Jump to content

என்ன நியாயம்???


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நியாயம்???

 

woman-1.jpg

 

கட்டிக்கரும்பே மரகத மணியே
பவழம் பவழம் எம் இதழ்கள்
என்று சொன்னவர்களும்
நீங்கள்தான் .......
 

கயல் விழி என்றும் ,
எம் விழி அம்பால்
பெட்டிப் பாம்பாய் அடங்கினோம்
என்று ,

சொன்னதும் நீங்கள் தான் ........
 

எங்கள் கொடியிடை அசைவில் ,
உங்கள் மதி
தறி கேட்டுப் போனதாய்
சொன்னதும் நீங்கள்தான் ........
 

பாலைவனமாய் இருந்த
உங்கள் வாழ்வில்
கோடைத் தென்றலாய்

நாங்கள் வந்தோம்
என்று
சொன்னவர்களும் நீங்கள் தான் ......

இப்பிடி,

சும்மா இருந்த எங்களை
உங்கள் கற்பனை குதிரைகளால்
மேய்ந்து விட்டு !!!!!!!!
இப்பொழுது மட்டும்
மோகம் கலைந்தவுடன்
" இல்லாள் "
என்று சொல்வது என்ன நியாயம் ???


பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி வந்த கவிதை ஒண்டு
பாத்தன் . அதுக்கு இதை எழுதின்னான் . இதிலை நீங்கள் எண்டு சொலிறது ஆம்பிளையளை . சம்பந்தபட்டவர் என்னோடை கொழுத்தாடு பிடிக்க வரப்படாது :) :) :) .

 

 

மைத்திரேயி
10/01/0/2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலை நிலமாகி வரண்டுபோன

என் வாழ்வில்

ஒற்றைப் பூவாய் வந்து

சோலையாகிப் போனவள் நீ

விடியாத அந்த இரவுகளில்

என் விசும்பல்களின்

வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து

மலர்மாலை தொடுத்தவள் நீ

 

நாங்க எப்பவுமே இதைத்தான் சொல்லிக்கிட்டு வாறம். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117083&page=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே அப்படித்தானே. தம் காரியம் சாதிக்கும் மட்டும் கண்ணே, மணியே, உன்மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறேன், நீ இல்லாமல் ஒன்றுமே இல்லை என்றெல்லாம் பசப்புவார்த்தை கூறிவிட்டுத் தமது  காரியம் முடிந்தவுடன் கொஞ்சம் கூட இரக்கம் இன்றி இருப்பதை,சுயநலமாய் சிந்திப்பதை, பெண்ணின் உணர்வு பற்றி சிறிதேனும் எண்ணாமல் இருப்பதை  எல்லா இடமும் தானே பார்க்கிறோம். எங்காவது ஒன்று இரண்டுபேர் விதிவிலக்காக இருப்பார்கள். அவ்வளவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாயிருக்கு, மைத்திரேயி! :D

 

நான் உங்களுக்குத் தமிழ் படிப்பிக்கிறன் எண்டு கோவிக்காதேயுங்கோ !

 

இல் என்பது இருப்பிடம், வீடு என்று பொருள் படும்! 

 

ஆள் என்பது ஆள்பவள் என்று பொருள் படும்!

 

அப்படிப்பட்ட 'இல்லாள்' என்ற கௌரவத்துக்குரிய சொல்லை, என்ன பாடு படுத்தியிருக்கிறியள்?

 

'இல்லானை, இல்லாளும் வேண்டாள்"

 

இதில் துரத்துபவள் இல்லாள்! துரத்தப்படுபவன் 'இல்லான்'! :wub:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாள் , கோ + இல் ...!

 

அங்காலை அவர் பல திரிகளில் தமிழைப் பிச்சு உதறுறார் ,நீங்கள்  பஞ்சு பஞ்சாய்ப் பறக்க விடுகிறீங்களே சகோதரி...! :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க  சொல்லுறது எல்லாம் சரிதான் சகோதரி

ஆனால்

இறுதியில் ஒருவருக்கு என்று முடித்தது தான் உதைக்குது

அவர் எதையெல்லாம்   பார்த்தபின்

சலித்த பின் இப்படியானார்???

அங்க தான் உதைக்குது :lol:  :D  :D  

 

மற்றும்படி

அங்கும் எமது ஒவ்வாமையை  சுட்டிக்காட்டியுள்ளோம்....... :icon_idea:

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன்.. தலையணையால் முகத்தை மூடிவிட்டு ஒரு குத்து விட்டிருக்கிறா மைத்திரேயி அக்கா.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. தலையணையால் முகத்தை மூடிவிட்டு ஒரு குத்து விட்டிருக்கிறா மைத்திரேயி அக்கா.. :D

 

 

யாருடைய  முகத்தை...........???

