Jump to content

தட்டி வான்...!!!!


Recommended Posts

                                                                             தட்டி வான்

 

1525513_10151951421578002_112326440_n.jp

1.தட்டி வான் தெரியாத ஆரும் யாழ்ப்பாணத்தில இருக்க முடியாது.உந்த மினிவான் வரக்குமுன்னம் தட்டிவான் தான் கொடிகாமம்,பருத்துறை,யாழ்ப்பாணம் றூட் ஓடினது.
காத்தோட்டமா இருந்து அங்கின இங்கின பராக்கு பாத்துக்கொண்டு போறதுக்கு நல்ல வசதி.

2.தட்டி வான் செய்த கொம்பனிக்காரன் இப்ப யாழ்ப்பாணம் வந்தா அதை லச்சகணக்கில காசு குடுத்து வாங்கிக்கொண்டு போவாங்கள்.ஏனெண்டா 100 வருச பழசு தட்டி வான்.இருந்தாலும் எங்கட ஆக்கள் இப்பவும் ஓடுகினம்.

3.பிரச்சினை காலத்தில டீசலோ பெற்றோலோ இல்லாத நேரம் எங்கட ஆக்கள் தட்டிவானை மண்ணெண்ணையில ஒடிக்காட்டினவை.புகை பறக்க காது அடைக்கிற சத்தம் வரும். 

4.கொடிகாமத்தில இருந்து யாழ்ப்பாண சந்தைக்கும், பருத்துறை சந்தைக்கும் மரக்கறியள்,தேங்காய் மூடையள்,பிலாப்பழம்,வாழைக்குலை...இப்பிடி கன சாமானோடை சும்மா ஆடி அசைஞ்சு வாற அழகே அழகுதான்!!

5.தட்டிவானில ஒரு சிக்கல் நிண்டு போறது வலு கஸ்ரம்.ஏனெண்டா உயரம் குறைவு.அதால குனிஞ்சு நிண்டு நாரி கீரியெல்லாம் பிடிச்சுப்போடும்.இருந்து போறதெண்டாலும் கஸ்ரம் தான்.ஏனெண்டா மரச் சீற்றுத்தானே!!! குண்டி அண்டும்.

6.எனக்கு நல்ல ஞாபகம் ... ஊரில கலியாண வீடுகளுக்கு கூட இந்த தட்டிவான் தான் வாடகைக்கு எடுக்கிறவை. எங்கேனும் தூர கோயில் திருவிழாகளுக்கு குடும்பமா போறதெண்டாலும் தட்டிவான் தான்.

7.தட்டி வான் கோர்ண் தான் முந்தி பெரிய புதினம். கையால "பாங்..பாங்" எண்டு தான் முந்தி கோர்ண் அடிப்பினம்(கோர்ண் இக்கு பின்னால பெரிய உருண்டையா ரப்பர் பந்து போல இருக்கும்.அதைப்பிடிச்சு ஊண்டி அமத்த வேணும்).பிறகு சாதாரணமான கோர்ண் வந்திட்டுது.

8.தட்டி வானில முன்னுக்கு வரிசையா கடவுள் படங்கள் இருக்கும்.அதுக்கு வேற பெரிசா சோடிச்சு இருப்பினம்.சில பேர் வாகனம் ஓடத்தொடங்கையுக்க சாம்பிராணி கொழுத்திவிடுவினம்.அதுதான் "car air freshner..."

9.தட்டி வானின்ர ரண்டு பக்கமும் பெரிய கொட்டை எழுத்தில பெயர் எழுதியிருப்பினம்.
பிள்ளையார் துணை,முருகன் துணை எண்டும் இருக்கும்.

10.எஙகட பள்ளிக்கூடத்தின்ர(ஹாட்லிக்கல்லூரி) உத்தியோக பூர்வ வாகனம் "தட்டிவான்"தான்.நான் அறிய 2002 வரைக்கும் நாங்கள் எங்க போறதெண்டாலும் தட்டிவான் தான்.பிறின்சிப்பல் முன்னுக்கு ஏறி இருப்பார். பின்னுக்கு வானுக்கு வெளிய ஒரு வாங்கில் மாதிரி சங்கிலியால கொழுவி விட்டி இருப்பினம்.அதில இருந்து போறதுக்கு அடிபிடிப்படுவம்.ஏனெண்டா பின்னால இருந்து என்ன சேட்டை விட்டாலும் பிறின்சிப்பலுக்கு தெரியாது.

