Jump to content

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.


Recommended Posts

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.

 

2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

தொடர்ந்து பணத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருத்தல் என்பது சமூக மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நோக்கிச் செல்லவோ வழியையோ தராது சோம்பேறித்தனத்தையும் தங்கி வாழும் நிலமையையுமே உருவாக்கும். வீழ்ந்தவர்கள் எழுந்து நிற்க எங்களது உதவி 1சதவீதம் ஆகவும் உரிய சமூகம் 99வீத பங்காளிகளாகவும் ஊக்கம் உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களால் எழ முடியும்.

மற்றும் வெளிநாடுகளில் இருந்து செல்கிற உதவிகள் என்பது மரங்களில் இருந்து பணம் பிடுங்கி எடுக்கப்படுவது போன்றதொரு எண்ணப்பாட்டையும் எம்மவர்களில் சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஒரு இடத்தில் மட்டுமன்றி பல வழிகளில் புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகளைப் பெற்ற சம்பவங்களும் தாராளமாக நடந்துள்ளது நடந்தும் வருகிறது. உதவி கிடைக்கப்பெறாதவர்கள் இன்னும் அப்படியே இருக்க வெல்லத் தெரிந்தவர்கள் மட்டும் உதவிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலமையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தொடர்ந்து பணமரங்களாக இல்லாமல் அவரவர் தன்னை உணர்ந்து நிமிரக்கூடிய வழிகாட்டிகளாகவும் எமது செயற்பாடுகளும் திட்டங்களும் அமைய வேண்டும் எனும் நோக்கில் 2013ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து எமது அமைப்பானது உப அமைப்புக்களை உருவாக்கி அதன் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியில் பின் தங்கிய கற்க அடிப்படை வசதிகள் அற்ற மாணவர்களை உள்வாங்கிய செயற்பாடுகளை அதிகம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இதன் தோற்றமாக எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் இது முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்கி அவர்களது நெறிப்படுத்தலில் கல்விசார் விடயங்களை கவனிக்கும் பொறுப்பினை மாணவச் சமூகத்திடம் வழங்கியுள்ளோம். கடந்த வருடம் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 10பல்கலைக்கழக மாணவர்கள் (கிழக்கைச் சேர்ந்த மாணவர்கள்) இவர்கள் மருத்துவம், எந்திரவியல் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்.

குடும்ப வறுமை இம்மாணவர்களை சிறப்புச்சித்தி பெற்ற மருத்துவம் , எந்திரவியல் துறைகளில் நிலைக்க முடியாதிருந்தது. இவர்களை இனங்கண்டு நமது அமைப்பினுள் உள்வாங்கினோம். கடந்த வருடம் க.பொ.த.சாதாரணதரம் , க.போ.த. உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தலை மேற்படி பல்கலைக்கழக மாணவர்களே செய்திருந்தார்கள். தங்களுக்கு கிடைக்கும் உதவியில் தாங்கள் பயனடைகிற நேரம் தனது சமூகத்துக்கான பணியையும் செய்து இவ்வருடம் 20மாணவர்களை இம்மாணவர்கள் தங்களது துறையில் சிறப்புச் சித்திபெற கற்பித்து உதவியுள்ளார்கள்.

இதேபோல க.போ.த.சாதாரணதர மாணவர்களுக்கும் கிழக்கில் 8நிலையங்களை உருவாக்கி ஒன்றரை மாதம் தொடர் பயிற்சி வகுப்புகளை நடாத்தி மாணவர்களை பரீட்சையில் தேற்ற உதவியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எமது எண்ணங்களை தங்கள் செயல்மூலம் நிறைவேற்றிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.

கடந்த வருடம் ஆவணி முதலாம் திகதி தேன்சிட்டு உளவள நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் உளவள மேம்பாட்டினை மேற்கொள்ளும் முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்துள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் இவ் உளவள அமைப்பின் பணிகள் விரிவடையத் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பம் கிழக்கில் மட்டுமே கடந்தவருடம் அமைந்திருந்தது.

இதேபோல அரவணைப்பு என்றொரு அமைப்பினையும் உருவாக்கி குசேலன்மலை , புல்லுமலை பகுதிகளில் அதிகளவான வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குசேலன்மலைக் கிராமத்தின் 27குடும்பங்களின் 41பிள்ளைகளுக்கான மாலைநேர , வார இறுதிநாட்களில் வகுப்புகள் உளவள விருத்திக்கான செயற்பாடுகளையும் கடந்த 6மாதங்களாக செய்து வருகிறோம்.

