Jump to content

'விவாகரத்து' எனும் 'Divorce' !!!


Recommended Posts

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!
பெண்ணையும் படைத்தான்...!!
இயற்கையை படைத்து...
அவர்களை இயங்கவும் வைத்தான் !!
அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,
அது   'கணவன்' !
பெண்ணுக்கு பெயரிட்டான்,
அது   'மனைவி' !
இருவரையும்....
சேர்த்து வைக்க திட்டமிட்டான்
அது  'திருமணம்'  !!

 

அத்தோடு விட்டானா....?!!
'காமம்' என்றும்...
'காதல்' என்றும்...
எதிரும் புதிருமாய்,
எதையெதையோ வைத்தான் ...
அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...
எவன் வைத்தான்... தெரியவில்லை!?
தொண்ணூறு நாளின் பின்தான்,
பெரும்பாலும்...
தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?
தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!
பிரியமாக இருந்தோரெல்லாம்...
பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!
புரிதல் இல்லை!
பரிவும் இல்லை!
'காதல்' என்றால் என்னவென்று...
போதுமான விளக்கம் இல்லை!

 

குடும்பமென்றும்... குழந்தையென்றும்...
ஆனபின்னும் ஆணவத்தில்,
ஆளுக்காள் அடம்பிடித்தால்...
ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்

அங்கு முறிவதில்லை,

இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...
மனிதன் பிரித்தானா? - இல்லை,
மனிதன் சேர்ந்து வாழ...
கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை...
'விவாகரத்து' என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

 

# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(






 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி. தற்போது போது பாஷன் ஆகி விட்டது

Link to comment
Share on other sites

இணைந்து வாழ்வது கடினம் என்றால் பிரிந்து விடுவதே மிகவும் சிறப்பு. 

 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

 

மனிதனை தவிர வேறு எந்தப் பிராணி கலியாணம் என்று கட்டுது..??! அது இஸ்டத்துக்கு பழகுது.. அப்புறம் தன் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்குது. கலியாணம் என்று ஒன்றைக் கட்டிற படியால் தான் விவாகரத்து என்ற ஒன்றும் வருகுது. கலியாணத்தை யார் உருவாக்கினா..???! :lol::D

 

Link to comment
Share on other sites

மனிதனை தவிர வேறு எந்தப் பிராணி கலியாணம் என்று கட்டுது..??! அது இஸ்டத்துக்கு பழகுது.. அப்புறம் தன் பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்குது. கலியாணம் என்று ஒன்றைக் கட்டிற படியால் தான் விவாகரத்து என்ற ஒன்றும் வருகுது. கலியாணத்தை யார் உருவாக்கினா..???! :lol::D

 

 

கலியாணம் எல்லாம் பொருள்முதல்வாதம் தந்த பரிசு. என் பொருள், நான் தேடிச் சேர்த்த செல்வம் எனக்கும் என் சந்ததிக்கும் மட்டுமே போய் சேர வேண்டும் என்ற மனுசக் குணத்தால வந்தது... :)

Link to comment
Share on other sites

இணைந்து வாழ்வது கடினம் என்றால் பிரிந்து விடுவதே மிகவும் சிறப்பு. 

 

99 வீதமான மிருகங்கள் பறவைகளிடம் கூட சோடியை பிரிகின்ற குணம் இருக்கும் போது விவாகரத்தினை மனிதன் தான் கண்டு பிடித்தான் என்று நிறுவ முயல்வது தவறு.

 

 

நிழலி....!

பிரிவின் வலிகளை முழுமையாக உணரும் தன்மையும், அதனாலான விளைவுகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைகளும்.... நீங்கள் சொன்ன ஆறறிவில்லாத உயிரினங்களிடத்தில் இருப்பதாக தெரியவில்லை.

அவை ஜோடி பிரிவதும்... மனிதர்கள் ஜோடி பிடிவதும் ஒன்றாகாது.

 

நாய் நடுவீதியில் செய்கிறது என்பதற்காக நீங்களும் அதனை செய்ய முடியுமா என்ன? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் எல்லாம் பொருள்முதல்வாதம் தந்த பரிசு. என் பொருள், நான் தேடிச் சேர்த்த செல்வம் எனக்கும் என் சந்ததிக்கும் மட்டுமே போய் சேர வேண்டும் என்ற மனுசக் குணத்தால வந்தது... :)

 

சிலருக்கு இந்த பொருள்முதல்வாதத்தில் நடக்கும் வியாபாரம் நட்டமென்றால்.. விவாகரத்து தான் முடிவு..! மனித வாழ்க்கையே வியாபாரமாகிக் கிடக்குது.! :lol:

 

ஆக்கப் பகிர்விற்கு நன்றி கவிதை. :)

Link to comment
Share on other sites

 

நாய் நடுவீதியில் செய்கிறது என்பதற்காக நீங்களும் அதனை செய்ய முடியுமா என்ன? :)

 

நாய் நடுவீதியில் செய்வதன் காரணம், அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஒரு நாயும் அலையாது என்பதால் தான். அதன் கலாச்சாரம் அதன் வாழ்க்கை முறையில் இருந்து வந்தது, மனுசப் பயல் நடு ரோட்டில் நின்று செய்தால் அதைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே நிற்குமே...

