Jump to content

கள்வனின் காதலி ( ; காமரசம் ;)


Recommended Posts

யார் வீட்டுப் பிள்ளை இவள்?

அடி பெருத்து...
இடை சிறுத்து...
வளர்ந்து நிற்பவளின்....
அழகு மேனியில் தெரிகிறது,
பருவ வளர்ச்சியின் படிமங்கள்!

அவளின் பருவக் குலையைப்
பார்க்கப் பார்க்க...
தாகம் எடுக்கிறது தானாக...!
தேகச்சூடு அடங்கும்வரை
பருகவேண்டும்

அவளின் இள நீரை!
வீசுகின்ற காற்றிலே அழகாய்
மெல்ல மெல்ல அசைகிறது
அவள் பச்சைக் கூந்தல்..!
இளங்குருத்தின் வாசம் வந்து
வெட்கத்தோடு அழைக்கிறது
ஏறி வா என்று...!

அவள் இடை அணைத்து...
அவளுடல் மீதேறி...
யாரோ கட்டியதை
திருட்டுத்தனமாய்...
மெல்ல அவிழ்த்திறக்கி
சத்தமின்றி  மொத்தத்தையும்
ரசித்து...குடித்து...வெறித்து....
திகட்டும் போதையில் திளைத்து,
பின் களைத்துப் போக.....
அவள் தோப்பில் அவளோடு,
கொஞ்ச நேரம் தூங்கினாலும்,
அதுவல்லோ   சுகம்...!!!

