Jump to content

ஊரும் உலகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்!

 

புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

 

யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது.  சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும்,  எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கை உள்ளது.

 

 

சரி. எப்படியான விடயங்களை எழுதலாம்?

 

 

ஒருவர் தான் பிறந்த இடம், வளர்ந்த இடம், வசித்த இடங்கள், பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலானவரை தாயகத்தில் உள்ள இடங்களாக இருந்தால் அவை பற்றிய தகவல்கள் பலருக்குப் பிரயோசனமாக இருக்கும். யாழ் களத்தில் பலர் தம்மையும் தமது தாயகப் பின்னணி, தற்போதைய இருப்பிடம் பற்றி வெளிக்காட்ட விரும்புவதில்லை என்று தெரியும். அப்படி வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள் தமக்கு நன்கு தெரிந்த இடங்களையும்,  அவை பற்றிய தகவல்களையும் தம்மை வெளிக்காட்டாது பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அதே இடங்களுடன் பரிச்சயமானவர்கள் தெரியாத மேலதிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம்.

 

வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதவேண்டும் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்!

 

ஆரம்பிப்போமா?

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி!

 

எங்கள் தலைமுறை, நீண்ட காலங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்த போதிலும், அது இன்னும் 'புலன்' பெயர்ந்து போகவில்லை!

 

மண்ணோடும், அதன் மணத்தோடும் இன்னும் தனது உறவுகளை, ஏதோ ஒரு விதத்தில் தொடர்புகளைப் பேணியே வருகின்றது!

 

அந்தத் தொடர்பை, நீடித்துக்கொள்வதில் 'யாழின்' பங்கு மிகவும் முக்கியமானது!

 

ஆனால், இளைய தலைமுறை, தன்னை வெகு விரைவாகத் தாயகத்தில் இருந்து துண்டித்துக்கொள்ளவே முனைப்புக் காட்டுகின்றது! இது மிகவும் கவலையைத் தரும் விடயம்!

 

குறிப்பாகச் சுபேஸ், ஜீவா, அஞ்சரன், ரதி, கவிதை, கிருபன், யாயினி  போன்றவர்களின் ஆக்கங்கள் மிகவும் அருகிச் செல்கின்றதை, அவதானிக்கக் கூடியதாக உள்ளது! 

 

நிழலி, நுணா, யாழ் வாலி, தப்பிலி போன்றவர்களையும் இளையவர்களுடன் சேர்க்கலாம் என எண்ணுகின்றேன்!

 

யாழில் நடைபெறும் சில கருத்தாடல்களை, இவர்கள் தங்களை நோக்கிய கல்லெறிதலாகப் பார்க்கின்றார்களோ தெரியாது! அப்படியாயின் அது தவறு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்! 

 

தன்னையே ஆழ முனைந்த ஒரு இனத்தின் போராட்டம், ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது என்பதே உண்மையாகும்! இதில் எமக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம்! கட்டாயம் இருக்க வேண்டும்!

 

அதிலிருந்து, நாம் மீண்டு வரும் வழி வகைகளை ஆராய வேண்டுமேயன்றி, மேலும் மேலும் எம்மிடையே பிளவுகளை ஏற்படுத்திச் செல்வது, எமது இனத்தின் தற்கொலைக்கே நிகரானது!

 

இனியொரு விதி செய்வோம் ! யாழிலாவது, ஒன்றாக இணைந்திருப்போம்!

 

எனது மண்ணைப்பற்றி நான் அறிந்திருக்காத பல விடயங்களை நான் 'யாழ்' மூலம் அறிந்திருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. எனக்கு எழுத தெரியாது என்பதால் வாசகியாக இத்திரியில் இணைந்திருக்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய்

