படையில் இவருக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாடுதான் உள்ளது என்பது ஒன்றும் நிறுவவேண்டியதில்லை. இல்லையெனின் கனடிய அரசின் நிலைப்பாடுகளை வன்மையாகக கண்டிக்கும் மற்றும் கனடிய அரசின் வேறு பாரளுமன்ற உறுப்பினர்களை திருப்பி அனுப்பும் இலங்கை அரசு எவ்வாறு இவரை மிக இலகுவில் அனுமததித்தது. அதுவும் மிக அண்மையில் தமிழ் மக்கள சார்பாக பேசிவரும் அமெரிக்கரொருவர் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். இந்நிலையில் அதே சமகாலத்தில் இவரை மிக இலகுவாக அனுமதித்தது என்பது என்ன?? மற்றும், இதே பண்பைக் கொண்டவர் ஊரில் அதுவும் குறிப்பாக நொந்துபோயிருக்கும் தமிழ்பெண்களை தான் பெண் என்பதை கருவியாக வைத்து ஏமாற்றுக் கதைகள் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது வெறுமனே தனது ஊடக விளம்பரத்திற்கானது மட்டுமாகத்தனிருக்கும். அந்த விளம்பரங்கள் அவரின் கனடிய தேர்தல் நோக்கத்திற்கானது மட்டும்தான் என்பதே உண்மை. இவ்வாறான ஒருவர் மிக இலகுவாக நொந்து, பிய்ந்து போயிருக்கும் எம்மக்களை பகடைக் காய்களாக பாவிப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே அடிப்படையில் இவரிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவைதான்: கனடாவில் இவரது தேர்தல் வெற்றியில் தமிழ் மக்களாக முன்வந்து இவரை கூட்டிக் கொண்டுவந்து கட்சியில் சேர்த்ததில் இருந்து வெல்ல வைத்தது வரை தமிழ் மக்களின் பங்களிப்பை இவர் எவ்வாறு பார்க்கிறார். ஏனெனில் இதனை கேட்பதனூடாகவே தமிழ் மக்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற இவரிடம் தமிழ் மக்கள் கொடுத்திருந்த மான்டேற் பற்றி கேள்வி கேட்க முடியும். மற்றயது, போர்குற்றம் தொடர்பான இவரது நிலைப்பாடு. இனப்படுகொலை தொடர்பான இவரது நிலைப்பாடாகும். சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான இவருடைய நிலைப்பாடும் இவரிடம் கேட்கப்படவேண்டிய மிக முக்கிய கேள்வியாகும். கனடாவில் இருக்கக் கூடிய கனடியத் தமிழ் மக்களும் மற்றும் ஸ்தாபனங்களும் தமிழர் தீர்வு மற்றும் போர்குகுற்ற விடயங்களில் தெளிவான நிலைப்பாடு கொண்டிருக்கையில் இவரின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்படாதது கேள்விக்குரிய மிக முக்கிய புள்ளியாகும். இதில் மிகக் கவனமான கையாள வேண்டிய விடயம் என்னவெனில், நேரடியாக இக்கேள்விகளுக்கான பதிலை சொல்லவைப்பதாகும். மிகவும் சளாப்பும் வல்லமை கொண்டவர். தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அத்துடன் ஒரு கட்சியல் இருப்பவர் ஆகவே தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்ல முடியாது போன்ற காரணங்கள் இவர் சொல்லி வரும் நொண்டிக் குற்றச் சாட்டுகளாகும். இவ்வளவு நெருக்கடிக்குள்ளும் தமது நிலைப்பாடுகளை இலங்கைப் பாராளுமன்றில் துணிவாக முன்வைத்து போராடிவரும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில், மிகவும் சாதகமான கனடாபோன்ற சூழலில், அதுவும் எம்மைப்போன்ற ஒடுக்கப்படும் சமூகங்களுக்கான அரசியல் உரிமைகளை அதன் அடிப்படையில்-சுநிர்ணய உரிமை, பேசக்கூடிய, செயற்படக்கூடிய கட்சிக்குள் இருக்கும் ராதிகா பேசாமல், செயற்படாமல் இருந்துவருவது (அதுவும் பழமைவாதக் கட்சியான இன்றைய ஆளும் கட்சி தமிழர்கள் சார்பாக காத்திரமான நிலைப்பாட்டை - காமன்வெலத் புறக்கணிப்பு எடுத்துள்ள இன்றைய சூழலில்) ஒன்றும் தந்திரோபாய ரீதியில் அல்ல மாறாக அவரின் அரசியல் நிலைப்பாடு தொடர்பானதாகும். அவர் என்றைக்குமே போர்க்குற்றம் பற்றியோ இனப்படுகொலை பற்றியோ, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு பற்றியோ தனது நிலைபாட்டை தெளிவபடுத்தியதில்லை. அப்படிக் கேள்விகள் வரும்போது அவர் கூறுவது ஐ.நா தனது அறிக்கiயில் குறிப்பிட்டள்ளது அல்லது யாரேனும் எடுத்துள்ள நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவுது மட்டும்தான். அவர் தன்து நிலைப்பாடு என்று எதனையும் தெளிவாகச் சொல்லியதில்லை. அதனைச் மிகச் சாதுரியாமக தள்ளிவிட்டுப் போகும் ராதிகா இலங்கை வந்துள்ளமையானது பெரும் கேள்விகளை தோற்றுவித்துள்ளது. நன்றி பதிவு http://www.pathivu.c...ticle_full.aspx

