Jump to content

இருளில் தெரிந்த தேவதை.


sathiri

Recommended Posts

இருளில் தெரிந்த தேவதை.(இது கதையல்ல)

கடந்த மார்கழி 13 ந் திகதி விடுமுறைக்கான பயணம்.இலங்கைக்கு செல்லக்கூடிய சாதகமான சூழல் இன்னமும் சரி வராததால் வழைமை போல இந்தியாவிற்கான பயணம்.ஒன்ரரை மாதங்கள் விடுமுறைக்காலம் என்பதால் எனது நண்பர்களையும் சந்தித்து போவது என முடிவெடுத்து முதலில் மும்பையில் இறங்கி அங்கு நான்கு நாட்கள் பின்னர்  கோவா.கர்நாடகா.தமிழ்நாடு என பயணப் பாதை திட்டமிடப் பட்டது.மும்பையில் எனது மனைவியின் தம்பி ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியியலாளராக இருப்பதால் அவனும் விடுமுறை  எடுத்து எங்களிற்காக காத்திருந்தான்.மும்பையில் இரண்டாம் நாள் மாலை மனைவி தனது தம்பியுடன்  பொருட்கள் வாங்க போய்விட  நான் எனது நீண்டகால  நண்பன் டோனியலை சந்திப்பத்காக அவன் கடை வைத்திருக்கும் மலை மாதா ஆலயத்தடிக்கு சென்றிருந்தேன்.அங்கு அவனோடு வழைமை போல பல பழைய  புதிய விடயங்கள் அரசியல் என கதைத்துக் கொண்டேயிருந்தோம்.அது மட்டுமல்ல அவன் திருமணம் முடித்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது .குழந்தை ஒன்பது மாதங்கள்.எனவே தான் காதலித்து திருமணம் முடித்த கதைகளையும் சொல்லிக்கொண்டிருந்தான்.தமிழீழம் கிடைத்த பின்னர்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து காத்திருந்தவன் திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.


அன்றிரவு எங்களை அவன் தனது வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்.மனைவியும்  மச்சினனும் நேராக அவன் வீட்டிற்கு வருவார்கள். எனவே இரவு எட்டு மணியளவில் டோனியல் கடையை அடைத்து விட்டு அவனது வீட்டிற்கு போகலாமென முடிவெடுத்து விட்டு இரண்டு ரீயை வாங்கி உறுஞ்சியபடி கதைத்துக்கொண்டிருந்தோம் கோயிலிற்கு அருகே நின்றிருந்த பெரிய மரமென்றின் கீழ் வெளிச்சமற்ற பகுதியில் திடீரென ஒரு சல சலப்பு கோயிலிற்கு வந்தவர்கள் கடை வைத்திருந்தவர்கள் என பலரும்அங்கு கூடத் தொங்கியிருந்தார்கள்.நானும் டோனியலும் என்ன நடக்கின்றது என்று விடுப்பு பார்ப்பதற்காக அங்குபோய் கூட்டத்தை விலத்தி பார்த்தோம். நடுவில் ஒரு பெண் கையில் ஒரு பெண்குழந்தையோடு அழுதபடியே ஏதோ சொல்லிக் கொணடிருக்க அவளை பலர் ஏசியும் கோபமாக திட்டிக் கொண்டும் இருந்தார்கள்.அழுதபடி நின்ற பெண் மராட்டியில் கதைத்தால் எனக்கு ஒன்றும் புரியவில்லை எனவே டோனியலைப் பார்த்து என்னவாம் என்றதும்.