கரணவாய் என்பது யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிராமம். இது கரணவாய் தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு என்று பல பிரிவுகளாக உள்ளது. தெற்கு எல்லையாக உப்புவெளியும், கப்பூதூக் கிராமமும், கிழக்கே கரவெட்டியும், மேற்கே வல்லை வெளி, இமையாணன், உடுப்பிட்டி போன்ற பகுதிகளும், வடக்கே கொற்றாவத்தை, பொலிகண்டி போன்ற இடங்களும் உள்ளன. தெற்கே போகும் வீதி வல்லை வெளியில் இருந்து துன்னாலை நோக்கிப் போகின்றது. இந்த வீதியில்தான் பிரபல்யமான சுருட்டு தயாரிக்கும் மண்டான் என்ற இடமும், உப்பங்களியும் உள்ளன. ஊருக்குக் குறுக்காகச் செல்லும் யாழ் பருத்தித்துறை வீதி (750 பஸ் இலக்கம்) தெற்கு, மத்தி பகுதிகளைப் பிரிக்கின்றது. இந்த வீதியில் உள்ள குஞ்சர்கடை எனும் சந்தியில் இருந்து இரு கிளைவீதிகள் தெற்காக கல்லுவம் நோக்கியும், வடக்காக உடுப்பிட்டி-வதிரி வீதியை நோக்கியும் பிரிகின்றன.

கரணவாய் என்ற பெயர் வர என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. முன்னர் இங்கு வசித்த சைவக் குருமார் பரம்பரை கணக்குப் பார்ப்பவர்கள் என்றும் அதனால் அவர்கள் கர்ண பரம்பரையினர் என்று அழைக்கப்பட்டதால் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு கர்ணவாய் என்று பெயரிட்டனர் என்றும் இதுவே பின்னர் கரணவாய் என்று மாறியது என கதைகள் உள்ளன. அத்தோடு பெயரை மேலும் சிறப்பாக்க கருணையம்பதி என்றும் அழைப்பார்கள்.

தோட்டங்களும், பனங்கூடல்களும், வயல்களும் அதிகமுள்ள கிராமம். இங்கு வாழும் மக்களும் அதிகம் விவசாயிகளாக உள்ளார்கள். அத்தோடு ஏறக்குறைய எல்லோருமே சைவர்களாகக்த்தான் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஒரு தேவாலாயம் கூட கரணவாயில் இல்லை. வாழ்பவர்கள் சைவர்களாக இருப்பதால் பல சைவக் கோயில்கள் நிறைந்துள்ள இடம். பிள்ளையார், அம்மன், வைரவர், காளி, நாகதம்பிரான் போன்ற பல தெய்வங்களுக்குத் தனிக் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் சில பிள்ளையார் கோவில்கள் திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்திபெற்றவை.

திருவிழாக்கள் சில குடும்பத்தாரினது என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் யாழ்ப்பாண சமூகத்திற்குரிய இறுக்கமான சாதிக்கட்டமைப்புக்கள் நிலவுகின்ற ஊராக இருப்பதால் அவை சாதியடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருந்தன. திருவிழாக் காலங்களில் ஏட்டிக்குப் போட்டியாக நாதஸ்வர, மேளக் கச்சேரிகளும், சின்ன மேளக் கூட்டுக்களும், பாட்டுக் கச்சேரிகளும் இரவிரவாக நடக்கும். நான் சிறுவனாக இருந்தபோது கோவில் திருவிழாக்களுக்குப் போய்வந்த நினைவுகள் உள்ளன. எப்போதும் கிழக்கு வீதியில் சனக்கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறுவர்களாகிய நாங்கள் தேர்முட்டியில் அல்லது தீர்த்தக் கேணியில் நின்று விளையாடுவோம். பூசைமுடியும்போது மடப்பள்ளியில் பஞ்சாமிர்தத்தை அடிபட்டு வாங்கி நக்குவதும், இருட்டிய பின்னர் ஆளரவம் குறைந்த மேற்கு வீதியில் எமது எதிர்க் கோஸ்டிகளுடன் மல்லுக் கட்டி சண்டைபிடிப்பதுதான் தொழில்.

