Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். 
 
கீழே உள்ள பாடலில் திரிபதாதி சொல் ஒளிந்துள்ளது. 
 
 
முன்னொரு ஊரின்  பேராம் 
 
முதலெழுத்து இல்லாவிட்டால் 
நன்னகர் மன்னர் பேராம் 
 
நடுவெழுத்து இல்லாவிட்டால் 
கன்னமா மிருகத்தின் பெயர் 
 
கடையெழுத்து இல்லாவிட்டால் 
உன்னிய தேனின் பேராம் 
 
ஊரின் பேர் விளம்புவீரே !!
 
விடை : மதுரை 
1. துரை 
2. மரை
3, மது 
 
இதே மாதிரி  வேறு எதாவது  திரிபதாதி பாடல் தெரிந்தால் பகிரவும். 
Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை இளம்பிறையன். நீங்கள் இயற்றியதா ???

 

Link to comment
Share on other sites

 

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும். 
 

 
விடை : மதுரை 
1. துரை 
2. மரை
3, மது 
 
 

 

 

ஆ.இளம்பிறையன்,

 

திரிபதாதி என்ற சொல்லை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

 

ஒரு கேள்வி:  நீங்கள் கூறிய 'முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் ' என்ற விதிகளுக்கும் அப்பால் மூன்றாவது விதியும் உள்ள விதத்டில் தானே 'மதுரை' அமைந்து இருக்கு. அதாவது முதலெழுத்தும் இரண்டாவது எழுத்தும் (அல்லது முதலெழுத்தும் நடு எழுத்தும்) சேர்ந்து தானே 'மது' என்ற வார்த்தையைத் தருகின்றது. மூன்று விதிகளும் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமா?

Link to comment
Share on other sites

மிக அருமை இளம்பிறையன். நீங்கள் இயற்றியதா ???

 

இதை நான் எழுதவில்லை :)  இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர் என்று இணையத்தில் கண்டேன்

ஆ.இளம்பிறையன்,

 

திரிபதாதி என்ற சொல்லை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

 

ஒரு கேள்வி:  நீங்கள் கூறிய 'முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் ' என்ற விதிகளுக்கும் அப்பால் மூன்றாவது விதியும் உள்ள விதத்டில் தானே 'மதுரை' அமைந்து இருக்கு. அதாவது முதலெழுத்தும் இரண்டாவது எழுத்தும் (அல்லது முதலெழுத்தும் நடு எழுத்தும்) சேர்ந்து தானே 'மது' என்ற வார்த்தையைத் தருகின்றது. மூன்று விதிகளும் கடைப்பிடிக்கப்படல் வேண்டுமா?

 

நிழலி, திரிபதாதியின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

"மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ

றன்ற பொருள்பிற  வாந்திரி பதாதி "

திரிபதாதி சொல் மூன்று விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

1) மூன்றெழுத் தொருமொழி (மதுரை) - தொடர் மொழியாக , சொற்றொடராக அல்லாமல் மூன்றெழுத் தொருமொழியாக இருக்க வேண்டும்.

2) முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் சேர்க்க ஒரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (மரை)

3) இடை எழுத்தையும் கடை எழுத்தையும் சேர்க்க பின்னொரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (துரை)

இதற்கு மேல் சேரும் சொற்கள் விதிகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை. மற்றவற்றை இலவச இணைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான்

Link to comment
Share on other sites

மற்றுமொரு திரிபதாதி

 

மூன்றெழுத்து மெங்கோ
முதலில் ஒரு வள்ளல்
என்றும் உலகம் காப்பதும் இடை
....

காமாரி

மூன்றெழுத் தொருமொழி --> காமாரி (மன்மதனுக்கு பகைவனாகிய சிவன்)
முதலெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்க வருவது --> காரி (ஒரு வள்ளல்)
இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்க கிடைப்பது -> மாரி (பூமாரி மழை பெய்து என்றும் உலகம் காப்பது)
 

Link to comment
Share on other sites

இதை நான் எழுதவில்லை :)  இப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர் என்று இணையத்தில் கண்டேன்

 

நிழலி, திரிபதாதியின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

"மூன்றெழுத் தொருமொழி முதலீ றிடையீ

றன்ற பொருள்பிற  வாந்திரி பதாதி "

திரிபதாதி சொல் மூன்று விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

1) மூன்றெழுத் தொருமொழி (மதுரை) - தொடர் மொழியாக , சொற்றொடராக அல்லாமல் மூன்றெழுத் தொருமொழியாக இருக்க வேண்டும்.

2) முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் சேர்க்க ஒரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (மரை)

3) இடை எழுத்தையும் கடை எழுத்தையும் சேர்க்க பின்னொரு மொழியாக(சொல்லாக) வேண்டும் (துரை)

இதற்கு மேல் சேரும் சொற்கள் விதிகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை. மற்றவற்றை இலவச இணைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது தான்

 

விளக்கத்துக்கு நன்றி. மொத்த எழுத்து இரட்டை இலக்கத்தில் வந்தால் எந்த எழுத்தினை நடு எழுத்தாக் கொள்வது?

 

உதாரணம் 'பண்பாடு'

 

1. பாடு

2. படு

3. பண் (இலவச இணைப்பு)

Link to comment
Share on other sites

விளக்கத்துக்கு நன்றி. மொத்த எழுத்து இரட்டை இலக்கத்தில் வந்தால் எந்த எழுத்தினை நடு எழுத்தாக் கொள்வது?

 

உதாரணம் 'பண்பாடு'

 

1. பாடு

2. படு

3. பண் (இலவச இணைப்பு)

 

பண்பாடு என்ற சொல் முதல் விதிக்குள் அடங்காமல் நான்கு எழுத்துக்களை கொண்டுள்ளதால் இது திரிபதாதி என்ற சொல்லுக்குள் அடங்காது. மேலும் பண்பாடு (பண்(இசை) + பாடு) மூன்றெழுத் தொருமொழிக்குள் அடங்காமல் தொடர்மொழிக்குள் தொங்கி நிற்கிறது.

 

Link to comment
Share on other sites

எளிதான இந்த திரிபதாதி சொல்லை யாரேனும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முத்தமிழின் ஓர் அங்கம் இந்த மூன்றெழுத்து...
இடை நீக்கின்
     மனையாள் வாழும் இடம் வரும்
முதல் நீக்கின்
      கோட்டான்கள்  குதுகலிக்கும் காலம் வரும்
 

Link to comment
Share on other sites

எளிதான இந்த திரிபதாதி சொல்லை யாரேனும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முத்தமிழின் ஓர் அங்கம் இந்த மூன்றெழுத்து...

இடை நீக்கின்

     மனையாள் வாழும் இடம் வரும்

முதல் நீக்கின்

      கோட்டான்கள்  குதுகலிக்கும் காலம் வரும்

 

 

..ஆஹா... குழப்புதே..

 

முத்தமிழில் ஒரு அங்கம் என்றால் 'இயல்' வரும். இல் என்றால் 'இல்லம்', வீடு என்று பொருள் வரும். ஆனால் 'யல்' என்றால் ஒரு அர்த்தம் வராதே...

 

Link to comment
Share on other sites

மிகச் சரியான பதில் தான்.

 

யல் = அல்  --> என்றால் கருப்பு, இரவு

Link to comment
Share on other sites

மிகச் சரியான பதில் தான்.

 

யல் = அல்  --> என்றால் கருப்பு, இரவு

 

நன்றி ஆதித்ய இளம்பிறையன்.

 

என் மகளது பெயர் 'இயலினி'. அவரை நாங்கள் வீட்டில் கூப்பிடுவது 'இயல்' என்று தான். 'யல்' என்றாலும் ஒரு அர்த்தம் வரும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டோம்.

Link to comment
Share on other sites

சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்
வதரிவரிதரியாமாம்.

 

இதனுள் வதரியென்பது திருப்பதி

 

மேலும் , செய்யுள்களில் உள்ள கடகபெந்தம் , அக்கரச்சுதகத்தி லோர்பேதம் ,சதுரங்கபெந்தம் , மாத்திரைப்பெருக்கம் , ஒற்றுப்பெயர்த்தல் , மாத்திரைச்சுருக்கம், போன்றவற்ரையும் பிறையானார் விபரித்தால் நன்று .

 

Link to comment
Share on other sites

நன்றி ஆதித்ய இளம்பிறையன்.

 

என் மகளது பெயர் 'இயலினி'. அவரை நாங்கள் வீட்டில் கூப்பிடுவது 'இயல்' என்று தான். 'யல்' என்றாலும் ஒரு அர்த்தம் வரும் என்பதை இன்று தான் அறிந்து கொண்டோம்.

 

 

நன்று நிழலி...