11. தட்டி வானில போய் யாழ்ப்பாணத்தில இறங்குற கிறிக்கற்,வுட்போல் ரீம் எங்கட பள்ளிக்கூடம் தான்.தட்டி வானில போனாலே உடன சொல்லுவாங்கள் "உது ஹாட்லி ரீம்" எண்டு.சிலருக்கு நக்கல்.ஆனா எங்களுக்கு பெருமை.

12.மச் முடிஞ்சு திரும்பி வரேக்க "எங்கட கொலிஜ் .... ஹாட்லிக்கொலிஜ்"
"கொலிக் கொலிஜ் ..ஹாட்லிக்கொலிஜ்" எண்டு கத்திக்கொண்டு வருவம்.வாற வழியில தட்டிவானுக்குள்ளால எட்டி பூவரசம் குழையை புடுங்கி றோட்டால வாற பெட்டையளுக்கு எறிவம்.அதுவும் பின்னால இருக்கிறபொடியளின்ர சேட்டை பெரும் சேட்டை!!

13.உப்பிடி சேட்டை விட் சில சனம் மோட்டச்சைக்கிள்ள துரத்தி வந்து கேமை கேட்ட சம்பவம் கனக்க...கனக்க....

14. இன்னும் ஒண்டை மறந்திட்டன், சமாதான காலத்தில முகமாலைக்கும் கொடிகாமத்துக்கும் தட்டி வான் தான் றூட் ஓடினது.நான் மினிவானில ஏறமாட்டன்.. காத்து நிண்டு தட்டி வானில தான் ஏறிப்போவன்.

ஏனெண்டா எனக்கு வாகனத்தில ஏறினா "சத்தி" வரும். மினிவான் எண்டா ஜன்னல் திறக்க முன்னம் ஆருக்கும் மேல சத்தி எடுத்துப்போடுவன்.(நெக்ரோ சோடா குடிச்சிட்டு ஒருக்கா மினி வானில போய் வெள்ளை வேட்டி கட்டின மனிசன் ஒராளில "சத்தி" எடுத்து அந்தாளிட்ட கிழிய கிழிய ஏச்சு வாங்கின பிறகு எனக்கு மினி வானில போக பயம்).தட்டி வான் எண்டா "சத்தி" வந்தாலும் வெளிய உடன எட்டி எடுக்கலாம்.ஏனெண்டா எல்லாப்பக்கமும் திறந்து இருக்கும்.

15.தட்டி வானில போடுவினம் அருமையான இடைக்கால பாட்டுகள்.....ஆனா ஆரம்பத்தில "பிள்ளையார் சுழிபோட்டு.." எண்ட பத்திப்பாட்டை போட்ட பிறகுதான் சினிமாம்பாட்டு போடுவினம்.

16.மினிவானுக்கு குடுக்குற காசைவிட தட்டிவானுக்கு குறைவு.அதுவும் ஒரு முக்கிய காரணம் நான் தட்டிவானில ஏறுறதுக்கு....

 

1521218_10151951410553002_318246246_n.jp

 

 


தமிழ்ப்பொடியன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தட்டிவான் நீங்கள் பிறப்பதற்கு முன்னர் அல்லவ ஓடியது  ....  :D

 

 

நான் நினைக்கின்றேன் 2006 ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த வேளையில் கொடிகாமத்தில் இருந்து மந்திகையூடாக பருத்தித்துறை செல்லும் தட்டிவானில் ஏறி சென்றஞபகம் வாங்கில் போன்ற குசன் இல்லாத பலகை பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்துவிட்டு நாட்டுக்கு சென்று இருக்கையில் இருந்து போக நோகின்றது என்று வானுக்குள் நின்று செல்ல கிளீனர்  தம்பி இடம் இருக்க ஏன் அண்ணை நிக்கிறியள் என்று என்நிலமை புரியாமல் கேட்டது மறக்க முடியாத அனுபவங்கள்.     
 