 

தொண்டமனாறு செல்வச்சந்நிதி, வல்லிபுரக் கோயில் திருவிழாக் காலங்களில் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தாகசாந்தி அளிப்பதற்காக தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து சக்கரைத் தண்ணியும், மோரும் வழங்குவது பெரிய இளைஞர்களின் திருப்பணி. அந்த வயது வரமுதலே ஊரைவிட்டுப் புறப்பட்டுவிட்டதால் அடியார்களுக்குத் திருப்பணி செய்யும் பாக்கியம் கிட்டவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் கிருபன்.உங்களின் இந்த முயற்சியை மனப்பூர்வமாக ஆதரிக்கின்றேன்.
 
அடுத்தது துளசி அவர்கட்கு!
 
உங்களுக்கு எழுதத்தெரியாது? 
 
ஆனால் பிழைகள் குறைகள் கண்டு பிடித்து நாட்கணக்கில் இருந்து எழுதுவதற்குமட்டும் வார்த்தைகளாய் வந்து குவியும்!!!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய் எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர். எனது சிறிய தாயார் உட்பட இன்னும் சிலர் அங்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். பொயிலைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் அழகிய இடம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

Link to comment
Share on other sites

 

அடுத்தது துளசி அவர்கட்கு!
 
உங்களுக்கு எழுதத்தெரியாது? 
 
ஆனால் பிழைகள் குறைகள் கண்டு பிடித்து நாட்கணக்கில் இருந்து எழுதுவதற்குமட்டும் வார்த்தைகளாய் வந்து குவியும்!!!!!

 

 

கருத்து எழுத தெரியும். மற்றவர்கள் ரசிக்கும்படி ஆக்கம் எழுத தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய் எனக்கு மிகவும் பரிச்சயமான ஊர். எனது சிறிய தாயார் உட்பட இன்னும் சிலர் அங்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். பொயிலைத் தோட்டங்கள் நிறைந்திருக்கும் அழகிய இடம் .

பரிச்சயமான இடம்தானே. நீங்களும் உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

:lol:

புறாப்பொறுக்கி வல்லைவெளியைத் தாண்டி வரும்போது முதலாவதாகக் குடிசனம் இருக்கும் பகுதி. இது இமையாணன் பகுதிக்குள் வரும். அருகில் துவாளி அம்மன் கோயில் இருக்கின்றது.

சில இடங்களினதும், தோட்டங்களினதும் பெயர்கள் மிகவும் வேடிக்கையானவை. ஏன் அப்படிப் பெயர் வந்தது என்று தெரியாது!

குஞ்சர்கடைக்குக் காரணம் மிகவும் எளிது. அங்கு குஞ்சர் என்பவர் சந்தியில் இருந்த ஆலமரத்தின் அருகில் ஒரு கடை போட்டிருந்தார். அவ்வளவுதான். இப்போது அங்கு ஆலமரம் இல்லை. வீதியை அகலப்படுத்துவதற்காகத் தறித்துவிட்டார்கள்.

 

 

Link to comment
Share on other sites

'புறாப் பொறுக்கி'யும் 'குஞ்சர் கடையும்'  எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்ட இடங்கள்! 

 

ஏன், எதுக்கு எண்டெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! :D

ஏன் எதுக்கு எண்டதை நீங்கள் சொல்லாட்டி என்ன ? எங்களுக்குத் தெரிஞ்ச கதைதானே. :lol:

Link to comment
Share on other sites

அருமையான திரி... கள உறவுகளே உங்கள் ஊர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள். நானும் சுண்டிக்குளி பற்றி எழுதுகின்றேன் (சரி சரி கட்டாயம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பற்றியும் கொஞ்சம் சொல்கின்றேன் :) )

Link to comment
Share on other sites

அருமையான திரி... கள உறவுகளே உங்கள் ஊர்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதுங்கள். நானும் சுண்டிக்குளி பற்றி எழுதுகின்றேன் (சரி சரி கட்டாயம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பற்றியும் கொஞ்சம் சொல்கின்றேன் :) )

 

நீங்கள் சுண்டிக்குளியா? :rolleyes::) குளத்தடி பிள்ளையார் கோவில், பொஸ்கோ பாடசாலை போன்றவற்றுக்கு அருகிலா? :rolleyes: அல்லது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பக்கமா? :rolleyes: சுண்டிக்குளி பற்றி எழுதுங்கள். வாசிக்க ஆவல். :)

 

Link to comment
Share on other sites

நல்ல விடயம் கிருபன் ,

யாழில் பலர் தம்மை இனம் காட்டவிரும்பாதாதாலும் ,பலர் மனம் திறந்து வெளிப்படையாக இருக்கவும் தயங்குவதால் இப்படியான திரிகள் இங்கு குறைவு என நம்புகின்றேன் .