Link to comment
Share on other sites

இந்தப் பதிவு யாழின் விதியான முழு "இணைப்பை"க் கொடுக்கவில்லை.

 

இலங்கை அரசுக்கு அதரவு கொடுப்பதால்(கொடுத்தால்) NDP Seatல் ஸ்காபரோவில் தான் வெல்லலாம் என்று ரதிகா நினைப்பதாகவும், இதுதான் அவர் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார் என்றும் மிகவும் கஸ்டப்பட்டு  சொல்ல வருகிறார் கட்டுரையாளர். ரதிகாவின் இருப்பை கெடுத்து அவரை மிரட்டி வைக்க இப்படி ஒரு இடைவெளியை கண்டுபிடித்த பின்னர்தான், இலங்கையின் புலனாய்வு ரதிகாவை நாடு கடத்தாமல்விட்டது என்பது இப்போது தெளிவாகிறது.

 

சில எதிர்க்கட்சி விபச்சாரிப்பெண்கள் திருட்டுத்தனமாக அரசியல் வாதிகளுடன் இணைந்து படம் எடுத்துவிட்டு அவற்றை பிரசுரித்து அரசியல் ஆதாயம் அடைய முயல்வதுண்டு. அதே மாதிரி இந்த எழுத்தாளர் தன்னை ரதிகாவின் அரசியல் விவகாரங்களில் நுளைத்துவிட்டு, அவற்றை வைத்து அர்சியல் செய்ய முற்படுகிறார். அதே நேரம் இலங்கை அரசின் அழுக்கை பின்வழத்தில் உபயோகிக்கிறார். இதுதான் நடை முறை விபச்சாரிகளின் இயல்பு. தாம்தான் கெட்டவர்கள் ஆயிற்றே. தம்முடன் ரதிகாவை இணைத்துவிட்டால் புலம் பெயர் மக்கள் ஏமாறுவார்கள் என்று நினைக்கிறார். ஆனால் அது வெளியே தெரியவந்தால் மிக தாழ்வான திட்டமாக மாறும் என்று அவருக்கும் புரிகிறது.

 

இதனால் மிக சிக்கலான ஒரு பாதை எடுக்கிறார்.

1). ரதிகா 2015 தேர்தலுக்கு இறங்குகிறார்.

2). புலம் பெயர் தமிழ் மக்கள் அவரை நிராகரித்து இன்னொருவரை தெரிந்துவிட்டார்கள்.

3). புலம் பெயர் தமிழ்மக்களுக்கு எல்லாமே தெரியும். எனவேதான் தான் அவர்களிடம் ரதிகாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கவில்லை.

4). இப்போது ஏதும் அறியாதவர்கள் தாயக மக்கள்.(ஊடகங்களை அடக்கியவுடன் இதுதான் உண்மை என்று அரசு நினைக்கிறது. ஆனால் இன்னும்  தாயக மக்களும் எதோ விதமாக சிலவற்றை அறிந்து வைத்திருப்பதால் 100% தமிழரும் கூட்டமைப்பு வாக்களித்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தயார் இல்லை). இதானல் தாயக மக்களின் நினைப்புக்களை சரியாக போட தான் முயல்வதாக நடிக்கிறார். இந்த மினக்கேடு மினக்கெட்டு இப்படி ஒரு திரிப்பை எழுதி, இப்படி புலம் பெயர் ஊட்கங்களில் பிரசுரித்தால் அது ஊடக அடக்கு முறைக்குள் இருக்கும் தாயக மக்களுக்கு ரதிகா பற்றிய உண்மையை கொண்டு செல்லும் என்று சுழிக்கிறார்.

