Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

மன்னனுக்கோர் பேராம்

வானத்து மின்விளக்காம்

உணவாகி நின்றதுவாம்

 

ஓர் பெண்ணின் பெயர் நீர் கூறும்

 

கோமதி

 

கோ, மதி

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

உணவாகி நின்றதுவாம் - அதற்கு என்ன வரும்? கோதி :rolleyes:

 

கொஞ்சம் சந்தேகம் தான்...!

Link to comment
Share on other sites

வலிகாமத்தூர்..

இடைபோக முகம் காடு

முதல் நீக்கிப் பழ

ரசம்தேடு.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நிழலி சரியானவிடை.கோமதி.

 தமிழினி கோதி என்றால் கோதுமையைக் குறிக்கும்.

 

On 22/01/2014 at 9:18 PM, இசைக்கலைஞன் said:

வலிகாமத்தூர்..
இடைபோக முகம் காடு
முதல் நீக்கிப் பழ
ரசம்தேடு.. :rolleyes:

 

எத்தனை வித்தகர்கள் யாழில் இருக்கினம் என்று இப்பதான் தெரியுது.

ஆனால் விடைதான் தெரியுதில்லை.
 

Link to comment
Share on other sites

வலிகாமத்தூர்..

இடைபோக முகம் காடு

முதல் நீக்கிப் பழ

ரசம்தேடு.. :rolleyes:

 

எனக்குத் தெரிந்து வலிகாமத்தில் இருக்கும் மூன்று எழுத்து பெயர்களை எல்லாம், முன்னால பின்னால, பக்கவாட்டாக என்று பார் பார் என்று பார்த்தும் ஒன்றும் அகப்படுகுது இல்லை. Geography இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும் போலக் கிடக்கு

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நிழலி சரியானவிடை.கோமதி.

 தமிழினி கோதி என்றால் கொதுமையைக் குறிக்கும்.

 

ஆ... நானும் கோதி கோதுமையா என்று தலையை கோதிக் கோதி தேடிப் பார்த்ததில் ஒன்றுமே தெரியவில்லை.  :D

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்து வலிகாமத்தில் இருக்கும் மூன்று எழுத்து பெயர்களை எல்லாம், முன்னால பின்னால, பக்கவாட்டாக என்று பார் பார் என்று பார்த்தும் ஒன்றும் அகப்படுகுது இல்லை. Geography இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும் போலக் கிடக்கு

எனக்கும் தெரியாது.. :D கூகிளில் வலிகாமப் பிரிவுக்குள் வரும் என்றிருக்கு.. அதை விட்டிட்டு யாழ் மாவட்டம் என்று பாருங்கோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரியாது.. :D கூகிளில் வலிகாமப் பிரிவுக்குள் வரும் என்றிருக்கு.. அதை விட்டிட்டு யாழ் மாவட்டம் என்று பாருங்கோ..

 

அடபாவியளா. அரை மணித்தியாலத்தை வீணாக்கிப் போட்டியளே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முன்னொரு ஊரின்  பேராம் 
 
முதலெழுத்து இல்லாவிட்டால் 
யாழ் களப் பதிவின் பேராம், 
 
நடுவெழுத்து இல்லாவிட்டால் 
நாடு அடிக்கும் கொள்ளை பேராம்,
 
கடையெழுத்து இல்லாவிட்டால் 
வசிக்குதல் என்றும் பேராம், 
 
ஊரின் பேர் விளம்புவீரே !! :D 
Link to comment
Share on other sites

 

முன்னொரு ஊரின்  பேராம் 
 
முதலெழுத்து இல்லாவிட்டால் 
யாழ் களப் பதிவின் பேராம், 
 
நடுவெழுத்து இல்லாவிட்டால் 
நாடு அடிக்கும் கொள்ளை பேராம்,
 
கடையெழுத்து இல்லாவிட்டால் 
வசிக்குதல் என்றும் பேராம், 
 
ஊரின் பேர் விளம்புவீரே !! :D 

 

 

வதிரி!!

 

விடை சரி என்றால் ஒரு 10 பச்சை வந்தால் சரி!!  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதிரி!!

 

விடை சரி என்றால் ஒரு 10 பச்சை வந்தால் சரி!!  :o  :D

 

ஐயோ முந்திவிட்டியளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதிரி!!

