Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில் எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக் காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது.

சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும், நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது. பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில்  இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம் பெருமையும் கொண்டது.

தான் இல்லாவிட்டால் தன் குடும்பம் மாத்திரமல்ல தன்  கணவர் கூட இந்த நிலையை அடைந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அந்த மனிசனுக்குத்தான் அது விளங்குதில்லையே என மனதில் ஒரு ஆற்றாமையும் வந்து சேர கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

என் கணவருக்கு நான் என்ன குறை விட்டேன். என்னைத் தேய்த்து, என் முகம் வெளியே காட்டாது கணவரை இத்தனைதூரம் பேரும் புகழும் அடைய வைத்தும் எந்த வித நன்றியும் இன்றி ஆண் என்னும் மமதையில் என்னவெல்லாம் பேசிவிட்டார்.

சோமருக்கும் கொஞ்ச வயதில்லை. இன்னும் ஆறு மாதங்களில் எண்பத்தைந்தாகிவிடும். வயது போகப்  போக  பொறுமையும் அமைதியும் வந்துவிடுமென இவள் எண்ணியதற்கு மாறாக அவருக்கு சிறுசிறு விடயங்களுக்கெல்லாம் ஏற்படும் கோபங்களும் அதன் காரணமாக இவளை நோக்கி வீசப்படும் வார்த்தைகளும் வரவரத் தாங்கமுடியாது போய்விடுகிறது தேவகிக்கு.

எத்தனை தரன் சொன்னாலும் கேட்காது ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அவளை ஏவுவதும் உடனே செய்யாவிட்டால் வன்சொற்களால் வசைபாடுவதும் அவள் எதோ தனக்கு இட்ட பணிகளைச் செய்யவே வேலைக்கு அமர்த்தப்பட்டவள் போல் அவளை நடாத்துவதும் அவளால் தாங்கவே முடிவதில்லை.

இப்பிடிப் பாக்கப்போனால் வெள்ளைக்காரர் மாதிரி அவையவையே தன் தன் வேலை பார்த்திருந்தால் இந்த வயசுபோன காலத்தில எனக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்காது என எண்ணினாள்.எங்கட கலாச்சாரம் பண்பாடு என்று இப்ப நான் எல்லோ அவதிப்படுறன் என்று தனக்குள்ளேயே நினைத்தவளுக்குச் சிரிப்பு வந்தது.

அவள் சோமரைத் திருமணம் செய்து அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் வாழ்வதனால் இப்படிக்கூட எனக்கு எண்ணத் தோன்றுகிறதே. அப்ப எங்கட இளம் பிள்ளையளைக் குற்றம் சொல்லி என்ன என்றும் மனம் இவளைச் சாடியது.

பிள்ளைகள் தம்முடன் வந்து இருக்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் ஏனோ இவளுக்கு அவர்களைச் சார்ந்து இருப்பதர்ற்கு விருப்பம் இல்லை. இவளுக்கு மட்டுமல்ல சோமருக்கும் அதே கொள்கைதான். பென்சன் காசு வருது. நாங்கள் எங்கட பாட்டில இருக்கிறதுக்கு எதுக்கு மற்றவைக்குக் கரைச்சல் கொடுப்பான் என்று எண்ணியதும் ஒரு காரணம்தான்.

ஆனால் இப்ப கொஞ்சக் காலமாய் என்ன சமைக்கிறாய், ஆக ரண்டு கறிதான் வச்சனியோ, எனக்கு குளிசை போடவேணும் கெதியா சாப்பாட்டைத் தா, மத்தியானம் கட்டாயம் மூண்டு கறியாவது இருக்கவேணும் எண்டெல்லாம் சோமர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போனது. நான் மட்டும் என்ன குமரியே. எனக்கும் ஆரும் சமைச்சுத் தந்தால் சும்மா இருந்து சாப்பிட ஆசைதானே என எண்ணியவளுக்கு மனதெல்லாம் எதுவோ அடைத்தாற்போல் இருந்தது.