 

பரோபகார ஆசிரியர், ரதிகா இலங்கை அரசுடன் இணைந்து ஒரு பயண நாடகத்தை ஆடியதாகவும், அது புலம் பெயர் இடத்தில் அவருக்கு எதிராக ஒரு வேட்பாளர் தோன்றியிருப்பதால் அங்கு அவருக்கு வாக்கு பெற்று தரும் என்று ரதிகா நினைப்பதாகவும் தான் அதை உடைப்பதாகவும் பிரேமை ஏற்படுத்த முயல்கிறார். அந்த உடைப்பை கூட தான் செய்ய முயல்வது, இரண்டு வருடங்களின் பின்னர் தேர்தல் நடக்கபோகும் புலம் பெயர் நாடுகளில் அல்லாமல் தாயகதில்தான் உடைக்க வேண்டும் என்கிறார். இது அவர் எடுக்கும் மிக நீண்ட பதை. என்னே பரோபகாரம். 

 

ஆசியரின் எழுத்தில் பழைய தோல்வி ஒன்றும் தெரிகிறது. ரதிகாவுக்கு புலிச்சாயம் பூசி கனேடிய பக்கத்தால் அவரை கெடுக்க முயன்ற போது அது சரிவரவில்லை என்கிறார். அதை தம்முடன் சிலர் முற்பட்டதாகவும், ரதிகா தான் கனேடியன் அரசியல்வாதியே என்று தொடர்ந்து பதில் அளித்து அதிலிருந்து நழுவி வருவதாகவும் கவலைப்படுகிறார். 

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த பதிவு யாழின் விதியான முழு "இணைப்பை" கொடுக்கவில்லை.

 

வழிகாட்டி என்பவர் இணைத்த செய்தி இணைப்பு இது.

http://www.pathivu.com/news/28852/60//d,article_full.aspx

 

இதை ஏற்கனவே முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்து பார்த்தேன். ஆனால் இது அவதூறு கட்டுரை என்பதால் யாழில் நான் இணைக்கவில்லை.

 

ராதிகா அக்கா தாயகம் வந்தால் பலருக்கு ஏன் கடுக்குதோ தெரியவில்லை. அவர் போன தேர்தலில் வெல்ல முன்னம் இலங்கைக்கு சென்றிருக்கவில்லை. இப்பொழுதும் சாதாரணமாக சென்றிருக்கலாம். அல்லது தேர்தலை எதிர்பார்த்து சென்றிருந்தால் கூட தாயகம் சென்று அங்குள்ள மக்களை சந்திப்பது நன்மை தானே. இது அவருக்கு ஒரு ஆரம்பமாக இருக்கும். அங்குள்ள மக்களுடன் தொடர்புகளை தொடர்ச்சியாக பேண இது வழி சமைக்கலாம்.

தேர்தலில் ராதிகா அக்கா உட்பட தேர்தலில் நிற்கும் தமிழர்கள் அனைவருமே வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்.

Link to comment
Share on other sites

ராதிகா வெல்வதற்கு தமிழ் வாக்குகள் முக்கியமானவைதான். ஆனால் வேற்றின மக்களும் போட்டால்தான் கனடாவில் எந்தத் தொகுதியிலும் எந்தத் தமிழரும் வெல்லமுடியும் என்பதே இங்கு உள்ள நிலை.

கடந்த தேர்தலைத் தவிர, அதன்கு முந்திய பலவற்றில் என்டிபியால் ஒன்ராரியோவில் அதிக இடங்களைப் பெறமுடியவில்லை.. லிபரல் கட்சியே அதிகமான இடங்களைப் பெற்று வந்துள்ளது. லிபரலும், பழ மை வாதக்கட்சியும் தமிழர்களை தேர்தல்களில் நிறுத்த முன்வருவதில்லை..

ராதிகா என்டிபி மூலமாக நின்ற அந்தத் தேர்தலில், லிபரலின்மேல் கனேடியர்கள் கொண்ட அதிருப்தி பல் இன மக்களையும் சற்று என்டிபி பக்கம் சாய வைத்தது. அந்த அலை இருந்திராவிட்டால் இப்போது ராதிகா எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஊருக்குப் போய் வந்திருப்பார்.. :D

Link to comment
Share on other sites

நன்றி துளசி இணைப்பிற்கு... வாசித்தேன் விவாதத்திற்கு விட்டால் தான் எது உண்மை எது பொய் என அறியலாம். எமது மக்களுக்கு உண்மையில் மனச்சாட்சிப்படி இனியாவது எமது இலக்கை அடைய தடைகளை அகற்றி ஒற்றுமையாக முன்னேறுவோம்.... எப்பொருள் எவர்வாய் கேட்பினும் மெய்பொருள் அறிதல் அறிவு. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில்....