Link to comment
Share on other sites

நாய் நடுவீதியில் செய்வதன் காரணம், அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஒரு நாயும் அலையாது என்பதால் தான். அதன் கலாச்சாரம் அதன் வாழ்க்கை முறையில் இருந்து வந்தது, மனுசப் பயல் நடு ரோட்டில் நின்று செய்தால் அதைப் பார்க்க ஒரு பெரும் கூட்டமே நிற்குமே...

 

நிழலி.... ! கார்த்திகை மாத காலைப்பொழுதுகளில் நீங்கள்  நாய்களைப் பார்த்ததில்லைப் போல..... :wub::lol:

 

ஆனால், மனிதர்களைப் பற்றி நீங்கள் சொன்னதையும் மறுக்க முடியாதுதான்! :lol::D

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி. தற்போது போது பாஷன் ஆகி விட்டது

 

உண்மைதான் நிலாக்கா! விவாகரத்து என்பது எம் தமிழ் சமுதாயத்திலும் இப்பொழுது சர்வ சாதாரணமாகி வருகின்றது என்பது வருத்தத்துக்குரியது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!

பெண்ணையும் படைத்தான்...!!

இயற்கையை படைத்து...

அவர்களை இயங்கவும் வைத்தான் !!

அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,

அது   'கணவன்' !

பெண்ணுக்கு பெயரிட்டான்,

அது   'மனைவி' !

இருவரையும்....

சேர்த்து வைக்க திட்டமிட்டான்

அது  'திருமணம்'  !!

 

அத்தோடு விட்டானா....?!!

'காமம்' என்றும்...

'காதல்' என்றும்...

எதிரும் புதிருமாய்,

எதையெதையோ வைத்தான் ...

அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்

மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...

எவன் வைத்தான்... தெரியவில்லை!?

தொண்ணூறு நாளின் பின்தான்,

பெரும்பாலும்...

தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?

தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!

பிரியமாக இருந்தோரெல்லாம்...

பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!

புரிதல் இல்லை!

பரிவும் இல்லை!

'காதல்' என்றால் என்னவென்று...

போதுமான விளக்கம் இல்லை!

 

குடும்பமென்றும்... குழந்தையென்றும்...

ஆனபின்னும் ஆணவத்தில்,

ஆளுக்காள் அடம்பிடித்தால்...

ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்

அங்கு முறிவதில்லை,

இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...

மனிதன் பிரித்தானா? - இல்லை,

மனிதன் சேர்ந்து வாழ...

கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,

ஒன்றுமட்டும் உண்மை...

'விவாகரத்து' என்று ஒன்றை,

மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!

 

# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(

 

 

திருமணங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். அநேக திருமணங்கள் பொருத்தமற்றவையாகவே அமைந்திருக்கின்றன.  முக்கியமாகப் பேசித் திருமணம் செய்தவர்களில் பலர் சமூகத்திற்குப் பயந்து கட்டாயத்தின் பேரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.  உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளிலேயே எத்தனைபேர் உன்மையான அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள்?  இதனை உண்மையான உணர்வோடு அணுகிப் பாருங்கள். 

 

உங்களை நீங்கனே கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நேசித்து வாழ்கிறீர்களா அல்லது சமூகத்திற்குப் பயந்து வாழ்கிறீர்களா என்று?

Link to comment
Share on other sites

முன்னோரது வாழ்வு கூட்டுக் குடும்பமாக இருந்தது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அளவளாவல் என்பது அருமையாக இருந்தது. அதனால் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்னும் முதுமொழிக்கு ஏற்புடைய வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக... மூத்த மகவு குழந்தை பெறும்போது தாமும் குழந்தை பெறும் அளவுக்கு உடலாலும் உளத்தாலும் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் இருந்தார்கள்.

