Jump to content

பார்ட்டிக்கு போய் ஓவரா தண்ணி அடிச்ச கடவுள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1525775_630574910337363_82180248_n.jpg

 

கடவுள்

ஓர் நாள்..

பார்ட்டிக்குப் போய்

ஓவரா தண்ணி அடிச்சிட்டு

கட்டிலில் வீழ்ந்தவர்..

காலையில் எழுந்து

கண் விழிக்க

சிந்தனை கொஞ்சம்

சிக்கல்பட்டது.

சரி போனாப் போகுது

இப்படியே விட்டால்

மூளை குழம்பிடும்..

பொழுதும் போகுதில்லை..

ஒரு மானிடப்

பெண்ணைப் படைக்க

சித்தம் கொண்டார்..!

 

சித்தம் கொண்டவர்

டிகிரி போல்டரை

தூக்கினார்.

பெண்ணைப் படைக்க..

எனக்கு

என்னென்ன தகுதி வேணும்

செக் பண்ணத் தொடங்கினார்..

 

முதலில்

நல்ல ஸ்கெச் போட

ஒரு வரைகலை டிகிரி வேணும்..

சா.. அதுக்கு முன்னம்

நல்ல மனோதத்துவ டிகிரி வேணும்..

நோ நோ....

அதுக்கும் முன்னம்

நல்ல சமூகவியல் டிகிரி வேணும்..

ம்ம்ம்... இல்லையே

இவை மட்டும் இருந்தால்

வெறும் காட்டூன் தான் வரையலாம்..

உயிரை ஆக்க..

நல்ல உயிரியல்தொழில்நுட்ப டிகிரி வேணும்

 

அதுக்கும் மேல..

அளவுகள் எல்லாம் சரியாக் கணிக்க

நல்ல.. கணித டிகிரி வேணும்..

அது மட்டும் போதுமா

நினைப்பதை எல்லாம் பதிவு பண்ண

நல்ல கணணி டிகிரி வேணும்...

கணணியில் பதிவதை எழுத

நல்ல மென்பொருள் டிகிரி வேணும்..

 

என்ன இன்றைக்கு

சிந்தனை சுற்றிச்சுற்றி

சுப்பற்ற கொல்லைக்க நிற்குது..

அடிச்ச சரக்கில

எதையோ கலந்திட்டாங்கள் போல..

ம்ம்ம்....ம்ம்ம்

ஆஆஆஆ

உயிரை படைச்சு.. தகவலை பதிஞ்சா போதுமா

அதுக்கு உருவம் கொடுத்து

உலவா விட வேண்டாம்...?!

 

அதுக்கு..

நல்ல இயந்திரப் பொறியியல் டிகிரி வேணும்..

இயந்திரம் படைத்தால் போதுமா

அதை இயக்க..

நல்ல இலத்திரனியல்.. மின்னியல் டிகிரி வேணும்..

அது மட்டும் போதுமா..

அது கதைக்கப் பேச வைக்க

கேட்க உணர வைக்க

நல்ல தகவல்பரிமாற்ற தொழில்நுட்ப டிகிரி வேணும்...

 

உவ்வளவைவையும்

என்ன.. என் மண்டைக்க உள்ள

களிமண்ணையே

வைச்சுச் செய்யுறது..??!

மடையா மடையா

நீ எல்லாம் கடவுள்..!

 

செய்ய நல்ல...

செய்பொருள் வேணும்

அதற்கு நல்ல இரசாயனவியல் டிகிரி வேணும்..

இரசாயனத்தை ஆக்க

நல்ல பெளதிகவியல் டிகிரி வேணும்..

அது என்ன

சும்மா

buy one get one free யாவா கிடைக்கும்...

அதுக்கு முதலில

எனக்கு..

நல்ல மூளை வேணும்.

அதுக்கு நான்

இராப்பகலாப் படிக்கனுமே..!

கஸ்டம் தான்..

இப்படி தண்ணி அடிச்சிட்டு திரியுறதிலும்

மனம் வைச்சால் படிக்கலாம்.

 

படிச்சு எனக்கு

நல்ல மூளை வந்திட்டா..

அதையே கொப்பி பண்ணி

அங்கையும் வைக்கலாம்.

ஆனால் என்ன

நம்ம மூளை

அதுங்களுக்கும் வந்திட்டால்..

நம்மைத் தேடி வந்து

தொல்லை தருங்கள்..!

சோ....

கொஞ்சம் குறைச்சு வைப்பம்.

 

மூளை வைச்சா

கதைச்சுப் பேச ஆசை வரும்..

கதைச்சு பேசினால்

பிரச்சனை வரும்..

அதைத் தீர்க்க

நல்ல வக்கீல் டிகிரி வேணும்..

அப்பாடா..