 
பகிர்விற்கு நன்றி தமிழ்ப்பொடியன்.
Link to comment
Share on other sites

எனக்கு இந்த தட்டிவான் அனுபவம் உண்டா என்பது மறந்துபோச்சு.. ஆனால் வரிசையா கடவுள் படம் இருந்ததை பார்த்த மாதிரி ஒரு ஞாபகம்.. :unsure:

பதிவுக்கு நன்றி தமிழ்ப்பொடியன்..

Link to comment
Share on other sites

எனக்கு நிறைய இருக்கு இதில் போன அனுபவம் தட்டிவான் நேர போகுதா அல்லது ஒரு கரையா சாய்யுதான் போகுமா என்றுதான் இன்னும் புரில்ல :D

 

நன்றி பகிர்விற்கு பொடியன் .

Link to comment
Share on other sites

எனக்கும் உந்த தட்டில் வானில் ஏறின அனுபவம் இருக்கு. நன்றி தமிழ்பொடியா பழைசுகளை நினைவுபடுத்துவதற்கு!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிறைய இருக்கு இதில் போன அனுபவம் தட்டிவான் நேர போகுதா அல்லது ஒரு கரையா சாய்யுதான் போகுமா என்றுதான் இன்னும் புரில்ல :D

 

நன்றி பகிர்விற்கு பொடியன் .

 

இது ஒரு நல்ல  கேள்வி !  

 

வானின் அம்சங்கள் !

 

வானுக்கு நீளமான செசி உண்டு, அதை நான்கு சில்லுகளுக்கும் பக்கத்தில் இருக்கும் வில்லுத்தகடுகள் வில்லுப்போல் வளைந்துநின்று தாங்கிப் பிடிக்கும்.

அந்த வில்லுத்தகடுகளைக் கோர்த்து நடுவில் ஒரு நீன்ட பெரிய ஆணி பூட்டி இருக்கும்.

 

பயணிகளும் , வீதிகளும் !

 

வானில சனம் நிறைய ஏறினால்  இறங்க வசதியாக இடப்பக்கம்தான் கூடுதலாய் நிப்பினம் தமிழ்பொடியன் உட்பட  ,

வீதிகள் வானவில் போன்று இருக்கும். ஓவசியர்மாரின் டெக்னிக் மழைக்காலத்தில் நீர் வீதியைவிட்டு விரவாய் ஓட ,

நிறையப் பள்ளங்கள் கரயோரமாய் இருக்கும்.

 

வானின் சமனிலை மாற்றங்கள் !

 

1)  இப்ப வான் வீதியில் பள்ளங்களிள்  விழுந்து விழுந்து எழும்பி ஓடுதா, சனம் எல்லாம் கூடுதலாய் இடப்பக்கம் நிக்குதா, அதனால் இடதுபக்க  வில்லு நிமிர்ந்து வயலின் ஆகிவிடுகிறது.

 

2)  நடுவில்  உள்ள  ஆணி உடைந்து விடுகிறது.

 

3) சமயத்தில் வில்லுத்தகடே உடைந்து விடும் . ஆனாலும் வான் நிக்காது உரிய இடத்துக்கு வந்தே சேரும் ...!

 

இது போன்ற காரணங்களால் வான் ஒரு கரையாய்  சாய்ந்து போகிறது...!  :D :D

 

 

 

Link to comment
Share on other sites

                                                                             தட்டி வான்

 

10.எஙகட பள்ளிக்கூடத்தின்ர(ஹாட்லிக்கல்லூரி) உத்தியோக பூர்வ வாகனம் "தட்டிவான்"தான்.நான் அறிய 2002 வரைக்கும் நாங்கள் எங்க போறதெண்டாலும் தட்டிவான் தான்.பிறின்சிப்பல் முன்னுக்கு ஏறி இருப்பார். பின்னுக்கு வானுக்கு வெளிய ஒரு வாங்கில் மாதிரி சங்கிலியால கொழுவி விட்டி இருப்பினம்.அதில இருந்து போறதுக்கு அடிபிடிப்படுவம்.ஏனெண்டா பின்னால இருந்து என்ன சேட்டை விட்டாலும் பிறின்சிப்பலுக்கு தெரியாது.