 

இப்போ தேவைக்கு அதிகமான நெருக்கம்.. உடல் உழைப்பின்மை... நவீன பொழுதுபோக்குச் சாதனங்களால் உண்டாகும் மனக்கிளர்வும் அதிக ஆசையும்... இதனால் கூடல் விரைவில் களைத்துக் கசந்து.. சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் பெரிய விரிசல்களாய் விவாகரத்துகளை மலினப்படுத்துகின்றன என நினைக்கிறேன்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  கவிதைக்கு தம்பி....

மனித மனம் ஒரு குரங்கு..

இதுவே

அனைத்துக்கும் காரணம்

பொறுப்பும்

பொறுமையும்

கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழும்

போதும் என்ற  மனமும் வேண்டும்..

அது இல்லாதவர்

செய்யும் கூத்துக்களே இவை

 

 

0b7n.jpg

 

இதைப்பாருங்கள்

06/07/1750 இல்  ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக  இருவர் உயிருடன் கொழுத்தப்பட்ட  இடம் PARIS.

இன்று................???

Link to comment
Share on other sites

இப்ப டிவேஸ் எடுக்கவா வேணாமா சட்டு புட்டேண்டு முடிவ சொல்லுங்க வேற சோழி கிடக்கு . :D

 

அருமையான கவி நவீனம் அழிக்குது அம்புட்டுதான் .!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் இலகுவில் தொடக்கூடத் துணியாத, ஆனால் வாழ்க்கையில் வெளிப்படையாக ஆராயப்படவேண்டிய முக்கியமான ஒரு கருப்பொருளைத் துணிந்து தொட்டதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

 

குடும்பங்களில் சொந்தங்கள், குழந்தைகளின் எண்ணிக்கைகள் என்பன, பலவேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால், குறைந்து கொண்டு போகின்றன! அதே வேளையில், கோவில்கள், மதங்கள் என்பவையும், வெறும் பொருளாதார மையங்களாகவும், களியாட்டப் பொருட்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றன! மறைபொருளாகவும், தெய்வீகமாகவும் இருந்த காமம் கூட, வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருளாகவும், சந்தையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளாகவும் மாறி விட்டது!

 

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய தேவை, உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் குறைந்துகொண்டே போகின்றது! அதனால், விட்டுக்கொடுப்புகளுக்கான தேவை இல்லாமல் போகின்றது!

 

நாம், நமது என்று இல்லாமல், நான், எனது என்றே மனிதன் தனது வாழ்வை முடித்துவிட நினைக்கிறான்! அதனால் தான் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன!

 

உண்மையில், நிழலி சொன்னது போல, நான், எனது என்று ஆணவ நிலையில் மனமுள்ளவர்கள், நிச்சயமாகத் திருமண பந்தத்தில் இணையக்கூடாது! இதுவே விவாகரத்துக்களை இல்லாமல் செய்ய ஒரு வழியாகும் என நினைக்கிறேன்!

 

கவிதைக்கு மீண்டும் பாராட்டுக்கள், கவிதை!

Link to comment
Share on other sites

திருமணங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். அநேக திருமணங்கள் பொருத்தமற்றவையாகவே அமைந்திருக்கின்றன.  முக்கியமாகப் பேசித் திருமணம் செய்தவர்களில் பலர் சமூகத்திற்குப் பயந்து கட்டாயத்தின் பேரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.  உங்களுக்குத் தெரிந்த தம்பதிகளிலேயே எத்தனைபேர் உன்மையான அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து வருகிறார்கள்?  இதனை உண்மையான உணர்வோடு அணுகிப் பாருங்கள். 

 

உங்களை நீங்கனே கேட்டுப் பாருங்கள்.  நீங்கள் உண்மையிலேயே உங்கள் துணையை நேசித்து வாழ்கிறீர்களா அல்லது சமூகத்திற்குப் பயந்து வாழ்கிறீர்களா என்று?

 

உங்களின் கருத்துக்களும் ஒரு வகையில் நிதர்சனமானவைதான். சமுதாயத்துக்காக வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி இருபதனாலாவது குழந்தைகளின்  வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு காக்கப்படுகிறது.

 

புரிந்துணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால்... வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

கருத்துக்கு மிக்க நன்றி போக்கிரி! :)

Link to comment
Share on other sites

முன்னோரது வாழ்வு கூட்டுக் குடும்பமாக இருந்தது. தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அளவளாவல் என்பது அருமையாக இருந்தது. அதனால் பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்னும் முதுமொழிக்கு ஏற்புடைய வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்படுவதற்குப் பதிலாக... மூத்த மகவு குழந்தை பெறும்போது தாமும் குழந்தை பெறும் அளவுக்கு உடலாலும் உளத்தாலும் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் இருந்தார்கள்.