தொடர்ந்து மாதக்கொடுப்பனவில் தங்கியிருப்போரை சுயபொருளாதாரத்தில் முன்னேற்றும் வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வியாபார நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியுள்ளோம். எமது நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் இணைந்து முன்னேறத் துடிக்கும் ஊக்கமுள்ளவர்களை உயர்த்தும் நோக்கிலான திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் ஒன்றினை உருவாக்கும் நோக்கில் 2ஏக்கர் நிலமொன்று கருணையாளர் ஒருவரின் உதவியால் வாங்கியுள்ளோம். இந்த நிலத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலமொன்றை உருவாக்கவுள்ளோம். அருகிவரும் தமிழ் சித்த வைத்தியத்தை ஊக்குவித்து இளைய தலைமுறையை ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்க வைக்கும் நோக்கில் ஆரம்பித்துள்ளோம். தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் மூலம் மருத்துவத்தை வளர்ப்பதோடு நிரந்தரமான மருத்துவ இல்லத்தையும் உருவாக்கும் நோக்கில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

நாங்கள் திட்டமிட்டுள்ள எல்லையை அடைய இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். எனினும் பொருளாதார பலம் இல்லாமையால் பல கிராமங்களின் வாழ்வாதார மேம்பாடு தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் இயங்காமலேயே இருக்கிறது.

இவ்வருடம் பெண்களுக்கான பிரத்தியேக அமைப்பாக பெண்கள் அமைப்பொன்றினையும் உருவாக்கியுள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட யுத்த விதவைகள் , ஊனமுற்ற பெண்களை உள்ளடக்கிய அமைப்பாக உருவாக்கம் பெற்றுள்ளது. இவ்வருடத் திட்டத்தில் குறைந்தது 500போர் விதவைகளுக்கான உதவித்திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய திட்டத்தினை மேற்கொள்ள உதவிகளை வேண்டுகிறோம்.

இதுவரை காலமும் எம்முடன் இணைந்து பணியாற்றிய தாயகத்து உறவுகள் யாவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இல்லாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் சேவை அடிப்படையில் தங்கள் ஆதரவைத் தருகிற பணியாளர்களுக்கு போக்குவரத்துக்கான கொடுப்பனவேனும் வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த உறவகளாகிய உங்களது ஆதரவே தொடர்ந்து முன்னேற எங்களுக்கான வழிகாட்டியாகவும் உதவிகளாகவும் அமைகிறது. உங்கள் ஆதரவினை வழங்கி எமது சேவைகளுக்கான பலத்தைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

ஒரு சிலரால் மட்டுமே வழிநடத்தப்பட்ட செயற்படுத்தப்பட்ட அமைப்பானது இன்று 200 வரையிலான பணியாளர்களை உருவாக்கியுள்ளது. நீங்கள் தருகிற உதவிகளை சரியான முறையில் இனங்கண்டு ஒருங்கமைத்து உதவிகளை வழங்கக்கூடிய ஆதரவையும் தரவுகளையும் மேற்படி எமது பணியாளர்கள் செய்து உதவுவார்கள்.

உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சரியான வழியிலும் தேவைகளுக்கு ஏற்பவும் வழங்கப்பட வேண்டிய ஆய்வுகளையும் எமது ஆய்வுக்குழுவானது சரியான வகையில் செய்து தருவார்கள்.

அத்தோடு இவ்வருடம் முதல் நாங்கள் வழங்கும் உதவிகளை பெறுகிறவர்களின் அடையாள அட்டை இலக்கம் முகவரி சுய விபரங்கள் அடங்கிய விபரக்கோர்வையையும் தயார் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். உதவிகளை செய்யும் இதர நலன்விரும்பிகள் உதவி நிறுவனங்கள் எம்மிடமிருந்து உதவி பெற்றவர்களை அறிந்து கொள்ளக் கூடிய ஒன்லைன் சேவையினையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

எமக்குள்ளான தகவல் பரிமாற்றம் புரிதல் மூலமே எதிர்காலத்தை வழிப்படுத்தவும் செயற்படவும் கூடிய சூழலை உருவாக்க முடியும். எமது இம்முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தாயகத்துக்கு உதவும் அமைப்புகள் உதவி வழங்கும் தனிநபர்கள் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

யுத்தம் முடிந்து 5வருடங்கள் கடக்கப்போகிறது. ஆயினும் அனைத்து நாடுகளில் இருந்தும் பலவகையில் உதவிகள் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரையில் நாம் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எமது மக்களின் வாழ்வில் ஏற்படாதுள்ளது. இதற்கான காரணம் ஒருங்கிணைப்பு தொடர்பாடல் இல்லாமையே.

நேசக்கரம் அமைப்பானது அனைத்து தாயக நலன்விரும்பிகளோடும் இணைந்து செயற்படவும் மக்களுக்கான சேவைகளை வழங்கவும் தயாராக இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பலம் சேர்ந்தால் அனைத்துச் சவால்களையும் எம்மால் தாண்ட முடியும். அனைவரும் ஒன்றாகி தமிழர் தாயக மக்களின் மறுவாழ்வு மாற்றத்திற்கான உருவாக்கமாக எழுவோம்.

