Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடுமி  ......................எனது ஊகம் தவறு

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
22 minutes ago, நிலாமதி said:

குடுமி  ......................எனது ஊகம் தவறு

தவறுதான் நிலாமதி அக்கா

முயற்ச்சி செய்யுங்கள் உங்களால் கண்டுபிடிக்க முடியும்

Link to comment
Share on other sites

2 hours ago, வாதவூரான் said:

சுவடு

முயற்சிக்கு பாராட்டுக்கள். விடை தவறு

ஒரு சின்ன குளு: விடைக்கு கிட்ட வந்துவிட்டீர்கள் :)

Link to comment
Share on other sites

3 minutes ago, ஜெகதா துரை said:

குவடு

வடு =  காயம் வந்தால் வரும்.
 குடு = சடுகுடு

சரியான பதில்!

வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளையாட்டுக்கு எல்லாம் வாறதில்லை!😆

ஆனால் கனபேர் கஷ்டப்படுகிறதைப் பார்க்கத் தாங்கேலாமல் இருந்தது😬

மலை என்றால் பர்வதம் என்று சொல்லலாம். ஆனால் அது மலையுச்சி இல்லை!

சிகரம் என்றால் அதில் மூன்றெழுத்து இல்லை.

உச்சி என்றால் அது ஏற்கனவே கேள்வியில் இருக்கு

முகடு என்பது சரி! ஆனால் முதல் எழுத்தை விட்டால் “கடு” - இது வயதுக்கு வருவதன் அறிகுறி. காயம் வந்தால் வராது!!!😃 “கடுக்கண்ட ஆட்டின் புடுக்கண வால்” என்ற உவமைத் தொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்😜😂🤣

காயம் வந்தால் நோ வரும்!  வலி வரும்!!. இரத்தம் வரும்! 

காயம் மாறினால் தழும்பு வரும். ஆனால் இது இரண்டெழுத்து இல்லை.

தழும்பை மறு என்றும் சொல்லலாம். இரண்டு  எழுத்தானாலும் மறு என்று முடியும் மூன்றெழுத்துச் சொல்லில் மலையுச்சி வராது.

தழும்பை வடு என்றும் சொல்லலாம். வடுமாங்காய் என்றால் பிஞ்சு மாங்காய். ஆனால் அது காயம் ஆறி வருவதில்லை!

ஆகவே வடு என்று முடியும் மூன்று எழுத்துச் சொல்தான் விடை! இதை வாதவூரனுக்கு தமிழினி சொன்ன க்ளூவிலிருந்தும் கண்டுகொள்ளலாம்.😃

247 எழுத்துத்தானே தமிழில் உள்ளது. அதில் மெய்யெழுத்துக்களைத் தவிர்க்கலாம். இலக்கண விதிப்படி மேலும் பல எழுத்துக்கள் முதல் எழுத்தாக வராது. ஞ, ங, ட வரிசையில் உயிர்மெய் எழுத்துக்களையும் தவிர்க்கலாம். இப்படியே வடிகட்டிக்கொண்டுபோனால் வந்து சேருவது நூறுக்குள் வரும்.

 

ஆகவே விடையை கண்டுபிடிப்பது கடினம் இல்லை...

இப்படியெல்லாம் நேரத்தை செலவழிக்காமல் இரண்டு நிமிடங்களில் நான் கண்டுபிடித்த  விடை..

 

.

 

.

.

 

.

 

 

 

 

 

 

 

குவடு

முதல் எழுத்தை எடுத்தால் காயம் வந்தால் வரும் வடு!

இடையெழுத்தை விட்டால் சடுகுடு விளையாட்டில் பாதி!

