Jump to content

ஆட்டுத்துவசமும் கனவும்..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை.

ஆனால் இந்தக்கனவு மட்டும்...........

 

புதுவருடப்பிறப்பன்று 01.01.2014  எமது பெற்றோரின் முக்கிய உறவு ஒன்றுக்கு முதலாவது துவசம்.

அழைப்பு வந்தது.

போறதாகவே இல்லை.

31.12.2013 அன்று இரவு

அண்ணரின் பேத்திக்கு பிறந்தநாள்.

போய் சாப்பிட்டு விட்டு கதைத்துக்கொண்டிருந்த போது

இந்த துவசவீட்டுக்கதையும் வந்தது

அதில் பலர் அதற்கு நாளை  போவதாக சொன்னார்கள்

சும்மா இருங்கோ

நாளைக்கு  புது வருடப்பிறப்பு.

அந்த மாதிரி  சாப்பிடும் நாள்

மரக்கறி  சாப்பாடு எனக்கு வேண்டாம்

நான் வரமாட்டன்.....

 

சொல்லிவிட்டு

இரவு 12 மணிக்கு எல்லோரும் முதல் வீட்டுக்கு வந்து சாமிக்கு விளக்கு வைத்து

புது வருடம் கொண்டாடி  எல்லோருக்கும் வாழ்த்துச்சொல்லி  நித்திரைக்குப்போகும் போது

நேரம் அதிகாலை 1மணி.

 

துவசம்

அதை மறந்தே விட்டிருந்தேன்

 

நாளை  அம்மாவிடம் போகணும்

ஆசி வேண்டி  கை விசேசம் வாங்கணும்

அதன்பின் எனது மனைவியின் அம்மாவிடம் போகணும்

எனது பெரியக்காவிடம் போகணும்

இது தான் புதுவருட திட்டம்.

 

அதிகாலையில் ஒரு கனவு

அந்த துவச வீட்டுக்கு போகின்றேன்

அந்த வீட்டுக்காறி  என்னை வரவேற்று அழைத்துச்செல்கிறார்

வரமாடடன் என்று சொன்னதாக கேள்விப்பட்டம் என்கிறார் சிரித்தபடி.

 

உள்ளே  போனதும்

கடவுள் சிலைகள் இருக்கின்றன

அதற்குள் எனது தகப்பனார் இருக்கிறார் சிலையாக.

பட்டு வேட்டி சால்வை அவரை சுத்தி கட்டப்பட்டிருக்கிறது

ஆனால்  முகம் மட்டும் என்னைக்கண்டதும் சிரிக்கிறது

மிகவும் அழகாக இருக்கிறார்

எனது தகப்பனார் இறந்து 10 வருடங்கள் (2004)

இது வரை அவரை நான் கனவிலும் கண்டதில்லை.

 

அப்படியே  உள்ளே போகின்றேன்

இந்த வருடம் அகால மரணமான எனது சின்னத்தார் வந்து என்னை  அழைத்துப்போகின்றார்

பட்டு வேட்டி கட்டியிருக்கிறார்

உடம்பில் வேறு எந்த உடுப்புமில்லை

பட்டு வேட்டியும் மடித்து தூக்கி  கட்டி இருக்கிறார்.

இவரும்  இறந்து 6 மாதமாகிறது

இதுவரை கண்டதில்லை.

ஆனால் இவர் இறந்தபோது

இந்த  துவச வீட்டைச்சேர்ந்த அனைவரும் அவருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்கள்

அவர் இறந்தபோது இவர்கள் தான் தூக்கினார்கள்

அத்தாரின் சொந்த மருமகன் தான்  இந்த வீட்டுக்காறன்.

உருவ அமைப்பு அப்படியே  அத்தாரைப்போல........

 

காலையில் மனைவியை எழுப்பி

முதல் வெலையாக துவச வீட்டுக்கு   போறோம் என்கின்றேன்.

மனைவிக்கு ஆச்சரியம்

2 பேர் அங்கை எனக்காக நிற்கினம் என்று கனவைச்சொல்கின்றேன்..