நேசக்கரம் ஆரம்பித்த போது ஒரு சமூகத்தின் பெரும்பணியொன்று எங்கள் தோழில் இருக்கிறது என்ற எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் கால ஓட்டம் எங்கள் மக்களின் முன்னேற்றமே எங்கள் ஒவ்வொருவரின் தோழிலும் கனக்கிறது என்பதனை நாங்கள் கடந்து வந்த பாதையில் புரிந்துள்ளோம்.
இந்தப்பயணத்தில் துரோகம் வஞ்சம் குழிபறிப்பு யாவையும் கடந்தே நேசக்கரம் 5ஆண்டுகளில் நடக்கிறது.

பெயரை மட்டும் தந்துவிட்டு நேசக்கரத்தை தாங்கிய வேர்போல நடித்து நேசக்கரத்தின் வளர்ச்சியை சுய இலாபங்களுக்காக ஏலம் போட்டவரும் , நேசக்கரம் பற்றிய தங்களது காழ்ப்பினை பல வழிகளிலும் தீர்த்துக் கொள்ள துரோக அமைப்பாக பிரகடனம் செய்து தனது வஞ்ச முகத்தைக் காட்டிய பெருமைக்குரியவரையும் இந்நேரம் நன்றியுடன் நினைக்கிறோம். நாங்கள் எழுவதற்கான சவாலோடு வெல்வதற்கான ஓர்மத்தைத் தந்தது உங்கள் குழிபறித்தலே.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது. பொய் பெருமெடுப்பில் உண்மையை உதைத்துக் கொண்டு வரும் ஆனால் இறுதியில் உண்மையே வெல்லும். நேசக்கரத்திற்கு இடைஞ்சல் தந்து இதோ அழிப்பேன் என்று சவால் செய்த கண்ணின் முன்னேயே நாங்கள் நிமிர்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினும் தர்மத்தின் வழியே வெல்லும் என்பதனை அனுபவ ரீதியாக அனுபவித்தவர்கள் நாங்கள்.

நேசக்கரத்தின் உருவாக்கம் ஒரு மாவீரரின் எண்ணம். அந்த வீரனின் எண்ணத்திற்கான செயல் வடிவத்தை காலத்தின் தேவையை இக்காலம் உணர்த்திச் செல்கிறது. இப்பயணத்தில் இரண்டு தம்பிகள் முக்கியமாக தங்கள் ஆதரவை 2009முதல் இன்றுவரை என்னோடு சேர்ந்து சுமக்கிறார்கள். ஜெனன், கண்ணாளன் இதுவரை முகம் முகவரி காட்டாத இவ்விருவரின் ஆதரவுமே இன்றுவரையிலான பலம்.

மேலும் சோர்கிற போதெல்லாம் பலமாக துணையாக இருந்து வருகிற ஜஸ்ரின், சிறி (கனடா) பாலா , சீனிவாசன் (பிரான்ஸ்) மோகன் , ஊர்வசி (சுவிஸ்) ஜெயபாலன் , பூவேந்தன், கிருபா (டென்மார்க்) பிறேம் (நோர்வே) பேரின்பம் ஐயா , அனுராஜ் , கண்ணன் , கலா , மைதிலி , தாசீசியஸ் ஐயா (பிரித்தானியா) மற்றும் பகலவன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றிகள். நல்ல நட்பே சிறந்த மருத்துவம் என்ற உண்மையை உங்கள் அனைவரின் நட்பும் தந்து கொண்டிருக்கிறது.

சிறப்பு நன்றிக்குரிய யாழ் இணையத்தின் பங்கானது மிகவும் அளப்பரியது. நேசக்கரத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரை முகப்பில் யாழ் கள அமைப்பாளர்கள் நேசக்கரத்தின் இலச்சினையை இட்டு நிரந்தரமான விளம்பர ஆதரவைத் தருகிறார்கள். அத்தோடு நேசக்கரம் செய்திகளை பகிரக்கூடிய வகையில் துளித்துளியாய் பகுதியில் செய்திகளை பகிரும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளனர். நேசக்கரத்தின் வளர்ச்சியில் யாழ் இணையமும் அதன் அமைப்பாளர்களும் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றிகள்.

எமது தொடரும் பயணத்தில் தங்கள் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா , அவுஸ்ரேலியா , தமிழ்நாடு , அரேபிய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் அனைத்து உதவும் கருணையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.

அடுத்த 5வருடத்தில் எங்களது பணிகள் தாயகத்தில் புதிய மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தும் வகையிலான எங்களது திட்டங்களை முன்னேற்ற நீங்கள் தருகிற ஆதரவுகள் மூலம் நிறைவேற்றுவோம் என்பதனையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம். உங்கள் ஆதரவு மட்டுமே எங்களது வெற்றியும் எங்கள் மக்களின் உயர்ச்சியும் ஆகும்.