அப்படி சிலர் எழுத முயன்றாலும் படம் போடுகின்றார் பந்தா கட்டுகின்றார் என்று சேறடிக்க தொடங்கிவிடுவார்கள் .

முயற்சிக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

கிழக்கே கரவெட்டியும்

 

 

 
கரவெட்டியும் எனது ஊரைப்போல் மிகவும் பரீட்சயமான ஊர். தந்தையாரின் ஊர் என்பது ஒரு காரணம். பாடசாலை விடுமுறைக்கு உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதுண்டு. கோழிப் புக்கை அவர்களின் பிரத்தியேகமான ஒரு உணவு. சாப்பிட்டால் மண்டை வேர்க்கும். :D  உறைப்பு சொல்லி வேலை இல்லை.காலையில் பெண்கள் தண்ணீர் சேகரிக்க செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி.தலையில் ஒரு குடமும் இடுப்பின் இரு பக்கமும் ஒவ்வொரு குடமுமாக தண்ணீருடன் நடக்கும் நடையை ஒரு ஜிம்னாஸ்ரிக் பயிற்சியாகவே பார்க்கிறேன். :)
 
முதலில் கரவெட்டிக்கு சென்று ஒழுங்கைகளூக்குள் மாறுப்பட்டு சென்றது மறக்க முடியாது.(இப்பவும் தான்) எல்லா ஒழுங்கைகளும் ஒரே மாதிரி தான் தென்படும். :D  இந்தியன் ஆமி இந்த ஒழுங்கைகளுக்குள் தடக்குப்பட்டது நல்ல ஞாபகம். :D
 
பஸ்ஸுக்கு நிற்க்கும் போது பஸ்நிலையத்தில் கரியால் எழுதப்பட்டிருக்கும் கவிதைகள் முதல் வசனங்கள் வரை வாழ் நாளில் மறக்க முடியாதவை. :)  படிக்கும் காலத்தில் கம்பராமாயணம் ஞாபகம் இருக்கோ இல்லையோ சுவரில் யாரோ கிறுக்கிய வரிகள் ஞாபகம் இருக்கும். :) பாடசாலையில் இவற்றை நண்பர்களிடம் சொல்லி சிரித்த நாட்கள் என்றுமே மறக்க முடியாதவை.
 
கிருபன் இத்திரியை திறந்தமைக்கு நன்றிகள். பல ஊர்கள் பற்றி அறிய ஆவல்.
Link to comment
Share on other sites

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கலந்த வணக்கங்கள்!

 

புது வருடத்தில் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.

 

யாழ் களத்தில் இப்போதெல்லாம் அதிகளவு வெட்டி ஒட்டுதலே நடைபெறுவதால் (அதைத்தான் நானும் எப்போதும் செய்து வருகின்றேன்!) களத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் புதிதாக வருபவர்களும் வந்து வாசித்துவிட்டுப் போவதுதான் அதிகமாக உள்ளது.  சுயமான ஆக்கங்கள் குறைந்து கொண்டே போவதும், நீண்ட கருத்தாடல்கள் திரிகள் இல்லாமல் இருப்பதும் யாழின் மீதான ஒட்டுறவைக் குறைக்கின்றது. எனவே மீண்டும் யாழ் மீதான ஒட்டுதலை அதிகரிக்கவும்,  எமது ஊர் உலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தத் திரியை ஆரம்பிக்கின்றேன். பிற உறுப்பினர்களும் ஆர்வத்தோடு பங்குபற்றுவார்கள் என்ற முழுநம்பிக்கை உள்ளது.