இதோட முடிஞ்சுதா

இல்ல...

இன்னும் ஏதாவது..?!

 

ஆமால்ல..

பெண்ணைப் படைச்சால்

மட்டும் போதுமா

அது ஆட்டிப்படைக்க

ஒரு பொம்மை செய்யனுமே

அதுக்கு...????!

நல்ல குளோனிங் டிகிரி வேணும்.

குளோனிங் செய்ததை

குட்டி போட வைக்க

பாலியல் டிகிரி வேணும்.

பேசாமல்

அதை ஒரு ஆணாகப் படைப்பம்.

 

ஆணைப் படைச்சால்

குடும்பம் வரும்..

குடும்பம் வந்தால்

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி..

அதுகள் பெருக வெளிக்கிடும்.

பெருக வெளிக்கிட்டால்

வாழ இடம் கேட்கும்

அதை ஆக்க

நல்ல புவியியல் டிகிரி வேணும்.

 

இடம் கொடுத்தால்

மடம் புடுங்குங்கள்

அதைக் குறைக்க..

நல்ல மதத்தை வேற படைக்கனும்

அதுக்கு நல்ல மத டிகிரி வேணும்..

மதத்தைப் படைச்சால்..

அதைப் பரப்ப..???!

நல்ல மொழி வேணும்

அதுக்கு மொழி டிகிரி வேணும்.

 

மொழியை வைச்சால்

பாடம் படிக்குங்கள்

அதுக்கு நல்ல ஆசிரியர் டிகிரி வேணும்..

பாடம் படிச்சால்

பகுத்தறிவு வரும்..

பகுத்தறிய வெளிக்கிட்டால்

நான்.. நீ சண்டை வரும்

சண்டை வந்தால்

போர் வரும்.. அழிவு வரும்..

நோய் வரும்.. காயம் வரும்

உதுகளை கட்டுப்படுத்த

நல்ல மருத்துவ டிகிரி வேணும்.

 

அப்புறம்..

ஆளையாள் அடிபட்டு

செத்துப் பிணங்களாகுங்கள்.

பிணங்களைக் கூட்டி அள்ளி

உக்க வைச்சு..

recycle பண்ண

அதுக்கு தனி டிகிரி வேணும்..

 

அதுமட்டுமா..

ஆசையோடு வாழ்ந்தது

பிணமாய் போனால்

சும்மா இருக்குமா

பேயா சுத்தும்.

அதை அடக்க

சொர்க்கம் வைக்கனும்

அதுக்கு  நிறைய நிதி வேணும்

நிதியை கொண்டு வர

உற்பத்தி வேணும்.

உற்பத்தி பெருக..

நல்ல முகாமைத்துவம் வேணும்..

உதுக்கெல்லாம்

நல்ல ஒரு எம் பி ஏ டிகிரி வேணும்..

 

இப்படியே

டிகிரியை

கணக்குப் போட்டுக் கொண்டே போனால்

பெண்ணைப் படைக்க ஏலாது..

ஏதோ உள்ளதை வைச்சு

ஒன்றைப் படைப்பம்..

நடக்கிறது நடக்கட்டும்.

 

நல்ல ஐடியா..

பேசாம..

உள்ளதை வைச்சு

ஒன்றைப் படைச்சு

பூமில போட்டு விடுவம்

நடக்கிறதை

அப்புறம் பார்ப்பம்..!

 

தெரிந்தோ தெரியாமலோ..

பெண்ணைப் படைச்சு

பூமில போட்ட கடவுள்

களைப்பாற

கொலிடே போனவர் தான் போனார்.

இருந்த நிம்மதியும்

தொலைத்து..

பூமிப் பக்கம்

வரவே மாட்டேன்னு

ஓரங்கட்டி

ஒளிச்சுத் திரிகிறார்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் மூண்டரையாகுது கட்டிலுக்கு கீழ கிடக்குறியள். எழும்பி வாயைக் கொப்பளிச்சுட்டு டிகிரி  காப்பி குடிச்சுட்டு கட்டில்ல படுப்பீங்களாம் என்ன அச்சாப் பிள்ளையெல்லோ...! (அங்கால அமலாபால் நினைவில எல்லாம் குழம்பிக் கிடக்கு)  :D

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. கவிதை சுமார் ரகம்தான்.. ஆனால் நீங்கள் இணைச்ச படம் அருமை.. :D இருங்கோ பச்சை இருக்கா எண்டு பார்க்கிறன்.. :huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப  விளங்குது

தம்பிக்கு ஏன் இவ்வளவு பயம்  என்று... :lol:

இதையெல்லாம் நினைத்தால்.............? :D


(ஆனாலும் இதுக்குள் இவ்வளவும் சேர்ந்த பெரும் பொருள் தான் பெண் என்ற  சான்றிதழுக்கு பெண்கள் நன்றி  சொல்லணும்)