இதுவரையில் எமக்கு யூரோவில் பங்களிப்பாக 58.195,72€வும் இலங்கை ரூபாவில் பங்களிப்பைத் தந்தோர்களின் உதவி 10.149.789,17RSவும் வழங்கியுள்ளார்கள்.

58பக்கங்கத்தில் 5ஆண்டு கணக்கறிக்கையையும் அழகாகத் தொகுத்துத் தந்த தம்பி கண்ணாளனுக்கு சிறப்பான நன்றிகள். தனது சுமைகளின் மத்தியிலும் தான்நேசித்தவர்களின் வாழ்வுக்காக தனது உழைப்பையும் வழங்கி நேசக்கரத்தோடு துணைவரும் கண்ணாளனை என்றும் மறவோம்.

ஒற்றைச்செடியாய் துளிர்த்த நேசக்கரத்தினை கற்றை உறுதியாய் மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

கடந்த 5வருடத்தில் நேசக்கரத்தின் மூலம் கிடைத்த உதவிகளின் மொத்த கணக்கறிக்கையை இத்தோடு இணைக்கிறோம்.

கணக்கறிக்கை PDFவடிவில் இருக்கிறது. கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கைத் தொகுப்பினை பாருங்கள்.

Account_2009_2013_Updated_Tamil (2)

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5%E0%AE%86%E0%AE%A3/

 

Link to comment
Share on other sites

நேசக்கரத்துக்கும் ,அதனை இயக்குகின்ற சாந்திக்கும் பாராட்டுக்கள் .நான் யாழ் களத்தில் இணைந்ததே நேசக்கரத்திக்கு என்னாலான பங்களிப்பையும் ,ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சாந்தி...!

 

Link to comment
Share on other sites

நான் ஏற்கனவே பல திட்டங்கள், சிறையில் வாடும் உறவுகளுக்கு உதவி, ஊர் உறவுகளுக்கு உதவி என்று வருடாந்த கணக்கு போட்டு என்னால் முடிந்தளவு உதவுகிறேன்.

அதனால் வேறு அமைப்புகளுக்கு காசு உதவி செய்வது குறைவு.

ஆனால் நேசகரத்தின் திட்டங்கள், அதை இயக்குவோரின் ஒருங்கமைப்பு நான் உதவும் திட்டங்களுக்குள் ஒன்றாக சேர்க்க வைத்தது.

எம் இனத்தின் பிரச்சினையை தம் பிரச்சினையாக தாங்கி உதவும் உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நேசக்கரத்துக்கும் ,அதனை இயக்குகின்ற சாந்திக்கும் பாராட்டுக்கள் .நான் யாழ் களத்தில் இணைந்ததே நேசக்கரத்திக்கு என்னாலான பங்களிப்பையும் ,ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு .

 

கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி உங்களது பங்களிப்பும் உதவியும் நிறையவே கிடைக்கிறது. மீண்டும் நன்றிகள்.

பாராட்டுக்கள் சாந்தி...!

 நன்றிகள் சுவியண்ணா.

நான் ஏற்கனவே பல திட்டங்கள், சிறையில் வாடும் உறவுகளுக்கு உதவி, ஊர் உறவுகளுக்கு உதவி என்று வருடாந்த கணக்கு போட்டு என்னால் முடிந்தளவு உதவுகிறேன்.

அதனால் வேறு அமைப்புகளுக்கு காசு உதவி செய்வது குறைவு.

ஆனால் நேசகரத்தின் திட்டங்கள், அதை இயக்குவோரின் ஒருங்கமைப்பு நான் உதவும் திட்டங்களுக்குள் ஒன்றாக சேர்க்க வைத்தது.

எம் இனத்தின் பிரச்சினையை தம் பிரச்சினையாக தாங்கி உதவும் உறவுகளுக்கு நன்றி.

உங்கள் நம்பிக்கைக்கும் உதவிகளுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து பயணிப்போம். 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நன்றியும் பாராட்டுகளும் அக்கா!

வணக்கம் கொக்குவிலான் உங்கள் பங்களிப்புமே எங்கள் பணிகளில் ஆதரவாய் அமைந்தது. உங்கள் உதவிகளுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

நேசக்கரம் கடந்து வந்த 5ஆண்டு பயணம் மீள்பார்வையும் 5ஆண்டு கணக்கறிக்கையும்.