 

 

 

8 minutes ago, ஜெகதா துரை said:

குவடு

வடு =  காயம் வந்தால் வரும்.
 குடு = சடுகுடு

நான் விலாவாரியாக எழுத வெளிக்கிட்டுப் பிந்திவிட்டேன்😂🤣

Link to comment
Share on other sites

பணத்துக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

முதலில்லாமல் போனால் பல மரங்களாகும்
இடையில்லாமல் போனால் ஒரு பொழுதாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழினி said:

பணத்துக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

முதலில்லாமல் போனால் பல மரங்களாகும்
இடையில்லாமல் போனால் ஒரு பொழுதாகும்

இதுக்கு ஒருத்தரையும் முந்த விடக்கூடாது

காசோலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழினி said:

திரிபதாதியை யாரும் விளம்பலாம்.

கிருபன் அண்ணா நீங்கள் ஒரு கேள்வியை கேட்கலாமே

போட்டி என்றால் நான் சூரப்புலி! 🐯 

கேள்வி கேட்கலாம். ஆனால் விடையை வேகமாகச் சொன்னால் மிச்சக் கேள்விக்கு எங்கு போவது என்று யோசிக்கின்றேன்!

Link to comment
Share on other sites

8 minutes ago, கிருபன் said:

போட்டி என்றால் நான் சூரப்புலி! 🐯 

கேள்வி கேட்கலாம். ஆனால் விடையை வேகமாகச் சொன்னால் மிச்சக் கேள்விக்கு எங்கு போவது என்று யோசிக்கின்றேன்!

சூரப்புலிக்கு கேள்வி  தயார் செய்வது கஸ்டமா என்ன?

ஒன்றை எடுத்து விடுங்கள் அடுத்தடுத்து தானாய் வரும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு திரிபதாதியைக் கேட்டால் போச்சு!

 

ஒரு திடகாத்திரமான மிருகம்

முதலில்லாவிட்டால் பளீரென்ற பிரகாசமானவன்

இடையில்லாவிட்டால் பெருவெடிப்பில் தோன்றி பரந்து விரிந்த காலவீதியில் உள்ளவற்றில் உன்னதமானது

Link to comment
Share on other sites

27 minutes ago, கிருபன் said:

சரி ஒரு திரிபதாதியைக் கேட்டால் போச்சு!

 

ஒரு திடகாத்திரமான மிருகம்

முதலில்லாவிட்டால் பளீரென்ற பிரகாசமானவன்

இடையில்லாவிட்டால் பெருவெடிப்பில் தோன்றி பரந்து விரிந்த காலவீதியில் உள்ளவற்றில் உன்னதமானது

புரவி

ரவி

புவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழினி said:

புரவி

ரவி

புவி

சுத்தி வளைச்சுப் போட்டாலும் மூன்று எழுத்தென்பதால் இலகுவாக இருக்கு!

இன்னும் சுத்தத்தான் இருக்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தாமரை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மூன்று எழுத்து சொல்

முதல் எழுத்து நீங்கினால்  ...மறைப்பு என் பொருள் படும்  

  நடு  எழுத்து  நீங்கினால்  எல்லை என்று பொருள் படும்

 

Link to comment
Share on other sites

20 minutes ago, நிலாமதி said:

 மூன்று எழுத்து சொல்

முதல் எழுத்து நீங்கினால்  ...மறைப்பு என் பொருள் படும்  

  நடு  எழுத்து  நீங்கினால்  எல்லை என்று பொருள் படும்

 

கதிரை

திரை

கரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னோர் திரிபதாதி

ஊர்க்கோழிக்குஞ்சுகளின் பெருவிருப்பத்துரியது.. குசேலர் கண்ணபிரானைக் காணச்சென்றபோது அவலை எடுத்துச் செல்ல உபயோகித்தது இன்னொரு பொருளாகவும் வரும்!

முதல் நீங்கினால் பழந்தமிழரில் வலிமையானவர் ஆநிரையைக் கவரச் செல்லும்போது அலங்கரிப்பது

இடை நீங்கினால் பிரமிக்கவைக்கும் ரதிதேவி வடிவானது😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.