இது அந்த பெண்ணின் இரண்டு மாத குழந்தையாம் ஏற்கனவே இவளிற்கு மூன்று பிள்ளைகளாம்.கணவன் சந்தை ஒன்றில் லாறிகளிற்கு பொருள் ஏற்றும் வேலை செய்பவன்.அவன் ஏதோ விபத்தில் சிக்கியதால் ஒரு மாதமாக வைத்திய சாலையிலாம்.அதனால் வருமானம் இல்லை சாப்பாடு இல்லை.சாப்பாடு சரியாக இல்லாததால் பிள்ளைக்கு பால் கொடுக்க முடியவில்லை.அதே நேரம் இந்த பிள்ளை பிறந்த நேரம்தான்  கணவனிற்கு விபத்து நடந்தது என்று நினைத்து இந்த ராசியில்லாத குழந்தையை கோயிலடியில் போட்டு போகலாமென முடிவெடுத்து அவள் கோயில் படிக்கட்டில் குழந்தையை போட்டு விட்டு போகும்போது சிலர் கண்டதால் கூட்டம் கூடிவிட்டது என்று சுருக்கமாக சொல்லி முடித்தான்.
கூட்டத்தை விலக்கி அவளருகே போய் கையிலிருந்த குழந்தையை பார்த்தேன் அது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தது.சிலர் போலிசை கூப்பிடு என்று கத்திக் கொண்டேயிருந்தார்கள்.

போலிசை கூப்பிடுவதாலேயோ அந்தப் பெண்ணை திட்டி கலைப்பதாலேயோ எதுவும் நடந்து விடப் போவதில்லை அவள் அந்தக் குழந்தையை  வேறு இன்னொரு இடத்தில் வீசி விட்டு போகத்தான் போகிறாள்.அவளை  உற்றுப் பார்த்தேன் மெலிந்த தேகம் அழுக்கான உடைகள் அழுது கொண்டே சேலையில் சுற்றிய குழந்தையை  பிடித்தபடி போலிசை கூப்பிட வேண்டாம் என கைகளை கூப்பிய படி அழுது கொண்டே நின்றவளிடம் பிள்ளையை வளக்கத் தெரியா நீயெல்லாம் எதுக்கடி பெத்துக்கிறீங்கள் என்று வீர வசனம் எல்லாம் பேச மனம் வரவில்லை.டோனியலிடம் அவளை தனியாக  அழைத்து வா என்றதும் அவன் புரிந்தவனாக அங்கு நின்றவர்களை சத்தம் போட்டு விரட்டிவிட்டு அவளை தனது கடைக்கு அழைத்து வந்தான்.மற்றையவர்கள் தூரத்தே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

 அவளிற்கு  சாப்பாடும் ரீயும் வாங்கி கொடுத்து விட்டு அடுத்தது என்ன செய்யலாமென யோசித்தபடி டோனியலை பார்த்தேன்.அவனோ மச்சான் எனக்கு இப்பதான் ஒரு மகன்பிறந்திருக்கிறான் என்று தலையை சொறிந்தான்.உடனே மனைவிக்கு போனடித்து அங்கு வரச் சொன்னேன். சில நிமிடங்களிலேயே மனைவியும் மச்சினனும் வந்து சேர்ந்தார்கள்.அவர்களிற்கு விபரத்தை சொன்னேன்.குழந்தையை பார்த்த மனைவி நாங்களே எடுத்துக்கொண்டு போகலாம் என்றாள்.அது முடியாது நிறைய சட்டச் சிக்கல் சம்பிரதாயங்கள் உள்ளது அது மாதக் கணக்கோ வருசமோ ஆகும் இப்போ உடனடி தீர்வு தேவை என்றதும் மச்சினனோ எனக்கு  ஏற்கனவே மூன்று ஆண் குழந்தைகள் எனவே தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்கிற விருப்பம் தான் எடுத்து வளர்ப்பதாக சொன்னான். அதற்கிடையில் விபரம் அறிந்து தேவாலய பாதிரியாரும் அங்கு வந்திருந்தவர் குழந்தையை திருச்சபை பொறுப்பொடுத்து வளக்கதயார் என்று சொல்லியிருந்தார்.நித்திரையால் எழுந்த குழந்தை சாப்பிட்டு முடித்திருந்த தாயிடம் பால் குடித்துவிட்டு எங்களைப் பார்த்து அழகாய் சிரித்தது.
அதன் சிரிப்பை பார்ததுமே மச்சினன் தனக்கு அந்தக் குழந்தை வேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கியிருந்தான்.

