Jump to content

2000 பச்சைகளால் பாசிமாலை போட்டு அழகு பார்க்கும் உறவுகளே..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை மண்ணாய்

பால் குடியாய்

யாழ் வந்த போது

தமிழோ வா வா என்ற

தமிழர்கள் சிலர்..

இது தமிழா

இவன் எல்லாம் உருப்படுவானா

என்று மொழிய..

தத்தெடுப்பின் அடையாளமாகி

அவை அமைய..

இணையத் தமிழ் கொண்டு

அரவணைத்த

யாழ் இணைய சொந்தங்களே..

 

பச்சை பச்சையாய்

திட்டினும்

யதார்த்தமாய் ஏசினும்

வாயாரப் புகழினும்

வாஞ்சையோடு வருடினும்

வஞ்சகமில்லா

எம் மொழியை

கண்டறிந்திட்டு

சொந்தம் கொண்ட... உறவுகளே.

 

காலத்தால்

தனித்துவிட்ட போதும்

கலங்கரை விளக்கமாக

கூட நின்ற சொந்தங்களே..

அன்னை இன்றி தந்தை இன்றி

உற்ற சகோதரங்கள் கூட இன்றி

அரவணைக்க உறவுகள் இன்றி

அந்நிய தேசத்தில்

கண்கண்ட நேரத்துக்கு மட்டும்..

கூடி மகிழும்

நண்பரைக் காட்டிலும்

கூட வந்த உறவுகளாய்

அன்னையாய் தந்தையாய்

சகோதரனாய்..

குடும்பத்தே இல்லாத போதும்

சகோதரிகள் உறவதை

ஊட்டி அரவணைத்த

அக்காக்களே தங்கைகளே...

 

கருத்துக்களால்

சுட்ட போதும்

சினப்படுத்திய போதும்

மனம் சிதையாமல்..

சிந்தையில் அதை வைக்காமல்

மன்னித்தே

மறந்தே

எம் வன்மொழிகள்

அழித்து

மென் மொழிகள்

அன்பு மொழிகள்

மனதில் இருத்தி

அரவணைத்த உறவுகளே..

 

2000 பச்சைகளால்

பாசிமாலை போட்டு

அழகு பார்க்கும் உறவுகளே..

அப்புகழ் யாவும்

உமக்கே சொந்தம்

எமக்கல்ல..!

எம்பால் உள்ள

புகழனைத்தும் தாங்கி

எம் மனம் வாழும்

அன்பு உறவுகளே...

 

உருவால் அடையாளம்

தெரியாமல்

எழுத்தால்.. உணர்வால்

உறவூட்டிய சொந்தங்களே..

உங்களோடு இவன்

எப்போதும்

அன்போடு உறவாடுவான்.

 

காலம் உள்ள வரை..

யாழ் எனும்

இந்தக் கப்பல்

எமை மூழ்காமல்

காவிச் செல்லும்

அதுவும் திண்ணம்.. சொந்தங்களே..!

 

தாய் மண்ணைப் பிரிந்த போதும்

தாய் மண்ணை

ஆக்கிரமிப்பு பூதம் விழுங்கிய போதும்

கண்கலங்கி நின்ற வேளை

மனம் வெதும்பி துடித்த வேளை..

கருத்தால்

தெம்பூட்டி

வழித்தடம் காட்டிய உறவுகளே..

 

தொடர்ந்து நாம்

பயணிப்போம்

நாம் தமிழராய்

தமிழ்ப்புலி போற்றிய

தமிழ் மொழியால்

எமை இணைத்தே..!

 

தேசம் விடியும் போது

உரக்கக் கத்துவோம்

தேசிய கீதமாய்

இந்த யாழதில்

நாம் மொழிந்தவை..!

வேற்றுமைகள் களைந்து

ஒற்றுமையாய்

சேர்த்து வைப்போம்

அவை இங்கே பொக்கிசமாய்...!

 

oli-hand.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ,கவிதையும் இவ்வளவு நீட்டாவா இருக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , என்னும் பல ஆயிரம் விருப்பு பச்சைப்புள்ளிகளை குவிக்க வாழ்த்துகின்றேன்.   

Link to comment
Share on other sites

எனக்கு இன்னும் 44 more  for  1000 .................1044 more  for 2000 .................நடக்குமா ,தகுமா .இயலுமா சும்மா போங்க சார் 

 

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ..............அடுத்த மாதம் 3000 ஆக இருக்கணும்////////////////

 

 

vadivelu-comedy-tamil.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை, கவிதை, கட்டுரை, கருத்து ......!

 

எல்லா விசயத்திலும் பெடியன் ஒக்கே தான்...! 

 

சந்தேகமேயில்லை!

 

ஆனால் அந்த விசயம்!

 

ம்ம்.... இவனெல்லாம் உருப்படுவானா எண்ட நிலை தான்! :D

 

இதயத்தின் அடித்தளத்திலிருந்து ஊற்றெடுக்கும் வாழ்த்துக்கள், நெடுக்கர்! :icon_idea:

 

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் மண்ணைப் பிரிந்த போதும்

தாய் மண்ணை

ஆக்கிரமிப்பு பூதம் விழுங்கிய போதும்

கண்கலங்கி நின்ற வேளை

மனம் வெதும்பி துடித்த வேளை..

