Jump to content

மிகக் குறைந்த செலவில் சூரிய ஒளியில் மின்சாரம், புதிய முயற்சி..


Recommended Posts

நண்பர்களே..
நீங்கள் யாராவது உங்கள் ஊர் வீட்டில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க‌ விரும்பினால்.,என்னுடன் தொடர்ப்பு கொள்ளுங்கள். என்னால் மிக மலிவாக உங்கள் வீட்டில் இடை பொருத்தி த்தர முடியும்
இது எனது கன்னி முயற்சி, மேலதிக விபரங்களிற்கு கீழே உள்ளதை வாசிக்கவும்
நன்றி
உதயம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் உதயம்..!

Link to comment
Share on other sites

தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவின், கண்டு பிடிப்பு என்பதில்... அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.
அதிலும் நீங்கள் உங்கள் கண்டுபிடிப்பை, மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள முன் வந்தது... உங்கள் பெருந்தன்மையை காட்டுகின்றது.
பாரட்டுக்களும், வாழ்த்துக்களும்... உதயம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையங்கள் எங்கள் தாயக மண்ணில் காலூன்றுவதை வரவேற்போம். தகவலுக்கு நன்றி. கூடியவிரைவில் நான் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி நண்பர்களே..

தமிழ் சிறி அண்ணன்.. இது எனது கண்டுபிடிப்பு அல்ல, ஆனாலும் எமது சமூகத்திற்கு இது புதிய முனைப்பு.

இது சம்பந்தமாகவே நானும் படிப்பதால் இதில் என்னால் முழுமையாக ஈடுபடமுடிகிறது.

உங்கள் தொடர்புக்காக காத்திருக்கிறேன் உறவுகளே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி..வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Frequently asked questions

1.       Can we install it in northern Srilanka..?

            Yes most certainly, as that is even closer to the equator.

2.       How does it work..?

The system consist 3 main parts,

Solar panels produce DC current form the sun,

Grid tie inverter

Change the DC current to Ac to match with the main current (Grid tie)

Net metering

This is a special meter that can move both ways that will replace the traditional meter you have it at home.

 

During the day time if you produce more energy than that you are using, your meter will spin backwards, while during the night times as you don’t produce any electricity at all from the panel, your meter will rotate forward. You only need to pay the difference of energy you used from electricity board.

We often design a system where the output of your system will barely match your production, such that, you may need to pay up to 600Rs per month to electricity board (First 60 units of electricity from Srilankan electricity board is given with concession at reduced price)

 

3.       How do I know what system do I need..?

 

It depends on your energy bill (Number of units consumed per month)

All you need is send us your last 3 months energy bill, we will evaluate and get back to you with the estimated system cost size and roof space we need.

 

4.       Isn’t it expensive to have a solar panel at home..?

Absolutely not, that is a myth. Solar power system became 200% cheaper than it was in 2003. This is a good time to for it.

5.       Who do the maintenances after the installation..? And what is the life span?

 

Solar systems are maintenance free or need very little maintenance. They produce electricity for 25 to 30 years without any problem; all you may need is replace the inverter if needed after 10 years.

 

6.       Why do we need to contact you while other companies are doing the same in Srilanka..?

Our company is owned and operated by 3 brothers. We import the system and install it at home directly. Absence of expensive marketing and no dealers in between made our systems 40% cheaper compare to any other systems available at the market. We can comprehensively beet any quotes that you are getting from the market..!!!. We source all of our labour and auxiliary equipment locally and they are easily replaceable. And the consultation is free of charge.

In addition to that, one of our members owning this company is actively participating in International Solar energy research community, that makes us reliable and any future improvements in the industry will be passed to our customer directly..!

Call us now on 0064223445162 or 00947772100379 or email to solarhome4u@yahoo.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முயற்சிக்கும் உதவும் குணத்துக்கும் வாழ்த்துக்கள்  உதயம்...!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்ட்எனக்கும் உங்கள் உதவி கட்டாயம்  உதவும்.கன்டிப்பாக தொட்ர்பு கொள்வான்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் உதயம்.
 
ஒரு முறையான வியாபார அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்துங்கள்.
 