 

2009 யுத்த முடிவின் பின்னர் பதிவு செய்யப்பட்ட உதவியமைப்பாக நேசக்கரம் இயங்கி வருகிறது. எமது அமைப்பானது கடந்த 5வருடங்களில் புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்றும் நேரடியான குடும்ப இணைப்பு , மாணவர்கள் இணைப்பு மூலம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து தாயகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

போரின் பின்னரான மக்களின் தேவைகள் , உளவள ஆற்றுப்படுத்தல்கள் , மீள் கட்டுமானங்கள் உட்பட தேவைகள் அதிகமாகவே இருக்கிறது. யானைப்பசிக்கு எங்கள் உதவிகளானது சோளப்பொரியாகவே இருந்திருக்கிறது. எனினும் எங்களால் முடிந்தவரை உதவிகளைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

தொடர்ந்து பணத்தை மட்டும் வழங்கிக் கொண்டிருத்தல் என்பது சமூக மாற்றத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நோக்கிச் செல்லவோ வழியையோ தராது சோம்பேறித்தனத்தையும் தங்கி வாழும் நிலமையையுமே உருவாக்கும். வீழ்ந்தவர்கள் எழுந்து நிற்க எங்களது உதவி 1சதவீதம் ஆகவும் உரிய சமூகம் 99வீத பங்காளிகளாகவும் ஊக்கம் உள்ளவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களால் எழ முடியும்.

மற்றும் வெளிநாடுகளில் இருந்து செல்கிற உதவிகள் என்பது மரங்களில் இருந்து பணம் பிடுங்கி எடுக்கப்படுவது போன்றதொரு எண்ணப்பாட்டையும் எம்மவர்களில் சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் ஒரு இடத்தில் மட்டுமன்றி பல வழிகளில் புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகளைப் பெற்ற சம்பவங்களும் தாராளமாக நடந்துள்ளது நடந்தும் வருகிறது. உதவி கிடைக்கப்பெறாதவர்கள் இன்னும் அப்படியே இருக்க வெல்லத் தெரிந்தவர்கள் மட்டும் உதவிகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கும் நிலமையும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தொடர்ந்து பணமரங்களாக இல்லாமல் அவரவர் தன்னை உணர்ந்து நிமிரக்கூடிய வழிகாட்டிகளாகவும் எமது செயற்பாடுகளும் திட்டங்களும் அமைய வேண்டும் எனும் நோக்கில் 2013ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து எமது அமைப்பானது உப அமைப்புக்களை உருவாக்கி அதன் ஊடாக திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியில் பின் தங்கிய கற்க அடிப்படை வசதிகள் அற்ற மாணவர்களை உள்வாங்கிய செயற்பாடுகளை அதிகம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இதன் தோற்றமாக எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் இது முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்கி அவர்களது நெறிப்படுத்தலில் கல்விசார் விடயங்களை கவனிக்கும் பொறுப்பினை மாணவச் சமூகத்திடம் வழங்கியுள்ளோம். கடந்த வருடம் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 10பல்கலைக்கழக மாணவர்கள் (கிழக்கைச் சேர்ந்த மாணவர்கள்) இவர்கள் மருத்துவம், எந்திரவியல் பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்.

குடும்ப வறுமை இம்மாணவர்களை சிறப்புச்சித்தி பெற்ற மருத்துவம் , எந்திரவியல் துறைகளில் நிலைக்க முடியாதிருந்தது. இவர்களை இனங்கண்டு நமது அமைப்பினுள் உள்வாங்கினோம். கடந்த வருடம் க.பொ.த.சாதாரணதரம் , க.போ.த. உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தலை மேற்படி பல்கலைக்கழக மாணவர்களே செய்திருந்தார்கள். தங்களுக்கு கிடைக்கும் உதவியில் தாங்கள் பயனடைகிற நேரம் தனது சமூகத்துக்கான பணியையும் செய்து இவ்வருடம் 20மாணவர்களை இம்மாணவர்கள் தங்களது துறையில் சிறப்புச் சித்திபெற கற்பித்து உதவியுள்ளார்கள்.

இதேபோல க.போ.த.சாதாரணதர மாணவர்களுக்கும் கிழக்கில் 8நிலையங்களை உருவாக்கி ஒன்றரை மாதம் தொடர் பயிற்சி வகுப்புகளை நடாத்தி மாணவர்களை பரீட்சையில் தேற்ற உதவியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எமது எண்ணங்களை தங்கள் செயல்மூலம் நிறைவேற்றிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கொள்கிறோம்.

கடந்த வருடம் ஆவணி முதலாம் திகதி தேன்சிட்டு உளவள நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களின் உளவள மேம்பாட்டினை மேற்கொள்ளும் முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்துள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் இவ் உளவள அமைப்பின் பணிகள் விரிவடையத் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பம் கிழக்கில் மட்டுமே கடந்தவருடம் அமைந்திருந்தது.

