Jump to content

லுமாலா சைக்கிள்


Recommended Posts

"லுமாலா" சைக்கிள்
-----------------------------------------------------
 
 
1150186_10151928893953002_1747242359_n.j
 
1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது.
 
2.நான் அறிய எங்கட ஊரில 1985,86 களில் (அப்ப நான் பால்குடி..இருந்தாலும் நினைவு இருக்கு)எங்கட ஊரில விரல் விட்டு எண்ணுற ஆக்கள் தான் சைக்கிள் வைச்சிருந்தவை.அதில எங்கட அப்புவும் ஒருத்தர்.( பெருமை பேசுறன் எண்டு குறை நினையாதையுங்கோ..)
 
3.அந்த மனிசன் அந்த சைக்கிளை விடியக்காலமை எழும்பினவுடன ஒரு சிரட்டையில மண்ணெண்ணையும் தேங்காய் எண்ணையும் கலந்து , அதை ஒரு சீலத்துணியால கம்பிகள் எல்லாம் துடை துடை எண்டு துடைக்கும்.அம்மம்மாதான் இந்த துளவாரங்களையெல்லாம் செய்து குடுக்கும்.போதாக்குறைக்கு எங்களைக்கூப்பிட்டு துடைக்க விடும்.எங்களுக்கும் வலு சந்தோசம்.காரணம் அந்த கொஞ்ச நேரம் எண்டாலும் சைக்கிளை தொடலாம்.ஸ்ராண்டில நிப்பாட்டி இருக்கும் சில்லை சாட மாடையா சுத்திப்பாப்பாம்.
 
1606929_10151928893663002_139834376_n.jp
 
4.அப்பு தன்னை தவிர ஆரையும் சைக்கிளை தொட விடாது.தொட்டா மரண கலகம் நடக்கும்.அந்த கோதாரிக்காக ஒருத்தரும் தொடுறது இல்லை.ஆனால் ஆரேனுக்கும் சுகமில்லை எண்டா மட்டும் சைக்கிளைத்தரும்.ஏனெண்டா அப்ப பஸ் வசதியோ மினிபஸ் வசதியோ இல்லை.ஊரில தம்பித்துரை இளையய்யாவின்ர வானும், தம்பு அப்புவின்ர வானும் மட்டும் தான் லைன் ஓடினது.அதுவும் சாவகச்சேரி சந்தைக்கும் பருத்துறை சந்தைக்கும் எண்டு ஒரு ஞாபகம்.(அது பெரிய கதை...அதை பிறகு சொல்லுறன்).மருதங்கேணி ஆசுப்பத்திரி எங்கட ஊரில இருந்து 20மைல் இருக்கும்.அப்ப ஆரேனுக்கும் பிள்ளை பிறக்கபோறதெண்டாலோ,இல்லை சரியான சுகமில்லை எண்டாலோ அப்புவிட்ட ஆக்கள் வந்து உதவி கேப்பினம்.அதுக்கெண்டா நேர காலம் பாக்காம ஆசுப்பதிரிக்கு கொண்டே விட்டிட்டு வரும்.
 
 
5.சைக்கிள் எண்டா , ஒரு பெரிய கரியல் இருக்கும்.அது அவையவவையின்ர தேவையளைப்பொறுத்து சின்னதா இல்லை பெரிய கரியலோ இருக்கும்.மீன் சந்தைக்கு போற ஆக்களின்ர கரியல் பெரிய கரியல்.ஏனெண்டா பெரிய மீன்பெட்டி கட்டவேணுமல்லோ.அதிலையும் பாருங்கோ  கரியலில சமாந்தரமா பெரிய தடி இரண்டை கட்டி வைச்சிருப்பினம்.அதில நாங்கள் பருத்துறை போறதெண்டா சாரத்தையோ இல்லை சின்ன தலகணியையோ குண்டிக்கு வச்சுக்கொண்டு இருக்க வேணும்.இல்லையெண்டா தூரபயணங்களுக்கு குண்டி வெட்டிப்போடும்.சைக்கிள்ள முன்னுக்கும் இருந்து போகலாம்.எனக்கு பின்னுக்கு இருந்து போக வெக்கம் மாதிரி.ஏனெண்டா ஏனெண்டா என்னோட படிக்கிற பிள்ளையள் ஆரும் பாத்தா பிறகு பழிப்பாகள். 
 