அவனது மனைவிக்கு போனடித்து விபரம் சொல்லி அனுமதி கேட்கசொன்னேன். வேண்டாம் ஏற்கனவே தான் ஒரு பெண் குழந்தையை தத்து எடுப்பது பற்றி மனைவியுடன் பேசியுள்ளேன் எனவே அவனிற்கு விபரம் சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்என்று விட்டான். அடுத்ததாக சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவே டோனியலிற்கு தெரிந்த ஒரு வக்கீலையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு போனோம்.அங்கு அதிகாரி இருக்கவில்லை அவர் ரவுண்ஸ்(நகரவலம்)போயிருப்பதாக சொல்லி அவரிற்கு வோக்கியில் தகவல் கொடுத்தார்கள்.அரை மணித்தியாலம் கழித்து அங்கு வந்த அதிகாரி அதிகார தோரணையோடு கிந்தியில்  யாரப்பா நீங்களெல்லாம்  பிள்ளை வியாபாரம் பண்ணுறவங்களா.உங்களுக்கு என் னவேணும்.எல்லாரையும் உள்ளை தள்ளிடுவன் என்று சத்தமாக எங்களைப் பார்த்து சொல்ல. நான் எனது கடவுச் சீட்டையும் பத்திரிகையாளன் என்கிற அடையாள அட்டையையும் காட்டியபடி  ஆங்கிலத்தில் விபரத்தை சொன்னதும்.அமைதியான அதிகாரி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிமினல்களும் இங்கு மும்பையில்தான் இருக்கிறார்கள் அதுதான் அப்படி கதைத்து விட்டேன் என்றதும் டோனியல் மெதுவாய்  கொடுப்பிற்குள் சிரித்தான்..

அந்தப் பெண்ணை தனியாக அழைத்து விசாரித்து விட்டு அடுத்தநாள் காலை அனைவரையும் வரும்படி சொன்ன அதிகாரிஇ இரண்டு காவலர்களை  அந்தப் பெண் வசிக்கும் இடத்திற்கு போய் பெண்ணின் தகவல்கள் சரியானதா என விசாரித்துவரச்சொல்லி அனுப்பிவிட்டார். மறுநாள் காலை அனைவரும் காவல் நிலையம் போய்சேர்ந்தோம் வக்கீலும் போலிசாரும் தயாரித்த தத்து கொடுக்கும் கடிதங்களில் அந்தப் பெண்ணும் மச்சினனும் சாட்சியாக நாங்களும் கையெழுத்து போட்டு குழந்தையை பெற்றுக் கொண்டதும் காவல்துறை அதிகாரி எங்களிற்கு வாழ்த்து சொன்னதோடு அந்தப் பெண்ணை  வைத்திய சாலைக்குப்போய் கருத்தடை செய்யச் சொல்லி கோபமாய் திட்டி அனுப்பினார்.வெளியே வந்ததும் நான் அந்தப் பெண்ணை அழைத்து கொஞ்சம் பணத்தை அவளிடம்கொடுத்து மற்றைய பிள்ளைகளை  நன்றாக கவனிக்க சொன்னதும் கைகூப்பி கும்பிட்டபடி பணத்தை வாங்கிக் கொண்டு பிள்ளையை பார்க்காமலேயெ நடந்து போய்விட்டாள்

குழந்தையை மச்சினன் வீட்டிற்கு கொண்டுபோனதுமே அனைவரிற்கும் மகிழ்ச்சி. குழந்தைக்கு ஏற்கனவே முஸ்லிம் பெயர் இருந்ததால்  அதற்கு வேறொரு பெயர் வைக்கவேண்டும் என முடிவு செய்யப் பட்டது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன் மொழிந்தார்கள்.எனக்கு குழந்தையை பார்த்ததுமே தேவதை என்று பெயர் வைக்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.எனவே மற்றையவர்கள் சொன்னஅனைத்து பெயர்களையும் துண்டுக்கடதாசியில் எழுதி சுருட்டி குலுக்கிப்போடுவது என முடிவானது. நான் கடதாசிகளில் பெயர்களை எழுதி சுருட்டி குலுக்கிப் போட்டேன்.மனைவியின் தங்கை மகன் ஒரு கடதாசி சுருனை எடுத்துத் தந்தான் அதை விரித்து அனைவரிற்கும் காட்டினேன் ஏஞ்சல் என்றிருந்தது குழந்தைக்கு ஏஞ்சல் என்கிற பெயர் முடிவானது.நான் மற்றைய கடாசிகளை எடுத்து கிழித்து குப்பையில் எறிந்துவிட்டு குழந்தையை தூக்கி ஏஞ்சல் என்று அழைத்தபடி முத்தம் கொடுத்தேன்.நான் அனைத்துக் கடதாசிகளிலும் ஏஞ்சல் என்றே எழுதி சுருட்டிப் போட்டிருந்தேன்.ஏஞ்சல் இப்பொழுது எங்கள் வீட்டுப் பிள்ளை .
 

