Jump to content

வாலிப வயதுக் குறும்பு. பாகம் 3


Paanch

Recommended Posts

இந்து வாலிபர் சங்கத்தின் வாசிகசாலை மண்டபம், பல சமூகநலன்தரும் நிகழ்ச்சிகளை நடாத்தி சமூகவிழிப்பை ஏற்படுத்துவதுண்டு. நாடகத்துறையில் புகழ்பெற்ற எங்கள் விதானையாரும், எங்களையும் அத்துறையில் ஈடுபடுத்தி நடிகர்களாக்கி மேடை ஏற்றுவதும் உண்டு. நடிகர்களான எங்களைக் கண்டதும் தலைகுனிந்து செல்லும் எங்கள் ஊர் மங்கையரும், தலை நிமிர்ந்து, முகமலரைக் காட்டுவார்கள். அது நக்கலோ.! நளினமோ.!  அறியாமலே நாங்கள் சிவாஜி, எம். ஜீ. ஆர், றேஞ்சுக்குப் போய்விடுவோம். நல்லூர்க்கந்தன் திருவிழாவையொட்டி, நாங்கள் பங்குபற்றி நடித்த, விதானையாரின் நாடகமொன்று ஊர்மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த வெற்றிப் பூரிப்பில் திகழ்ந்த விதானையாரும் நாடகம் நடந்த மறுநாள் மாலை எங்களைக் கண்டதும், "வாங்கோடா தம்பியள்.! எல்லோரும் முருகன் கபேக்குப் போய் போண்டா வடை சாப்பிடுவம், செலவு என்னுடைய பொறுப்பு" என்றார். . 
 
தீண்டாமை ஒழிப்பில் ஒன்றுபட்ட நாங்கள், தண்ணீர்ப் பந்தலில் தீண்டப்படாதவர்களுக்கு என்று வேறாக மூக்குப்பேணி வைக்கக்கூடாது எனப் போராடுவதும், கபேயில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து 'ரீ' குடிப்பதும் வழக்கம். அது விதானையாருக்கும் தெரியும். அதுபற்றி அறிவுரையும் வழங்கியுள்ளார். இன்றும் வழங்கினார். "தம்பியவை இளரத்தம்! இப்ப உங்களுக்குத் தெரியாது..! நீங்களும், பெரியவர்கள் ஆனாதுக்கு அப்புறம், உங்களுக்கு உள்ளேயே, யாரைத் தீண்டலாம்! யாரைத் தீண்டக்கூடாது! என்று நீங்கள் ஆற்றப்போகும் தொழிலின் தகுதி கொண்டிருக்கும் தராதரம், உங்களை யோசிக்க வைக்கும்.! சரி, சரி அது வரும்போது வரட்டும்.! இப்ப கிடைக்கும் சந்தோசத்தை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்..!!" என்று அவரும் எங்களுடன் சேர்ந்து அமர்ந்ததை கபே முதலாளி ஆறுமுகம் ஆச்சரியத்துடன் பார்த்து ஒரு நிம்மதிப் பெருமூச்சும் விட்டதற்குக் காரணமும் இருந்தது!!. 
 
தென்னிந்திய உறவுகள் பலர், பொருள் தேடுவதற்குப் பின்வாசல் வழியாக வந்து இலங்கையில் பொருள்தேடிய காலமது. கடவுச் சீட்டும், வதிவிட வசதியுமற்ற அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்து வந்ததில், இப்படியான கபேகளுக்கு அதிகம் பங்குண்டு. முருகன் கபேயில் அடைக்கலமாக இருந்தவர்களுக்கு ஆபத்து வரும் வேளைகளில் அவர்களை எங்கள் வீடுகளிலும் வைத்துப் பாதுகாப்புக் கொடுத்து உதவியது, ஆறுமுகத்திற்கு எங்களிடம் தனிப்பட்ட அன்பையும் பாசத்தையும் வளர்த்திருந்தது. ஆனாலும் தீண்டாமை ஒழிப்பில் காட்டிய எங்கள் தீவிரம் தனக்குக் கேடாக அமைந்துவிடுமோ? என்ற பயம் அவரின் வயிற்றைக் கலங்கடிப்பதுண்டு. நாங்கள் தீண்டப் படாதவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்வது ஊர்ப் பெரிசுகளின் கண்களைக் கனல் கக்க வைக்கும். சாதிகள் இல்லையடி பாப்பா! என்று பாரதியார் பாடலை எங்களுக்கு ஊட்டிவளர்த்த அவர்களே! இப்போ சாதிகளே எங்கள் வேதமடி என்றால் முடியுமா...?? இளமையில் கற்று எங்கள் இதயச் சிலையில் எழுத்தாகிப் போனதை எப்படிப் பெயர்த்து எடுக்க முடியும்...!!! 
 