 

 

சரி. எப்படியான விடயங்களை எழுதலாம்?

 

 

ஒருவர் தான் பிறந்த இடம், வளர்ந்த இடம், வசித்த இடங்கள், பயணித்த இடங்கள் பற்றிய தகவல்கள், அங்கு நடைபெற்ற சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். கூடுதலானவரை தாயகத்தில் உள்ள இடங்களாக இருந்தால் அவை பற்றிய தகவல்கள் பலருக்குப் பிரயோசனமாக இருக்கும். யாழ் களத்தில் பலர் தம்மையும் தமது தாயகப் பின்னணி, தற்போதைய இருப்பிடம் பற்றி வெளிக்காட்ட விரும்புவதில்லை என்று தெரியும். அப்படி வெளிக்காட்ட விருப்பமில்லாதவர்கள் தமக்கு நன்கு தெரிந்த இடங்களையும்,  அவை பற்றிய தகவல்களையும் தம்மை வெளிக்காட்டாது பகிர்ந்துகொள்ளமுடியும் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் அதே இடங்களுடன் பரிச்சயமானவர்கள் தெரியாத மேலதிக அனுபவங்களை பகிர்ந்துகொண்டால் பல விடயங்களை அறிந்துகொள்ளலாம்.

 

வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதவேண்டும் என்பதுதான் ஒரேயொரு வேண்டுகோள்!

 

ஆரம்பிப்போமா?

 

நீண்ட காலத்துக்குப் பின்னர் ஓர் ஆக்கபூர்வமான விடயம் கிருபன்ஜி யினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . எனது நண்பன் புங்கையூரன் எழுதிய கருத்தே எனது சுருக்கமான கருத்தாகும் . இந்தக் கருத்துக்களத்திலே பல திறமையான சுய ஆக்கங்களை தரக்கூடிய இளைய தலைமுறைகள் உண்டு . ஆனால் அவர்கள் காயடிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்ற வலியான உண்மையையும் நாங்கள் ஒத்துகொள்ளதான் வேண்டும் . இதை சொல்ல எனக்குத் தகுதி இருக்கா என்ற கேள்வியும் இதில் எழலாம் . புதிதாக எழுதுகின்ற அனைத்துக் கள உறவினது ஆகத்திலும் தவறாது கோமகனது கருத்தும்  ஊக்கமும் இருப்பதால்தான் எனது சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதுகின்றேன் . நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் இனி நடக்கப்போவது நல்லவையாகவே இருக்கவேண்டும் .

நான் பிறந்து தவண்டு செம்பாட்டு மண் குளித்த இடம் கோப்பாய் . பல கல்விமான்களையும் பல விவசாயிகளையும் உள்ளடக்கிய வளங்கொளிக்கும் கிராமம் . இதன் எல்லைகளாக வடக்கே இருபாலையும் , கிழக்கே கைதடியும் , மேற்கே உரும்பிராயும் , தெற்கே நீர்வேலியையும் உள்ளடிக்கியது . நல்லூர் இராசதானியின் இறுதி மன்னனான சங்கிலியின் அரண்மனை எனது கிராமத்தில் உண்டு . எனது ஊரின் ஊடாக செல்லும் பருத்தித்துறை வீதியின் சிறப்பு என்னவென்றால் , வலது பக்கம் நரை மண்ணையும் (களி மண் ) இடது புறம் செம்பாட்டு மண்ணையும் சரி சமனாக பிரித்து செல்கின்றது . கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும் , நாவலர் பாடசாலையும் , சரவண பவானந்தா பாடசாலையும் பல கல்விமான்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது . கோப்பாய் கோமகன் கு வன்னிய சிங்கமும் ,சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளை ஐயா ,சபாபதி நாவலர் , பஞ்சாட்சர சர்மா ,  கோப்பாய் எஸ் சிவம் , அருளம்பலம் போன்ற பிரபலங்கள் பிறந்ததும் கோப்பாயில் தான் . எனது வீட்டிற்குப் பின்னால் கோப்பாய் வெளி தொடங்கி கைதடி உப்பங்கழி வரை செல்கின்றது . இந்த கோப்பாய் வெளி முன்பு பயிர் செய்கின்ற நிலமாக இருந்து ,இப்பொழுது வெறும் சம்பு புல்லு தரவையாகதான் இருக்கின்றது. கோடைகாலத்தில் கைதடி உப்பங்கழி வற்றி உப்பு படர்ந்திருக்கும் . நாங்கள் இயற்கை உப்பு எடுக்க போனது இப்பொழுதும் நினைவில் உள்ளது . மழை காலத்தில் எங்கள் நீச்சல் குளம் கைதடி பாலத்தடிதான் .  எனது வீட்டிற்க்குப் பின்னால் ஒரு பெரிய தாமரை குளம் உண்டு . மழைகாலங்களில் குளம் வலசை போகும் பறவைகளால் நிரம்பியிருக்கும் . நாங்கள் மீன் பிடிப்பதும் இந்தக் குளத்தில் தான் . வேறு ஏதாவது நினைவில் வந்தால் எழுதுகின்றேன் .கிருபன்ஜி க்கு மீண்டும் பாராட்டுக்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