அதன்படி அன்றைய நாள் துவச வீட்டிலேயே  தொடங்கியது......

 

இதில  இன்னொரு விடயமும் இருக்கு

அத்தாருக்கு அடுத்து

அந்த இடத்தில் இன்னும் 3 பேரை நான் கண்டேன்

ஒருத்தர் எனது மச்சாள் முறையானவர்

வயசு 60 க்கு மேலிருக்கும்

அடுத்தவர்

எனது ஒன்று விட் சகோதரர்

இவருக்கும் 60 வயசாகலாம்

அடுத்தவர்

மிகவும் அளமையானவர்

எனது சொந்த மச்சானின் மகன்

வயசு 30 இருக்கலாம்.....

என் மனதைக்குடைவது 

இவர்களை  ஏன் நான் அங்கு கண்டேன்...............???

 

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை.

ஆனால் இந்தக்கனவு மட்டும்...........

 

யாராவது

மெஞ்ஞான

விஞ்ஞான விளக்கம் தந்தால்

மனம் அமைதியடையலாம்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாராவது மெஞ்ஞான விஞ்ஞான விளக்கம் தந்தால் மனம் அமைதியடையலாம்..........
வாழ்க்கை விளக்கம் :---இளம் வயதில் எமக்கு இப்படியான கனவுகள் வருவதில்லை நாம் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதும் இல்லை...வரும் கனவுகள் யாவும் இனிப்பாக இருக்கும்..சினிமா பெண்நட்சத்திரங்களும் அழகிய ஊர் பெண்களும் தான் வருவார்கள்....ஆனால் இப்ப வாழ்க்கையை அதிகம் நாம் சிந்திக்கிறோம் அதுதான் இந்த கனவு என நினைக்கிறேன்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை விளக்கம் :---இளம் வயதில் எமக்கு இப்படியான கனவுகள் வருவதில்லை நாம் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதும் இல்லை...வரும் கனவுகள் யாவும் இனிப்பாக இருக்கும்..சினிமா பெண்நட்சத்திரங்களும் அழகிய ஊர் பெண்களும் தான் வருவார்கள்....ஆனால் இப்ப வாழ்க்கையை அதிகம் நாம் சிந்திக்கிறோம் அதுதான் இந்த கனவு என நினைக்கிறேன்....

 

வணக்கம் புத்தர்

உங்களது கருத்து மூலம் பல விடயங்களை  உணரக்கூடியதாக உள்ளது

வயசு

அனுபவம்

வாழ்வில் முதிர்ச்சி

அடுத்த கட்டம்.............

 

இப்படி பலவகையாக என்னை  சிந்திக்க  வைத்தது தங்கள் பதில்.

 

ஒருவகையில்

நாத்திகத்துக்கும்

ஆத்திகத்துக்குமிடையில் ஊசலாடிய  நான்..

சற்று ஆத்திகத்தின் பால் சாய்வது தெரிகிறது

இதற்கு உங்களது பதிலும் துணைவருகிறது

 

நன்றி  பத்தர்

நேரத்திற்கும் கருத்துக்கும்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

உள்ளே  போனதும்

கடவுள் சிலைகள் இருக்கின்றன

அதற்குள் எனது தகப்பனார் இருக்கிறார் சிலையாக.

பட்டு வேட்டி சால்வை அவரை சுத்தி கட்டப்பட்டிருக்கிறது

ஆனால்  முகம் மட்டும் என்னைக்கண்டதும் சிரிக்கிறது

மிகவும் அழகாக இருக்கிறார்

எனது தகப்பனார் இறந்து 10 வருடங்கள் (2004)

இது வரை அவரை நான் கனவிலும் கண்டதில்லை.

 

அப்படியே  உள்ளே போகின்றேன்

இந்த வருடம் அகால மரணமான எனது சின்னத்தார் வந்து என்னை  அழைத்துப்போகின்றார்

பட்டு வேட்டி கட்டியிருக்கிறார்

------

 

பத்து வருடத்தின் பின்பு... உங்களது அப்பாவை கண்டிருக்கின்றீர்கள் விசுகு. சந்தோசம்.