11. தட்டி வானில போய் யாழ்ப்பாணத்தில இறங்குற கிறிக்கற்,வுட்போல் ரீம் எங்கட பள்ளிக்கூடம் தான்.தட்டி வானில போனாலே உடன சொல்லுவாங்கள் "உது ஹாட்லி ரீம்" எண்டு.சிலருக்கு நக்கல்.ஆனா எங்களுக்கு பெருமை.

12.மச் முடிஞ்சு திரும்பி வரேக்க "எங்கட கொலிஜ் .... ஹாட்லிக்கொலிஜ்"

"கொலிக் கொலிஜ் ..ஹாட்லிக்கொலிஜ்" எண்டு கத்திக்கொண்டு வருவம்.வாற வழியில தட்டிவானுக்குள்ளால எட்டி பூவரசம் குழையை புடுங்கி றோட்டால வாற பெட்டையளுக்கு எறிவம்.அதுவும் பின்னால இருக்கிறபொடியளின்ர சேட்டை பெரும் சேட்டை!!

13.உப்பிடி சேட்டை விட் சில சனம் மோட்டச்சைக்கிள்ள துரத்தி வந்து கேமை கேட்ட சம்பவம் கனக்க...கனக்க....

 

 

 

தமிழ்ப்பொடியன்

 

 எங்கட ஹாட்லிப் பெடியள பொறுத்தவரையில் அந்தக்காலத்தில 'தட்டிவான்'தான் மிகப்பிடித்தமான சொகுசு வாகனம். :wub:  றோஸா மினிபஸ் எல்லாம் வேணாம்.... தட்டிவான்தான் வேணுமெண்டு அடம்பிடிச்சுக் கேட்டிருக்கம். :lol:

அதெல்லாம்... எம் கல்லூரிக் காலத்தின் இனிய கனாக்காலங்கள். எப்பவும் மறக்க முடியாத ஞாபகங்கள் .

ஆனால்.... இப்போதைய ஹாட்லிப்பெடியளின்ர விருப்பம் எப்படி இருக்கோ தெரியவில்லை...!? :unsure:

 

பழசுகளையெல்லாம் தோண்டியெடுத்து  கடந்தகால பசுமை ஞாபகங்களை கிளறிவிட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பொடியனுக்கு மிக்க நன்றி! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊர்ப்பக்கம் இந்தத் தட்டி வான்கள் கொஞ்சம் குறைவு!

 

ஆனால், வடமராட்சி நண்பர்களுடன் அவர்களின் ஊர்களுக்குப் போனபோது, இதில் பயணித்த அனுபவம் உண்டு!

 

சில வேளையில, பின் பக்கத்துச் சீற்றிலையிருந்து, முன்னால இறங்கிறதுக்குள்ள, கனபேரைத் தடவிக்கொண்டு வரவேண்டியிருக்கும்! :D

 

ஊர் நினைவுகளை மீட்டும், தமிழ்ப்பெடியனுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

வடமாகாணத்து ஏழைகளின் தோழன் தட்டிவான் . தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த தட்டிவான் பின்பு நாகரீகம் என்ற போதையினால் மறக்கடிக்கப்பட்டதும் வரலாறு . எம்மனதில் பாடம் போட்டு உறைநிலையில் இருந்த நினைவுகளை உருக்கி மீண்டும் கொண்டுவந்ததிர்ற்கு பெடிக்கு பாராட்டுக்கள் :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிவானில் பின்னுக்கு நின்று போவது ஒரு தனிச்சுகம்.

 

உள்ளுக்கை குந்தியிருக்க விட்டுட்டாலும்?????

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மறக்கும் ‘தட்டிவான்’!