நேற்று சோமரின் பென்சன் கடிதம் ஒன்றைக் காணவில்லை என்று, இவள்தான் எங்கோ வைத்துவிட்டாள் என அவர் போட்ட கூச்சலில் இவளுக்கும் கோவம் வந்துவிட்டது. நான் ஒண்டும் உங் களுக்கு வேலைக்காரி இல்லை மரியாதையாக் கதையுங்கோ எண்டு இவளும் என்றுமில்லாதவாறு குரலை உயரத்தில் கத்த சோமருக்கு வந்த கண்மூடித்தனமான கோவத்தில் உன்னைச் சாக்காடிப் போடுவனடி என்று இவள் கழுத்தில் கையை வைத்துவிட்டார்.

ஒரு செக்கன்  இவளுக்கு மூச்சே வராமல் கழுத்தை அங்கும் இங்கும் ஆட்டி அவரிடமிருந்து விடுவித்துக்கொண்டு தன்னை அசுவாசப்படுத்தவே பெரும்பாடாகப் போய்விட்டது. தன்  அறைக்குள் போய் சின்னப்பிள்ளை போல் விக்கிவிக்கி அழுதபின் தான் அவள்மனம் ஆறுதல் கொண்டது. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால் என்ன ஆண்களின் அடக்கும் புத்தியை எண்ணி அவர்பால் ஒருவித வெறுப்பும் வந்தது.

இன்றுவரை அவருடன் பேசவுமில்லை. அவருக்கு எதுவும் செய்யவில்லை. மனதில் ஒரு கோபத்தோடு இனி நான் உவருக்கு ஒண்டும் செயிறேல்ல. தனிய எல்லாம் செய்தால்த்தான் விளங்கும் என்று மனதுள் கறு வியபடி காலையில் எழுந்து தனக்கு மட்டும் தேநீர் போட்டு பாணுக்கு சலாமி வச்சு தனியச் சாப்பிட்டு, நீர் இல்லா விட்டாலும் என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவதாய் அன்று முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு காலம் கழித்தாள் தேவகி.  

மதியம் இரண்டுமணியாகியும் அவள் எழும்பவில்லை. அவளுக்குக் காலமை சாப்பிட்ட சாப்பாடு செமிக்கவும் இல்லை. சோமர் இரண்டு மூண்டு தடவை அவளைக் கடந்து போனார்தான். அவள் அவரை நிமிர்ந்தும் பார்க்கவுமில்லை. ஒரு பத்து நிமிடம் கழிஞ்சிருக்கும். என்னப்பா இண்டைக்கு ஒண்டும் சமைக்கேல்லையே. பசிக்குதப்பா என்று வெட்கம் கெட்டு சோமர் இவள்முன் வந்து நின்று கேட்கவும் இரண்டுநாட்களாக இருந்த கோபம் வெறுப்பு எல்லாம் எங்கோ ஓடிப்போக இன்னும் நீங்கள் சாப்பிடேல்லையே என்று எதுவும் நடக்காததுபோல் எழுந்து சமையலறைக்குச்  செல்கிறாள் தேவகி.

Link to comment
Share on other sites

எனக்கென்னமோ இதற்கு ஆணின் மனது என்று பெயர் வைப்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. காரணம் ஆண் அந்த நேரத்தோடு அதை மறந்து இயல்பானநிலைக்கு மீண்டதை கதை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இதற்கு ஆணின் மனது என்று பெயர் வைப்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. காரணம் ஆண் அந்த நேரத்தோடு அதை மறந்து இயல்பானநிலைக்கு மீண்டதை கதை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது.  :)

 

அதுதான் நீங்களும் அண்தானே. ஆணுக்குச் சார்பாக மனம் யோசிக்குது. என்னைப் பொறுத்தவரை அந்தப் பெண்தான் எல்லாம் மறந்து இயல்புக்கு வருகிறார் என எண்ணினேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்பதுகளில் காதல் நன்றாக உள்ளது..., இது ஒரு சிறிய ஊடல்தான்...   ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா வரவுக்கு