 
இலங்கை அரசு சூரிய மின் உற்பத்திக்கு ஏதாவது மானியங்கள் கொடுக்கின்றதா?
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உதயம்,

எனக்கு தெரிந்தவர் ஒருத்தர் கேட்டார். அவர் ஊர் சென்று ஆராய்ச்சி எல்லாம் செய்துவிட்டார்.

அவருக்கு உங்கள் தகவலை கொடுக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

இல்லை ஈசன், இலங்கை அரசு மானியங்கள் கொடுப்பதில்லை எனினும், அவர்கள் (Grid tied) அமைப்பை அனுமதித்துள்ளார்கள். இதன் படி பகல் வேளையில் மேலதிகமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்சார சபைக்கு கொடுத்து மீண்டும் இரவில் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் இதற்கான செலவு 30% ஆல் குறையும்.

நன்றி விக், இதுவரை ஒருவரும் தொடர்பு கொள்ள வில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மின்சாரத்தைச் சேமித்து தேவையானநேரங்களில் பாவிப்பதற்கு எந்தவிதமான மின்கலன்களைப் பொருத்துகிறீர்கள். அதனது ஆயுட்காலம் என்ன? கூடியவிரைவில் ஊரில் எனதுவீட்டுக்கு சோலார் எனேர்ஜி சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளேன். தரவுகள் சரியாக இருந்தால் உங்களுடன் கைகோர்க்கிறேன்.

Link to comment
Share on other sites

எங்கள் யாழ் உறவுகளில் ஒருவரான உங்கள் கண்டுபிடிப்பு மட்டற்ற மகிழ்சியைத் தருகிறது. அத்துடன் மிக மலிவாகப் பொருத்தித்தர முயற்சிப்பதும், அதற்காக எங்கள் தமிழ் மண்ணைத் தெரிவுசெய்ததும் பாராட்டுக்குரியது. மிகவும் வறுமையில் வாடும், போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தமிழ் மண்ணில் உள்ளன. அக்குடும்பங்களில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால், அந்தப் பிள்ளைகள் படிப்பதற்கு தேவைப்படும் மின்சாரத்தைப் பொருத்திக் கொடுப்பதற்கு உங்களுக்கு ஏற்படும் செலவை இலங்கை ரூபாயில் அறியத்தர முடியுமா? செலவை முழுமையாகச் செலுத்தமுடியாத குடும்பங்களுக்கு என்னால் உதவமுடியுமா என்பதை அறிந்து கொள்வதற்காகவே கேட்டேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் எழுஞாயிறு..இவ் வகையான திட்டத்திற்கு மின்கலம் தேவை இல்லை.. இதனால் தான் மலிவானது.

Paanch..சிறிய ரக விளக்குகளுடனான அமைப்புகள் ( மின்கலம் தேவைப்படும்) 10000-20000 ஆயிரம் ரூபாவில் பொருத்த முடியும். அல்லது பல வீடுகள் இணைந்து ஒரு பெரிய இணைப்பை எடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • 9 months later...

வணக்கம் எழுஞாயிறு..இவ் வகையான திட்டத்திற்கு மின்கலம் தேவை இல்லை.. இதனால் தான் மலிவானது.

Paanch..சிறிய ரக விளக்குகளுடனான அமைப்புகள் ( மின்கலம் தேவைப்படும்) 10000-20000 ஆயிரம் ரூபாவில் பொருத்த முடியும். அல்லது பல வீடுகள் இணைந்து ஒரு பெரிய இணைப்பை எடுக்க முடியும்.

எழுஞாயிறு அண்ணாவின் கேள்விக்கு மின்கலம் தேவையில்லை என்றும் பாஞ்ச் அண்ணாவின் கேள்விக்கு மின்கலமும் தேவைப்படும் என்று கூறியுள்ளீர்கள். இவ் இரு செயல்முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பாதிக்கப்பட்ட மக்கள், வறுமையில் வாடும் மக்கள் ஓலைக்குடிசையில் இருந்தால் அவர்களுக்கு இத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது?

தனித்தனி வீடுகளுக்கு பொருத்துவது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுப்பது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுக்கக்கூடிய செயன்முறையை நடைமுறைப்படுத்த எவ்வளவு செலவாகும்?