வணக்கம் நான் தற்போது வசிக்கும் ஊாின் படம் அதன் வரலாறு போன்றவற்றை சேகரித்து விரைவில் ஒரு தொகுதியாக இணைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நான் பிறந்து தவண்டு செம்பாட்டு மண் குளித்த இடம் கோப்பாய் . பல கல்விமான்களையும் பல விவசாயிகளையும் உள்ளடக்கிய வளங்கொளிக்கும் கிராமம் . இதன் எல்லைகளாக வடக்கே இருபாலையும் , கிழக்கே கைதடியும் , மேற்கே உரும்பிராயும் , தெற்கே நீர்வேலியையும் உள்ளடிக்கியது .

 

இது தவறான தகவல். கோப்பாயின் வடக்கில் தான் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை தெற்காக இருக்கலாம். தெரியவில்லை. :unsure:

 

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லமும் உள்ளது. (இராசவீதியில் அமைந்துள்ளது. இப்பொழுது உள்ளதா அல்லது அண்மைக்காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டவற்றில் இதுவும் அழிக்கப்பட்டு விட்டதா தெரியவில்லை)

கிருஷ்ணர் கோவில் உள்ளது. வேறு கோவில்களும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கு கரவெட்டி அதிகம் பரிச்சயமாக இருப்பது புதிய தகவல்! வடமராட்சிப் பகுதி யாழின் பிறபகுதிகளில் இருந்து நீரேரி, உப்புகடல் போன்றவற்றால் பிரிக்கப்பட்டிருப்பதால் பிற ஊர்களைச் சேர்ந்தவர்கள் அலுவல்கள் இல்லாமல் வருவதில்லை.

கரவெட்டி அருகாமையில் இருந்தும் அதிகம் எனக்கு பரிச்சயமற்ற ஊர். பிரதான வீதிகளைத் தாண்டி ஒழுங்கைகளால் அதிகம் கரவெட்டியினூடு பயணிக்கவில்லை. ஆனாலும் சம்பந்தர் கடையடிப் பகுதியில் வசித்த நண்பர்களை சந்திக்க சில தடவை போயிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கிருபன்  திரிக்கும் நேரத்திற்கும்...........

எனது ஊரைப்பற்றி  எழுதணும் என்று ஆசை

அதற்கு வழி அமைத்ததற்கு  நன்றிகள்...........

 

மீண்டும் வருவேன்....

Link to comment
Share on other sites

இது தவறான தகவல். கோப்பாயின் வடக்கில் தான் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை தெற்காக இருக்கலாம். தெரியவில்லை. :unsure:

 

கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லமும் உள்ளது. (இராசவீதியில் அமைந்துள்ளது. இப்பொழுது உள்ளதா அல்லது அண்மைக்காலத்தில் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டவற்றில் இதுவும் அழிக்கப்பட்டு விட்டதா தெரியவில்லை)

கிருஷ்ணர் கோவில் உள்ளது. வேறு கோவில்களும் இருக்கலாம்.