india+463.JPG
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே , கடவுளே  நான் இன்னும் திருந்த வேண்டும், என்ர மனம் இன்னும் செம்மையாக வேண்டும். சாத்ஸ் இருளில் தேவதை என்றவுடன்  கமல் ரேஞ்சுக்கு ஒரு காட்சியை நினைத்துப் படித்தேன், ஆனால் உங்களின் மென்மையான பக்கத்தைக் காட்டி  ஒரு நல்ல சேவை செய்து ஏமாற்றி விட்டீர்கள்.

ஆயினும் கடைசில கடதாசியில உங்கள் வழக்கமான முத்திரையைப் பார்த்ததும் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதல்.

 

ஏஞ்சலின் வாழ்க்கை இனி ஏறுமுகமாய்த்தான் இருக்கும். உங்களுக்கும், நன்பர் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு அந்த குழந்தையை தத்தெடுத்ததில் மகிழ்ச்சி ஏதும் இல்லை.ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர் அற்ற குழந்தையை தத்தெடுத்திருந்தால் நான் இரட்டிப்பு சந்தோசம் அடைந்திருப்பேன்.
 
இந்த பெண்ணின் நிலை மனதைப் பாதிக்க கூட இல்லை.இதை விட துயரமான சம்பவங்கள் எல்லாம் வன்னியில் நடந்திருக்குது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான பிள்ளை

நல்ல  விடயம்  சாத்திரி

தவறைக்கண்டும் காணமல் போறவனும் குற்றவாளியே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானம் என்பது யார் எவரென்று பார்ப்பதில்லை. ஏஞ்சலுக்கான மானுட தரிசனம். 

Link to comment
Share on other sites

மனித நேயம் இன்னும் உயிர் வாழ்கிறது .........என்பதை நினைத்து .கண்கள் நீர் சொரிந்தன ...............இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பராக ..............

Link to comment
Share on other sites

சுண்டல் புலிகுரல் புத்தன் வரவிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

கடவுளே , கடவுளே  நான் இன்னும் திருந்த வேண்டும், என்ர மனம் இன்னும் செம்மையாக வேண்டும். சாத்ஸ் இருளில் தேவதை என்றவுடன்  கமல் ரேஞ்சுக்கு ஒரு காட்சியை நினைத்துப் படித்தேன், ஆனால் உங்களின் மென்மையான பக்கத்தைக் காட்டி  ஒரு நல்ல சேவை செய்து ஏமாற்றி விட்டீர்கள்.

ஆயினும் கடைசில கடதாசியில உங்கள் வழக்கமான முத்திரையைப் பார்த்ததும் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதல்.

 

ஏஞ்சலின் வாழ்க்கை இனி ஏறுமுகமாய்த்தான் இருக்கும். உங்களுக்கும், நன்பர் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்...! :D

 

நன்றி சுவியண்ணா

Link to comment
Share on other sites

உண்மையில் அவள் அதிஷ்டமான குழந்தைதான்.

அதிஷ்டம் இல்லாதவள் என தாயினாலேயே புறக்கணிப்பட்ட குழந்தை.... இனிமேல் அதிஷ்ட தேவதையாகவே வளருவாள்.

 

நடந்த சம்பவத்தை எங்களுடனும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சாத்ஸ்! :)

Link to comment
Share on other sites

நல்ல விடயம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். உண்மையில் அழகாக குட்டி தேவதையாகத்தான் இருக்கின்றாள். ஏன்ஜல் என்ற பெயரை தவிர எதுவும் அவளுக்கு பொருந்தியிருக்காது.

Link to comment
Share on other sites

  • 4 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.