Jump to content

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு அரசியலும், இடிப்பு அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு அரசியலும், இடிப்பு அரசியலும்

ஷண்முகசுந்தரம்

sanmugam%20(1).jpg

ஒருமுறை ஐயா நல்லக்கண்ணுவுடன் முள்ளி வாய்க்கால் நினைவுமுற்றம் செதுக்க ஆரம்பிக்கப் பட்ட ஆரம்ப நாட்களில் அதனைப் பார்வையிடச் சென்றிருந்தேன். தமிழ்ப்பாவை சிலைக்கு நீளமான ஒற்றைக்கல் வந்தநேரம் அது. மற்ற சிற்பங்களுக்கும் கூட பொருத்தமான கற்கள் வந்து கொண்டிருந்தன. அக்கற்களைத்தேடி நீண்ட தொலைவு சென்று வந்தது பற்றியும், கற்களின் தன்மையைப் பற்றியும், அது எப்படி கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அங்கு பணிபுரிந்து வந்த தோழர்கள் சொல்லக்கேட்டு பிரமித்து நின்றோம். அவ்விடத்தில் ஏராளமான தேர்ந்த சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உளிச்சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன. மகேந்திரவர்மப் பல்லவன் உயிரோடு இருந்திருந்தால் இம்முற்றத்தை மற்றுமொரு மாமல்லபுரமாகக் கண்டி ருப்பான். ஆனால் மாமல்லபுரத்துச் சிற்பிகளின் மனதில் கரைபுரண்டு ஓடியிருக்கும் மகிழ்ச்சி இச்சிற்பிகளுக்கு நிச்சயம் இருந்திருக்காது. உற்சாகமாக வேலை செய் தாலும் அவர்கள் மனதில் சொல்லொணா வேதனையும் ஓடிக்கொண்டிருந்திருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவாக உருவாக்கப் பட்டிருக்கும் நினைவுச் சின்னம். முள்ளிவாய்க்காலில் இக்கொடும் உலகத்தாரால் கைவிடப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களின் கடைசி நிமிடங்களைச் சித்தரிக்கும் சிற்பங்களின் தொகுப்பு. அப்படுகொலைகளைத் தடுக்கவேண்டி தமிழகத்தின், உலகத்தின் பல பகுதிகளில் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட தமிழர்களின் சிற்ப அணிவகுப்பு. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் அமைதியையும், கம்பீரத்தையும் நமக்குள் ஏற்படுத்தும்.முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றச் சிற்பங்கள் ஆற்றமுடியாத மனவேதனையையும், கண்ணீரையும் நமக்குத் தரும். அந்நினைவிடத்தின் ஓவியங்களும், புகைப்படங்களும், சிலைகளும் தமிழினத்திற்குக் கிடைத்த அற்புதமான கொடைகள். தமிழின், தமிழரின் வரலாற்றைப் பறைசாற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.

படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினை வாகத் தமிழகத்திலும், உலகெங்கிலும் யார் வேண்டுமானாலும் நினைவுச் சின்னங்கள், ஸ்தூபிகள், நடுகல்கள் எழுப்பலாம்.தொல்தமிழரின் மரபு அது. தமிழர்களிடம் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும்கூட உலகப்போர்களில் உயிர்நீத்த மக்களின், போர்வீரர்களின் நினைவுச் சின்னங்கள் ஆயிரக்கணக்கில் எழுப்பப் பட்டிருக்கின்றன. ஈழத்தில் இலங்கைப் படையினருடனான போரின்போது உயிர்நீத்த ஆயிரக்கணக்கான புலிகளின் நினைவாக மாவீரர் துயிலகங்கள் ஏற்படுத்தப் பட்டன.2009க்குப் பிறகு அந்நினைவிடங்களை மிகக்கேவலமாக இடித்துத் தள்ளி தானும் ஒரு சிங்கள தலிபான்தான் என்பதை இலங்கை அரசு காட்டிவிட்டது. ஈழத்தில் நடைபெற்ற போர் சாட்சியங்கள் எல்லா வற்றையும் சிங்கள அரசு தொடர்ச்சியாக அழித்து வருவதைக் கண்ணுற்ற உலகத்தமிழர் பேரமைப்பைச் சேர்ந்த பழ.நெடுமாறன் அவர்கள் தஞ்சாவூரில் இம்முற்றத்தை வடிவமைத்திருக்கிறார். மூன்று வருடங்கள் அதற்காக மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். எண்ணற்ற தேர்ந்த சிற்பிகளும், பொறியாளர்களும் அதே அளவு உழைத்திருக்கிறார்கள். உலகெங்கும் ஏராளமான தமிழர்கள் இந்நினைவகம் உருவாக நிதி கொடுத்தி ருக்கிறார்கள்.