1511644_10151928897638002_947809386_n.jp
 
6.சைக்கிள்ள முன்னுக்கு இருந்துபோக அப்பா விடமாட்டுது.ஏனெண்டா நான் முன்னுக்கு இருந்து கான்டில இறுக்கிப்பிடிச்சுப்போடுவன்.பிறகு திருப்பைக்குள்ள ஆட்டி விட்டிடுவன்.கன நாள் அடியும் வாங்கி இருக்கிறன்.நான் மட்டும் இல்லை அம்மாவும் வாங்கியிருக்கிறா.
 
7.பொதுவா எங்கட ஊரில பிள்ளையை முன்னுக்கும் மனிசியை பின்னுக்கும் தான் சைக்கிள்ள ஏத்திக்கொண்டு போவினம்.மாறி ஏத்தினா சனம் ஒரு மாதிரிப்பாக்கும்.
கலியாணம் கட்டின புதிசில முன்னுக்கு மனிசியை  ஏத்திக்கொண்டு போவினம்.அதை சனம் பாத்து கொடுப்புக்குள்ள சிரிக்கும்.
 
8.கடைசி காலத்தில தன்ர சைக்கிளை அப்பு , எங்கட பெரியண்ணாட்டத்தான் குடுத்தவர்.அவன் உந்த ஊரெல்லாம் ஓடி ஊத்தையா கொண்டுவருவான்.அப்பு கத்தி கத்தி பாத்து பிறகு ஒண்டும் சொல்லுறது இல்லை.இடைக்கிடை அப்பு தானே துடைக்கும்.
 
9.அண்ணா அங்கின இங்கின போறதெண்டா என்னையும் ஏத்திக்கொண்டு போவான்.முன்னுக்கு கவட்டை விரிச்சும் இருக்கலாம்,சைற்றாவும் இருக்கலாம்.பொதுவா சின்னவயதில ஆம்பிளைப்பிள்ளையளும் பொம்பிளைப்பிள்ளையளும் கவட்டை விரிச்சுத்தான் இருந்து போவினம்.கொஞ்சம் வளர சைற்றாத்தான் இருந்து போவினம்.முன் பாறுக்கு வயர் சுத்துறவை.கதிர பின்னுற வயரால சுத்தலாம்.பொதுவா கறுப்பு,நீல வயர் தான் சுத்துவினம்.பிறகு கொஞ்ச நாளால அதுக்கெண்டு குஞ்சம் விட்ட கவர் வந்திட்டுது.
 
10.பின் கரியலில தனிய ஒரு ஆளை ஏத்திக்கொண்டு ஓடுறது கொஞ்சம் கஸ்ரம்.ஏனெண்டா சைக்கிள் உலாஞ்சும்.அதிலையும் ஆரேனும் பெண்டுகளை ஏத்தினா துலைஞ்சுது கதை.ஒண்டு காலை சில்லுக்குள்ள குடுக்குங்கள் இல்லையெண்டா சீலைத்தொங்கலை சில்லுக்குள்ள குடுக்குங்கள்.இப்பிடி நடந்து கன புருசன் பொஞ்சாதி மார் நடு றோட்டில நிண்டு கடிபட்டு சண்டைபிடிக்கிறதை கனதரம் கண்டிருக்கிறன்.
 
11.சாமத்தியப்பட்ட புதிசிலயோ இல்லை சாமத்தியப்படபோற வயசு வந்தாலோ பொம்பிளைப்பிள்ளைகளை முன்னுக்கு இருத்தாமல் பின் கரியரில தான் ஏத்திக்கொண்டு போவினம்.இது எங்களப்போல பொடியளுக்கு வலு வசதி.ஏனெண்டா தேப்பனுக்கு தெரியாமல் பின்னால இருக்கிற பிள்ளையோட பகிடிவிட எங்களுக்கு லேசு.கனபேருக்கு உந்த லவ்சு ஆரம்பிச்சதே உப்பிடித்தான்.
 