இதேபோல அரவணைப்பு என்றொரு அமைப்பினையும் உருவாக்கி குசேலன்மலை , புல்லுமலை பகுதிகளில் அதிகளவான வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குசேலன்மலைக் கிராமத்தின் 27குடும்பங்களின் 41பிள்ளைகளுக்கான மாலைநேர , வார இறுதிநாட்களில் வகுப்புகள் உளவள விருத்திக்கான செயற்பாடுகளையும் கடந்த 6மாதங்களாக செய்து வருகிறோம்.

தொடர்ந்து மாதக்கொடுப்பனவில் தங்கியிருப்போரை சுயபொருளாதாரத்தில் முன்னேற்றும் வழிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் வியாபார நிறுவனம் ஒன்றினையும் உருவாக்கியுள்ளோம். எமது நிறுவனத்தின் முதலீட்டாளர்களாகவும் தொழிலாளர்களாகவும் இணைந்து முன்னேறத் துடிக்கும் ஊக்கமுள்ளவர்களை உயர்த்தும் நோக்கிலான திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் ஒன்றினை உருவாக்கும் நோக்கில் 2ஏக்கர் நிலமொன்று கருணையாளர் ஒருவரின் உதவியால் வாங்கியுள்ளோம். இந்த நிலத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலமொன்றை உருவாக்கவுள்ளோம். அருகிவரும் தமிழ் சித்த வைத்தியத்தை ஊக்குவித்து இளைய தலைமுறையை ஆயுர்வேத வைத்தியத்தையும் கற்க வைக்கும் நோக்கில் ஆரம்பித்துள்ளோம். தேன்சிட்டு ஆயுர்வேத குறுநிலம் மூலம் மருத்துவத்தை வளர்ப்பதோடு நிரந்தரமான மருத்துவ இல்லத்தையும் உருவாக்கும் நோக்கில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

நாங்கள் திட்டமிட்டுள்ள எல்லையை அடைய இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். எனினும் பொருளாதார பலம் இல்லாமையால் பல கிராமங்களின் வாழ்வாதார மேம்பாடு தொழில் முயற்சிகளுக்கான ஏற்பாடுகள் இயங்காமலேயே இருக்கிறது.

இவ்வருடம் பெண்களுக்கான பிரத்தியேக அமைப்பாக பெண்கள் அமைப்பொன்றினையும் உருவாக்கியுள்ளோம். போரால் பாதிக்கப்பட்ட யுத்த விதவைகள் , ஊனமுற்ற பெண்களை உள்ளடக்கிய அமைப்பாக உருவாக்கம் பெற்றுள்ளது. இவ்வருடத் திட்டத்தில் குறைந்தது 500போர் விதவைகளுக்கான உதவித்திட்டத்தை மேற்கொள்ள வேண்டிய திட்டத்தினை மேற்கொள்ள உதவிகளை வேண்டுகிறோம்.

இதுவரை காலமும் எம்முடன் இணைந்து பணியாற்றிய தாயகத்து உறவுகள் யாவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இல்லாது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் சேவை அடிப்படையில் தங்கள் ஆதரவைத் தருகிற பணியாளர்களுக்கு போக்குவரத்துக்கான கொடுப்பனவேனும் வழங்க வேண்டும். புலம்பெயர்ந்த உறவகளாகிய உங்களது ஆதரவே தொடர்ந்து முன்னேற எங்களுக்கான வழிகாட்டியாகவும் உதவிகளாகவும் அமைகிறது. உங்கள் ஆதரவினை வழங்கி எமது சேவைகளுக்கான பலத்தைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.

ஒரு சிலரால் மட்டுமே வழிநடத்தப்பட்ட செயற்படுத்தப்பட்ட அமைப்பானது இன்று 200 வரையிலான பணியாளர்களை உருவாக்கியுள்ளது. நீங்கள் தருகிற உதவிகளை சரியான முறையில் இனங்கண்டு ஒருங்கமைத்து உதவிகளை வழங்கக்கூடிய ஆதரவையும் தரவுகளையும் மேற்படி எமது பணியாளர்கள் செய்து உதவுவார்கள்.

உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சரியான வழியிலும் தேவைகளுக்கு ஏற்பவும் வழங்கப்பட வேண்டிய ஆய்வுகளையும் எமது ஆய்வுக்குழுவானது சரியான வகையில் செய்து தருவார்கள்.