இந்நினைவு முற்றத்தை தமிழகத்தின் தலைநகரில், சென்னையில், தமிழக அரசாங்கமே தனது செலவில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஈழத்தமிழர்களை மையமாகக் கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் நடத்தி, மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் மிதந்து வந்திருக்கும் சுயநல அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து தங்கள் தவறுக்குப் பிராயச்சித்தமாக இந்நினைவிடத்தை அமைத்திருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை.

தமிழ்நாட்டில் ஏராளமான அரசியல்வாதிகள் ஏரிகளை விழுங்கியிருக்கிறார்கள். ஏராளமான முதலாளி கள் கடற்கரைகளைக் கூட ஏப்பமிட்டிருக்கிறார்கள்.ஏராளமான முதலாளிகள் சென்னையின் சாலைகளையும், தெருக்களையும் ஆக்கிரமித்து வணிக நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறையினரின் சாலைத் திட்டங்கள் பல்லாயிரக்கணக்கான சாமானியர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கி யிருக்கிறது. இதுவெல்லாம் அரசின் கண்களுக்குத் தெரிவதில்லை. அனுமதி பெற்று எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரும்,அதன் பூங்காவும், விலை மதிப்புமிக்க நீரூற்றும்,விளக்குகளும் அரசின் கண்களுக்கு ஆக்கிரமிப்பாகத் தெரிகின்றன.முற்றத்தில் ஆயிரம் அரசியல் இருக்கலாம்.ஆனால் ஜெய லலிதாவின் அரசு செய்த இச்செயல் அறமாகுமா? அறமில்லாத செயலைச் செய்யும் ஒரு அரசு வீழ்ந்து அழிந்தல்லவா போகும்!

sanmugam%20(2).jpg


முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் உருவாக்கப்பட்ட விதத்தில் எவ்வித அரசியலும் இல்லை என நான் சொல்லவரவில்லை. அரசியலற்ற தமிழ்த்தேசிய அரசி யலை யாராவது சுட்டிக்காட்ட முடியுமா? தமிழருக்கான ஒரு நினைவுச் சின்னத்தை நடராஜன் என்ற தனிநபர் சார்ந்து உருவாக்கியவிதம் எவருக்கும் ஆச்சரியத்தைத் தரவில்லை.ஏனென்றால் தஞ்சையில் தமிழ்த்தேசியம் சம்பந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள் நடராஜனின் தமிழரசி மண்டபத்தில்தான் வழக்கமாக நடக்கும். தமிழ்த்தேசிய நிகழ்ச்சிகளின் புரவலர் அவர்.சென்ற ஆண்டு அவர் நடத்திய வழக்கமான பொங்கல் விழாவின்போது தான் அணிந்திருந்த நகைகளையும், தன்னுடைய வாகனத்தை விற்று அதிலிருந்து வரக்கூடிய நிதியையும்கூட நெடுமாறனால் எழுப்பப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே தானமாகக் கொடுத்தி ருந்தார். எப்போதுமே நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்குப் புரவலர்களைப் பிடிக்கும்தானே! சில புரவலர்கள் மேடைக்குக் கீழே காட்சி தருவார்கள். சிலர் மேடையில்.சிலர் அவர்களே எல்லாம். இப்படியாக உருவானதுதான் தமிழ்த்தேசியர் நடராஜன் நட்பு. மொழிப்போர் வீரர் என்பது அவரின் கூடுதல் மதிப்பு. முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவாக ஒரு நினைவிடம் ஒன்று சென்னை யில் அமைக்கப்படவேண்டும் என்றுதான் தமிழ்த் தேசியர்கள் விரும்பினார்கள்.நிதிப்பிரச்சினையும், இடப்பிரச்சினையும் அம்முயற்சியைத் தோற்கடித்தது. பின்னர் நடராஜனின் முன்னெடுப்பால் அந்நினைவிடம் தஞ்சைக்கு மாற்றப்பட்டது.நெடுமாறனைப் பொறுத்த வரை தமிழ்த்தேசியத்திற்கு யார் உதவி செய்தாலும் துரோகிகளைத் தவிர-அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள் பவர்.அந்தப் பக்குவ மனநிலைதான் நடராஜனையும் ஏற்றுக் கொண்டது.அவருடைய அரசியல் பின்னணி நெடுமாறன் அறியாதது அல்ல.ஒருமுறை நெடுமாறன் சிவசேனைத்தலைவர் பால்தாக்கரேவின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.அங்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளம் பூரித்துப் போனார்.தாக்கரேவைப் புகழ்ந்தார்.ஆனால் இதே தாக்கரேதான் தமிழர்களை பம்பாய் நகரத்திலிருந்து துரத்தியவர்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பம்பாயில் முஸ்லிம்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களில் முன்னணியில் இருந்தவர்.இதனையும் நெடுமாறன் அறியாதது அல்ல.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஏற்படுத்தப்பட்ட, அது திறக்கப்பட்ட விதங்களில் நிலவிய அரசியல் கூத்துகள் வெளியே சொல்லப்படுவதற்கு முன்னர் அதன் சுற்றுச்சுவர் இடிப்பு அரசியல் கிளைபரந்து விரிந்து விட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழா அரசியல் சற்று சுவாரசியமாக இருக்கும். முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்புவிழா நிகழ்வுகளுக்கு தமிழினத் துரோ கிகளுக்கு அழைப்பு கிடையாது என நெடுமாறன் அறி வித்தார். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியையும் அவரது டெசோ கூட்டத்தாரையும்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.இன அழிப்புப்போரின் இறுதிக் கட்டத்தில் கருணாநிதி அவர்களின் கையாலாகாத்தனத் தினைச் சுட்டிக்காட்டும் நெடுமாறனின் கோபம் நமக்குப் புரிகிறது. ஆனால் திறப்புவிழா நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சி அழைக்கப்பட்டிருந்தது.பொன்.ராதா கிருஷ்ணன் முதல்நாள் நிகழ்ச்சியில் பேசினார்.நம்முடைய கேள்வி இதுதான்.