 

~~~~~       ~~~~~      ~~~~~      ~~~~~

 

குறிப்பு :

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர்களோடு திருட்டுத்தனமாக தென்னந்தோப்புகளில் இளநீரையும், யாரோ கட்டிவிட்ட முட்டியிறக்கி  தென்னங் கள்ளினையும்

குடித்து மகிழ்ந்த பழைய ஞாபகங்களோடு,    கொஞ்சம் காமரசம் கலந்து :wub: ..... கள்வனின் காதலியாக!!! :wub::lol:

 

coconuttreeone.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கத் தொடங்க இதென்ன எங்கள் கவிதையா இப்படி என்று ஒரு கேள்வி. முடிய எல்லாம் விளங்க்கீற்றுது அருமை உங்கள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விசுகின்ற காற்றிலே அழகாய்

 

 

ஒரு சின்ன எழுத்துப்பிழை. மற்றும்படி.. இளநீரோடு.. காமரசம் வழிந்தோடுகிறது. :):lol:

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை கவிதை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்

எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்

ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்

வேசையென லாமே விரைந்து

 

 

 

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்

சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்

ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்

கூறும் கணிகையென்றே கொள்.

 

-காளமேகப் புலவர்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கற்பனை கவிதை...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூ

இவ்வளவு தானா???

நானும்  முதல்வரிகளை  வாசித்து...

சூடேறி....

சீ............

 

ஏமாற்றிவிட்டாய் காண்........ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அம்ம்மாடியோவ்.... தென்னையவே இப்புடி வர்ணிக்கிறியள்.., பெண் கிடைச்சா...! :D

கவிதை சூப்பர்... :)

Link to comment
Share on other sites

வாசிக்கத் தொடங்க இதென்ன எங்கள் கவிதையா இப்படி என்று ஒரு கேள்வி. முடிய எல்லாம் விளங்க்கீற்றுது அருமை உங்கள் கவிதை.

பெண்புத்தி பின் புத்தி என்பார்கள்.... :unsure:  ஆனால், எங்கள்  சுமே அக்காவா கொக்கா!? :)  அதுதானே பார்த்தன்.... கடைசியில கற்பூரம் மாதிரி பத்திக்கிச்சே! :lol:

 

நன்றி அக்கா! :)

Link to comment
Share on other sites

ஒரு சின்ன எழுத்துப்பிழை. மற்றும்படி.. இளநீரோடு.. காமரசம் வழிந்தோடுகிறது. :):lol:

 

மிக்க நன்றி நெடுக்ஸ்...!  எழுத்துப்பிழையை திருத்தியமைத்துள்ளேன்! :)

கொஞ்சம் இளநீர் + கொஞ்சம் தென்னங் கள் + கொஞ்சம் காமரசம்...... அவ்வளவுதான். :wub::lol:

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை கவிதை.. :D

 

இப்படியான கவிதைகள் இசைக்கு பிடிக்கும் என்பதை அறிவேன்.  :rolleyes:  (அதாவது.... இறுதியில் அட தென்னைமரத்தையா சொன்னான்...எனும் போது வரும் சிரிப்பைச் சொன்னேன். சத்தியமா 'காமம்' சம்மந்தப்பட எதுவுமில்லை.... நம்புங்கப்பா!!! ) :lol:

 

மிக்க நன்றி இசை :)

Link to comment
Share on other sites

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்

எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்

ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்

வேசையென லாமே விரைந்து

 

 

 

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்

சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்

ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்

கூறும் கணிகையென்றே கொள்.

 

-காளமேகப் புலவர்-

 

அந்தக் காலத்து புலவர், கவிஞர் எல்லாரும் ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் பாடிவைத்துள்ளார்கள். :lol: ( நம்மளுக்கு எதையாவது விட்டுவச்சாங்களா... பாவிப்பயலுக! :huh::lol: )

 

தேடியெடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தீயா!

 

Link to comment
Share on other sites

நல்லதொரு கற்பனை கவிதை...! :D

 

 

மிக்க நன்றி சுவியண்ணை :)

 

Link to comment
Share on other sites

பூ

இவ்வளவு தானா???

நானும்  முதல்வரிகளை  வாசித்து...

சூடேறி....

சீ............

 

ஏமாற்றிவிட்டாய் காண்........ :icon_mrgreen:

 

 

பூ

இவ்வளவு தானா??? <_< 

 

சூடேறினா.....  'ரெண்டு இளநீர்' குடிங்க விசுகண்ணை! :wub::rolleyes:

கூலாயிடுவீங்க....! :rolleyes::D  வெறி சிம்பிள்.... இதுக்குபோய் ! :lol:

 

 

 

 

மிக்க நன்றி விசுகண்ணை! :)

Link to comment
Share on other sites

அம்ம்மாடியோவ்.... தென்னையவே இப்புடி வர்ணிக்கிறியள்.., பெண் கிடைச்சா...! :D

கவிதை சூப்பர்... :)

 

பெண் கிடைச்சா.................. :wub:

இப்பிடி வர்ணிச்சு எழுதிக்கொண்டிருக்க நேரம் கிடைக்காது. ^_^

எவ்ளோ முக்கியமான வேலை இருக்க...  :wub:  லூசுத்தனமா வர்ணிச்சு எழுதுக்கிட்டிருக்க முடியுமா...?! :lol:

"ஐ ஆம் ஸோ பிஸி"  ஆயிடுவனாக்கும்...  ஆ ஆ!! :lol: :lol:

Link to comment
Share on other sites

டயானா !!

 

பண்டைய கிரேக்க கற்பனைகளும் இப்படித்தான் இருந்ததோ ? 

 

 

artemis_ephesus_mus_tripoli1.JPG

 

கிரேக்கர்கள் மிகுந்த கலாரசனை உடையவர்கள். அதுமட்டுமல்ல.... 'அந்த விடயத்தில்'  :wub:  ரொம்ப ஆசைப்படுபவர்கள் என கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இந்த சிலையின் படத்தைப் பார்க்கும்போது புரிகிறது..... :icon_idea:

 

அவர்கள் 'அந்த விடயத்தில்' பேராசைக்காரர்கள் என்று.... :rolleyes::lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கவிதை.ஆனலும் தென்னைக்கும் காமதுக்கும் னெருங்கிய தொடர்பு உன்டு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு கம் என்றும்

கருத்து கும் என்றும் இருக்க வேண்டும்

அது தான் இறப்பிலும் சிறப்பு ...... :)

 

ஏமாற்றி விட்டாய் அண்ணா

கள்வனின் காதலி என்றதும்

ஓடி ஓடி வந்தேன்,

ம்ம்.. ஓரளவு சுகம் கண்டேன் ! ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.