Link to comment
Share on other sites

கதை அருமை ............படம் அதைவிட அருமையிலும் அருமை . :D
 
இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை அபாரம் .......... இதை  எல்லாம்  சிந்தித்து கொண்டு இருந்தால் .....எல்லாம் ப றந்து  பறந்து   போய் விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதைக்கவியை.. படிச்சு.. கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. இதன் உட்பொருள் விளங்கினால் சரி. :lol::icon_idea:


படம் போட்டது வரிகளால் கவரப்பட முடியாதவர்களை வனதையரால் கவரும் நோக்கில். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கப்பலை கட்டி முடிச்ச பிறகு கடல்லை பயனித்தால் புயல் வந்து மூழ்கிகடித்து போடும் என்பதற்க்காக துறைமுகத்திலேயே நின்று ஆழ்கடல் பயணங்களின் அற்புதவனப்புகளை படங்கள் மூலம் பார்த்து ரசிச்சது கானும் எங்களை மாதிரி கப்பலை கடலில் பயணிக்க விடுங்க அந்த கடலின் சீற்றம்,அமைதி,கோபம் அனைத்துமே ரசிக்க கூடியது.

 

எத்தினையோ வெறுமே கிடக்கும் கோல் போஸ்ட்டுகள் எத்தினை தரம் வேண்டுமானாலும் நீங்கள் பந்தை வைச்சு கோல் போடலாம் ஆனால் மனித மனம் ஆயிரக்கணக்காண பார்வையார்களின் கரகோசத்திலை எதிர் அணியின்ஆக்ரோச எதிர்ப்பையும் வெண்று கோல் போடுபவனையே இவ்வுலகு விரும்புது கோல் போடுபவனும் விரும்புகின்றான்.இனி நீங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய கப்பலை கட்டி முடிச்ச பிறகு கடல்லை பயனித்தால் புயல் வந்து மூழ்கிகடித்து போடும் என்பதற்க்காக துறைமுகத்திலேயே நின்று ஆழ்கடல் பயணங்களின் அற்புதவனப்புகளை படங்கள் மூலம் பார்த்து ரசிச்சது கானும் எங்களை மாதிரி கப்பலை கடலில் பயணிக்க விடுங்க அந்த கடலின் சீற்றம்,அமைதி,கோபம் அனைத்துமே ரசிக்க கூடியது.

 

எத்தினையோ வெறுமே கிடக்கும் கோல் போஸ்ட்டுகள் எத்தினை தரம் வேண்டுமானாலும் நீங்கள் பந்தை வைச்சு கோல் போடலாம் ஆனால் மனித மனம் ஆயிரக்கணக்காண பார்வையார்களின் கரகோசத்திலை எதிர் அணியின்ஆக்ரோச எதிர்ப்பையும் வெண்று கோல் போடுபவனையே இவ்வுலகு விரும்புது கோல் போடுபவனும் விரும்புகின்றான்.இனி நீங்கள்!!

 

பெருமாள் அண்ணே... எனக்கு ஒன்றுமே புரியல்ல. விடுங்க. வரவுக்கு நன்றி. :):lol:

Link to comment
Share on other sites

நெடுக்கனை ஒருவளை பிரமனுக்கு அண்ணனோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கனை ஒருவளை பிரமனுக்கு அண்ணனோ :D

 

பிரமனுன்னு ஒரு தம்பி நமக்கில்லையே அஞ்சரன். :lol:  நன்றி வருகைக்கு. :)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்தோ தெரியாமலோ..

பெண்ணைப் படைச்சு

பூமில போட்ட கடவுள்

களைப்பாற

கொலிடே போனவர் தான் போனார்.

இருந்த நிம்மதியும்

தொலைத்து..

பூமிப் பக்கம்

வரவே மாட்டேன்னு

ஓரங்கட்டி

ஒளிச்சுத் திரிகிறார்..!

 

நினைச்சன் எங்கை கொண்டுவந்து முடிப்பியள் எண்டு. பொம்பிளையள் நாங்கள் வந்ததாலைதான் நீங்களும் ஓடியாடி திரியிறியள் , எங்களை வைச்சு கவிதையும் எழுதுறியள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம் கடவுள். வாசிச்சுக் களைச்சுப் போனன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கீழே இருக்கும் கவிதை நீளமாக இருக்கிறது ............. வசிக்க நேரம் இப்போ இல்லை.
மேலே இருக்கும் கவிதை ........... பிரமாதம்! அப்படியே வாசிச்சுகொண்டே இருக்கலாம் போல் இருக்கு ......
இணைப்பிற்கு நன்றி !
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.