ஜெரா

எங்கட ஊரில் பென்னம்பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தவர். கட்ட, உருள மாதிரி குண்டான தோற்றம். நல்ல இருண்ட வெள்ள. அவருக்கு எங்க போனாலும் முதலிடம்தான் வேணும். இடப்பெயர்வு காலங்களில மலங்கழிக்கிறதுக்கு காலையிலயே வரிசையில நிக்கவேணும். அதில கூட வரிசையில நிக்காம, அந்தப் பணக்காரர் வந்தவுடன, உள்ளுக்கப் போகக்கூடிய சகல செல்வாக்குகளோடயும் தான் இருந்தவர். பெரிய பெரிய துப்பாக்கிகள் வச்சிருந்த பெடியள்கூட இந்த அய்யாவுக்குத் தனி மரியாத குடுப்பாங்கள். அப்படியான இந்தப் பெரியவர் ஒருக்கா முதல் முதலாப் பள்ளமடு போனவர். அதாவது, முதல்முதலா ஆமிக்காரனப் பார்க்கப் போறார்.

1995 காலப்பகுதியெண்டு நினைவு. பள்ளமடுதான் இப்ப ஓமந்தை மாதிரி வடக்கையும் தெற்கையும் பிரிக்கிற இடமா இருந்தது. இங்கால இருந்து பெடியங்கள் செக் பண்ணுவாங்கள். அங்கால இருந்து அவங்கள் செக் பண்ணுவாங்கள். பெடியங்களின்ர கட்டுப்பாட்டுப் பக்கமிருந்து போற ஆக்கள, ஏத்திக் கொண்டு போற ஆக்கள் ஆமிக்காரன்ர பொயின்ட் அடி வரைக்கும் கொண்டு போய் விட்டிட்டு, அங்கியிருக்கிற சனங்கள ஏத்திக் கொண்டு வருவாங்கள்.

எங்கட பெரியவருக்கு முதலிடம்தானே வேணும். வாகனத்திலயும் முதலிடம். ட்ரைவருக்குப் பக்கத்திலயே இருந்திட்டார். பெடியள் செக் பண்ணி அனுப்பிட்டாங்கள். வாகனம் ஆமீன்ர பொயின்ருக்குள்ள போயிட்டு. அவன் இறங்கி வேகமாத்தான் ஓடச் சொல்லுவான் (2004,2005 களில் முகமாலைப் பொயின்ட்ல நடக்கிற ஆமி செக்கிங்க கற்பனை பண்ணிக் கொள்ளுங்கோ). சனமெல்லாம் பழக்க தோசத்தில இறங்கி வேகமா ஓடிக் கொண்டிருக்கு. எண்டைக்குமில்லாம, எவரெடி பட்டரிய கண்டோஸ்க்குள்ள வச்சிக் கடத்தின மனுசிய பிடிச்ச கடுப்பில நிண்ட ஆமிக்காரர் கிழடுகட்டயளயும் அடிச்சி விரட்டிக் கொண்டிருக்கிறாங்கள். பெரியவருக்கு எல்லாம் புதுசுதானே, ஆறுதலா இறங்கி, மெல்லம பொயின்ற நோக்கி நடந்தவர். இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த ஆமிக்காரன் வந்து விட்டான் அடி. றோட்டில போட்டு, கும்மி எடுத்திட்டான். அடி தாங்க முடியாத பணக்கார ஐயா வந்த பாதையாள பெடியங்களின்ர பொயின்ற் பக்கமா ஓடத் தொடங்கிட்டார். ஆமிக்காரனும் விடுறதா இல்ல. திரத்தித் திரத்தி அடிக்கிறான். இனி வந்தா பெடியளின்ற துப்பாக்கி சூடுவிழும் எண்ட இடம் வரத்தான் துரத்திறத விட்டவன்.

ஐயா அண்டைக்கு ஓடின ஓட்டத்த ஊர் சனம் முழுவதும் பார்த்து, சிரிப்புக்கும், அழுகைக்கும் இடையிலான ஒரு உணர்வில நிண்டவையாம். ஐயா அதுக்குப் பிறகு முள்ளிவாய்க்கால் சண்ட முடியும் வரைக்கும் ஆமிக்காரன் பக்கம் தலைவச்சும் படுக்கேல்ல.