Link to comment
Share on other sites

2015இல் Liberals ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சியாகவாவது வருமா? அப்படி ஏதாவது நடந்தால் NDPக்கு மீண்டும் பழைய குருடி கதவை திறவடி தான்...

Quebecஇல் NDP அதிக இடங்களை கடந்த முறை வென்ற படியால் தான் எதிர்கட்சியாக வரமுடிந்தது.....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளை அடிப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. இலங்கை மக்களின் பணத்தில் இலவச கல்வியும், மருத்துவ வசதிகளும் பெற்று அந்த மக்களின் கடன் சுமையில் உணவும் ஊட்ட சத்தும் பெற்று, பின்னர் வேறு நாடுகளுக்கு வெளியேறி, தாம் பெற்ற முதலீட்டுக்கு எந்த பிரதிபலனும் கொடுக்காத நாமனைவரும் இந்த கொள்ளை அடிப்பவர்களுக்குள் அடங்குகிறோம்.

 

நாம் எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளையும் வேற்று இன தேசியவாதிகளையும் குறைகூறிவிட்டு இவர்களால் தான் நாம் எதுவும் செய்ய முடியவில்லை என்று சாட்டுகள் சொல்லலாம். ஆனால் அவை நம்மை இந்த "கொள்ளை அடிப்பவர்கள்" என்ற நிலையில் இருந்து மாற்றப்போவதில்லை.

 

திரியை திசை திருப்ப விரும்பா விட்டாலும் இந்தக் குறிப்பிட்ட கருத்துக்குப் பதிலிட வேண்டும் என்பதால் பதிகிறேன்:

 

நாம் இலவசமாக மக்கள் பணத்தில் படித்து புலம் பெயர்ந்தாலும் எங்கள் முழுவதுமான தெரிவினாலா புலம் பெயர்வு நிகழ்ந்தது?  முழுமையான தகுதி இருந்தும் சிறிலங்காவில் நான் சென்ற ஐந்து நேர்முகத் தேர்வுகளில் என்னை விட மிகவும் தகுதி குறைந்த சிங்களவர்களைக் கல்வி தொடர்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்- ஒரு இடத்தில் நான் தமிழன் என்பதால் தேர்வு செய்யவில்லை என பின்கதவால் செய்தியும் அனுப்பியிருந்தார்கள். இதெல்லாம் நடக்கையில், அமெரிக்கப் பல்கலைக்கு நான் அனுப்பிய CV  மட்டுமே வைத்துக் கொண்டு எனக்குப் படிக்கவும் வேலை செய்யவும் இடம் கிடைத்தது. கடுமையான உழைப்பினால் தான் கல்வியில் வெற்றி வருகிறது, அந்த உழைப்புக்கு ஏற்ற வரவேற்பு உள்ள இடத்தில் மட்டும் தான் எனக்குக் கடமை உண்டு என நான் நம்புகிறேன்! இதை ஒரு கொள்ளைக் காரனாக இருந்து தான் செய்ய வேண்டுமானால் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் - இது என் கருத்து!

Link to comment
Share on other sites

விடிந்தால் போச்சு :icon_mrgreen:

 

 

எங்கட ஆட்களின் அறிவை மதிப்பிட இந்த திரி ஒன்றே போதும் .

 

 

முப்பது வருடமாக முழுங்கியதை வெளியில் எடுப்பது கஷ்டம் தான் ,

ராதிகா கனடா திரும்பி தனக்கு அப்படியொன்றும் நடக்கவில்லை என்றாலும் இல்லை நடந்தது எங்களுக்கு தெரியும் என்பார்கள் .

பெட்டியடிச்சு கடை போட்ட ஆட்களல்லோ. :icon_mrgreen:

 

 

அறிக்கை தன்னை கைது செய்து நாலாம் மாடியில் வைத்திருக்கு என்று இருக்கு . :icon_mrgreen: .

பாவம் யாரும் செல்வாக்கு உள்ளவர்கள் அவரை வெளியில் எடுத்துவிடுங்கோ. :D .

சிறீலங்காவை அங்கு ஆளுபவன் தனது விருப்பத்திற்கு தான் ஆழுவான் சட்டம் வைப்பான் .பொன்சேகாவை உள்ளுக்க போட்டவன் ,சிராணியை பதவி இறக்கியவன் ,பொப் ரேயை திருப்பி அனுப்பியவன் அவன் நாட்டில் அவன் வைத்தது தான் சட்டம் ,

அதற்கு பயந்து தானே எல்லோரும் ஓடிவந்தோம் .

எமது யாழ் உறவுகள் எத்தனைபேர் சுற்றுலா செய்துவிட்டு திரும்பியிருக்கினார்கள்.