பாரதிய ஜனதா கட்சிக்கும், தமிழ்த்தேசியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சமீபத்திய திருச்சிப் பொதுக்கூட்டத்தில்கூட நரேந்திர மோடி, இந்தியாவின் மொழிவாரிப் பிரிவினையைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களை அங்கீகரிக்காதவர்கள் இவர்கள்.முதல்நாள் நிகழ்வில் பொன்ராதாகிருஷ்ணன் பேசுகிறார்:”இன்று சூரசம்ஹார நாள். நான் மௌனவிரதம் பூண்டிருக்கும் நாள். ஒவ்வொரு வருடமும் இதே தினத்தன்று திருச்செந்தூர் சென்று அமைதியாக இருப்பேன். யாரிடமும் பேசமாட்டேன்.” சம்ஹாரம் நடக்கும்போது மௌனமாகிவிடுவேன் என்று அவர் பேசியது எனக்கு நன்றாகப் புரிந்தது.2002இல் குஜராத்தில் முஸ்லிம்களின் சம்ஹாரம் நடந்தபோது பொன்னாரின் தலைவர் நரேந்திரமோடி அமைதியாக இருந்தது ஏன் என்பதும் எனக்குப் புரிந்தது. மோடியோ, பொன்னாரோ, இவர்களின் கூடாரமாகிய பா.ஜ.க.வோ குஜராத் படுகொலைகள் பற்றிய எந்த ஒரு சுய விமர்சனத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சித் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (திமுக,மதிமுக,பாமக இவர்கள் அதில் அங்கம்) மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளுக்கு, ஈழப்போராட்டத்திற்கு அவர்கள் உதவினார்கள் என்னும் கருத்து தமிழ்த்தேசியர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆனால் வரலாறு என்ன சொல்கிறது? 2000ம் ஆண்டின் ஆனையிறவுப் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி பெற்று யாழ்ப்பாணம் சுற்றி வளைக்கப்பட்டு, இராணுவமுகாமில் இருந்த 40000க்கும் மேற்பட்ட வீரர்கள் சரணடையும் நிலைக்கு வந்தநிலையில், தனி ஈழம் பிரகடனப்படுத்தப்பட்டுவிடும் என்னும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் சிங்கள ராணுவம் எப்படி அம்முற்றுகையிலிருந்து மீண்டது? இந்திய அரசின் உதவியோ, ஆலோசனையோ, உத்தரவோ இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.அப்போதைய மத்திய அரசு என்பது மதிமுகவும், திமுக வும் அங்கம் வகித்த வாஜ்பாய் அரசு.தனி ஈழம் மலர இருந்த வாய்ப்பு இப்படியாக அன்று பறிபோனது.