 

இது நான் வேலையாலை வந்து வேலை களைப்போடைகிருபனின்ரை ஆக்கத்தை ஊக்கப்டுத்த வேணும் எண்டதுக்காக  எழுதினது . என்னட்டை திசையறி கருவி இல்லை . கோப்பாய் சந்தியிலை நிண்டு கொண்டு  திசையளை சொன்னன்.  யாழ்ப்பாண பக்கம் போனால் அடுத்தது இருபாலை . கீழை கோப்பாய் தாண்டினால் பருத்தித்துறை பக்கம் அடுத்தது நீர்வேலி . இங்காலை கோப்பாய் சந்தியிலை இடக்கை பக்கம் திரும்ப  கைதடி . வலக்கை பக்கம் திரும்பினால் இராசபாதையை கடந்து உரும்பிராய்க்கு வரலாம் . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கிருபன்  திரிக்கும் நேரத்திற்கும்...........

எனது ஊரைப்பற்றி  எழுதணும் என்று ஆசை

அதற்கு வழி அமைத்ததற்கு  நன்றிகள்...........

 

மீண்டும் வருவேன்....

 

வேண்டாம் விசுகர் வேண்டாம்   :(  :( .......கருவில் இருக்கும் சிசுவிற்கும் புங்கையூர் வரலாறு தெரியும். :lol:  :D  :)

images.jpeg

Link to comment
Share on other sites

இது நான் வேலையாலை வந்து வேலை களைப்போடைகிருபனின்ரை ஆக்கத்தை ஊக்கப்டுத்த வேணும் எண்டதுக்காக  எழுதினது . என்னட்டை திசையறி கருவி இல்லை . கோப்பாய் சந்தியிலை நிண்டு கொண்டு  திசையளை சொன்னன்.  யாழ்ப்பாண பக்கம் போனால் அடுத்தது இருபாலை . கீழை கோப்பாய் தாண்டினால் பருத்தித்துறை பக்கம் அடுத்தது நீர்வேலி . இங்காலை கோப்பாய் சந்தியிலை இடக்கை பக்கம் திரும்ப  கைதடி . வலக்கை பக்கம் திரும்பினால் இராசபாதையை கடந்து உரும்பிராய்க்கு வரலாம் .

 

திசையறி கருவி இல்லை என்றால், கோப்பாயிலிருந்து யாழ்ப்பாண நகர பக்கம் போனால் அது தெற்கு. :) இப்ப திசையை சரிபாருங்கள். :)

 

நுணா அண்ணா இணைத்த படத்திலும் பார்க்கலாம். கோப்பாய்க்கு வடக்கு பக்கம் நீர்வேலி உள்ளது. :rolleyes: இருபாலை பற்றி அதில் இல்லை. இருபாலை கோப்பாய்க்கு தெற்கு பக்கமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சுண்டிக்குளியா? :rolleyes::) குளத்தடி பிள்ளையார் கோவில், பொஸ்கோ பாடசாலை போன்றவற்றுக்கு அருகிலா? :rolleyes: அல்லது சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பக்கமா? :rolleyes: சுண்டிக்குளி பற்றி எழுதுங்கள். வாசிக்க ஆவல். :)

 

துளசி, நீங்க சொல்லுற குளத்தடிப் பிள்ளையார் கோவில் குளத்தில வளரிற நுளம்புகளின் 'சங்கீதம்' கொஞ்சம் வித்தியாசமான இனிமை கலந்து இருக்கும்! :D

 

றக்கா ரோட்டுக்கும், நாவலர் வீதிக்கும் இடையால தொடுத்து ஒரு றோட்டுப் போகும்! பேர் என்னவோ 'அரசடி வீதியோ' என்னவோ!

 

நல்ல 'குளுமையான' வீதி! :D

 

இதுக்குள்ள தானா சீனா வந்து கருத்து வைச்சால், அதுக்கு நான் பொறுப்பில்லை! :o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.