1558536_10151928894128002_1276367478_n.j
 
12.சைக்கிள் பெல் ஆரம்ப காலத்தில ஒரு பெரிய ரவுண்டா இருந்திச்சு.விரலால இழுத்து அடிக்கிறதே கஸ்ரம்.சின்னப்பொடியள் அடிக்கேலாது.வலு கஸ்ரம்.இருந்தாலும் அதை கஸ்ரப்பட்டு அடிச்சு அப்புவிட்ட கன நாள் சாத்து(அடி) வாங்கியிருக்கிறம்.ஏனெண்டா அடிச்சா "கிறீங் கிறீங்" எண்டு பெரிய சத்தம் வரும்.முந்தி ஐஸ்பழக்காரர் பாட்டு போட்டு வாறயில்லை.உந்த காண்டாமணி பெல்லை அடிச்சுக்கொண்டுதான் வருவாங்கள்.கடிதகாரனும் அந்த பெல்லைத்தான் வீட்டு வாசல்ல வந்து அடிப்பான்.பெல் சத்தம் கேட்டா முந்திப்பயம்.ஏனெண்டா கடிதகாரன் எந்த இழவு செய்தியைகொண்டுவாறன் எண்டு பயப்படுவினம்.
 
1525694_10151928898118002_1246180428_n.j
 
13.பெல் அடிக்கிறதிலையும் ஒரு ரெக்னிக் இருக்கு.சிலபேர் தாங்கள் சுத்துற பிள்ளையின்ர வீட்டடியால கடக்கையில ஒரு வித்தியாசமா  பெல் அடிப்பினம்.அது அந்தப்பிள்ளைக்கு மட்டும் விளங்கும்.இவர் அடிச்சுப்போட்டு ஒரு சுத்து சுத்தி வர இவா நைசா வேலியால எட்டிப்பாப்பா. இல்லையெண்டா சும்மா சாத்திக்கிடக்கிற படலையை திரும்பவும் சாத்துற சாக்கில அவரைப்பாத்து ஒரு சிரிப்பு சிரிப்பா.கொஞ்ச நாளால ஒண்டு தாய் கண்டு பிடிச்சிடுவா இல்லையோ தேப்பன் கண்டுபிடிச்சிடும்.அதுக்குப்பிறகு உந்த பெல் அடிக்கிற வேலை சரிவராது.
 
 
14.சில ஆக்கள் செயினுக்கு கிறீஸ் போடாட்டி 1 மைலுக்கு அங்கால வரவே "கிறீச்சு கிறீச்சு" எண்டு சத்தம் போடும்.செயின் தொஞ்சாலும் அது மக்காட்டில முட்டி சத்தம் வரும்.வாழ்கையில மிகப்பெரிய கஸ்ரம் செயின் கழண்டா வரும்.அதை கைபடாமல்(ஏனெண்டா கிறீஸ் கையில ஒட்டினா கை கறுப்பா ஊத்தையாயிடும்) ஒரு தடியால ரெக்னிக்கா எடுத்து சரியா போடவேணும்.முதல்ல பின்னுக்கு முழுசாப் போட்டிட்டு பிறகு முன்னுக்கு கொஞ்சம் போட்டு பின் சில்லை சுத்தவேணும்.ஆனா பாருங்கோ பொம்பிளைப்பிள்ளையள் சரியா கஸ்ரப்படுவினம். இதைச்சாக்கா வைச்சு செயின் போட்டுக்குடுத்து லவ்வை டெவலப் பண்ணின ஆக்கள் கனபேர்.அந்த நேரம் தடி கிடி ஒண்டும் பாவிக்கமாட்டம்.வெறும் கையாலதான் விளையாட்டு காட்டுவம்.ஏனெண்டா அப்பதானே அவா ஜோசிப்பா "பாருங்கோ இந்த பொடியன் எனக்காக கையில கிறீஸ் பிரழ பிரழ ..உதவி செய்யுது" எண்டு.
 