 

விடை சரி என்றால் ஒரு 10 பச்சை வந்தால் சரி!!  :o  :D

விடை சரி, சார்!

 

பச்சை நாளைக்குத் தான் வரும்! :D

Link to comment
Share on other sites

விடை சரி, சார்!

 

பச்சை நாளைக்குத் தான் வரும்! :D

 

நன்றி.. களத்தில சனத்த காணேலபோல.. கேட்கிற சுலபமான கேள்விகளை இப்பவே கேட்டிடுங்க... பச்சைகளை இன்ஸ்ரால்மெண்டில வாங்கிக்கொள்ளுறன்.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாய் விரிப்பதை இச்சொல் குறிக்கும்

முதலெழுத்து நீங்கினால் முகம் மலரும்

நடுவெழுத்தை நீக்கில் நாலேகால் விலங்கு வரும்

 

Link to comment
Share on other sites

ஐயோ முந்திவிட்டியளே

 

நம்ம இனம் என்ன.. முன் புத்தி இனமாக்கும்!!  :lol:

பாய் விரிப்பதை இச்சொல் குறிக்கும்

முதலெழுத்து நீங்கினால் முகம் மலரும்

நடுவெழுத்தை நீக்கில் நாலேகால் விலங்கு வரும்

 

நாலேகால் விலங்கு? நல்ல விளக்கம்!!  :(

 

முசிரி???  :o

Link to comment
Share on other sites

பாய் விரிப்பதை இச்சொல் குறிக்கும்

முதலெழுத்து நீங்கினால் முகம் மலரும்

நடுவெழுத்தை நீக்கில் நாலேகால் விலங்கு வரும்

காமுறு :unsure:

வலிகாமத்தூர்..

இடைபோக முகம் காடு

முதல் நீக்கிப் பழ

ரசம்தேடு.. :rolleyes:

தாவடி.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவியப் பெண்ணின் பேராம்,

 

முதலெழுத்து இல்லாவிட்டால்,

மூடிய வாசல் பேராம்,

 

நடுவெழுத்து இல்லாவிட்டால்,

வட்டத்தின் அளவின் பேராம்,

 

கடையெழுத்து இல்லாவிட்டால்,

பூர்வீகம் சொல்லும் பேராம்,

 

 

அந்தப் பெண்ணின் பெயர் என்ன? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தாவடி.. :wub:

பக்கத்து ஊரை எனக்கு நினைவே வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாய் விரிப்பதை இச்சொல் குறிக்கும்

முதலெழுத்து நீங்கினால் முகம் மலரும்

நடுவெழுத்தை நீக்கில் நாலேகால் விலங்கு வரும்

நாவாய் ! :icon_idea:

 

எங்கை பச்சை?  :D

Link to comment
Share on other sites

காவியப் பெண்ணின் பேராம்,

 

முதலெழுத்து இல்லாவிட்டால்,

மூடிய வாசல் பேராம்,

 

நடுவெழுத்து இல்லாவிட்டால்,

வட்டத்தின் அளவின் பேராம்,

 

கடையெழுத்து இல்லாவிட்டால்,

பூர்வீகம் சொல்லும் பேராம்,

 

 

அந்தப் பெண்ணின் பெயர் என்ன? :icon_idea:

ஆதிரை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிரை :D

சரியான பதிலுக்கு வாழ்த்துக்கள், இசை !

 

பச்சை உங்களுக்கும் கடன்! :o

 

சரி, நான் போட்டு வாறன்!

 

நாளைப் பச்சையெல்லாம் இண்டைக்கே முடிஞ்சு போச்சு! :o

Link to comment
Share on other sites

காவியப் பெண்ணின் பேராம்,

 

முதலெழுத்து இல்லாவிட்டால்,

மூடிய வாசல் பேராம்,

 

நடுவெழுத்து இல்லாவிட்டால்,

வட்டத்தின் அளவின் பேராம்,

 

கடையெழுத்து இல்லாவிட்டால்,

பூர்வீகம் சொல்லும் பேராம்,

 

 

அந்தப் பெண்ணின் பெயர் என்ன? :icon_idea:

 

ஆதிரை!!

 

(இன்னும் 10 பச்சை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரை என்றால் என்ன அளவு எண்டு ஒருக்கா விளக்கம் தாங்கோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.