கருத்தால்

தெம்பூட்டி

வழித்தடம் காட்டிய உறவுகளே..

 

தொடர்ந்து நாம்

பயணிப்போம்

நாம் தமிழராய்

தமிழ்ப்புலி போற்றிய

தமிழ் மொழியால்

எமை இணைத்தே..!

 

தேசம் விடியும் போது

உரக்கக் கத்துவோம்

தேசிய கீதமாய்

இந்த யாழதில்

நாம் மொழிந்தவை..!

வேற்றுமைகள் களைந்து

ஒற்றுமையாய்

சேர்த்து வைப்போம்

அவை இங்கே பொக்கிசமாய்...!

 

வாழ்க வளமுடன் ராசா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்.. கோடான கோடி.. நன்றி யாழ் உறவுகளே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

 

இதை பார்த்துக் கொண்டாட உங்களுக்கு விரைவில் துணை அமைந்தால், நன்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்..! நீடூழி வாழ்க.வளர்க...!

 

உங்கள் கவிதை அமைப்பும் இப்போ சிறப்பாக அமைகின்றது...! :D

Link to comment
Share on other sites

2000 பச்சைகளால்

பாசிமாலை போட்டு

அழகு பார்க்கும் உறவுகளே..

அப்புகழ் யாவும்

உமக்கே சொந்தம்

எமக்கல்ல..!

எம்பால் உள்ள

புகழனைத்தும் தாங்கி

எம் மனம் வாழும்

அன்பு உறவுகளே...

 

எனக்கல்ல.! என்பால் உள்ள.! என் மனம்.! என்றால் அது நெடுக்கர்.!!  :) 
எமக்கல்ல.! எம்பால் உள்ள.! எம் மனம்.! என்றால் அது நெடுக்கர் கள்.!!  :wub: 
எமக்கு உமது கள்(ளியைக்) காட்டினால்.! அவள் அழகு குறைந்துவிடுமோ.??  :o 
 
பரவாயில்லை, நான் தந்த பச்சையும் வாழ்த்துச் சொல்லியே.! வாழ்த்துக்கள்.!!  :D  :D 
 
Link to comment
Share on other sites

2000 பச்சைகளால்

பாசிமாலை போட்டு

அழகு பார்க்கும் உறவுகளே..

அப்புகழ் யாவும்

உமக்கே சொந்தம்

எமக்கல்ல..!

எம்பால் உள்ள

புகழனைத்தும் தாங்கி

எம் மனம் வாழும்

அன்பு உறவுகளே...

 

எனக்கல்ல.! என்பால் உள்ள.! என் மனம்.! என்றால் அது நெடுக்கர்.!!  :) 
எமக்கல்ல.! எம்பால் உள்ள.! எம் மனம்.! என்றால் அது நெடுக்கர் கள்.!!  :wub: 
எமக்கு உமது கள்(ளியைக்) காட்டினால்.! அவள் அழகு குறைந்துவிடுமோ.??  :o 
 
பரவாயில்லை, நான் தந்த பச்சையும் வாழ்த்துச் சொல்லியே.! வாழ்த்துக்கள்.!!  :D  :D 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சுக்கும் நன்றி. :)  உங்கள் சந்தேகம்.. விடை காணப்படாமல் தொடர்வதே நல்லது. :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.  அரசியல், விஞ்ஞானம், இயற்கை என்று அனைத்து விடயங்களிலும் சளைக்காமல் எழுதும் உங்கள் ஆற்றலுக்கு பாராட்டுகள்.

 

அடுத்த இரண்டாயிரம் பச்சைப் புள்ளிகள் எடுக்கும் முன் கலியாணம் கட்டி, இரண்டு குழந்தைகளாவது பெற்று சீரும் சிறப்புடன் வாழவும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்கர் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.  அரசியல், விஞ்ஞானம், இயற்கை என்று அனைத்து விடயங்களிலும் சளைக்காமல் எழுதும் உங்கள் ஆற்றலுக்கு பாராட்டுகள்.

 

அடுத்த இரண்டாயிரம் பச்சைப் புள்ளிகள் எடுக்கும் முன் கலியாணம் கட்டி, இரண்டு குழந்தைகளாவது பெற்று சீரும் சிறப்புடன் வாழவும் என் வாழ்த்துக்கள்.

 

நன்றி நிழலி. :)

 

சிறியவனாக இருந்த போதே.. ஒரு குறுகிய வட்டத்துக்குள் என்னை அடைக்கக் கூடாது என்று நினைச்சவன் நானு. கலியாணம்.. குடும்பம்... குட்டின்னு சராசரி மனிசங்க போல.. ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள சுற்றி சுற்றி வந்திட்டு.. மண்டையைப் போடுறதில.. ஒரு அர்த்தமும் இல்லை. :)

வாழ்த்துச் சொன்ன பிற உறவுகளோடு.. அர்ஜூன் அண்ணா மற்றும் புதிய கள உறவு சசி-வர்ணம் ஆகியோருக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.