முப்பது வருடமாக படம் காட்டியவர்கள் இன்றும் காட்ட நிற்கினார்கள் விசில் அடித்தவர்கள் இன்றும் தொடர்கின்றார்கள் .

முள்ளிவாய்கால் அவலத்தின் போது ஒரு நாட்டை கூட எங்களுக்காக குரல் கொடுக்க வைக்க முடியவில்லை கொடி பிடித்து ஓடித்திரியவும் இணையத்தில் இருந்து விளாசித்தள்ளவும் தான் நீங்கள் லாயக்கு .

 

அருச்சுன் எழுதும் போது ஆதாரம் இல்லாமல் எழுதுவதும், தன்னை நிரூபிக்க மிகைப்படுத்திய "நாலம் மாடிக்கதைகளை" எழுதுவதும் தான் வழமையில் செய்வது. 

ராதிகாவை தொடர்ந்தும் புலனாய்வுக்குள் வைத்திருந்து, அவர் கதைத்த நபர்களை, போன இடங்களை நிரல்படுத்தி, அவரை  தாம் வெளியே போடப் போவதாக மிரட்டி வெளியேற்றியதை இப்போது இரண்டு பக்கமும் ஒப்புக்கொள்கிறார்கள். 

 

முல்லைத்தீவில் ராதிகாவை எச்சரித்ததை ஒப்புக் கொண்டார் குடிவரவு கட்டுப்பாட்டாளர்!

[sunday, 2014-01-05 08:39:36]

News Service

வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனை முல்லைத்தீவில் குடிவரவு அதிகாரிகள் சந்தித்து எச்சரிக்கை விடுத்ததை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, உறுதிப்படுத்தியுள்ளார். கனேடிய எம்.பி.யான ராதிகாவை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் குழு பின் தொடர்ந்ததன் நோக்கம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் அதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

கனேடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின் தொடரவில்லை. அவ்வாறு கூறப்படுவதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். உண்மையில் எங்கள் குழுவினர் ராதிகாவை சந்தித்தனர். முல்லைத்தீவில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது. குறித்த கனேடிய பாராளுமன்ற உறுப்பினரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும் வடக்கில் பல்வேறு நடவடிக்கைகளிலும் சந்திப்புக்களிலும் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த நாட்களில் செய்தி வெளியானது. இது தொடர்பிலேயே நாம் அவரை சந்தித்தோம்.

முல்லைத்தீவில் அவர் இருக்கும் இடம் தொடர்பில் விசாரித்து அறிந்து அங்கு சென்று சந்தித்த நாம், ஊடகங்களில் வெளியான இவ்வாறான செய்திகள் குறித்து வினவினோம். அத்துடன் வடக்கில் சில அரசியல் தலைமைகளை அவர் சந்தித்ததாக கூறப்படுவது தொடர்பிலும் நாம் கேட்டோம். அப்போது அவர்கள் தனது உறவினர்கள் என ராதிகா பதிலளித்தார். அதனை நாம் எதிர்க்கவில்லை. உறவினர்களை சந்திக்க நாம் தடை விதிக்கவில்லை. சுற்றுலா விசாவில் வந்து அரசியல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் நாம் அவரை தெளிவுபடுத்தினோம். இது தான் நடந்தது. இதனை விட எதுவும் இங்கு நடைபெறவில்லை. நாம் அவரை ஒருபோதும் பின் தொடரவும் இல்லை.இதனை அவர் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே கொழும்புக்கு திரும்பியுள்ளார். என குறிப்பிட்டார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100688&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

2015இல் Liberals ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சியாகவாவது வருமா? அப்படி ஏதாவது நடந்தால் NDPக்கு மீண்டும் பழைய குருடி கதவை திறவடி தான்...

Quebecஇல் NDP அதிக இடங்களை கடந்த முறை வென்ற படியால் தான் எதிர்கட்சியாக வரமுடிந்தது.....

லிபரலுக்கு புதிய தலைவர் வந்துள்ளார்.. ஆனால் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்த என் மனம் இப்ப என்டிபியில்தான் நிக்குது.. :D மீண்டும் ஹார்ப்பர்தான் வருவார் என நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

justin treadeau வை பார்க்கும் பொது சின்ன பொடியன் மாதிரி இருக்கு...சனம் நம்புமா என்பது கேள்வி....மற்றது Liberals ஐ கொண்டுவருவதற்கு ஒரு பெரிய பிரச்சனையும் தற்சமயம் இல்லை....பொருளாதாரமும் மற்றநாடுகளை விட பரவாயில்லை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.