பாவம்

அந்தாள்

அப்பாவி  மனுசன் :o

ஏனிந்த கொலைவெறி  உங்களுக்கு(இருவருக்கும் :lol:  :D )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க எப்பவுமே இதைத்தான் சொல்லிக்கிட்டு வாறம். :)

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117083&page=1

 

உப்புடிதானே எல்லாரும் சொல்லுறியள் ஆனா நடைமுறையிலை தலைகீழாய் எல்லோ கிடக்கு .உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாயிருக்கு, மைத்திரேயி! :D

 

நான் உங்களுக்குத் தமிழ் படிப்பிக்கிறன் எண்டு கோவிக்காதேயுங்கோ !

 

இல் என்பது இருப்பிடம், வீடு என்று பொருள் படும்! 

 

ஆள் என்பது ஆள்பவள் என்று பொருள் படும்!

 

அப்படிப்பட்ட 'இல்லாள்' என்ற கௌரவத்துக்குரிய சொல்லை, என்ன பாடு படுத்தியிருக்கிறியள்?

 

'இல்லானை, இல்லாளும் வேண்டாள்"

 

இதில் துரத்துபவள் இல்லாள்! துரத்தப்படுபவன் 'இல்லான்'! :wub:  

 

உங்கடை தமிழ் விளக்கத்துக்கு நன்றி சொல்லிறன் . நீங்கள் எல்லாம் பெரிய கவிதையள் எழுதிறனீங்கள் . உங்களோடை என்னாலை மல்லு கட்டேலாது . ஆனாலும் நான் படிச்ச பள்ளிக்கூடத்திலை  " இல்லாள் " எண்டுறதை இல்லாதவள் எண்டும் சொல்லலாம் எண்டு என்ரை தமிழ் ரீச்சர் சொல்லி தந்தவா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க  ஒன்றும்.. அங்கு...தாய்குலத்தை மட்டம் தட்டி (மட்டம் தட்டனுன்னு நினைச்சா தட்ட பின்னிற்கமாட்டம். அதுவும் அவங்களை அறிவூட்டனுன்னு தானே தவிர.. வெறுப்பெல்லாம் கிடையாது. என்னை அதிகம் அரவணைப்பதும் தாய்க்குலம் அல்லவா..??! அதற்கான நன்றிக்கடனை செலுத்தாமல் விடுவது பாவம். :lol: ) மேற்படி பதத்தை பாவித்திருக்கவில்லை. அவங்க வாழ்க்கையில்..நிஜ கோலத்தையே வெளிக்காட்டி இருந்தேன். மேலும் அங்குள்ள "இல்லாள்".. "மனையாள்" என்று பொருள்படும். இப்ப எல்லாம்.. நவீன... உலகத்துப் பெண்களுக்கு உந்தப் பதம் பொருந்தாது என்றாலும்.. வீட்டில கொஞ்ச நேரமாவது வாழுறாங்கல்ல..! அந்த வகையில்.. இன்னும் கொஞ்சக் காலத்துக்கு பாவிக்கலாம்.. இப்பதத்தை. :icon_idea:

 

 

கீழ்படி பெருமைக்குரிய அந்தச் சொல்லை மைத்திரேயி அக்கா.. சிறுமை என்று நினைப்பதுவும் ஏனோ..???! :):lol:

 

 

பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு) - மூதாதைய இல்லங்களில், இல்லாளே வழி நடத்தினாள்.

(இலக்கியப் பயன்பாடு) -

  • இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை - (மூதுரை - 21, ஔவையார்) (With wife at home, there is nothing you don't have)   

 

 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

" இல்லாள் " என்ற பொதுவான சொல்லாடலுக்கு  வித்தியாசமான கோணத்தில் பொருள் தந்த மைத்திரேயிக்குப் பாராட்டுக்கள் . நீங்கள் மேலும் பல ஆக்கங்களை எங்களுக்குத் தரவேண்டும் .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லாள் , கோ + இல் ...!

 

அங்காலை அவர் பல திரிகளில் தமிழைப் பிச்சு உதறுறார் ,நீங்கள்  பஞ்சு பஞ்சாய்ப் பறக்க விடுகிறீங்களே சகோதரி...! :D

 

பஞ்சாய் போனால் என்ன மாற்றர் தான் முக்கியம் மன்னா .

 

நீங்க  சொல்லுறது எல்லாம் சரிதான் சகோதரி

ஆனால்

இறுதியில் ஒருவருக்கு என்று முடித்தது தான் உதைக்குது

அவர் எதையெல்லாம்   பார்த்தபின்

சலித்த பின் இப்படியானார்???

அங்க தான் உதைக்குது :lol:  :D  :D  

 

மற்றும்படி

அங்கும் எமது ஒவ்வாமையை  சுட்டிக்காட்டியுள்ளோம்....... :icon_idea:

 

உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.