இந்நிகழ்வுக்குப் பிறகு 2002 பிப்ரவரியில் அன்றையத் துணைப் பிரதமர் அத்வானி இலங்கையிடம் விடுத்த கோரிக்கை என்ன தெரியுமா? "பிரபாகரனைப் பிடித்து எங்களி டம் ஒப்படையுங்கள்.” அப்போதும் மதிமுக கூட்டணியில் நீடித்தது.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரான ஒரு நாடாளுமன்ற விவாதத்தின்போது பா.ஜ.க.வின் தலைவர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்: ‘‘இலங்கையில் நடந்ததை இனப் படுகொலை எனக்குறிப்பிடக்கூடாது.” பின்னர் அவர் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்றது. ராஜபக்சே அளித்த அன்புப் பரிசான நெக்லஸ் ஒன்றையும் வாங்கி வந்தார்.

ராஜபக்சேவை பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச அரசு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றது. வைகோ அங்கு சென்று போராடிவிட்டு வந்தது தனிக்கதை. அன்று ஆயுதபாணிகளாக இருந்த 40000 சிங்கள ராணுவ வீரர்களைக் காப்பாற்ற அக்கறை கொண்ட பா.ஜ.க.வினர், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தபோது கொல்லப்பட்ட 150000 நிராயுதபாணியான தமிழ் உயிர்களைக் காப்பாற்ற ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதுதான் வரலாற்று சோகம். பாரதீய ஜனதாக் கட்சியினர் ஈழம் சார்பாகக் குரல் தரும்போதெல்லாம் அங்குள்ள தமிழர்களை இந்துக்களாக விளிப்பார்கள். இந்துகோவில்கள் இடிபடுவது மட்டும் அவர்களது கண்களுக்குத் தெரியும்.எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப்போராட்டத்தை ஆரம்பம் முதலே வெறுக்கும் சுப்பிரமணியசாமி இப்போது பா.ஜ.கவில். பின்னர் எதற்காக தமிழ்த் தேசியர்கள் பா.ஜ.க.வோடு கூட்டுசேர வேண்டும்?சரி, தமிழ்த்தேசியர்கள் நடராஜன் கூட்டுக்குத் திரும்புவோம்.முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்புவிழாவிற்காக சாதிச்சங்கங்கள் நடராஜனை மையப்படுத்தி வாரஇதழ்களில் கொடுத்த விளம்பரங்கள் மிகவும் அருவருப்பூட்டுபவையாக இருந்தன. இது ஒரு சாதிச்சங்க நிகழ்வோ என்னும் தோற்றம் ஏற்பட்டது. விழாப் பந்தலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சாதிச்சங்கங்களின் விளம்பரப் பலகைகள் எப்படி நெடுமாறன் அவர்களின் பார்வைக்குப் படாமல் போயின அல்லது பார்வையில் பட்டும் அதை அவர் அனுமதித்தாரா?

sanmugam%20(3).jpg

முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தமிழ்த்தேசிய உணர்வு இன்று அதிகம் தேவைப்படுகிறது.மத்திய அரசின் பாராமுகத்துடன் தமிழக மீனவர்களின் வாழ் வாதாரம் பறிக்கப்படுகிறது.நதிநீர்ப் பகிர்வில் நேர்மை யான உரிமைகள் தமிழகத்திற்கு மறுக்கப்படுகின்றன.தமிழகம் அணுமின்கழிவுகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம் போராட்டம் இரண்டு ஆண்டுகளைக் கடந்தபின்பும் அரசுகளால் அலட்சியம் செய்யப்படுகிறது. ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றிய சர்வதேச விசாரணை இன்னமும் முன்னெடுக்கப் படவில்லை. இனப்படுகொலைக்குப் பின்னரான ஈழத்தில் தமிழ்மக்களின் வாழ்வாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறது. எல்லாக் கடமைகளையும் முன்னெடுக்க தமிழகத்தில் வலுவான தமிழ்த்தேசிய இயக்கமும், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்ட இயக்கமும் வலுவாகத் தேவைப்படும் இந்நேரத்தில் தமிழ்த் தேசியர்களின் சாதி நோக்கிய,இந்துத்வா நோக்கிய போக்குகள் தமிழ்த்தேசியத்திற்கு சீர்செய்ய முடியாத நோயை ஏற்படுத்திச் செல்லும்.