 

இப்போ தேவைக்கு அதிகமான நெருக்கம்.. உடல் உழைப்பின்மை... நவீன பொழுதுபோக்குச் சாதனங்களால் உண்டாகும் மனக்கிளர்வும் அதிக ஆசையும்... இதனால் கூடல் விரைவில் களைத்துக் கசந்து.. சின்னச் சின்னக் குறைகள் எல்லாம் பெரிய விரிசல்களாய் விவாகரத்துகளை மலினப்படுத்துகின்றன என நினைக்கிறேன்.  :D

 

நீஙகள் சொல்வது உண்மைதான்  சோழியன். ஆரம்பத்தில் மிக மிக நெருக்கமாக இருக்கிறார்கள். பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக விலகி விலகி... ஒரு கட்டத்தில் வெறுக்கும் நிலைக்கு செல்கின்றார்கள்.

 விவாக ரத்துக்களுக்கு இதுவும் முக்கியமான ஒரு காரணமாக அமைகின்றது.

 

கருத்துக்கு மிக்க நன்றி சோழியன்! :)

Link to comment
Share on other sites

நன்றி  கவிதைக்கு தம்பி....

மனித மனம் ஒரு குரங்கு..

இதுவே

அனைத்துக்கும் காரணம்

பொறுப்பும்

பொறுமையும்

கிடைத்ததை எடுத்துக்கொண்டு வாழும்

போதும் என்ற  மனமும் வேண்டும்..

அது இல்லாதவர்

செய்யும் கூத்துக்களே இவை

 

 

 

 

போதுமென்ற மனமும் போதாது, பொறுமை, புரிந்துணர்வு, மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பு என்பனவும் போதாது.

இவைகள் இருந்தால்..... பல திருமணங்கள் முறியும் அவல நிலை வராது.

 

கருத்துக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் கருத்துக்களும் ஒரு வகையில் நிதர்சனமானவைதான். சமுதாயத்துக்காக வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அப்படி இருபதனாலாவது குழந்தைகளின்  வாழ்க்கை, எதிர்காலம் பாதிக்கப்படாமல் ஓரளவுக்கு காக்கப்படுகிறது.

 

புரிந்துணர்வுடன் வாழப் பழகிக்கொண்டால்... வாழ்க்கை இனிமையானதாக அமையும்.

கருத்துக்கு மிக்க நன்றி போக்கிரி! :)

 

சேர்ந்து வாழ்வதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கிறதா?  கணவன் மனைவி ஒற்றுமையின்றி, ஒட்டுறவின்றி வாழ்வது பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டுமா?  அப்படி இருக்கும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் வாழ்க்கையில் பிடிப்பின்றித் தானே வாழப் போகிறார்கள்.  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு பிள்ளைகளுக்குக் கவலையான வாழ்வைக் கொடுப்பதிலும் பார்க்க, பிரிந்திருந்து அவர்களுக்குச் சந்தோசமான வாழ்வைக் காட்டலாமே? 

 

புரிந்துணர்வு என்ற ஒன்று இருந்தால் அவர்கள் ஏன் பிரியப் போகிறார்கள்?  புரிந்துணர்வு என்பது எல்லோருக்கும் எல்லோருடனும் வராது என்பதை எமது சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.  இரு நல்லவர்கள், படித்தவர்கள்கூட, அவர்களுக்குள் ஒத்து வராதாதால் பிரிந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றனதானே?

Link to comment
Share on other sites

இப்ப டிவேஸ் எடுக்கவா வேணாமா சட்டு புட்டேண்டு முடிவ சொல்லுங்க வேற சோழி கிடக்கு . :D

 

அருமையான கவி நவீனம் அழிக்குது அம்புட்டுதான் .!

 

ஏனப்பு... இந்த அவசரம்??? :rolleyes:  எடுத்துடுங்க... என்று சொன்னால் எடுத்துடுவீங்களா அஞ்சரன்!? :rolleyes:  :lol:   சிலவேளைகளில் ஒருவழிப்பதைகள் அப்படித்தான்..... "றிவேஸ்" எடுத்தாலும் எடுக்காட்டிலும் ஒன்றுதான்! :icon_idea:

 

மாட்டிக்கிட்டு முழியுங்கள்.....!!!! :rolleyes::blink::D

Link to comment
Share on other sites

யாரும் இலகுவில் தொடக்கூடத் துணியாத, ஆனால் வாழ்க்கையில் வெளிப்படையாக ஆராயப்படவேண்டிய முக்கியமான ஒரு கருப்பொருளைத் துணிந்து தொட்டதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது!