இப்பிடியான ஒரு மரண நினைவ கந்தையாண்ணைக்கு குடுத்தது தட்டிவான் (பயணிகளை சுமந்துசெல்லும் வாகனம்) தான் என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நினைவு கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்திருந்தது.

இன்னொன்று, சாவகச்சேரிப்பக்கம் இது அடிக்கடி நடக்கும். பயணிகள் பேருந்துக்காகக் காத்திருப்பர். தட்டிவான்கள் புறப்படும். யாரும் ஏறமாட்டார்கள். உரிய இடங்களுக்கான பேருந்து வரும். ஏறமாட்டார்கள். எல்லாப் பேருந்துகளும் போய் முடிந்ததும், அவர்கள் அங்கேயே காத்திருப்பர். கடைசித் தட்டிவான் இரவு 8 மணிக்குப் புறப்படும். எல்லோரும் பாய்ந்தடித்து அதில் ஏறிக் கொள்வர். ஏன் முதலே ஏறியிருக்கலாமே, பேருந்தில் அல்லது தட்டிவானில் என்று கேட்டால், பகலில தட்டிவான்ல போறது வெட்கமாம்…ம். இப்பிடியும் ஒரு லா..லா.. பயணம்!

இப்படித்தான் வடக்கில் வாழும் நடுத்தர வயதைத் தொட்ட பெரும்பாலானவர்கள் இந்தப் பயணத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கையின் நிழற்படம் மாதிரி நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான் இந்த லா..லா.. பயணங்கள்.

அதென்ன லா.. லா..பயணம்?

சில பயணங்கள் 110 வயசு ஆச்சியையும் குழந்தையாக்கிவிடும். பொக்கை கன்னங்களில் பங்கர் வெட்டும். அந்தப் பயணங்களை நினைக்கவே சந்தோச மிகுதிபொங்கும். துள்ளிக் குதிக்கச் செய்யும். அப்படி குதிக்கச் செய்யும் பயணங்களைத் தருவது தட்டிவான்கள். சிலர் இதனை தட்டிபஸ் என்று நினைவுபடுத்துகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் பலரும் பல சொற்களை உச்சரிப்பர். அதில் பிரபலமானது லா… லா… லல்லல்லா… ஆகவே, அதையே தட்டிவான் பயணத்துக்கும் பொருத்தி லா..லா… பயணமாக மினுக்கித் தந்தார் உடுத்துறையில் இருக்கும் துஸ்யந்தன் என்கிற தட்டிவான் சாரதி..

இனி போவோமா லா..லாவுக்குள்ள?

தட்டிவான், இதன் தாயகம் பிரிட்டன். தரமான பொருள்களைக் கொள்வனவு செய்வதில் வல்லவர்களான எம்மவர்கள் ஜப்பான் பொருள்களைக் காணமுன்பு, பிரிட்டன் பொருட்களைத்தான் கண்டனர். ஜப்பான் யமஹா மாதிரி 1980களுக்கு முதல் பிரிட்டன் தட்டிவான்தான் நம்மவர் இறக்குமதியில் முன்னிலையில் நின்றது. எங்கள் படலைகளுக்குள் மாடு வராமலும், தெருவில் செல்வோர் எட்டிப் பார்த்தால் வளவுக்குள் இருப்போர் தெரியாமல் இருப்பதற்கும் கிடுகினால் மறைப்பானாக உருவாக்கப்பட்டதே தட்டி. வெள்ளைக்காரனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக வாகனங்களின் இருபக்கங்களிலும், கிடுகுக்குப் பதிலாகக் கம்பியினால் அமைத்து, உள்ளே இருப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும், இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. காரணப் பெயர் வைப்பதில் கில்லாடிகளான நம்மவர்கள் அதற்கு உடனே சூட்டிய திருநாமம், ‘தட்டிவான்’.