"பொடியன்கள் அங்கு இருந்தால் சப்பிளை பண்ணக் கூடாது! பண்ணினால் உன்னைக் கோவணத்தோடு பழனியாண்டி ஆக்கிவிடுவோம்!" என்று ஆறுமுகத்தை வெருட்டுவார்கள். எங்களை வெருட்ட அவர்களுக்குத் தயக்கம்! ஏன் என்றால்..! அவர்களுக்கும் பாடமெடுத்துக்  களைப்படைந்து இளைப்பாறும் மூத்த பெரிசுகளின் செல்லப் பேரன்களும், பாட்டன்மாரின் ஆதரவுடன் எங்கள் குழுவில் இருந்ததால், ஏதும் செய்ய முடியாது மனதுக்குள்ளே பொங்கிக் குமுறவே அவர்களால் முடிந்தது. இன்று விதானையாரும் எங்களுடன் சேர்ந்து அந்த இடத்தில் அமர்ந்தது! கபே முதலாளி ஆறுமுகத்திற்கு ஒரு தெம்பை அளித்தது. பெரிசுகள் புகார்செய்தாலும், அது விதானையார் மூலமாகத்தானே பொலீசுக்குப் போகமுடியும்..! அப்படி மீறிப் போனாலும் விதானையார் சாமாளித்து விடுவார் என்ற நம்பிக்கைதான் அது!
 
வடை போண்டா சாப்பிட்டு, பால்ரீயும் குடித்த உற்சாகத்துடன் வெளிவந்தபோது.... முட்டைக்கண்ணன் வாத்தியாரின் ஓட்டோ சயிக்கிள் சத்தம் காதைத் துளைத்தது. எங்களோடு விதானையாரையும் சேர்த்துக் கண்டதும், சயிக்கிளை நிறுத்திவிட்டு, "பிள்ளைகள் நல்லபேர் வாங்கித் தந்துவிட்டாங்கள் போல் கிடக்குது, நல்ல அருமையான நாடகம்..!" என்று பாராட்டவும் செய்தார். "உங்களிடம் படிக்கிற மாணவர்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா?" என்று விதானையாரும் முகத்துதி செய்யவே! முட்டைக்கண் பானைக் கண்ணாக விரிந்து மலர்ந்தது. "அதுசரி வாத்தியார்! உதென்ன சட்டையிலை எண்ணை?" "அதொண்டுமில்லை விதானையார், இண்டைக்கு எங்கடை மரத்துப் பலாப்பழம் சாப்பிடேக்கை, பால் ஒட்டாமல் இருக்க கைக்குப் பூசின எண்ணை சட்டையில பட்டிட்டுது போல, நான் கவனிக்கவில்லை. கழுவினால் போய்விடும்...." 
 
மறுநாள் காலை நல்லூர்க் கந்தனுக்காகப் போடப்பட்டிருந்த தண்ணீர்ப்பந்தல் பெருக்கித் தண்ணீர் தெளித்து, சர்க்கரை, மோர், ஊறுகாய்த் தண்ணீருக்கு வேண்டிய ஒழுங்குகளும் மேற்கொண்டு இருந்தபோது... மகிழுந்து ஓட்டி கணேசண்ணை ஓடிவந்து... "தம்பியவை! கேட்டியளே..! உங்கடை கணக்குவாத்தியார் கைகால்முறிந்து, இப்ப பெரியாசுப்பத்திரியில் கிடக்கிறாராம்!" என்னதான் வாத்தியார் காதில் கிள்ளும் கோபம் இருந்தாலும், வாத்தியாரின் கற்பித்தல் எங்களைக் கணக்கிலே புலிகளாக வைத்திருந்ததை மறந்தால் நாங்கள் நன்றி மறந்தவர்களாவோம்.! தவித்துவிட்டோம்.! அந்தத் தவிப்பில் எழுந்த உருக்கமான உணர்வு! ராசுகடையில் கார்லிக்சும், தோடம்பழமும் வாத்தியாருக்கு வாங்கவைத்தது. "தம்பியவை கேள்விப்பட்டதும் கவலையாய்த்தான் இருக்கு, இருந்தாலும் உந்த வாத்தியார் எப்படி உங்களுக்கு கணக்குப் படிப்பிக்கிறார்..?? உப்பிலை அரைச்சதம் மிச்சம்பிடிக்க பெரியகடைக்குப் போனவர். அங்கை போய்வர பெற்றோலுக்கு ஐம்பது சதமாவது செலவாகும் என்று கணக்குப்பாக்கத் தெரியல்லையே..! இப்போ சைக்கிளும் போய்..! காலும் முறிஞ்சு..!!  ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த ராசு அண்ணையிடம் பொருளியல் பாடத்திற்கு ரியூசன் எடுக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. "என்னண்ணை நடந்தது" என்று கேட்டோம்.
 