 

Link to comment
Share on other sites

சோமரிட்டை சொல்லி வையுங்கோ என்னோடை முறைய்ச்சால் வண்டி வாடும் எண்டு. அவர் அதுக்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகள் கிடக்கென்பார். எனக்கும் அது தெரியும், ஆனாலும் ஞாபகப்படுத்தி வைக்கிறன் எண்டு பதில் சொல்லிப்போடுங்கோ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கச் சோமரில பொறாமையாக் கிடக்கு! :o

 

நமக்கு வாய்ச்சதெல்லாம்....ம்ம்....! :icon_mrgreen:

 

 

வேணாம், புங்கை... ரூ லேட்.....! :unsure:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமரிட்டை சொல்லி வையுங்கோ என்னோடை முறைய்ச்சால் வண்டி வாடும் எண்டு. அவர் அதுக்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகள் கிடக்கென்பார். எனக்கும் அது தெரியும், ஆனாலும் ஞாபகப்படுத்தி வைக்கிறன் எண்டு பதில் சொல்லிப்போடுங்கோ! :D

 

உதுதான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறது எண்டு சொல்லுறது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி இரண்டுவருசத்தில் உப்படி செய்திரிந்தால் சோமர் திரிந்தியிருப்பார்....கட்டையில போரவயசில் தேவகிக்கு உந்த வீராப்பு தேவையோ? :D கதைக்கு நன்றிகள் சுமே

Link to comment
Share on other sites

யாழ் வெறுத்து ஒதுங்கப்போன சுமேரியரை, யாழ் ''இஞ்சேரும்'' என்று கூப்பிட்டதும் அனைத்தையும் மறந்த அவர் ''என்னங்கோ'' என்று வாஞ்சையுடன்....!!  ஒரு அழகான குட்டிக்கதையும் பிறந்து விட்டது. வாழ்த்துக்கள்!!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வெறுத்து ஒதுங்கப்போன சுமேரியரை, யாழ் ''இஞ்சேரும்'' என்று கூப்பிட்டதும் அனைத்தையும் மறந்த அவர் ''என்னங்கோ'' என்று வாஞ்சையுடன்....!!  ஒரு அழகான குட்டிக்கதையும் பிறந்து விட்டது. வாழ்த்துக்கள்!!.

 

:D :D :D வரவுக்கு நன்றி

Link to comment
Share on other sites

ஆணின் கோபம் பெரும்பாலும் கொஞ்ச நேரம்தான் இருக்கும். ஆனால் இந்தப் பொண்ணுங்க அதை மனசிலயே

வச்சு கறுவிக்கொண்டு திரியிற ஆக்கள். ஆண்கள் தாங்கள் குடும்பத்துக்காக செய்யும் எதையுமே "தம் சாதனையாக" கருதுவதில்லை. அதை தம் கடமையாகச் செய்துவிட்டு தங்களின் பெருங்காரியங்கள் எல்லாவற்றையும் அப்பவே மறந்துவிடுவார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  :)

 

இந்தப் பொண்ணுங்களே இப்பிடித்தான்.... ^_^  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் கோபம் பெரும்பாலும் கொஞ்ச நேரம்தான் இருக்கும். ஆனால் இந்தப் பொண்ணுங்க அதை மனசிலயே

வச்சு கறுவிக்கொண்டு திரியிற ஆக்கள். ஆண்கள் தாங்கள் குடும்பத்துக்காக செய்யும் எதையுமே "தம் சாதனையாக" கருதுவதில்லை. அதை தம் கடமையாகச் செய்துவிட்டு தங்களின் பெருங்காரியங்கள் எல்லாவற்றையும் அப்பவே மறந்துவிடுவார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  :)

 

இந்தப் பொண்ணுங்களே இப்பிடித்தான்.... ^_^  :lol:

 

நல்ல கதைதான் :rolleyes:

 