அத்தோடு இவ்வருடம் முதல் நாங்கள் வழங்கும் உதவிகளை பெறுகிறவர்களின் அடையாள அட்டை இலக்கம் முகவரி சுய விபரங்கள் அடங்கிய விபரக்கோர்வையையும் தயார் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். உதவிகளை செய்யும் இதர நலன்விரும்பிகள் உதவி நிறுவனங்கள் எம்மிடமிருந்து உதவி பெற்றவர்களை அறிந்து கொள்ளக் கூடிய ஒன்லைன் சேவையினையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

எமக்குள்ளான தகவல் பரிமாற்றம் புரிதல் மூலமே எதிர்காலத்தை வழிப்படுத்தவும் செயற்படவும் கூடிய சூழலை உருவாக்க முடியும். எமது இம்முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தாயகத்துக்கு உதவும் அமைப்புகள் உதவி வழங்கும் தனிநபர்கள் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

யுத்தம் முடிந்து 5வருடங்கள் கடக்கப்போகிறது. ஆயினும் அனைத்து நாடுகளில் இருந்தும் பலவகையில் உதவிகள் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரையில் நாம் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எமது மக்களின் வாழ்வில் ஏற்படாதுள்ளது. இதற்கான காரணம் ஒருங்கிணைப்பு தொடர்பாடல் இல்லாமையே.

நேசக்கரம் அமைப்பானது அனைத்து தாயக நலன்விரும்பிகளோடும் இணைந்து செயற்படவும் மக்களுக்கான சேவைகளை வழங்கவும் தயாராக இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். பலம் சேர்ந்தால் அனைத்துச் சவால்களையும் எம்மால் தாண்ட முடியும். அனைவரும் ஒன்றாகி தமிழர் தாயக மக்களின் மறுவாழ்வு மாற்றத்திற்கான உருவாக்கமாக எழுவோம்.

நேசக்கரம் ஆரம்பித்த போது ஒரு சமூகத்தின் பெரும்பணியொன்று எங்கள் தோழில் இருக்கிறது என்ற எண்ணம் எதுவுமே இருக்கவில்லை. ஆனால் கால ஓட்டம் எங்கள் மக்களின் முன்னேற்றமே எங்கள் ஒவ்வொருவரின் தோழிலும் கனக்கிறது என்பதனை நாங்கள் கடந்து வந்த பாதையில் புரிந்துள்ளோம்.

இந்தப்பயணத்தில் துரோகம் வஞ்சம் குழிபறிப்பு யாவையும் கடந்தே நேசக்கரம் 5ஆண்டுகளில் நடக்கிறது.

பெயரை மட்டும் தந்துவிட்டு நேசக்கரத்தை தாங்கிய வேர்போல நடித்து நேசக்கரத்தின் வளர்ச்சியை சுய இலாபங்களுக்காக ஏலம் போட்டவரும் , நேசக்கரம் பற்றிய தங்களது காழ்ப்பினை பல வழிகளிலும் தீர்த்துக் கொள்ள துரோக அமைப்பாக பிரகடனம் செய்து தனது வஞ்ச முகத்தைக் காட்டிய பெருமைக்குரியவரையும் இந்நேரம் நன்றியுடன் நினைக்கிறோம். நாங்கள் எழுவதற்கான சவாலோடு வெல்வதற்கான ஓர்மத்தைத் தந்தது உங்கள் குழிபறித்தலே.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது. பொய் பெருமெடுப்பில் உண்மையை உதைத்துக் கொண்டு வரும் ஆனால் இறுதியில் உண்மையே வெல்லும். நேசக்கரத்திற்கு இடைஞ்சல் தந்து இதோ அழிப்பேன் என்று சவால் செய்த கண்ணின் முன்னேயே நாங்கள் நிமிர்கிறோம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினும் தர்மத்தின் வழியே வெல்லும் என்பதனை அனுபவ ரீதியாக அனுபவித்தவர்கள் நாங்கள்.

நேசக்கரத்தின் உருவாக்கம் ஒரு மாவீரரின் எண்ணம். அந்த வீரனின் எண்ணத்திற்கான செயல் வடிவத்தை காலத்தின் தேவையை இக்காலம் உணர்த்திச் செல்கிறது. இப்பயணத்தில் இரண்டு தம்பிகள் முக்கியமாக தங்கள் ஆதரவை 2009முதல் இன்றுவரை என்னோடு சேர்ந்து சுமக்கிறார்கள். ஜெனன், கண்ணாளன் இதுவரை முகம் முகவரி காட்டாத இவ்விருவரின் ஆதரவுமே இன்றுவரையிலான பலம்.

மேலும் சோர்கிற போதெல்லாம் பலமாக துணையாக இருந்து வருகிற ஜஸ்ரின், சிறி (கனடா) பாலா , சீனிவாசன் (பிரான்ஸ்) மோகன் , ஊர்வசி (சுவிஸ்) ஜெயபாலன் , பூவேந்தன், கிருபா (டென்மார்க்) பிறேம் (நோர்வே) பேரின்பம் ஐயா , அனுராஜ் , கண்ணன் , கலா , மைதிலி , தாசீசியஸ் ஐயா (பிரித்தானியா) மற்றும் பகலவன் ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றிகள். நல்ல நட்பே சிறந்த மருத்துவம் என்ற உண்மையை உங்கள் அனைவரின் நட்பும் தந்து கொண்டிருக்கிறது.