"அதடா..! தம்பியவை..! நேற்றுப் பின்னேரம் வாத்தியார் உப்பு வாங்க வந்தவர். இரண்டு இறாத்தல் எண்டால் 15 சதம், ஒரு இறாத்தல் எண்டால் 8 சதம் எண்டுதான் நான் விக்கிறனான். அந்தாளுக்கு என்ன வந்துதோ தெரியல்லை, மனிசியோடை பிரச்சனையோ தெரியாது..! மக்களை உப்படி ஏமாத்திக் கொள்ளையடிக்கக் கூடாதுபாரும், இரண்டு இறாத்தல் உப்பு பதினைந்து சதமென்றால்..! ஒரு இறாத்தல் ஏழரைச்சதம்தானே, அதற்கு ஏன் எட்டுச்சதம் வாங்குகிறீர்..! அரைச்சதம் புழக்கத்தில் இல்லைத்தான், சரி... ஏழுசதம் வாங்கலாமே..! பெரியகடையில் ஒரு இறாத்தல் ஏழுசதம்தானே விக்கிறாங்கள்" என்று  என்னைத் திட்டிவிட்டு அவற்ரை ஓட்டோ சைக்கிள்ளையும் எடுத்துக்கொண்டு பெரியகடைப்பக்கம் உப்பு மலிவெண்டு போனவர். கந்தர்மடத்துச்  சந்தியிலை லொறியோடை அடிபட்டு மோட்டச்  சயிக்கிள் உதவாதாம்!. ஆசுப்பத்திரியிலை வேலைசெய்கிற பெரியண்ணை இரவுவந்து சொல்லித்தான் எனக்கும் தெரியும்" என்று ராசு அண்ணை சொல்லிய பின்புதான், அரைச்சதம் மிச்சம் பிடிக்கிறதுக்கு, உப்புவாங்கப் பெரியகடைக்குப் போனபோதுதான் வாத்தியாருக்கு விபத்து நடந்தது என்ற விபரம் எங்களுக்குத் தெரியவந்து. விசயம் நிமிடத்தில் ஊருக்கெல்லாம் பரவியும் விட்டது. நாங்கள் எஙகளுக்குத் தெரிந்தவர்களுக்குத்தான் சொன்னோம். தெரியதவைக்கு யார் சொன்னார்களோ..! எங்களுக்கென்ன தெரியும்..!! 
 
பெரிய ஆசுப்பத்திரிக் கேற்றில் காவலுக்கு நின்ற கந்தசாமி எங்கடை ஊர்தான். ஆனாலும் கடமையே கண்ணானவர். நெஞ்சு நிமிர்த்தி நின்றார். முன்னுக்கு நின்ற மூன்று பற்கள்கூட நம்ம ஊர்ப்பையன்கள் என்ற முறுவலைக் காட்டவில்லை.! கெஞ்சலும், கொஞ்சலும்கூட அடிபட்டுப்போனது.! 12 மணிக்குத்தான் உள்ளே போகலாம். வேறுவழியில்லை... ஆனால் 12 மணிக்குள் நாங்கள் தண்ணீர்ப்பந்தலுக்கு போகவேண்டும். சர்க்கரை, மோர், ஊறுகாய் இருக்கும் அறைத்திறப்பு எங்களிடத்தில். கொதிக்கும் வெயிலில் நடந்துவரும் நல்லூர்க் கந்தன் பக்தகோடிகள் தாகத்தால் தவித்துப் போவார்கள். நல்லூர்க் கந்தா.! என நாங்கள் வேண்டியபோது, கந்தன் உடனே விதானையாரை எங்கோ தேடிப்பித்து ஆசுப்பத்திரிக் கேற்றடிக்கே அனுப்பிவிட்டார்.!!! 
 