கலியாணம் கட்டி இரண்டுவருசத்தில் உப்படி செய்திரிந்தால் சோமர் திரிந்தியிருப்பார்....கட்டையில போரவயசில் தேவகிக்கு உந்த வீராப்பு தேவையோ? :D கதைக்கு நன்றிகள் சுமே

 

சோமர் போல ஆட்கள் திருந்தாமல் இருக்கிறது தேவகி போல ஆட்களால்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் குட்டிக்கதை  வா சித்த மகிழ்ச்சி ... வீட்டுக்கு வீடு வாசற்படி ..பாராட்டுக்கள். ........ :D

Link to comment
Share on other sites

எந்த வீட்டை பார்த்தாலும் சோமர் பொல்லாத குழ்ப்படி என்கிறார்களே. இதற்கென்ன் கோதாரி பண்ணுறதோ :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வீட்டை பார்த்தாலும் சோமர் பொல்லாத குழ்ப்படி என்கிறார்களே. இதற்கென்ன் கோதாரி பண்ணுறதோ :D

 

அதுதான் இனியாவது திருந்தப் பாருங்கோ :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகள் புத்தன் சுவி அண்ணா, யாயினி,அலை, மல்லை, இசை, கவிதை,நிலா அக்கா, புங்கை, பாஞ்ச, சோழியான், நவீனன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

வருகைதந்த உறவுகள் புத்தன் சுவி அண்ணா, யாயினி,அலை, மல்லை, இசை, கவிதை,நிலா அக்கா, புங்கை, பாஞ்ச, சோழியான், நவீனன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

நான் கருத்து எழுதாவிட்டாலும் வாசித்துவிட்டேன் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவீட்டிலும் உள்ளது தான்

ஆண்கள் சாதித்துவிட்டதாகவோ

வென்றுவிட்டதாகவோ பெருமைப்படலாம்

ஆனால்

அவளுக்கு எல்லாம் தெரியும்

கெஞ்சினால் மிஞ்சுவர்

மிஞ்சினால் கெஞ்சுவர்...

 

நன்றி  சுமே

தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

சோமருக்கு விசர்... இனியாவது தன்னைப் பிடிச்சு வைச்சிருக்கிற பிசாசு விட்டு விடட்டும் என்று பேசாமல் இருந்திருக்கலாம்.60 வருடங்களாக ஒரே மனிசியின் தொல்லையை எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியவில்லை. இதுக்காகவே தேவகி நாள் பொழுதெல்லாம் மனுசன்ட காலைக் கழுவி விட்டு இருக்க வேண்டும்.

 

(அட...ஆர் கூப்பிடுறது....  இஞ்சரும்..நான் சும்மா கணணியில தட்டிக் கொண்டு இருக்கின்றன்..கோபப்ப்டாதையும்..பொறுமன்.. உமக்கு ஆனாலும் இப்பவெல்லாம் கோபம் முணுக்கென்று வருகுது..)

Link to comment
Share on other sites

நிழலி தேவகியும் குழப்படி விடலாம் தானே என்கிறார். 

 

அப்ப சில வீடுகளிலை படி இல்லாமல் ஏறிப் போகினம் போலகிடக்கு.  :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் விசுகு அண்ணா,நிழலி ஆகியோருக்கு நன்றி.


சோமருக்கு விசர்... இனியாவது தன்னைப் பிடிச்சு வைச்சிருக்கிற பிசாசு விட்டு விடட்டும் என்று பேசாமல் இருந்திருக்கலாம்.60 வருடங்களாக ஒரே மனிசியின் தொல்லையை எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியவில்லை. இதுக்காகவே தேவகி நாள் பொழுதெல்லாம் மனுசன்ட காலைக் கழுவி விட்டு இருக்க வேண்டும்.

 

(அட...ஆர் கூப்பிடுறது....  இஞ்சரும்..நான் சும்மா கணணியில தட்டிக் கொண்டு இருக்கின்றன்..கோபப்ப்டாதையும்..பொறுமன்.. உமக்கு ஆனாலும் இப்பவெல்லாம் கோபம் முணுக்கென்று வருகுது..)