 

குடும்பங்களில் சொந்தங்கள், குழந்தைகளின் எண்ணிக்கைகள் என்பன, பலவேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால், குறைந்து கொண்டு போகின்றன! அதே வேளையில், கோவில்கள், மதங்கள் என்பவையும், வெறும் பொருளாதார மையங்களாகவும், களியாட்டப் பொருட்களாகவும் மாறிக்கொண்டு வருகின்றன! மறைபொருளாகவும், தெய்வீகமாகவும் இருந்த காமம் கூட, வெளிப்படையாகப் பேசக்கூடிய பொருளாகவும், சந்தையில் விலைக்கு வாங்கக்கூடிய பொருளாகவும் மாறி விட்டது!

 

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்க வேண்டிய தேவை, உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் குறைந்துகொண்டே போகின்றது! அதனால், விட்டுக்கொடுப்புகளுக்கான தேவை இல்லாமல் போகின்றது!

 

நாம், நமது என்று இல்லாமல், நான், எனது என்றே மனிதன் தனது வாழ்வை முடித்துவிட நினைக்கிறான்! அதனால் தான் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன!

 

உண்மையில், நிழலி சொன்னது போல, நான், எனது என்று ஆணவ நிலையில் மனமுள்ளவர்கள், நிச்சயமாகத் திருமண பந்தத்தில் இணையக்கூடாது! இதுவே விவாகரத்துக்களை இல்லாமல் செய்ய ஒரு வழியாகும் என நினைக்கிறேன்!

 

கவிதைக்கு மீண்டும் பாராட்டுக்கள், கவிதை!

 

புங்கை... நீங்கள் சொன்னதுபோல  விவாகரத்துக்கான பல காரணங்கள் இப்போதைய வாழ்க்கைமுறையிலும், சமூக மாற்றங்களிலும் தோன்றி வருகின்றன. நாம், நமது என்றில்லாமல் நான் , எனது என தனிமைபடுத்துவதும் மிக முக்கிய காரணம்.

 

'விவாகரத்து' என்பது வாழ்ந்து கசந்து அதன்பின் வந்தால்... ஓரளவு பரவாயில்லை. மனதளவால் கொஞ்சமேனும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால் ஒன்றாக சேர்ந்து  வாழ ஆரம்பிக்கும் முன்பே எனக்கு 'காதல் பரிசாகக்' கிடைத்தது அது. அதை விதி என்பதா...? சதியென்பதா?? இன்றுவரைக்கும் தெரியவில்லை...!?!?  :(

 

கருத்துக்கு மிக்க நன்றி... புங்கை! :)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சேர்ந்து வாழ்வதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கிறதா?  கணவன் மனைவி ஒற்றுமையின்றி, ஒட்டுறவின்றி வாழ்வது பிள்ளைகளுக்கு நல்வழியைக் காட்டுமா?  அப்படி இருக்கும் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளும் வாழ்க்கையில் பிடிப்பின்றித் தானே வாழப் போகிறார்கள்.  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டு பிள்ளைகளுக்குக் கவலையான வாழ்வைக் கொடுப்பதிலும் பார்க்க, பிரிந்திருந்து அவர்களுக்குச் சந்தோசமான வாழ்வைக் காட்டலாமே? 

 

புரிந்துணர்வு என்ற ஒன்று இருந்தால் அவர்கள் ஏன் பிரியப் போகிறார்கள்?  புரிந்துணர்வு என்பது எல்லோருக்கும் எல்லோருடனும் வராது என்பதை எமது சமூகம் விளங்கிக் கொள்வதில்லை.  இரு நல்லவர்கள், படித்தவர்கள்கூட, அவர்களுக்குள் ஒத்து வராதாதால் பிரிந்த சம்பவங்களும் அதிகம் இருக்கின்றனதானே?

 

போக்கிரி... சில சமயங்களில் நீங்கள் சொல்லும் பிரிதல் சிறந்ததாக இருப்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால் தாயோ, தந்தையோ பக்கத்தில் இல்லையென்பது நிச்சயம் ஒரு குழந்தையின்  மனதினைப் பாதிக்கும் என்பது உறுதி.

பெயருக்கு சேர்ந்து வாழ்வதை நான் சேர்ந்துவாழ்தல் என்று குறிப்பிடவில்லை. புரிந்துணர்வோடும் சகிப்புத்தன்மையோடும் பிள்ளைகளின் எதிர்காலத்தினைக் கருத்தில்கொண்டு தமக்கிடையிலான மனக்கசப்புக்களை ஓரங்கட்டிவிட்டு அவர்களுக்காக வாழ்தலையே குறிப்பிட்டேன்

 

கருத்துக்கு மிக்க நன்றி போக்ஸ்! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.