இன்றைக்கு கடைசியாக மற்றுமொரு  திரிபதாதி

1) காதலை இப்படியாக வெளிப்படுத்தினால் கன்னியர் உள்ளம் கவரலாம்..

2) உரைநடை இலக்கியமாக கொள்வது

 அலுப்பு தட்டாமல் இருக்க பாட்டி சொல்வது  

3)தன்னைத் தானே பெருக்கிக் கொள்ள

தாவரத்தில் தனக்குள் இருக்கும் ஓர் அங்கம்

Link to comment
Share on other sites

நன்று நிழலி...

இன்றைக்கு கடைசியாக மற்றுமொரு  திரிபதாதி

1) காதலை இப்படியாக வெளிப்படுத்தினால் கன்னியர் உள்ளம் கவரலாம்..

2) உரைநடை இலக்கியமாக கொள்வது

 அலுப்பு தட்டாமல் இருக்க பாட்டி சொல்வது  

3)தன்னைத் தானே பெருக்கிக் கொள்ள

தாவரத்தில் தனக்குள் இருக்கும் ஓர் அங்கம்

 

சொல்: கவிதை

 

1. கதை

2. விதை

3. கவி

Link to comment
Share on other sites

சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய்

வதரிவரிதரியாமாம்.

 

இதனுள் வதரியென்பது திருப்பதி

 

மேலும் , செய்யுள்களில் உள்ள கடகபெந்தம் , அக்கரச்சுதகத்தி லோர்பேதம் ,சதுரங்கபெந்தம் , மாத்திரைப்பெருக்கம் , ஒற்றுப்பெயர்த்தல் , மாத்திரைச்சுருக்கம், போன்றவற்ரையும் பிறையானார் விபரித்தால் நன்று .

 

கோ நீங்கள் கூறுவது எல்லாம் சித்த்ரக்கவிகளின் வகைகளுக்குள் அடங்கும். நேரம் கிடைப்பின் இதுபற்றி பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட ஒன்றை முயன்று பார்த்தேன் இளம்பிறையன். விதிகளுக்குள் அடங்குகிறதா தெரியவில்லை. சிரிக்காமல் பாருங்கள்.

 

கார் என்று பேர் கொண்டது

காதினில் அது கேட்டது

அவ்விடம் விட்டகன்றது

 

கானகம்

 

 

Link to comment
Share on other sites

சரியாகச் சொன்ன தமிழினிக்கும், நிழலிக்கும் எனது வாழ்த்துக்கள். முதலில் சொன்ன தமிழினிக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

கவிதை கதை விதை

 

என்னை விட ஒரு நிமிடத்தால் முந்தி விட்டீர்கள் தமிழினி! :)

 

கானகம்

 

செல்லாது செல்லாது... 4 எழுத்து (ஏற்கனவே நானும் பண்பாடு என்ற 4 எழுத்துச் சொல்லியிருக்கின்றேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதில் போட்டி வேறு நடக்கிறதா??? அதைக் கூட வாசிக்கப் பொறுமை இல்லை எனக்கு :D

Link to comment
Share on other sites

நான் கூட ஒன்றை முயன்று பார்த்தேன் இளம்பிறையன். விதிகளுக்குள் அடங்குகிறதா தெரியவில்லை. சிரிக்காமல் பாருங்கள்.

 

கார் என்று பேர் கொண்டது

காதினில் அது கேட்டது

அவ்விடம் விட்டகன்றது

 

கானகம்

 

சுமேரியர் திரிபதாதி சொல் மூன்றெழுத்துக்குள்  இருக்க வேண்டும் என்பது முதல் விதி( "மூன்றெழுத் தொருமொழி "). கானகம் நான்கு எழுத்துக்குள் வருவதால் திரிபதாதி சொல்லுக்குள் அடங்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம்பிறையன் இதை நீங்கள் ஒரு போட்டியாகத் தொடங்குங்கோ நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இளம்பிறையன் இதை நீங்கள் ஒரு போட்டியாகத் தொடங்குங்கோ நன்றாக இருக்கும்.

 

நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.... போட்டியாக தொடங்கினால் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

இன்று புதிதாக அறிந்துகொண்டோம்.. :D நன்றி இளம்பிறையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னனுக்கோர் பேராம்

வானத்து மின்விளக்காம்

உணவாகி நின்றதுவாம்

 

ஓர் பெண்ணின் பெயர் நீர் கூறும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.