"ஏன் தம்பியவை நிக்கிறியள்.! அது எங்கடை கந்தசாமிதான். நீங்கள் உள்ளுக்குப் போங்கோ." விதானையாரைக் கண்டதும் கந்சாமியின் மூன்று பற்களுடன், மேலும் இருபத்து ஒன்பது பற்களும் சேர்ந்து முறுவலித்தன. மாலையில் புளிச்ச கள்ளடித்த மப்பிலை கந்தசாமி செய்யும் சேட்டைகளோடு. கூப்பன் களவு, அடையாள அட்டை, அது, இது என்று! விதானையார் இல்லையென்றால்..! கம்பிஎண்ணத்தான் கந்தசாமி லாயக்கு என்று, கிராமக்கோடே தீர்ப்பு வழங்கியிருக்கும்.  ஆனாலும் கம்பிக் கேற்றுத்தான் கந்தசாமி குடும்பத்துக்கு இன்றுவரை சோறுபோடுது என்பதையும் விதானையார் மறக்கவில்லை. "பெரியடாக்டர் வேலும் மயிலும் வந்துவிட்டார்தானே.! நான் சொல்லிக்கொள்ளுறன், நீ கவலைப்படாதை.!"  "ஓம்! ஓம்! விதானையார்." கந்தசாமி முதுகு வளைய, நாங்கள் நெஞ்சு நிமிர்த்தி ஓடையில் நடக்க, எதிர்ப்பட்ட ஓடலிகள், நர்சுமார்கள் கண்களில் என்ன? இந்தநேரம்??.. என்ற கேள்வி எழுந்தாலும், அது வாயால் வெளிவரவில்லை! நாங்கள் யாரோ.! பெரிசுகளுக்கு வேண்டப்பட்டதுகள், என அவர்கள் மனம் எண்ணியிருக்க வேண்டும். அதுவும் கந்தசாமியைக் கடந்து வந்தவர்கள்..! பழைய சில அனுபவங்கள் அவர்களை வாய்திறக்க விடவில்லைப் போலுள்ளது...     
 
மரக்குத்திக்குப் பந்தம் சுற்றியதுபோல் சுற்றப்பட்டு வாத்தியாரின் வலதுகால் சிறிய தூளியில் தூங்கி ஆடிக்கொண்டிருந்தது. ஒரு கை பத்துப்போட்டபடி அவர் நெஞ்சில் படுத்துத் தூங்கியது. எங்களைக் கண்டதும் அசையமுயன்ற அவரை விதானையார் அசைய விடவில்லை. பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆனாலும் அரைச் சதக் கஞ்சனை வேடிக்கை பார்க்கப் பொடியள் வந்திருக்கிறாங்களோ! என்ற கேள்விக்குறி அவர் முகத்தில் தெரிந்ததுபோல் இருந்தது. இனி எந்த முகத்தைவைத்து ராசுகடைக்கு போவேன் என்று எண்ணினாரோ..! அல்லது அரைச்சதம் கால்சதம் பற்றி கணக்குப்பாடத்தில் இனிக் கதைக்கவே முடியாதென்று கலங்கினாரோ..! தோடம்பழம் கார்லிக்சை நாங்கள் வாத்தியாருடன் நின்ற அவர் துணைவியாரிடம் கொடுத்தபோது அவர் முகம் சிறிது மலர்ந்தது. விதானையார் பகிடியாகப் பேச்சுக்களைத் தொடங்கினார் அங்கு பத்துகளோடு கிடந்தவர்களைச் சுட்டிக் காட்டி எல்லோருமே ஓட்டோ சைக்கிள் ஓட்டியவர்களோ? என்று கேட்டார். வாத்தியாரும் புன்முறுவல் பூத்து, இல்லை விதானையார், அது கொண்டா வாட்,. அடுத்தது யமகா வாட்., அடுத்தது றையம்,  இது ஓட்டோ சைக்கிள், அடுத்தது சைக்கிள்வாட்டாம் என்று சொல்லி வாய்விட்டுச் சிரிக்கவே.! அவர் துணைவியார், "நீங்கள் வந்தது அவருக்கு எவ்வளவு ஆறுதல்..! அடிக்கடி வாருங்கள்!" என்று அடிமனதிலிருந்து  வேண்டுதல் விடுத்தார்.      
 