நேரமுள்ள போது பதிலளியுங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியில் இதை நடைமுறைப்படுத்த நானும் நிதி உதவி செய்ய தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கிய மதுரை மாணவன் கார்த்திக் “பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் இவர். “இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக் கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக் கொண்டேன். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமைத்தோம். ஹெட்லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங்களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது. வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண்பித்த போது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித் தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் கார்த்திக். “அலுவலகம் செல்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் இரு சக்கர வாகனத்தை வெயிலில் பார்க்கிங் செய்து விட்டால் போதும். அதன்பிறகு, குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இந்த வண்டியை உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித்துவிடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளுக்கென வேறு பணம் செலவழிக்கத் தேவை யில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறு ம் கார்த்திக் இந்த பைக்கினை உருவாக்க உதவிய நண்பர் ஹரி, மெக் கானிக் முத்து ஆகியோருக்கு நன்றி கூறுகிறார். அடுத்தகட்டமாக, முற்றிலும் சோலார் மூலம் இயக்கும் வகையிலான ஆட்டோ மற்றும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. அதற்காக ஸ்பான்சர்’ கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10409106_601054910021566_2917597495073445074_n.jpg?oh=eb451b85302d1361ec090e3c0d516675&oe=54E13758&__gda__=1427890308_449f127277c514a4c2911133d3858bad

Link to comment
Share on other sites

எழுஞாயிறு அண்ணாவின் கேள்விக்கு மின்கலம் தேவையில்லை என்றும் பாஞ்ச் அண்ணாவின் கேள்விக்கு மின்கலமும் தேவைப்படும் என்று கூறியுள்ளீர்கள். இவ் இரு செயல்முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பாதிக்கப்பட்ட மக்கள், வறுமையில் வாடும் மக்கள் ஓலைக்குடிசையில் இருந்தால் அவர்களுக்கு இத்திட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது?

தனித்தனி வீடுகளுக்கு பொருத்துவது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுப்பது நல்லதா? பல வீடுகள் சேர்ந்து ஒரு இணைப்பை எடுக்கக்கூடிய செயன்முறையை நடைமுறைப்படுத்த எவ்வளவு செலவாகும்?

நேரமுள்ள போது பதிலளியுங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியில் இதை நடைமுறைப்படுத்த நானும் நிதி உதவி செய்ய தயார்.

 

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

இரண்டு வகையான உபகரணங்கள் உண்டு.

1. On grid

2. Off grid

1.On grid

என்பதற்கு மின்கலம் தேவை இல்லை ஆனல் வீட்டிற்கு மின்சார இணைப்பு அவசியம். பகல் வேளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார சபைக்குக் கொடுத்து இரவு வேளையில் மீளப்பெறுதல் (Grid act as a virtual storage).  உதாரணத்திற்கு எமது சூரிய ஒளித்தகடு 20 அலகுகளை பகல் வேளையில் பிறப்பிக்கிறது என்றும் நாம் 21 அலகுகளை அன்றைய நாளில் உபயோகிக்கிறோம் என்றும் எடுத்துக் கொண்டால் நாம் 1 அலகிற்க்கு மாத்திரமே கட்டணம் செலுத்த வேண்டும். இம்முறை பல காலங்களாக வெளி நாடுகளில் உள்ளபோதும் இலங்கையில் சில வருடங்களிற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. இது மலிவானதும் இலாபம் ஈட்டக்கூடியதுமான திட்டம்.

மாதக் கட்டணம் 7,000-8,000 ரூ வரையில் மின்கட்டணம் செலுத்தும் ஒரு வீட்டில் இதை 3000-3500 USD இற்கு பொருத்துவதன் மூலம் மாதக்கட்டணம் 300 ரூபா ஆகக் குறையும். இவ்விணைப்பு ஆகக்குறைந்த சிறிய பயனாளர்களுக்கு (ஒரு நாளில் 1 அல்லது 2 மின்விளக்கை மாத்திரம் பாவிப்போர்) பயன்படாது.

2.Off grid.

இதற்கு மின்கலம் தேவை ஆனால் இவற்றினை தேசிய மின்சாரம் இணைப்பு இல்லாத ( remote locations) இடங்களில் உபயோகிக்க முடியும். இவற்றை எல்லா இடங்களிலும் பாவிக்க முடியும். On grid உடன் ஒப்பிடும் போது செலவு 30- 40% அளவில் அதிகம் ஆனால் சிறிய பயனாளர்களிற்குப் பொருத்தமானது.