அதுக்கு மட்டுமில்ல, இதுக்கும் 30 வயசு!

தட்டிவான் அறிமுகமானதுடன் இலங்கையும் இரண்டாகப் பிளவுபட்டது. தமிழர்கள் பொருளாதாரத் தடைகளைக் கண்டனர். எரிபொருள் விலையேற்றத்தால் தேங்காய் எண்ணெயில் வாகனம் செலுத்தும் பொறிமுறையைக்கூட நம்மவர்கள் கண்டுபிடித்தனர். பஞ்சில் விளக்கெறித்தனர். பனங்காய் சவர்காரமாகியது. இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்தெட்டுப் புதிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றுதான், தட்டிவான்களில், குறைந்த செலவில் பயணம் போகலாம் என்பது. யாழ்ப்பாணத்துக்கு உள்ளேயேதான் பரீட்சார்த்த பயணங்கள் நடந்தன. யாழ். நகரப்பகுதியிருந்து சுன்னாகம், அச்சுவேலி, சாவகச்சேரி என்றும், பின்னர் சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் இதர ஊர்களுக்கும் தட்டிவான் பயணம் ஆரம்பமானது.

உள் அமைப்பு

ஆரம்ப கால தட்டிவான்களின் முன் அமைப்பு பிரமாண்டாதாக இருக்கும். பெரிய லைற் ஹெற்கள். ஆந்தையின் கண்கள்போல இருக்கும். வாகனத்தின் முன் பகுதி சதுரமாக இருக்கும். ஹோர்ன், இப்போது மீன் விற்பவர்கள் அடிப்பதுதான். கொஞ்சம் பெரியதாக இருக்கும். மாடுகளையும், சன நெரிசலையும் சைற் எடுக்க, அதை அமத்தினால் போம்பி… போம்பி… என்று சத்தம் வரும்.

தட்டிவானின் பின் பக்கம் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்வர். சிலர் கதவு யன்னல் எல்லாம் வைத்து, திறந்து ஏறக்கூடிய வசதியுடன் அமைத்திருப்பர். அதன் கீழே ஏறுவதற்கு ஒரு இரும்புப் படியிருக்கும். அதில் காலை வைத்து, மேலிருந்து கட்டித் தூக்கப்பட்டிருக்கும் கயிற்றில் பிடித்துக்கொண்டு ஏறலாம். உள்ளே இருபக்கமும் நீளமான வாங்கு வாகனத்தோடு அசையாதபடி இணைக்கப் பட்டிருக்கும். அதில் நெருக்கமாக அமர்ந்து, நடுவில் கீரைப்பிடி போல பயணிகள் அடுக்கிக் கொள்வர். ஊர்கதை, உறவுக் கதையுடன் பயணம் பறக்கும். ஊர்ப் பெரியவர்கள், மாமன், மச்சான், வாகனக்காரரின் குடும்ப அங்கத்தவர்கள் போன்றவர்கள் தட்டிவான் ட்ரைவரின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்வர். பின் படியில் கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு புழுதியோடு பகிடிவிட்டுக் கொண்டு வருவார் நடத்துநர். பயணிகள் அதிகமென்றால், தட்டிவானுக்கு மேலாகவும் காளையர்கள் அமர்ந்து பயணம் செய்வர். தட்டிவானுக்கு மேலிருந்து பயணம் செய்வது காளையடக்கி, காதலியை கரம் பற்றுவதற்கு சமமானது. காதலியுடனோ, காதலிக்க காத்திருக்கும் பெண்ணுடனோ பயணிக்க வாய்ப்புக் கிடைக்கும் காளையர்கள் தட்டிவான் முதுகில் பயணம் செய்து, பாடல் பாடி, தங்கள் வீரத்தை நிலைநாட்டுவதுண்டு. மேலிருந்து குண்டுகள் விழுமென்றோ, மல்யுத்தம், காளையடக்கல் நடக்குமென்றோ நினைக்கக்கூடாது. காட்டுவழியால் தட்டிவான்கள் 20 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும்போது, மரக் கிளைகள் தலையில் அடிக்கும். அதில் அடிவாங்காமல், தப்பிப்பது அந்தக் கால காளையர்களின் வீரங்களில் ஒன்று.