அவருடன் உங்களது, சின்னத்தாரும் நின்றிருக்கின்றார்.

இறப்பின் பின்பும்... உறவுகள் விட்டுப் போவதில்லை என்பதற்கு, உங்கள் கனவே சாட்சி.

 

நானும்... புது வருடப் பிறப்பன்று, இறந்த பல நெருங்கிய உறவினர் ஒன்று கூடியிருப்பது போல் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவைப் பற்றி, இரண்டு நாட்களாக... அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு இனிமையாக இருந்தது.

Link to comment
Share on other sites

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

 

இறந்தவர்களை... கனவில் கண்டால், வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடக்கும் என்றும்...

திருமண வீட்டை கனவில் கண்டால்.... வீட்டில் துக்க நிகழ்ச்சி நடக்கும், என்றும் அப்பம்மா சொல்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னில ஒரு நரிக்குணம் உண்டு, விசுகர்!

 

ஒரு நல்ல காரியமும், துக்கமான காரியமும் ஒரே நாளில் வந்தால், துக்கமான காரியத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பது!

 

இதற்கான உளவியல் காரணம், உங்கள் 'ஆழ்மனது' என்றே நினைக்கிறேன்! உங்கள் ஆழ்மனதானது நீங்கள் செய்வது சரியல்ல என்று உங்களுக்கு அடித்துச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்த வழிதான் இந்த கனவாகும்! அதற்காகவே, ஆழ்மனது உங்கள் அப்பாவைத் தெரிந்தெடுத்தது!

 

உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்குமான புரிந்துணர்வு, நிச்சயமாக ஒரு கண்டிப்பின் அடிப்படையிலேயே ஆரம்பித்திருக்கும்! சில நல்ல பழக்க வழக்கங்களை, சுமுதாய நடைமுறைகளை, ஊட்டி வளர்த்ததில் உங்கள் அப்பாவே முன்னிலை வகித்திருக்கக் கூடும்!

 

முன்னர் வராமல், இப்போது மட்டும் இந்தக் கனவு வரவேண்டிய காரணம், நீங்கள் இப்படியான ' முரண்பாட்டு மனநிலை' வந்த சந்தர்ப்பங்களில் 'துக்க கரமான' நிகழ்வுகளுக்கு, 'முன்னுரிமை' கொடுத்திருக்கலாம்! அதனால் கனவுகளுக்குத் தேவை இருக்கவில்லை!

 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் மிகவும் ' இரக்க சிந்தனை' உள்ளவர் என்பது!

 

அது நல்லது தானே! கனவைப் பற்றிக்கனக்க யோசிக்காதீர்கள்! :D

 

பச்சையும் முடிஞ்சு போச்சுது! பிறகு வாறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கல் எடுக்காதீர்கள் விசுகு எதற்கும் சிக்மண்ட் ப்ரொயிட்டின் கனவு தத்துவத்தை படியுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடத்தின் பின்பு... உங்களது அப்பாவை கண்டிருக்கின்றீர்கள் விசுகு. சந்தோசம்.

அவருடன் உங்களது, சின்னத்தாரும் நின்றிருக்கின்றார்.

இறப்பின் பின்பும்... உறவுகள் விட்டுப் போவதில்லை என்பதற்கு, உங்கள் கனவே சாட்சி.

 

நானும்... புது வருடப் பிறப்பன்று, இறந்த பல நெருங்கிய உறவினர் ஒன்று கூடியிருப்பது போல் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவைப் பற்றி, இரண்டு நாட்களாக... அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு இனிமையாக இருந்தது.

 

 

நன்றி  சிறி

 

உண்மைதான்

வருடம் பிறந்த அந்த கணத்தில் அவர்களைக்கண்டதால்

மனசு ரொம்ப சந்தோசமாகவும்

தெளிவாகவும் இருந்தது

புதுவருத்தன்று என்பதால் மேலும் சந்தோசம்

அது தான் இங்கு அதைப்பதியத்தூண்டியது

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

 

 

நன்றி  அலை

தங்களது அனுபவத்தையும் பதிந்ததற்கு...