வெளியே வந்த நாங்கள், விதானையாருக்கு நன்றிசொல்லி விடைபெற்றபோது அவர்... "தம்பியவை உண்மையைச் சொல்லுங்கோடா.! நீங்கள்தானேடா வாத்தியாற்றை பிலாப்பழம் வெட்டினது..!!" அப்போது இருந்த மனநிலையில் நண்பன் மணி "மன்னிச்சுக்கொள்ளுங்கோ விதானையார்" என்று கூறிவிட்டான். நாங்கள் பேயறைந்ததுபோலானோம். "அதெனக்குத் தெரியுமடா தம்பியவை!.. வாத்தியின்ரை கணக்குப் பிழைச்சுப்போச்சு..! அதுதான் கேட்டன்," என்றார். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. "என்ன விதானையார்  பிழைச்சது" என்று கேட்டோம். "நீங்கவெட்டின பலாப்பழம் கோட்டை முனியப்பருக்கு நேர்ந்துவிட்டதில்லை. நேற்று அவர் சாப்பிட்ட பழம்தான் முனியப்பருக்கு நேர்ந்துவிட்ட பழம் என்று நினைக்கிறன். அதுதான் முனியப்பர் ஆவேசம் கொண்டு வாத்தியாரை இங்கை முறிச்சுப் போட்டிருக்கிறார்."  அரைச் சதத்துக்காக முட்டைக்கண்ணரின் ஓட்டோ சையிக்கிள் அவரை லொறியோடு மோதவைத்ததையும், முனியப்பரின் பலாப்பழக் கதையையும், பரமேசுவராக் கல்லூரி அதிபரும்..! தனது ஆசிரியர்களுடன் பகிர்ந்து சிரிப்பதற்கு..!! அப்படி யார்தான் அவருக்குச் சொல்லியிருப்பார்கள்...????.     
 
 
பி.கு
இக்கதையை வாசிக்கும் வாசகர்கள் யாராவது இப்பொழுது யாழ் பல்கலைக் கழகமாக இருக்கும் அன்றைய பரமேசுவராக் கல்லூரியில் படித்தவர்களாக இருப்பார்களேயானால்.. சில சதங்களை இலாபம் பெறுவதற்கு திருநெல்வேலிச் சந்தியிவிருந்து பெரியகடைக்குப் போகும்வழியில் கந்தர்மடச் சந்தியில் ஓட்டோ சையிக்கிளுடன் விபத்துக்குள்ளான வாத்தியாரை  நிச்சயம் தெரிந்திருப்பார்கள்.  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு பாஞ்சு.

 

'விதானையார்' என்றால் இங்கே அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என நினைக்கிறேன்.

களவாக தின்ற பலாப்பழச் சுவை, இன்றும் உங்கள் நாவில் நிழலாடுமே? :)

இது நடந்த வருடம், எப்போ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் எவ்வழவு அழகான கதைகள்,நினைவுகள்....படிக்கும்போதே நமக்குள்ளே தூங்கிக்கிடந்த பல ஞாபகங்களயும் அசைபோடவைத்துவிட்டது.. பகிடியாக எழுதிக்கொண்டிருந்த பாஞ் மனசை பறித்துவிட்ட பதிவையும் தருவார் என்று இன்றுதான் தெரிந்தது... தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா... மனசு முழுக்க பழைய நினைவுகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக நினைவுகளை மீட்கிறது பாஞ்ச்... தொடருங்கள்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளமைக்காலத்தை  அசைபோடவைக்கும் உங்ககள் பதிவுஅருமை.   மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

ஊக்கம்தந்த ராசவன்னியன், சுபேஸ், சுவி, நிலாமதி.அவர்களுக்கு நன்றிகள்!! :)
 

 

கதை நல்லா இருக்கு பாஞ்சு.
 
'விதானையார்' என்றால் இங்கே அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என நினைக்கிறேன்.
களவாக தின்ற பலாப்பழச் சுவை, இன்றும் உங்கள் நாவில் நிழலாடுமே? :)
இது நடந்த வருடம், எப்போ? :o


கிராம நிர்வாக அதிகாரிகள்தான் முன்பு 'விதானை' என்ற பெயருடன் இலங்கையில் பணிசெய்தார்கள். இவர்களைப் பேச்சுவழக்கில் தலையாரி என்றும் சொல்வதுண்டு. அரச அதிகாரிகளும் மதிப்பளிக்கும் நிலையைக் கொண்டிருந்தவர்கள். பின்னர் 'கிராம சேவகர்' என பெயர் மாற்றம் அடைந்து அரச பணியாளர்களுக்கும் இன்று எடுபிடிகளாகவும் உள்ளனர். :(

Link to comment
Share on other sites

நினைவுகள் பாஞ்ச் நெஞ்சில் நெருப்பாய் சுடுவதாய் கேள்வி. தொடருங்கோ வாலிபவயதுக் குறும்புகளை.வாசிக்க நாங்கள் றெடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டுமொரு முறை உங்கள் 'அனுபவப் பகிர்வு' நினைவுகளை வருடிச் செல்கின்றது!

