Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

தாவும் பாயும் புலியன்று

முதல் அகற்றிப் புகுந்தால்

இடை களைந்து வளரும் :D

தவளை  :D

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply

தாவும் பாயும் புலியன்று

முதல் அகற்றிப் புகுந்தால்

இடை களைந்து வளரும் :D

 

தவளை

ஆ..கா...சில நொடிகளால் விட்டுவிட்டனே :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவளை சரியான பதில்

ஒருவருக்குத்தான் பச்சை வழங்க முடியும் என்பதால் தமிழினிக்கு பாராட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றது :D

Link to comment
Share on other sites

தவளை

ஆ..கா...சில நொடிகளால் விட்டுவிட்டனே :(:D

 

6 நிமிடம் உங்களுக்கு சில நொடிகளா அம்மணி? (இப்பதான் மனசுக்குள் திருப்தி)

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில் பொங்கி எழுந்தவன் 
முதல் எடுத்தால் அழகியவள் 
 
இடை எடுத்தால் முழுமை பெறாதவன் 
 
அது .எது  :D
Link to comment
Share on other sites

நிழலி அண்ணா நான் பதிலை 3 நிமிடங்களில் போட்டிருந்தேன் (நொடி என்பது பிழை ஒத்துக்கிறன் :) ); பின்பு எழுதின கருத்தை போட்டதும் முதல் பதிந்த பதிலின் நேரமும் மாறி 6 நிமிடமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6 நிமிடம் உங்களுக்கு சில நொடிகளா அம்மணி? (இப்பதான் மனசுக்குள் திருப்தி)

 

 

முதல் பதிலை  எழுதிவிட்டு

மீண்டும் சிலவற்றை  சேர்க்கும் போது

கடைசியாக பதிந்த நேரமே பதிவாகிறது

முன்னைய  நேரம் கரைந்து விடுகிறது

 

நானும் இசையும் இவ்வாறு ஒரே நெரத்தில் பதிலளித்தோம்

பின்னர்

இசை  பின் வாங்கவும் என  எழுதினேன்

நேரமும் மாறிவிட்டது... :(  :(

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில் பொங்கி எழுந்தவன் 
முதல் எடுத்தால் அழகியவள் 
 
இடை எடுத்தால் முழுமை பெறாதவன் 
 
அது .எது  :D

 

பாரதி

Link to comment
Share on other sites

பாரதி

வாழ்த்துக்கள் தமிழினி ..................நாளை பச்சை நிச்சயம்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசித்த பின்பு தான் நான் தமிழில் பூச்சியத்திலும் பூச்சியம் என்று   விளங்கியது :(

Link to comment
Share on other sites

இந்தத் திரியை வாசித்த பின்பு தான் நான் தமிழில் பூச்சியத்திலும் பூச்சியம் என்று   விளங்கியது :(

அக்கா நானும் அப்பிடித்தான் என்னை நினைத்தேன் .ஒரு கேள்வி முயற்சியுங்கள் ...........நீங்களும் புத்தி  சாலி என்பதை உணர்வீர்கள்  :)

Link to comment
Share on other sites

இந்தத் திரியை வாசித்த பின்பு தான் நான் தமிழில் பூச்சியத்திலும் பூச்சியம் என்று   விளங்கியது :(

 

ரதி நான் மட்டும் தமிழில் புலியா என்ன...? பதில் வருகிறது தானே...முயற்ச்சி செய்யுங்கள் ரதி உங்களால் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசித்த பின்பு தான் நான் தமிழில் பூச்சியத்திலும் பூச்சியம் என்று   விளங்கியது :(

 

ரதி

அப்படி  அல்ல

முயலுங்கள்

ஆரம்பத்தில் நானும் அப்படித்தான் நினைத்தேன்

 

ஒரு சிறு உதவி

இரண்டாவது எழுத்து

ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியதாகவும் 

இறுதி  எழுத்து ஒரு சொல்லின் கடைசி  எழுத்தாக வரக்கூடிய எழுத்தாக  இருக்கணும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோக்கியமான அதே நேரம் தமிழையும் சலிக்காமல் மீளமீள புதிப்பித்து இரசிக்கும்படியான திரி. பங்குபற்றி சிறப்பிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

பணத்துக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

 

முதலில்லாமல் போனால் பல மரங்களாகும்
இடையில்லாமல் போனால் ஒரு பொழுதாகும்

 

அது என்ன?????  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

 

முதலில்லாமல் போனால் பல மரங்களாகும்

இடையில்லாமல் போனால் ஒரு பொழுதாகும்

 

அது என்ன?????  :)

காசோலை..

Link to comment
Share on other sites

காசோலையோடு அடிக்கடி வங்கிக்குப் போனால் அந்த ஞாபகம்தானே இருக்கும்??!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசோலையோடு அடிக்கடி வங்கிக்குப் போனால் அந்த ஞாபகம்தானே இருக்கும்??!! :D

 

 

இதைத்தான் நானும் சொல்லவந்தேன்...

ஆனால் பணமும் கொண்டு போவதாக  கடைசித்தகவல்... :lol:  :D

காசோலையோடு அடிக்கடி வங்கிக்குப் போனால் அந்த ஞாபகம்தானே இருக்கும்??!! :D

 

 

இதைத்தான் நானும் சொல்லவந்தேன்...

ஆனால் பணமும் கொண்டு போவதாக  கடைசித்தகவல்... :lol:  :D

Link to comment
Share on other sites

காசோலையோடு அடிக்கடி வங்கிக்குப் போனால் அந்த ஞாபகம்தானே இருக்கும்??!! :D

 

என்ன செய்வது இசை அண்ணா அது தானே என் தொழில் :) :) சரி சும்மா மச மச என்று நேரத்தை போக்காமல் இரண்டு கேள்வியை எடுத்துவிடுறது தானே :):icon_idea:

Link to comment
Share on other sites

இருந்தால் வாழ்தல் பேரானந்தம்..

முதல்போக எதிரி செய்வதிது..

இடைபோக இருப்பிடத்தில் செய்வதிது..

அது என்ன?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசதி.......

Link to comment
Share on other sites

வசதி.......

சரியான விடை.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.