எமது தொடரும் பயணத்தில் தங்கள் உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா , அவுஸ்ரேலியா , தமிழ்நாடு , அரேபிய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் அனைத்து உதவும் கருணையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறைந்த நன்றிகள்.

அடுத்த 5வருடத்தில் எங்களது பணிகள் தாயகத்தில் புதிய மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்தும் வகையிலான எங்களது திட்டங்களை முன்னேற்ற நீங்கள் தருகிற ஆதரவுகள் மூலம் நிறைவேற்றுவோம் என்பதனையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம். உங்கள் ஆதரவு மட்டுமே எங்களது வெற்றியும் எங்கள் மக்களின் உயர்ச்சியும் ஆகும்.

இதுவரையில் எமக்கு யூரோவில் பங்களிப்பாக 58.195,72€வும் இலங்கை ரூபாவில் பங்களிப்பைத் தந்தோர்களின் உதவி 10.149.789,17RSவும் வழங்கியுள்ளார்கள்.

58பக்கங்கத்தில் 5ஆண்டு கணக்கறிக்கையையும் அழகாகத் தொகுத்துத் தந்த தம்பி கண்ணாளனுக்கு சிறப்பான நன்றிகள். தனது சுமைகளின் மத்தியிலும் தான்நேசித்தவர்களின் வாழ்வுக்காக தனது உழைப்பையும் வழங்கி நேசக்கரத்தோடு துணைவரும் கண்ணாளனை என்றும் மறவோம்.

ஒற்றைச்செடியாய் துளிர்த்த நேசக்கரத்தினை கற்றை உறுதியாய் மாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

கடந்த 5வருடத்தில் நேசக்கரத்தின் மூலம் கிடைத்த உதவிகளின் மொத்த கணக்கறிக்கையை இத்தோடு இணைக்கிறோம்.

கணக்கறிக்கை PDFவடிவில் இருக்கிறது. கீழ்வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கைத் தொகுப்பினை பாருங்கள்.

Account_2009_2013_Updated_Tamil (2)

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5%E0%AE%86%E0%AE%A3/

 

இதில் எந்த இடத்திலும் யாழ் இணையத்தினைப் பற்றிய ஒரு சிறு சொல் தானும் இல்லை சாந்தி.

 

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை லைக் செய்தோரை மறந்த மகர்க்கு.

Link to comment
Share on other sites

இதில் எந்த இடத்திலும் யாழ் இணையத்தினைப் பற்றிய ஒரு சிறு சொல் தானும் இல்லை சாந்தி.

 

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை லைக் செய்தோரை மறந்த மகர்க்கு.

நன்றிகள் நிழலி யாழுக்கு நன்றி சொல்லப்படாததை சுட்டிக்காட்டியமைக்கு. 09.01.2014அன்று இச்செய்தி இங்கும் முகநூல், நேசக்கரம் இணையத்திலும் செய்தியை பகிர்ந்திருந்தேன். இதவரையில் இச்செய்தியில் இத்தகையதொரு நன்றி மறக்கப்பட்டிருக்கு என்பதனை ஏனோ இதுவரை சுட்டிக்காட்ட உங்களுக்கு மறந்து போனதோ தெரியேல்ல. 
 
நீங்கள் இதை சொல்லும் வரை இவ்விடயம் பற்றி நான் இதுவொரு பெரும் குறையாக உங்களை உறுத்திக் கொண்டிருந்ததை நினைத்திருக்கவேயில்லை. எனினும் நன்றிகள். தவறுகள் திருத்தப்பட வேண்டியவை. தண்டனைக்குரியவையில்லை. இல்லை ஏதும் தண்டனை உங்களால் தரப்படுமானாலும் அதனையும் தாருங்கள் நன்றியோடு ஏற்றுக் கொள்வேன்.
 
நன்றி மறப்பது மட்டும் நன்றல்ல. தவறுகளை உரிய நேரத்தில் சுட்டிக்காட்டுவது கூட அந்த நன்றி மறவாமையின் நன்றி தான். 
 
இச்செய்தியில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டது. இந்த அமைப்பில் தங்கள் முகங்களை மறைத்து ஆதரவு தருகிறவர்கள் சொல்லி பல விடயங்கள் திருத்தியிருக்கிறேன். இன்று உங்கள் இக்கருத்தை பார்த்துவிட்டு செய்தியை பலமுறை திருத்தங்கள் சொன்னவரும் தனது வருத்தத்தினை உங்களுக்குத் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அவர் இக்களத்தின் வாசகர் மட்டுமே. ஆக கருத்தில் நிழலியிடம் மன்னிப்பு கோரமுடியாமையால் அவரது வருத்தத்தையும் இங்கு தெரிவிக்கிறேன்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.