 

சில வருடங்களின் முன்பு, நல்லூர்த் திருவிழாவின் போது, தண்ணீர்ப்பந்தல் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்!

 

ஊறுகாய்த் தண்ணீர் தான் எனக்குக் கிடைத்தது!

 

அதே பழைய சுவை ! மூக்குப் பேணி மட்டும், பிளாஸ்டிக் பேணியாகி இருந்தது! அதற்கும் ஒரு 'மூக்கு' இருந்தது! :lol: 

 

உங்கள் பகிர்வு, சர்க்கரைத் தண்ணி மாதிரி! :icon_idea:  

Link to comment
Share on other sites

அப்பன் கெதியிலை பாகம் நாலு ஐஞ்சு எண்டு எழுதி போட்டால்தானே எங்களுக்கும் பத்தியப்படும் :lol::D . கதைக்கு பாராட்டுக்கள் பாஞ் :) :) .

Link to comment
Share on other sites

என் அபிமான வாசகர்களை நான் அவதிக்கு உட்பபட விடமாட்டேன். துரிதமாக எழுதத் தமிழ்தான் கொஞ்சம் முரண்டு பிடிக்குது. சந்தேகம் தீர்ப்பதற்கு வாத்தியாரையும் காணோம். சிட்னிக்குப் போனவர் போனவரேதானா.??? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவுமீட்டல்...

தோடப் பழம் என்றால்?

தோடம்பழம் என்றால்  Orange  !!!

 

எமது ஊரில், வருத்தக்காறரைப் பார்க்கப்போகும் போது , வாங்கிக் கொண்டு போவது வழமையாகும்!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தோடம்பழம் என்றால் Orange !!!

எமது ஊரில், வருத்தக்காறரைப் பார்க்கப்போகும் போது , வாங்கிக் கொண்டு போவது வழமையாகும்!

தோடம்பழத்திற்க்கு தமிழ் பெயரெல்லாம் இங்கு பாவிப்பதில்லை, தமிழிழும் இங்கு ஆரஞ்சு தான் !

பி.கு ஆரஞ்சிற்க்கு தமிழில் பெயர் இல்லையோ என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தே இருந்து கொண்டிருந்தது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோடம்பழம் என்றால்  Orange  !!!

 

எமது ஊரில், வருத்தக்காறரைப் பார்க்கப்போகும் போது , வாங்கிக் கொண்டு போவது வழமையாகும்!

 

 

தோடம்பழத்துடன்... ஹோர்லிக்ஸ் போத்தலும், கட்டாயம் இருக்கும் புங்கை. :)

 

Horlicks-UK.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு பாஞ்சு.

 

'விதானையார்' என்றால் இங்கே அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) என நினைக்கிறேன்.

களவாக தின்ற பலாப்பழச் சுவை, இன்றும் உங்கள் நாவில் நிழலாடுமே? :)

இது நடந்த வருடம், எப்போ? :o

 

 

ஊக்கம்தந்த ராசவன்னியன், சுபேஸ், சுவி, நிலாமதி.அவர்களுக்கு நன்றிகள்!! :)

 

கிராம நிர்வாக அதிகாரிகள்தான் முன்பு 'விதானை' என்ற பெயருடன் இலங்கையில் பணிசெய்தார்கள். இவர்களைப் பேச்சுவழக்கில் தலையாரி என்றும் சொல்வதுண்டு. அரச அதிகாரிகளும் மதிப்பளிக்கும் நிலையைக் கொண்டிருந்தவர்கள். பின்னர் 'கிராம சேவகர்' என பெயர் மாற்றம் அடைந்து அரச பணியாளர்களுக்கும் இன்று எடுபிடிகளாகவும் உள்ளனர். :(

 

ஒரு காலத்தில்... உடையாரும், விதானையார் லெவலில்... இருந்தவர் தான். :D 

இவர்கள் எல்லாரையும்... குறு நில‌ மன்னர்கள், என்று சொன்னால்... மிகையாகாது. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.