 

என்னதான் சொனாலும் இந்த ஆம்பிளையள் பெண்கள் இல்லாட்டா ஒண்டுமே இல்லை :D :D
 


நிழலி தேவகியும் குழப்படி விடலாம் தானே என்கிறார். 

 

அப்ப சில வீடுகளிலை படி இல்லாமல் ஏறிப் போகினம் போலகிடக்கு.  :D

 

அதுகும் உங்களுக்கு மட்டும் தெரியுது :lol:
 

Link to comment
Share on other sites

வருகை தந்த உறவுகள் விசுகு அண்ணா,நிழலி ஆகியோருக்கு நன்றி.

 

என்னதான் சொனாலும் இந்த ஆம்பிளையள் பெண்கள் இல்லாட்டா ஒண்டுமே இல்லை :D :D

 

 

அதுகும் உங்களுக்கு மட்டும் தெரியுது :lol:

 

சத்தியமான வார்த்தையை உதிர்த்தீர்கள் சுமேரியர். எதுவுமே தெரியாதவர்கள்!. என்னதான் சொனாலும் இந்த ஆம்பிளையள் பெண்கள் இல்லாட்டா ஒண்டுக்குமே, நல்லது கெட்டது பண்ணப் போகவும் முடியாதவர்கள்!!. :o:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானாக இருந்தால் சோறு வடித்தோ, கடையில் வாங்கியோ சாப்பிட்டுவிட்டு, அவளுக்கும் வாங்கி/சமைத்து வைத்து, கோபம் தணிய பேசாமல் காத்திருப்பேன்!

 

தம்பதியர் இருவரில் யாராவது ஒருவர் கோபமாக இருப்பின், மற்றவர் கோபத்தை உடனே தணித்து, அமைதியாக, பொறுமையுடன் இருப்பதே நன்று. :)

 

ஊடல் கதைக்கு நன்றி, மேரியம்மே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60 வருடமாக வாழ்ந்தும் இந்த மனுசிக்குப் புரியேல்லையோ...

 

எங்கள் வீட்டிலும் இந்தக் குய்யோ முறையோ இருக்கு.... சில இல்லை பல சமயங்களில் காரணமே இல்லாமல்  ஏச்சு வாங்குவேன்... கோபம் பொத்துக் கொண்டு வரும்.... சாதிப்பதில்லை... நம்மை விட்டா அவரும் யாரிடம் தன்னுடைய இயலாமையை கோபத்தை மனத்தாக்கங்களை கொட்டித் தீர்ப்பது...வேலை டென்சன் , பொருளாதார டென்சன், உறவுகள் டென்சன்...டென்சனுக்கே வாழ்க்கைப்பட்டுப் போன ஆட்களுக்கு உடலில் வருத்தங்களும் ஏறி உட்கார்ந்து அது வேறு டென்சன்.. எங்காவது வார்த்தையாகட்டும் அழுகையாகட்டும், குழப்பமாகட்டும் கொட்டித் தீர்த்துவிடவேண்டும்....என்ன அநேக குடும்பங்களில் மனைவியாக உள்ளவர்கள் இதனைத் தாங்கிக் கொள்ளவேண்டியவர்களாகி விடுகிறார்கள். சுமே உங்களின் எழுத்தும் எண்ணமும் கூர்மையடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
    • #பக்கத்து இலைக்கு பாயாசம் 🤣.
    • அமெரிக்க‌னுக்கு இஸ்ரேலுக்கு 3.3 மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் அவ‌ங்க‌ட‌  கால் தூசுக்கு ச‌ம‌ம்.................... உக்கிரேனுக்கே உத்த‌ன‌ பில்லிய‌ன் டொல‌ர‌ அமெரிக்க‌ன் அள்ளி அள்ளி கொடுத்த‌து அமெரிக்காவோடு ஒப்பிடும் போது  ஈரான் பணரீதியா கொஞ்சம் கச்டப்பட்ட நாடு.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.