1011765_10151928897863002_2145438588_n.j
 
15.மழையில சைக்கிள் நனைஞ்சா கட்டாயம் கிறீசோ இல்லை மண்ணெண்ணையோ செயினுக்கு விடவேணும்.இல்லையெண்டா கண்டிப்பா சத்தம் வரும்.
 
16.எனக்கு ஆண்டு 6 இல தான் சைக்கிள் அப்பா வாங்கித்தந்தவர்.அதுவரையும் பள்ளிக்கூடத்துக்கு நடைதான்.சைக்கிள் வாங்கிதந்ததும் முதல்ல செய்த வேலை கோயிலுக்கு கொண்டு போய் அதுக்கு திருநீறு பூசி,சந்தணப்பொட்டு வச்சு கண்ணன் ஐயாட்ட ஒரு திருநூல் வாங்கி காண்டில்ல கட்டிவிட்டதுதான்.அதுக்குப்பிறகு
புதுசீற் கவர்,சில்லுக்கு புது பூ இரண்டு,புது பெல்....மாயாவி ஸ்ரிக்கர்(அது மக்காட்டில ஒட்டுறது) எண்டு கன சாமான் வாங்கின நினைவு.அதில வேற இரவு நாலஞ்சுதரம் எழும்பி எழும்பி மூத்திரம் பெய்யுற மாதிரிப்போய் தொட்டு தொட்டு பாத்திட்டு வந்தன்.அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு நேரத்தொடையே போனன்.காரணம் பெடியளிட்ட காட்டவும், தேமா மர நிழல்ல முன்னுக்கே இடம் பிடிக்கவும் தான்.
 
17.அட ... சைக்கிள் பழகின கதையை சொல்ல மறந்திட்டன்.முதன் முதலா பவா அக்கா சைக்கிள் ஓடையுக்க அவளுக்கு சைக்கிளை பிடிச்சு விட்டு விட்டுத்தான் ஆரம்பிச்சன்.சைக்கிள் இடையுக்குள்ளால ஒரு காலை ஓட்டி ஒரு கையை சீற்றில வச்சு மற்ற கையால காண்டிலப்பிடிச்சு கெந்தி கெந்தித்தான் ஓட பழகினன்.அதுவும் அப்பா சைக்கிள் தர மாட்டார்.அவர் எங்காவது போய் வந்து ஸ்ராண்டில விடுற நேரம் அப்பிடியே சத்தம் போடாமா நைசா உருட்டிக்கொண்டு ஓடிடுவன். 
முதல்ல எங்கட ஊர் தொடுவாய்க்கு(கடற்கரைக்கு அருகில் சிறு குளம் மாதிரி இருக்கும், அதை அண்டி பெரிய புல் வெளி இருக்கும்)தான் ஓடுறது.சும்மா தார் றோட்டு மாதிரி புல் இருக்கும்.தற்சமயம் விழுந்தாலும் காயம் வராது.அப்பிடியே கவட்டுக்கால ஒடி ஒடி ஒரு நாள் காலைத்தூக்கி பாறுக்கு மேலால போட்டு ஓடினா அது பெரிய வெற்றி.சீற்றில இருக்கேலாது,ஏனெண்டா உயரம் காணாதல்லோ.இப்பிடியே கனதூரம் எங்கட ஊரில இருந்து மருதங்கேணிக்கு ஓடி எனக்கு கவட்டில வெட்டி காயமும் வந்திருக்குது. எனக்கு மட்டுமில்ல கனபேருக்கு உந்த நிலமைதான்.
 