சரி.தமிழ்த்தேசியத்திற்கு வருவோம்.தமிழ்த்தேசியம் என்றால் என்ன?அதன் மையச்சரடு என்ன?பெரியார் தமிழர் இனம், திராவிடர் இனம் பேசினார்.எதற்குப் பேசினார்? தமிழர்களின் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற் காக, பார்ப்பனீயத்திலிருந்து விடுதலை பெற,சாதி வெறியிலிருந்து விடுதலை பெற,முக்கியமாக இந்துத்வா சக்திகளை அம்பலப்படுத்திட பெரியார் இனப்பெருமை பேசினார். அப்போது தமிழினம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது. சுயமரியாதை பெற்றது.தமிழ்த்தேசியத்திற்கான உயிர் சாதிகளற்ற,சாதிவெறி நீங்கிய ஒரு தமிழர் சமுதாயத்தில்தான் தங்கியிருக்கமுடியும்.அதன் உடலில் இந்துத்வா சக்திகளுக்கு கடுகளவும் இடமிருக்கமுடியாது.தமிழர் ஒற்றுமை என்பது ஒடுக்கப்படும் மக்களின் ஒற்றுமை.

உழைக்கும் மக்களின் ஒற்றுமை. தமிழ்ச்சமூகத்தில்

தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மையின, விளிம்பு நிலையில் வாழும் தமிழர்களுக்குத்தான் தமிழ்த்தேசியம் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது. சமூகத்தின் உயர் தட்டில் இருக்கும் ஒரு சிறுபான்மைக்கூட்டத்திற்கு அது எப்பொழுதும் தேவைப்படுவதில்லை. “தமிழ்ச்சமூகத்தில் உயர்நிலையிலிருக்கிற, சிறுபான்மைகளாகயிருக்கிற உயர்நிலைசாதியினர், அவர்களின் ஒடுக்குமுறைக் கெதிரான சமூகநீதிக்கான போராட்டம் எப்படி பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையைக் கோருகிறதோ, அதேபோல் பிறவகையில் பிற்பட்டவராக இருந்துகொண்டே தீண்டாமை,வன்கொடுமை இவற்றில் ஆதிக்கசாதியினராகச் செயல்படுகிறவர்களுக்கெதிரான போராட்டமும் தமிழர்களின் உண்மையான, புரட்சிகரமான ஒற்றுமைக்குத் தேவைப்படுகிறது” என்ற தோழர் தியாகுவின் வார்த்தைகளைத்தான் தமிழ்த் தேசியத்தின் மையநீரோடையாக நான் பார்க்கிறேன். மூன்று நாட்கள் நிகழ்வுற்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்புவிழா நிகழ்வு ஒரு தமிழ்த்தேசியப் போர்க் களமாகத்தான் எனக்குத் தோன்றியது.ஆனால் பல்வேறு பகைசக்திகள் ஒரே அணியில் இருந்ததைக் கண்டுதான் நானும் குழம்பிப்போனேன்.தாங்கள் யாரை எதிர்த்துப் போராடப்போகிறோம் என்ற பிரக்ஞை அவர்களுக்கு வருவதற்குள் அப்போர் முடிவுக்கு வந்திருக்கும்.தமிழ்த் தேசியம் குறித்த உண்மையான தெளிவை இவர்கள் பெற்றபிறகுதான் இவர்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒன்றுசேரமுடியும். தங்கள் பொது எதிரியை இவர்கள் அடையாளம் காணவும் முடியும்.அந்த அணியில் சாதியத்தலைவர்களும்,மதவாத சக்திகளும் இருக்க மாட்டார்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களும், சிறுபான்மை இனத்தவர்களும் தமிழ்த்தேசிய அணியில் இடம்பெற்றிருப்பார்கள்.அந்த அணியின் பின்னால் சாதி, மதம் பாராமல் தமிழர்களாக தமிழ்மக்கள் ஒன்றிணைவார்கள்.


http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=6435

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி கிருபன்.  விமர்சனங்களுக்கு அப்பால் வரலாறு பாதுகாக்கபட்டு அடுத்த சந்ததியிடம் கையளிக்கபடுவது நாகரீக மனித குலத்தின் பண்பு. உலகம் எங்கும் இதனை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.