சேவையும், சேவைக் காலமும்

1980ஆம் ஆண்டுகளில் தொடங்கி யாழ்ப்பாண இடப்பெயர்வு ஊடாக, சமாதானம் நெருங்கிய 2000ஆம் ஆண்டு வரைக்கும் தட்டிவான்களின் சேவை மிக முக்கியமாக இருந்தது.

யாழ்ப்பாண இடப்பெயர்வில் சிறியளவு பணியாற்றினாலும், உள்ளூரளவில் அதிக பணியை தட்டிவான்கள் ஆற்றியிருக்கின்றன. பயணிகளை, அலுவலக உத்தியோகத்தர்களை ஏற்றி இறக்குவதை விட, வியாபாரிகளை ஏற்றி இறக்கும் பணியையும் செய்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் நடத்திய சண்டைகளுக்கும், காயப்பட்ட, மரணித்த போராளிகளை களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் தட்டிவான்களைப் பயன்படுத்தினர். புலிகளிடம் தட்டிவான்கள் இருக்கவில்லை. “டீசலுக்கு ஓட்டம்” என்ற பிரிவுக்குள் இது இடம்பெறும். முதல் நாள் பொதுமக்களை ஏற்றினால், மறுநாள் முழுதும் புலிகளுக்கு தட்டிவானை ஓடவேண்டும். அதற்குப் பணமில்லை. பயண செலவுக்கான டீசலை வழங்குவார்கள்.

மரணித்த போராளிகளை உரிய பெற்றோர்களின் வீட்டிலிருந்து துயிலுமில்லங்கள் நோக்கி எடுத்துச் செல்லும் பணியையும் தட்டிவான்கள் ஆற்றின. மனதை உருக்கும் ஒரு துயரக் கீதத்தை பிறப்பிக்கும் ஸ்பீக்கரை தட்டிவானின் மேலாகக் கட்டி, அதனைச்சுற்றியும் சிப்பு மஞ்சள் கொடிகள், வாழை மரங்கள் கட்டி, நடுவில், தட்டிவானின் நடுவில் குறித்த விடுதலைப் புலிப் போராளியின் உடலம் வைக்கப்பட்டிருக்கும். அதன் கால் மாட்டில் இரு போராளிகள் துப்பாக்கிகளுடன் நிற்பர். தலை மாட்டில் தாயும் ஏனைய உறவினர்களும் அமர்ந்து, துயிலுமில்லம் வரைக்கும் அழுதபடி வருவர். அந்தத் தட்டிவானைக் கண்டதும் மக்கள் வீதியால் பயணிப்பவர்களும், ஊர்களுக்குள் வேலை செய்கின்றவர்களும் தட்டிவான்களைப் பார்த்தபடி அமைதியாக நிற்பர். டயர்கள் தட்டுப்பாடான அந்தக் காலகட்டத்தில் வைக்கோல் அடைந்தும், மண் அடைந்தும், காற்றில்லாமலும் போரில் மரணித்தவர்களின் உடல்களைக் காவின தட்டிவான்கள்.

இப்போது உடுத்துறையில் 10 தட்டிவான்கள் இயங்கும் நிலையில் இருக்கின்றன. அவை கிளிநொச்சிக்கு மீன் கொண்டு செல்பவர்களை ஏற்றி இறக்கும் பணியைச் செய்கின்றன.

இப்படியே பொருளாதாரத் தடைகள், பாதைத் தடைகள், இடப்பெயர்வுகள் என அலைந்துழன்ற தமிழர்களைக் காவியதில் தட்டிவான்களின் பங்கு, மாட்டு வண்டில்களுக்கும், சயிக்கிள்களுக்கும் முந்திய இடத்தில் இருந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிலிருந்து வந்த மினி பஸ்கள் அந்த இடத்தைப் பிடித்துத் தட்டிவான்களை மறக்கச் செய்துவிட்டன.

http://maatram.org/?p=1844

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.