18.ஆனா என்னதான் சொன்னாலும் சைக்கிள்ள போறதபோல ஒரு சுகம் என்னதான் ஆயிரக்கணக்கில காசு குடுத்து மோட்டச் சைக்கிள் வாங்கி ஓடினாலும் வராது.வெளிநாட்டில இருந்து ஊருக்குப்போறவை சோட்டைக்கு ஒருக்கா எண்டாலும் சைக்கிள் ஓடிப்பாக்காம வரமாட்டினம்.சாறத்தை கட்டிக்கொண்டு மனிசியை முன்னுக்கு ஏத்திக்கொண்டு சைக்கிள்ள போனா ஒரு சுகம்தான்.அது சொல்லிப்புரியாது.அனுபவிச்சாத்தான் தெரியும்.
 
 
19.ரியூசனுக்கு சைக்கிள்ள போகையுக்க செய்யுற கூத்துகள், பெடியளோட இரண்டு மூண்டு பேர் எண்டு கை பிடிச்சுக்கொண்டு பரலலா பொற அநியாயங்கள்,வாத்தியின்ர சைக்கிள் ரயருக்கு வட்டவாரியால குத்தின குசும்பு,பெட்டையளின்ர சீற்றில மை தெளிச்சுவிடுற வம்பு,சைக்கிள் துறப்பை துலைச்சுப்போட்டு கல்லால குத்தி உடைச்ச கெட்டித்தனங்கள்,ஏதோ தேய தேய என்ர நண்பனின் காதலுக்காய் பருத்துறையில இருந்து நெல்லியடிக்கு ஒவ்வொரு நாளும் ரியூசன் முடிய ஓடிய நினைவுகள், அவளின் சைக்கிள் கூடையுக்குள்ள கடிதம் போட அதை அவளின்ர தாய் பாத்து கிழிய கிழிய வாங்கிய கேவலங்கள்... இப்பிடி கனக்க கனக்க "சைக்கிள் கதைகள்" இருக்கு.
1527028_10151928897973002_1687410596_n.j
 
20.எல்லாத்தையும் எழுதினா புத்தகமாகத்தான் எழுதவேணும்.அதனால ஏதோ கொஞ்ச நினைவுகளை சுறண்டிப்பாத்திருக்கிறன்.உங்கட நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கோ.
 
பசுமை நினைவுகளுடன்
 
தமிழ்ப்பொடியன் :) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"லுமாலா" சைக்கிள் ஒன்று வாங்க அன்று 10 ம் வகுப்பில் நல்ல பெறுபேறு எடுக்கவேண்டி இருந்தது ! 
 
இதற்க்கு பின்னாலும் பசுமையான நினைவுகள் என் வாழ்விலும் உண்டு ......  :D
 
நன்றி தமிழ்ப்பொடியன்.   
Link to comment
Share on other sites

நல்ல சுவையான பதிவு பாருங்கோ தமிழ் பொடியன்.

 

இதனை சிரிப்பு பகுதியில் போடாமல், கதை கதையாம் பகுதியில் இருக்கும் முற்றத்து மல்லிகையில் போட்டு இருக்கலாம். வேணுமென்றால் கேளுங்கள், நானே அங்கால நகர்த்தி விடுறன்.

Link to comment
Share on other sites

நன்றி நிழலி

செய்துவிடுங்கோ....

பெரிய உதவி பாருங்கோ...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்பொடியன் ,

பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு.

Link to comment
Share on other sites

 

"லுமாலா" சைக்கிள் ஒன்று வாங்க அன்று 10 ம் வகுப்பில் நல்ல பெறுபேறு எடுக்கவேண்டி இருந்தது ! 
 
இதற்க்கு பின்னாலும் பசுமையான நினைவுகள் என் வாழ்விலும் உண்டு ......  :D
 
நன்றி தமிழ்ப்பொடியன்.   

 

 

நன்றி தமிழரசு

எனக்கு புது சைக்கிள் கிடைக்க “ 5ம் ஆண்டு கொலசிப்பில” பாஸ் பண்ண வேண்டியிருந்திச்சு. :(

நன்றி தமிழ்பொடியன் ,

பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு.

நன்றி விசுகு அண்ணை..