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் நிலைப்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னில ஒரு நரிக்குணம் உண்டு, விசுகர்!

 

ஒரு நல்ல காரியமும், துக்கமான காரியமும் ஒரே நாளில் வந்தால், துக்கமான காரியத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பது!

 

இதற்கான உளவியல் காரணம், உங்கள் 'ஆழ்மனது' என்றே நினைக்கிறேன்! உங்கள் ஆழ்மனதானது நீங்கள் செய்வது சரியல்ல என்று உங்களுக்கு அடித்துச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்த வழிதான் இந்த கனவாகும்! அதற்காகவே, ஆழ்மனது உங்கள் அப்பாவைத் தெரிந்தெடுத்தது!

 

உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்குமான புரிந்துணர்வு, நிச்சயமாக ஒரு கண்டிப்பின் அடிப்படையிலேயே ஆரம்பித்திருக்கும்! சில நல்ல பழக்க வழக்கங்களை, சுமுதாய நடைமுறைகளை, ஊட்டி வளர்த்ததில் உங்கள் அப்பாவே முன்னிலை வகித்திருக்கக் கூடும்!

 

முன்னர் வராமல், இப்போது மட்டும் இந்தக் கனவு வரவேண்டிய காரணம், நீங்கள் இப்படியான ' முரண்பாட்டு மனநிலை' வந்த சந்தர்ப்பங்களில் 'துக்க கரமான' நிகழ்வுகளுக்கு, 'முன்னுரிமை' கொடுத்திருக்கலாம்! அதனால் கனவுகளுக்குத் தேவை இருக்கவில்லை!

 

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் மிகவும் ' இரக்க சிந்தனை' உள்ளவர் என்பது!

 

அது நல்லது தானே! கனவைப் பற்றிக்கனக்க யோசிக்காதீர்கள்! :D

 

பச்சையும் முடிஞ்சு போச்சுது! பிறகு வாறன்!

 

நன்றியண்ணா

நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கையில் சரியாகத்தெரிகிறது

எனது அப்பருக்கும் எனக்குமான நிலை என்பது மிகவும் அன்பு சார்ந்தது

(5 பெண்களுக்கு  பின் நான் பிறந்ததால்)

இதுவரை  அவருடைய  சொல்லை  நானும்

வளர்ந்த பின் எனது சொல்லை அவரும் தட்டியதேயில்லை.

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால்

அவர் கடவுளுக்கு போடப்பட்டது போல்

அவரது உருவத்துக்கு பட்டு வேட்டி சால்வை அணியப்பட்டு 

அவர் கடவுள்களுக்கு நடுவில் இருந்தது

சாகும்வரை எங்கு சென்றாலும்

தேவாரத்தை மட்டுமே பாடிய  அவருக்கு கிடைத்த கொடை என்று நினைக்கின்றேன்.

 

நன்றியண்ணா

உங்களிடம் கருத்து வாங்குவதும் அவரை எனக்கு ஞாபகப்படுத்தும்.. :)

தயவு செய்து கல் எடுக்காதீர்கள் விசுகு எதற்கும் சிக்மண்ட் ப்ரொயிட்டின் கனவு தத்துவத்தை படியுங்களேன்.

 

 

உங்களுக்கு திருப்பி  ஒரு விடயத்தைப்போடுகின்றேன்

எதைப்படிக்கணும் என்று சொல்லுங்கள்.......... :lol:

 

இந்த கனவில்

இறந்த எனது தகப்பனார்

மற்றும் எனது அத்தார்  தவிர

இன்னும் மூன்று பேரைக்கண்டேன்  அல்லவா??

அவர்களை  ஏன் அங்கு கண்டேன்???

போகப்போகிறார்களோ???? :lol:  :lol:  :lol:

 

இதை மனைவியிடம் சொன்ன போது 

அவர் சொன்ன  பதில்

நீங்களும் அங்கு தானே இருந்தீர்கள்??

அடிப்பாவி............... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.