இறுதியாக‌

எனது முயற்சி இலாப நோக்கைக் கொண்டதெனினும், பொது நோக்கமெனின் என்னால் கொள்விலையில் பொருத்தித் தர முடியும். மேலும் வேறு யாராவது உபகரணங்களை பெற்றுத் தந்தால் என்னால் இலவச ஆலோசனை மற்றும் உபகரண முறைமை பற்றிய பொருத்தும் ஆலோசனைகளை வளங்க முடியும்.

 

Link to comment
Share on other sites

நன்றி உதயம் அண்ணா,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதை பொருத்துவதற்கு நான் உதவி செய்ய விரும்பினால் நீங்களே உங்கள் நண்பர்கள் மூலம் பொருத்தமான உதவி தேவைப்படும் நபர்களை தெரிந்தெடுப்பீர்களா? அல்லது நான் தேடி தர வேண்டுமா?

நீங்களே தெரிந்தெடுப்பீர்கள் எனின் பணம் அனுப்ப வேண்டிய account number மற்றும் ஏனைய தகவல்களை எனக்கு தனிமடலில் அல்லது முகநூலில் போட்டு விடுங்கள். இம்மாத இறுதியில் பணம் அனுப்ப முடியும். (எனது உழைப்பில் சேர்த்த பணம் அல்ல. நான் செய்யும் formation க்கு கிடைத்த பணத்தின் சிறுபகுதி அது. இந்நாட்டு அரசாங்கம் வேலை செய்பவர்களிடமிருந்து பணத்தை அறவிட்டு எம்மை போல் வேலை தொடர்பான formation செய்வோருக்கு வழங்கும் பணம் :lol:)

நான் தான் தேடி தர வேண்டுமெனின் எவ்வளவு நாளாகுமென்று தெரியாது.

எந்த திட்டம் என்றாலும் பரவாயில்லை. அனுப்பும் பணத்திற்கேற்ப எத்தனை வீடுகளுக்கு செய்ய முடியும் என்பதை பார்த்து செய்யுங்கள்.

என் மூலமாக செய்யப்படும் உதவி எனின் நீங்கள் உங்கள் கட்டணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் மூலமாக செய்யப்படும் உதவி தொடர்பில் அது உங்கள் முடிவு :)

Link to comment
Share on other sites

நன்றி உதயம் அண்ணா,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதை பொருத்துவதற்கு நான் உதவி செய்ய விரும்பினால் நீங்களே உங்கள் நண்பர்கள் மூலம் பொருத்தமான உதவி தேவைப்படும் நபர்களை தெரிந்தெடுப்பீர்களா? அல்லது நான் தேடி தர வேண்டுமா?

நீங்களே தெரிந்தெடுப்பீர்கள் எனின் பணம் அனுப்ப வேண்டிய account number மற்றும் ஏனைய தகவல்களை எனக்கு தனிமடலில் அல்லது முகநூலில் போட்டு விடுங்கள். இம்மாத இறுதியில் பணம் அனுப்ப முடியும். (எனது உழைப்பில் சேர்த்த பணம் அல்ல. நான் செய்யும் formation க்கு கிடைத்த பணத்தின் சிறுபகுதி அது. இந்நாட்டு அரசாங்கம் வேலை செய்பவர்களிடமிருந்து பணத்தை அறவிட்டு எம்மை போல் வேலை தொடர்பான formation செய்வோருக்கு வழங்கும் பணம் :lol:)

நான் தான் தேடி தர வேண்டுமெனின் எவ்வளவு நாளாகுமென்று தெரியாது.

எந்த திட்டம் என்றாலும் பரவாயில்லை. அனுப்பும் பணத்திற்கேற்ப எத்தனை வீடுகளுக்கு செய்ய முடியும் என்பதை பார்த்து செய்யுங்கள்.

என் மூலமாக செய்யப்படும் உதவி எனின் நீங்கள் உங்கள் கட்டணத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் மூலமாக செய்யப்படும் உதவி தொடர்பில் அது உங்கள் முடிவு :)

 

துளசி..

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. தற்போதைய நிலையில் நான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் நிலையில் இல்லை. உங்களால் முடிந்தால் பயன்  பெறுனர்களை அடையாளம் காட்டுங்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.