 

கறள் பிடிச்சு கிடக்கிற “பல பசும் நினைவுகளை” சுறண்டிப்பாக்கிற முயற்சியில இறங்கியிருக்கிறன்.

 

  
நன்றி தமிழ்பொடியன் , பழைய நினைவுகளை நினைவூட்டியமைக்கு. 

 

 

நன்றி நுணாவிலான்

 

எனக்கும் இது ஒரு “இரைமீட்டல்” தான்.

இன்னும் வரும்...

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு தமிழ்ப் பொடியன்.
ஒவ்வொரு வரியாக ரசித்து வாசித்தேன்.cycling1.gif
ஒவ்வொருவர் வாழ்விலும்... முதல் சைக்கிள் ஓடப் பழகும் போதும், முதலாவது சைக்கிள் எமக்கு சொந்தமாக கிடைக்கும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது மட்டுமல்ல அந்த நினைவுகள் இறக்கும் வரை... பசுமையாக இருக்கும்.radeln.gif:)

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு தமிழ்ப் பொடியன். சைக்கிளில் திரிந்த காலங்கள் மறக்க முடியுமா? கலில் காளனியில்லாமல் வேகமாக போய் குதிக்காலால் பின் ரயரில் அமத்தி ஒரு சுழுட்டு சுழட்டி பிறேக் போடுவதில் வரும் திரில்லே தனி (அதுவும் வகுப்பு பெண்களுக்கு முன்னால்..)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப்பகிர்வு, தமிழ்ப்பொடியன்!

 

முந்தி எங்கட ஊரில, கிராமச்சங்கம் மூலம்  சைக்கிள்களுக்கு 'லைசென்ஸ்' எடுக்க வேண்டும்!

 

பெரிசா ஒண்டும் யோசிக்காதீங்க! ஒரு தகடு ஒண்டில, சில இலக்கங்களைப் பதித்துத் தருவார்கள்! அந்தத் தகட்டைக் கட்டாயம் சைக்கிளில, பின் மக்காட் பாரில திருகாணியால பூட்டவேண்டும்! இந்தத் தகடு ஒவ்வொரு வருசமும், வேற, வேற நிறத்தில வரும்! சில பேர், பழையதுகளைக் கழட்டாமல் விட்டிருப்பினம்! பாக்க நல்ல வடிவா, ஈஸ்ட்மன் கலரில, சைக்கிளும் நல்ல வடிவா இருக்கும்!

 

என்ர முதலாவது சம்பளத்தில, சைக்கிள் வாங்கின அனுபவம் நேற்றுப்போல இண்டைக்கும் இருக்கு!

 

தொடர்ந்து அனுபவப் பகிர்வுகளை எதிர்ப்பார்க்கிறோம்! 

Link to comment
Share on other sites

தமிழ்பொடியன் நான் ஓடிய லுமாலா சயிக்களையும் நினைவுபடுத்தியது உங்கள் பதிவு. அந்த லுமாலாவில உங்கள் ஊர் கடற்கரைகளையும் சுற்றிய நினைவுகளும் நிறையவே.
 
Link to comment
Share on other sites

சைக்கிளாலை எப்பவுமே எனக்கு பிரச்சனைதான் :( . நான் அநேகமாய் கால் பிறேக் தான் அடிக்கிறனான்  :D  . சிலநேரம் தோல் மணக்கும்  :lol:  . படைப்புக்குப் பாராட்டுக்கள் பெடியா  :)  :)  .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துவிச்சக்கரவண்டி ஓடிய காலத்தினை நினைவுபடுத்தியதற்கு நன்றிகள். ஒழுங்கைகள் வழியாக வண்டி ஓடும்போது சிலவேளைகளில் நாய்கள் துரத்தும். தப்பிப்பிழைத்த அனுபவங்களும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்திற்கு நன்றிகள் டமிழ்போய்...

1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது
என்றாலும் உது கொஞ்சம் ஒவர்...:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லுமாலா சைக்கிளுக்கு நன்றி தமிழ்ப்பொடியன். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.